ரஜினிகாந்த் முன்னிலையில் பரபரப்பான பேச்சு; அ.தி.மு.க., பாரதீய ஜனதா, விஜயகாந்த் கூட்டணி: சோ வற்புறுத்தல்
சென்னை, ஜன. 16- சென்னையில் துக்ளக் பத் திரிகையின் 37ம் ஆண்டு விழா நடந்தது.
அத்வானி அவரது
- மகள் பிரதிபா,
- நடிகர் ரஜினிகாந்த்,
- வெங்கையாநாயுடு,
- நாகேஷ்,
- மைத்ரேயன், உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
விழாவில் சோ பேசிய தாவது:-
தி.மு.க.ஆட்சி பொறுப்பேற்று சில மாதங்கள்தான் ஆகியுள்ளது. ஆட்சிக்கு வரும் முன்பே பலவாக் குறுதிகள் அளித்தனர். அவற்றை முழுமையாக செய்ய முடியாமல் பகுதி பகுதியாக செய்கிறார்கள்.
2 ஏக்கர் நிலம் தருவதாக சொன்னார் கருணாநிதி இப்போது உள்ளங்கை அளவேனும் தருவேன் என் கிறார்.
இலவச திட்டங்களால் பீகாரில் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் தரமுடியவில்லை. அதே போல் இங்கும் திவால் வருமோ என்று தெரிய வில்லை.
சென்னை மாநகராட்சி தேர்தலில் நடந்த முறைகேடு களை நீதிமன்றம் வன்மை யாக கண்டித்துள்ளது. 99வாக்குசாவடிகளுக்கு மறுவாக் குப்பதிவு நடத்த சொல்லி யுள்ளது. தேர்தலின்போது எதிர் கட்சிகள் சொன்ன குற்றச்சாட்டுகள் நிரூபணம் ஆகியுள்ளன.
முல்லைப்பெரியாறு பிரச்சினையில் மத்திய அரசை தமிழக அரசு நிர்பந்தம் செய்யவில்லை. இதை நான் சொன்னால் இருவரும் சேர்ந்து அணையில் குதிப்போமா என்று அழைப்பார் ராஜீவ் கொலையாளிகளுக்கு தண்டனையை நிறைவேற்று வது பற்றி மத்திய அரசு கவலைப்படவில்லை. நளினிக்கு கருணை காட் டப்பட்டால் மகிழ்ச்சிதான் என்று கருணாநிதி கூறியுள்ளார். அந்த தண்ட னையை ஏன் இன்னும் நிறைவேற்றவில்லை என்று தைரியமாக கேட்ட ஒருவர் ஜெயலலிதாதான். அதுவும் வைகோ கூட்டணியில் இருக்கும் போது அவ்வாறு கேட்டு இருக்கிறார்.
தமிழக அரசுக்கு உடனடியாக எந்த ஆபத்தும் இருப்பதாக நான் நினைக்கவில்லை. இந்த ஆட்சி போக வேண்டும் என்றும் நான் கூறவில்லை.
ஆனால் எதிர்காலத்தில் தி.மு.க. கூட்டணியில் தற்போ துள்ள கட்சிகள் என்ன முடிவு எடுக்கும் என்று சொல்ல முடியாது. காங்கிரசில் உள்ள த.மா.கா. பிரிவினர் அதி ருப்தியில் உள்ளனர். அது போல் பா.ம.க.வுக்கும் அதி ருப்தி உள்ளது. எனவே எதிர் காலத்தில் எதுவும் நடக் கலாம்.
எதிர் கட்சிகள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும் மாந கராட்சி தேர்தல் முறைகேடு அதோடு முடிந்து விட்டதாக கருதக்கூடாது பாராளுமன்ற, சட்டமன்ற தேர்தல்களிலும் பல தொகுதிகளில் அத்தகைய முறைகேடு நடக்க வாய்ப்பு உள்ளது.
எனவே தனக்குள்ள செல்வாக்கினால் தனித்து நின்று ஜெயிக்கலாம் என்று ஜெயலலிதா நினைக்க கூடாது. விஜயகாந்த் தனித்து நின்றால் டெபாசிட் போகும் அவர் மட்டும் ஜெயித்த மாதிரிதான் நிலைமை வரும் இதை இருகட்சிகளும் புரிந்து கொள்ள வேண்டும் மத்தியில் காங்கிரசுக்கு மாற்றாக பாரதீய ஜனதா வருவது தான் நல்லது. 3-வது அணி வர வாய்ப்பு இல்லை.
எனவே பாரதீய ஜனதா, ஜெயலலிதா, விஜயகாந்த் ஒரே அணியில் இருப்பது நல்லது.
இவ்வாறு சோ பேசினார்.