Posted by Snapjudge மேல் ஓகஸ்ட் 8, 2007
தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு: அமிதாப்பச்சனுக்கு சிறந்த நடிகர் விருது- சிறந்த இசையமைப்பாளராக லால்குடி ஜெயராமன் தேர்வு
புதுடெல்லி, ஆக. 8-
2005-ம் ஆண்டுக்கான தேசிய திரைப்பட விருதுகள் டெல்லியில் நேற்று மாலை அறிவிக்கப்பட்டன. தேசிய விருதுகள் வழங்குவது குறித்து டெல்லி கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டதால் இந்த ஆண்டு விருதுகளை அறிவிப்பதில் தாமதம் ஏற்பட்டது.
தேசிய திரைப்பட விருது அறிவிப்பில், 2005-ம் ஆண்டுக்கான சிறந்த நடிகர் விருது அமிதாப்பச்சனுக்கு கிடைத்தது. `பிளாக்’ படத்தில் மன வளர்ச்சி குன்றிய ஒரு குழந்தையை வளர்த்து ஆளாக்குவதில் அவர் தத்ரூபமான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். அதனைப் பாராட்டி அமிதாப்பச்சனை சிறந்த நடிகராக தேர்வுக்குழுவினர் தேர்ந்தெடுத்தனர்.
இதே போல் சிறந்த நடிகைக்கான விருதிற்கு சரிகா தேர்வானார். `பர்சானியா’ என்னும் ஆங்கிலப் படத்தில் அவரது சிறப்பான நடிப்பை பாராட்டி சிறந்த நடிகைக்கான விருது வழங்கப்படுகிறது.
தேசிய அளவில் சிறந்த படமாக புத்ததேவ் தாஸ் குப்தாவின் வங்காளி மொழிப் படமான `கால்புருஷ்’ தேர்வானது. இந்த படத்திற்கு தங்கத் தாமரை விருதும், 50 ஆயிரம் ரொக்கமும் வழங்கப்படும்.
மற்ற முக்கியமான விருதுகள் வருமாறு:
சிறந்த இயக்குனர்– ராகுல் தோடாக்கியா (பர்சானியா)
அறிமுக இயக்குனர்களுக்கான இந்திரா காந்தி விருது பெற்ற படம்- பரிநீதா.
சிறந்த பொழுதுபோக்கு படம்- ரங் கே பசந்தி (இந்தி)
சிறந்த குழந்தைகள் படம்- புளூ அம்பரல்லா.
நடுவர் குழுவின் சிறந்த நடிகர் விருது- அனுபம் கெர் (மைனே காந்தி கோ நாகின் மாரா).
தேசிய ஒருமைப்பாட்டிற்கான சிறந்த படம் (நர்கீஸ் தத் விருது)- தைவனமாதில் (மலையாளம்).
சமூக பிரச்சினைக்கான சிறந்த படம்- இக்பால் (இந்தி)
சிறந்த குழந்தை நட்சத்திரம்- சாய்குமார்( பொம்மலதா-தெலுங்கு)
சிறந்த பின்னணி பாடகர்– நரேஷ் அய்யர் (ரங் கே பசந்தி)
சிறந்த பின்னணி பாடகி– ஸ்ரேயா கோஷால்(பகெலி)
சிறந்த இசையமைப்பாளர்– வயலின் வித்வான் லால்குடி ஜெயராமன் (சிருங்காரம்-தமிழ்)
சிறந்த பாடலாசிரியர்– பர்குரு ராமச்சந்திரா (தாயி- கன்னடம்)
சிறந்த எடிட்டர்– பி.எஸ்.பாரதி(ரங் கே பசந்தி).
சிறந்த நடன அமைப்பாளர்- சரோஜ் (சிருங்காரம்- தமிழ்)
சிறந்த வசன கர்த்தாக்கள்- பிரகாஷ் ஷா, ஸ்ரீதர் ராகவன், மனோஜ் தியாகி.(அப்காரன்)
சிறந்த ஆர்ட் டைரக்டர்- சி.பி.மோர் (தாஜ் மகால் ஆன் எட்னர்ல் லவ் ஸ்டோரி).
சிறந்த ஆடை வடிவமைப்பாளர்கள்- அன்னா சிங் (தாஜ் மகால் ஆன் எட்னர்ல் லவ் ஸ்டோரி), சப்யாச்சி முகர்ஜி (பிளாக்).
தமிழில் சிறந்த படமாக டி.வி. சந்திரன் இயக்கிய ஆடும் கூத்து தேர்வாகியுள்ளது.
சேரன் படங்களுக்கு தேசிய விருது08 ஆகஸ்ட் 2007கோவா திரைப்பட விழாவில் தனக்கு அங்கீரகாரம் கொடுக்கவில்லை என்று அரங்கத்தை விட்டு வெளியேறினார் சேரன். இப்போது அவருடைய படங்களுக்கு தேசிய விருது கிடைத்திருக்கிறது.
டி.வி.சந்திரன் இயக்கத்தில் சேரன் நடித்த `ஆடும்கூத்து‘ சிறந்த படத்திற்கான தேசிய விருதை பெற்றிருக்கிறது. அதேபோல் அவர் இயக்கி நடித்த `தவமாய் தவமிருந்து‘ படத்திற்கு சிறந்த குடும்ப படத்திற்கான தேசிய விருது கிடைத்திருக்கிறது.
இந்தப் படத்தில் தன்னை விட முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்த ராஜ்கிரணுக்கு விருது கிடைக்கும் என்று எதிர்பார்த்தார் சேரன்.
ஆனால் அது கிடைக்காவிட்டாலும் சிறந்த குடும்ப படத்திற்கான விருது `தவமாய் தவமிருந்து’ படத்திற்கு கிடைத்ததில் சந்தோசமாய் இருக்கிறார் சேரன்.
ஷியாம் பெனெகலுக்கு தாதா சாகேப் பால்கே விருது08 ஆகஸ்ட் 2007
திரைப்படத் துறையில் மிக உயரியதாகக் கருதப்படும் தாதா சாகேப் பால்கே விருது, பழம்பெரும் இயக்குனர் ஷியாம் பெனெகலுக்கு வழங்கப்படுகிறது.
திரைப்படத்துறைக்கு ஆற்றிய சிறப்பான சேவையை பாராட்டி 2005ம் ஆண்டுக்கான விருதுக்கு, 72 வயதாகும் ஷியாம் பெனகல் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இந்த ஆண்டு இறுதியில் நடைபெறும் விழாவில் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் ஷியாம் பெனகலுக்கு இந்த விருதையும், ரூ 2 லட்சம் பரிசுத் தொகையும் வழங்குவார்.
இவர் இயக்கிய முதல் படமான ‘அன்கூர்‘, மிகச்சிறந்த இயக்குனராக அவரை அடையாளம் காட்டியது. பூமிகா, மந்தான் உள்ளிட்ட பல்வேறு படங்களை இவர் இயக்கியுள்ளார்.
இயக்குனர் ஷியாம் பெனெகல் கடந்த 1934ம் ஆண்டு ஆந்திர மாநிலத்தில் பிறந்தார். இதற்கு முன் பதமஸ்ரீ, பத்மபூஷன் ஆகிய உயரிய விருதுகளையும் ஷியாம் பெனெகல் பெற்றுள்ளார்.
Posted in 2005, Aadum Koothu, Aamir, Aamir Khan, Actor, Actress, Amir, Amitab, Amitabh, Amitabh Bachaan, Amitabh Bhachan, Animation, Anniyan, Anupam, Anupam Kher, Apaharan, Art, Audio, Audiography, Award, Awards, Bengal, bengali, Best, Black, Bollywood, Bombay, Bommalata, Bommalatta, Budhadeb, Budhadeb Dasgupta, Camera, CG, Chandhran, Chandran, Cheran, Child, Children, Chopra, choreographer, choreography, Cinematography, Computer, Costume, Costumes, Daivanamathil, Dasgupta, Direction, Director, Dutt, Editing, Effects, Elxsi, Engg, Entertainment, Environment, Film, Gaurav A. Jani, Geek, Ghoshal, Graphics, Gujarat, Hindi, Indira Gandhi, Integration, Iqbal, Jayaraman, Jeyaraman, Kaalpurush, Kamal, kamalahasan, Kamalahassan, Kamalhasan, Kamalhassan, Kher, Kid, Lalgudi, Lalgudi Jayaraman, Lalkudi, Lyrics, Malayalam, Mumbai, music, Nargis, National, Paheli, Parineeta, Parineetha, Parzania, Playback, Pradeep Sarkar, Prizes, Rang de basanthi, Rang De Basanti, Recognition, Riding Solo to the Top of The World, Sarika, Screenplay, Sets, Shreya, Singer, Software, Special Effects, Sreya, Sringaram, Swarna Kamal, SwarnaKamal, Tamil, Tamil Actor, Tamil Actors, Tamil Actress, Tamil Actresses, Tamil Cinema, Tamil Film, Tamil Films, Tamil Isai, Tamil Movie, Tamil Movies, Tamil Music, Tamil Nadu, Tamil Padam, Tamil Pictures, Tamil Stars, Tamil Story, Tamil Theater, Tamil Theatres, Tamil Writer, TamilNadu, TATA, Tata Elxsi, Technology, Tharani, Thavamai Thavamirunthu, Thotta, Thotta Tharani, Thutturi, TV Chandran, Urvashi, Urvasi, Vidhu Vinod Chopra, Welfare | Leave a Comment »
Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 7, 2006
“வந்தேமாதரம்’- வந்தது ஏன்?
தி. இராசகோபாலன்
“வந்தேமாதரம்’ எனும் பாடல் சென்ற யுகத்தின் தவம்; இந்த யுகத்தின் சத்திய வாக்கு. தூக்கிலே தொடங்கிய சுதந்திரப் போராட்ட வீரர்களின் நாவில், கடைசியாக நின்ற கீதம். போராளிகளால் துதிக்கவும் மதிக்கவும் பெற்ற வேதம் – வந்தேமாதரம்!
பங்கிம் சந்திர சட்டர்ஜியால் இயற்றப்பட்ட இப்பாடல் அவருடைய பத்திரிகையாகிய “வங்க தரிசனத்தில்‘ 1882ஆம் ஆண்டில் வெளியிடப்பெற்றது. “சோனார் பங்களா’ எனத் தாகூரால் வருணிக்கப்பட்ட வங்காள தேசத்தின் மாண்புகளையும் வனப்புகளையும், விசுவரூப தரிசனமாக எடுத்துச் சொல்லியது வந்தேமாதரம் எனும் பாடல்.
26 வரிகளைக் கொண்ட அப்பாடலில் ஆறு வரிகள் தாம் வங்காள மொழியில்; மற்ற 20 வரிகள் சம்ஸ்கிருதத்தில் அமைந்திருந்தது. வந்தேமாதரம் பாடலில் கரைந்து போன மகாகவி பாரதி, “”இதுவே உயிரின் ஒலி!… லோக நன்மைக்காக என்னை மறந்து என்னை இரை கொடுப்பேன்” என எழுதினார்.
1896ஆம் ஆண்டு அகில இந்திய காங்கிரஸ் மாநாட்டில் வங்கக்கவி தாகூர் வந்தேமாதரம் பாடலுக்கு இசையமைத்து, அவரே பாடினார். உடன், ஸ்ரீ அரவிந்தர் அப் பாடலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். வந்தேமாதரம் பாடல் காற்றினிலே வரும் கீதமாய் உலகெங்கும் பரவியது. 1906ஆம் ஆண்டு வந்தேமாதரம் இந்திய நாட்டின் தேசிய கீதமாய் அங்கீகரிக்கப்பட்டது. பங்கிம் சந்திரருக்குச் “சாகித்திய சாம்ராட்’ என்ற பட்டத்தையும் தேடித் தந்தது. சட்டர்ஜி அப் பாடலைத் தம்முடைய “ஆனந்தமடம்’ நாவலில் சந்நியாசிகள் பாடுவதுபோல் அமைத்துவிட்டிருந்ததால், அதற்கு இலக்கிய அந்தஸ்தும் மெருகூட்டியது.
அப் பாடல் வங்கதரிசனம் பத்திரிகையில் பிரசுரமானது, ஒரு தற்செயல் ஆக நேர்ந்தது. பத்திரிகை வெளியாக வேண்டிய நாளில் குறிப்பிட்ட இடம் காலியாக இருந்தது – “மேட்டர்’ இல்லாமையினால்! பங்கிம் சந்திரரை கம்பாசிடர் அணுகி செய்தியைச் சொன்னவுடன், விறுவிறுவென்று கற்பனையில் மூழ்கி, வந்தேமாதரம் பாடலை வடிவெடுத்தார். புரூப் பார்க்கும் நேரத்தில் கவிதையைப் படித்த கம்பாசிடருக்குக் கவிதையில் திருப்தி ஏற்படவில்லை. உடன் அவர், அதனைப் பங்கிம் சந்திரரின் மகளிடம் கொண்டுபோய் காட்டினார். மகளும் அக்கவிதையைப் படித்துவிட்டு, அதில் சாரமில்லை எனக் கூறிவிட்டார். ஆனால், சட்டர்ஜி அந்த விமர்சனங்களை எல்லாம் கேட்டுவிட்டு, ஆத்திரப்படாமல், “”இந்தப் பாடலின் வெற்றி இப்பொழுது உங்களுக்குத் தெரியாது; எதிர்காலம் சொல்லும். ஒரு படைப்பாளனுக்குத்தான் படைப்பின் அருமை தெரியும்” எனச் சொல்லிப் பிரசுரிக்கச் செய்துவிட்டார். “பத்திரிகையில் காலி இடத்தை நிரப்புவதற்காகப் கட்டப்பட்ட அப்பாடல்தான், ஆங்கில ஏகாதிபத்தியத்தை இந்த நாட்டை விட்டே காலி செய்யப் போகிறது’ என்பதைக் கம்பாசிடரும் மகளும் அறியாமல் போனதில் ஆச்சரியமில்லை. வந்தேமாதரம் பாடலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த ஸ்ரீஅரவிந்தர், “”வந்தேமாதரம் பாடல்தான் தேசபக்தியின் மந்திரம் அல்லது சமயம்” என்றார்.
வந்தேமாதரம் பாடலைப் பங்கிம் சந்திரர் எழுதும்போது, அதனைத் தம்முடைய மாநிலத்திற்காகத்தான் எழுதினார்; ஏக இந்தியாவையும் எண்ணிப் பார்த்துப் பாடவில்லை. வங்கத்து மக்கள்தொகையைக் கணக்கிட்டு, “”ஏழுகோடிக் குரல்களின் கோஷமும், ஈரேழு கோடிக் கரங்களில் உயர்த்திய கூரிய வாட்களுமுடைய உன்னைச் சக்தியற்றவள் என்று யார் சொன்னார்?” எனப் பாடிவிட்டார். வங்கத்துக்காரரான ஸ்ரீஅரவிந்தரும் ஏழுகோடி மக்கள் – பதினான்கு கோடி கரங்கள் என்றே மொழிபெயர்த்துவிட்டார். அப் பாடலைத் தமிழில் மொழிபெயர்க்கத் துணிந்த மகாகவி பாரதியும், அப்பொழுதிருந்த இந்தியாவின் மக்கள்தொகையை மனத்தில் வைத்து, “”முப்பதுகோடி வாய் நின்னிசை முழங்கவும்… அறுபது கோடி தோள் உயர்ந்து உனக்காற்றவும்” என ஆவேசத்தில் மொழிபெயர்த்து விட்டார். ஆனால் காலப்போக்கில் அந்த எண்ணிக்கை மாறக்கூடும் என்பதை நின்று நிதானித்து யோசித்த பாரதி, முப்பது கோடி – அறுபது கோடி என்பதை எல்லாம் மறந்துவிட்டு “”கோடிகோடி குரல்கள் ஒலிக்கவும்…. கோடிகோடி புயத்துணை கொற்றமார்” என இரண்டாவது மொழி பெயர்ப்புச் செய்தார். அசலாக எழுதிய பங்கிம் சந்திரருக்கும், அதனை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த ஸ்ரீஅரவிந்தருக்கும் தோன்றாத காலக்கணக்கும் எண்ணிக்கையும், மகாகவி பாரதிக்குத் தோன்றியது விந்தையல்லவா?
அடிமை இந்தியாவால் தேசியகீதமாக அங்கீகரிக்கப்பட்ட வந்தேமாதரம் பாடல், சுதந்திர இந்தியாவில் தாகூரின் “ஜனகணமன’ பாடலுக்குத் துணைப்பாடலாக மாறியது. இசையமைப்பிற்கும் சச்சரவைத் தவிர்ப்பதற்கும் “ஜனகணமன’ பெரிதும் கைகொடுத்ததால், அதுவே தேசியகீதமாகவும், வந்தேமாதரம் துணைப்பாடலாகவும் பின்பற்றப்பட்டது. “”ஆலயங்கள்தொறும் அணி பெற விளங்கும் தெய்விக வடிவமும் தேவியிங்கு உனதே” என வந்தேமாதரம் பாடலில் இடம்பெற்ற விக்கிரக ஆராதனை, ஏகத்தை வணங்குபவர்களுக்குச் சற்று நெருடலைத் தந்தது; துர்க்கை, லட்சுமி, சரசுவதி எனும் சொற்பிரயோகங்களும் உறுத்தலைத் தந்தன.
ஆனந்தமடத்தில் வாழ்ந்த சந்நியாசிகள் ஆங்கிலேயர்களை எதிர்த்ததோடு, ஒழுங்காக ஆட்சி புரியாத முகம்மதியர்களையும் சேர்த்தே எதிர்த்தார்கள். வந்தேமாதரம் பாடலைத் தெருக்கள்தோறும் பாடிக்கொண்டு வந்த ஆனந்தமடத்துச் சந்நியாசிகளின் முழக்கங்களைக் கேட்டு வெள்ளைக்காரர்கள் எவ்வளவுக்கெவ்வளவு ஆத்திரங்கொண்டார்களோ, அவ்வளவுக்கவ்வளவு இசுலாமிய ஆட்சியாளர்களும் அடைந்தனர்.
பங்கிம் சந்திர சட்டர்ஜி ஒரு மதநல்லிணக்கவாதி என்பதை அன்றைக்குப் பலரும் உணரத் தவறிவிட்டனர். “”பல தெய்வ வழிபாடு உண்மையான இந்துமதத்திற்கு ஓர் இழிவாகும்” என்பதை ஆனந்தமடம் நாவலில் பல இடங்களில் சுட்டிச் செல்கிறார். கிரேக்க இதிகாசங்களிலும் தொன்மங்களிலும் இடம்பெற்ற தேவதைகளைக் கிரேக்கக் கவிஞர்கள் எவ்வாறு ஓர் வீரயுகத்தை உருவாக்குவதற்குத் தங்கள் தங்கள் கவிதைகளில் கையாண்டார்களோ, அதைப்போலத்தான் பங்கிம் சந்திரரும் ஓர் ஒருங்குபட்ட தேசிய உணர்வை நாடு முழுவதும் உருவாக்குவதற்குத் துர்க்கை, சரசுவதி போன்ற பெயர்களைப் பயன்படுத்திக் கொண்டார்.
மேலும் சில நிதர்சனங்களை எண்ணிப் பார்த்தால், சுயஉருவங்கள் வெட்ட வெளிச்சமாகும். அமெரிக்காவில் ஆத்திகர்களும் இருக்கிறார்கள்; நாத்திகர்களும் இருக்கிறார்கள். அந்த நாட்டு நாணயங்களில், “இன் காட் வி டிரஸ்டு’ (ஐய் எர்க் ஜ்ங் ற்ழ்ன்ள்ற்) என்ற வாக்கியம் அச்சிடப்பட்டிருக்கும். அதற்காக எந்த நாத்திகரும் அதனைப் புழக்கத்தில் விடக்கூடாது எனச் சொல்வதில்லை. வளைகுடா நாடுகளில் அந்தந்த நாட்டு மன்னர்களின் உருவங்கள், அந்தந்த கரன்சிகளில் அச்சிடப்பட்டிருக்கின்றன. அதற்காக உருவ வழிபாட்டில் நம்பிக்கையில்லாதவர்கள், அதனைத் தொட மாட்டேன் எனக் கூறுவதில்லை.
வந்தேமாதரம் பாடல் ஒரு பாடல் மட்டுமன்று; அதுவொரு வரலாறாகும்.
1905இல் வாரணாசியிலே கோபால கிருஷ்ண கோகலே தலைமையில் அகில இந்திய காங்கிரஸ் கூட்டம் நடக்கின்றது. அக் கூட்டத்திற்கு விடுதைலப் போராட்ட வீரர் ராம்புஜ தத் சவுத்திரியை மணந்திருந்த சரளாதேவியும் (தாகூரின் சகோதரி மகள்) வந்திருந்தார். வந்தேமாதரம் பாடலை வீரத்தோடு பாடக்கூடிய சரளாதேவியை, தடை செய்யப்பட்ட அப் பாடலைப் பாடுமாறு அப் பெருங்கூட்டம் வற்புறுத்தியது. தடை செய்யப்பட்ட பாடலைப் பாடினால், போலீஸôர் புகுந்து கூட்டத்தைக் கலைத்துவிடக் கூடும் என அமைப்பாளர்கள் அஞ்சினர். ஆனால், மக்களின் ஆக்ரோஷத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை. அதனால், பாடலில் சில வரிகளை மட்டும் பாடி விட்டு நிறுத்தி விடுமாறு சரளாதேவிக்கு ஒரு துண்டுச் சீட்டு அனுப்பினார் கோகலே. ஆனால், உணர்ச்சிமயமான கூட்டத்தினரின் முன் தன்னையும் மறந்து முழுப் பாடலையும் பாடிவிட்டார். காவல்துறையினரும் தங்களை மறந்து கேட்டுக் கொண்டிருந்து விட்டனர்.
பாரதி பாடியதுபோல், “”நொந்தே போயினும் வெந்தே மாயினும் நம் தேசத்தவர் உவந்து சொல்வது, வந்தேமாதரம்” அல்லவா?.
Posted in Bankhim Chandra Chatterjee, Bengal Dharsahan, bengali, Bharathiyaar, Rabindranath Tagore, Sri Aravindar, Subramaniya Bharathi, Tamil, Vande Matharam, Vandhe Madaram, Vanga Darshan | Leave a Comment »