பழங்குடியினர் பகுதியில் டாடா உருக்காலை: இந்திய கம்யூ. எதிர்ப்பு
ராய்ப்பூர், பிப். 27: சத்தீஸ்கர் மாநிலத்தில் பழங்குடியினர் பகுதியில் டாடா நிறுவனம் உருக்காலை அமைக்க இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
பஸ்தார் மாவட்டம் லோஹனிகுன்டா பகுதியில் டாடா நிறுவனம் உருக்காலை அமைக்க தங்கள் நிலத்தை தரவிரும்பாத மக்களுடன் இணைந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போராடி வருகிறது.