Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Banner’ Category

Vijay incites Kreedam movie clashes? – Ajith fan club vs Trisha admirers

Posted by Snapjudge மேல் ஜூலை 20, 2007

oLiyile: Review: Kireedam (MalayaLam)

பூனையாக இல்லாமல் போன சோகங்கள்: கிரீடம் பெண்ணீய விமர்சனம்

குரல்வலை: கிரீடம்

கிரீடம் (2007) « Manoranjitam

செல்வேந்திரன்: தல’ தப்புமா…?!

செப்புப்பட்டயம்: கிரீடம் திரைவ�

வெட்டிப்பயல்: கிரீடம் – முள் கிரீடமா?

ராசபார்வை…: கிரீடம்!

சற்றுமுன்…: சென்னையில் திரையிட அஜீத்தின் `கிரீடம்’ படம் ரூ.75 லட்சத்துக்கு விற்பனை

Blogeswari: KIREEDAM: ORU KIZHISAL

BlogsOfRaghs :: பல்லவி & Charanam

Welcome to Sify.com

MSN INDIA – கிரீடம் – விமர்சனம்

சிவபாலன்: இவர்களைத் திருத்தவே முடியாதா!?

சும்மா டைம் பாஸ் மச்சி…..: ‘தல’க்கு அட்டகாசமாக பொருந்துகிறது கிரீடம்!

தமிழ் பூக்கள்: அஜீத்க்கு கிரீடம் சூட்டுமா ‘கிரீடம்’?

Mottaippaiyan: கிரீடம் விமர்சனம்

‘கிரீடம்’ – பாக்ஸ் ஆபிஸ் ஹிட்! :Sutharsan

Muthu’s Rambling Blog: Kireedam – Not what it means

Ultimate Star – Ajith Kumar Fans Club: Kreedam climax – behind the scenes

Blog with a Difference: Kireedam – Ajith’s Crown

Kreedam – Ajith hurts his back: Shooting gets affected « Tamil News: முதுகுவலியால் படப்பிடிப்பு ரத்து: அஜீத்குமார் இன்று சென்னை திரும்புகிறார்- ஆஸ்பத்திரியில் மீண்டும் சிகிச்சை


அஜீத், திரிஷா ரசிகர்கள் மோதல்- தியேட்டர்களில் போலீஸ் குவிப்பு அஜீத், திரிஷா ஜோடியாக நடித்த கிரீடம் படம் இன்று ரிலீசானது. இதற்காக திரிஷா ரசிகர்கள் தியேட்டர்களில் கட்அவுட், பேனர் வைத்தனர். கொடி தோரணங்களும் கட்டினர்.அஜீத், ரசிகர்களும் போட்டி போட்டு பேனர் கட் அவுட் வைத்தார்கள். சில இடங்களில் திரிஷா, பேனர்கள் கிழிக்கப்பட்டன.திருவான்மிïரில் உள்ள ஒரு தியேட்டரில் அஜீத் ரசிகர்கள் 15 அடி உயர கட் அவுட் நிறுவினர். திரிஷா ரசிகர்களும் லாரியில் பேனர்களை கொண்டு வந்து இறக்கி தியேட்டரை சுற்றி வைத்தனர்.இதனால் இரு தரப்பு ரசிகர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். அஜீத் பேனர் வைக்க இடம் வேண்டும் என்று அவரது ரசிகர்கள் கோஷமிட்டனர். திரிஷா பேனர்கள் கிழிக்கப்பட்ட தகவல் அறிந்ததும் போலீசார் அங்கு விரைந்தனர். ரசிகர் களை சமரசம் செய்தார்கள்.இது போல் `கிரீடம்’ ரிலீசான அனைத்து தியேட்டர்களின் வாயில்களிலும் ரசிகர்கள் மோதிக் கொண்டார்கள்.

திரிஷா பேனர்களை கிழித்தவர்கள் பற்றி புகார் அளிக்குமாறு திரிஷா ரசிகர் மன்றத்தினரிடம் போலீசார் கேட்டனர். ஆனால் அவர் கள் புகார் எதுவும் அளிக்க வில்லை. இதனால் அஜீத் ரசிகர்களை கைது செய்யாமல் விரட்டினர்.

அஜீத் ரசிகர் மன்ற தலைவர் கதிர் இது பற்றி கூறும் போது திரிஷா ரசிகர்கள் தமிழ்நாடு முழுவதும் மொத்தமே 5 ஆயிரம் பேர்தான் உள்ளனர். ஆனால் அஜீத் மன்றத்தில் 15 லட்சம் பேர் இருக்கிறார்கள். தமிழகத்தில் நடிகைகளுக்கு கட் அவுட் வைக்கும் பழக்கம் இல்லை. ஆனால் திரிஷா ரசிகர்கள் இடங்களை ஆக்கிர மித்து கட்அவுட் வைத்தனர். அஜீத் பேனர் வைக்க இடம் இல்லாமல் செய்து விட்டனர் என்று குறை கூறினார்.

திரிஷா ரசிகர் மன்ற தலைவி ஜெசி கூறும் போது சம்திங் சம்திங் படத்துக்கே நாங்கள் திரிஷாவின் பேனர் வைத் தோம். உதிரம் கொடுப்போம், உயிர்களை காப்போம், புகையிலை தடுப்போம், புற்று நோய் ஒழிப்போம் என்ற வாசகங்கள் அடங்கிய சுவரொட்டிகளைத்தான் நாங்கள் ஒட்டியுள்ளோம். புற்று நோய் தீமைகளை பொதுமக்களுக்கு விளக்கும் ஒரு விழிப்புணர்வாகத்தான் இந்த பேனர்களை அமைத்தோம். அவற்றை கிழித்து விட்டனர். என்று வருத்தப்பட்டார்.

அஜீத், திரிஷா ரசிகர்கள் மோதலை தொடர்ந்து கிரீடம் ரிலீசாகும் தியேட்டர் களில் இன்று போலீசார் குவிக்கப்பட்டனர். அஜீத், திரஷா பேனர்கள் கிழிக்கப்ப டாமல் கண்காணித்தனர்.
—————————————————————————————————————
ரசிகர்கள் மோதலின் பின்னணி

23 ஜூலை 2007

வழக்கமாக எதிரெதிரே இருக்கும் கதாநாயகர்களின் ரசிகர்களுக்கிடையேதான் பிரச்சினை ஏற்படும். ஆனால் வழக்கத்துக்கு மாறாக நடிகை த்ரிஷாவின் ரசிகர் மன்றமும் அஜீத்தின் ரசிகர் மன்றமும் முட்டிக் கொண்டிருக்கிறது.

`கிரீடம்’ படம் ரிலீஸை தொடர்ந்து சென்னை ஜெயந்தி தியேட்டரில் த்ரிஷா ரசிகர்கள் வைத்த பேனரை அஜீத் ரசிகர்கள் அகற்றச் சொல்ல பிரச்சினை எழுந்திருக்கிறது.

த்ரிஷா ரசிகர் மன்ற தலைவி ஜெஸி, நாங்கள் நல்ல நோக்கத்திற்காக மன்றம் வைத்திருக்கிறோம். ரத்ததானம், புற்றுநோய் விழிப்புணர்ச்சி ஆகியவற்றை ஏற்படுத்தவே பேனர் வைத்தோம் என்றார்.

ஆனால் அஜீத் ரசிகர் மன்ற தலைவர் தேவா, இது நடிகர் விஜய்யின் தூண்டுதலால்தான் த்ரிஷாவின் பேனரை வைத்திருக்கிறார்கள் என்றார்.

விஜய், த்ரிஷா நடிக்கும் படம் வெளியாகும் தியேட்டரில் த்ரிஷா பேனரை வைக்கச் சொல்லுங்கள். விஜய் ரசிகர்கள் விட்டுவிடுவார்களா பார்ப்போம் என்று கொதித்து போய் பேசுகிறார்.

இருதரப்பும் இப்படி முட்டிக்கொள்ள அஜீத்தோ மஞ்சகாமாலையால் பாதிக்கப்பட்டு ரெஸ்ட் எடுத்துக் கொண்டிருக்கிறார்.

—————————————————————————————————-

குமுதம் ரிப்போர்ட்டர்

29.07.07 ஹாட் டாபிக்

அடித்துக் கொண்ட அஜீத் – த்ரிஷா ரசிகர்கள்

– கிரீடத்தால் வந்த கிறுகிறு மோதல்

இரண்டு கதாநாயகர்களின் திரைப்படங்கள் ஒரே நாளில் ரிலீஸானால், அன்றைய தினம் மேற்படி இரு ஹீரோக்களின் ரசிகர்களும், முட்டி மோதிக் கொள்வது ரொம்பவும் சகஜமான விஷயம்.

ஆனால், ஒரே படத்தினுடைய நாயகனின் ரசிகர்களும் நாயகியின் ரசிகைகளும் கட்_அவுட் வைப்பதில் முட்டல் மோதலில் ஈடுபடுவது கொஞ்சம் புதுசுதான்.

அஜித்_த்ரிஷா நடித்து வெளியாகியுள்ள ‘கிரீடம்’ பட ரிலீஸின் போதுதான் இப்படியரு களேபரம் அரங்கேறியிருக்கிறது. த்ரிஷா நற்பணி மன்றத்தின் சார்பில் ஆங்காங்கே போஸ்டர் மற்றும் கட்அவுட்கள் வைக்க முயன்றபோது, அஜித் ரசிகர்கள் அதைத் தடுத்ததோடு, கிழித்து, அடித்தும் விரட்டி இருக்கிறார்கள்.

என்ன நடந்தது என்பதை நம்மிடம் விரிவாக விவரித்தார் த்ரிஷா நற்பணி மன்றத் தலைவி ஜெஸி.

‘‘ஆரம்பத்தில் நற்பணி மன்றம் அமைத்து பல நல்ல விஷயங்களைச் செய்ய முடிவெடுத்த நானும், என் சகோதரி எமியும் எங்கள் நற்பணிக்கு த்ரிஷா பெயரைப் பயன்படுத்த ஆசைப்பட்டோம். சில காலத்துக்கு முன்பு த்ரிஷா பற்றி மீடியாக்களில் வரும் செய்திகள் எல்லாம் தப்புத் தப்பாக இருந்தன. உண்மையில் அவர் குழந்தை மனம் படைத்தவர் என்பதை நாங்கள் நேரில் பழகும்போது தெரிந்து கொண்டோம். இங்குள்ள முன்னணி நாயகர்கள் பலருக்கு இல்லாத சமூக அக்கறை த்ரிஷாவுக்கு இருந்தது.

எங்களின் ஆர்வத்தைப் பாராட்டிய த்ரிஷாவிடம் புற்றுநோயின் கொடுமையைப் பற்றித் தெளிவாக எடுத்துச் சொன்னோம். எய்ட்ஸை கட்டுப்படுத்த உலக நாடுகள் பல கோடி மானியம் தருகின்றன. ஆனால் அதைவிட மோசமான நோயான புற்றுநோயை ஒழிக்கவும் அதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவவும் உலக சுகாதார மையம் மட்டுமே ஓரளவு உதவி செய்கிறது.

இந்த விவரங்களை த்ரிஷாவிடம் சொல்லி, நாம் புகையிலை மற்றும் புகைப் பழக்கத்தை எதிர்த்து பிரசாரம் செய்யலாமா என்று கேட்டதும், சந்தோஷமாக சம்மதம் தெரிவித்தார். அத்துடன் நேரம் கிடைக்கும் போதெல்லாம் அடையாறு புற்றுநோய் மருத்துவமனைக்கு வந்து, அங்குள்ள நோயாளிகளுக்கு ஆறுதல் சொல்ல விரும்பி அப்படியே செய்தார்.

எங்கள் மன்றம் ஆரம்பித்து ஒன்றரை வருடம்தான் ஆகிறது. இதுவரை 15 அனாதைக் குழந்தைகளைத் தத்தெடுத்து வளர்க்க ஆரம்பித்துள்ளோம். சுமார் பத்து மாணவர்களின் படிப்புச் செலவை நாங்கள் ஏற்றுக் கொண்டுள்ளோம். மேலும், திருவண்ணாமலை மற்றும் தூத்துக்குடியில் ஆதரவற்றோர் இல்லம் கட்ட இடம் வாங்கிப் போட்டிருக்கிறோம்.

இந்நிலையில், த்ரிஷா நடித்து வெளியாகும் படங்களின் போஸ்டர் மற்றும் பேனர்களில் புகையிலைக்கு எதிரான வாசகங்களைச் சேர்த்து வாழ்த்துத் தெரிவிக்க விரும்பினோம். த்ரிஷா நடித்து வெளியான ‘சம்திங் சம்திங்’ படம் வெளியானபோது, எங்கள் மன்றத்தின் சார்பில் முதன் முதலாக சில தியேட்டர்களில் கட் அவுட் வைக்கப் போனோம். இதற்கு ஜெயம் ரவி ரசிர்கள் எதிர்ப்புத் தெரிவித்தார்கள். நாங்கள் ஒட்டிய போஸ்டர் மீது ஜெயம் ரவி போஸ்டரை ஒட்டினார்கள். நாங்கள் உடனடியாக ஜெயம் ரவியின் அப்பாவிடம் போய் முறையிட்டோம். அவர் பேசி ரவியின் ரசிகர்களை சமாதானப்படுத்திவிட்டார்.

அதன்பிறகு இப்போது அஜித்துடன் த்ரிஷா நடித்த ‘கிரீடம்’ படம் வெளியான போதும் பெரும் சலசலப்பை ஏற்படுத்திவிட்டார்கள். கட் அவுட்டில் இருந்த எங்கள் மன்ற செல்போன் நம்பரில் பேசிய அஜித் ரசிகர்கள், த்ரிஷா பற்றி படுமட்டமாகப் பேசினார்கள். சில இடங்களில் எங்களைத் தாக்கியும் காயப்படுத்தினார்கள்.

முழுக்க முழுக்க சமுதாய விழிப்புணர்வு நோக்கில் செயல்படும் எங்களை அவமானப்படுத்திவிட்டதால் அப்செட் ஆகிவிட்டோம்!’’ என்றார் வேதனையுடன்.

நடந்த விவகாரம் பற்றி அஜித் தரப்பைத் தொடர்பு கொண்டு விளக்கம் கேட்டபோது, ‘‘நான் சினிமாவுக்கு வந்து பதினைந்து ஆண்டுகள் முடிந்துவிட்டன. இதுவரை என்னாலோ என் ரசிகர்களாலோ யாருக்கும் எந்தத் தொந்தரவும் ஏற்பட்டதில்லை. அதிலும் என் ரசிகர்கள் முழு கட்டுப்பாட்டுடன் எதிலும் எல்லை மீறாதவர்களாகவே வளர்ந்தவர்கள். ‘நான் கடவுள்’ படத்திற்காக கமிட் ஆகி, பாலாவால் ஏற்பட்ட பிரச்னை பற்றி குமுதம் ரிப்போர்ட்டரில் வந்த செய்தியைப் படித்துக் கொந்தளித்த என் ரசிகர்கள், எங்கேயாவது பிரச்னையை ஏற்படுத்தினார்களா? இல்லையே! அப்படிப்பட்டவர்கள் த்ரிஷா மன்றத்தினரைப் புண்படுத்தினார்கள் என்பதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது. என் ரசிகர்கள் பெயரில் வேறு யாரோ செய்த சில்மிஷத்தை அவர்கள் தவறாகப் புரிந்து கொண்டிருக்கக்கூடும்.

இப்போது வெளிவந்து நன்றாக ஓடிக்கொண்டிருக்கும் ‘கிரீடம்’ பட தியேட்டர்கள் சிலவற்றில், விஷமிகள் சிலர் போய் கோரஸாக தொடர்ந்து குரல் எழுப்பி பார்வையாளர்களுக்குத் தொந்தரவு கொடுத்திருக்கிறார்கள். அவர்களை தியேட்டர் ஊழியர்கள் பிடித்து விசாரித்த தகவல் கிடைத்ததும், ‘யாரோ அவர்களைத் தூண்டிவிடுகிறார்கள். பாவம், விட்டு விடுங்கள்’ என்றேன். அதேபோல்தான் த்ரிஷா மன்றத்தினர் கூறுவதையும், பெரிதுபடுத்தாதீர்கள்’’ என்று அஜித் கூறியதாகச் சொன்னார்கள்.

இதையடுத்து த்ரிஷா தரப்பை அறிய அவரிடம் பேசிய போது, ‘‘இந்த ஃபீல்டில் ஹீரோவுக்கு இணையாக எந்த ஹீரோயினும் இருக்க முடியாது என்பது எனக்கு நன்றாகத் தெரியும். ஃபீல்டில் இருக்கும் குறுகிய காலத்தில் ஏதாவது நல்லது செய்யவேண்டும் என்று யோசித்துச் செயல்படும் என் ரசிகர்களை யாருமே புரிந்து கொள்ளவில்லை.

சம்பந்தப்பட்ட படத்திற்கான வாழ்த்துச் செய்தியுடன் விழிப்புணர்வு வாசகங்களைச் சேர்த்து பேனர் வைக்க ஆசைப்பட்டோம். அதற்கு அஜித் ரசிகர்கள் எதிர்ப்புத் தெரிவித்ததும் எங்கள் கட்அவுட்டை எடுத்துவிட்டோம். இனி, இது போன்ற பிரச்னை வராமல் தடுக்க சம்பந்தப்பட்ட ஹீரோக்களுடன் நேரில் பேசலாம் என்று முடிவெடுத்தி ருக்கிறேன்!’’ என்றார் த்ரிஷா.

இவர்களின் விவகாரம் இப்படிப் போய்க்கொண்டிருக்கையில், நடிகைகளை இங்குள்ள நடிகர்கள் நசுக்கப் பார்க்கிறார்கள் என்ற குற்றச்சாட்டும் எழ ஆரம்பித்துவிட்டது.

பெயர் கூற விரும்பாத ஒரு ஹீரோயினியிடம் பேசும்போது, ‘‘கோலிவுட்டைப் பொறுத்தவரை எல்லா ஹீரோயின்களையும் டம்மியாகப் பார்ப்பதே இங்குள்ள ஹீரோக்களின் போக்காக இருக்கிறது. சூப்பர் ஸ்டாரின் ‘சிவாஜி’ படத்தில்கூட ஓர் அழகான ஸ்ரேயாவும் இருப்பதால்தான் ரசிக்கிறார்கள். ஆனால், ஸ்ரேயா பற்றி யாருமே பாராட்டி கருத்துச் சொல்வதில்லை. இது ஆணாதிக்கம் மட்டுமல்லாமல் அதற்கும் மேலானது என்றுதான் சொல்ல வேண்டும்!’’ என்றார்.

இதற்கு மறுப்புத் தெரிவித்து நம்மிடம் பேசிய பிரபலமான ஹீரோ ஒருவர், ‘‘கோலிவுட்டைப் பொறுத்தவரை ஹீரோக்கள்தான் எல்லாமே. அவர்களை வைத்துத்தான் ஒட்டுமொத்த வியாபாரமும் நடக்கிறது. ஒருபோதும் ஹீரோயின் தனித்து ஜெயிக்க முடியாது. அதைப் புரிந்து கொண்டு த்ரிஷா போன்ற நடிகைகள் அடக்கி வாசிப்பது அவர்களுக்கு நல்லது’’ என்றார் காட்டமாக.

இப்படி ஆளாளுக்குச் சொன்ன விஷயங்களைப் பற்றி குஷ்புவிடம் பேசி கருத்துக் கேட்டபோது, ‘‘நடந்த சம்பவங்களுக்கு அஜித் அல்லது த்ரிஷா காரணமாக இருக்க மாட்டார்கள். அவர்கள் பெயரை வைத்து யாரோ சிலர் செய்த கலாட்டாவால் ஒட்டுமொத்த கோலிவுட்டிற்கு எந்தக் கேடும் வந்து விடாது.

அஜித்திற்கு இணையாக அல்லது போட்டியாக த்ரிஷா ஒருபோதும் ஆகமுடியாது என்பதை த்ரிஷாவே புரிந்து வைத்திருப்பார். ஹீரோவின் லெவல் வேறுதான். என்றாலும் ஹீரோயின் இல்லாமல் எந்த ஹீரோவாவது ஒரு படமெடுத்து வெற்றியடைய வைக்க முடியுமா என்பதையும் யோசிக்க வேண்டும்!’’ என்றார் கூலாக. ஆக கிரீடம், கோலிவுட்டில் ஒரு புது சர்ச்சைக்கு முடி சூட்டியிருக்கிறது. ஸீ

– வி.குமார்

———————————————————————————————————
அஜீத் சப்-இன்ஸ்பெக்டர் ஆகிறார்- மாற்றப்பட்ட `கிரீடம்’ கிளைமாக்ஸ் கதை

அஜீத்குமார் நடித்த “கிரீடம்” படம் தற்போது வெளியாகி ஓடிக் கொண்டி ருக்கிறது.

இதில் அஜீத் ஜோடியாக திரிஷாவும் தந்தையாக ராஜ் கிரணும் நடித்துள்ளனர்.

போலீஸ் ஏட்டு கேரக்டரில் நடிக்கும் ராஜ்கிரண் மகன் அஜீத்தை போலீஸ் சப்- இன்ஸ்பெக்டராக்க கனவு காண்கிறார். உடற்பயிற்சி யெல்லாம் கற்றுக் கொடுத்து போலீஸ் வேலைக்கு தகுதி யாக்குகிறார்.

போலீஸ் வேலைக்கான `இண்டர்விï’வில் அஜீத்தும் தேர்வாகிறார். ஆனால் திடீர் திருப்பமாக அஜீத் ஒரு தாதாவுடன் மோதி ரவுடி யாகிறார். கிளைமாக்சில் தாதாவை கொன்று விட்டு ஜெயிலுக்கு போகிறார்.

இந்த கிளைமாக்ஸ் அஜீத் ரசிகர்கள் இடையே அதி ருப்தியை ஏற்படுத்தியது. விமர் சனங்களும் கிளம்பின.

இதையடுத்து கிளைமாக்ஸ் மாற்றப்பட்டுள்ளது. பத்திரிகை விமர்சனங்கள், பொது மக்களின் கோரிக்கையை ஏற்று கிளைமாக்ஸ் மாற்றப்பட்டதாக பட அதிபரும், நடிகருமான கே.பாலாஜி தெரிவித்தார். மாற்றப்பட்ட கிளைமாக்ஸ் கதை வருமாறு:-

தாதாவை அஜீத் கொன்ற தும் போலீஸ் சப்- இன்ஸ் பெக்டராகும் கனவு தவிடு பொடியாகி விட்டதை உணர்ந்து அஜீத் அழும் காட்சி கள், பிறகு அஜீத்தை ராஜ் கிரண் கைது செய்யும் காட்சி கள் நீக்கப்பட்டுள்ளன.

தாதாவை கொன்றதும் பின்னணியில் கோர்ட் சீன் குரல் சேர்க்கப்பட்டுள்ளது. அஜீத் சட்டத்துக்கு முன் குற்றவாளியாக இருந்தாலும் கொல்லப்பட்டவர் கிரிமினல் என்பதை கருத்தில் கொண் டும் பொதுமக்கள் ணீகோரிக் கைகளை ஏற்றும் அவருக்கு பொதுமன்னிப்பு வழங்கப் படுகிறது. அவரை போலீஸ் வேலையில் சேர்த்துக் கொள்ளவும் கோர்ட் பரிந் துரைக்கிறது என்று நீதிபதி குரல் எதிரொலிக்கிறது.

பிறகு அஜீத் சப்- இன்ஸ்பெக்டர் உடையுடன் வருகிறார். அவரை பார்த்து ராஜ்கிரண் `சல்ïட்’ அடிக் கிறார். கனவெல்லாம் நன வாதே என்ற பாடல் ஒலிக்க படம் முடிகிறது.

ஒரு படம் திரைக்கு வந்து ஓடிக் கொண்டிருக்கும் போது `கிளைமாக்ஸ்’ காட்சிகள் மாற்றப்படுவது அபூர்வ மான விஷயம் என்பது குறிப்பிடத் தக்கது. இதை ரசிகர்கள் வர வேற்றுள்ளனர்.

Posted in Actor, Actress, Admirer, Ajeeth, Ajith, Ajithkumar, Appreciation, Ardent, Asin, Banner, Burn, Chandrasekar, Chandrasekhar, Cinema, clash, Clubs, Craze, Cut-out, Cutout, Defame, Devotee, Effigy, Enthusiast, Fanatic, Fans, Films, Flag, Freak, Hoarding, Incite, Jassy, Jessie, Kireedam, Kiridam, Kreedam, Kridam, Love, Maniac, Movies, Nut, Passion, Protest, SA Chandrasekar, SA Chandrasekhar, Shoba, Shobha, Soorya, Star, support, Supporter, Surya, Tamil, Tamil Actor, Tamil Actors, Tamil Actress, Tamil Actresses, Tamil Cinema, Tamil Film, Tamil Films, Tamil Movie, Tamil movie producer, Tamil Movies, Tamil Music, Tamil Nadu, Tamil News, Tamil Padam, Tamil Pictures, Tamil Stars, Tamil Theater, Tamil Theatres, Thala, Thrisha, Torn, Trisha, Vijai, Vijay, Zealot | 1 Comment »

Advertisements – Noise & Light Pollutions

Posted by Snapjudge மேல் ஜூலை 16, 2007

ஒலி, ஒளி, விளம்பரத் தொல்லை

க.ப. அறவாணன்

அயல் நாட்டிலிருந்து நம் நாட்டுக்கு வருவோருக்கும், அயல்நாடு சென்று திரும்புவோருக்கும் அதிர்ச்சியாகவும் அதிசயமாகவும் முதலில் கண்ணில்படுவதும், காதில் விழுவதும் நம் ஊர் வாகனங்கள் எழுப்பும் பேரிரைச்சல். நம் நாட்டில் சுமார் 5 கோடியே 89 லட்சம் வாகனங்கள் நாளும் சாலையில் ஓடுகின்றன. இவற்றுள் சுமார் 4 கோடியே 15 லட்சம் இருசக்கர வாகனங்களும் 76 லட்சம் கார்களும் 7 லட்சம் பஸ்களும் 30 லட்சம் லாரிகளும் இன்னபிற 61 லட்சம் வாகனங்களும் 33 லட்சம் கிலோமீட்டர் நீளமுள்ள நம் சாலைகளில் ஓடிக் கொண்டிருக்கின்றன.

நம் வண்டி ஓட்டுநர்கள் வண்டியை எடுத்தவுடன் தம் கையால் பற்றுவது ஒலிப்பான்களைத்தான், சிலர் வைத்த கையை எடுப்பதே இல்லை. சாலைகளில் செல்வோர் அனைவருக்கும் காது கிழிந்துவிடும் அளவிற்கு ஹாரன்களை விடாமல் ஒலித்துக் கொண்டிருப்பார்கள். ஒலி அளவு உலகச் சுகாதார சபை வரையறுத்துள்ள 45 டெசிபலாக க்க்ஷ இருத்தல் வேண்டும் என்ற அளவை நம் நகரங்கள் பலமடங்கு கடந்துவிட்டன. மோட்டார் வாகனங்களைக் கண்டுபிடித்து வடிவமைத்த நாடுகளில் லட்சக்கணக்கில் வாகனங்கள் ஓடினாலும், அவர்கள் ஹாரன்களை ஒலிப்பதே இல்லை. ஒலிப்பது அநாகரிகம் என்பது அவர்கள் கருத்து. வண்டியின் முன்புறமும், பின்புறமும் அமைந்துள்ள வலது, இடது புறச் சிக்னல் விளக்குகளைப் போட்டுவிட்டுத் திரும்புவதையும் முந்திச் செல்வதையும் முறைப்படச் செய்கின்றனர்.

வாகனங்கள் வழி ஒலிமாசை உண்டாக்குவதில் இந்தியா தலைமை இடம் வகிக்கிறது. மனிதர்களின் காதுகளைச் செவிபடச் செய்வதுடன் சாலைகளின் இருமருங்கிலும் உள்ள பறவைகளையும், விலங்குகளையும் தம் இருப்பிடத்தைவிட்டு வாகன இரைச்சல் விரட்டி விடுகிறது. செடிகொடிகள் இயல்பாகத் தழைப்பதைத் தடுக்கிறது. நகர்வன, ஊர்வன, பறப்பன, நடப்பன ஆகிய உயிரினங்களின் இதயத்தை ஒலிமாசு தொடர்ந்து பாதிக்கிறது. குறிப்பாக வாகனங்கள் வெளிப்படுத்தும் கார்பன் – மோனாக்ûஸடு வாழ்நாளைக் குறைத்து நாளடைவில் உயிரையே பறிக்கவல்லது.

ஒலியைப் பெருக்குவதில் வாகனங்களுடன் போட்டி போடுகின்றவை நம் அரசியல்வாதிகளின் மேடைப் பேச்சுகள். அவர்கள் நடுவீதி மேடைகளின்மேல் முன் உரக்கக் கத்துவதை ஒலிப்பெருக்கிகள் நாலாபுறமும் உச்சஸ்தாயிலில் எடுத்துச் செல்லுகின்றன. நம்மூர்க் கோயில் திருவிழா, பூப்பு, திருமணம், வளைகாப்பு முதலான அனைத்துச் சடங்குகளிலும் கூம்பு வடிவ ஒலிபெருக்கிகளைக் கட்டி, பாடல்களைப் போட்டு, பெருத்த தொல்லையை ஏற்படுத்துகிறார்கள். உறக்கம் போகிறது; அமைதியும் போகிறது. காவல்துறையின் அனுமதி என்பது பெயருக்குத்தான்.

நம் ஜனநாயகத் தேர்தல் முறையின் அண்மைப் பிரசவம் ஆட்டோக்களில் ஒலிபெருக்கிகளைக் கட்டித் தெருவெல்லாம் அலற விடுவது, நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலின்போது ஆயிரக்கணக்கான ஆட்டோக்கள் இந்த முறையில்தான் ஜனநாயகத்தைக் காப்பாற்றின; காப்பாற்றுகின்றன. மக்கள் இந்தச் சப்தத்தைக் கேட்டா வோட்டு போடுகிறார்கள்? அவ்வளவு அறிவு குறைந்தவர்களா அவர்கள்? ஒருக்காலும் அல்லர்.

மிகச் சப்தமாகப் பேசுவதும், மேடையில் ஒலிபெருக்கிக்கு முன் முழங்குவதும், அதை மேலும் ஒலிபெருக்கி வைத்து நாலாபுறமும் அமைதியை அழிப்பதும், தேர்வுக்குப் படிக்கின்ற குழந்தைகளைப் பற்றியோ, நோயாளிகளைப் பற்றியோ, முதியவர் பற்றியோ எந்தவித அக்கறையும் இல்லாமல் ஒலிபெருக்கிகளை அலறவிடுவதும், சுதந்திர நாட்டில் நம் உரிமைகள் ஆகிவிட்டன.

அயல்நாட்டு ஐந்தாண்டு பணியின்போது ஆப்பிரிக்கக் கண்டத்து செனகால் நாட்டில் நானும், என் குடும்பத்தினரும் ஒரு வீட்டில் தங்கியிருந்தோம். நான், என் மனைவி, ஏழே வயதான என் மகன். புதிதாக வாங்கி வீட்டில் வைத்திருந்த வானொலியையும், தொலைக்காட்சியையும் நம் ஊரைப்போல மிக உரத்து வைப்பது மகனுடைய வழக்கம். இரண்டுநாள் பார்த்தபிறகு எங்கள் வீட்டுக்குப் பின்வீட்டில் இருந்த ஓர் ஆப்பிரிக்கப் பெண்மணி எங்கள் வீட்டிற்கு வந்தார். வாயில் மணியை அடித்துவிட்டு (என்னை மன்னித்துக்கொள்ளுங்கள்) என்று ஃபிரெஞ்ச் மொழியில் சொல்லி, வாயிலில் நின்றவர், “”உங்கள் வீட்டில் வானொலியும், தொலைக்காட்சியும் மிக உச்சஸ்தாயில் அலறுகின்றன. அவற்றை ஒலிகுறைத்து வீட்டில் உள்ளவர் மட்டுமே கேட்கும்படியாக வைத்து ரசிக்க வேண்டும்” என்று சொல்லிவிட்டு, மீண்டும் மன்னிப்புக் கேட்டுக்கொண்டு விடைபெற்றுவிட்டார்.

ஆப்பிரிக்க, தென்அமெரிக்கக் கண்டங்களில் உள்ள வளரும், வளரா நாடுகளில் கூடத் தேர்தலின் போது இத்தனைக் கூச்சல் இல்லை. தெரு முழக்கம் இல்லை, தெருக்கூட்டம் இல்லை. ஐரோப்பிய, அமெரிக்க ஜப்பான், சிங்கப்பூர் உள்ளிட்ட தென்கிழக்கு ஜனநாயக நாடுகளில் ஆர்ப்பாட்டம் எதுவுமின்றித் தேர்தல்கள் நடக்கின்றன. நம் நாட்டில் மட்டும் இந்த அளவு சப்தம் ஏன்? ஆர்ப்பாட்டம் ஏன்? இது மட்டுமா? தீபாவளிக்கு மட்டும் வெடிக்க வேண்டிய பட்டாசுகளை அரசியல்வாதிகளின் பிறந்தநாள்களின்போதும், தேர்தல் வெற்றிகளின்போதும், வெடித்துச் சப்தம் எழுப்புகிறார்கள். இச் சப்தம் மக்களுக்கு மகிழ்ச்சியைத் தருமா எரிச்சலை ஊட்டுமா என்பது பற்றிச் சிந்திப்பதே இல்லை.

மிகுந்த சப்தத்தைக் கேட்பதிலும், பொறுத்துப் போவதிலும் ஆர்வமும் இயல்பும் இருத்தலைப் போலக் கண் கூசும் வெளிச்சத்திலும் நமக்கு இயல்புக்கு மீறிய மோகம் இருக்கிறது. சாலைகளிலும் சந்திப்புகளிலும் அரசியல் கூட்டங்களிலும் கண்ணைக் கூசச் செய்யும் விளக்குகளைப் பொருத்துவது நம் பழக்கம். கோயில் திருவிழாக்களிலும் அப்படியே. மின்சாரப் பற்றாக்குறை உள்ள நாட்டில் வெற்று ஆர்ப்பாட்டங்களுக்காக, மின்சக்தியை வீணாக்குவது என்ன நியாயம், என்ன சமூக நீதி?

நம் நகர்ப்புறச் சுவர்களுக்கு உயிர் மட்டும் இருக்குமானால் தலையில் அடித்துக் கொண்டு ஒப்பாரி வைத்து அழும். அவ்வளவு சுவரொட்டிகள். சுவரொட்டிகளுக்கு மேல் சுவரொட்டிகள். அதுமட்டும்தானா? ஒரு கட்சிப்பிரமுகர் வருகிறார் என்றால் அவர் உருவம் பொறித்த பல கட்அவுட்களும் பல அடி உயரத்தில் வழிநெடுக நிறுத்தப்படுகின்றன. சாலைகளின் இருமருங்கும் தோண்டிக் குழிபறித்து வளைவுகள் அமைக்கப் பெறுகின்றன. இவற்றால் சமூக ஆரோக்கியத்தைக் குலைக்கும், தனிமனித வழிபாடு ஒருவேளை வரலாம். ஆனால் அவ்வழிபாடும் வளருகிற வேகத்தில் மறந்துவிடும். இவற்றால் ஈர்க்கப்பட்டு மக்கள் வோட்டுப் போட்டு விடுவார்களா என்ன? தமக்கோ தொகுதிக்கோ என்னென்ன செய்தார் என்று சீர்தூக்கிப் பார்க்கும் பகுத்தறிவு நம் மக்களிடம் இல்லையா என்ன? விளம்பரம் செய்யத் தொலைக்காட்சிகள் வந்துவிட்டன. வானொலிகள் வந்துவிட்டன. இவற்றைப் பொதுமக்கள் பார்க்கிறார்கள், கேட்கிறார்கள். இவற்றை மட்டுமே பயன்படுத்திப் பிரசாரங்களை அரசியல்கட்சிகள் அமைத்துக் கொள்ள வேண்டும். பாதிக்குப்பாதி படிக்காத மக்கள் உடைய நாட்டில் ஆடம்பர வாசகங்களை உடைய சுவரொட்டிகளை ஒட்டுவதால் காசும், காலமும் சுவர்களும்தான் வீணாகின்றன.

காதைப் பிளக்கும் சப்தமும், கண்ணைப் பறிக்கும் வெளிச்சமும், கருத்தைக் குழப்பும் விளம்பரமும், நாம் இன்னும் உரிய பக்குவத்தை அடையவில்லை என்றே காட்டுகின்றன. இவற்றை முற்றுமாக வெறுக்கும் படித்த இளைஞர்கள், பெரியவர்கள், நடுத்தரமக்கள் அறுபது சதவீதத்துக்கு மேலாக இருக்கிறார்கள். மிதமிஞ்சிய சப்தமும், வெளிச்சமும், விளம்பரமும் உரியவர்களைக் கணிசமான மக்களிடமிருந்து அந்நியப்படுத்துகின்றன; அந்நியப்படுத்தும் என்பதே உண்மை!

(கட்டுரையாளர்: முன்னாள் துணைவேந்தர், மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகம்.)

Posted in Ad, Ads, Advertisement, Banner, Cinema, Disturbance, Elections, Electronic, Environment, Hoardings, Impact, Light, Motor, Nature, Noise, Party, Politics, Polls, Pollution, Sound, Vehicles, Vision | Leave a Comment »

Slum Clearance Board housing collapses – Daily Routine of the Poor

Posted by Snapjudge மேல் மே 30, 2007

விழுந்து நொறுங்கும் வீடுகள்: அலறும் குடும்பங்கள்

சென்னை, மே 30: 5-ம் வகுப்பு படிக்கும் மீனா, நண்பர்களுடன் தனது வீட்டில் மதிய உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அப்போது, திடீரென வீட்டின் மேற்கூரை விழுந்து நொறுங்கியது. சாப்பாட்டில் மண். அலறியடித்து, வீட்டை விட்டு வெளியே ஓடி வந்தனர்.

இந்தச் சம்பவம் சென்னை சாந்தோம் அருகே உள்ள நொச்சிக்குப்பம் குடிசை மாற்று வாரியக் குடியிருப்பில் திங்கள்கிழமை நடைபெற்றது.

மேற்கூரை விழுந்து நொறுங்கும் சம்பவம் அந்தப் பகுதியில் அன்றாடம் நடைபெறும் நிகழ்வாகி விட்டது என்பதால் யாரும் அவ்வளவு கவலைப்படவில்லை. காரணம், மேற்கூரை இடிந்து விழும் சம்பவம் அடிக்கடி நடைபெற்று வருகிறது.

6 மாதங்களுக்கு முன்பு குடிசை மாற்று வாரியக் குடியிருப்பின் பால்கனி சுவர் இடிந்து விழுந்ததில் மாதவராஜ் என்பவர் உயிரிழந்தார்.

“”சென்னையில் குடிசைகளை அகற்றி அப்பகுதியில் குடியிருப்புகளை கட்டும் திட்டம் முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது நொச்சிக்குப்பத்தில் தான். 786 வீடுகள் கொண்ட குடியிருப்புகள், கடந்த 1972-ல் பயனாளிகளிடம் ஒப்படைக்கப்பட்டன. கால மாற்றங்களால் தற்போது கட்டடங்கள் சேதமடைந்து வருகின்றன” என்றார் 75 வயதான ஆர்.எஸ்.மணி.

வசதி படைத்தவர்கள் தங்களின் சேதமடைந்த வீடுகளை சரி செய்து கொள்கின்றனர்.

“”கடந்த 6 ஆண்டுகளாக எங்களின் வீடுகள் மிக மோசமான நிலையில் உள்ளன. வீடுகளை முற்றிலும் இடித்து விட்டு புதிதாக கட்டித் தருவதாக அரசு அறிவித்துள்ளது. பயனாளிகள் பட்டியலை எடுத்தார்கள். அதன்பின்பு, எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை” என்றார் ஜெயசீலி.

குடிசைப் பகுதி தடையா? நொச்சிக்குப்பம் குடிசை மாற்று வாரியக் குடியிருப்பை ஒட்டி, நூற்றுக்கணக்கான குடிசை வீடுகள் உள்ளன. குடிசை மாற்று வாரியக் குடியிருப்பில் வசிப்போரின் வாரிசுகள், குடிசை வீடுகளில் வசிப்பதாகக் கூறப்படுகிறது.

“”புதிதாக கட்டித் தருவதாக அரசு உறுதி அளித்துள்ள வீடுகளில் தங்களுக்கும் பங்கு வேண்டும் என குடிசைப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆனால், அவர்களிடம் ரேஷன் அட்டை உள்ளிட்ட சான்றுகள் இல்லை. இதனால், வருவாய்த் துறை சார்பில் இரண்டு முறை பயனாளிகள் பட்டியல் வெளியிட்ட போதும், அப்பகுதியில் பெரும் குழப்பம் நிலவியது.

இதனால், என்ன செய்வதென்று தெரியாமல் அதிகாரிகள் தவித்து வருகின்றனர்” என்றார் அப்பகுதியைச் சேர்ந்த சேகர்.

மாற்று இடம் வழங்கப்படவில்லை: “”நொச்சிக்குப்பத்தில் உள்ள சேதமடைந்த வீடுகளை இடிப்பதற்கு அரசு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. ஆனால், அங்கு இருப்பவர்களை வேறு இடங்களில் தங்க வைப்பதற்கான மாற்று இடம் வழங்கப்படவில்லை என்பதால், அப்பகுதி மக்கள் அங்கேயே குடியிருந்து வருகின்றனர்” என்கிறார் தென்னிந்திய மீனவர் நலச்சங்கத்தைச் சேர்ந்த பாரதி.

இதுகுறித்து குடிசை மாற்று வாரிய அதிகாரிகளிடம் கேட்ட போது,””சேதமடைந்த கட்டடங்களை இடித்து, புதிய கட்டடங்களை கட்டுவதற்கான வரைபடம் தயாராக உள்ளது. விரைவில் குடியிருப்புகள் கட்டப்படும்” என்றனர். எப்போது என்பதை தெளிவுபடுத்தவில்லை.

——————————————————————————————————————-

குறட்டை விடும் குடிசை மாற்று வாரியம்

எம். மார்க் நெல்சன்

Kalainjar DMK Slum Clearance board abuse power Karunanidhi banner

சென்னை கோட்டூர்புரம் குடிசை மாற்று வாரிய குடியிருப்புச் சுவர்களில் வைக்கப்பட்டிருக்கும் விளம்பரங்கள்.

சென்னை, ஜூலை 15: சென்னையில் குடிசைப் பகுதி மாற்று வாரியத்தின் சுவர்கள் வருமானம் ஈட்டித் தருபவையாக மாறி வருகின்றன.

ஆனால், வருமானம் தொடர்பான வரவு -செலவு கணக்குகளைப் பராமரிப்பதில் தமிழ்நாடு குடிசைப் பகுதி மாற்று வாரிய அதிகாரிகள் மெத்தனம் காட்டி வருகின்றனர்.

சென்னையின் பல்வேறு பகுதிகளில் குடிசை மாற்று வாரிய குடியிருப்புச் சுவர்கள் இருந்தாலும், கோட்டூர்புரம் குடிசை மாற்று வாரிய குடியிருப்புச் சுவர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.

அங்குள்ள பிளாக் ஹெச்-8 முதல் ஹெச்-15 வரையுள்ள குடியிருப்புச் சுவர்களில் தனியார் விளம்பரங்களும், ஹெச்-5, 6, 7, 16 மற்றும் பிளாக் ஆர் -18, 19 ஆகிய குடியிருப்புச் சுவர்களில் முதல்வர் கருணாநிதியின் சட்டமன்ற பொன்விழா விளம்பர பேனர்களும் இடம்பெற்றுள்ளன.

சுவர் விளம்பரங்களுக்கு ஆண்டுக்கு, சதுர அடிக்கு அதிகபட்சமாக ரூ. 10 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. விளம்பரப் பலகைகளை வைக்க ஆண்டுக்கு, சதுர அடிக்கு ரூ. 26 வசூலிக்கப்படுகிறது.

இந்தக் கட்டணங்கள் ஒவ்வொரு ஆண்டும் 10 சதவீதம் உயர்த்தப்படுகின்றன. பெரும்பாலும், இந்த விளம்பரங்கள் அனைத்தும் 1,200 சதுர அடி அளவில் அமைக்கப்படுகின்றன.

இதன்படி, கோட்டூர்புரம் குடியிருப்புப் பகுதிகளில் உள்ள ஆறு விளம்பரப் பலகைகள் மூலம் ஆண்டுக்கு ரூ. 2 லட்சமும், எட்டு சுவர் விளம்பரங்கள் மூலம் ரூ. 1 லட்சமும் அரசுக்கு வருமானம் வருகிறது.

இதே பகுதியில் தனியார் இடத்தில் வைக்கப்பட்டுள்ள விளம்பரங்களுக்கு சதுர அடிக்கு ரூ. 60 முதல் 70 வரை வசூலிக்கப்படுகிறது. இதன்மூலம் 1200 சதுர அடி கொண்ட ஒரு விளம்பரத்தின் மூலம் ஆண்டுக்கு ரூ. 84 ஆயிரம் வருமானம் தனியாருக்குக் கிடைக்கிறது.

ஆனால், குடிசைப் பகுதி மாற்று வாரிய குடியிருப்புகளில் வைக்கப்பட்டுள்ள விளம்பரத்துக்கு ஆண்டுக்கு ரூ. 32 ஆயிரம் மட்டுமே வசூலிக்கப்படுகிறது.

பராமரிக்கப்படாத கணக்குகள்: இந்நிலையில் குடிசைப் பகுதி மாற்று வாரிய அலுவலகக் கணக்குப் பதிவேட்டில் இந்த விளம்பரங்கள் குறித்த சில கணக்குகள் 1-4-2003 வரை மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளன.

விளம்பரக் கட்டணங்கள் வசூலிப்பது, விளம்பரக் காலம் முடிந்ததும், அந்த விளம்பரங்களை அழிப்பது உள்ளிட்ட பணிகளை கே.கே. நகரில் அமைந்துள்ள செயற் பொறியாளர் அலுவலகத்தினரும், எஸ்டேட் அலுவலரும் (ஈ.ஓ.7) செய்து வருவதாக குடிசை மாற்று வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் இது குறித்த கணக்குகளையும், விவரங்களையும் அவர்கள் குடிசை மாற்று வாரிய அலுவலகத்துக்கு சரிவர தெரிவிக்காததால் கணக்குப் பதிவேட்டில் சரிவர இடம்பெறவில்லை எனவும் தெரிவித்தனர்.

இதனால் விளம்பரங்களுக்கு பணம் வசூலிக்கப்படுகிறதா அல்லது வசூலிக்கப்படும் பணம் வேறு வகையில் செலவழிக்கப்படுகிறதா என்பது மர்மமாக உள்ளது.

ஆளுங்கட்சி என்பதால்… அங்கு வைக்கப்பட்டுள்ள கருணாநிதி சட்டமன்ற பொன்விழா விளம்பர பேனர்களுக்கு கட்டணம் எதுவும் வசூலிக்கப்படுவதில்லை எனத் தெரிகிறது.

பொன்விழா முடிந்து ஒரு மாதம் ஆன நிலையில், அந்த இடங்களில் தனியார் விளம்பர பலகைகளுக்கு அனுமதி அளித்தால் கூடுதல் வருமானம் கிடைக்கும் என்பது அதிகாரிகளின் கருத்து.

ஆனால், ஆளுங்கட்சி என்பதால் அந்த விளம்பரங்களை அகற்றுவதற்கு பயந்து அப்படியே விட்டுவைத்துள்ளனர் அதிகாரிகள்.

ஏற்கெனவே குறைந்த விலைக்கு விளம்பரங்களை வைக்க அனுமதிக்கும் நிலையில், வைக்கப்பட்டிருக்கும் விளம்பரங்களுக்கு முறையாக பணத்தை வசூலிக்காமலும், வசூலித்த பணத்தை சேர்க்கவேண்டிய இடத்தில் சரிவர சேர்க்காமலும் அரசுக்கும், குடிசை மாற்று வாரியத்துக்கும் இழப்பை ஏற்படுத்துவது ஏன் என்பதுதான் கேள்வி.

Posted in 50, Ad, Advt, Affordability, Area, Banner, Board, Celebrations, City, Civil, Clearance, collapses, Construction, Cost, Daily, Disabled, DMK, Dwelling, Education, eligibility, encroachments, Engineering, Eviction, facilities, facility, Flats, Floods, Free, Functions, Government, Govt, Handicapped, Hoardings, Home, Houses, Housing, Huts, Hygiene, improvement, Income, infrastructure, Issues, Jobs, Karunanidhi, Karunanidhy, Karunanidi, Karunanithi, Kottoor, Kottur, Kotturpuram, kutcha, Labor, Labour, Lands, Loss, M Karunanidhi, M karunanidhy, M karunanithi, Maintenance, migration, Mu Ka, Mu Ka Stalin, Mu Karunanidhi, Mu Karunanidhy, Mu Karunanidi, MuKa, MuKa Alagiri, MuKa Stalin, multistorey, Necessity, NGO, Party, Plots, Politics, Poor, Poster, Power, Problems, Rain, Rehabilitation, Rent, revenue, Routine, Rural, sanitation, Santhome, settlements, shelter, Sleep, Slum, Society, Structure, Tenements, TN, TNSCB, TV, unhygienic, Worker, Youth | 1 Comment »

Raje morphs into goddess; BJP not amused

Posted by Snapjudge மேல் மே 27, 2007

வாஜ்பாய், அத்வானி, ராஜ்நாத்தை மும்மூர்த்தியாக்கிய போஸ்டருக்கு எதிர்ப்பு

ஜோத்பூர் (ராஜஸ்தான்), மே 27: முன்னாள் பிரதமர் வாஜ்பாய், துணை பிரதமர் எல்.கே. அத்வானி, பாஜக தலைவர் ராஜ்நாத் சிங் ஆகியோரை இந்து கடவுள்களாக, மும்மூர்த்திகளாக சித்திரித்து ஒட்டப்பட்ட சுவரொட்டிக்கு பாஜக மூத்த தலைவர் ஜஸ்வந்த் சிங்கின் மனைவி கடும் எதிர்ப்பு தெரிவித்து போலீஸில் புகார் கொடுத்துள்ளார்.

ராஜஸ்தானில் பாஜக ஆட்சிப்பொறுப்பேற்று 3 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி ஏப்ரல் 15-ம் தேதி சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன. அதில் பிரம்மாவாக வாஜ்பாய், விஷ்ணுவாக அத்வானி, சிவனாக ராஜ்நாத் சிங்கையும் மாநில முதல்வர் வசுந்தரா ராஜேவை இந்து கடவுள் அன்னபூரணியாகவும் சித்திரித்திருந்தனர்.

“ஜெய் அன்னபூர்ணி மகாராணி வசுந்தரா’

“ஜெய் அன்னபூர்ணி மகாராணி வசுந்தரா’ என்று சுவரொட்டிக்கு தலைப்பு வைக்கப்பட்டிருந்தது.

மாநில மூத்த கேபினட் அமைச்சர் எல்.என். தவேயை குபேரனாகவும், மற்றொரு கேபினட் அமைச்சர் எச்.எஸ். குமாரியாவை இந்திரனாகவும், மற்ற அமைச்சர்களை தேவர்களாகவும், எம்எல்ஏக்கள், எம்.பி.க்களை பக்தர்களாகவும் சித்திரித்திருந்தனர்.

இந்த சுவரொட்டிகளை பாஜக தொண்டர் ஒருவரும் உள்ளூர் பூஜாரியும் தயாரித்தனர். ஜோத்பூர் பாஜக எம்எல்ஏ சூர்யகாந்த வியாஸ் மற்றும் பாஜக தலைவர்கள் இந்த சுவரொட்டியை வெளியிட்டுள்ளனர். இவர்கள் அனைவர் மீதும், இந்த சுவரொட்டிகளை அச்சடித்த அச்சக உரிமையாளர் மீதும் ஜஸ்வந்த் சிங்கின் மனைவி சீதள கன்வர் புகார் கொடுத்துள்ளார்.

“”அரசியல்வாதிகளை தெய்வங்களாக சித்திரித்து ஒட்டியுள்ள சுவரொட்டிகளால் மத உணர்வுகள் புண்படுகின்றன. ஆகவே புகாருக்குரிய அனைவர் மீதும் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என்று தனது மனுவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

“”புகாரை பெற்றுள்ளோம். ஆனால் இதுவரை வழக்கு எதுவும் பதிவு செய்யவில்லை. காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் எஸ்.எஸ். கோதாரா இப்புகார் குறித்து பரிசீலித்து வருகிறார். அவருடைய பரிந்துரையின் பேரில் புகாரை பதிவு செய்வதா இல்லையா என்று முடிவு செய்யப்படும் என்று காவல்துறை கண்காணிப்பாளர் எச்.எஸ். குமாரியா தெரிவித்தார். ஒரு மாதத்துக்கு முன் காங்கிரஸ் தொண்டர் ஒருவரும் இத்தகைய புகாரை கொடுத்துள்ளார். அதன்மீதும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Posted in Advani, Annapurna, Banner, BJP, Brahma, CM, Congress, Devi, Hindu, Hinduism, Hindutva, Jaswant Singh, Jodhpur, L K Advani, Offensive, Party, Photoshop, Poster, Rajasthan, Rajnath, Rajnath Singh, Religion, RSS, Sheetal Kanwar, Shiva, Siva, Suryakanta Vyas, Vajpai, Vajpayee, Vasundhara Raje, Vishnu | Leave a Comment »

Anil Ambani supports Mani Ratnam’s Guru – Mukesh Ambani wants to watch it

Posted by Snapjudge மேல் நவம்பர் 17, 2006

சிக்கலில் மணிரத்னத்தின் “குரு’

ஐஸ்வர்யா ராய், அபிஷேக் பச்சன் ஆகியோரை வைத்து மணிரத்னம் இயக்கும் “குரு’ படம், மறைந்த தொழிலதிபர் திருபாய் அம்பானியின் கதை என்ற கருத்து பரவியது. இதையடுத்து படத்தை வெளியிடும் முன் தனக்கு திரையிட்டுக் காட்ட வேண்டும் என்று மணிரத்னம் தரப்பிடம் அம்பானியின் மூத்த மகன் முகேஷ் அம்பானி கூறியுள்ளார். அதே சமயம் அம்பானியின் இன்னொரு மகன் அனில் அம்பானி “குரு’ படத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். அவருடைய அட்லாப்ஸ் நிறுவனம்தான் இப்படத்தின் விநியோக உரிமையைப் பெற்றுள்ளது.

“முருகா’ போஸ்டருக்கு தடை

காக்டெய்ல் ட்ரீம் ஃபிலிம்ஸ் பட நிறுவனம் தயாரித்து வரும் புதிய படம் “முருகா’. இதில் அசோக், ஸ்ருதிசர்மா என்ற இரு புதுமுகங்கள் நடித்துள்ளனர். இவர்களுடன் வடிவேலு, சமிக்ஷா, ரியாஸ்கான், மகாதேவன், அசோகன் வின்சென்ட், சுதா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கார்த்திக் ராஜா இசையமைக்கும் இந்தப் படத்தை இயக்குபவர் ஆர்.டி.நேசன். திரைப்படக் கல்லூரி மாணவரான இவருக்கு இது முதல் படம்.

இந்தப் படத்துக்காக சென்னை நகர் முழுவதும் மிக அதிகமான விளம்பர பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. யதார்த்தமாக இருக்க வேண்டும் என்பதற்காக, கதாநாயகனை போலீஸ் அதிகாரி ஒருவர் சேற்றில் வைத்து காலால் அழுத்தும் (படத்தில் வரும்) காட்சியை விளம்பர பேனராக அமைத்து சென்னை அண்ணா சாலையில் வைத்திருந்தனர். இதைப் பார்த்த போலீஸ் கமிஷனர் இது போன்ற பேனர் வைத்தால் மனித உரிமை மீறல் சட்டத்தின் கீழ் பதிவு செய்து வழக்கு தொடரப்படும் என எச்சரித்ததையடுத்து அந்த பேனர் உடனடியாக அகற்றப்பட்டு வேறு பேனர் வைக்கப்பட்டுவிட்டது.

Posted in Adlabs, Anil Ambani, Banner, Bollywood, Guru, Hindi Movie, Human Rights, Kollywood, Mani Ratnam, Movies, Mukesh Ambani, Muruga, Poster, Reliance, Tamil Cinema | 1 Comment »