Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Background’ Category

Rajni’s ‘Sultan’ trailer screened with ‘Sivaji – The Boss’

Posted by Snapjudge மேல் ஜூன் 14, 2007

“சிவாஜி’ திரையிடும் தியேட்டர்களில் ரஜினியின் “சுல்தான்’ பட ட்ரெய்லர்
sultan sivaji trailer rajni images

நடிகர் ரஜினிகாந்தின் இளைய மகள் செüந்தர்யா இயக்கியுள்ள அனிமேஷன் படம் “சுல்தான் த வாரியர்’. ரஜினி படங்களில் இடம்பெறுவது போன்ற காமெடி, ஆக்ஷன் காட்சிகளை உள்ளடக்கி உருவாக்கப்பட்டுள்ள இந்த கார்ட்டூன் சினிமாவுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

விரைவில் வெளியாகவுள்ள இந்தப் படம் தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் ட்ரெய்லர் “சிவாஜி’ படம் வெளியாகும் தியேட்டர்களில் திரையிடப்படுகிறது.

இதுபற்றி செüந்தர்யா ரஜினிகாந்த் பேசுகையில் “”இந்த “சுல்தான்’ படம் ஒரு துவக்கம்தான். ரஜினிகாந்த் படம் என்றால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ரசிக்கிறார்கள். அனிமேஷன் படம் என்றாலும் ஒரு திரைப்படத்துக்குரிய அனைத்து விஷயங்களும் இதில் உள்ளன. அனைத்துத் தரப்பினரின் எதிர்பார்ப்புகளையும் இந்தப் படம் நிறைவேற்றும்” என்றார்.

இந்த கார்ட்டூன் படத்தை ஆட்லேப்ஸ் நிறுவனமும், ஆச்சர் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளன.

———————————————————————————-

30 வருடத்தில் பார்க்காத கூட்டம் `சிவாஜி’ படத்துக்கு ரூ.2 1/2 கோடி வசூல்: அபிராமி ராமநாதன் பேட்டி

சென்னை, ஜுன். 19-

ரஜினியின் சிவாஜிபடம் கடந்த 15-ந்தேதி ரிலீசானது. தியேட்டர்களில் படத்தை காணதினமும் கூட்டம் அலைமோதுகிறது. முன்பதிவு முன் கூட்டியே முடிந்து விட்டதால் பலர் டிக்கெட் கிடைக்காமல் திரும்புகின்றனர். `சாப்ட்வேர்’ கம்பெனிகள் 1000, 2000 என்று டிக்கெட்களை முன்பதிவு செய்துள்ளன.

இதனால் சாதாரண மக்களால் இன்னும் படம் பார்க்க முடியவில்லை. 10 ரூபாய் டிக்கெட்டுகளுக்கு முன் பதிவு கிடையாது என்பதால் அந்த டிக்கெட்டுக்காக இரவு 12 மணிக்கு தியேட்டர்களில் கிïவில் நிற்கின்றனர். மறுநாள் காலை தான் டிக்கெட் வழங் கப்படுகின்றன. விடிய விடிய கிïவில் சளைக்காமல் நிற் கின்றனர்.

திரையுலக வரலாற்றில் சமீப காலங்களில் இது போன்ற கூட்டங்களை பார்த்ததில்லை என்கின்றனர் சினிமா பிரமுகர்கள். வசூலிலும் சிவாஜி சக்கை போடு போடுகிறது.

சென்னையில் சத்யம், சாந்தம், ஆல்பர்ட், தேவி, மெலோடி, அபிராமி, அன்னை அபிராமி, பால அபிராமி, உதயம், சூரியன், ஐநாக்ஸ், ஏ.வி.எம். ராஜேஸ்வரி, கமலா, பாரத், மகாராணி ஆகிய 15 தியேட்டர்களில் `சிவாஜி’ ஓடு கிறது. அனைத்திலும் தினமும் 4 காட்சிகள் திரையிடப்படுகின் றன. வருகிற 25-ந்தேதி வரை இந்த தியேட்டர்களில் டிக்கெட் இல்லை. அனைத்து காட்சிகளும் முன்பதிவு செய்யப்பட்டிருப்பதாக சென்னை நகர சிவாஜி பட விநியோகஸ்தர் அபிராமி ராமநாதன் மாலைமலர் நிருபரிடம் கூறினார்.

மேலும் அவர் கூறியதா வது:-

சிவாஜி படம் 14-ந்தேதி இரவு சிறப்பு காட்சியாக திரையிடப்பட்டது. 15-ந்தேதி முதல் தினமும் 4 காட்சிகள் திரையிட்டு வருகிறோம். சென்னையில் 15 தியேட்டர் களிலும் ஒரு காட்சிக்கு 15 ஆயிரம் பேர் பார்க்கின்றனர். ஒருநாளைக்கு 75 ஆயிரம் பேர் பார்க்கிறார்கள். இது வரை சுமார் 2 லட்சத்து 70 ஆயிரம் பேர் படம் பார்த்துள்ளனர். அடுத்த வாரம் திங்கட்கிழமை வரை முன்பதிவு செய்யப் பட்டுள்ளது. எந்த தியேட்டரி லும் டிக்கெட் இல்லை.

என் 30 வருட அனுபவத் தில் அபிராமி தியேட்டரில் 207 படங்கள் 100 நாட்கள் ஓடியுள்ளன. 45 படங்கள் வெள்ளி விழா கண்டுள்ளன. அவற்றில் ஒரு படத்துக்கு கூட இவ்வளவு கூட்டத்தை பார்த்த தில்லை. முன் பதிவுக்காக இப்படிப்பட்ட நீண்ட கிïவையும் கண்ட தில்லை.

குடும்பம் குடும்பமாக வருகிறார்கள். இளைஞர்கள், பெரியர்கள், குழந்தைகள், பெண்களான அனைவரையும் ஒரு சேர பார்க்க முடிகிறது. சிவாஜி படத்துக்குத்தான். தியேட்டர்களுக்கு இதுவரை வராதவரெல்லாம் வரு கிறார்கள்.

சிவாஜி மூலம் தமிழ் சினிமாமறுபிறவி எடுத்துள்ளது.

சென்னை தியேட்டர்களில் சிவாஜி ரிலீசாகி 4 நாட்களில் ரூ.1 கோடிக்கு மேல் வசூலாகியுள்ளது. முன் பதிவான 10 நாட்களுக்கும் 2 கோடியே 40லட்சம் வசூலாகி உள்ளது.

படம் பார்த்தவர்கள் திரும்ப திரும்ப வருகிறார்கள். அதிக நாட்கள் இந்த படம் ஓடும்.

இவ்வாறு அபிராமி ராமநாதன் கூறினார்.

Posted in Abiraami, Abirami, Action, Adlabs, Animation, Archer, Area, ARR, Availability, Background, Biz, Black, Cinema, Clubs, Collections, Comedy, Counter, Deals, Fans, Films, Loss, Money, Movies, Mystery, Preview, Production, Profits, Rahman, Rajini, Rajiniganth, Rajinikanth, Rajni, Rajniganth, Rajnikanth, Re-recording, Records, Rehman, Rental, revenue, sales, Soundarya, Soundharya, Sountharya, Sowndharya, Sultan, Tickets, trailer, Transactions, Updates, Voice, Warrior | 8 Comments »

Center-State Relations: Federal democracy’s principles – Analysis

Posted by Snapjudge மேல் மே 18, 2007

சங்கிலியின் வலிமை அதன் வளையத்தில்

கே.எஸ். இராதாகிருஷ்ணன்

மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி மத்திய – மாநில உறவுகளை அறிய தன்னிச்சையாக

  1. இந்திய முன்னாள் தலைமை நீதிபதி எம்.எம். பூஞ்சி தலைமையில்
  2. முன்னாள் உள்துறை செயலாளர்கள் திரேந்திர சிங்,
  3. வி.கே. துகல்,
  4. தேசிய நீதித்துறை அகாதெமியின் இயக்குநர் என்.ஆர். மாதவன் மேனன் ஆகியோரை உறுப்பினர்களாகக் கொண்ட குழுவை நியமித்து இரண்டே ஆண்டுகளில் தனது அறிக்கையை மத்திய அரசுக்கு வழங்குமாறு அறிவுறுத்தியுள்ளது.

மாநிலங்களின் அனுமதி இல்லாமல் மத்திய அரசின் படைகளை நேரடியாக மாநிலங்களுக்கு அனுப்பலாமா

என்று அறியவே பூஞ்சி குழு அமைக்கப்பட்டுள்ளது என்று மத்தியில் ஆளும் காங்கிரஸ் அரசுக்கு ஆதரவு அளிக்கும் இடதுசாரிகளே கருத்து தெரிவித்துள்ளனர். கடந்தகாலத்தில் இம்மாதிரி பிரச்சினைகள் வந்தபோது, ஆந்திர முதல்வர் என்.டி. ராமராவ், ஜோதிபாசு போன்றவர்கள் கண்டித்துள்ளனர். மாநில அரசுகளின் அதிகாரத்தைக் குலைக்கும் வகையில் இம்மாதிரி ஒரு குழுவை அமைத்ததே கண்டனத்துக்கு உரியதாகும்.

மத்திய – மாநில உறவுகளில் எவ்வளவோ பிரச்சினைகள் இருக்கின்றன. அதையெல்லாம் சிந்திக்காமல் மத்திய படைகளைப் பிரிவு 355ன்படி மாநிலங்களுக்கு அனுப்புவது குறித்து ஏன் இந்த அக்கறை? மத்திய அரசு அவசரக் கோலத்தில் பூஞ்சி குழுவை உருவாக்கியிருப்பதில் ஏதோ உள்நோக்கம் இருப்பதாகத் தெரிகின்றது. இதில் பிரச்சினைகள் எழாதவாறு மத்திய அரசு மேலும் சில விஷயங்கள் குறித்து இந்தக் குழு ஆராயும் என்று ஒப்புக்குச் சிலவற்றை வைத்து உள்ளது.

அவை

  • மத்திய – மாநில உறவு குறித்துப் புதிய பரிமாணத்தைக் காணுதல்,
  • உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிகாரப் பகிர்வு வழங்கி, மத்திய அரசின் உதவியை மாநிலம் மூலம் இல்லாமல் நேரடியாக உள்ளாட்சிக்கு மேலும் வழங்க வழிவகைகள் காணுதல்,
  • மாநிலங்களிடையே உள்ள வணிகத்திற்கு வரி விதிப்பு முறைகள் காணுதல் போன்றவை; மாநிலங்களின் அதிகாரங்களில் கைவைக்க இப்படியொரு கமிஷன் தேவையா என்பது இன்றைய கேள்வி!

மாநில சுயாட்சி, மாநிலங்களுக்கு அதிக அதிகாரங்கள் என்ற விவாதம் தொடர்ந்து நடைபெறுகின்றது. காங்கிரஸ் கட்சி மாநில சுயாட்சி பற்றி கடந்த 50 ஆண்டுகளில் தெளிவான நிலையில் இல்லாதது மட்டுமல்லாமல், மாநிலங்களினுடைய அதிகாரங்களைப் பறிக்கும் எண்ணத்திலே செயல்பட்டு வந்தது.

11.12.1947 காங்கிரஸ், அரசு அமைப்பு குறித்து இறுதி செய்தபோது, தன்னாட்சி உரிமை கொண்ட மாநிலங்கள் அமையும் எனக் கூறியது. அக்காலத்தில் மாநில காங்கிரஸ் கமிட்டிகளை அந்தந்த மாநிலங்களின் பெயரைச் சொல்லியே அழைத்தது இந்நிலையில்தான்.

நாட்டின் விடுதலைக்குப் பின் பிரதமர் நேரு, காங்கிரஸின் முந்தைய மாநில சுயாட்சி நிலைப்பாட்டிலிருந்து விலகி பலமான மத்திய அரசு எனப் படிப்படியாக நிர்வாகத்தில் கொண்டு வந்தார். அதை படேல், ஆசாத் போன்றோர் விரும்பவில்லை. நாடெங்கும் ஒரே கட்சி ஆட்சி, நேருவின் ஆளுமை போன்றவை அன்றைய சூழலில் மாநில சுயாட்சிக் கோரிக்கையின் வேகத்தைக் குறைத்துவிட்டன.

கேரளத்தில் முதல் காங்கிரஸ் அல்லாத இ.எம்.எஸ். நம்பூதிரிபாட் அரசை ஜனநாயகத்திற்கு விரோதமாக மத்தியிலிருந்த காங்கிரஸ் அரசு கலைத்தது. அன்றைக்குத் தொடங்கிய வேட்டைத் தொழில் ஏறத்தாழ 105 முறை 356-ஐ பயன்படுத்தி மாநில அரசுகளைத் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப கவிழ்ப்பது, தங்களுக்கு விருப்பமானவர்களை முதல்வர்களாக ஆக்குவது எனத் தொடர்ந்தது. உச்ச நீதிமன்றத்தில் எஸ்.ஆர். பொம்மை வழக்குக்குப் பின்புதான் இந்த விபரீதத்திற்கு ஒரு பரிகாரம் கிடைத்தது.

அரசியல் அமைப்புச் சட்டத்தை நூறு முறைக்கு மேல் திருத்தங்கள் செய்தபின்பும் கூட மாநிலங்களுக்கு உரிய உரிமைகள் வழங்கப்படவில்லை.

பொதுப்பட்டியலில் உள்ள 47 ஐயும் சேர்த்து மத்திய அரசிடம் 144 அதிகாரங்கள் உள்ளன. மாநிலங்களுக்கு உள்ளது வெறும் 66 அதிகாரங்கள் மட்டுமே, அதிலும் மத்திய அரசு தலையீடு இருக்கும்.

1968ல் கர்நாடகத்தைச் சார்ந்த காங்கிரஸ் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் கே. ஹனுமந்தையா தலைமையில் மத்திய அரசு அமைத்த நிர்வாகச் சீர்திருத்தக் குழுவின் துணைக்குழுவான செட்டல்வாட் குழு அறிக்கை, எஞ்சிய அதிகாரங்களை மாநில அரசுக்கு வழங்க வேண்டும் என்றும், மாநில அரசின் ஒப்புதலோடுதான் முக்கிய திருத்தங்களை அரசியல் அமைப்புச் சட்டத்தில் திருத்த வேண்டும் என்றும், தேசிய முக்கியத்துவமுள்ள பிரச்சினைகளில், மாநிலங்களை ஆலோசித்து மத்திய அரசு முடிவு எடுக்க வேண்டும் என்றும் பரிந்துரைத்தது.

அண்ணா மறைவுக்குப் பின்பு, மத்திய – மாநில உறவுகளைப் பற்றி அறிய அமைக்கப்பட்ட நீதிபதி பி.வி. இராஜமன்னார் தலைமையிலான குழு,

  • மத்திய – மாநில பொது அதிகாரப் பட்டியலில் மாற்றங்கள் வேண்டும்,
  • மாநிலங்களுக்கிடையே கவுன்சில் அமைக்க வேண்டும்,
  • நிதிப் பகிர்வு,
  • திட்டக்கமிஷன் சுயமான அமைப்பாக இருக்க வேண்டும்,
  • ஆளுநர் பதவி ஒழிப்பு,
  • பிரிவு 356 நீக்கம் உள்ளிட்ட பல பரிந்துரைகளைச் செய்தது.

1973 அக்டோபர் 16 மற்றும் 17 ஆகிய தேதியில் அகாலிதளத்தினர் கூடி பஞ்சாபுக்கு பிராந்திய சுயாட்சி வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றினர்.

காமராஜரின் நெருங்கிய சகா நிஜலிங்கப்பா, வீரேந்திர பாட்டீல், இராமகிருஷ்ண ஹெக்டே ஆகியோர் பங்கேற்ற மைசூர் ஸ்தாபன காங்கிரஸ் 1972ல் மாநில சுயாட்சிக்கு ஆதரவாகத் தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. ஆந்திர முதல்வராக இருந்த என்.டி. ராமராவ் விஜயவாடாவில் காங்கிரஸ் அல்லாத மாநில – தேசியக் கட்சிகளின் தலைவர்களைக் கொண்டு மாநில சுயாட்சி மாநாட்டை நடத்தினார். அதைப்போன்று கோல்கத்தாவில் ஜோதிபாசுவும் நடத்தினார்.

ஸ்ரீநகரில் தேசிய மாநாட்டுத் தலைவர் டாக்டர் பாரூக் அப்துல்லா, காங்கிரஸ் அல்லாத முதல்வர்கள், தலைவர்களை அழைத்து 1983 அக்டோபரில் 59 தலைவர்கள் – 17 அரசியல் கட்சிகள் கலந்துகொண்ட மாநாட்டை நடத்தி “ஸ்ரீநகர் பிரகடனம்’ வெளியிட்டார்.

மாநிலங்களின் உரிமை குறித்து நாளுக்கு நாள் விவாதங்களும் கோரிக்கைகளும் அதிகரிக்க இந்திரா காந்தி, மத்திய – மாநில பிரச்சினைகளைத் தீர்க்க சர்க்காரியா குழுவை 24-3-1983ல் அமைத்தார். 1987 அக்டோபரில் தன்னுடைய இரண்டு தொகுப்பு அறிக்கையை வழங்கியது இந்தக் கமிஷன்.

1990இல் பாரதிய ஜனதா கட்சி மற்றும் இடதுசாரிகளின் ஆதரவோடு வி.பி. சிங் தலைமையில் மாநிலக் கட்சிகள் அடங்கிய கூட்டணி ஆட்சி ஏற்பட்டது. வட்டாரத் தலைவர்களின் செல்வாக்கு தில்லியில் தொடங்கியது.

1996, 1998, 1999, 2004 எனத் தொடர்ந்து மாநிலங்களின் பங்களிப்பால் தில்லியில் மத்திய ஆட்சி தொடர்கிறது. இனிமேல் ஒரு கட்சி ஆட்சி என்பது மத்தியில் சாத்தியமில்லை. இது இப்படி இருக்க, மாநில சுயாட்சிக் கொள்கையைக் கொண்டவர்கள் மத்தியில் அதிகார வர்க்கத்தில் இருக்கும்பொழுது அதைப் பற்றிப் பேசக்கூடத் தயங்குகின்றனர். அதுதான் ஏனென்று புரியவில்லை.

திட்டக் கமிஷன் மற்றும் நிதிக் கமிஷனிடம் தேர்ந்து எடுக்கப்பட்ட மாநில “மாண்புமிகு’ முதலமைச்சர்கள் கருணை வேண்டி கையேந்த வேண்டிய நிலை. திட்டக்கமிஷன் அரசியல் அமைப்பு அங்கீகாரம் இல்லாமல் மத்திய கேபினட் முடிவின்படி அமைக்கப்பட்டது. அது இன்றைக்கு சூப்பர் கேபினட்டாக இருக்கின்றது. நிதிக்குழு மட்டும்தான் அரசியல் அமைப்புச் சட்ட அங்கீகாரம் பெற்றதாகும். நிதிக்குழுவும் திட்டக்குழுவும் மத்திய அரசின் கடைக்கண் பார்வையில்தான் இயங்குகின்றன. ராஜா செல்லையா குழு, காட்கில் கொள்கை ஆகியவற்றின் பரிந்துரைகளும் மத்திய அரசுக்குச் சாதகமாகப் பயன்படுத்தப்பட்டன.

மாநிலங்களில் எடுக்கப்படும் கனிம வளங்கள், தாதுக்கள், பெட்ரோலியம் போன்ற பொருள்களுக்கு மாநிலங்களுக்கு உரிமைத் தொகை வழங்கப்படுவதும் இல்லை.

ஜோதிபாசு, என்.டி. ராமராவ், பாரூக் அப்துல்லா, பிரகாஷ் சிங் பாதல், ராமகிருஷ்ண ஹெக்டே போன்றோர் போர்க்குணத்தோடு இப்பணியில் ஓரளவு அதிகாரங்களைப் பெறுவதில் வெற்றி பெற்றனர்.

பூஞ்சி குழுவினால் தேவையற்ற முறையில் அரசின் கஜானாவைக் காலியாக்க ஓய்வுபெற்றவர்களுக்குப் பணியைக் கொடுக்கும் நன்மையைத் தவிர வேறு எதுவும் நடக்கப் போவது இல்லை.

ஏற்கெனவே இதுவரை மத்திய அரசு இதுகுறித்து இரண்டு குழுக்களும்,

  • தமிழ்நாடு அரசு அமைத்த இராஜமன்னார் குழுவும்,
  • மேற்குவங்கத்து ஜோதிபாசு வழங்கிய வெள்ளை அறிக்கை,
  • ஸ்ரீநகர் மற்றும் விஜயவாடா பிரகடனங்கள்,
  • பெங்களூரில் நடைபெற்ற தென்மாநில முதல்வர்கள் மாநாட்டில் எடுத்த தீர்மானங்களைக் கொண்டே மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய சுயாட்சித் தன்மையையும், அதிகாரங்களையும் வழங்க இயலும். அப்படி வழங்குவதை விட்டுவிட்டு
  •  மாநில அரசின் கவனத்திற்கு வராமலே மத்திய அரசின் படைகளை அனுப்புவதும்,
  • மாநில அரசிடம் வரிகளை வாங்கவும் இந்தக் குழு அமைத்தது எவ்விதத்திலும் ஏற்புடையது அல்ல.

சங்கிலியின் வலிமை அதன் வளையத்தில் என்பார்கள். மத்திய அரசின் வலிமை, பலமான மாநிலங்கள்தான். இதை ஓரிரு மத்திய ஆட்சியாளர்கள் புரிந்துகொள்ள மறுக்கிறார்கள். மாநிலங்களிடமிருந்து அதிகாரங்களைப் பறிப்பதற்கும், மத்திய அரசிடம் அதிகாரங்களைக் குவிப்பதற்கும் செய்யப்படும் பல்வேறு முயற்சிகளில் ஒன்றுதான் பூஞ்சி குழுவின் தற்போதைய முயற்சி. சர்க்காரியா கமிஷன் பரிந்துரைகளைச் செயல்படுத்துவதை மறந்துவிட்ட மத்திய அரசு, பூஞ்சி குழுவின் அறிக்கையை நடைமுறைப்படுத்தத் துடிப்பதன் ரகசியம் புரியாமல் இல்லை!

(கட்டுரையாளர்: வழக்கறிஞர், சென்னை.)

Posted in 355, 356, abuse, Analysis, Andhra, AP, Army, Azad, Background, Bommai, Center, Centre, CM, Communists, Congress, Courts, CPI, CPI(M), Democracy, Dhirendra Singh, Dismiss, EMS, Federal, Governor, Govt, Help, History, Independence, Jothibasu, Justice, Kerala, Law, Left, Local Body, Madhavan Menon, Marxists, Military, Minister, Municipality, NDA, Nehru, NTR, Order, Panchayat, Party, Patel, PM, Poonchi, Power, President, Rajamannaar, Rajamannar, Republic, Rule, SC, SR Bommai, SRB, State, UDA, VK Dugal, WB | Leave a Comment »

Inflation, Deflation & Recession: Indian Monetary Policy – S Janakiraman

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 8, 2007

மீண்டும் பணவீக்கம்

எஸ். ஜானகிராமன்

மீண்டும் பணவீக்கப் பிரச்சினை இந்தியப் பொருளாதாரத்தில் விஸ்வரூபம் எடுத்துள்ளது.

1960ல் தொடங்கி 2000 – 01ஆம் ஆண்டுவரை 8 முதல் 9 சதவீதமாக இருந்த பணவீக்க அளவு, மத்திய அரசின் விரைவான பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளால் 4லிருந்து 5 சதவீதமாகக் குறைந்தது.

தற்போது மிக அதிக அளவிலான பணஅளிப்பு மற்றும் வங்கிக்கடனில் ஏற்பட்டுள்ள அபரிமிதமான வளர்ச்சியின் காரணமாக பணவீக்கம் 6 சதவீதத்தைத் தாண்டும் நிலை ஏற்பட்டுள்ளது.

பங்குச் சந்தையின் தொடர்ந்த ஏறுமுகம் மற்றும் அசையா சொத்துகளின் அபரிமித விலைஉயர்வு ஆகியன இதன் விளைவே என்பதில் ஐயமில்லை.

தற்போதைய பணவீக்கப் பிரச்சினையைப் பொறுத்தமட்டில் மத்திய அரசு, அதாவது நிதி அமைச்சகமும், ரிசர்வ் வங்கியும் எதிர்கொண்டுள்ள சவால்களை இரண்டாகப் பிரிக்கலாம்.

ஒன்று, இந்த பணவீக்க உயர்வை எவ்வாறு கட்டுப்படுத்துவது; அடுத்து 9 சதவீத பொருளாதார வளர்ச்சியைப் பாதிக்காதவண்ணம் பணவீக்கத்தை எங்ஙனம் கட்டுப்படுத்துவது என்பதாகும்.

அடிப்படையில் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த அரசு பொதுவாக நான்கு வித நடவடிக்கைகளை எடுப்பதுண்டு. அவை

  • பணக்கொள்கை,
  • நிதிக்கொள்கை,
  • வர்த்தக மற்றும்
  • செலாவணிக் கொள்கை என்பவை ஆகும்.

பணக்கொள்கை தொடர்பான நடவடிக்கையின் மூலம் பண அளிப்பையோ அல்லது வட்டி விகிதத்தையோ கட்டுப்படுத்த இயலும்.

நிதிக்கொள்கை தொடர்பான நடவடிக்கையின் மூலம் தீர்வை தளர்வுகளுக்கு வழிவகுப்பது; வர்த்தகக் கொள்கையின் மூலம் ஏற்றுமதி, இறக்குமதிக் கட்டுப்பாடு மற்றும் தளர்வுக்கு வழிகோலுவது; செலாவணிக் கொள்கையின் மூலம் ரூபாய் மதிப்பை வலுப்படுத்தி, இறக்குமதிப் பொருள்களின் விலை உயர்வைக் கட்டுப்படுத்துவது ஆகும்.

பணவீக்கத்திற்குக் காரணமான பணசுழற்சி மற்றும் பண உருவாக்கம், பொருள்களின் விலை உயர்வுக்கு வழிவகுக்கிறது என்பது பரவலான கருத்து. ஆகவே பணவீக்கப் பிரச்சினையை பணவளர்ச்சியை மட்டுப்படுத்துவதன் மூலமோ அல்லது வட்டி விகிதத்தின் மூலமோதான் கட்டுப்படுத்த இயலும்.

அண்மையில் ரிசர்வ் வங்கி மேற்கொண்ட நடவடிக்கையும் இதன் அடிப்படையிலேயே அமைந்துள்ளது.

அதேவேளையில், தற்போதைய பணவீக்கம் சந்தைத் தேவையின் அடிப்படையில் எழுந்த காரணியாக இல்லாமல் சந்தை அளிப்பின் பின்புலத்தால் எழுந்த காரணியாக இருப்பதால் இதைக் கட்டுப்படுத்துவது தொடர்பான நடவடிக்கைகளில் ரிசர்வ் வங்கி பெரிய அளவில் பங்களிப்பது என்பது இயலாத செயலாகும்.

ஆகவே நிதியமைச்சகத்தின் நிதிக்கொள்கை தொடர்பான நடவடிக்கைகள் இங்கு முக்கியத்துவம் பெறுகிறது.

சிமெண்ட், அலுமினியம், ரசாயனப் பொருள்கள் மற்றும் சில குறிப்பிட்ட மூலதனப் பொருள்களின் மீதான சுங்கத் தீர்வையை ஏற்கெனவே கணிசமாகக் குறைத்ததன் மூலம் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தும் போராட்டத்தில் நிதியமைச்சகமும் களத்தில் இறங்கியுள்ளது ஆரோக்கியமான சமிக்ஞையாகும்.

இதன் மூலம் உயரும் பணவீக்கத்தின் எதிர்மறையான தாக்கத்தை வெகுவாகக் குறைக்க முடியும்.

இதுபோன்ற பன்முக நடவடிக்கைகளால் சில நேரங்களில் பணவீக்கம் காணாமல்போய் பணவாட்டம் ஏற்படுவதற்கான வாய்ப்புகளையும் மறுப்பதற்கில்லை.

ஆனால் இன்றைய அளவில் பணவீக்கம் என்பது உலகளாவிய பிரச்சினை. வளர்ந்த, வளர்ச்சியடைந்து வரும் மற்றும் பின்தங்கிய நாடுகள் அனைத்திலும் உள்ள மத்திய வங்கிகள் அனைத்தும் பணக்கொள்கையின் மூலம் பணவீக்கத்தை அணுகும் போக்கு தொடர்ந்து வருகிறது.

அதேவேளையில் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த வட்டிவிகிதத்தை உயர்த்துவது என்ற வழக்கமான நடவடிக்கையைத் தாண்டி சிந்திக்கவும், செயல்படவும் தொடங்க வேண்டியது அவசியமாகும். இந்தியா இதற்கு விதிவிலக்கல்ல.

மேலும் வட்டி விகித உயர்வு என்ற நடவடிக்கையைப் பெருமளவு சார்ந்திருப்பது என்பது பொருளாதாரத்தை இறக்கநிலைக்குக் கொண்டு செல்லும் என்ற வாதத்தை இந்தியா கடந்த காலங்களில் நிரூபணமாக்கியுள்ளது.

பொருளாதார உண்மை நிலவரம் பற்றிய முழுமையான தகவல்கள் ரிசர்வ் வங்கியிடம் இல்லாதது பணக்கொள்கையைக் கொண்டு மட்டும் தற்போதைய பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தலாம் என்ற வாதத்தைப் பொய்யாக்குகிறது.

பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளால் இந்தியாவின் 10 சதவீத வளர்ச்சி இலக்கு பாதிக்கப்படும் என்ற ஐயத்துக்கும் அடிப்படை இல்லை.

இருப்பினும் 9 சதவீத பொருளாதார வளர்ச்சி, 6 சதவீத பணவீக்கம் என பயணத்தைத் தொடங்கியுள்ள இந்தியா, 10 சதவீத வளர்ச்சி மற்றும் 2 சதவீத பணவீக்கம் என 10 ஆண்டுகளாகப் பயணத்தைத் தொடர்ந்து வரும் சீனாவிடமிருந்து கற்க வேண்டியது நிறையவே உள்ளது.

(கட்டுரையாளர்: விரிவுரையாளர், திருவள்ளூர்).

Posted in Analysis, APR, Background, Banks, BSE, Business, Commerce, Commerce Goals, Customs, Deflation, Economy, Exports, FDI, Finance, Finance Ministry, Financial Policy, Foreign Exchange, Imports, Index, India, Inflation, Interest Rates, Invsetments, Loans, Monetary Policy, NSE, Op-Ed, Opinion, Primer, RBI, Recession, Reserve Bank of India, Rupee, Shares, Stock market, Tax | Leave a Comment »

Sonia sparks debate on ‘Wal-Mart effect’ of foreign investment

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 8, 2007

சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீடு: நடுநிலைப் பாதையே சோனியாவின் கருத்து

புது தில்லி, பிப். 8: சில்லறை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிப்பதில், பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் கூடிய நடுநிலைப் பாதையை பின்பற்ற வேண்டும் என்றுதான், பிரதமர் மன்மோகன் சிங்குக்கு எழுதியுள்ள கடிதத்தில் சோனியா காந்தி வலியுறுத்தி இருப்பதாகக் கருத வேண்டும் என காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.

சில்லறை வர்த்தகத்தில் பார்தி -வால் மார்ட் கூட்டு தொழில் முயற்சியின் பின்னணியில், மன்மோகன் சிங்குக்கு எச்சரிக்கையுடன் செயல்படுமாறு ஆலோசனை கூறி சோனியா காந்தி கடிதம் எழுதியதாகக் கூறப்படுவது குறித்து நிருபர்கள் கேட்டதற்கு, காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் அபிஷேக் சிங்வி இவ்வாறு பதில் அளித்தார்.

சில்லறை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை தடை செய்ய வேண்டும் என்றோ அல்லது பாதுகாப்பு ஏற்பாடுகளே இல்லாமல் அதை அனுமதிக்க வேண்டும் என்றோ இரு வேறு அதீதங்களை அந்தக் கடிதம் வலியுறுத்துவதாகக் கருதக் கூடாது.

சாதாரண மக்களின் நலன்களைப் பாதுகாப்பதில் காங்கிரஸ் கட்சி ஆர்வம் கொண்டுள்ளது. ஒழுங்குமுறைப்படுத்தும் அமைப்புகளுடன் கூடிய நடுநிலைப் பாதையைப் பின்பற்ற வேண்டும் என்பதே காங்கிரஸின் நிலை என்றார் அபிஷேக் சிங்வி.

சோனியா காந்திக்கும் மன்மோகன் சிங்குக்கும் இடையில் கலந்துரையாடல் இல்லை என்ற பாஜக குற்றச்சாட்டை அவர் நிராகரித்தார்.

சில்லறை வியாபாரத்துக்கு பாதிப்பு

சில்லறை வியாபாரத்தில் வெளிநாட்டு முதலீடுகளுக்கு அனுமதி அளிக்கும் முன் அது குறித்து முழுமையாக அலசி ஆராய வேண்டும், நாட்டையும் சாதாரண மனிதனையும் பாதுகாப்பதற்குத் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுவிட்டதா என்பதை உறுதி செய்ய வேண்டும் என்று அரசுக்கு ஆலோசனை கூறியுள்ளார் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி. இதைப் பரிசீலனை செய்த பிரதமர் மன்மோகன் சிங் இவ் விஷயத்தை வர்த்தக அமைச்சரின் கவனத்துக்குக் கொண்டு சென்றுள்ளதாகத் தெரிகிறது.

இந்தியாவின் விரைவான வளர்ச்சிக்கு வெளிநாட்டினர் முதலீடு தேவை என்பதால் பல்வேறு பெரிய தொழில்களில் முதலீடு செய்ய அவர்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. இதனால் சிறிய தொழில்களில் கூட அவர்கள் ஆதிக்கம் செலுத்தும் நிலை உருவாகியுள்ளது.

சில ஆயிரம் ரூபாய் முதலீட்டில் தொழில் தொடங்கும் சில்லறை வியாபாரிகளுக்குப் போட்டியாக சில இந்திய, வெளிநாட்டு நிறுவனங்கள் மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் கீரை, காய்கறி முதல் பருப்பு, உளுந்து வரை பல்வேறு பொருள்களை விற்பனை செய்யும் மையங்களைத் தொடங்கியுள்ளன. இத்தகைய மையங்களில் விற்கப்படும் பொருள்களின் விலை சந்தை விலையை விட சற்றே குறைவாக உள்ளது. காரணம் பொருள்களை உற்பத்தியாகும் இடத்துக்கே சென்று கொள்முதல் செய்து வருகின்றனர். மேலும் விற்பனை மையங்கள் அதி நவீன வசதியுடன் உள்ளன.

இது தவிர, ஒரு குறிப்பிட்ட தொகைக்கு பொருள்கள் வாங்கினால் அவற்றை வீட்டுக்கே அனுப்பி வைக்கவும் ஏற்பாடு செய்யப்படுகிறது. தொடர்ந்து வாங்கினால் சிறப்புச் சலுகைகளும் அளிக்கப்படுகின்றன. இத்தகைய கவர்ச்சிகரமான திட்டங்களால் மக்கள் சாதாரண வியாபாரிகளைப் புறக்கணிக்கும் போக்கு காணப்படுகிறது.

நாட்டில் ஒரு கோடிக்கும் அதிகமான சில்லறை வியாபாரிகள் உள்ளனர். தமிழகத்தில் சென்னையில் மட்டும் லட்சத்துக்கும் அதிகமானோர் உள்ளனர். பெரிய நிறுவனங்களின் போட்டியைச் சமாளிக்க முடியாமல் சிறு வியாபாரிகள் திணறுகின்றனர். இந்த நிறுவனங்கள் இப்போது பெரிய நகரங்களில் மட்டுமே தங்கள் வியாபாரத்தைத் தொடங்கியுள்ளன. காலப்போக்கில் சிறிய நகரங்களுக்கும் அவை விரிவுபடுத்தப்படலாம்.

இதனால் வட்டிக்கு வாங்கி சில ஆயிரங்கள் அல்லது சில லட்சங்கள் முதலீடு செய்து தொடங்கப்பட்ட சிறு கடைகள் தாக்குப்பிடிக்க முடியாமல் அழிந்து விடும் என்று வணிகர் அமைப்புகள் சுட்டிக்காட்டுகின்றன.

மேலும் காலப்போக்கில் சிறு கடைகள் அழிந்தபிறகு, பெரிய நிறுவனங்கள்தான் சந்தை விலையை நிர்ணயம் செய்யும். அப்போது மக்கள் நலன் புறந்தள்ளப்பட்டு லாபம் ஒன்றே குறிக்கோளாக இருக்கும். இதனால் விலைவாசி அதிகரிப்பதுடன், இந்த விற்பனையகங்களிலேயே பொருள்கள் வாங்க மக்கள் நிர்பந்திக்கப்படுவார்கள். இதன் காரணமாக, பல லட்சம் பேர் வேலையை இழக்க வேண்டிய அபாயம் ஏற்படும். வணிகம், விவசாயம், நெசவு போன்ற தொழில்கள் பெருமளவு பாதிக்கப்படக்கூடும் என்றும் வணிகர் அமைப்புகள் அச்சம் தெரிவித்துள்ளன. ஏற்கெனவே ஆன் லைன் என்ற ஊக வர்த்தகம் மூலம் பல்வேறு பொருள்களின் விலைகள் தாறுமாறாக உயர்ந்துள்ளன.

எனவே, பல லட்சம் குடும்பங்களின் வாழ்வாதாரப் பிரச்சினையாக இது உள்ளது. இதில் அரசு துரிதமாகத் தலையிட்டு, பல்வேறு அமைப்புகளைக் கொண்ட குழு அமைத்து, இதன் பாதிப்பைக் கண்டறிந்து, சிறு வியாபாரிகளுக்குப் பாதுகாப்பு அளிக்கும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இல்லையெனில் ஏழைகள் நிறைந்த நம் நாட்டில் ஏழைகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே போகும். அது பல்வேறு தொடர் பிரச்சினைகளுக்கு வழி வகுத்துவிடும்.சில்லறை வியாபாரத்துக்கு பாதிப்பு

Posted in Analysis, Assets, Background, Bharti, Big Box, Biz, Business, Commerce, Cong(I), Congress, Congress (I), Congress Party, Dinamani, Economics, Economy, FDI, Finance, Foreign investment, Indira Congress, Indra Congress, Interest, Investment, Loans, Manmohan Singh, Market, Monopoly, Op-Ed, Opinion, PM, Protection, retail, Retailer, Safeguards, Small Business, Sonia Gandhi, Sonia Gandi, Sudeshi, Swades, Wal-Mart, Walmart | Leave a Comment »

Sivaji – The Boss : Story, Nayanthara and other Details (Maalai Malar)

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 26, 2006

இறுதி கட்ட படிப்பிடிப்பு: `சிவாஜி’ படத்தில் ரஜினி `பஞ்ச்’ வசனம்

ரஜினி நடிக்கும் `சிவாஜி’ படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடக்கிறது. முந்தைய படமான சந்திரமுகி வெற்றிப்படமாக அமைந்ததால் `சிவாஜி’யை அதைவிட சிறந்த படமாக செதுக்குகிறார் இயக்குனர் ஷங்கர்.

ரசிகர்கள் மட்டுமன்று அனைத்து தரப்பு மக்களை யும் அவரும் வகையில் `சிவாஜி’ கதை ஒருவாக்கப்பட் டுள்ளது.

வெளிநாட்டில் வாழும் கோடீஸ்வர தமிழர் கேரக்டரில் ரஜினி நடக்கிறார். சொந்த நாட்டு மக்களுக்கு சேவை செய்யும் நோக்கில் பண மூட்டையுடன் வரும் அவரை வில்லன் கோஷ்டி யும் அரசியல்வாதிகளும் ஏமாற்று கின்றனர். ரஜினியின் பணத்தை பிடுங்குகின்றனர். சொத்துக்களை இழந்து ஏழையாகிறார். ஒரு ரூபாய் நாணயம் மட்டும் மிச்சம் இருக்கிறது. அந்த நாணயத்தை வைத்து படிப்படியாக மீண்டும் பணக்காரன் ஆவது தான் கதை.

ரஜினி படங்களில் அவரது ஸ்டைலுக்கு முக்கியத்துவம் இருக்கும். `சிவாஜி’ படத்திலும் புது மாதிரி `ஸ்டைல்’ சித்த ரிக்கப்பட்டுள்ளது. சண்டைக் காட்சிகளில் இந்த ஸ்டைல்கள் புகுத்தப்பட்டுள்ளன.

`ஸ்டண்ட்’ மாஸ்டர் பீட் டர் ஹெய்ன் சண்டைக் காட்சிகளை வடிவமைத் துள்ளார். `பைக்’ சண்டை, ரோப் கட்டி நடக்கும் சண்டை போன்றவை ஹைலைட்டாக குறிப்பிடப்படுகின்றன. ஒரே அடியில் இருபத்தைந்து பேரை ஆகாயத்தில் பறக்க விடுவதும் சண்டையில் புகுத்தியுள்ளனர். வில்லன்களுடன் மோதும் கார் சேசிங் காட்சியும் இடம் பெறுகிறது. இதற்காக நூற்றுக்கணக்கான கார்களை பயன்படுத்தியுள்ளனர்.

ரஜினி அணியும் ஆடைக ளும் பணக்காரத்தனம் மிளி ரும் வகையில் வடிவமைக் கப்பட்டுள்ளன.

ரஜினி ஆடிப்பாடும் ஒரு பாடல் காட்சிக்கு சிங்கப்பூரில் இருந்து பிரத்யேகமாக கங்காரு முடியில் செய்த வெங்வேறு நிறத்தில் 5 `கோட்’களை வாங்கியுள்ளனர். இவை ஒவ்வொன்றின் விலையும் தலா ரூ.3 லட்சமாம்.

இந்த படத்துக்கு இது வரை இல்லாத அளவில் வெளிநாட்டினரை நிறைய பயன்படுத்தியுள்ளனர்.

சமீபத்தில் வெளிநாட்டில் அங்குள்ள நடனக் கலைஞர் கள் பங்கேற்ற பாடல் காட்சி படமாக்கப்பட்டது. சென்னை பின்னி மில்லில் வெனிஸ் நகர செட் அமைத்து ஒரு காட்சியை படமாக்கினர். வெனீஸ் நகர கால்வாய் மற்றும் செட், போட்டு படம் பிடித்தனர். இதிலும் நூற்றுக்கணக்கான வெளிநாட்டினர் நடித்துள்ள னர்.

ரஜினியின் `பஞ்ச்’ வசனங் களும் சிவாஜியில் இடம் பெறுகிறது.

என் வழி தனி வழி, நான் ஒரு தடவை சொன்னா நூறு தடவை சொன்ன மாதிரி, ஆண்டவன் சொல்றான் அருணாசலம் செய்றான், என்பன போன்ற `பஞ்ச்’ வசனங்களை பல்வேறு படங்களில் பேசியுள்ளார். அது போல் `சிவாஜி’யிலும் பஞ்ச் வசனங்கள் இடம் பெறுகிறது.

ரஜினி ஸ்ரேயா முதல் இரவு பாடல் காட்சியொன்று கிளு கிளுப்பாக படமாக்கப் பட்டுள்ளது. நயன்தாரா ஒரு பாடலுக்கு மட்டும் ஆடுகிறார். இப்பாடல் காட்சி பூனாவில் படமாக்கப்படுகிறது.

Posted in Background, Gossip, Kathai, Maalai Malar, Nayanthara, Peter Haynes, Rajiniganth, Rajni, Rumor, Shankar, Shivaji, Shreya, Sivaji Story, The Boss | 1 Comment »

Meningo encephalitis & Chikun Kunya – Dinamani Editorial

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 6, 2006

சிக்குன் குனியாவும் சுற்றுப்புறத் தூய்மையும்

“”என் மகள் சிக்கன் சாப்பிடுவதே இல்லைங்க. அவளுக்குப் போய் “சிக்கன் குனியா’ வந்துவிட்டது” என்று புலம்பினார் கிராமத்து நண்பர். “”ஐயா, அது சிக்கன் குனியாவும் அல்ல; மட்டன் குனியாவும் அல்ல; சிக்குன் குனியா” என்று திருத்தினேன்.

கிழக்கு ஆப்பிரிக்க பாண்டு இன மக்களின் மொழியாகிய ஸ்வாஹிலி (Swahili) யில் “சிக்குன் குனியா’ என்பதற்கு “வளைத்துப் போட்டுவிடுவது’ (that which bends up) என்று பொருள். இந் நோயால் தாக்கப்படுபவர்களின் மூட்டுகள் பாதிக்கப்பட்டு முடக்கப்படுவதால் சிக்குன் குனியா என்ற பெயர் படைத்தது.

ஏடெஸ் எஜிப்டி (Aedes aegypti) என்ற வகைக் கொசுக்கள் கடிப்பதனால் இந்தக் கொடிய நோய் ஏற்படுகிறது. குளிர்காய்ச்சல், தலைவலி, வாந்தி, மயக்கம், மூட்டுக்கு மூட்டு வலி, வாய்க்கசப்பு எனப் பல்வேறு சிரமங்களை இந்த நோய் உண்டாக்குகிறது.

சிக்குன் குனியாவின் பூர்வீகம் கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள தான்சானியா நாடுதான். இங்குதான் 1952 – 53 ஆண்டுகளில் இந்நோய் கண்டறியப்பட்டது. 1999ஆம் ஆண்டு மலேசியாவில் உள்ள க்ளாங் (Klang) துறைமுகத்திலும் சிக்குன் குனியாவால் 27 பேர் பாதிக்கப்பட்டனர்.

இந்துமாக் கடலில் மடகாஸ்கர் தீவுக்குக் கிழக்கே பிரான்சுக்குச் சொந்தமான “ரியூனியன்’ (Reunion) என்று ஒரு தீவு உள்ளது. இங்கு கடந்த 2005 ஆம் ஆண்டு கொள்ளை நோயாக சிக்குன் குனியா கோரத் தாண்டவம் ஆடியது. தீவில் வாழும் 7 லட்சத்து 50 ஆயிரம் மக்களில், ஒரு லட்சத்துப் பத்தாயிரம் பேர் சிக்குன் குனியாவால் கடுமையாக முடக்கப்பட்டனர். அருகே இருந்த மொரிஷியஸ் தீவையும் இந்நோய் விட்டு வைக்கவில்லை. இங்கு சிக்குன் குனியாவால் பாதிக்கப்பட்டவர் எண்ணிக்கை மூவாயிரத்து ஐநூறு.

இந்த ஆண்டிலும் (2006) ரியூனியன் தீவில் எழுபதாயிரம் பேர் இந்நோயினால் அவதிக்கு உள்ளாயினர். பிரான்சு நாடு போர்க்கால அடிப்படையில் விரைந்து செயல்பட்டு, கொசுக்களை அழித்திட 3,600 பேரைப் பணியில் ஈடுபடுத்தியது. மேலும் ராணுவ வீரர்களும் இப்பணியில் பங்கேற்க அழைக்கப்பட்டனர்.

இந்தச் சிக்குன் குனியா ஓர் ஆட்கொல்லி நோயன்று என்று முதலில் கருதப்பட்டது. ஆனால் ரியூனியன் தீவில் டைலான் (Dylan), ட்ரிசியா (Tricia) என்ற பத்து வயது சிறார்கள் இருவர் இறந்து போயினர். டைலான், சிக்குன் குனியா பாதித்த இரண்டு நாள்களிலும், ட்ரிசியா ஒரு வாரம் கழித்தும் மரணத்தைத் தழுவினர். மொரிஷியஸ் தீவிலும் சங்கீத் எம்ரித் (Sangeet Emrith) என்ற முப்பத்து மூன்று வயது நபரும் இந் நோய் தாக்கி மரணமடைந்தார். மூளையின் நரம்புகளை சிக்குன் குனியா வைரஸ் பாதித்ததால் மெனிங்கோ என்செஃபாலிட்டிஸ் (Meningo encephalitis) நோயினால் இவர்கள் மரணமடைந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த மரணங்கள்தான் சிக்குன் குனியா ஓர் ஆட்கொல்லி நோயாக இருக்கக் கூடும் என்ற ஐயப்பாட்டை முதன்முதலாக மருத்துவ உலகில் விதைத்தன எனலாம். 2004-ல் 3884 ஆக இருந்த இத்தகைய மரணங்கள் 2005ஆம் ஆண்டில் 4272 ஆக உயர்ந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் மேரிலாந்து (Maryland) பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் ராபர்ட் இடெல்மேன் (Robert Edelman) அமெரிக்க ராணுவத்தின் பயன்பாட்டுக்காக தடுப்பூசி (Vaccine) மருந்து ஒன்றைக் கண்டுபிடித்தார். இந்தத் தடுப்பூசி சிக்குன் குனியாவைத் தடுக்கும் ஆற்றல் கொண்டதாகக் கருதப்படுகிறது. இதுவரை இருபது பேருக்கு மட்டுமே சோதனை முயற்சியாகப் போடப்பட்டிருக்கிறது. பேராசிரியர் ராபர்ட் இடெல்மேனின் இந்த முயற்சி முழுமையாக வெற்றி பெற்றால் உலக அளவில் இந்நோயின் பாதிப்பைத் தடுத்து நிறுத்த முடியும். சிக்குன் குனியா வைரஸ் வேறு வேறு மனிதர்கள் மீது வேறு வேறு வகையான உயிரியல் அறிகுறிகளை (different biological symptoms on different persons) உருவாக்கக் கூடும் என்கிறார் இடெல்மேன்.

சிக்குன் குனியா மட்டுமல்ல டெங்கு, மலேரியா போன்ற பல்வேறு ஆட்கொல்லி நோய்களுக்கும் கொசுக்களே மூலகாரணம். அதுவும் ஏடெஸ் எஜிப்டி கொசுவுக்கு “மாவீரன் ஏடெஸ்’ என்று விருதே வழங்கலாம். தமிழக எதிர்க்கட்சிகளைக் கைகோர்த்து வீதிக்கு வந்து போராட வைத்துவிட்டதே!

கொசுக்களை மனிதர் ஒழித்துக் கட்ட வேண்டும். இல்லையேல் கொசுக்கள் கொஞ்சம் கொஞ்சமாக மனிதரை ஒழிக்க முற்படும்.

சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்துக் கொள்வதும், தேங்கியுள்ள நீர் நிலைகளில் கொசுக்கள் உற்பத்தியாகாமல் பார்த்துக் கொள்வதும் இன்றைய அவசரத் தேவைகள்.

கொசு ஆசான், நம்மை “முட்டிக்கு முட்டி தட்டி’ச் சொல்லிக் கொடுத்திருக்கும் பாடம் இது; கற்போமா?

Posted in Background, Chicken Kunya, Chikan Kunya, Chikun Kunya, Clenaliness, Dinamani, Editorial, Healthcare, History, Meningo encephalitis, Op-Ed, World | Leave a Comment »