Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Award’ Category

Tamil Kavinjar Devadevan wins Vilakku award for 2008 – Thamil Literature faces

Posted by Snapjudge மேல் திசெம்பர் 9, 2007

கவிஞர் தேவதேவனுக்கு “விளக்கு’ விருது!

தொடர்புள்ள பதிவு: தேவதேவன் – நகுலன் « Snap Judgment

சென்னை, டிச. 8: நவீன தமிழ் இலக்கியத்தின் முக்கிய கவிஞர் தேவதேவன் (59) இவ்வாண்டுக்கான “விளக்கு’ விருதைப் பெறுகிறார்.

அமெரிக்கத் தமிழர்களின் கலாசார அமைப்பாகிய “விளக்கு’ கடந்த பத்தாண்டுகளாக ஆண்டுதோறும் சிறந்த தமிழ் எழுத்தாளர்களுக்கு விருது வழங்கி கெüரவித்து வருகிறது.

ரூ.40 ஆயிரம் ரொக்கப் பணமும், பாராட்டுப் பத்திரமும் இவ்விருதில் அடங்கும்.

இம்மாதம் 23 ஆம் தேதி மதுரையில் நடைபெற இருக்கும் விழாவில் இவ்விருது வழங்கப்பட உள்ளது.

விருது பெற்ற கவிஞர் தேவதேவன் பத்துக்கும் மேற்பட்ட கவிதை நூல்களை எழுதியுள்ளார். தேவதேவன் கதைகள் என்ற ஒரு சிறுகதை நூலும், கவிதை பற்றிய உரையாடல் என்ற கட்டுரை நூலும், அலிபாபாவும் மோர்ஜியானாவும் என்ற நாடக நூலும் எழுதியுள்ளார். தமிழ் சிறுபத்திரிகைகளில் நீண்ட காலமாக எழுதிவரும் கவிஞர் தேவதேவனின் சொந்த ஊர் தூத்துக்குடி.

விளக்கு விருதுக்காக கவிஞர் தேவதேவனைத் தேர்ந்தெடுத்த நடுவர் குழுவில் எழுத்தாளர்கள் திலீப்குமார், லதா ராமகிருஷ்ணன், க்ருஷாங்கினி ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.

விளக்கு விருது இதற்கு முன்

  • எழுத்தாளர் சி.சு.செல்லப்பா,
  • கவிஞர் பிரமிள்,
  • கோவை ஞானி,
  • கவிஞர் ஞானக்கூத்தன்,
  • நகுலன்,
  • ஹெப்சிபா ஜேசுதாசன்,
  • பூமணி,
  • சி.மணி,
  • பேராசிரியர் ராமானுஜம்,
  • அம்பை

முதலானோருக்கு வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

திண்ணையில் தேவதேவன் – Thinnai


மரத்தடி.காம்(maraththadi.com) – கவிஞர் தேவதேவன்:கவிஞர் பற்றி:கவிஞர் தேவதேவன் அவர்கள் 05/05/1948 இல் பிறந்தார். இயற்பெயர் : பிச்சுமணி கைவல்யம், ஆசிரியர் பணி. எழுபதுகளின் துவக்கத்தில் எழுத ஆரம்பித்த இவர் இதுவரை 13 கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டிருக்கிறார்.

1) குளித்துக் கரையேறாத கோபியர்கள் (1976)
2) மின்னற்பொழுதே தூரம் (1981)
3) மாற்றப்படாத வீடு (1984)
4) பூமியை உதறியெழுந்த மேகங்கள் (1990)
5) நுழைவாயிலேயே நின்றுவிட்ட கோலம் (1991)
6) சின்னஞ்சிறிய சோகம் (1992)
7) நட்சத்திர மீன் (1994)
8) அந்தரத்திலே ஓர் இருக்கை (1995)
9) நார்சிஸஸ் வனம் (1996)
10) புல்வெளியில் ஒரு கல் (1998)
11) விண்ணளவு பூமி (2000)
12) விரும்பியதெல்லாம் (2002)
13) விடிந்தும் விடியாப் பொழுது (2003)

தேவதேவன் கவிதைகள் குறித்து ந.முருகேச பண்டியன் அவர்கள் எழுதிய “நவீனத்திற்குப் பின் கவிதை/ தேவதேவனை முன்வைத்து” என்ற கட்டுரை காலச்சுவடு இதழில் (டிசம்பர் -1999) வெளியானது. அதே கட்டுரை ந.முருகேச பாண்டியன் பிரதிகளின் ஊடே பயணம் என்ற விமரசனக் கட்டுரைத் தொகுப்பு நூலிலும் சேர்க்கப்பட்டுள்ளது. அந்ந்தக் கட்டுரையிலிருந்து சில வரிகள் …


தேவ தேவன் வெறுமனே ‘புல்,மரம்,வீடு என பராக்குப் பார்க்கும் மனிதர் அல்ல. இயற்கையின் விசித்திரங்களுள் பயணித்து ஆழமான புரிதல் மூலம் பெற்ற அனுபவச் செறிவைக் கவிதையாக்குவது அவரது வழமையாகும். கவிஞனுக்கும் தத்துவத்திற்கும் எவ்விதமான தொடர்புமில்லை என முழங்குதலே தத்துவமாகிப் போன சூழலில் கவிதை அப்பழுக்கற்றது; தூய பளிங்கு போன்றது; கள்ளங்கபடமற்ற அப்பாவித்தனமானது; குழந்தைமையானது; கருத்தியலையோ தத்துவத்தையோ சுமப்பதற்கு லாயக்கற்றது என்ற கருத்து தேவதேவனுக்கு உண்டு. சுருங்கக் கூறின் பிரக்ஞையில் ததும்பி வழியும் சொற்கள், மின்னற் பொழுதில் பதிவாகும் காட்சியின் உக்கிரம் கவிஞருக்குக் கவிதையாகிறது.


1. Thinnai – கவிதையை கவிதைதான் மதிப்பிட முடியும் – தேவதேவன் கவிதைகள்2. Andhimazhai – News Details: தேவதேவன் – கவிதைத் திருவிழா: “தேவதேவன் கவிதைகளில் மொழிரூபம் கொள்வது உணர்ச்சி மயமான அனுபவங்களின் படைப்புலகம். இங்கு உணர்ச்சிகளின் உத்வேகமே அறிவுத்தளத்துடன் முரண்படுபவற்றைக்கூட சமனப்படுத்துகிறது , அனுபவங்களின் மூலங்களைக் கொண்டு சிருஷ்டிக்கப்படும் புதிய பொருளின் படைப்பும் உருவாகிறது . கூறப்படும் விஷயத்தில் செவ்வியல் பண்பும் , சொல்லப்படும் விதத்தில் நவீன புனைவின் குணமும் இணைந்துகொள்கின்றன.தேவதேவனின் தனித்துவத்திற்கு சொல்லாமல் சொல்லும் இடைவெளி நிறைந்த தன்மையும் பலபரிணாமங்களில் விரியும் குறியீட்டுத் தன்மையும் காரணமாகும் ” என்று காலப்ரதீப் சுப்ரமணியன் தேவதேவன் கவிதைகளைப் பற்றி குறிப்பிடுகிறார்.(‘பூமியை உதறி எழுந்தமேகங்கள் ‘ கவிதைத் தொகுப்பின் முன்னுரை)

தூத்துக்குடியில் ஆசிரியராக பணியாற்றும் தேவதேவன் 05/05/1948 அன்று பிறந்தவர். (இயற்பெயர் : பிச்சுமணி கைவல்யம்)

3. P.K. Sivakumar : பூனை – தேவதேவன்:

பூனை
– தேவதேவன்

முதல் அம்சம்
அதன் மெத்தென்ற ஸ்பரிசம்
குழைவு அடிவயிற்றின்
பீதியூட்டும் உயிர் கதகதப்பு

இருவிழிகள் நட்சத்திரங்கள்
பார்க்கும் பார்வையில்
சிதறிஓடும் இருள் எலிகள்

‘நான்! நான்!”என புலிபோல
நட்டுக்குத்தென வால் தூக்கி நடக்கையில்
உருளும் கோட்டமுள்ள சக்கரமென
புழுப்போல
அதன் வயிறசைதல் காணலாம்

கூர் நகங்களுடன் ஒலியெழுப்பாத
சாமர்த்திய நடை இருந்தும்
‘மியாவ்’என்ற சுயப்பிரலாப குரலால்
தன் இரையை தானே ஓட்டிவிடும்
முட்டாள் ஜென்மம்

நூல்கண்டோடும்
திரைச்சீலைகளின் அசையும் நுனியோடும்
விளையாடும் புத்திதான் எனினும்
பறவைகளை பாய்ந்து கவ்வும் குரூரமும் உண்டு

எலியை குதறுகையில்
பகிரங்கப்படும் அதன் கொடும்பல்லையும்
நக்கி நக்கி பாலருந்துகையில்
தெரியவரும் இளகிய நாக்கையும்
ஒரே மண்டைக்குள் வைத்துவிட்டார் கடவுள்

ஞாபகப்படுத்திப்பாருங்கள்
உங்கள் குழந்தைப்பருவத்தில் நீங்கள்
இப்பூனையைக் கண்டு பயந்ததைப்போலவே
சினேகிக்கவும் செய்திருக்கிறீர்களல்லவா?

நன்றி: தேவ தேவன் கவிதைகள் முழுத்தொகுப்பு: தமிழினி வெளியீடு


கூழாங்கற்கள்இந்தக் கூழாங்கற்கள் கண்டு
வியப்பின் ஆனந்தத்தில் தத்தளிக்கும்
உன்முகம் என
எவ்வளவு பிரியத்துடன் சேகரித்து வந்தேன்

” ஐயோ இதைப் போய் ” என
ஏளனம் செய்து ஏமாற்றத்துள்
என்னைச் சரித்துவிட்டாய்

சொல்லொணாத
அந்த மலைவாசஸ்தலத்தின்
அழகையும் ஆனந்தத்தையும்
சொல்லாதோ
இக்கூழாங்கற்கள் உனக்கும் ?
என எண்ணினேன்

இவற்றின் அழகு
மலைகளிலிருந்து குதித்து
பாறைகளூடே ஓடும் அருவிகளால்
இயற்றப்பட்டது

இவற்றின் யெளவனம்
மலைப்பிரதேசத்தின்
அத்தனைச் செல்வங்களாலும்
பராமரிக்கப்பட்டது

இவற்றின் மெளனம்
கானகத்தின் பாடலை
உற்றுக் கேட்பது

மலைப்பிரதேசம்
தன் ஜீவன் முழுசும் கொண்டு
தன் ரசனை அத்தனையும் கொண்டு படைத்த
ஒரு உன்னத சிருஷ்டி

நிறத்தில் தன் மாமிசத்தையும்
பார்வைக்கு மென்மையையும்
ஸ்பரிசத்துக்கு கடினத் தன்மையும் காட்டி
தவம் மேற் கொண்ட நோக்கமென்ன ? என்றால்
தவம் தான் என்கிறது கூழாங்கற்களின் தவம்.


குமட்டிக்கொண்டு வருகிறது
வீதியை அசுத்தப்படுத்திவிட்டு
அந்தக் குற்றவுணர்வே இல்லாமல்
ஜம்மென்று வீற்றிருக்கும் இவ்வீடுகளின்
சுத்தமும் நேர்த்தியும் அழகும் படோடபமும் காண்கையில்யாருமறியா இவ்வைகறை இருளில்
முதல் ஒளியாய்
இவ்வீதியைப் பெருக்கிக் கொண்டிருக்கிறான் ஒருவன்

ஒரு கவிஞன் சொல்கிறான் அவன் வேலை பற்றி :
அவன் விடியலை வரைந்து கொண்டிருக்கிறானாம்
அவன் சொல்லை நாம் நம்பித்தான் ஆக வேண்டுமாம்
ஏனெனில் அவன் கவிஞனாம்

வெதுவெதுப்பேறி வியர்த்து நிற்கும் அவன் உடல்
ஒரு குளிர்காற்றின் அலைபட்டுச் சிரிக்கிறது,
தன் ஆதர்ச மனிதனை எண்ணி
ஆயிரமாண்டுகளாய் மணமாகாது
காத்திருந்த கன்னியொருத்தி
பாய்ந்து போய் அவனைத் தழுவிக்
கொத்திக்கொண்டது போல்


1]மாற்றப்படாத வீடுநெருக்கடியுள் நெர்ந்து அனலும்காற்று
எந்ன செய்ய
இந்த வீட்டை நான் இன்னும் விடமுடியவில்லை
பாதிக்கப்படுபவன் நான் மட்டுமே
சைக்கிளில் போய் வருவேன் வெகுதொலைவு தாண்டி
நகர எல்லையிலிருக்கும் என் ஸ்கூலுக்கு
அதனருகே ஒரு வீடும் கட்டிமுடித்துள்ளேன்
குடிவர மறுக்கின்றனர் என் வீட்டார்
ரிக்ஷா செலவே சம்பளத்தில்பாதியாகிவிடும்
என பயமுறுத்துகிறாள் என் மனைவி
உண்மையும்தான் இதற்காகவேதான்
கல்யாணமான உடனே நச்சரித்தேன் சைக்கிள் ஓட்டப்படி என்று.

அவளுக்கு அவள் ஸ்கூள் பக்கம் ஊருக்குள்ளேயே
அப்பாவுக்கு ஆபீஸ் பக்கம்
[வயதான காலத்தில் பஸ் ஏறி இறங்க வேண்டியதில்லை ]
அம்மாவுக்கு கோயில்பக்கம் மேலும் உறவினர்கள்
[வனத்தில் அலைந்தாலும் இனத்தில் அடையவேண்டாமா ?]
தம்பிதங்கைகளுக்கு அவரவர் ஸ்கூல்கள் பக்கம்
எனவேதான்
இந்தவீட்டை நான் இன்னும் விடமுடியவில்லை
என்றாலும்
நான் அங்கே ஓரு வீடுகட்டிமுடித்துள்ளேன் .

2]உதயம்

முன் நடக்கும் பெண்ணணங்கின்
நீலவானக் கொண்டையின் கீழ்
நிலப்பூவே மதுரக்
கழுத்தாய் சரிந்த தோள்வரையாம்
என் கண்கள் மட்டுமே தொடு[ம்]வானில்
கைக்குழந்தைமுகம் ஒன்று சிரிக்கிறது எனக்காக
இவ்வுலகம் எனக்காக

3]தீ

வீடு திரும்பிக் கொண்டிருந்தேன்
என் பத்தினி இவள் காயப்போட்ட
சிவந்த சேலைபற்றி
எரிந்துகொண்டிருந்தது வேலி

4]வேலிப்பூக்கள்

வேலிப்படலை
திறந்துபோட்டுவந்து
உட்கார்ந்திருப்பேன்
சுதந்திரமாய்
கன்றுவந்து
பன்னீர்பூமேய்கிற
அழகினைபார்த்துக் கொண்டு

நீ வருவாய்

காலியிளம் வெயிலில்
கன்றாக மேய
குளித்து முடித்த
உன் ஈரச்சேலையை
என் வேலிமீதே காயப்போட

காதல்
வேலிமீறும்
பூவாய் தன்னைத்தான்
சிம்மாசனமேறிக் கொலுவிருக்கும்
அவளுக்கும் அவனுக்கும்
குறுக்கே வந்து
மார்புவரை மறைக்கும்
சவக்கல்வேலிக்குமேலே
பூக்கும் ரோஜாத்தொட்டி
கைகள் கண்டால்
முட்களுடன்

5]ஆண் பெண்

ஒரே படுக்கையில்
உடன் படுக்கை கொண்டு
நாம் ஒருவரை ஒருவர்
இழுத்து அணைத்துக் கொள்வதன்
பொருள் என்ன ?

ஆண் பெண் என பிரிந்த
இரட்டைத்தன்மையை மறந்து
இணைய வேட்கும் ஆவேசம்

குழந்தைபசி விழித்து அழ
முலையுடன்
பெண் என நாமம் ஏற்று
என்னை பிரிந்து செல்லும்
ஒருமுனை புரிகிறது
மற்றொரு முனையில்
தனித்து விடப்பட்ட
என் பிரிவின் நோக்கமென்ன ?

சிசு பேணும் முலையவளே
மீண்டும் மீண்டும் வந்து
என்னை ஆலிங்கனிக்கும்
உன்னை விலக்கி
என்னை
தனித்துத் தியானிக்கவைக்கும்
உயிரிீன் நோக்கம்
தனித்து தியானித்திருந்தது

6]மணமாயிற்று

தாழ்பாளிட்ட கதவு திறந்து
திரைச்சீலை
மணிபர்ஸில் வந்து உட்கார்ந்துகொண்டது
மனைவியின் புகைப்படம்
படிப்பறை படுக்கையறையாயிற்று
இவனை சங்கிலியின் ஒருகண்ணியாக்கிவிட
சதி நடக்கும் இடமாயிற்று அது
விடுதலை நோக்கி வாய்திறந்த கதவுகள்
படுக்கையை காவல்காக்கும்
ஊமைகளாகி விட்டன
இடைமறிக்கப்பட்டோ
இடை தளர்ந்தோ
இடை புகுந்ததுதைந்திரிய வீழ்ச்சி
வீழ்ச்சியின் கருவில்
உதித்தது
இன்னொரு முயற்சிக்கு ஓர் மனித உரு
வீழ்ச்சியிலும் முயற்சித்தொடரிலுமே
ஜீவித்துவரும் மனிதகுலம்
ஆழ்ந்து உறங்குகிறது இவனருகே
அவளாக

7]சீட்டாட்டம்

இடையறாத இயக்கத்தின் மடியில்
[உண்பதற்கும் கழிப்பதற்கும் மட்டுமே
இடம் பெயர்ந்தோம் ]
இரவு பகலற்ற விழிப்பில்
ஆறு இதயங்களுக்கிடையே
ஓர் உரையாடல்

அகாலத்திலிருந்து காலத்துக்கு
சீட்டுகளை இறக்கினோம்
காலமோ விலகி எங்கள் விளையாட்டை
கவனித்துக் கொண்டிருந்தது
காபி போட்டுதந்தது
சோறு சாப்பிட அநை¢த்தது
ஆக எங்கள் சீட்டுக்கள் விழுந்தது
வெறுமையின் மீது

காலாதீத பிரமிப்புடன் சீட்டுக்கள்
எங்கள் சொற்களாயின
எனினும் வெல்ல வெல்ல என துடித்தன
ஒவ்வொருவர் கைகளுக்குமாய்
அவை கழன்று விழுந்தவுடன்
எனினும்
என்னை வெல்லு என்று
தோற்று கலையவே துடித்தன.
ஒவ்வொருவரிடமிருந்தும்
அவை கழன்று விழுந்தவுடன்

அப்போது இப்போது என்று
சுட்டமுடியாத ஒருபோது
என்றோ புதைந்து
துயில் கொண்டிருந்த ஒரு விதை
திடேரென்று வளர்ந்து
ஒரு மலர் காம்பை நீட்டியது
அங்கே
சீட்டாடும் அறுவர்
ஆறு இதழ்கள் உடைய ஒரு மலர்.

8]சந்திப்பு

என்னதான் ஆனாலும்
நீ ஒரு சுயம்பு
நான் ஒரு சுயம்பு
உன்போக்கில் நீ
என் போக்கில் நான்
எப்போதும் நகர்ந்துகொண்டிருக்கும்
இருபுள்ளிகள்

நம் சந்திப்பு அதாவது
புரிந்துகொள்ளல் அன்பு முதலானவை
எங்கு எப்போது எவ்விதம் கிட்டும் ?

சம எடையுள்ள இரண்டுக்கும்
சம அந்தஸ்து அளிக்கும் நீதியுணர்வில்
எப்போதும் நகர்ந்துகொண்டிருக்கும்
இரண்டு புள்ளிகளுக்கு மத்தியில்
தன் செம்மத்திக்காய்
எப்போதும் நகர்ந்துகொண்டிருக்கும் புள்ளி

9 ] குடும்பம்

சமூகம் வழங்கும் செளகரியங்களும் குரூரமுமாய்
எனது தந்தை இருந்தார்
மனிதன் வழங்கும் அன்பும் கருணையுமாய்
எனது தாயும் இருந்தார்கள்

எனது தந்தைக்கோர் பெரும் பேர் உண்டு
நியாயவான் நாட்டுக்குழைப்பவன் நல்லவன் என்றெல்லாம்
எனது தாய்க்கும் பேர் உண்டு
பாவம் பைத்தியக்காரி ஒன்றுமறியாதவள்

இத்தோடு இந்தப் புவி முழுக்க வினியோகிக்க
போதுமான பெருந்தன்மை எனும் சரக்கு
எங்கள் வீட்டில் இருந்ததென்னவோ
மறுக்க முடியாத உண்மை

என் தாயிடம் நான் கண்டிருந்தேன்
என் தந்தையின் மூர்க்கங்களை எல்லாம்
எப்போதும் மன்ன்னித்து நிற்பதுபோன்ற ஒரு பெருந்தன்மையை
எனது தந்தையிடம் கண்டிருந்தேன்
எனது தாயின் அறிவீனங்களை எல்லாம்
எப்போதும் சகித்துக் கொண்டு முறுவலிப்பதுபோன்ற
ஒரு பெருந்தன்மையை

ஒருநாள் -இல்லை திடார் திடாரென்று-
தந்தை உதைத்தார் தாயின்மீது எகிறி
தாய் சபித்தாள் தந்தை மீது கதறி
நான் முழித்தேன் பார்வையாளனாய்

யார் நிகழ்த்துகிறார் இந்த நாடகத்தை என
நான் கேட்டேன் எனக்குள் நெளிபவனிடம்

தற்செயலாய் ஒருநாள் சந்தித்தேன்
அந்த நாடக இயக்குநரை
என்னைத்தான் தேடிக் கொண்டிருந்தாராம் அவர்
தன் நாடகத்துக்கு இரு பாடல்களை இயற்றித் தரணுமாம்
எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவுதற்கோர் டூயட் பாட்டும்
அன்னவர் கீரியும் பாம்புமாயிருக்கையில்
ஒலிப்பதற்கோர் பின்னணிப்பாட்டும்

‘ ‘ கவனம் இப்பாடல்களின் பொருளை
உம் நடிகர்கள் புரிந்துகொண்டால்
உம் நாடகம் அம்பேல் ‘
என்ற எச்சரிக்கையுடன் வழங்கினேன்
எனது இரு பாடல்களை அவரிடம்.

10 ] தொடுதல்

ஒளியின் சிறகுகள் உதைத்து வெளிப்படுகையில்
தெறித்து அறுகிறது தொப்புள் கொடி

தேவதைகளின்கண்களின் மின்னுகின்றன
உடலெனப்படுவதன் கன்னிமையும்
உளமெனப்படுவதன் குழந்தைமையும்
உயிரெனப்படுவதன் ஆனந்தமும்

அனாதியிலிருந்து
ஓடிவரும் குருதி துறுதுறுக்கும்
விரல் தொட்டு
‘அணைகிறது ஒளி ‘
எனப் பதறாதே
விரல் தொடுகையில்
கரியும் சிறகுகளின் வெப்பத்தில்
பெறுகின்றன
கன்னிமை தாய்மையை
குழந்தைமை அறிவை
ஆனந்தம் துக்கத்தை

பதறாதே பொறு விரலை எடுக்காதே
அந்த ஒளி உன் விரல் வழியாக புகுந்து
உன்னுள் இயற்றப்படும் வரை பொறு
அப்புறம் கைவந்துவிடும் அந்தக்கலை

பாதம் பதிக்காமல் உலவுதற்கும்
கைகள் விரியாமல் அணைப்பதற்கும்
விரல்களில்லாமல் தொடுவதற்கும்
இதழ்பதிக்காமல் முத்தமிடுவதற்கும்
சொற்களில்லாமல் பேசுவதற்கும்
இல்லாமலே இருப்பதற்குமான கலை .


ஆற்றோரப் பாறைகளின்மேல்

ஆற்றோரப் பாறைகளின்மேல்
அமர்ந்திருக்கும்
இக் கல் மண்டபங்கள்தாம்
எத்தனை அழகு!
எத்தனை எளிமை!
எத்தனை உறுதி!
எத்தனை தூய்மை!

பூஜை வேண்டாமல்
விக்ரகங்கள் வேண்டாமல்
குழந்தைகள் துளைத்து
கும்மாளாமிட்டுக் கொண்டிருக்கும்
இந்த ஆற்றினைப் பார்த்துக்கொண்டேயிருப்பதற்கோ
அமர்ந்துவிட்டன இக் கல் மண்டபங்கள்
இங்கே நிரந்தரமாய்?

சுற்றுச் சுவர்களில்லாத
அதன் உள்வெளிகளில்
‘உள்ளொன்றும் புறமொன்றுமி’னால்
உருவாகும் துயரேதுமின்றிச்
சுழன்று கொண்டிருக்கும் சக்கரத்தினைக்
கண்டு நின்றனரோ புத்தர்?

***** ***** *****

காவல் நிலையம்

விலங்கோடு விலங்காய்க்
குடிகொண்டிருக்கும் வன்முறை
எங்கிருந்து வந்ததென்று
யாருக்காவது தெரியுமா?
தெரியும்.

கையிலகப்பட்ட கைதிமீது
காவலன் ஒருவனிடன்
கண்மண் தெரியாமல் வெளிப்படும்
வன்முறை
எங்கிருந்து வந்ததென்று
யாருக்காவது தெரியுமா?
தெரியும்:
பல்லாண்டுகளாய்
இப் புவியெங்கும்
அன்பு வழுவி
அறம்பிழைத்த காவல்தெய்வத்தின்
மனச் சிதைவிலிருந்து கிளம்பியது.
பார்வையற்ற விழிக்குழிகளிலிருந்து
பீரிட்டுக் கொட்டும் எரிமலைக் குழம்பு.

***** ***** *****

கண்டதும் விண்டதும்

மலையுச்சியேறியவன்
தான் கண்டு கொண்டதை
ஒரு கோயிலென வடித்துவிட்டுக்
கீழிறங்கினான்.

கோயில் சென்றவன்
உதட்டு பிதுக்கலுடன்
கைவிரித்தபடி
கீழிறங்கினான்.

கீழே
ஒரு புல்
அய்யோ,அது
காற்றிலா அப்படித் துடிதுடிக்கிறது?
ஒளியிலா அப்படி மினுமினுக்கிறது?

அங்கே
தலைப்பாகையும்
அரையாடையுமாய்ச்
சுள்ளி விறகு சேகரித்துச்
செல்லும் ஒரு மனிதனை
காதலுடன் கவலையுடனும்
கண்டு கொண்டமையோ அது?

விண்டுரைக்க முடியாத
மெய்மையின் சொற்கள் தாமோ
இந்த மவுனப் பிரமாண்டமும்
பேரியற்கையும்
இந்த மனிதனும்?

***** ***** *****

தாய்வீடு

பாதுகாப்பையே தேடுபவர்கள்
பாதுகாப்பை அடைவதேயில்லை.
பொருளையே தேடுபவர்கள்
அன்பை அடைவதேயில்லை.
இன்பத்தையே விழைபவர்கள்
நிறைவை அடைவதேயில்லை.
ராணுவத்திற்கும் கோரிக்கைகளுக்கும்
பெருஞ்செலவுபுரியும் உலகிலன்றோ
நாம் வாழ்கிறோம்.

நல்லாசனமிட்டபடி
கையில் சீப்புடன்
தன் மகள் சகுந்தலாவின்
தலை ஆய்ந்துகொண்டிருக்கிறாள்
அம்மா.
சிக்கலில்லாத கூந்தலில்
வெகு அமைதியுடன் இழைகிறது சீப்பு.

தாங்கொணாத
ஒரு துயர்க் கதைக்குப் பின்தான்
திடமான ஒரு முடிவுடன்
பேராற்றங்கரையின்
தருநிழல்மீதமர்ந்திருக்கும்
தாய்வீடு திரும்பிவிட்டிருக்கிறாள் சகுந்தலா.

***** ***** *****

தீராப் பெருந் துயர்களின்

முளை எட்டிப் பார்க்கும்
விஷ வித்துக்களையா
கண்டு கொண்டாள் ,சாந்தா,

வேகம் பொறி பரக்க
விளையாட்டுத் திடல் அதிர
ஒருவரை ஒருவர்
முந்தி வந்து கொண்டிருக்கும்
தத்தம் பிள்ளைகளை
அணி மனிதர்களை
ஊக்குவித்துக்கொண்டிருக்கும்
உற்சாக ஆரவாரத்திற்கு நடுவே?


“என் மனதைக் கவிதைகளில் மொழி பெயர்க்கிறேன்”
-கவிஞர் தேவதேவன்
சந்திப்பு: வே.சாவித்திரி

நன்றி: அம்பலம்
மனிதன் தன்னைத்தானே அழகு பார்த்துக் கொள்ளாமல் தன்னைத்தானே கம்பீரப்படுத்திக் கொள்ளாமல் நல்ல கம்பீரமான சமுதாயத்தை உருவாக்கிவிட முடியுமா? ‘தான்’ என்பது ஒவ்வொருவருக்கும் அவசியமானது. எனக்கு என்ன உரிமை இருக்கிறதோ அதே உரிமை உங்களுக்கும் உள்ளது. நானும் நீங்களும் போட்டி போடும்போது அது ஓர் உள்ளார்ந்த விஷயமாகிறது.

நார்சிசஸ்வனம் எனும் கவிதை நூலுக்கு இவ்வருட ‘சிற்பி இலக்கிய விருது பெற்றவர் கவிஞர் தேவதேவன். தூத்துக்குடி பள்ளி ஒன்றில் ஆசிரியர். பத்துக் கவிதை நூல்களுக்கு சொந்தக்காரர். இந்த நூற்றாண்டின் இணையற்ற சிறுகதைகள் வரிசையில் தொகுக்கப்பட்ட கதைத் தொகுப்பு நூலில் இவருடைய சிறுகதையும் உண்டு. இயற்கை அழகு சார்ந்த விஷயங்களை தத்துவார்த்த ரீதியில் நுட்பமாய் மொழி இழைகளைப் பின்னிப்பின்னி கவிமாலை தொடுத்து தமிழ் அன்னைக்கு சார்த்தும் அவருடன் ஒரு நேர்காணல்.

தங்களின் இளமைக் காலம் குறித்து கொஞ்சம் சொல்லுங்களேன்?

ரொம்பவும் வறுமையும் அறியாமையும் உள்ள குடும்பத்தில் பிறந்தேன். இயல்பிலேயே துக்கமுள்ள மனுசனாகவே வாழ்ந்து வந்திருக்கிறேன். இசை, நடனம், ஓவியம் ஆகியவற்றில் இளம் வயதிலிருந்தே நிறைய ஆர்வம். அதில் ஒன்றில் சிறந்தவனாக விளங்க பிறந்த சூழலும், வறுமையும் உதவவில்லை. ரொம்ப சின்னவயதில் படிக்கத் தெரியாத காலத்திலேயே அப்பா மூலமாக-நிறைய புத்தகங்கள் படிக்கப்பட்டு காது வழியே கிரஹித்து முடித்திருந்தேன். மனம் அப்போதிருந்தே ஏதோ உயர்ந்த ஒன்றை நாடி நாடி வர சிறந்த புத்தகங்களைத் தேர்ந்தெடுத்துப் படிக்க முடிந்தது. பனிரெண்டு வயதிலேயே நிறைய கவிதைகள் எழுதிப் பார்த்திருக்கிறேன். தனிமையும் துக்கமும் இருக்கிற காலத்தில் அதைச் சொல்ல ஒரு மீடியாவாகக் கவிதைகளைத் தேர்ந்தெடுத்தேன். காலப்போக்கில் அது கொஞ்சம் கொஞ்சமாக எனக்கானவையாக ஆயின.

‘துக்கம், துக்கம் என்கிறீர்களே அது எப்படிப்பட்டது? அது உங்களுக்கானதா? இச்சமுதாயத்திற்கானதா?

அது இனம்புரியாமல் ‘மிஸ்டிக்’ ஆகவே இருந்து வருகிறது. என் கவிதைகள் எல்லாம் அவற்றை சொல்வதற்கான முயற்சிகள். எந்த வகையில் அதைச் சொன்னாலும் அத்துக்கம் அதற்குள் அடங்காத விஷயமாகத்தான் உள்ளது. அதனால் இதுதான் இதற்குக் காரணம் என்று என்னாலேயே கற்பிதம் செய்ய முடிவதில்லை. என் கவிதைகள் எல்லாம் படித்து-வெவ்வேறு தளங்களில் என் துக்கத்தைக் கிரஹிக்கும் வாசகனால் அதைக் கண்டுபிடித்து விட முடியும்.

இசை, ஓவியம், நடனத்தில் ஆர்வம் வந்தது எப்படி?

தூத்துக்குடியில் ரொம்ப காலம் முன்பிருந்தே ‘ஃபைன் ஆர்ட்ஸ் க்ளப், ஃபோர்ட் ட்ரஸ்ட்’ போன்ற அமைப்புகள் ஒவ்வொரு ஆண்டு விழாவின்போதும் பெரிய அளவில் இசை நடன நிகழ்ச்சிகள் நடத்தும். அப்போது பார்வையாளனாக அமர்ந்து இசை, நடனம் கற்க வேண்டும் என்று மிகுந்த ஆர்வம் கொண்டு அதில் முழுமையாக ஈடுபட முயற்சி செய்தேன். முடியவில்லை. பிறகு பெயிண்டிங்ஸில் ரொம்ப ஈடுபாடு வர அதற்கும் சரியான சூழல் இடம் கொடுக்கவில்லை. பெயிண்டிங்கில் பெரிய பயிற்சி பெற்று வரைந்தாலும் வரைவதற்கு கேன்வாஸ் செய்வது, பணச்செலவு செய்து அதற்கான பொருட்கள் வாங்குவது என்பதெல்லாம் எனக்கு இயலாத காரியம். அதனாலேயே என்னுள் உள்ளூர ஊறும் விஷயத்தை கவிதையாக்கப் புறப்பட்டேன். ஒரு ‘ஒன் சைடு’ தாளில் கூட கவிதை எழுதி விட முடிந்தது பிடித்துப் போனது. ஆரம்ப காலத்தில் நான் தேர்ந்தெடுத்த கவிதைகள் எல்லாம் ‘பெயிண்டிங்’ செய்ய நினைத்த படங்களே!

உங்கள் கவிதைகளில் கலையோட்டமும், கதையோட்டமும், கூடவே அபரிமித பன்மொழிச் செறிவும் தெரிகிறது. அதற்குள் ஏதோ இனம் புரியா சமூகத் தன்மைகளை பொதித்து வைத்துள்ளதாகவும் ஒரு மாயத் தோற்றம். உங்கள் கவி வரிகளில் அப்படியென்ன உள்நோக்கு வைத்துள்ளீர்கள்?

என் வாழ்க்கை அனுபவமே கவிதைக்கு நிகரானது. என் நிமிஷங்கள் எல்லாம் கவித்துவமாக இருக்கிறது. லௌகீக அளவில் இது மிக ஆபத்தானது எனும் எண்ணம்தான் உடன் இருப்பவர்களுக்கு ஏற்படும். ஏற்படுகிறது. அதில் ரொம்பவும் உயிர்த்துடிப்போடு வாழ்கிற வாழ்க்கையும் இருக்கிறது. அதுதான் உண்மையான சந்தோஷம். அதை என் கவித்துவ வாசகர்கள் புரிந்தும் கொள்கிறார்கள். எந்தவிதமான உள்நோக்கமும் என் கவிதைகளுக்குள் இல்லையென்பதே என்னளவில் உண்மை. அதற்கு நிகராக அந்தக் கவிதைகளுக்கு நிகராக இன்னொரு பீடம் இல்லை என்பதே என் அபிப்ராயம். இங்கே நீங்கள் நீங்களாக இருப்பதை விட வேறென்ன பதவியை சுகமாய் அனுபவித்து விட முடியும்? அதைச் சொல்லுவதே என் கவிதைகள் எனலாம்.

‘நார்சிசஸ்வனம்’ உத்தியும் உருவாக்கமும் அமைந்தது எப்படி? அதைப்பற்றியதான விளக்கத்தைக் கொஞ்சம் எங்கள் வாசகர்களுக்குச் சொல்லுங்கள்?

உங்களுக்கே தெரியும் நார்சிசஸ் என்பது தன்னைத்தானே அழகு பார்த்து தான்தான் பெரிய அழகன் என்பதை நினைக்கும் அழகிய சொல் என்று. அது ஒரு மோசமான செயலாகத்தான் பல்வகை நிலைகளிலும் குறிக்கப்பட்டு வந்துள்ளது. கவிஞன் என்பவன் வாழ்க்கையை உணர்ந்தவன்தானா என ஒரு குரோதம் அங்கங்கே ஏற்பட்டும் உள்ளது. ஆனால் அதை வெளிப்படுத்துவதற்குத் தகுதியான ஒரு ‘மெட்டாஃபர்’ வாழ்க்கையிலோ, கதையிலோ, இதே கவிதையிலோ கிடைக்கிறபோது மிகவும் ஆச்சர்யமாக இருக்கும்.

நான் என் கவிதைகளில் தனிமனிதனுடைய அழகு-ஒரு மனிதன் தான் மனிதனாக இருப்பதுதான் ‘greatest beauty’-அதுதான் தனிமனிதத்துவம் என்கிறேன். அதைத் தாக்குவதற்கான கருவியாகத்தான் ‘இவர்களெல்லாம் நார்சிஸ்ட்’ என்கிற கருத்தைப் பிரயோகிக்கிறார்கள். என்னைப் பொறுத்த அளவில் இந்தக் கருத்துத் தவறானது. ஏனென்றால் தனிமனிதன் என்ற அளவில் நான் உயர்ந்திருக்கிறேன். ‘நார்சிசஸ்’ எனும் பிரயோகம் இங்கே தவறாகப் பயன்படுவதாக குறைபாடாகத் தெரிந்தது. இதனால் தனிமனிதன் என்பவன் சமூகத்திற்கு எதிரானவன் என்கிற ‘concept’ உருவாகியிருக்கும். இதுவும் தவறானது. தனக்குத் தானே அன்பும், பண்பும், மதிப்பும், மரியாதையும் உள்ளவன்தான் சமூகத்தில் சிறந்த மனிதனாகவும் இருப்பான்; மற்றவரையும் மதித்து நடப்பான். ‘man’ என்பது ஒரு உயர்ந்த ‘ஃபினாமினா.’ எல்லாவற்றுக்கும் அதில்தான் மருந்தும், மருத்துவமும் உள்ளது என்பது என் கருத்து.

அப்போதுதான் ‘நார்சிசஸ்வனம்’ க்ரீக் மித்தாலஜியில் ஒரு புத்தகம் படித்து வந்தபோது அதில் வந்த ‘நார்சிசஸ்’ பற்றின கதை எனக்குள் ஒரு தாக்கத்தை மூட்டியது. நான் நினைத்து சொல்ல வேண்டிய விஷயமெல்லாம் அக்கதை மூலமாகச் சொல்லலாம் எனத் தோன்றியது. அக்கதை இக்கவிதைக்கு ஒரு ‘இன்ட்ரபிரடேஷன்.’ அது வேறு; என் கவிதை வேறு!

அப்படியென்றால் கவிஞன் என்பவன் தன்னைத்தான் அழகு பார்த்துக் கொள்பவன் என்கிற கருத்தையே நீங்களும் வலியுறுத்தினது போல்தானே உள்ளது?

அப்படி இல்லை என்பதுதான் என் நார்சிசஸ். தான் என்பது மனிதன். மனிதன் தன்னைத்தானே அழகு பார்த்துக் கொள்ளாமல் தன்னைத்தானே கம்பீரப்படுத்திக் கொள்ளாமல் நல்ல கம்பீரமான சமுதாயத்தை உருவாக்கிவிட முடியுமா? ‘தான்’ என்பது ஒவ்வொருவருக்கும் அவசியமானது. எனக்கு என்ன உரிமை இருக்கிறதோ அதே உரிமை உங்களுக்கும் உள்ளது. நானும் நீங்களும் போட்டி போடும்போது அது ஓர் உள்ளார்ந்த விஷயமாகிறது. அப்போது உங்களுக்குள் இருப்பதும் நான்தான் என்றாகிறது. ‘நார்சிசஸ்’ என்பது புற அழகு சார்ந்த விஷயமாக ‘மித்’தில் இருக்கிறது. என் கவிதையில் அவனை அக அழகு சார்ந்த உயர்ந்த மனிதனாக முடிவான மனிதன் தன்னைத் தானே உணருகிற ஆளாக ஆக்கியுள்ளேன்.

சூழல் குறித்த நிறைந்த அக்கறையுடன் மரம், காற்று, நீர்நிலைகள், பறவைகள் என இயற்கை சார்ந்த விஷயங்களுக்கே தங்கள் கவித்துவம் முக்கியத்துவம் தருகிறதே. என்ன காரணம்?

நான் பிறந்ததிலிருந்தே இயற்கை எனக்கொரு புகலிடம் தந்து வந்துள்ளது. அது சார்ந்து மனவெறுமையையும், மனவளத்தையும் குறிக்கிறார்போல்தான் கவிதைகள் எழுதி வந்திருக்கிறேன். மனவெறுமை, மனவறுமை சொல்லக் கூடிய விஷயமாக இருப்பதனால் மனிதனுக்குள் மனவளத்தை இயற்கை சொல்கிற மாதிரியும், இயற்கை கெடுவதனால் மனவளமும் கெடுப்பது போலவும் சொல்வது என் இயல்பாக ஆகியுள்ளது. நான் எழுதினதில் ‘அகலி’ என்றொரு காவியம். அது ‘சுற்றுச் சூழல்’ பற்றின பிரமாதமான புத்தகம் என்கிறார்கள். நான் ஏதோ சூழல் குறித்து எழுத வேண்டும் என முடிவு செய்துகொண்டு எழுதினதாகவும் சொல்கிறார்கள். உண்மை அதுவல்ல. அதில் உள்ள விஷயம் எனக்குள் ‘எழுபதுகளிலேயே’ இருந்தவை. மனதில் குறிப்பாக எழுதினதையே பின்னாளில் விரிவாக எழுதினேன். எழுபதில் ‘ஓசோன்’ பிரச்னையே வரவில்லை. இயல்பிலேயே எனக்கு இது அமைந்துவிட்டது. எனக்கு இதில் பெருமையில்லை என்றாலும் கவலைப்படுவதில்லை. ‘ஒரு மரத்தைக் கூட காண முடியவில்லை’ என நான் எழுதுகிறேன் என்றால் ‘நிற்க நிழல் இல்லையே’ என்கிற என் ஏக்கத்தின் வெளிப்பாடு அது. அதனை வைத்தே நான் சூழலில் ஆர்வம் காட்டும் கவிஞன் என முத்திரை குத்த விளைவது பொருத்தமானதும் சரியானதும் அல்ல.

எல்லாம் சரி. எந்தக் கவிஞர்களின் கவிதைகள் உங்களை இப்படியொரு கவிஞராக உருவாக்கம் கொள்ளச் செய்தன? நீங்கள் வடிக்கும் கவி வரிகள் அடிக்கடி தாகூரையே நினைவுபடுத்துகின்றனவே?

உலகம் மெச்சுகிற கவிஞர்களின் கவிதைகளையெல்லாம் படித்தாக வேண்டும் என்கிற தாகம் எனக்கு ஆரம்பத்திலேயே இருந்தது. அப்படி என்னை ஈர்த்த கவிஞர்களில் முதலாவதாய் வருபவர் தாகூர். கூடவே ஜேம்ஸ் இல்லியட். ஆங்கிலத்தில் அகடாமிக்கல் அளவில் பிரபலமாகவுள்ள ‘எல்லோரும் படித்தே ஆக வேண்டும்’ எனச் சொல்லப்படுகிற கவிஞர்களின் கவிதைகளையெல்லாம் படித்த பிறகுதான் நானும் ஒரு கவிஞன்தான் என்கிற உறுதி எனக்குக் கிடைத்தது. ஆனால் அவர்களே என் கவிதைகளுக்கு ஆதர்ஷ புருஷர்களல்ல. தாகூர், அல்லது மேலை நாட்டுக் கவிஞர்களின் பாதிப்பு கூட என் கவிதைகளில் இல்லை. என் மொழி தனித்துவம் மிக்கது. தாகூரோ, பெரிய விட்மேனனோ, எலியட்டோ அவர்களுக்கு வேறோர் உலகம் உண்டு. அவர்களின் சொந்த உலகத்தின் மூலமாக அவர்கள் சொல்லுகிற சாராம்சம் என்னுடன் ஒத்துப்போகும். அதனாலேயே அவர்களைப் போன்ற ‘கவிஞன்’ நானும் என உணர்கிறேன். ஆரம்பத்திலும் சரி, இப்போதும் சரி என் கவிதைகள் மரங்களின் மூலமாகப் பேசுகின்றன. யாருமே இப்படிப் பார்த்தது கிடையாது. வாழ்க்கையை வாழ்ந்து என் மொழியையும், ஆழ்ந்த அனுபவத்தையும் பதிவு செய்கிறேன். அவர்களின் பாதிப்பு எனக்கிருந்தால் அவர்களின் மொழியைத்தானே கையாண்டிருக்க முடியும்? அப்படி ஒரு பாதிப்பினால் எழுதுபவர்கள் ‘டயர்டு’ ஆகி காணாமல் போய் விடுவர். இங்கே தாகூர் சொல்லாத பல விஷயங்களை நான் செய்திருக்கிறேன். அதையும் நீங்கள் கவனிக்க வேண்டும்.

ஏற்கனவே ஒரு ‘பெரும் தமிழ்க் கவிஞர்’ கொடுத்த பரிசைப் பெற்றுக் கொள்ளாத நீங்கள், இப்போது சிற்பி விருது மட்டும் மனமுவந்து பெறக் காரணம்?

சிற்பி அறக்கட்டளைக்கு ஒரு ‘சின்சியாரிட்டியும்’ ‘கோட்பாடும்’ உள்ளது. இதனை ஆரம்பம் முதலே உணர்ந்து வந்துள்ளேன். அப்துல் ரகுமானுக்குக் கொடுத்தார்கள். பிறகு பழமலய்க்குக் கொடுத்தார்கள். அவர்களின் கவிதைகளின் மேல் எனக்குத் தனிப்பட்ட அளவில் விமர்சனம் உண்டேயொழிய விருது கொடுத்தவர்களின் தேர்வுக் கூர்மையை நான் மதிக்கிறேன். இத்துடன் நான் முன்பே மறுதலித்த கவிப்பரிசை தயவுசெய்து இணைத்துப் பேசாதீர்கள். அதைப்பற்றிப் பேசவும் எனக்கு விருப்பமில்லை.

உங்களுக்கு கவிதைகளின் மூலம் எது நிறைவடைந்துள்ளது? நிறைவாகாதும் உள்ளது?

கவிதை என்பது உயிர்த்துடிப்புடன் வாழ்வதன் வெளிப்பாடு. அதில் நிறைவு, நிறைவில்லை என்பது பிரச்னையில்லை. இப்படித்தான் வாழமுடியும் என எடுத்துக்கொண்டால் அது நிறைவுதான். இப்படியில்லாமல் இருக்கவே இயலாது எனக் குறைப்பட்டு ஏக்கம் கொண்டால் வாழ்க்கையில் அது குறைதான்.

நன்றி: அம்பலம்


1. jeyamohan.in » Blog Archive » தேவதேவனின் வீடு:ஜெயமோகன் எழுதிய ‘ நவீனத்துவத்திற்கு பின் தமிழ் கவிதை: தேவதேவனை முன்வைத்து ‘ என்ற நூலில் இருந்து.

2. The Kavingar Devamagal literary awards – Tamil Poet Devadevan « Tamil News: “தேவமகள் இலக்கிய விருதுக்கு தேர்வான கவிஞர்கள் அறிவிப்பு”

3. என்றால் என்ன: பிடித்த கவிதைகள்:�


சிற்பி இலக்கிய விருது விழா…

நன்றி: அம்பலம்

“சிற்பி அறக்கட்டளை நாவலாசிரியனுக்குப் பரிசு கொடுத்துத்தான் வாழ வேண்டுமா? எத்தனை மாத நாவல்கள்? பத்திரிகைத் தொடர்கதைகள், நூலகங்கள், வார இதழ்கள் எல்லாம் அவர்களுக்கு பட்டுப்பாய் விரித்து வெண்சாமரம் வீசிக் கொழுக்க வைக்கின்றன!”

அவுட்டோர் ஷ§ட்டிங் ஸ்பாட்’ பொள்ளாச்சி, கடந்த வாரம் சனிக்கிழமை மாலை இலக்கிய நகரமாய் மாறியது. மகாத்மா காந்தி மண்டபம் நிறைய பரிச்சயமான-பரிச்சயமற்ற கலை இலக்கியத் தலைகள். கவிஞர் பழமலய்க்கும், கவிஞர் சி.மணிக்கும் கடந்த வருடங்களில் கொடுக்கப்பட்ட ‘சிற்பி’ இலக்கிய விருது இந்த ஆண்டு தேவதேவனின் ‘நார்சிசஸ்வனம்’ என்கிற கவிதைத் தொகுப்புக்கு அளிக்கப்பட்டது. ‘2000-ம் ஆண்டில் உலகு பொங்கும் கலைப்படைப்பு ஒன்று தமிழில் உருவாகும்’ என எடுத்த எடுப்பில் பேசிய சிற்பி, மேடையில் வீற்றிருந்த கவிஞர் பாலாவையும், மு.மேத்தாவையும், பதிப்புச் செம்மல் ச.மெய்யப்பனையும் கவிச் சொற்பொழிவில் அடக்கி நகர்ந்தார். விருது பெறும் கவிஞர் தேவதேவனைப் பற்றி அவர் கூறியது:

”எனக்கு தேவதேவனின் கவிதைகளைப் பற்றி நினைக்கிறபோதெல்லாம் நான் நித்தமும் தொழுகின்ற ராமானுஜரின் நினைவுதான் வருகின்றது. ‘ஆலயப் பிரவேசத்திற்காக’ மேல் கோட்டையிலிருந்து ஸ்ரீரங்கம் புறப்பட்டு வருகிறேன் என்று சொல்லியபோது துடித்துப் போயினராம் அப்பகுதி மக்கள். அதற்காக அவர் நினைவாக அங்கே ஒரு விக்ரகம் செய்து வைத்து விட்டு வந்தார். அதே போல் தாம் பிறந்த ஊரான ஸ்ரீபெரும்புதூரில் ஒரு விக்ரகம். ஸ்ரீரங்கத்தில் ஒரு விக்ரகம். அவை ஒவ்வொன்றும் ‘தமர் உகந்த திருமேனி, தாம் உகந்த திருமேனி, தான் ஆன திருமேனி’ என்று பாடப் பெற்றன. தேவ தேவனுடைய கவிதைகள் ‘தான் ஆன திருமேனியனாகவே’ வளர்ந்து கிளை பரப்பி எனக்குக் காட்சி கொள்கின்றன. இயற்கையொடு அவருக்கிருக்கிற நேசமும் பிணைப்பும் அதனூடேயே ‘தானாக’ மாற்றி விடுகிறது. இயற்கையைப் பாழடிக்கும் எந்த ஒரு விஷயத்தையும் நாற்சந்தியில் விட்டு நசுக்காமல் அவர் நகர்வதேயில்லை. ‘சிறகு முளைக்கும் முன் கொல்லப்பட்ட பட்டுப் பூச்சிகள் – மாதர் தம் பட்டாடைகள்’ என்று சிறு பூச்சிக்கும் கனிந்துருகும் தானே ஆகிற படைப்புக்களைப் படைக்கிற அவருக்கு விருது கொடுப்பது இந்த விருதுக்கே அரிய பெருமை”.

தலைமையுரையாற்ற வந்த மணிவாசகர் பதிப்பகம் ச.மெய்யப்பனோ தானே விருது பெற்றதுபோல் உணர்ச்சிப் பிழம்பானார். குழந்தை மழலை உதிர்ப்பதுபோல் அவரிடமிருந்து யதார்த்த கானம். ”தேவதேவன் மனைவி அவருடன் வந்திருக்கிறார். அது அவருக்கு அசாத்யப் பாராட்டு. எனக்கு மனைவி வரவில்லை. அதுதான் சொல்றது எதற்கும் ஒரு கொடுப்பினை வேணுமய்யா! ஐயா, கவிஞர் தேவதேவனே உப்பு விளையற பூமியிலிருந்து எழுந்து ஜீவசக்தி கொடுத்திருக்கிறீர்கள். புரிந்தும் புரியாமலும் உழலும் இருண்மை உலகில் பளிச்சென்று அடிக்கும் மின்னலய்யா உங்கள் கவிதைகள். ‘இருள்… இருள்…’ என்று கத்திக் கொண்டிருப்பதில் பலனில்லை. ஒரு மெழுகுவர்த்தி ஏற்றி வை என்றாரே ஒரு பெரியவர். அதைச் செய்தவர் நீர்தானய்யா!” விருதுக் கவிஞரை அறிமுகப்படுத்த வந்த கவிஞர் பாலா நம் தமிழ்ப் பண்பாடு, இந்தியக் கலாசாரம் முழுமையையும் தம் சொற்பொழிவில் ஏற்றிக் கொண்டார்.

”கல்லும் கல்லும் இருந்தால் அங்கே வெறும் கல்தான் இருக்கும். கூடவே மனம் இருந்தால்தான் நாதம் பிறக்கும். மரம், மரத்துடன் இருந்தால் மரங்கள்தானே இருக்கும்? நாதம் அதிலிருந்து கிடைக்கக் கூடவே மனம் வேண்டும். அப்படித்தான் கவிதை என்பதும். நல்ல கவிதைகள் நல்ல மனம் இருந்தாலே நாதமாக மாறும். அப்படிப்பட்ட கவிதைகள்தான் தேவதேவனின் கவிதைகள். மேற்கு நாட்டு கலை-ஓவியம் பார்தோமென்றால் அதில் ‘பிகாஸோ’ எனும் கையெழுத்து இருக்கும். அதே போல் அங்கெல்லாம் கட்டப்பட்ட புகழ்பெற்ற கட்டிடத்திற்கும், கலைச்சிற்பங்களுக்கெல்லாம் கீழே அதனை படைத்தவர்களின் பெயர்கள் எழுதப்பட்டிருக்கும். இது மேற்கத்தியக் கலை. ஆனால் இங்கே மாமல்லபுரத்துக்கும், தஞ்சைப் பெரிய கோவிலுக்கும், சித்தன்ன வாசல் ஓவியங்களுக்கும் கீழே எந்தப் படைப்பாளியின் கையெழுத்து இடப்பட்டிருக்கிறது? எதுவுமே இல்லை. இதுதான் தமிழ் மரபு. இந்தியக் கலை. இது நமக்கு பெருமையளிக்கும் விஷயமும் ஆகும். இது யார் செய்தது? யார் படைத்தது? என்று கேள்வி எழும் போதெல்லாம் ‘தமிழ் செய்தது’ ‘தமிழன் படைத்தது’ என இறுமாப்புக் கொள்வோம். இதுதான் மேற்கத்தியக் கலைகளுக்கும் இந்தியக் கலைகளுக்குமான வித்தியாசம். இது ‘நான்’ என்பதற்கும் ‘நாம்’ என்பதற்குமான யுத்தம். தமிழ்க் கவிதைகளை அடையாளம் பாட்டின ‘வானம்பாடி’ இப்போது தமிழ்க் கவிஞர்களையும் அழைத்து அறிமுகப்படுத்தி கௌரவப்படுத்துவதில் கவிஞர் படையே பெருமிதம் கொள்ள வேண்டும். இங்கே மனிதர்களெல்லாம் மிருகங்களாகி வருவதைக் காண்கிறோம். ஆனால் மனிதர்களெல்லாம் தேவ தேவர்களாக மாறுவதற்கு யோசித்து முயற்சித்துக் கொண்டிருக்கிறார் நம் விருதுக் கவிஞர்’. பாராட்டுப் பத்திரமும், பத்தாயிரம் ரூபாய் விருதும் கொடுக்கப்பட்டு எத்தனை புகழ்மாலை சூட்டினாலும், தன் யதார்த்த நிலையிலிருந்து துளியும் பிசகிச் சாயாது ஏற்புரை ஆற்றினார் கவிஞர் தேவதேவன்.

”இங்கே கவிஞர்களுக்கு மதிப்பே இருப்பதில்லை. நவீன தமிழ் இலக்கிய விழாக்களில் எங்களூர்ப் பக்கம் ஐம்பது பேர் வந்தாலே அதிகம். அதில் என் வாசகர்கள் ஏமாறக் கூடாது என்பதற்காக என் கவிதை நூல்கள் பத்திருபதை விற்பனைக்கு எடுத்துப் போவேன். அதில் ஒன்றிரண்டு விற்றாலே பெரிய ஆச்சர்யம். பிரபஞ்சம் எப்படி ஓர் ஒழுங்கியலில் இயங்குகிறதோ இச்சமூகம் அப்படி மிக ஒழுங்காக வேண்டும் என்பதே என் கவிதை லயம். அது சார்ந்த அழகியலே என் கவிதை. தவறான அழகியலை உடைப்பதும், சரியான அழகியலை உருவாக்குவதும் ஒரு கவிஞனின் வேலை. அதைச் செய்து கொண்டும் இருக்கிறேன்”. எண்ணி ஒரு மணி நேரத்தில் சகல கவிஞர்களும் தம் பேச்சை முடித்துக் கொள்ள கவிஞர் மு.மேத்தா மட்டும் கிடுக்கிப் பிடி போட்டு ஒரு ஒண்ணரை மணி நேரத்திற்கு தம் வாதத்தை அரங்கிற்குள் வைத்து சலசலப்பை ஏற்படுத்தி விட்டார். அப்படியென்ன வாதம் என்கிறீர்களா? வேறொன்றுமில்லை. சிறந்த நாவலுக்கு அடுத்த ஆண்டு முதல் ‘சிற்பி விருது’ வழங்கப்படும் என்று ஓர் அறிவிப்பை சிற்பி வெளியிட்டு விட்டார். மனிதருக்கு நாவல் மீது கோபமோ; நாவலாசிரியர் மீது கோபமோ (?!) எதுவுமேயில்லையாம். பிறகு?

”நானே ஒரு நாவலாசிரியன்தான். நாவலாசிரியர்கள் நிறையப் பேர் எனக்கு நண்பர்களும் கூட. ஆனால் சிற்பி அறக்கட்டளை நாவலாசிரியனுக்குப் பரிசு கொடுத்துத்தான் வாழ வேண்டுமா? எத்தனை மாத நாவல்கள்? பத்திரிகைத் தொடர்கதைகள், நூலகங்கள், வார இதழ்கள் எல்லாம் அவர்களுக்கு பட்டுப்பாய் விரித்து வெண்சாமரம் வீசிக் கொழுக்க வைக்கின்றன! போதாக் குறைக்கு சாகித்ய அகாதமி போன்ற பெரும் விருதுகள் கூட மிகப் பெரும்பாலும் கவிஞனைத் தீண்டத்தகாதவனாகவே நடத்திப் போகும் நிலையில் சிற்பி நாவலுக்குப் பரிசு தரலாமா? முறையா? அடுக்குமா? அப்படிப் பரிசு கொடுப்பதென்றால் இன்னொரு கவிதைத் தொகுப்புக்குக் கொடுங்கள். அல்லது இதே தேவனுக்குப் பரிசைக் கூட்டிக் கொடுத்து அவன் கம்பீரத்தை உயர்த்துங்கள். இல்லாவிட்டால் சிற்பி அவர்களே உறுதியாகச் சொல்லுகிறேன். நிச்சயமாகச் சொல்லுகிறேன். உங்கள் வீட்டின் முன் பெட்டி படுக்கையோடு வந்து உண்ணாவிரதம் இருப்பேன்.”

மனிதர் கடைசி வரை ‘மைக்’கைப் பிடித்த பிடி விடவில்லை. சிற்பி எழுந்து வந்து ‘நாவலுக்கு பரிசளிப்பு அறிவிப்பு வாபஸ் பெறுவதாக அறிவிக்கும் வரை மனிதர் அதுபற்றியே எக்கச் சக்கமாய்ப் பொரிந்து தள்ள இலக்கியக் கூட்டமே சலசலத்துப் போனது.

”மேத்தா சொல்வது நியாயம்தான். அதற்காக இப்படியா உடும்புப் பிடி பிடித்து மனிதர்களை சோதிப்பது?”

”மேடையிலேயே ஒரு பரிசை அறிவித்துவிட்டு, ஒரு தனி மனிதர் உரத்துக் கூச்சலிட்டார் என்பதற்காக அந்த அறிவிப்பையே வாபஸ் பெறுவது என்ன மரபு? என்ன கலாசாரம்? சிற்பி இப்படிச் செய்யலாமா?” – அப்போதே இப்படிப் பல குரல்கள் அங்கங்கே!
-சாவித்திரி.
நன்றி: அம்பலம்


ஒரு வண்ணத்துப் பூச்சியின் வாழ்க்கை
– தேவதேவன்-

அது தன் நாட்களை
ஒருபோதும் சோம்பலில் கழித்ததில்லை.
ஒரு நாளைக்கூட பொழுதுபோக்கு போன்ற
புலன் துய்த்தலில் செலவிட்டதில்லை.
பொருள், புகழ், அதிகாரங்கள் நோக்கிய
வேட்கை உந்தல்களை அது அறியாதது.

எப்போதாவது தன் துணையுடன்
அன்றி எபபோதும் தன் தம்மையையே
அது பாதுகாத்தபடி அலைந்தது.

அதன் உயிர்ப்பும் சிறகடிப்பும்
இயற்கையின் மர்மங்களனைத்தையும் உணர்ந்த வியப்பும்
அதை விளக்கவியலாத படபடப்புமேயாம்.

ஒரு நாள் என் தோட்டத்தின் ஈரத்தரையில்
உதிர்ந்த மலர்போல அது கிடந்தது.

நல்லடக்கம் செய்யும் சுற்றமோ,
மறைவுக்குக் கண்கலங்கும் உறவுகளோ,
சமூகமோ, தேசமோ இன்றி
அது அனாதையாய் மா¢த்திருந்தது.

நெஞ்சுருகும் பார்வையின் முத்தம்
ஒரு கவிதை
இவைதானோ அதன் மொத்த வாழ்க்கையின்
மர்மமான இலட்சியம் ?

இன்று அது நிறைவேறியதையோ,
எளிய உயிர்கள் நூறுகள் கூடி
ஊர்வலமாய் அதை எடுத்துச் செல்ல முயல்வதையோ,
கண்களில்லாத கால்கள்
அதை மிதித்தபடி செல்வதையோ,
ஒரு பெருக்குமாறு அதைக் குப்பபைகளோடு குப்பையாய்
ஒரு மூலைக்கு ஒதுக்கி விடுவதையோ
எதைப்பற்றியும் கவலையுமில்லாமல்
எல்லாவற்றையும் அதுவே ஒதுக்கிவிட்டதாய்
ஈரமான என் தோட்ட நிலத்தில்
செத்துக்கிடந்தது அது.

நன்றி : கனவு காலாண்டிதழ் (எண் 39/40) திருப்பூர்.


மௌனமாய் ஒரு சம்பவம்.

— தேவதேவன்.

கால்களை இடறிற்று ஒரு பறவை பிணம்.
சுற்றிச் சூழ்ந்த விஷப்புகையாய் வானம்.
கலவர முற்ற பறவைகளாய்
திசையெங்கும் குழம்பி அலையும் காற்று
பீதியூட்டுகிறது மரங்களின் அசைவு
மெல்ல நெருங்குகிறது
சலனமற்றிருந்த ஒரு பூதாகாரம்.

விரைத்து போய்
ஆழ ஆழ மூழ்குகிறேன் நான்
முழுக்க முழுக்க நீரால் நிறைந்த
என் தலைமறைவுப் பிரதேசத்திற்குள்.

என் உள்ளங்கை முத்தாய் ஒளிரும் இது என்ன?
வீணாகிப் போகாத என் இலட்சியமோ?
என் துயர்களை ஆற்றத்
தூதாய் வந்த வெறுங் கனவோ?

என்ன பொழுதிது?
மீண்டும் எட்டிப் பார்கிறேன்:
சலனம் கெட்டித்திருக்கும் இவ்வேளையுள்ளும்
காலம் திகட்டாது
கல்லுக்குள் தேரையான
என் உயிர் பாட்டின் வேதனை.
என் நோய் தீரும் வகை எதுவோ?

இரத்தக் கறைபடிந்த சரித்திரமோ நான்?
இயற்கை புறக்கணித்து வளர்ந்த
அதிமேதாவிக் கொழுந்தோ?
அன்பால் ஈர்க்கப்பட்டு
இன்று இம் மலைப்பிரதேசம் வந்து நிற்கிறேன்.

முடிவுறாத காலச் சங்கிலி
தன் கணத்த பெருமூச்சுடன்
கண்ணுக்கு புலனாகாமல் நிற்கிறதோ,
இப்பள்ளத்தாக்கின் மவுனத்திடம்
ஒரு தற்கொலையை வேண்டி?

எதோ ஒன்று
யாருக்கும் தெரியாமல்
மவுனமாய் நடந்து கொண்டிருக்கிறது.


” கல்லெறிபட்டும்
கலங்காது
தேனையே சொரிகிறது
தேன்கூடு”

– தேவதேவன்


கடப்பாரைப்பாம்பு
==============

சடாரென்று பதுங்க
செம்பருத்தி புதருக்குள் நுழையப்போவதுபோல
பார்வையை அறைந்தது
கடப்பாரையா பாம்பா

தன் அருகிலே கிடந்ததை எடுத்து
பாம்பை அடித்தவன்
அந்தக் கருவியை கும்பிட்டுக் கொண்டாடியே
தன் வாணாளாஇ கழிப்பானோ

கடப்பாரைதான் பாம்பாய் மாறி
புதருக்குள் ஒளிந்துகொள்ள விழைகிறதோ
புதருக்குள்ளிருந்து வெளிப்பட்ட பாம்புதான்
கடப்பாரையாய் மாறி தப்பிக்கிறதா
கள்ளச்சிரிப்புடன் ?

வீதி
==

விடிந்தும் விடியா பொழுதொன்றில்
தெரியாமல் ஓர் அக்ரஹார தெருவழியாய்
நுழைந்துவிட்டேன்

வெறுப்பும் பதற்றமும் பகைக்கோபமுமாய்
துயரமும் பதற்றமும் பாசாங்குகளுமாய்
கொதித்த முகங்கள் கண்டு துணுக்குற்றேன்
என் தவறுக்கு நொந்து உந்தி எடுத்தேன்

ஆனால் அதில் பயனில்லை
இன்று தவிர்க்க முடியாததாகிவிட்டது அவ்வீதி
மேலும் எல்லா வீதிகளிலும்
அதற்கிணையானதும் அது தொடர்பானதுமான
கொந்தளிப்பை உணர்ந்தேன்

தோணித்துடுப்போ
பெருமழையோ
கம்பீர நெடுங்கழி பெருக்குமாறோ
குனிந்து குனிந்து கறைகள் துடைக்கும்
துடைப்பானோ
தூரிகையோ
வாளோ
என்றெல்லாம்
சித்தரிக்க சித்தரிக்க
தீராத உன்னை
காதல்மிகு உறுதியுடன் கைப்பிடித்தேன்

தொனி
=====

இன்றாவது அந்த மனிதனைப்பற்றி
சிந்திக்க தொடங்கினோமே
அதற்காக நம்மைப் பாராட்டிக் கொள்வோம்

நலம் விசாரிக்கையில்
இருக்கம்-யா என்றொலித்த
அவன் குரலை வாசிக்க மதியற்ற நாம்
கவிதைகளின் தொனி குறித்து
விரிவாக ஆராய்ச்சிகள் செய்துகொண்டிருந்தோம்

நாற்காலியில் அமர்ந்தபடியோ
வாகனத்தை ஒருநிமிடம் நிறுத்தி
ஒரு கால் ஊன்றி நின்றபடியோ
அல்லது அவன் குழந்தையோ
நாளையைப்பற்றி
கேட்கப்படும்போதெல்லாம்
பிழைத்துக்கிடந்தால் பார்க்கலாம் என்றான் அவன்

அய்யா என்ற இறைஞ்சல் பாதாளத்தில் இருந்து
தோழர் என்ற பாதாளக்கரண்டியை பற்றியபடி
ஹலோ என்றவாறு அவனை சமீபிக்கையில்
மலர்முகமும் நீட்டிய கையும்
அற அத்ர்ச்சிக்குள்ளாகி பொசுங்கும்படி
அசிங்கமான ஓர் உஷார் நிலைக்கு வந்த அந்த மேலாள்
குரூரமாக அவனை கவிடுகையில்
அவன் என்ன ஆனான் ?
அவன் உயிராசைவேகமன்றோ
பக்கச்சுவரில் உடல் சிராய்க்க
தொற்றிக் கொண்டு தவிக்கிறது இன்று

சாதியம் நாறும் ஒரு த்தத்தின் மூலமா
‘எல்லாரும் அமரர் நிலை எய்தும் நன்முறையை ‘
இந்தியா உலகுக்கு அளிக்க போகிறது ?

எந்த தத்துவத்தில் இருந்து பெற்றது
இன்றைய அவனது வலிமையும்
இதய விரிவும் போராட்டமும் அறிவும்
அச்சத்தால் பீடிக்கப்பட்டு அருவருப்பான
அந்த மேலாளுக்கும் சேர்த்தே
விடுதலை வேண்டி நிற்கும் அந்தபேராளுமை ?

கருணையற்ற மனித உலகுக்கு
கருணையின் பாதையைக் காட்டும் பேரருள் ?

[2004 தமிழினி வெளியீடாக வந்துள்ள தேவதேவனின் ‘விடிந்தும் விடியா பொழுது ‘ என்ற நூலில் இருந்து ]

1 ] நான் அவன் மற்றும் ஒரு மலர்
=======================

புனலும் புயலும் பெருக்கெடுத்து வீசக்கூடும்
வெளியில்
சின்னஞ்சிறியதும்
தன்னந்தனியனுமான ஓரு சுடராய்
நான் நிற்கையில்
ஒரு சிறு துடுப்போடு
கடலை அழைத்து வந்துகொண்டிருந்தான் அவன்

மான் துள்ளி திரிந்த ஒரு புல்வெளியில்
ஊர்ந்தது ஒற்றையடிப்பாதையெனும் பாம்பு
ஆ என்று துடித்து விழுந்த மான்
புல்வெளியில் ஒரு வடுவாகியது

அங்கே
பூமியில் கால் பரவாது நடக்கும்
அந்த மனிதன் கையில்
ஒரு மலரைப் பார்த்தேன்
மண் விரல்களில் பூத்து
குருதியின் மணத்தை வீசிக் கொண்டிருந்தது அது .

2.மேகம் தவழும் வான்விழியே
=====================

மேகம் தவழும் வான்விழியே
உன் தனிப்பெரும் வியக்தியை
துக்கம் தீண்டியதெங்கனம் ?

எதற்காக இந்தப் பார்வை
வேறு எதற்காக இந்தச் சலனம் ?

அன்பான ஒரு வார்த்தைக்காகவா ?
ஆறுதலான ஒரு ஸ்பரிசத்திற்காகவா ?
மனம்குளிரும் ஒரு பாராட்டுக்காகவா ?

கவனி
உனக்கு கீழே
அவை
ஒரு நதியென ஓடிக்கொண்டிருக்கின்றன .

3. ஒளியின் முகம்
==========

நான் என் கைவிளக்கை
ஏற்றிக் கொண்டதன் காரணம்
என்னை சுற்றியுள்ளவற்றை
நான் கண்டுகொள்வதற்காகவே
என் முகத்தை உனக்குக் காட்டுவதற்காக அல்ல

அல்ல
நீ என் முகத்தை கண்டுகொள்வதற்காகவும்தான்
என்கிறது ஒளி

4. வரைபடங்கள்
==========
வான்வெளியில் பிரகாசிக்கும் ஒரு பொருளைக்காண
வரைபடம் எதற்கு ?
வானமோ
இரு மண்துகள்களுக்கும் இடையிலும் இருக்கிறது

5. அழைப்பு
======

கடைசி மத்தாப்பும் உதிர்ந்து
மரணம் என்னை சூழ
உதிராத மத்தாப்புகள் கோடி ஏந்தி
வானம் என்னை அழைக்கிறது

6. தூரிகை
======

வரைந்து முடித்தாயிற்றா ?

சரி
இனிதூரிகையை
நன்றாக கழுவிவிடு

அதன் மிருதுவான தூவிகளுக்கு
சேதம் விளையாதபடி
வெகு மென்மையாய்
வருடிக் கழுவிவிடு

கவனம்
கழுவப்படாத வர்ணங்கள்
தூரிகையை கெடுத்துவிடும்

சுத்தமாய் கழுவிய
உன் தூரிகையை
அதன் தீட்சண்யமான முனை
பூமியில் புரண்டு
பழுதுபட்டு விடாதபடி
எப்போதும் மேல் நோக்கிய
வெளியில் இருக்க
இப்படிப்போட்டுவை
ஒரு குவளையில்

7. அக்கரை இருள்
============

நதி என்னை அழைத்தபோது
நதி நோக்கி இறங்கிய படிக்கட்டுகளில்
நடை விரிப்பாய் விரிந்திருந்தது
பாறையின்மேலிருந்த
என் அறையின் விளக்கொளி

இருண்டிருந்த அக்கரையிலிருந்தும்
என் நெஞ்சைச் சுண்டும் ஒரு குரல் கேட்டேன்
முளைத்த துயரொன்றை
கைநீட்டிப் போக்கிற்று
இக்கரை நின்றிருந்த தோணி

என் பாத ஸ்பரிசம் கண்ட நதி
அக்கரைக்கும் ஓடி சேதி சொல்ல

நதியின் ஸ்பரிசத்தை ஆராதனையாய் ஏற்றவாறு
தோணியை அடைந்தேன்
நட்சத்திரங்கள் நிறைந்த நதியை
என் துடுப்பு கலக்கவும் திடுக்குற்றேன்

அதுசமயம்
நதிநோக்கி இறங்கிய படிக்கட்டுகளிலில்
நடைவிரிப்பாய் விரிந்திருந்த
என் அறையின் விளக்கொளி
கூப்பிடுவது கேட்டது .

8. சூரியமறைவு பிரதேசம்
=================

உனக்கு சந்தோஷம் தருவது எதுவோ
அதுவே உனக்கு சூரியன்
உதாரணமாக ஒரு சாப்பாட்டுப் பொட்டலம்
ஒரு பப்பாளிப்பழம்
ஒரு ந்ண்பனின் முகம்
ஒரு டம்ளர் தண்ணீர்
இன்னும்
காகிதத்தில் பொதியப்படாத கவிதைகள்
என சொல்லிக் கொண்டே போகலாம்

ஒரு சாப்பாட்டுப் பொட்டலம்
அப்போதைய நிறைவை உனக்கு அளிக்கவில்லை என்றால்
ஒரு பப்பாளிப்பழம்
அன்றைய பொழுதை இனிமையாக்கவில்லையென்றால்
ஒரு நண்பனின் முகம்
உன் முகத்துக்கு ஒளியேற்றவில்லை என்றால்
ஒரு டம்ளர்தண்ணீர்
உன் தாகம் தணிக்கவில்லை என்றால்
ஒரு கண்ணாடி முன்
நீ புன்னகை கொள்ளா இயலவில்லை என்றால்
காகிதத்தில் பொதிந்த கவிதைகளாய்
உனக்கு உன் வாழ்க்கை
காணப்படாவிட்டால்
உணர்ந்துகொள்
‘நீ இருக்குமிடம் சூரிய மறைவு பிரதேசம் ‘

9] தன்னதனி நிலா
==============
தன்னந்தனி நிலா
எல்லாவற்றிலும் எதிரொளிக்கிறது
அதன் அழகு

தன்னதனி நிலா
தன் அழகை தானே ரசிக்கிறது
நீர் நிலைகளில்

தன்னந்தனி நிலா
தன் தனிமை மறக்கிறது
நீர் நிறை கண்களில்

10. மலை
====

மலை உருகி பெருக்கெடுத்த நதி
மடியுமோ நிரந்தரமாய் ?

அவ்வளவு பெரிய கனலை
வெளிப்படுத்த வல்லதோ
ஒரு சிறு சொல் ?

1] பக்த கோடிகள்
———————

பக்த கோடிகள் புடைசூழ
கால்மேல் கால்போட்டு
கடவுள் நான் என்று
டிக் டிக்கிறது
முக்காலிமேல் ஒரு கடிகாரம்

பக்தகோடிகளுக்கு
ஓவர் டைமும் உபரிவருமானமும்
உயர்குடி வாழ்வும்
அருளுகிறார் கடவுள்

கடவுள் மரிப்பதில்லை
ரிப்பேர்தான் ஆவதுண்டு என்கிறது வேதம்
கடவுள் பழுதானால்
காலநோய்கள் பெருத்துவிடுமாகையால்
கடவுள் பழுது நீங்க
நிரந்தர மடங்களும் ம்டாதிபதிகளும்
அவ்வபோது தோன்றும் மகான்களும்
காலநோய் தீர்க்க கல்விமான்களும்
சதா கடவுள் நாமம் மறவாது பாடிக்கொண்டிருக்க
பக்த கோடி மகாஜனங்களும் உண்டே

இந்தக் கூட்டத்தில் போய்
கவிஞனை தேடுவதென்ன மடமை
அதோபார் உழைத்து ஓடாகி
மரணம் பார்த்து நின்றுகொண்டிருக்கும்
ஒரு மாட்டின்மேல்
மெளன அஞ்சலி செய்துகொண்டிருக்கிறது
ஒரு காகம்
நித்யத்துவத்தை நோக்கி அதன் முகம்

2]கடவுளே
————-

ஒரு புதுக்காற்று ஒன்று
அறைக்குள் சுழன்றடித்திருக்கிறது

ஊதுபத்தி பூமாலைகள் திகைக்க
தன் முதுகின் வெட்டவெளியை காட்டியபடி
திரும்பியிருக்கிறார் காலண்டர் தாளிலுள்ள கடவுள்

கோபமா
சுய மறுப்பா ?
காட்டும் புதிய தரிசனமா ?

வரண்டு இருண்டு விறைத்த முகம் ஒன்று
வந்தது நான்கு ஆணிகள்
மற்றும் சுற்றியலுடன்

3] ஒரு பரிசோதனையும் கவலையும்
———————————————-

கவனத்தை ஈர்க்கும் ஒரே நோக்குடன்
குறுக்கும் மறுக்குமாய் அலைந்துகொண்டிருந்தனர்
தேவதைகள்

பூமியை பரிசோதிக்க மனம்கொண்ட கடவுள்
ஒரு மழையை பெய்துவிட்டு
பின்னாலேயே தேவதைகளை அனுப்பிவைத்தார்

தட்டான்களின் வாலில் கல்லைக்கட்டியும்
நீண்ட நூல்களை கட்டியும் கல்சுமக்க வைத்தும்
சிறகுகளை துண்டித்து பறக்கவிட்டும்
இரண்டு தட்டான்களை ஒரு நூலால் இணைத்தும்
அவை திண்டாடுவதை ரசித்துக் கொண்டிருந்தனர்
மனிதக்குழந்தைகள்

கடவுளும் தேவதைகளின் தலைவனும்
ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்
ஆழ்ந்தகவலையுடன்

3] உருமாற்றம்
————-

அந்த அறையில் மூவர் குடியிருந்தனர்

காட்சி -1

சாந்தியும் சந்துஷ்டியும் காட்டும் புன்னகையுடன்
தியானத்தில் அமர்ந்திருந்தார் புத்தர்
முழுநிர்வாணத்தை நோக்கி
அரை நிர்வாணத்துடன்
ராட்டை சுற்றிக் கொண்டிருந்தார் காந்தி
ரத்தம் சொட்ட தன்னைத்தானே
சிலுவையில் அறைந்து கொண்டிருந்தான்
மரிக்கவும் உயிர்த்தெழவும் அறிந்த மேதை

வெளியே இருந்து ஓர் ஓலக்குரல்
உள்ளே புகுந்தது
அரைக்கணம் தாமதித்திருக்குமா ?
புகுந்த வேகத்தில் வெளியே ஓடிற்று
ஆனால் அந்த அரைக்கணத்தில்
அக்குரல் உருமாறியிருந்தது
சாந்தியும் துக்கமும் நிறைந்த ஒரு குரலாய்

காட்சி 2

நான் உள்ளே புகுந்தபோது
ஒரு காபி கிடையாதா என்றார் புத்தர்
தனது இதயத்தை ஒரு யாசகக் குவளையாய்
குலுக்கினார் யேசு
பட்டினிக்குழந்தைகளுடன்
கைவிடப்பட்ட பெண்ணின்
சீரழிந்த புன்னகையைப்போல
ஒரு புன்னகையை வீசிவிட்டு
ராட்டை சுற்றினார் காந்தி

அதீத துக்கத்தால் என் இதயம் வலித்து எழுந்த குரல்
வேகமாய் குதித்தது ஜன்னல் வழியே வெளியே
வெளியே குதித்த குரல் வீதியெல்லாம் அலைந்து
நாற்றமடிக்கும் ஓர் அவலக்குரலாய் மாறியது

4] இந்தத் தொழில்
————————–

கபடமற்றதோர் அன்புடனும்
அற்புதமானதோர் உடன்படிக்கையோடும்
கடவுளும் சாத்தானும்
கைகுலுக்கிக்கொண்டு நிற்பதைக் கண்டேன்.
கடவுள் முதல்போட
சாத்தான் தொழில் செய்ய
கடவுள் கல்லாவில் இருக்க
சாத்தான் வினியோகத்திலிருக்க
அற்புதம் ஒன்றுகண்டேன்
கவிதை எழுதிக் கொண்டிருக்கையில்

அங்கே
என் சிந்தனை ஒன்றைக் கொடுத்து
படிமம் ஒன்று வாங்கிக் கொண்டிருந்தேனா ?
அல்லது
படிமம் ஒன்றைக் கொடுத்து
சிந்தனை ஒன்றை வாங்கிக் கொண்டிருந்தேனா ?

சேச்சே என்ன கேள்விகள் இவை ?
கடவுளும் சாத்தானும் கைகோத்த கோலத்தை
கண்டதற்கு சாட்சியாய் பாடும் என் இதயம்
அக்கறை கொள்ளாது இந்த தொழில்மீது.

5 ] மாண்புமிகு கடவுளைப்பற்றிய ஒரு கட்டுக்கதை
—————————————————————

கடவுளையும் அனுமதிககதபடி
அந்த அறையை சுதந்தரித்திருந்தார்கள் அவனும் அவளும்
ஆனால் செளகரியமான ஒரு சூக்கும உருவுடன்
கடவுள் இருந்தார் அங்கே ஒரு படைப்பாளியின் ஆசையுடன்

ஒரு பெரும் கச்சடாவாக இருந்தது அவர்கள் பாஷை
அவருக்கு அது புரியவில்லை முழித்தார்
என்றாலும் மேதமை மிக்கவரானதனால்
அந்த நாடகத்தின் சாராம்சத்தை அவர் புரிந்துகொண்டார்

அவர்கள் ஆடைகளை களைந்தபோதுதான்
அவர் கண்களில் ஒளிர்ந்தது ஒரு தெளிவு
ஆனால் அவர்கள் விழிகளில் நின்றெரிந்தது
ஓயாத ஒரு புதிர்
அப்புறம் அவர்களைதழுவியது ஒரு வியப்பு
தத்தம் விழிகள் விரல்கள் இதழ்கள் மற்றும் சதையின்
ஒவ்வொரு மயிர்க்கால்களைக் கொண்டும்
துதியும் வியப்பும் பாராட்டும் சீராட்டும் பெற்றது
கடவுளின் படைப்பு

சந்தோஷமும் வெட்கமும் கிள்ள
முகம் திருப்பிக் கொண்டார் படைப்பாளி
அளவற்ற உற்சாகத்துடன் அங்கிருந்து கிளம்பி
தன் பட்டறைக்குள் நுழைந்தவர் திடுக்கிட்டார்
அங்கே அவரில்லாமலே
தானே இயங்கிக் கொண்டிருந்தது படைப்புத்தொழில்

அன்றுமுதல் கடவுளைக் காணோம்

இதுவே
புதிரான முறையில்
இப்பூமியை விட்டே காணாமல் போன
கடவுளைப் பற்றிய கதை

6 ] விதிகள்
——————-

மகளை ஒரு முழு உருவப் புகைப்படமாக மாற்றி
பைக்குள் வைத்துக் கொண்டு மாப்பிள்ளைதேடும் தந்தை
பழையபடி அப்புகைப்படத்தை
ஒரு பெண்ணாக மாற்றவல்ல மந்திரவாதி ஆவார்.

உற்றத்திலும் சுற்றத்திலும்
ஒரு இதயத்தைக்கூட சந்தித்தறியாத ரசிகன்
அவன் தன் கலைஞனைக் கண்டவுடன்
உயிர்பெருகி சாவான்

வண்ண விகாரங்களும் கர்ண கொடூரங்களூமான
வாழ்க்கையை
வெற்று திரைச்சீலையையும் ஒற்றை வண்ணமும் கொண்டு
எதிர்கொள்ளும் கலைஞன்
உதிரச்சாயம் உள்ளவரையே அவன் வாழ்க்கை

எளியவன் நான் நன்றாகவே அறிவேன்
வரிசையாக நிறுத்தி வைத்தான் நானே கடைசி மனிதன்
முதல்வனை கடவுளை அல்லது மகாத்மாவை
நான் நனறாகவே அறிவேன்
அவரை அடுத்துநிற்கும் பேற்றை நான் பெற்றுள்ளதால்!
எவ்வாறெனில்
பூமி ஒரு கோளம் அதில்
ஒவ்வொரு உண்மையும் ஒரு வட்டம்

இடத்தை அடைக்கும் பொருட்கள் மேலெல்லாம்
தூசியாய் படியும் பரம்பொருள் அது !
அதுமட்டுமென்ன
விதிகளுக்குள் அடங்காது
எல்லாவற்றுக்கும் விதிகளை இயற்றிக் கொண்டிருக்கிறது .

7 ] வெற்றுக்குவளை
—————————

வெற்றுக்குவளையை தந்து சென்றவன்
வந்து பரிமாறுவதற்குள்
என் ஆசைகளால் நிறைத்து விட்டேன் அதனை.
துக்கத்தால் நிறைந்துவிட்டது வாழ்க்கை
காணுமிடமெங்கும் மெளனமாய் நிறைந்திருந்தது
என் குவளையில் பரிமாறப்படாத பொருள்.
என் ஆசைகள் பருகி முடிக்கப்பட்டு
காலியாகி நின்ற குவளையில் பரிமாறப்பட்டு
ததும்பியது அது.
வெற்றுக்குவளையை தந்து சென்றவன்
வந்து பரிமாறியது அது
இப்போது நான் பருகிக் கொண்டிருப்பது .
பருகி முடித்ததும்
மீண்டும் பரிமாற வந்தவன் முகத்தில்
என் முகத்தில் தன் மரணத்தை
கண்டதன் கலக்கம்

***

8 ] பலி
—-

யார் உண்டாக்கிக் கொண்டிருப்பது
நூறு நூறு மின்னல்களால் அறியப்படும்
இவ்வாளின் சுழற்சியை ?
எவருடைய சிந்தனைகள் இவை ?
அன்றைய காலை சூரியனின்
முகத்தில் ஓர் ஏளனப்புன்னகை

9]இறையியல்
—————–

‘ஆண்டவர் முதலில் ஆதாமையும்
அப்புறம் அவனுக்கு துணையாக ஏவாளையும்.. ‘
என்பது ஓர் ஆணாதிக்கப்பொய்
ஆண்கடவுள் ஆதாமையும்
பெண்கடவுள் ஏவாளையும் படைத்தனர்

தத்தமது ஏகாந்தநிலை சலிப்புற்று
ஆதாமும் ஏவாளும் காதலிக்கத் தொடங்கிய
மண்ணின் அழகுகண்டு உண்டான தாபம் உந்த
ஆண்கடவுளும் பெண்கடவுளும் காதலிக்கத்தொடங்கினர்

கடவுளர்கள் ஒரு குழந்தையை கருவுறுவதற்கு முன்
ஓராயிரம் கோடி மக்களை பெற்றிவிட்டனர் ஆதி தம்பதியினர்

துன்பச் சூழலில் இருந்து விடுபட ஆதாமும் ஏவாளும்
தத்தமது கடவுளை நோக்கி திரும்பியபோது
ஆட்சிபீடத்தை சாத்தானுக்கு விட்டுவிட்ட
கடவுள் தம்பதியினர்
கலவியிலிருந்தே இன்னும் விடுபடவில்லை

மீட்சிக்கு இனி எங்கேபோவது ?ஆதாமும் ஏவாளும்
தங்கள் காதலுக்கு முன்னாலுள்ள ஏகாந்த
வானிலிருக்க கூடும் தங்கள் கடவுளர்களின்
சொற்களை தேடிக் கொண்டிருந்தனர்.

வானத்திலிருந்து சொற்கள்
பறவைகளை ஏந்திக் கொண்டதை கண்டனர்
மேகங்களை உருவாக்கி
மழையை பொழிந்ததைக் கண்டனர்
உயிர்காக்கும் உணவாகி தங்கள் இரத்தத்தில்
காலங்காலமாய் துடித்துக் கொண்டிருப்பதையும்
இன்னும்…. அவர்கள் முடிவற்றுப் பார்த்துக் கொண்டிருந்தனர்
வானத்துச் சொற்களின் முடிவற்ற வேலைகளை

10] பட்டறை
————-

என்னை அழைத்துவந்து
என் பெயரை ஏன் கேட்கிறாய் ?
என்னை நீ அழைப்பதற்கு
என் பெயர் உனக்கு தேவைப்படவில்லையே ?
எனக்கு நீ இட்ட பணி
எதுவென நான் அறிவேன்
எனக்குள் வலிக்கிறது
எதனாலென நான் அறியேன்
நெருப்பில் பழுத்த
இரும்புத்துண்டம்போல
என் நெஞ்சே எனக்குத்
துயர் தரும் சேதிகேட்டு
தோள்குலுக்கி ஊர் சிரிக்க
ஒப்புகிறதா உன் உள்ளம் ?
எந்த ஒரு பூவும் மலரவில்லை
இப்போதெல்லாம் என் வதனத்திலிருந்து
மந்திரக்கனி எதுவும் தோன்றவில்லை
ஓர் உள்ளங்கைக்கு நான் பரிமாற .
உன் பிரசன்னம் என்னை சுட்டுருக்குகிறது
உன் சம்மட்டி அடி என் தலைமீது.
அம்ருதக்கடலில் இருந்து
அலை ஓசை கேட்கிறது .
அக்கினிக்கடலில் இருந்து
அலறும் குரல்களும் கேட்கின்றன.
உன் கம்பீரப்பதில் குரலாய்
என் தலைமீது ஒலிக்கிறது
உன் சம்மட்டி அறை ஓசை.
காலிக்குடமாகவா
தங்கத்தோணியாகவா
ஓர் கூர்வாளாகவா
என்னவாக்கிக் கொண்டிருக்கிறாய்
என்னை நீ ?
ஒன்றும் புரியவில்லை.
உணர்வதெல்லாம்
குறைகூற முடியாத
ஓர் வேதனையை மட்டுமே.

1 ] பனைகள்

பனைகளின் தலைகளெங்கும்

பறவைகளின் சிறகுகள்

பச்சைப்பனைகளின் நடுவே

ஒரு மொட்டைப் பனை

மொட்டைப்பனை உச்சியிலே

ஓர் பச்சைக்கிளி

அடங்கிவிட்டது

‘மரணத்தை வெல்வோம் ‘ என்ற கூச்சல்

மரணமும் வாழ்வாகவே விரும்புகிறது

இனி இங்கே நான்

செய்யவேண்டியதுதான் என்ன ?

‘நானே தடைகல் ‘ஆகும்வழியறிந்து

வழிவிடுவதை தவிர ?

பனைகளின் தலைகளெங்கும்

படபடக்கும் சிறகுகள்

பாவம் அவை பூமியில்

மரணத்தால் நங்கூரமிடப்பட்டுள்ளன.

2] ஒரு மரத்தைக்கூட காண முடியவில்லை

ஒரு மரத்தடி நிழல் போதும்

உன்னை தைரியமாய் நிற்கவைத்துவிட்டுப் போவேன்

வெட்டவெளியில் நீ நின்றால்

என் மனம் தாங்க மாட்டேன் என்கிறது

மேலும்

மரத்தடியில் நிற்கையில்தான்

நீ அழகாயிருக்கிறாய்

கர்ப்பிணிபெண்ணை

அவள் தாயிடம் சேர்ப்பதுபோல

உன்னை ஒரு மர நிழலில் விட்டுப்போக விழைகிறேன்

மரங்களின் தாய்மை

முலை முலையாய் கனிகள் கொடுக்கும்

கிளைகளின் காற்று

வாத்சல்யத்துடன் உன் தலையை கோதும்

மரம் உனக்கு பறவைகளை அறிமுகப்படுத்தும்

பறவைகள் உனக்கு வானத்தையும் தீவுகளையும்

வானமோ அனைத்தையும் அறிமுகப்படுத்திவிடுமே

ஒரு மரத்தடி நிழல் தேவை

உன்னை தைரியமாய் நிற்க வைத்து விட்டுப்

போவேன்

3] பறவைகள் காய்த்த மரம்

ஓய்வும் அழகும் ஆனந்தமும் தேடி

மேற்கு நோக்கி நடந்த எனது மாலை உலாவினால்

சூர்யனை அஸ்தமிக்கவிடாமல் காக்க முடிந்ததா ?

தோல்வி தந்த சோர்வுடன்

ஓய்வு அறை நோக்கி திரும்பிக் கொண்டிருந்தேன்

ஒரு காலத்தில் பூக்களாய் நிறைந்திருந்த மரம்

இன்னொருகாலத்தில் கனிகள் செறிந்திருந்த மரம்

அன்று பறவைகளாய் காய்த்து

இருட்டில் செய்வதறியாது கத்திக் கொண்டிருந்தது

ஒரு நண்பனைப் போல

சூரியன் என்னை தொட்டு எழுப்பிய காலை

வானமெங்கும் பறவைகள் ஆனந்தமாய் பரவ

மெய்சிலிர்த்து நின்றது அந்த மரம்

4] தனிமரம்

ஒரு யாத்ரீக வீரன்

சற்றே இளைப்பறும் இடம்

அவனது தர்சனம்

அதைச்சுற்றிவிரிந்திருக்கிறது

ஓய்வுகொள்ள முடியா பாலை ஒன்றின்

கால் பொசுக்கும் மணல்

தன் இனத்தைவிட்டு

தூரவிலகி நிற்கிறது அது

தன்னியல்பின்

தடையற்ற வளர்ச்சிக்காக

காற்றும் மழையும் ஒளியும் பறவைகளும்

புழுபூச்சிகளும் உள்ளவரை

தனிமை அதற்கில்லை

அது ஏழையல்ல

அது தனக்குள் வைத்திருக்கிறது

ஒரு சோலைவனக்காட்டை

அதுவே தருகிறது

வற்றாத நீர்பெருக்கை

அது நிற்குமிடம்

இல்லை அது இளைப்பறும் இடம்

தனதே தனதான நிழல்

அதன் தர்சனம்

5] பனை

விடு விடென்று கறுத்து உயர வளர்ந்தவள் நீ

எதைக்கண்டு இப்படி சிலிர்த்து கனிந்து நிற்கிறாய் ?

அனைத்தையும் ஊருருவிய பின்னே

ஊடுருவ முடியாத ஒன்றைக் கண்டவுடன்

அதை சிரமேற்கொண்டு கனிந்தனையோ ?

ஒற்றைகாலில் நின்றபடி

உன் தவத்தின் வைரத்தை

என் பார்வையில் அறைந்தபடி நிற்கிறது ஏன் ?

அன்று உன்னால் சமைந்த என் குடிசையுள்

வீற்றிருந்தது அது

பின்பு

இரும்பாலும் சிமென்டாலும் ஆன இல்லத்திலிருந்து

வெளியேறியது அது

கோடரியாலும் வாளாலும் உன்னை வீழ்த்துவோர் முன்

எதிர்ப்பேதும் காட்டாது விழுந்து

நீ நின்ற இடத்தில் அழிக்க முடியாததாய்

நின்றிருந்தது அது .

6] நச்சுமரக்காடு

ஒரு மரம்

அதன் ஆணிவேர் நான்

அதன் பக்கவேர்கள்

என் மதம் என் ஜாதி என் இனம்

என் நாடு என் கொள்கை என் மரபு

இன்னும் நூறு நூறு சிம்புவேர்களை

நான் சொல்ல வேண்டுமா ?

அச்சம்தரும் வலிமையுடன்

அடிமரம்.

ஆயிரமாயிரமாண்டு எனினும்

மனித குலம் அளவுக்கு இளமை

அதன் இருப்பிற்கும் எதிர்காலத்துக்குமான

உத்த்ரவாதப் பசுமை தழைக்கும்

அதன் கிளைகள்

எந்த புகைப்படத்திலும்

எந்த வரைபடத்திலும்

அடங்க ஆயாசம் கொள்ளும் பின்னல்

எங்கும் காய்த்து குலுங்குகின்றன

தோட்டாக்கள் வெடிகுண்டுகள் அணுஆயுதங்கள்

7] பூக்கும் மரங்களின் ரகசியம்

நீரை நாடும் தேடலே

வேர்கள்

சூழலை எதிர்கொள்ளும் மெளனமே

அடிமரம்

ஒளியை நாடும் விழைவே

கிளைகள்

உதிரும் இலைகளின் பிரிவே

மரணம்

பிறப்பின் புதுமை பசுமையே

தளிர்கள்

அறிந்தேன்: பூக்கும் மரங்களின்

ரகசியம்.

8] புயலில்

புயலில் சரிந்த ஒரு மரத்தை
நிமிர்த்தி நிற்க வைத்துவிட்டேன்
ஒரு நூறு குழந்தைக் கைகளின் உதவியுடன்.
நான் சொன்னேன் குழந்தைகளிடம்
‘ ‘இவ்வாறே நாம் இந்த உலகை காப்பாற்றப்போகிறோம் ‘
எல்லாம் வெகு சுலபம்
புயலில்
தன் வாழ்வுக்காய் அன்றி
தன் உயிருக்க்கு மேலாய் நேசித்த ஒன்றை
வெகு தீவிரத்துடன் சொல்ல முயன்றுகொண்டிருந்தது மரம்
சொல்ல முடியாத வேதனையே அதன் சலனம் .
மாசு இல்லா பாதம் போன்ற வேர்கள் தெரிய
வீழ்ந்து கிடந்தது மரம்
தான் நேசித்ததும் சொல்ல விரும்பியதுமான
ஓரு பேருண்மை முன்
வீழ்ந்து வணங்கியபடி அமைதியாகிவிட்டதா அது ?
பரபரப்பான சாலை ஒன்றின் குறுகே விழுந்து
அது குறிப்பால் உணர்த்தும் பொருள் என்ன ?
சுறுசுறுப்பு மிக்க நம் மக்கள் ஆகா
சற்றும் தாமதிக்காமல் இரவோடு இரவாக
இடைஞ்சலில்லாத போக்குவரத்தை ஏற்படுத்திவிட்டார்கள்
அகோரமாய் கைகால்கள் வெட்டப்பட்டு
சாலையோரமாய் இழுத்து இழுத்துவீசப்பட்டிருந்தது.
அணைக்கட்டுகளை உடைத்து மதகுகளை உடைத்து
கரைகளை உடைத்து
படைப்பின் ஆற்றையும் விழுங்கிவிட்டது
பேராசையின் வெள்ளம்
இயந்திர உலகின் நுரையீரல்களில் இருந்து கிளம்பியது புயல்
விருட்சங்களும் ஒளிக்கம்பங்களும் சரிந்து விழுந்து
இருண்ட ராத்திரி .
முழு மரத்திலிருந்து
முறிந்து விழுந்த கிளையினைப்போல
நானும் என் குழந்தையும்

9] இலையசைவு

விருப்பமோ தீர்மானமோ இன்றி
இலையில் தங்கியிருந்த நீர்
சொட்டு சொட்டாக விழுந்துகொண்டிருந்தது
ஆனால் முடிந்தவுடன் ஒரு விடுதலை
‘அப்பாடா ‘ என மேலெழுந்தது இலை
அது தன்னில் ஒரு புன்னகை ஒளிரத்
தேவையான ஈரத்தை மட்டும் வைத்துக் கொண்டு
ஆமோதிப்போ மறுதலிப்போ அல்லாத
ஒரு தலையசைப்பை மட்டும் செய்வதாய்
அசைந்து கொண்டிருந்தது இங்கும் அங்குமாக
ஒரு நீண்டகிளையின் சிறு உறுப்பு
தான் என ஒரு கணமும்
முழுமுதல் என மறு கணமும்
இங்கும் அங்குமாய் அல்லாது
வேறெங்கும் செல்லாத ஒரு பயணியாய்
என்றும் இருக்கிறதை மட்டும் அறிந்திருந்தது அது .


1. வீடும் வீடும்

========

பாதுகாப்பற்ற ஒரு மலரின் கதகதப்பிற்குள்
பாதுகாப்புடன் இருக்கிறேன்

என்னை ஆசுவாசப்படுத்த முயலும் இந்த வீடு
ஒருகாலத்தில்
என்னை ஓய்வு கொள்ள விடாது
வாட்டி எடுத்த ஓட்டைக் குடிசையிலும்
குளிருக்குப் பற்றாத
அம்மாவின் நைந்தநூல்சேலையிலும்
உருக் கொண்டது

எப்போதும் நம் லட்சியமாக இருக்கும்
இவ்வுலகம் பற்றிய கனவு
நம்மில் ஒருக்காலும் இதுபோல
கருக்கொண்டதில்லை என்பதை நான் அறிவேன்

மலரோடு தன் வேலை முடிந்ததும்
விலகி வெளி உலாவும் கருவண்டைப்போல
நாம் ஒருக்காலும்
இருந்ததில்லை என்பதையும் .

******

2. வீடுகள்
=======

வீதிவலைக் கண்ணிகளோ
இந்த வீடுகள் ?

கல்முகங்கள் சில வீடுகளுக்கு
சினேகத்தை பின் ஒதுக்கி
நாய்க்குரலில் வரவேற்கின்றன அவை
வீதியில் நடந்து செல்லும் மனிதனை
சந்தேகத்தோடும் அச்சத்தோடும்
நோக்குபவை

வீதியில் நடந்து செல்லும்
ஒவ்வொரு முகத்திலும் தன் அன்பனைத் தேடும்
எளிய வீடுகளும் உண்டு

யாத்ரீகனோ தன் வீட்டை
எப்போதும் தன் தோள்மேலே வைத்திருக்கிறான்

மலயுச்சி மீதிருக்கையிலோ
பறவைப்பார்வையில் பிடிக்கப்பட்ட
புகைப்படமொன்றிலோ
இந்த வீடுகள் எல்லாம் கல்லறைகளாய்த்
தோன்றுகின்றன

சிலவேளை எதை நோக்கியும் பயணம் செய்யாததும்
தம் குறிக்கோளை அடைந்ததுமான
சாஸ்வதப் பேரமைதியில் மிதக்கும்
படகுகள் போலவும் தோன்றுகின்றன

******

3. இரண்டுவீடுகள்
===========

மனிதன் கட்டியாகவேண்டியுள்ளது

ஒன்றை பட்டுப்பூச்சியிடமிருந்து
அவன் கற்றுக்கொள்ளவேண்டும்.

மற்றொன்றை
சிட்டுக்குருவியிடமிருந்து.

*****

4. அந்த இசை
==========

மூலைகளில் படிந்த ஒட்டடைகளை நீக்கினேன்
ஒவ்வொரு பொருளையும் தொட்டு
அதனதன் இடத்தில் வைத்தேன்
தூரெடுக்கப்பட்ட கிணறு போலாயிற்று அறை

புனித நீரில் குளித்து
வியர்வை நாற்றமில்லா ஆடை அணிந்து
மாலை உலா கிளம்பியபோது
கேட்கத்தொடங்கிய அந்த இசை
நீடிக்கவில்லை

வழிப்பறிக்கு ஆளானவன் போல திரும்பினேன்
விடியும்வரை
இரவின் மடியில் முகம் புதைத்து அழுதேன்

*****

5. மொட்டைமாடிக்களம்
===================

நான் கட்டினேன் ஒரு வீட்டை
வீடு தனக்குத்தானே கட்டிக் கொண்டது
வானம் வந்து இறங்க விரித்த
தன் மொட்டைமாடிக்களத்தை

*****

6.குருவிக்கூடு
===========

நிலத்தை ஆக்ரமித்த தன் செயலுக்கு ஈடாக
மொட்டைமாடியை தந்தது வீடு

இரண்டடி இடத்தையே எடுத்துக் கொண்டு உயர்ந்து
தன் அன்பை விரித்திருந்தது மரம்

அந்த மரக்கிளையோடு அசையும்
ஒரு குருவிக்கூடாய்
அசைந்தது நான் அமர்ந்திருந்த
அந்த மொட்டைமாடி

*****

7. மரத்தின் வடிவம்
==============

சிவந்த பூக்களுடன்
ஜன்னலை உரசும் மரக்கிளை
உன் முத்தம்

கூரைமீதுகுனிந்து
உச்சிமுகர்கிறது உன் அன்பு ஸ்பரிசம்

வாயிலை நோக்கி தாழ்ந்த
கிளை அசைவு உன் அழைப்பு

இமையாத விழிப்புடன்
இடம் பெயராஅத இருப்புநிலையில்
காணுகிறது உன் நித்தியத்துவம்

உன் ஒருபகுதியை வெட்டி வீழ்த்தியே
அக்கூரைமீது
ஒரு மாடிக்கட்டிடத்தை எழுப்பி
முன்னேறினேன்
வெட்டப்பட்டு
இரத்தம் கொட்டும்
உன் மொட்டைவிரல்
மாடிக்கட்டிடத்தை சுட்டியபடி

திடுக்கிட்டு
இனி நான் என்ன செய்வது
என துடித்துக் மொண்டிருக்கையில்
அம்மொட்டை விரலை சுற்றிலும்
வீரிட்டு முளைத்திருந்தன
புதுத்தளிர்கள் .

******

8. உனது வீடு
========-==

நீ இளைப்பாற தேர்ந்தெடுத்த
மரத்தடியா,
ஓயாத வேதனையில் அரற்றும் ஜீவன்
ஓய்வு கொள்ள விரித்த படுக்கையா,
பல்லிகளும் பாச்சான்களும் பாம்புகளும் அண்டும்
பாழ்மண்டபமா,
எது உன்வீடு ?
இவை எல்லாமுமேவா ?

உனது வீட்டில்
உனது பிணத்தை நாடியே
உன்னோடு குடியேறியதுதான்
அந்தபிசாசு என நீ அறிவாயா ?

உனது வீட்டின் இருளை துடைப்பது
சூரியன் இல்லையா ?
சந்திரனும் நட்சத்திர கோடிகளூம் இல்லையா ?
உன் வீட்டை கடந்துசெல்லும்
மேகங்களின் நிழல் உன்னை தீண்டியதில்லையா ?

நீ எப்போது உன் வீட்டைவிட்டு வெளியேறுகிறாய் ?
சூரியன் வந்து உன் தலையை தீண்டும்போதா ?
பறவைகள் குரல்கொடுக்க துவங்கும்போதா ?

புறப்பட்டுவிட்டாயா
உனது மக்களை விட்டுவிட்டா ?
அவர்கள் விழிக்கும் முன்
ஒருபுதிய பொக்கிஷத்துடன்
வந்து சேர்ந்துவிடும் எண்ணத்துடனா
அல்லது இந்த துறவேதானா
அந்த அரிய பொக்கிஷம் ?

போய்க் கொண்டிருக்கிறாயா ?
சரி
ஆனால்
எச்சரிக்கையாக இரு
நீ சோர்வுறும் இடமும்
வீழும் இடமுமே
வீடுகள் தோன்றும் இடம்

வீடுகள் வீதிகள் நகரங்கள்
நாடுகள் மற்றும் பூமி

******

9. ஒரு சிறு குருவி
==============

என் வீட்டுக்குள் வந்து
தன் கூட்டை கட்டியது ஏன் ?

அங்கிருந்தும்
விருட்டெனப் பாய்ந்தது ஏன் ஜன்னலுக்கு ?
பார் ஜன்னல் கம்பிகளை உதைத்து
இப்பவும் விருட்டென்று தாவுகிறது அது
மரத்திற்கு
மரக்கிளையினை
நீச்சல்குளத்தின் துள்ளுபலகையாக மதித்து
அங்கிருந்தும் தவ்விப்பாய்கிறது
மரணமற்ற பெருவெளிக்கடலை நோக்கி

சுரேலென தொட்டது அக்கடலை என்னை
ஒரு பெரும் பளீருடன்
நீந்தியது அங்கே உயிரின்
ஆனந்த பெருமிதத்துடன்

நீந்தியபடியே திரும்பிப் பார்த்தது தன் வீட்டை

ஓட்டுகூரையெங்கும்
ஒளியும் நிழலும் உதிர் சருகுகளும்
உள் அறைகளெங்கும்
சிரிப்பும் அழுகையும் மரணங்களும்

***

முன்னுரை
====

தேவதேவன்

இவை கவிதைகள்
ஏனெனில்
இவை உண்மையை பேசுகின்றன
நானல்லாத நான் சாட்சி
இவற்றை நீ உணரும்போது
நீயே சாட்சி
இவற்றை நீ பின்பற்றும்போதோ
வற்புறுத்தும்போதோ
நீ ஒரு பொய்யன் ,துரோகி ,கோழை!
ஏனெனில்
உண்மை உன் விருப்பத்துக்கும் வசதிக்குமாய்
காலத்தின் முளைகளில் கட்டிப்போடப்படுவதற்கு
பணிந்துவிடும் பசுமாடு அல்ல.
அது
நித்யத்துவத்தின் கரங்களிலிருந்து சுழலும் வாள்

அப்போது கவிதைகள்
தியாகத்தின் இரத்ததில் நனைந்த
போர்வாட்கள்

[நன்றி . நட்சத்திரமீன் 1994 ]
====


1. Tamil | Literature | Unnatham | Devadevam | Play Cards: நமது மூளையின் செயல்பாடுகள்தாம் என்னே..- தேவதேவன்

2. Tamil | Unnatham | Devadevan | Short Story: “அபூர்வமாய் நிகழ்ந்த சம்பவங்கள் அவை – தேவதேவன்”

3. Tamil | Literature | DevaDevan | Short Story: “தோணி – தேவதேவன்”

4. Tamil | Literature | Unnatham | Short Story | Devadevan: “முதற் கணம் – தேவதேவன்”


Tamil | Puthiya Kaatru | Devadevan | Poem

ஆக்கங்கெட்ட கூகைகளும்
கட்டப்பட்டுக் கொண்டேயிருக்கும் கோயில்களும்
தேவதேவன்

தன்னைப் பற்றிய மெய்மை
தன் உணர்வுக்குக் கிட்டிய போதெல்லாம் –
மூடமே,
தாங்கொணாத வெவ்விதியே,
குமுறுகின்ற இதயத்தின்
இறுக்கும் கைகளுக்குள்
குலுங்கும் என் நெஞ்சமே,
அதை உன்னை வழிபடச் சொன்னது யார்?

காலத்துக்குத் தக இடம் நகர்ந்து கொள்ளும்
அக்ரஹார உயர்வுகளின் பின்கட்டில்
விடாப்பிடியாய் வளர்ந்து கொண்டிருக்கும்
இரத்த வெறி கொண்ட
அந்த மிருகத்தைக் கண்டதில்லையா?

அதிகார சுகம்
தன்னைக் காத்துக் கொள்வதற்காக
மறைமுகமாகவும் கொள்ளும்
உலகின் அதிபயங்கர கொடூரங்களினின்றும்
மனிதன் எழுந்திருக்கவே முடியாத
கதை இதுவோ?

அதிகாரங்களின்
வல்லுறவு வன்கொலைகளால் மாண்ட
நம் கன்னிப் பெண்களுக்கு
கோயில் கட்டியதால்
எல்லாம் சரியாயிற்றா?

கூகைக்குக் கோயில் கட்டியது,
கூகைத் தனத்தை நகர்த்தி விட்டது,
இல்லையா?

நம் கொந்தளிப்பானது
காளிக்குக் கோயில் கட்டிக்
கும்பிடக் கும்பிட
ஒடுங்கி அடங்கிக் கொண்டது,
இல்லையா?
இன்று என்ன கோயில்களையடா
நாம் கட்டிக் கொண்டிருக்கிறோம்
நம்மிடமுள்ள எவற்றையெல்லாம்
நம்மிடமிருந்து நகர்த்தி, நம்மைக்
கல்லறை சடலங்களாக்கிவிடுவதற்கு?


Posted in 2008, Authors, Award, Awards, Biosketch, Devadevan, Faces, Kavinjar, Literature, people, Poems, Poets, Prizes, Tamil, Vilakku, Writers | Leave a Comment »

British novelist Doris Lessing wins Nobel Literature Prize

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 11, 2007

பிரிட்டன் நாவலாசிரியைக்கு இலக்கிய நோபல் பரிசு

இலக்கியத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு

ஸ்டாக்ஹோம், அக். 12: பிரிட்டனைச் சேர்ந்த பெண் நாவலாசிரியர் டோரிஸ் லெஸ்ஸிங் இலக்கியத்துக்கான நோபல் பரிசுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இலக்கியத்துக்கான நோபல்பரிசைப் பெறும் 11-வது பெண் இவர். “நாகரிகமயத்தைப் பகுத்தறியும் கடவுள் மறுப்பு, உத்வேகம், தொலைநோக்குத் திறன் கொண்ட பெண்ணியவாதி’ என்று நோபல் கமிட்டி இவரைப் பற்றிக் கூறியுள்ளது.

1962-ல் வெளியான “தி கோல்டன் நோட்புக்’ என்ற இவரது புத்தகம் இவரை பெண்ணுரிமைக்கு குரல் கொடுப்பவராக அடையாளம் காட்டியது. எனினும் தனக்கு இதுபோன்ற அடையாளங்கள் வழங்கப்படுவதை விரும்பாத அவர், தனது படைப்புகளுக்கு அரசியலில் எந்தப் பங்கும் இல்லை என்று கூறிவந்தார்.

தி கிராஸ் இஸ் சிங்கிங், தி குட் டெரரிஸ்ட், எ மேன் கேவ் டூ உமென் உள்ளிட்ட பல்வேறு புத்தகங்களை அவர் எழுதியுள்ளார். கம்யூனிசம், சூஃபியிசம் உள்ளிட்ட பல்வேறு சிந்தாந்தங்களின் தாக்கங்கள் அவரது படைப்புகளில் இருக்கும்.

டோரிஸ் லெஸ்ஸிங்

ஈரானில் உள்ள கெர்மான்ஷா நகரில் 1919-ம் ஆண்டு டோரிஸ் லெஸ்ஸிங் பிறந்தார். இவரது தந்தை ராணுவ வீரர்; தாய் ஒரு நர்ஸ்.

பண்ணை ஒன்றில் பணிபுரிவதற்காக அவரது குடும்பம் 1927-ஆம் ஆண்டு வடக்கு ரொடீஷியாவுக்கு (தற்போது ஜிம்பாப்வே) குடிபெயர்ந்தது.

சாலிஸ்பரி நகரில் (தற்போது ஹராரே) உள்ள ரோமன் கத்தோலிக்க பள்ளியில் தனது படிப்பைத் தொடங்கிய அவர், தனது 13-வது வயதில் பள்ளியைவிட்டு விலகி சுயமாகப் படிக்கத் தொடங்கினார். டெலிபோன் ஆபரேட்டர், நர்ஸ் என பல்வேறு பணிகளைச் செய்தார்.

1939-ம் ஆண்டு ஃபிராங்க் விஸ்டம் என்பவரைத் திருமணம் செய்தார். அவர் மூலமாக 2 குழந்தைகளுக்குத் தாயான டோரிஸ், 1943-ல் அவரிடமிருந்து விவாகரத்துப் பெற்றார். அதன் பிறகு காட்ஃபிரைட் லெஸ்ஸிங் என்ற அரசியல்வாதியைத் திருமணம் செய்த டோரிஸ், 1949-ல் அவரையும் விவாகரத்து செய்தார். அதன் பிறகுதான் “தி கிராஸ் இஸ் சிங்கிங்’ என்ற தனது முதல் நாவலை டோரிஸ் எழுதினார்.

“தி கிராஸ் இஸ் சிங்கிங்’

1950 வெளியான டோரிஸின் முதல் நாவல் இது. ஆப்பிரிக்காவில் கறுப்பு இனத்தவர் மீது வெள்ளை இனத்தவரின் அடக்குமுறை குறித்து விளக்கும் நாவல். இந்த கதை முழுவதும் ஜிம்பாப்வேயில் நடப்பதாக எழுதப்பட்டது.

“தி கோல்டன் நோட்புக்’

1962-ல் வெளியான இந்த நாவல் டோரிûஸ பெண்ணுரிமைவாதியாக அடையாளம்

காட்டியது. இந்த நாவல் ஒரு பெண்

எழுத்தாளரின் கதை. பணி, காதல்,

அரசியல் போன்ற பல்வேறு பரிமாணங்களில் பெண்கள் சந்திக்கும் பிரச்னை பற்றியது.

“தி ஃபிப்த் சைல்ட்’

1988-ல் வெளியான இந்த நாவல் பல்வேறு மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டது. ஒரு மகிழ்ச்சியான தம்பதியின் வாழ்வில் 5-வது குழந்தை பிறந்த பின்னர் நிகழும் சம்பவங்களைக் கூறும் நாவல் இது.

Posted in africa, Award, Bio, Biography, Biosketch, Books, Britain, British, Commonwealth, Doris, England, Female, Feminism, Icon, Label, Lady, laureate, Lessing, Literature, London, manuscript, names, Nobel, Novel, novelist, people, Politics, Prize, Read, Reviews, Rhodesia, She, Synopsis, UK, Woman, Women, Zimbabwe | Leave a Comment »

P Sainath: The Voice from the Hinterland – Magsaysay award winner

Posted by Snapjudge மேல் ஓகஸ்ட் 8, 2007

P sainath the hindu award faces people magasaysay prizeஜர்னலிஸம் துறையில் நுழையும் இளைஞர்களின் கனவுகள் வண்ணமயமாக இருக்கின்றன. தொலைக் காட்சித் தொகுப்பாளர், எ·ப்.எம். நிகழ்ச்சித் தொகுப்பாளர் என்று ஒளி-ஒலியில் மின்ன ஆசை. அங்கிருந்து ஓர் எட்டு எட்டி பெரிய திரைக்கு மாறும் ஆசை. ப்ரின்ட் மீடியா என்றால் அச்சில் பெயர் பளிச்சிட பிரபலங்களைப் பேட்டி கண்டு எழுதும் ஆசை. அந்தச் சந்திப்பு கள் மூலம் சமூக அந்தஸ்தையும் செல் வாக்கையும் வளர்த்துக்கொள்ளும் ஆவல்… என்று பல்வேறு கிளைக் கனவுகளுடன் வரும் இளைஞர்கள், பத்திரிகைத் துறையானது ஜனநாய கத்தின் நான்காவது தூண் என்கிற பிரதான நோக்கத்தைத் தவறவிடுகின்ற னர். நீண்ட நெடுங்காலமாக இந்தத் துறையில் இயங்கிவரும் நிறுவனங்கள் கூட ஜனநாயகப் பொறுப்பைக் கிளை நோக்கமாக்கிவிட்டுக் கேளிக்கை யையே முக்கியமாக ஏற்றுவிட்டன. இதன் விளைவாக மீடியா என்றாலே பரபரப்புப் பத்திரிகை இயல் என்பதாக ஓர் அர்த்தம் (அனர்த்தம்?) கற்பிக்கப் பட்டுவிட்டது.

இத்தகைய சூழலில் பி.சாய்நாத், மாக்ஸாய்ஸாய் விருது பெற்றிருக்கிறார். பத்திரிகைத் துறையில் நுழைய விரும்புவோருக்கும் நுழைந்துவிட்ட வர்களுக்கும் ஒரு த்ருவ நட்சத்திரம் இதன் மூலம் அடையாளம் காட்டப் பட்டிருக்கிறது.

முதல் பக்கச் செய்தியாக என்றும் இடம்பெறாது என்று தெரிந்தும்…

பரபரப்பான போஸ்டர் செய்தி யாகி விற்பனையைக் கூட்டாது என்று தெரிந்தும்…

அசௌகரியமான சூழலில் செய்தி சேகரிக்க நாள் கணக்கில் உழைக்க வேண்டும் என்று தெரிந்தும்…

எழுதும் விஷயத்துக்கு அனைத்துத் தரப்பினரின் பாராட்டுகளும் வந்து குவியாது என்பது தெரிந்தும்…

தோலுரித்துக் காட்டப்படும் அவலங் களும் பரிதாபங்களும் பெரிய அளவில் விரைந்து மாறிவிடமாட்டா என்பது நன்றாகவே தெரிந்தும்…

யாரைப் பற்றி எழுதுகிறோமோ, அவர் கள் நம் எழுத்தைப் படிக்கக்கூட போவதில்லை என்று தெரிந்தும்…

இந்திய கிராம மக்களின் கஷ்டங் களையும் போராட்டங்களையும் சளைக் காமல் பதிவு செய்து வந்திருக்கிறார் பி.சாய் நாத். ‘இதழியல் தவம்’ என்று அவரது பணியை அழைப்பது நிச்சயமாக மிகை யில்லை.

அவரது அர்ப்பணிப்புக்குக் கிடைத் துள்ள அங்கீகாரம்தான் மாக்ஸாய்ஸாய் விருது. விருதுப் பணம் மொத்தமும் கிராம மக்கள் குறித்து ஆய்ந்து எழுதவே பயனாகும் என்று தெரிவித்ததுடன், தாம் பணியாற்றும் தி ஹிந்து நாளிதழுக்கும் அந்த விருது உரியது என்று சொல்லியிருக் கிறார் பி.சாய்நாத்.

விருதுக்கு வாழ்த்து; பெருந்தன்மைக்கு வணக்கம்!


P Sainath: The Voice from the Hinterland
Ajith Vijay Kumar
The 2007 Ramon Magsaysay Award winner, Palagummi Sainath (born 1957) is one of Asia`s leading developmental studies journalist with numerous writings on issues such as poverty and effects of industrialisation in India. In the words of Nobel Laureate Amartya Sen “He is one of the world`s greatest experts on famine and hunger”.

Through his substantial work on the livelihoods and poverty of India`s rural poor, Sainath has been playing a crucial role in changing the nature of the development debate not just in India but also across the world.

He is known to spend as much as 300 days a year in the rural interior and had been doing so for the past 14 years. Currently he is the Rural Affairs Editor and Mumbai Chief of Bureau of The Hindu.

Sainath was born into a distinguished family of freedom fighters in Andhra Pradesh in the year 1957 with the illustrious former President of India V V Giri as his grandfather.

Education and Career

Early education was at the Loyola College in Chennai. His inclination towards social problems and commitment to a political perception on poverty began while he was a student at the Jawaharlal Nehru University, Delhi. After receiving a Master`s degree in history, he began his career as a journalist with the United News of India in 1980. His talent surfaced soon as he received the news agency`s highest individual award within a very short span of time.

After a successful stint with UNI, Sainath joined The Blitz, then a prominent tabloid published from Mumbai as foreign affairs editor and then as deputy editor, a position he held for ten years.

It was during this period Sainath got the opportunity to tour nine drought-stricken states in India; these travels radically changed his approach towards his work and journalism.

“That`s when I learned that conventional journalism was all about the service of power. You always give the last word to authority. I got a couple of prizes, which I didn`t pick up because I was ashamed,” said Sainath.

The year 1991 was the turning point in India’s economic fortunes as Dr Manmohan Singh launched economic reforms and that was also the very year Sainath started to emerge as a developmental journalist. Sainath felt that media`s attention was moving from “news” to “entertainment” and that the urban elite was getting prominence in the newspapers at the cost of news on the grim situation in rural India especially poverty.

“I felt that if the Indian press was covering the top 5 per cent, I should cover the bottom 5 per cent”, says Sainath.

All this internal turmoil made him quit Blitz in 1993 and applied for the Times of India fellowship. After bagging the fellowship, he took to the un-trodden path, the back roads to the ten poorest districts in five states. Covering close to 100,000 km across India, walking 5,000 km on foot, he reached the poorest of poor and reported about their plight. The Times of India published 84 reports by Sainath, many of them subsequently reprinted in his book, “Everybody Loves A Good Drought”. This best selling, widely acclaimed book, published in 1997 helped focus public attention on the condition of India`s rural poor and in turn helped increasing public awareness and support.

Sainath discovered that the acute despair prevalent in India`s poorest districts was not due to drought, as the government claimed. He strongly believed that it was rooted in India`s enduring structural inequalities like poverty, illiteracy, and caste discrimination.

He focused on the shocking rise in suicides among India`s debt-ridden farmers, revealing that in just six highly effected districts in 2006, the number of suicides had soared to over a thousand, with the government guilty of grossly underestimating the numbers.

His relentless pursuit of news from the rural hinterland provoked immense response including the revamping of the Drought Management programmes in the southern state of Tamil Nadu, and also on Area Development programme for tribal people in Madhya Pradesh.

In the last decade, he has extensively reported on the agrarian crises caused due to the neo-liberal policies like globalization, privatisation and related government policies. He has also shed light on the lack of sensitivity and inefficiency shown by successive governments and the bureaucracy controlled by them.

The shocking revelation about India boasting about being a grain surplus country even when 250 million Indians are suffering from endemic hunger is credited to the journalistic pursuits of Sainath.

According to his outlook the shift from truth-seeking journalism to bland, promotional content has gone hand in hand with the increase of globalization.

Owing to his extensive reporting on poverty and rural developmental issues and its positive effect on the developmental parameters, many other newspapers were forced to initiate columns on poverty and rural development.

He is currently working on a project on the impending nationwide agrarian crisis, particularly in regions like Vidarbha, AP and Orissa, where its effects are most severely felt. He has to his credit over 100 reports on the subject.

Awards and Recognition

Over the years Sainath has won over 30 national and international awards and fellowships as a journalist.

The prominent amongst them being:

# European Commission`s Natali Prize in 1994.

# Amnesty International global award for meritorious human rights journalism in 2000.

# The Boerma Journalism Prize from the UN FAO in 2001; the most important award in development journalism. .
# The prestigious, B. D. Goenka award for excellence in journalism for the year 2000.

# Judges` prize (newspaper category) Harry Chapin Media Awards

Apart from these he is also a Distinguished International Scholar at the University of Western Ontario. He has also participated in many international initiatives on communications sponsored by the UNESCO and in the UNHCR sponsored World Information Campaign on Human Rights.

And as a tribute to his courageous endeavors in Journalism, immense contribution to literature and creative communication arts, P Sainath has been awarded the Ramon Magsaysay 2007.

Posted in Award, Biography, Biosketch, Blitz, Chennai, Chief of Bureau, Delhi, Desk, Drought, Editor, Faces, Famine, Food, Giri, Hindu, History, Hunger, industrialisation, JNU, Journal, journalism, journalist, Loyola, Madras, Mag, magasaysay, magazine, magsaysay, Manmohan, Media, MSM, Needy, News, Newspaper, P sainath, Palagummi, Palagummi Sainath, Paper, people, Poor, Poverty, President, Prez, Prize, Ramon Magsaysay, Report, Reporter, Rich, sainath, Society, tabloid, The Hindu, UNI, V V Giri, VV Giri, Water, Wealthy, Zine | Leave a Comment »

‘Kaalpurush’, ‘Rang De Basanti’ Receive National Film Awards For 2005

Posted by Snapjudge மேல் ஓகஸ்ட் 8, 2007

தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு: அமிதாப்பச்சனுக்கு சிறந்த நடிகர் விருது- சிறந்த இசையமைப்பாளராக லால்குடி ஜெயராமன் தேர்வு

புதுடெல்லி, ஆக. 8-

2005-ம் ஆண்டுக்கான தேசிய திரைப்பட விருதுகள் டெல்லியில் நேற்று மாலை அறிவிக்கப்பட்டன. தேசிய விருதுகள் வழங்குவது குறித்து டெல்லி கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டதால் இந்த ஆண்டு விருதுகளை அறிவிப்பதில் தாமதம் ஏற்பட்டது.

தேசிய திரைப்பட விருது அறிவிப்பில், 2005-ம் ஆண்டுக்கான சிறந்த நடிகர் விருது அமிதாப்பச்சனுக்கு கிடைத்தது. `பிளாக்’ படத்தில் மன வளர்ச்சி குன்றிய ஒரு குழந்தையை வளர்த்து ஆளாக்குவதில் அவர் தத்ரூபமான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். அதனைப் பாராட்டி அமிதாப்பச்சனை சிறந்த நடிகராக தேர்வுக்குழுவினர் தேர்ந்தெடுத்தனர்.

இதே போல் சிறந்த நடிகைக்கான விருதிற்கு சரிகா தேர்வானார். `பர்சானியா’ என்னும் ஆங்கிலப் படத்தில் அவரது சிறப்பான நடிப்பை பாராட்டி சிறந்த நடிகைக்கான விருது வழங்கப்படுகிறது.

தேசிய அளவில் சிறந்த படமாக புத்ததேவ் தாஸ் குப்தாவின் வங்காளி மொழிப் படமான `கால்புருஷ்’ தேர்வானது. இந்த படத்திற்கு தங்கத் தாமரை விருதும், 50 ஆயிரம் ரொக்கமும் வழங்கப்படும்.

மற்ற முக்கியமான விருதுகள் வருமாறு:

சிறந்த இயக்குனர்– ராகுல் தோடாக்கியா (பர்சானியா)

அறிமுக இயக்குனர்களுக்கான இந்திரா காந்தி விருது பெற்ற படம்- பரிநீதா.

சிறந்த பொழுதுபோக்கு படம்- ரங் கே பசந்தி (இந்தி)

சிறந்த குழந்தைகள் படம்- புளூ அம்பரல்லா.

நடுவர் குழுவின் சிறந்த நடிகர் விருது- அனுபம் கெர் (மைனே காந்தி கோ நாகின் மாரா).

தேசிய ஒருமைப்பாட்டிற்கான சிறந்த படம் (நர்கீஸ் தத் விருது)- தைவனமாதில் (மலையாளம்).

சமூக பிரச்சினைக்கான சிறந்த படம்- இக்பால் (இந்தி)

சிறந்த குழந்தை நட்சத்திரம்- சாய்குமார்( பொம்மலதா-தெலுங்கு)

சிறந்த பின்னணி பாடகர்– நரேஷ் அய்யர் (ரங் கே பசந்தி)

சிறந்த பின்னணி பாடகி– ஸ்ரேயா கோஷால்(பகெலி)

சிறந்த இசையமைப்பாளர்– வயலின் வித்வான் லால்குடி ஜெயராமன் (சிருங்காரம்-தமிழ்)

சிறந்த பாடலாசிரியர்– பர்குரு ராமச்சந்திரா (தாயி- கன்னடம்)

சிறந்த எடிட்டர்– பி.எஸ்.பாரதி(ரங் கே பசந்தி).

சிறந்த நடன அமைப்பாளர்- சரோஜ் (சிருங்காரம்- தமிழ்)

சிறந்த வசன கர்த்தாக்கள்- பிரகாஷ் ஷா, ஸ்ரீதர் ராகவன், மனோஜ் தியாகி.(அப்காரன்)

சிறந்த ஆர்ட் டைரக்டர்- சி.பி.மோர் (தாஜ் மகால் ஆன் எட்னர்ல் லவ் ஸ்டோரி).

சிறந்த ஆடை வடிவமைப்பாளர்கள்- அன்னா சிங் (தாஜ் மகால் ஆன் எட்னர்ல் லவ் ஸ்டோரி), சப்யாச்சி முகர்ஜி (பிளாக்).

தமிழில் சிறந்த படமாக டி.வி. சந்திரன் இயக்கிய ஆடும் கூத்து தேர்வாகியுள்ளது.


சேரன் படங்களுக்கு தேசிய விருது08 ஆகஸ்ட் 2007கோவா திரைப்பட விழாவில் தனக்கு அங்கீரகாரம் கொடுக்கவில்லை என்று அரங்கத்தை விட்டு வெளியேறினார் சேரன். இப்போது அவருடைய படங்களுக்கு தேசிய விருது கிடைத்திருக்கிறது.

டி.வி.சந்திரன் இயக்கத்தில் சேரன் நடித்த `ஆடும்கூத்து‘ சிறந்த படத்திற்கான தேசிய விருதை பெற்றிருக்கிறது. அதேபோல் அவர் இயக்கி நடித்த `தவமாய் தவமிருந்து‘ படத்திற்கு சிறந்த குடும்ப படத்திற்கான தேசிய விருது கிடைத்திருக்கிறது.

இந்தப் படத்தில் தன்னை விட முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்த ராஜ்கிரணுக்கு விருது கிடைக்கும் என்று எதிர்பார்த்தார் சேரன்.

ஆனால் அது கிடைக்காவிட்டாலும் சிறந்த குடும்ப படத்திற்கான விருது `தவமாய் தவமிருந்து’ படத்திற்கு கிடைத்ததில் சந்தோசமாய் இருக்கிறார் சேரன்.


 ஷியாம் பெனெகலுக்கு தாதா சாகேப் பால்கே விருது08 ஆகஸ்ட் 2007

திரைப்படத் துறையில் மிக உயரியதாகக் கருதப்படும் தாதா சாகேப் பால்கே விருது, பழம்பெரும் இயக்குனர் ஷியாம் பெனெகலுக்கு வழங்கப்படுகிறது.

திரைப்படத்துறைக்கு ஆற்றிய சிறப்பான சேவையை பாராட்டி 2005ம் ஆண்டுக்கான விருதுக்கு, 72 வயதாகும் ஷியாம் பெனகல் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இந்த ஆண்டு இறுதியில் நடைபெறும் விழாவில் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் ஷியாம் பெனகலுக்கு இந்த விருதையும், ரூ 2 லட்சம் பரிசுத் தொகையும் வழங்குவார்.

இவர் இயக்கிய முதல் படமான ‘அன்கூர்‘, மிகச்சிறந்த இயக்குனராக அவரை அடையாளம் காட்டியது. பூமிகா, மந்தான் உள்ளிட்ட பல்வேறு படங்களை இவர் இயக்கியுள்ளார்.

இயக்குனர் ஷியாம் பெனெகல் கடந்த 1934ம் ஆண்டு ஆந்திர மாநிலத்தில் பிறந்தார். இதற்கு முன் பதமஸ்ரீ, பத்மபூஷன் ஆகிய உயரிய விருதுகளையும் ஷியாம் பெனெகல் பெற்றுள்ளார்.


Posted in 2005, Aadum Koothu, Aamir, Aamir Khan, Actor, Actress, Amir, Amitab, Amitabh, Amitabh Bachaan, Amitabh Bhachan, Animation, Anniyan, Anupam, Anupam Kher, Apaharan, Art, Audio, Audiography, Award, Awards, Bengal, bengali, Best, Black, Bollywood, Bombay, Bommalata, Bommalatta, Budhadeb, Budhadeb Dasgupta, Camera, CG, Chandhran, Chandran, Cheran, Child, Children, Chopra, choreographer, choreography, Cinematography, Computer, Costume, Costumes, Daivanamathil, Dasgupta, Direction, Director, Dutt, Editing, Effects, Elxsi, Engg, Entertainment, Environment, Film, Gaurav A. Jani, Geek, Ghoshal, Graphics, Gujarat, Hindi, Indira Gandhi, Integration, Iqbal, Jayaraman, Jeyaraman, Kaalpurush, Kamal, kamalahasan, Kamalahassan, Kamalhasan, Kamalhassan, Kher, Kid, Lalgudi, Lalgudi Jayaraman, Lalkudi, Lyrics, Malayalam, Mumbai, music, Nargis, National, Paheli, Parineeta, Parineetha, Parzania, Playback, Pradeep Sarkar, Prizes, Rang de basanthi, Rang De Basanti, Recognition, Riding Solo to the Top of The World, Sarika, Screenplay, Sets, Shreya, Singer, Software, Special Effects, Sreya, Sringaram, Swarna Kamal, SwarnaKamal, Tamil, Tamil Actor, Tamil Actors, Tamil Actress, Tamil Actresses, Tamil Cinema, Tamil Film, Tamil Films, Tamil Isai, Tamil Movie, Tamil Movies, Tamil Music, Tamil Nadu, Tamil Padam, Tamil Pictures, Tamil Stars, Tamil Story, Tamil Theater, Tamil Theatres, Tamil Writer, TamilNadu, TATA, Tata Elxsi, Technology, Tharani, Thavamai Thavamirunthu, Thotta, Thotta Tharani, Thutturi, TV Chandran, Urvashi, Urvasi, Vidhu Vinod Chopra, Welfare | Leave a Comment »

US recognizes Ramesh Ganguly for his contributions toward South Asians assimilation

Posted by Snapjudge மேல் ஜூலை 2, 2007

அமெரிக்க-இந்தியருக்கு “விடுதலை உணர்வு விருது’

சிலிக்கான்வேலி, ஜூலை 2: அமெரிக்காவில் வாழும் இந்தியர்கள் மத்தியில் விடுதலை உணர்வை ஏற்படுத்தியதற்கான பங்களிப்பை பாராட்டி அமெரிக்க-இந்திய பேராசிரியருக்கு இந்தாண்டுக்கான சிறந்த விருது வழங்கப்படவுள்ளது.

ramesh Ganguly NRI Awardவிருதை பெறப்போகும் பேராசிரியர் ரமேஷ் கங்குலி(72), வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் கணித மற்றும் இசைப் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார்.

ரமேஷ் கங்குலி பெங்களூரில் பிறந்து, மும்பையில் வளர்ந்தவர். மும்பை பல்கலைக்கழகத்தில் இளம்கலை பட்டம் பெற்றார். 1957-ம் ஆண்டு உதவித் தொகையை பெற்று கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டத்தில் சேர்ந்தார்.

முதுகலை பட்டத்தை வெற்றிகரமாக முடித்த அவர், பின்னர் அமெரிக்காவின் மசாசூசெட் பல்கலைக்கழகத்தில் ஆய்வு படிப்பைத் தொடங்கினார். 1961-ம் ஆண்டு “பிஎச்டி’ பட்டத்தை பெற்றார். இதையடுத்து வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியில் சேர்ந்தார்.

விடுதலை உணர்வை ஏற்படுத்தினார்:

வாஷிங்டனில் பேராசிரியர் பணியைத் தொடங்கியதுமே அமெரிக்காவின் சீட்டேல் பகுதியில் வாழும் இந்தியர்கள் மத்தியில் ரமேஷ் கங்குலி விடுதலை உணர்வை ஏற்படுத்தினார். அவரது இந்தப் பங்களிப்பை பாராட்டித்தான் அவருக்கு தற்போது சிறந்த விருது வழங்கப்படவுள்ளது.

விருது வழங்கும் நிகழ்ச்சி ஜூலை 4-ம் தேதி நடைபெறுகிறது. இந்த விழாவில் ரமேஷ் கங்குலி தவிர்த்து, புதிதாக அமெரிக்க குடியுரிமையைப் பெற்றுள்ள இந்தியர்களும் பாராட்டி கெüரவிக்கப்படுவார்கள். ரமேஷ் கங்குலி 1971-ம் ஆண்டே அமெரிக்க குடியுரிமையை பெற்றுவிட்டார்.

இந்நிலையில் ரமேஷ் கங்குலி கூறும்போது, “தெற்காசியர்களின் கலாசாரத்தை பிறர் அறிந்து கொள்ள இசை ஒரு முக்கியமான ஊடகமாக அமைந்துள்ளது என்று நான் நினைக்கிறேன். எங்குசென்றாலும் இசைக்கென்று தனிப்பட்ட ரசிகர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். இசையின் மூலம் மக்கள் தங்களது கலாசாரத்தை மட்டுமல்லாது உணர்வுகளையும் எளிமையாக பகிர்ந்து கொள்ள முடிகிறது என்ற ரமேஷ், 19-ம் வயதில் ரயில் விபத்து ஒன்றில் தனது இடது கையை இழந்தாலும், தன்னம்பிக்கை என்ற ஆயுதத்தால் இன்று சிறந்த சாதனையாளராகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Posted in Accident, America, Asia, Asian, Award, Democratic, Desi, Disabled, Expat, Freedom, Ganguly, Immigration, Independence, Maths, music, NRI, Prize, Professor, Ramesh, Recognition, Republic, Seattle, South Asian, US, USA, Washington | Leave a Comment »

Orhan Pamuk – Nobel Prize winner: Turkish novelist – Lecture

Posted by Snapjudge மேல் ஜூன் 4, 2007

07.06.07 
குமுதம் தீராநதி

ஓரான் பாமுக் – அப்பாவின் சூட்கேஸ்
தமிழில்: ஜி குப்புசாமி

அவர் காலமாவதற்கு இரண்டு வருடங்கள் முன்பு, என் அப்பா அவரது எழுத்துக்கள், கைப்பிரதிகள், குறிப்பேடுகள் அடங்கிய ஒரு சிறிய சூட்கேஸை என்னிடம் கொடுத்தார். அவரது வழக்கமான கேலியும் கிண்டலும் கலந்த தொனியில், அவர் போய்ச் சேர்ந்த பிறகு, அவற்றை நான் படிக்க வேண்டும் என்றார். அதாவது அவர் இந்த உலகை விட்டுப் போய்ச் சேர்ந்த பிறகு.

லேசான சங்கடத்தோடு, ‘‘சும்மா எடுத்துப்பார்’’ என்றார். ‘‘உள்ளே இருப்பதில் ஏதாவது பிரயோஜனப்படுமா என்று பார். நான் போன பிறகு வேண்டுமானால், அவற்றில் தேர்ந்தெடுத்து வெளியிட்டுக் கொள்.

நாங்களிருவரும் புத்தகங்கள் சூழ்ந்திருக்கும் எனது வாசிப்பறையில் இருந்தோம். வலி மிகுந்த சுமையன்றை இறக்கி வைக்க விரும்பும் ஒரு மனிதனைப்போல அப்பா முன்னும் பின்னும் நடந்து, அந்த சூட்கேஸை வைப்பதற்கான இடத்தைத் தேடிக் கொண்டிருந்தார். கடைசியில் அதைக் கண்ணுக்கு உறுத்தாத ஒரு மூளையில் மெதுவாக வைத்தார். நாங்கள் இருவரும் எப்போதும் மறந்திராத ஒரு பாசாங்குத் தருணம் அது. அது கடந்ததும், வாழ்க்கையை லேசாக எடுத்துக் கொள்கிற, கேலியும் கிண்டலுமான எங்கள் ஆளுமைகள் தலையெடுக்க, எங்களது வழக்கமான வேடங்களுக்குத் திரும்பினோம். தினசரி வாழ்க்கையின் அற்பமான விஷயங்களைப் பற்றி, துருக்கியின் முடியவே முடியாத அரசியல் சிக்கல்களைப் பற்றி, பெரும்பாலும் நஷ்டத்தில் முடிகிற என் அப்பாவின் வியாபார முயற்சிகளைப் பற்றி அதிகம் விசனப்படாமல் எப்போதும் போல பேசிக் கொண்டிருந்தோம்.

அப்பா அங்கிருந்து சென்ற பின், அந்த சூட்கேஸைக் கடந்து அப்படியும் இப்படியுமாக பல நாட்கள் சென்று வந்தும், ஒருமுறை கூட அதைத் தொட்டுப் பார்க்கவில்லையென்பதும் என் நினைவுக்கு வருகிறது. இந்தச் சிறிய, கருப்புநிற, தோல் சூட்கேஸ§ம் அதன் பூட்டும், அதன் மழுங்கல் முனைகளும் எனக்கு ஏற்கெனவே பரிச்சயமானதுதான். குறைந்த தூரப் பயணங்களுக்கும், வேலைக்குச் செல்லும்போது பதிவேடுகளை எடுத்துச் செல்வதற்கும் அப்பா அதனை எடுத்துச் செல்வார். என் சிறு வயதில் அப்பா வெளியூர் சென்று திரும்பினால், இந்தச் சின்ன சூட்கேஸைத் திறந்து உள்ளேயிருப்பவற்றை நான் குடாய்ந்ததும், கொலோன் வாசனையில் வெளிநாட்டுச் சரக்குகளை நோண்டியதும் ஞாபகத்தில் வந்தன. இந்த சூட்கேஸ் ஒரு பரிச்சயமான சிநேகிதன். என் பிள்ளைப் பிராயத்தின், என் கடந்த காலத்தின் ஒரு வலுவான நினைவூட்டி. ஆனால், இப்போது என்னால் அதைத் தொடக் கூட முடியாது. ஏன்? அதனுள்ளே பொதிந்திருக்கும் மர்மங்களில்தான் என்பதில் சந்தேகமில்லை.

இந்த கனத்தின் அர்த்தத்தை இப்போது நான் பேசப் போகிறேன். ஒருவன் அறை ஒன்றிற்குள் தன்னை அடைத்துக் கொண்டு, ஒரு மேஜையில் அமர்ந்து, தன் சுயத்தை வெளிப்படுத்தும் ஒரு சிருஷ்டி மூலையை அடைந்து தன்னைப் பதிந்து கொண்டானென்றால், அதுதான் அவன் படைப்பதும் _ இலக்கியத்தின் அர்த்தமும்.

என் அப்பாவின் சூட்கேஸை இறுதியில் நான் தீண்டியபோதுகூட, அதைத் திறந்து பார்க்கும் தைரியம் எனக்கு வரவில்லை. ஆனால் அந்த நோட்டுப் புத்தகங்கள் சிலவற்றில் என்ன இருக்கிறதென்று எனக்குத் தெரியும். சூட்கேஸில் அடைக்கப்பட்டிருந்த இந்தக் கத்தை கத்தையான விஷயங்களைப் பற்றி நான் கேள்விப்படுவது இதுதான் முதல் முறையுமல்ல. என் அப்பாவிற்கு ஒரு மிகப் பெரிய நூலகம் இருந்தது; அவரது இளமையில், 1940_களின் இறுதியில் அவர் ஒரு இஸ்தான்புல் கவிஞனாக ஆக விரும்பி வாலெரியை துருக்கிய மொழியில் மொழிபெயர்த்திருந்தார். ஆனால், சொற்ப வாசகர்களேயிருக்கும் ஓர் ஏழை தேசத்தில் கவிதை எழுதி வாழ்க்கை நடத்துவதை அவர் விரும்பியிருக்கவில்லை. என் அப்பாவின் அப்பா, என் தாத்தா ஒரு செல்வந்தரான வணிகராக இருந்தவர். என் அப்பா ஒரு வசதியான சௌகரியமான வாழ்க்கையைச் சிறுவயதிலும், இளம் பருவத்திலும் அனுபவித்திருக்கிறார். இலக்கியத்தின் பொருட்டும், எழுதுவதற்காகவும் சிரமஜீவனம் நடத்த அவருக்கு விருப்பமில்லை. வாழ்க்கையை அதன் எல்லா அழகுகளோடும் விரும்பியவர் அவர் _ இதுவரைக்கும் எனக்குப் புரிகிறது.

என் அப்பாவின் சூட்கேஸிற்குள் இருப்பவற்றிலிருந்து என்னை தூர விலக்கி வைத்திருக்கும் முதல் விஷயம், வாசிக்கக் கிடைப்பது எனக்கு விருப்பமில்லாமற் போகலாம் என்ற பயம் தான். ஏனென்றால், இது என் அப்பாவிற்குத் தெரியும் என்பதால்தான் முன்னெச்சரிக்கையாக அவற்றை அவர் தீவிரமாக எடுத்துக் கொள்ளாதவர்போல நடித்தார். இருபத்தைந்து வருடங்கள் எழுத்தாளனாகப் பணியாற்றியபின் இதைப் பார்ப்பதற்கு எனக்கு வலியெடுத்தது. ஆனால், என் அப்பா இலக்கியத்தைப் போதியளவுக்கு தீவிரமாக எடுத்துக் கொள்ளாததற்காக, அவர் மீது கோபித்துக் கொள்ளக் கூட நான் விரும்பவில்லை… என் நிஜமான பயம், நான் தெரிந்து கொள்ளவோ, கண்டறிந்து கொள்ளவோ விரும்பாத நெருக்கடியான விஷயம், ஒரு மிகச் சிறந்த எழுத்தாளராக என் அப்பா இருக்கக் கூடிய சாத்தியம் தான். இந்த பயத்தினால்தான் என் அப்பாவின் சூட்கேஸை என்னால் திறக்க இயலவில்லை. அதைவிட மோசம் என்னவென்றால், இதை என்னால் வெளிப்படையாக ஒப்புக் கொள்ள முடியாதது. என் அப்பாவின் சூட்கேஸிலிருந்து உண்மையானதும், மகத்தானதுமான இலக்கியம் வெளிவருமானால், என் அப்பாவிற்குள் முற்றிலும் வேறுபட்ட ஒரு மனிதர் வாழ்ந்திருப்பதை நான் ஒப்புக் கொள்ள வேண்டி வரும். இது பீதியேற்படுத்தும் ஒரு சாத்திய கூறு. ஏனெனில் என் இந்த முதிர்ந்த வயதில் கூட என் அப்பாவை என் அப்பாவாக மட்டுமே நினைக்க விரும்பினேன். ஓர் எழுத்தாளனாக அல்ல.

ஓர் எழுத்தாளன் என்பவன் தனக்குள்ளிருக்கும் இரண்டாவது சுயத்தையும், அவனை அவனாக ஆக்கும் உலகையும் கண்டறிய வருடக் கணக்காக பொறுமையோடு தேடிவருபவன்: எழுதுவது என்பதைப் பற்றி நான் பேசும்போது என் மனதிற்கு முதலில் வருவது ஒரு நாவலோ, ஒரு கவிதையோ அல்லது இலக்கியப் பாரம்பரியமோ அல்ல, ஓர் அறைக்குள் தன்னை அடைத்துக் கொண்டு, ஒரு மேஜையில் அமர்ந்து, தனியாக, தனக்குள்ளாகத் திரும்பி, வார்த்தைகளால் ஒரு புதிய உலகை அதன் நிழல்களுக்கு மத்தியில் கட்டமைக்கும் ஒரு மனிதன்தான். இவன் அல்லது இவள் ஒரு தட்டச்சு இயந்திரத்தைப் பயன்படுத்தலாம், கம்ப்யூட்டரின் சௌகரியத்தால் ஆதாயம் பெறலாம், அல்லது நான் முப்பது வருடங்களாகச் செய்து வருவதைப்போல தாளின் மீது பேனாவைப் பதித்து எழுதலாம். எழுதும்போது அவன் தேனீரோ, காபியோ அருந்தலாம், அல்லது சிகரெட் புகைக்கலாம். அவ்வப்போது மேஜையிலிருந்து எழுந்து சன்னலுக்கு வெளியே, தெருவில் சிறுவர்கள் விளையாடுவதைப் பார்க்கலாம், அவனுக்கு அதிருஷ்டமிருந்தால் மரங்களும் காட்சிகளும் கூட தெரியலாம், அல்லது ஒரு கருப்புச் சுவரை அவன் வெறிக்கலாம். அவன் கவிதைகள், நாடகங்கள் அல்லது என்னைப் போல நாவல்கள் எழுதலாம். இந்த எல்லா வேறுபாடுகளும் அவன் மேஜையில் அமர்ந்து தனக்குள் பொறுமையாக திரும்பிக் கொள்வதற்குப் பிறகு வருபவை. எழுதுவது என்பது இந்த உள்நோக்கிய பார்வையை வார்த்தைகளாக மாற்றுவது, தனக்குள் அவன் அடங்கும் போது அவன் கடந்து வருகிற உலகைக் கவனித்து ஆய்வது, இதனைப் பொறுமையோடும், பிடிவாதத்தோடும், உவகையோடும் செய்வது.

என் மேஜையில் நாட்கணக்காக, மாதக்கணக்காக, வருடக்கணக்காக அமர்ந்து வெற்றுத்தாளில் புதிய வார்த்தைகளை மெதுவாகச் சேர்த்துக் கொண்டு வரும்போது, ஒரு புதிய உலகை நான் படைப்பது போல, ஒரு பாலத்தை அல்லது ஒரு கோபுரத்தை ஒவ்வொரு கல்லாகக் கட்டுவதைப் போல எனக்குள்ளிருக்கும் அந்த மற்றொருவனைக் கட்டமைக்கிற மாதிரி உணர்கிறேன். எழுத்தாளர்களான நாங்கள் பயன்படுத்தும் கற்கள், வார்த்தைகள். அவற்றை எங்கள் கைகளில் ஏந்தி ஒவ்வொன்றும் மற்றொன்றுடன் இணைந்திருக்கும் வழி வகைகளை உணர்ந்து சில நேரங்களில் அவற்றைத் தூர வைத்துப் பார்த்து, சில வேளைகளில் எங்கள் விரல்களாலும் பேனாக்களின் முனைகளாலும் ஏறக்குறைய தட்டிக் கொடுத்து, சீராட்டி அவற்றை எடைபோட்டு, அங்குமிங்கும் நகர்த்தியமைத்து, வருடவருடமாகப் பொறுமையோடும், நம்பிக்கையோடும் புதிய உலகங்களை உருவாக்குகிறோம்.

எழுத்தாளனின் ரகசியம் அகத்தூண்டுதல் அல்ல. அது எங்கிருந்து வருகிறதென்பது எப்போதுமே தெளிவாகத் தெரிவதில்லை. அது அவனது மனவுறுதி, அவனது பொறுமை. ‘ஊசியை வைத்துக் கொண்டு கிணறு வெட்டுவதைப் போல’ என்ற அழகான துருக்கியப் பழமொழி எழுத்தாளர்களை மனதில் வைத்துக்கொண்டுதான் கூறப்பட்டதாக எனக்குத் தோன்றுகிறது. பழங்கதைகளில் எனக்கு ஃபெர்ஹாத்தின் பொறுமை எனக்குப் பிடித்தமானது. காதலுக்காக அவன் மலைகளைக் குடைந்து செல்கிறான், அதை நான் புரிந்து கொள்ளவும் செய்கிறேன். எனது My Name is Red நாவலில் பண்டைக்கால பாரசீக நுண்ணோவியர்கள் பற்பல வருடங்களாக அதே குதிரை ஓவியத்தை, அதே ஆர்வத்தோடு, ஒவ்வொரு தூரிகைக் கீற்றையும் மனப்பாடமாக வரைந்து கொண்டிருப்பதை, அவர்கள் கண்களைக் கட்டிவிட்டால் கூட அந்த அழகிய குதிரையை அதே நுணுக்கத்தோடு அவர்களால் வரைய முடியுமென்பதை நான் எழுதியபோது, நான் கூறிக்கொண்டிருப்பது எழுத்து வேலையை, என் சொந்த வாழ்க்கையைப் பற்றி என்று அறிந்தேன்.

ஓர் எழுத்தாளன் தன் சொந்தக் கதையை கூற வேண்டுமென்றால் _ அதை மெதுவாக, நிதானமாகக் கூற வேண்டும், அது மற்றவர்களைப் பற்றிய ஒரு கதை என்பதைப்போல, தனக்குள் உருவான கதையின் சக்தி மேலெழும்பி வருவதை உணர வேண்டுமென்றால், ஒரு மேஜையில் அமர்ந்து தன்னை இந்தக் கலைக்கு, இந்தக் கை வினைக்குப் பொறுமையாக ஒப்புவிக்க வேண்டுமென்றால், முதலில் அவனுக்குக் கொஞ்சம் நம்பிக்கை தரப்பட்டிருக்க வேண்டும். அகத்தூண்டல் தேவதை (இது சிலரிடம் அடிக்கடி வந்து ஆசீர்வதிக்கிறது, சிலரிடம் அரிதாகவே செல்கிறது) ஆர்வமும் நம்பிக்கையும் கொண்டவர்களையே ஆதரிக்கிறது. ஓர் எழுத்தாளன் பெரும்பாலும் தனிமையாக உணரும்போது, அவனது முயற்சிகள் அவனது கனவுகள் அவனது எழுத்தின் மதிப்பு ஆகியவற்றைப் பற்றி பெரிதும் ஐயுற்றிருக்கும் போது, அவனது கதையை அவனது கதையென்றே அவன் நினைக்கும் போது, அத்தகைய தருணங்களில் அவனுக்குக் கதைகளையும், பிம்பங்களையும், கனவுகளையும் காட்டி, அவன் கட்டியெழுப்ப விரும்பும் உலகத்தை, அந்தத் தேவதை வரைந்தெடுக்கும். என் வாழ்க்கை முழுக்க அர்ப்பணித்து எழுதி வந்திருக்கும் புத்தகங்களை நான் திரும்ப யோசிக்கும் போது, என்னை மிக உன்னதமான மகிழ்ச்சியில் திளைக்க வைத்த வாக்கியங்கள், கனவுகள், பக்கங்கள் எல்லாமே என் சொந்தக் கற்பனையிலிருந்து வந்தவையல்ல என்றும், வேறேதோ ஒரு சக்தி அவற்றைக் கண்டெடுத்து எனக்குத் தாராளமாக வழங்கியிருக்கிறதென்றும் நான் உணர்ந்த தருணங்களால் பெரிதும் ஆச்சரியமுற்றிருக்கிறேன்.

என் அப்பாவின் சூட்கேஸைத் திறந்து அவரது நோட்டுப்புத்தகங்களை நான் வாசிக்க பயந்ததற்குக் காரணம் நான் பொறுத்துக்கொண்ட சிரமங்களை அவரால் தாங்கமுடியாது என்று நான் அறிந்திருந்தேன். தனிமையையல்ல அவர் நேசித்தது, நண்பர்களோடு கூட்டங்கள், ஓவியக் கண்காட்சிகள், வேடிக்கை, கம்பெனி என்று வாழும் வாழ்க்கையைத்தான். ஆனால் பிற்பாடு என் எண்ணங்கள் வேறு திக்கில் திரும்பின. இத்தகைய எண்ணங்கள், துறவறமும் பொறுமையுமான இத்தகைய கனவுகள் எல்லாமே என் சொந்த வாழ்க்கையிலிருந்தும், எழுத்தாளனாக என் சொந்த அனுபவத்திலிருந்தும் நான் பெற்றிருந்த முன் முடிவுகளே. கூட்டத்திற்கு மத்தியிலும், வீட்டில் குடும்பத்தினரின் சலசலப்பிற்கிடையிலும் எழுதுகிற அற்புதமான எழுத்தாளர்கள் பலர் உண்டு. அது மட்டுமின்றி, நாங்கள் சிறியவர்களாக இருந்தபோது, என் அப்பா குடும்ப வாழ்க்கையின் சுவாரஸ்யத்தில் சலிப்புற்று, எங்களையெல்லாம் விட்டுவிட்டு பாரீசுக்குப் போய்விடுவார். பல எழுத்தாளர்களைப் போல அங்கே ஓட்டல் அறையில் அமர்ந்து நோட்டுப் புத்தகங்களை நிரப்பித் தள்ளுவார். அந்த நோட்டுப் புத்தகங்களில் சில இந்த சூட்கேஸில் இருக்கின்றன என்று தெரியும். ஏனென்றால், அதை என்னிடம் கொண்டு வந்து சேர்ப்பதற்கு சில வருடங்கள் முந்தி என் அப்பாவே தன் வாழ்க்கையின் அந்தக் காலகட்டத்தைப் பற்றி என்னிடம் பேசத் தொடங்கியிருக்கிறார். அந்த வருடங்களைப் பற்றி நான் சிறுவனாக இருந்த காலத்திலேயே அவர் கூறியிருந்தாலும், தனது வடுப்பாடுகளை, எழுத்தாளனாக ஆகவேண்டுமென்ற அவரது கனவுகளை அல்லது அவரது ஓட்டல் அறையில் அவரைப் பீடித்த தன்னடையாளம் குறித்த கேள்விகளை அவர் குறிப்பிட்டதில்லை. பதிலாக, பாரீஸ் நகர நடைபாதைகளில் சார்த்தரை அவர் எப்போதும் பார்ப்பதைப் பற்றி, அவர் படித்த புத்தகங்கள், பார்த்த திரைப்படங்கள் பற்றி, மிக முக்கியமான செய்தியைப் பகிர்ந்துகொள்பவரைப்போல மனமார்ந்த பெருமிதத்தோடு விவரிப்பார்.

நான் ஒரு எழுத்தாளனாக ஆனதற்கு என் அப்பா பாஷாக்களையும் மாபெரும் மதத்தலைவர்களையும் பற்றிப் பேசுவதைவிட, எழுத்தாளர்களின் உலகைப் பற்றி என்னிடம் பேசிக்கொண்டிருந்ததும் ஓரளவுக்கு காரணம் என்பதை நான் எப்போதும் மறந்ததில்லை. எனவே, என் அப்பாவின் நோட்டுப் புத்தகங்களைப் படிக்கும் போது, இதை மனதில் வைத்துக் கொண்டு அவரது மிகப்பெரிய நூலகத்திற்கு நான் எந்தளவுக்குக் கடன்பட்டிருக்கிறேன் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். அப்பா எங்களோடு வசிக்கும்போது, அவர் என்னைப் போலவே புத்தகங்களோடும் சிந்தனைகளோடும் தனியாக இருப்பதையே விரும்பினார் என்பதையும், அவரது எழுத்தின் இலக்கியத்தரத்தைப் அதிகம் சிரத்தை எடுத்துக் கொள்ளவில்லை என்பதையும் நான் மனதில் கொள்ள வேண்டும்.

ஆனால், அப்பா எனக்கு ஆஸ்தியாக விட்டுச் சென்ற சூட்கேஸைப் பார்க்கும்போது, இந்த விஷயத்தை என்னால் செய்ய முடியாது என்று எனக்குத் தோன்றியது. அவரது புத்தகங்களுக்கு முன்னால் போடப்பட்டிருக்கும் திவானில் அப்பா சாய்ந்துகொண்டு கையிலிருக்கும் புத்தகமோ, பத்திரிகையோ நழுவியது தெரியாமல் கனவில் மூழ்கி, தன் எண்ணங்களில் நெடுநேரம் தொலைந்து போயிருப்பார். அவர் ஜோக் அடிக்கும்போதும், கிண்டல் செய்யும் போதும், வீட்டுச் சச்சரவுகளின் போதும் இருக்கும் முகத்திலிருந்து முற்றிலும் மாறுபட்ட பாவத்தில் அவர் முகம் இருப்பதை நான் பார்த்தபோது உள்நோக்கிப் பார்க்கும் பார்வையை நான் முதன் முதலாகத் தரிசித்தது அப்போதுதான். குறிப்பாக, என் பிள்ளைப்பருவத்தில், என் முன் இளம்பருவத்தில், பயத்தோடு கூடிய புரிதலாக அவர் மனநிறைவின்றி இருக்கிறார் என்பதை உணரமுடிந்தது. இப்போது பற்பல வருடங்கள் கழித்து, இந்த மனநிறைவின்மைதான் ஒரு மனிதனை எழுத்தாளனாக்கும் ஆதாரக்கூறு என்று புரிகிறது. எழுத்தாளனாவதற்குப் பொறுமையும், கடும் உழைப்பும் மட்டும் போதாது; கூட்டம், நண்பர்கள், சாதாரண விஷயங்கள், தினசரி வாழ்வு போன்றவற்றிலிருந்து பிய்த்துக் கொண்டு தப்பிச் செல்ல வேண்டிய கட்டாயத்தை அவன் முதலில் உணர வேண்டும். பின் ஓர் அறைக்குள் புகுந்து தன்னை தாழிட்டுக் கொள்ளவேண்டும். நம் எழுத்துக்களில் ஓர் ஆழமான உலகத்தை உருவாக்குவதற்காக பொறுமையையும் நம்பிக்கையையும் வேண்டி நிற்கிறோம். ஆனால் தன்னை ஓர் அறையில் அடைத்துக் கொள்ளும் இச்சை மட்டுமே நம்மைச் செயலாற்ற செலுத்துகிறது. தன் இதயத்திற்குள் புத்தகங்களைக் கொண்டு சென்று வாசிக்கிற, தன் சுயபிரக்ஞையின் குரலுக்கு மட்டும் செவிசாய்க்கிற, மற்றவர்களின் வார்த்தைகளோடு பூசலிடுகிற, தன் புத்தகங்களுடன் விவாதத்தில் இறங்குவதால் தன் சொந்தச் சிந்தனைகளையும் தன் சொந்த உலகத்தையும் வளர்த்தெடுக்கிற இத்தகைய சுதந்திரமான எழுத்தாளனுக்கு முன்னோடி மிக நிச்சயமாக நவீன இலக்கியத்தின்ஆரம்ப நாட்களில் மான்டெய்ன்தான். என் அப்பா அடிக்கடி எடுத்து வாசித்துக் கொண்டிருந்ததும், எனக்கு அறிமுகம் செய்து வைத்ததும் மான்டெய்னைத்தான். கிழக்கிலோ அல்லது மேற்கிலோ உலகில் எங்கேயிருந்தாலும் சமூகத்திலிருந்து தன்னைத் துண்டித்துக் கொண்டு, தமது அறையில் அவர்களது புத்தகங்களோடு அடைபட்டுக் கொள்ளும் எழுத்தாளர்களின் மரபில் வருபவன்தான் நானும் என்று கூறிக்கொள்வேன். உண்மையான இலக்கியத்தின் துவக்கப்புள்ளி என்பது, அவன் தனது புத்தகங்களோடு அறைக்குள் சென்று அடைத்துக் கொள்வதாகத்தான் இருக்க முடியும்.

நம்மை அறைக்குள் அடைத்துக்கொண்ட பிறகு, நாம் நினைத்தளவுக்கு நாம் தனியாக இல்லையென்பதை சீக்கிரமே கண்டுகொள்வோம். நமக்கு முன் வந்தவர்களின் வார்த்தைகளோடு, மற்ற மனிதர்களின் கதைகளோடு, மற்றவர்களின் புத்தகங்களோடு, மற்றவர்களின் வார்த்தைகளோடு, பாரம்பரியம் என்று நாம் அழைக்கிறோமே, அதனோடு நாம் சேர்ந்திருக்கிறோம். தன்னை அறிந்து கொள்ளும் தேடலில் மனிதகுலம் சேமித்து வைத்த மதிப்புமிக்க களஞ்சியம் இலக்கியம் என நம்புகிறேன். சமுதாயங்களும், குலமரபினரும், மனிதர்களும் தம்முடைய கதாசிரியர்களின் மனசாட்சியை உறுத்தும் வார்த்தைகளுக்குச் செவிசாய்க்கும்போது அவர்கள் கூடுதல் அறிவும், செல்வமும் பெற்றவர்களாக, மேலும் முன்னேறியவர்களாக வளர்கின்றனர். நூல்களை எரிப்பதும், எழுத்தாளர்களுக்கு கரிபூசி அவமானப்படுத்துவதும், இருண்ட, அக்கறையோ பொறுப்போ அற்ற காலகட்டம் நம்மீது கவிந்திருக்கிறதென்பதற்கு அறிகுறிகள். ஆனால் இலக்கியம் வெறும் தேசிய அக்கறையாக மட்டுமே எப்போதும் இருந்ததில்லை. அறைக்குள் தன்னை அடைத்துக்கொண்டு தனக்குள்ளாகவே முதன்முதலாகப் பயணம் செய்யத் தொடங்கும் எழுத்தாளன் வருடங்கள் செல்லச்செல்ல இலக்கியத்தின் சாசுவதமான விதியைக் கண்டுகொள்வான்; அவனது சொந்தக்கதைகளை, அவை மற்றவர்களுடைய கதைகள் போலவும், மற்றவர்களின் கதைகளைத் தன் சொந்தக் கதைகளைப் போலவும் சொல்வதற்கு அவனிடம் கலைநயம் இருக்க வேண்டும். அதுதான் இலக்கியம் எனப்படுவதும். ஆனால் முதலில் நாம் மற்றவர்களின் கதைகளுக்கும், புத்தகங்களுக்கும் ஊடாகப் பயணம் செய்தாக வேண்டும்.

அப்பாவிடம் ஒரு நல்ல நூலகம் இருந்தது. மொத்தம் 1500 புத்தகங்கள் இருந்தன. ஒரு எழுத்தாளனுக்குத் தேவைப்படுவதைவிட அதிகம். என் இருபத்திரண்டாவது வயதில் அவை அனைத்தையும் நான் படித்திருக்காவிட்டாலும்கூட, ஒவ்வொரு புத்தகத்தோடும் பரிச்சயம் ஏற்பட்டிருந்தது. எந்தெந்த புத்தகங்கள் முக்கியமானவை, எவையெல்லாம் மேலோட்டமாகவும் வாசிக்க எளிதாகவும் இருப்பவை, எவையெல்லாம் கிளாஸிக்குகள், எந்த இலக்கியப் பாடத்திலும் இன்றியமையாத பகுதிகளாக விளங்குபவை எவை, மறந்துபோகக்கூடிய ஆனால் படிக்க சுவாரஸியமான உள்ளூர் சரித்திரங்கள், அப்பா உயர்வாக மதிக்கும் பிரெஞ்சு எழுத்தாளர்கள் யார் யார் என்றெல்லாம் எனக்குத் தெரிந்திருந்தது. சில நேரங்களில் இந்த நூலகத்தை, இதைவிடச் சிறந்த நூலகத்தை, வேறொரு வீட்டில் எனக்கான ஓர் உலகத்தைச் சிருஷ்டித்துக் கொள்வேன் என்று கற்பனை செய்து கொள்வேன். என் அப்பாவின் நூலகத்தைத் தூரத்திலிருந்து பார்க்கையில், அது நிஜ உலகத்தின் ஒரு சிறிய சித்திரமாகத் தோன்றும். ஆனால் இது இஸ்தான்புல் என்கிற எங்கள் சொந்த மூலையிலிருந்து பார்க்கப்பட்ட உலகம். நூலகம் இதற்குச் சாட்சியாக இருந்தது. இந்த நூலகத்தில் இருந்த புத்தகங்கள் அப்பா பெரும்பாலும் பாரீசுக்கும், அமெரிக்காவுக்கும் சென்றிருந்தபோது வாங்கியவை. அவை மட்டுமின்றி, இஸ்தான்புல்லில் 40_களிலும் 50_களிலும் வெளிநாட்டுப் புத்தகங்களை விற்றுவந்த, பின் எனக்கு பரிச்சயமாகிவிட்ட பழைய மற்றும் புதிய புத்தகக் கடைகளிலிருந்து வாங்கியவைகளும் இருந்தன.

என் உலகம் உள்ளூரும் தேசியமும் மேற்குலகும் கலந்த ஒரு கலவை, 70_களில் நானும் ஏதோ ஒருவித லட்சியத்துடன் என் சொந்த நூலகத்தை உருவாக்கத் தொடங்கினேன். எனது இஸ்தான்புல் நூலில் குறிப்பிட்டதைப் போல நான் எழுத்தாளனாக ஆகப்போவதாக அப்போது தீர்மானித்திருக்கவில்லை. நிச்சயமாக ஓர் ஓவியனாக ஆகப் போவதில்லை என்ற நிதர்சனம் வந்திருந்தது. ஆனால் என் வாழ்க்கை எந்தப் பாதையைத் தேர்ந்தெடுக்கப்போகிறது என்ற நிச்சயம் ஏதும் உண்டாகியிருக்கவில்லை. வாசிக்கவும் கற்றறிந்து கொள்ளவும் ஒரு தணியாத ஆர்வம், நம்பிக்கை சேர்ந்த அவா எனக்குள் நிறைந்திருந்த அதே நேரத்தில், என் வாழ்க்கை ஏதோ ஒரு வகையில் குறைவுபட்டிருப்பதாக மற்றவர்களைப் போல என்னால் வாழ முடியாது என்பதாகத் தோன்றிக் கொண்டிருந்தது.

இந்த உணர்ச்சியின் ஒரு பகுதி, என் அப்பாவின் நூலகத்தை நான் வெறித்துக் கொண்டிருந்தபோது உணர்ந்ததோடு சம்மந்தப்பட்டிருந்தது. அது இஸ்தான்புல்லில் அந்நாட்களில் வசித்திருந்த எங்கள் எல்லோருக்குமே தோன்றிக்கொண்டிருந்த விஷயம்தான். மையப்பகுதியிலிருந்து விலகி வாழ்ந்து வருவதாக, விலக்கப்பட்ட பிரதேசத்தில் வாழ வைக்கப்பட்டிருப்பதாகத் தோன்ற வைக்கும் ஓர் உணர்வு. நான் கவலையுணர்வும் ஏதோ பற்றாக்குறையாகவும் உணர்ந்ததற்கு மற்றொரு காரணமும் இருந்தது. கலைஞர்களிடம் அவர்கள் ஓவியர்களோ எழுத்தாளர்களோ_சிறிதளவும் ஆர்வம் காட்டாத, அவர்களுக்குக் கொஞ்சமும் நம்பிக்கையளிக்காத ஒரு தேசத்தில் வாழ்கிறேன் என்று மிக நிச்சயமாக எனக்குத் தெரிந்திருந்தது. 70_களில் அப்பா எனக்குத் தந்த பணத்தை எடுத்துக் கொண்டு மங்கலான, தூசுபடிந்த, அட்டை கிழிந்த புத்தகங்களை இஸ்தான்புல்லின் பழைய புத்தகக் கடைகளில் அடங்காத பேராசையோடு வாங்கும்போது, தெருவோரங்களிலும், மசூதி வெளி முற்றங்களிலும், சிதிலமுற்ற சுவர்களின் மீது கடைபரப்பி வைத்திருக்கும் அந்தப் பழைய புத்தக வியாபாரிகளின் பரிதாபத்திற்குரிய நிலையைக் கண்டு மனம் கலங்கும்.

இலக்கியத்தில் போலவே வாழ்க்கையிலும் எனது இடம் இவ்வுலகின் மத்தியில் இடம் பெற்றிருக்கவில்லை யென்பதே என் ஆதார உணர்வாக இருந்தது. பிரதானமாக விளங்கும் மத்திய உலகில் வாழ்க்கை எங்கள் சொந்த வாழ்க்கையைவிட ஒட்டுமொத்த இஸ்தான்புல், துருக்கியைவிட, செழிப்பானதாகவும், அதிக சுவாரஸியமிக்கதாகவும் இருக்க, நான் அதற்கு வெளியே இருந்தேன். உலகின் பெரும்பாலான மக்களோடு இந்த உணர்வை நான் பகிர்ந்து கொள்வதாக இன்று நினைக்கிறேன். இதே வகையில் உலக இலக்கியம் ஒன்றும் இருந்தது. அதன் மையம் கூட என்னிடமிருந்து வெகு தூரத்திலேயே அமைந்திருந்தது. உண்மையில் என் மனதில் இருந்தது உலக இலக்கியம் அல்ல, மேலை இலக்கியம். துருக்கியர்களாகிய நாங்கள் இதற்கு வெளியே இருந்தோம். இதற்கு என் அப்பாவின் நூலகம் ஆதாரமாக இருந்தது. இஸ்தான்புல்லின் நூல்கள் எங்கள் இலக்கியம், எங்கள் உள்ளூர் உலகம், அதன்நுட்பமான விவரங்களோடு ஒரு மூலையில் இருந்தன. மறுமுனையில் இந்த மற்ற உலகத்தின், மேற்குலகின் நூல்கள் இருந்தன. இவற்றோடு எங்களுக்குச் சொந்தமானவை எந்த விதத்திலும் ஒத்திருக்காமலிருந்தன. இந்த ஒத்திராமையே எங்களுக்கு வலியையும், நம்பிக்கையையும் ஒருசேர வழங்கின. ஒருவரது உலகை விட்டு நீங்கி, மற்ற உலகின் மற்றவைகளில், விநோதங்களில், வியப்புகளில் ஆறுதல் காண்பதுதான் எழுதுவதும் வாசிப்பதும். என் அப்பா தன் வாழ்க்கையிலிருந்து தப்பிக்கவே நாவல்களை வாசித்தார், பிந்தைய காலங்களில் நான் செய்ததைப் போலவே மேலைநாடுகளுக்குத் தப்பியோடிக் கொண்டிருந்தாரென்று நினைக்கிறேன்.

அக்காலத்தில் நாங்கள் தேர்ந்தெடுத்த நூல்களும் நாங்கள் பெரிதும் குறைபாடாகக் கருதும் எங்கள் கலாச்சாரத்திலிருந்து தப்பிக்கவே என்று எனக்குத் தோன்றியது. வாசிப்பால் மட்டும் எங்கள் இஸ்தான்புல்லை விட்டு மேலைநாடுகளுக்கு நாங்கள் செல்லவில்லை. எழுதுவதால் கூட. அந்த நோட்டுப்புத்தகங்களை நிரப்புவதற்காக என் அப்பா பாரீசுக்குச் சென்று, ஓர் அறைக்குள் அடைத்துக்கொண்டு எழுதிவிட்டு, பின் அவற்றை துருக்கிக்கு கடத்திவந்ததுதான். என் அப்பாவின் சூட்கேஸின் மீது என் பார்வை பதியும்போது என்னை அமைதியிழக்கச் செய்கிறது. இருபத்தைந்து வருடங்கள் ஓர் அறையில் அடைபட்டு உழைத்து, துருக்கியில் ஓர் எழுத்தாளனாக காலந்தள்ளிவிட்ட பிறகு, அவரது ஆழமான சிந்தனைகளை இப்படி ஒரு சூட்கேஸிற்குள் ஒளித்து வைத்திருப்பதையும், எழுதுவது என்பதை ஒரு ரகசியமான தொழிலாகச் செய்யவேண்டியதைப் போல, சமுதாயத்தின், அரசாங்கத்தின், மக்களின் கண்களிலிருந்து தப்பிச் சென்று செயல்பட்டதையும் பார்க்க எனக்கு வேதனையாக இருந்தது. என் அப்பா என்னளவுக்கு இலக்கியத்தை தீவிரமாக எடுத்துக் கொள்ளாததற்காக, அவர் மீது நான் கோபப்பட்டதற்கு ஒரு வேளை இதுதான் பிரதான காரணமாக இருக்கக் கூடும்.

வாஸ்தவத்தில் என் அப்பா மீது நான் கோபம் கொண்டிருந்ததற்குக் காரணம் இருக்கிறது, அவர் என்னைப்போல ஒரு வாழ்க்கையை நடத்தவில்லை, அவருக்கு வாழ்க்கையோடு எப்போதுமே சச்சரவு இருந்ததில்லை. வாழ்நாள் முழுக்க நண்பர்களோடும் அவருக்குப் பிரியமானவர்களோடும் சந்தோஷமாகச் சிரித்து காலம் கழித்துக் கொண்டிருந்ததே போதுமானதாக இருந்தது. ஆனாலும் என்னில் ஒரு பகுதிக்கு நான் ‘பொறாமை’ கொண்டிருந்த அளவுக்கு ‘கோபம்’ கொண்டிருக்கவில்லை என்பது தெரிந்திருந்தது. பொறாமை என்பது அதிகமும் துல்லியமுமான வார்த்தை. இதுவும் என்னை அமைதியிழக்கச் செய்தது. அது எனது வழக்கமான ஏளனமும் கோபமுமான குரலில் என்னையே நான் கேட்டுக்கொள்ளும்போது இருக்கும் விஷயம்: ‘சந்தோஷம் என்பது என்ன? அந்தத் தனியான அறையில் ஒரு பொந்திற்குள் வாழ்வதைப்போல ஒரு வாழ்க்கையை நான் நடத்தியதா சந்தோஷம்? அல்லது சமூகத்தில் ஒரு சௌகரியமான வாழ்க்கையை நடத்திக் கொண்டு, எல்லோரும் நம்பும் விஷயங்களை நாமும் நம்பிக்கொண்டு, செய்து கொண்டிருப்பதா சந்தோஷம்? வெளியுலகத்தோடு முழு இசைவுடன் இருப்பதாக வெளிக்காட்டிக்கொண்டு, ஆனால் ரகசியமாக ஒளிந்து கொண்டு எழுதுகிற வாழ்க்கையை வாழ்வது சந்தோஷகரமானதா, துக்ககரமானதா?’ ஆனால் இவையனைத்துமே மிகையான கோபத்தில் எழும் கேள்விகள். ஒரு நல்ல வாழ்க்கைக்கு அளவீடு என்பது சந்தோஷம்தான் என்ற எண்ணத்தை எங்கிருந்து பெற்றேன்? மக்களும், செய்தித்தாள்களும், அனைவரும் வாழ்க்கையின் மிக முக்கியமான அளவீடு சந்தோஷம்தான் என்று நடந்து கொள்கின்றனர். இது மட்டுமே இதற்கு நேரெதிரானவொன்றுதான் உண்மையாவென கண்டுகொள்ள முயல்வதை நியாயப்படுத்தாதா? எங்கள் வீட்டைவிட்டு என் அப்பா பலமுறை ஓடியிருக்கிறார். அவரை எந்தளவிற்கு நான் அறிந்திருக்கிறேன், அவரது அமைதியின்மையை எந்தளவிற்கு நான் புரிந்து கொண்டிருக்கிறேன்?

எனவே இதுதான் என் அப்பாவின் சூட்கேஸை நான் முதலில் திறப்பதற்கு என்னைச் செலுத்தியது. நான் சற்றும் அறியாத, எழுத்தில் கொட்டி மட்டுமே ஆற்றிக்கொண்ட ஒரு ரகசியம், வாழ்க்கையின் மீதிருக்கும் ஒரு துக்கம் என் அப்பாவுக்கு இருந்ததா? சூட்கேஸைத் திறந்ததுமே அதன் பிரயாண வாசனையையும், பரிச்சயமாகியிருந்த பல நோட்டுப் புத்தகங்களையும் நினைவு கூர்ந்தேன். அந்த நோட்டுப் புத்தகங்களைப் பல வருடங்களுக்கு முன்பே, அவற்றைப் பற்றி அதிகம் விளக்காமல் காட்டியிருக்கிறார். இப்போது நான் கையில் எடுத்த நோட்டுப் புத்தகங்களில் பெரும்பாலானவை அவரது இளம் வயதில் எங்களைவிட்டு பாரீசுக்கு ஓடிப்போன காலங்களில் எழுதியவை. என் அபிமான எழுத்தாளர்கள் பலரைப் போல, அவர்களது சுயசரிதைகளில் படித்திருக்கிறேன். இப்போது நான், நான் இருக்கும் வயதில் என் அப்பா என்ன எழுதியிருப்பார், என்ன சிந்தித்திருப்பார் என்பதை அறிந்து கொள்ள விரும்பினேன். அதைப்போல எதையும் இங்கே காணப்போவதில்லையென்பதை உணர்ந்துகொள்ள எனக்கு அதிகநேரம் பிடிக்கவில்லை. என்னை அதிகமும் அமைதியிழக்கச்செய்தது எதுவென்றால், அவரது நோட்டுப்புத்தகங்களில் அங்குமிங்கும் எனக்குக் காணக் கிடைத்த எழுத்தாளத்தன்மை மிக்க ஒரு குரல். இது என் அப்பாவின் குரல் கிடையாது என்று எனக்கு நானே கூறிக்கொண்டேன்; இது நம்பத்தக்கதாக இல்லை, அல்லது குறைந்த பட்சம் என் அப்பா என்று நான் அறிந்திருந்த மனிதருக்குச் சொந்தமானதில்லை இது. இவற்றை என் அப்பா எழுதியபோது என் அப்பாவாக இல்லாதிருந்திருக்கலாம் என்ற என் பயத்திற்கு அடியில் வேறொரு ஆழமான பயம் இருந்தது; என் அப்பாவின் எழுத்தில் நல்லதாக எதையும் காண எனக்குக் கிடைக்காதபடிக்கு, அடியாழத்தில் நானே நம்பத்தகுந்தவனல்ல என்ற பயம், பிற எழுத்தாளர்களால் என் அப்பா பலமாக பாதிக்கப்பட்டிருக்கிறார் என்பதை நான் கண்டுபிடித்துவிடும் அபாயத்தையும் இது அதிகரித்து, நான் இளைஞனாக இருந்தபோது என் வாழ்க்கையையும், என் இருப்பையும், எழுதும் என் ஆர்வத்தையும், என் பணியையும் கேள்விக்குள்ளாக்கிய எனக்குப் பழகிப்போன அந்தப் பழைய விரக்தியில் என்னை மூழ்கடித்தது. எழுத்தாளனாக எனது முதல் பத்தாண்டுகளில் இத்தகைய சஞ்சலங்களை மிக ஆழமாக உணர்ந்து, எதிர்த்துப் போராடியிருக்கிறேன். ஒருநாள் நான் துறந்ததைப் போலவே, அமைதியின்மையால் துவண்டு, நாவல் எழுதுவதையும் நிறுத்திவிடுவேன் என்ற பயம்.

என் அப்பாவின் சூட்கேஸை மூடி, நான் தூரவைத்தபோது எனக்குள் எழுந்த இரண்டு ஆதாரமான உணர்ச்சிகளை ஏற்கெனவே குறிப்பிட்டிருக்கிறேன்: நாட்டுப்புறப் பகுதியில் தனித்துவிடப்பட்ட உணர்வும், நம்பகத்தன்மை என்னிடம் குறைந்திருக்கிறது என்ற பயமும். இவை உணரப்படுவது இதுதான் முதல் முறை அல்ல. பல வருடங்களாக என் வாசிப்பிலும் எழுத்திலும் இந்த உணர்வுகளை அவற்றின் எல்லா வகை மாதிரிகளையும், திட்டமிடப்படாத விளைவுகளையும், அவற்றின் நரம்பு முனைகளையும், அவற்றின் விசைகளையும், அவற்றின் பற்பல வண்ணங்களையும் ஆய்ந்து கண்டறிந்து, ஆழப்படுத்தி வந்திருக்கிறேன். வாழ்க்கையும் புத்தகங்களும் பெரும்பாலும் நான் இளைஞனாக இருந்த காலத்தில் என் மீது கொடுத்த குழப்பங்களாலும் கூருணர்வுகளாலும் மின்னலாக வெட்டும் வலிகளாலும் என் ஊக்கம் அதிர்வுற்றிருக்கிறது. ஆனால் புத்தகங்கள் எழுதுவதால் மட்டுமே நம்பகத்தன்மையின் பிரச்சனைகளையும் (My name is Red. The Black Book ஆகிய நூல்களில் போல) விளிம்பு நிலை வாழ்க்கையைப் பற்றியும் (Snow, lstanbul ஆகிய நூல்களில் போல) புரிந்து கொள்வதில் ஒரு முழுச் சுற்றுக்கு வந்தேன் எனலாம். நமக்குள் சுமக்கும் ரகசிய காயங்களை, நாமே சரிவர அறிந்திராத படிக்கான ரகசிய ரணங்களை, பொறுமையாக ஆராய்ந்து, அறிந்து, அவற்றின் மேல் ஒளியைப் பாய்ச்சி, இந்த வலிகளையும் காயங்களையும் வரித்து, நம் ஊக்கத்திற்கும் நம் எழுத்திற்கும் ஒரு பிரக்ஞை கொண்ட பகுதியாக அவற்றை ஆக்குவதும் அங்கீகரிப்பதும் தான் எழுத்தாளனாக இருப்பதன் கடமை என்று கருதுகிறேன்.

(2006 ஆம் வருடத்தின் இலக்கியத்திற்கான நோபல் பரிசு துருக்கியைச் சேர்ந்த புகழ்பெற்ற எழுத்தாளர் ஓரான் பாமுக்கிற்கு வழங்கப்பட்டபோது, ஸ்வீடிஷ் அகாதெமியில் டிசம்பர் 10,2006 அன்று பாமுக் நிகழ்த்திய உரை)

எல்லோருக்கும் தெரிந்த, ஆனால் தமக்குத் தெரியும் என்று தெரிந்திருக்காத விஷயங்களைப் பற்றி எழுத்தாளன் பேசுகிறான். இந்த அறிவை ஆராய்வதும், அது வளர்வதைக் கவனிப்பதும் பரவசமூட்டும் ஒரு செயல்; ஒரே நேரத்தில் பரிச்சயமாகவும் மர்மமாகவும் இருக்கும் ஓர் உலகிற்குள் வாசகன் நுழைகிறான். எழுத்தாளன் ஓர் அறைக்குள் தன்னை வருடக்கணக்காக அடைத்துக் கொண்டு தன் பணியை_உலகம் ஒன்றை உருவாக்க_செப்பனிட்டுக் கொண்டிருக்கும் போது, அவனது ரகசிய ரணங்களை, அவனது துவக்கப்புள்ளியாகப் பயன்படுத்தினால், அவன் அறிந்தோ அல்லது அறியாமலோ, மனிதத்துவத்தின் மீது பெரும் நம்பிக்கை வைக்கிறான். எல்லா மனிதர்களும் ஒருவரையருவர் ஒத்திருக்கின்றனர் என்ற இந்த குழந்தைத்தனமான, நம்பிக்கையூட்டும் நிச்சயத்தன்மையிலிருந்தே எல்லா உண்மை இலக்கியங்களும் எழுகின்றன. முடிவேயின்றி வருடக்கணக்காக ஓர் எழுத்தாளன் அறை ஒன்றிற்குள் தன்னை அடைத்துக் கொண்டிருந்தால், அதன் மூலம் அவன் ஒரே மனிதத்துவத்தை, மையமற்ற ஓர் உலகத்தை முன் வைக்கத் தொடங்குகிறான்.

ஆனால், என் அப்பாவின் சூட்கேஸையும் எங்கள் இஸ்தான்புல் வாழ்வின் வெளிறிய நிறங்களையும் பார்க்கையில் இந்த உலகத்திற்கு ஒரு மையம் இருக்கிறது, அது எங்களிடமிருந்து வெகுதூரத்தில் இருக்கிறது என்று தெரிகிறது. இந்த அடிப்படை உண்மை எவ்வாறு ஒரு செகாவ்தனமான சிற்றூர்தனத்தைத் தூண்டிவிடுகிறது என்பதையும், வேறொரு மார்க்கத்தில் இது என் நம்பகத்தன்மையை கேள்விகேட்பதற்கு இட்டுச் செல்கிறது என்பதையும் கொஞ்சம் விளக்கமாகவே என் நூல்களில் விவரித்திருக்கிறேன். இவ்வுலகில் பெரும்பான்மையினர் இதே உணர்வுகளோடு வாழ்கின்றனர் என்பதை அனுபவத்திலிருந்து அறிவேன். அதேயளவு மனிதர்கள் என்னைவிட அதிகமான போதாமை உணர்வுகளாலும், பத்திரக் குறைவாலும், அவமான உணர்வாலும் அவஸ்தையுற்றிருக்கின்றனர் என்பதையும் அறிவேன். ஆம், மனிதகுலத்தை எதிர்நோக்கியிருக்கும் மகத்தான பிரச்சனைகளாக நிலமின்மையும், வாழ்விடமின்மையும், பசியும்தான் இன்றளவும் இருக்கின்றன…. ஆனால் இத்தகைய அடிப்படை பிரச்சனைகளைப் பற்றி இன்று நமது தொலைக்காட்சிகளும், செய்தித்தாள்களும் இலக்கியத்தைவிட மிக வேகமாக, எளிமையாக நமக்குக் கூறி விடுகின்றன. இன்று இலக்கியம் சொல்லவும், ஆராயவும் வேண்டிய மனிதகுலத்தின் அடிப்படை பயங்கள்; வெளியே தனித்து விடப்படும் பயம், ஒன்றுமில்லாததற்காக தண்டிக்கப்படும் பயம். இத்தகைய பயங்களோடு சேர்ந்துவரும் மதிப்பிழக்கப்பட்ட உணர்வுகள்; கூட்டு அவமானங்கள், வடுப்பாடுகள், புறக்கணிப்புகள், மனத்துயர்கள், உணர்வினைகள், கற்பனை அவமானங்கள், தேசியவாத எக்களிப்புகள், தற்பெருமைகள்… இத்தகைய மிகு உணர்ச்சிகளும், இவை வழக்கமாக வெளிப்படுத்தும் பகுத்தறிவற்ற மிகைக்கூற்றுகளும் என்னைத் தாக்கும் போதெல்லாம் எனக்குள்ளிருக்கும் ஓர் இருண்மையை அவை தீண்டுவதாக அறிகிறேன். மேலை உலகிற்கு வெளியேயிருக்கும் மக்கள், சமுதாயங்கள், தேகங்கள் தமது அவமதிப்பு பயங்களாலும், மிகையுணர்வுகளாலும், தீவிரமாக பாதிப்புற்று, மதிகேடான காரியங்களைப் புரிவதை நாம் அவ்வப்போது பார்க்கிறோம். அவர்களை எளிதாக என்னுடன் சேர்த்து அடையாளம் கண்டுகொள்கிறேன். அதே விதமான எளிமையுடன் நான் அடையாளம் கண்டுகொள்ளும் மேற்குலகிலும் தேசங்களும் மக்களும் தமது செல்வம், மறுமலர்ச்சியைக் கொண்டு வந்த பெருமை, அறிவு விளக்கம், நவீனத்துவம் போன்றவை எழுப்பும் பெருமிதத்தால் சுயதிருப்திக்கு ஆளாவதும் அதே விதமான மதிகேடுதான்.

இதற்குப் பொருள், என் அப்பா மட்டுமல்ல நாமெல்லோருமே ஒரு மையம் உடைய உலகத்தைப் பற்றி அதிகம் அலட்டிக் கொள்கிறோம் என்பது. அறைக்குள் நம்மைப் பூட்டிக் கொண்டு வருடக் கணக்காக முடிவின்றி எழுதுவதற்கு நம்மை வற்புறுத்துவது இதற்கெதிரான ஒரு நம்பிக்கை; உலகெங்குமுள்ள மனிதர்கள் ஒருவரையருவர் ஒத்திருப்பதால் நம் எழுத்துக்கள் ஒரு நாள் படிக்கப்பட்டு புரிந்துகொள்ளப்படும் என்ற நம்பிக்கை. ஆனால், என் சொந்த எழுத்திலிருந்தும் என் அப்பாவின் எழுத்திலிருந்தும் நான் அறிந்து கொண்டது என்னவென்றால், விளிம்புகளில் முடக்கப்பட்டதாலும், வெளியே தனித்து விடப்பட்டதாலும் கோபக்கறை படிந்து சிதைக்கப்பட்டிருக்கும் ஒரு நன்னம்பிக்கை இதுவென்பதே. தன் வாழ்க்கை முழுக்க தாஸ்தயேவ்ஸ்க்கிக்கு மேற்கின் மீதிருந்த அன்பும் வெறுப்பும் ஒன்று கலந்த உணர்வை நானும் பலமுறை உணர்ந்திருக்கிறேன். ஆனால் ஆதாரமான உண்மை ஒன்றை நான் பற்றியிருந்தால், நன்னம்பிக்கைக்கு எனக்கு காரணமிருந்தால், அதற்கு காரணம் இந்த மாபெரும் எழுத்தாளரோடு மேற்கின் மீதிருந்த அவரது அன்பு வெறுப்பு உறவின் வழியாகப் பயணித்து, மறுபக்கத்தில் அவர் கட்டியெழுப்பியிருந்த மற்ற உலகத்தை நான் கைக்கொண்டதேயாகும்.

இப்பணியில் தமது வாழ்வை அர்ப்பணித்திருக்கும் எல்லா எழுத்தாளர்களும் இந்த யதார்த்தத்தை உணர்ந்திருக்கின்றனர்: நமது அசலான நோக்கம் எதுவாயிருப்பினும் வருடக் கணக்காக நம்பிக்கையோடு எழுதி, நாம் படைக்கும் உலகம் இறுதியில் பெரிதும் வேறுபட்ட மற்ற இடங்களுக்குத்தான் போகப்போகிறது. துக்கமும் கோபமுமாக நாம் பணியாற்றிய மேசையிலிருந்து நம்மை வெகு தொலைவிற்கு, வேறோர் உலகத்தின் துக்கமும் கோபமும் கொண்ட மறுபக்கத்திற்கு அது கொண்டு செல்கிறது. அத்தகைய ஓர் உலகத்தை என் அப்பாவால் தனியாகவே அடைந்திருக்க முடியாதா? ஒரு நிலப்பரப்பு மெதுவாக உருக்கொள்வதைப் போல, நீண்டதொரு கடற்பிரயாணத்திற்குப் பின் மூடுபனியிலிருந்து அதன் எல்லா வண்ணங்களோடும் மெதுவாக எழும்புகிற ஒரு தீவைப்போல இந்த மற்ற உலகம் நம்மை மயக்கி வயப்படுத்துகிறது; தெற்கிலிருந்து பயணம் செய்து இஸ்தான்புல்லிற்கு வந்த மேலைநாட்டு யாத்ரீகர்கள் அது மூடுபனியிலிருந்து எழும்பிப் புலப்பட்டதைப் பார்த்துத் திகைப்புற்றதைப் போல. நம்பிக்கையும் ஆர்வமுமாகத் தொடங்கிய ஒரு பயணத்தின் இறுதியில், இதோ அவர்களுக்கு முன்னால் மசூதிகளும், பள்ளிவாசல் ஸ்தூபிகளுமாக விதவிதமான வீடுகளும், தெருக்களும், குன்றுகளும், பாலங்களும், சரிவுகளுமாக ஒரு முழு உலகமே அவர்கள் முன் விரிகின்றது. அதைக் கண்ட பின்பு இந்த உலகிற்குள் நுழைந்து அதற்குள் நம்மைத் தொலைத்துக் கொள்வதைப் போல ஒரு புத்தகத்தையும் அணுகுகிறோம். விலக்கப்பட்டவர்களாக, விளிம்புகளுக்கு ஒதுக்கப்பட்டவர்களாக நம்மை உணர்ந்து கோபத்துடனும், ஆழ்ந்த மனக்கசப்புடனும் ஒரு மேசையில் அமர்ந்தபின்பு இந்த மிகையுணர்ச்சிகளுக்கெல்லாம் அப்பாற்பட்ட ஒரு முழு உலகத்தை நாம் கண்டடைகிறோம்.

இப்போது நான் உணர்வது, சிறுவனாகவும், இளைஞனாகவும் இருந்த போது உணர்ந்ததற்கு நேரெதிரானது: என்னைப் பொறுத்தவரை உலகத்தின் மையம், இஸ்தான்புல். இது நான் பிறந்ததிலிருந்து அங்கேயே வாழ்ந்து வருவதால் சொல்வதல்ல. கடந்த 33 வருடங்களாக அதன் தெருக்கள், அதன் பாலங்கள், அதன் மனிதர்கள், அதன் நாய்கள், அதன் வீடுகள், அதன் மசூதிகள், அதன் நீரூற்றுகள், அதன் விநோதமான நாயகர்கள், அதன் சரிவுகள், அதன் பிரபலமான பாத்திரங்கள், அதன் இருட்டுப் பகுதிகள், அதன் பகல்கள், அதன் இரவுகளை வர்ணித்து அவற்றை என் பகுதியில் ஒன்றாக்கி, அனைத்தையும் அரவணைத்து வந்திருக்கிறேன். என் கைகளால் உருவாக்கிய இந்த உலகம், என் தலையில் மட்டும் வாழ்ந்து வந்த இந்த உலகம், நான் உண்மையில் வாழ்கின்ற நகரத்தை விட நிஜமானதாக எனக்குத் தோன்ற ஆரம்பித்த ஒரு கட்டமும் வந்தது. என் கற்பனையிலோ, அல்லது புத்தகங்களிலோ மட்டும் வாழ்பவர்களாக இல்லாமல் தமக்காகவே வாழ்வதுபோல இதன் மனிதர்களும், தெருக்களும், பொருட்களும், கட்டிடங்களும் தமக்குள் பேசிக்கொள்ளவும், நான் எதிர்பாரா வகையில் அவை ஊடாடவும் செய்தபோது நடந்தது இது. ஊசியை வைத்துக் கொண்டு ஒரு கிணற்றைத் தோண்டுவது போல நான் உருவாக்கிய உலகம் மற்றனைத்தையும் விட நிஜமாகத் தோன்றியது அப்போதுதான்.

இந்த வகையான மகிழ்ச்சியை அவர் எழுதிக் கொண்டிருந்த வருடங்களிலும் என் அப்பா கண்டிருக்க வேண்டுமென்று அவர் சூட்கேஸைப் பார்க்கும்போது எனக்குத் தோன்றியது. நான் அவரை முன் தீர்ப்பிடக் கூடாது. என்ன இருந்தாலும் நான் அவருக்குப் பெரிதும் கடமைப்பட்டிருக்கிறேன். அவர் எப்போதுமே அதிகார தோரணையில், தடையுத்தரவளித்துக் கொண்டு, ஆதிக்கம் செலுத்திக் கொண்டு, தண்டித்துக் கொண்டிருந்த சாதாரண அப்பாவாக இருந்ததில்லை. எப்போதுமே என்னை சுதந்திரமாக அனுமதித்து எப்போதுமே அதிகபட்ச மதிப்பையும் காட்டுபவராக இருந்தவர். என் கற்பனையிலிருந்து சுதந்திரமாகவோ அல்லது குழந்தைத்தனமாகவோ அவ்வப்போது எதையாவது தீட்டிக்கொண்டிருந்தேனென்றால், அதற்குக் காரணம் சிறு பிராயத்திலும் இளமைப்பருவத்திலும் எனக்கிருந்த பெரும்பாலான நண்பர்களைப் போலில்லாமல், எனக்கு என் அப்பாவைப் பற்றி எந்த அச்சமும் இருந்ததில்லை என்பதை நான் அடிக்கடி நினைத்துக் கொள்கிறேன். நான் எழுத்தாளனாக ஆனதற்கே, என் அப்பா அவரது இளமையில் எழுத்தாளனாக விரும்பியதுதான் காரணம் என்றும் சில நேரங்களில் நம்புகிறேன். அவரைப் பொறுமையுடன் நான் படித்தாக வேண்டும் _ அந்த ஓட்டல் அறைகளில் அவர் எழுதியவற்றைப் புரிந்துகொள்ள முயலவேண்டும்.

இந்த நம்பிக்கையூட்டும் நினைவுகளோடு என் அப்பா வைத்த இடத்திலேயே இன்னமும் இருக்கிற அந்த சூட்கேஸை நெருங்கினேன். என் மன உறுதி அனைத்தையும் உபயோகித்து சில கைப்பிரதிகளையும் நோட்டுப் புத்தகங்களையும் வாசித்துப் பார்த்தேன். எதைப்பற்றி என் அப்பா எழுதியிருக்கிறார்? பாரீஸ் நகர ஓட்டல்களின் சில ஜன்னல்கள் வழி காட்சிகள், சில கவிதைகள், முரணுரைகள், அலசல்கள்… இவற்றை எழுதும்போது சாலை விபத்தில் சிக்கிய ஒருவனைப்போல, எப்படி நிகழ்ந்தது என்று ஞாபகம் வராமல் தவித்துக் கொண்டு, அதே நேரத்தில் அளவிற்கதிகமாக ஞாபகப்படுத்திக்கொள்கிற அபாயத்திலும் காலெடுத்து வைப்பதுபோல உணர்கிறேன். நான் சிறுவனாக இருந்தபோது என் அப்பாவுக்கும் அம்மாவுக்கும் சச்சரவு துவங்கப்போவதாக இருந்தால்_அவர்கள் அப்போது அந்தப் பயங்கரமான நிசப்தத்தில் ஆழ்ந்துவிடுவர்_என் அப்பா சட்டென்று ரேடியோவைப் போட்டுவிடுவார். சங்கீதம், சூழலை மாற்றி அதை வேகமாக மறந்துபோக எங்களுக்கு உதவிசெய்யும்.

அந்த சங்கீதத்தைப் போலவே சூழலை மாற்றுவதற்கு சில இனிய வார்த்தைகளைக் கூறலாம் என்று கருதுகிறேன். நீங்கள் அனைவரும் அறிந்திருப்பதைப் போல எழுத்தாளர்களான எங்களிடம் அடிக்கடி கேட்கப்படும் அபிமான கேள்வி: ஏன் நீங்கள் எழுதுகிறீர்கள்? எழுதுவதற்கு உள்ளார்ந்த தேவை ஒன்று என்னிடம் இருப்பதால் நான் எழுதுகிறேன்! மற்றவர்களைப்போல என்னால் சாதாரண வேலைகளைச் செய்யமுடியாது என்பதால் எழுதுகிறேன். நான் எழுதுவதைப் போன்ற புத்தகங்களை நான் வாசிக்க விரும்புவதால் எழுதுகிறேன். உங்கள் அனைவரின் மீதும், எல்லோரின் மீதும் நான் கோபமாக இருப்பதால் எழுதுகிறேன். ஒரு தனியறையில் அடைத்துக் கொண்டு நாளெல்லாம் எழுதுவது எனக்கு விருப்பமாக இருப்பதால் எழுதுகிறேன். நிஜவாழ்க்கையை மாற்றுவதன் மூலமே என்னால் அதில் பங்குகொள்ள இயலும் என்பதால் எழுதுகிறேன். இஸ்தான்புல்லில், துருக்கியில், எம்மாதிரியான வாழ்க்கையை நாங்கள் வாழ்ந்தோம், தொடர்ந்து வாழ்ந்து வருகிறோம் என்பதை மற்றவர்கள், நம்மெல்லோரும், மொத்த உலகமும் அறிந்து கொள்ள வேண்டுமென்பதால் எழுதுகிறேன். பேப்பர், பேனா, மையின் வாசனை எனக்குப் பிடித்தமானவை என்பதால் எழுதுகிறேன். வேறு எதனையும் விட இலக்கியத்தின் மேல், நாவல் என்ற கலைவடிவத்தின் மேல் நம்பிக்கை வைத்திருப்பதால் எழுதுகிறேன். அது ஒரு பழக்கம், ஒருவிதமான இச்சை என்பதால் எழுதுகிறேன். நான் மறக்கப்பட்டு விடுவேனோ என்ற பயத்தால் எழுதுகிறேன். எழுத்து அழைத்து வருகிற புகழையும் ஆர்வத்தையும் நான் விரும்புவதால் எழுதுகிறேன். தனியாக இருப்பதற்காக எழுதுகிறேன். உங்கள் அனைவரின் மீதும் எதற்காக நான் மிக மிகக் கோபமாக இருக்கிறேன், எல்லோர் மீதும் ஏன் மிக மிகக் கோபமாக இருக்கிறேன் என்பதை நான் புரிந்து கொள்வதற்காகக்கூட நான் ஒருவேளை எழுதுவதாக இருக்கலாம். நான் வாசிக்கப்பட வேண்டும் என்பதற்காக எழுதுகிறேன். ஒரு நாவலை, ஒரு கட்டுரையை ஒரு பக்கத்தை எழுதத் தொடங்கி விட்டேனென்றால், அதை முடிக்க வேண்டும் என்பதற்காக எழுதுகிறேன். எல்லோரும் நான் எழுத வேண்டும் என்று எதிர்பார்ப்பதால் எழுதுகிறேன். நூலகங்களின் சாஸ்வதத்தைப் பற்றியும், அலமாரிகளில் என் புத்தகங்கள் அடுக்கப்பட்டிருப்பதிலும் எனக்கு ஒரு குழந்தைத்தனமான நம்பிக்கை இருப்பதால் எழுதுகிறேன். வாழ்க்கையின் எல்லா அழகுகளையும் செல்வங்களையும் எழுத்தாக்குவதில் இருக்கும் கிளர்ச்சியினால் எழுதுகிறேன். ஒரு கதையைச் சொல்வதற்காக அல்ல, ஒரு கதையை இயற்றுவதற்காக எழுதுகிறேன். நான் போகவேண்டிய இடம் ஒன்று இருக்கிறது. ஆனால்_ ஒரு கனவில் வருவதைப்போலவே _ அங்கே என்னால் அடையவே முடியாதிருக்கிறது என்ற துர்சகுணத்திலிருந்து தப்பிக்க விரும்புவதால் எழுதுகிறேன். என்னால் எப்போதுமே சந்தோஷமாக இருக்க முடியாததற்காக எழுதுகிறேன். சந்தோஷமாக இருப்பதற்காக எழுதுகிறேன்.

அவர் என் அலுவலகத்திற்கு வந்து சூட்கேஸை வைத்துவிட்டுச் சென்ற ஒரு வாரம் கழித்து என் அப்பா மீண்டும் என்னைப் பார்க்க, எப்போதும் போல் ஒரு சாக்லேட் பொட்டலத்தோடு வந்தார். (எனக்கு 48 வயதாகிறது என்பதை மறந்துவிட்டிருக்கிறார்). எப்போதும் போல நாங்கள் வாழ்க்கை, அரசியல், குடும்ப சமாச்சாரங்கள் என்று அரட்டை அடித்து சிரித்துக் கொண்டிருந்தோம். என் அப்பாவின் கண்கள் அவரது சூட்கேஸை வைத்திருந்த மூலைக்குச் சென்ற தருணமும் வந்தது. அதை நகர்த்தி வைத்திருக்கிறேன் என்பதைக் கவனித்து விட்டார். எங்கள் பார்வைகள் நேருக்கு நேராக சந்தித்துக் கொண்டன. ஒரு நிசப்தம் அங்கே அழுத்தமாகப் பின் தொடர்ந்தது. சூட்கேஸைத் திறந்து, அதில் உள்ளவற்றைப் படிக்க முயற்சி செய்தேன் என்பதை அவரிடம் கூறவில்லை; பதிலாக பார்வையைத் திருப்பிக் கொண்டேன். ஆனால் அவர் புரிந்து கொண்டார். அவர் புரிந்து கொண்டார் என்பதை நான் புரிந்து கொண்டதைப் போல. அவர் புரிந்து கொண்டு விட்டார், என்பதை நான் புரிந்து கொண்டுவிட்டேன் என்பதை அவர் புரிந்து கொண்டதைப் போல. ஆனால், இந்தப் புரிந்து கொள்ளல் எல்லாமே பதினைந்து விநாடிகளுக்குத் தாக்குப் பிடிக்கும் வரை தான் சென்றது. என் அப்பா ஒரு குதூகலமான, எதையும் சுலபமாக எடுத்துக் கொள்கிற, தன்னம்பிக்கை மிக்க மனிதர். எப்போதும் போலவே என்னைப் பார்த்துப் புன்னகைத்தார். வீட்டை விட்டுக் கிளம்பும்போது அவர் எப்போதுமே என்னிடம் கூறுகிற இனிமையான, ஊக்கமளிக்கும் விஷயங்கள் எல்லாவற்றையும் திரும்பக் கூறினார், ஒரு அன்பான அப்பாவைப் போலவே.

எப்போதும் போலவே அவர் கிளம்பிச் செல்வதைப் பார்க்கும் போது அவரது அக்கறையற்ற, எதற்கும் கலங்காத மனோபாவத்தை எண்ணி பொறாமையாக உணர்ந்தேன். ஆனால் அன்றைய தினம் என்னை வெட்கமுறச்செய்த ஒரு சந்தோஷக் கீற்றும் எனக்குள் இருந்தது. ஞாபகமிருக்கிறது. அவருக்கு வாய்த்த அளவுக்கு ஒரு சௌகரியமான வாழ்க்கை, அவருக்கிருந்தளவுக்கு சந்தோஷமான அல்லது சுகவாசியாக ஒரு வாழ்க்கை எனக்கு வாய்த்திருக்கவில்லை, என் வாழ்க்கை மொத்தத்தையும் எழுதுவதற்கு மட்டுமே நான் அர்ப்பணித்திருக்கிறேன் என்ற நினைப்பு_நான் கூற வருவது உங்களுக்குப் புரிந்துவிட்டது இல்லையா… என் அப்பாவை முன் வைத்து இப்படியான விஷயங்களை யோசிப்பது எனக்கு வெட்கமாக இருந்தது. என் வலிகள் எதற்கும் என் அப்பா காரணமாக இருந்ததில்லை. என்னை சுதந்திரமாக அனுமதித்திருக்கிறார். இவையெல்லாமே எழுதுவதும் இலக்கியமும் நம் வாழ்க்கையின் மையத்தில் உள்ள பற்றாக்குறை ஒன்றோடும், சந்தோஷமும் குற்றவுணர்வுமான நம் உணர்வுகளோடும் ஆழமாகப் பிணைந்திருக்கிறது என்று நமக்குக் காட்டுகின்றன.

ஆனால் என் கதையிலிருந்த ஒரு சரிச்சீரமைவு அன்றைய தினம் வேறொன்றை நினைவுபடுத்தி அது இன்னமும் அதிகமான குற்றவுணர்ச்சியைக் கொண்டு வந்தது. அவரது சூட்கேஸைத் தந்துவிட்டுச் சென்றதற்கு இருபத்தி மூன்று வருடங்கள் முன்பு, என இருபத்திரெண்டாவது வயதில் மற்ற எல்லாவற்றையும் புறக்கணித்து விட்டு ஒரு நாவலாசிரியனாக முடிவெடுத்து ஓர் அறைக்குள் என்னை அடைத்துக் கொண்டு எனது முதல் நாவலான Cevdet Bey and sons  ஐ முடித்ததற்கு நான்கு வருடங்கள் கழித்து, அப்போது இன்னமும் வெளி வந்திராத நாவலின் தட்டச்சுப் பிரதியை கைகள் நடுங்க என் அப்பாவிடம் கொடுத்து படித்துப் பார்த்து அவர் அபிப்பிராயத்தைக் கூறும்படி கேட்டிருக்கிறேன். அது, அவர் ரசனையின் மீதும், அறிவுக் கூர்மையின் மீதும் நான் வைத்திருந்த நம்பிக்கையால் மட்டுமல்ல, அவரது அபிப்பிராயம் எனக்குப் பெரிதும் முக்கியமானது. என் அம்மாவைப்போல நான் எழுத்தாளனாக விரும்பியதற்கு அவர் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. அந்த நேரத்தில் என் அப்பா எங்களோடு இல்லை, வெகுதூரத்தில் இருந்தார். அவர் திரும்பி வருவதற்காக பொறுமையிழந்து நான் காத்திருந்தேன். இரண்டு வாரங்கள் கழித்து அவர் வந்ததும் கதவைத் திறக்க ஓடினேன். என் அப்பா எதுவும் பேசவில்லை. ஆனால் உடனே கைகளை விரித்து என்னை ஆரத் தழுவிக் கொண்டது அவர் அதை வெகுவாக ரசித்திருக்கிறார் என்பதைக் காட்டியது. மகத்தான உணர்ச்சித் தருணங்களில் உடன் வருவது போன்ற ஒரு சங்கடமான மௌனம் கொஞ்ச நேரத்திற்கு எங்களை மூழ்கடித்தது. பின் அமைதியடைந்து பேசத் தொடங்கினோம். என் அப்பா பெரிதும் உணர்ச்சி வசப்பட்ட, மிகையான பாஷையில், அவர் என் மீதோ அல்லது எனது முதல் நாவல்மீதோ வைத்திருந்த நம்பிக்கையைக் கூறத் தொடங்கினார். இங்கே மகத்தான பெருமிதத்துடன் நான் பெறுவதற்கு வந்திருக்கும் பரிசை ஒருநாள் நான் வென்றெடுப்பேன் என்று அவர் கூறினார்.

அவரது நல்லபிப்பிராயத்தைச் சொல்லி என்னைத் திருப்திப்படுத்துவதற்காகவோ, அல்லது இந்தப் பரிசை ஒரு லட்சியமாக வைத்துக் கொள்ள வேண்டுமென்பதற்காகவோ அவர் இதைக் கூறவில்லை; அவர் ஒரு துருக்கிய அப்பாவைப்போல, தன் மகனுக்கு ஆதரவளித்து, ‘ஒருநாள் நீ ஒரு பாஷா ஆகப்போகிறாய்!’ என்று விளக்கமளித்து கூறினார். பின் பல வருடங்கள், எப்போது என்னைப் பார்த்தாலும் இதே வார்த்தைகளைத்தான் கூறி எனக்கு விளக்கமளிப்பார்.

என் அப்பா டிசம்பர் 2002_ல் காலமானார்.

இன்று ஸ்வீடிஷ் அகாதெமிக்கும், இந்த மாபெரும் பரிசை_ இம் மகத்தான மேன்மையை _ எனக்களித்திருக்கும் பெருமைமிக்க உறுப்பினர்களுக்கும் அவர்களின் புகழ்மிக்க விருந்தினர்களுக்கும் முன்னால் நான் நிற்கும் போது, இங்கே நம்மிடையே அவர் இருக்கக் கூடும் என்று உளப்பூர்வமாக நம்புகிறேன்.

Posted in Award, Essay, Fiction, Kumudam, Kumudham, Kumutham, Lecture, Literature, Nobel, Novel, novelist, Orhan, Orhan Pamuk, Pamuk, Prize, Talk, Tamil, Theeranadhi, Theeranadhy, Theeranathi, Theeranathy, Thiranathi, Thiranathy, Translation, Turkey, Turkish, Winner | 2 Comments »

Tamil nadu Government’s Kalaimamani Award Recipients – Announcement (2007-08)

Posted by Snapjudge மேல் மே 10, 2007

தமிழக அரசின் கலைமாமணி விருதுகள்: பாலகுமாரன், இயக்குநர் பாலா, சிம்பு, த்ரிஷா உள்பட 60 பேருக்கு விருது அறிவிப்பு

சென்னை, மே 11: தமிழக அரசின் கலைமாமணி விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. எழுத்தாளர் பாலகுமாரன், இயக்குநர் பாலா, நடிகர் சிம்பு, நடிகை த்ரிஷா உள்பட 60 பேர் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர். தமிழக அரசு வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

  1. கோவைத் தம்பி-திரைப்படத் தயாரிப்பாளர்
  2. சீமான்-திரைப்பட இயக்குநர்
  3. சிம்பு-திரைப்பட நடிகர்
  4. “ஜெயம்’ ரவி-திரைப்பட நடிகர்
  5. ஜீவா-திரைப்பட நடிகர்
  6. விஷால்-திரைப்பட நடிகர்
  7. த்ரிஷா-திரைப்பட நடிகை
  8. நவ்யா நாயர்-திரைப்பட நடிகை
  9. கஞ்சா கருப்பு-நகைச்சுவை நடிகர்
  10. ஆர்த்தி-நகைச்சுவை நடிகை
  11. வினித்-குணசித்திர நடிகர்
  12. பாலகுமாரன்-இயற்றமிழ் கலைஞர்
  13. வண்ணதாசன்-இயற்றமிழ் கலைஞர்
  14. கவிஞர் கலாப்பிரியா-இயற்றமிழ் கலைஞர்
  15. சுப.வீரபாண்டியன்-இலக்கியப் பேச்சாளர்
  16. மரபின் மைந்தன் முத்தையா-இலக்கியப் பேச்சாளர்
  17. கீதா ராஜசேகர்-இசை ஆசிரியர்
  18. சஞ்சய் சுப்ரமணியம்-குரலிசைக் கலைஞர்
  19. ஸ்ரீவத்சவா-மிருதங்கக் கலைஞர்
  20. சரஸ்வதி ராஜகோபாலன்-வீணைக் கலைஞர்
  21. டாக்டர் இரா.செல்வகணபதி-சமயச் சொற்பொழிவாளர்
  22. இறையன்பன் குத்தூஸ்-இறையருட்பாடகர்
  23. இஞ்சிக்குடி சுப்ரமணியன்-நாதஸ்வர கலைஞர்
  24. மலைக்கோட்டை எஸ்.சுப்ரமணியன்-தவில் கலைஞர்
  25. கிரிஜா பக்கிரிசாமி-பரதநாட்டிய ஆசிரியர்
  26. திவ்யா கஸ்தூரி-பரதநாட்டிய கலைஞர்
  27. சிந்தூரி-பரதநாட்டிய கலைஞர்
  28. திருநங்கை நர்த்தகி நடராஜ்-நாட்டிய நாடகக் கலைஞர்
  29. ஆர்.முத்தரசி-நாட்டிய நாடகக் கலைஞர்
  30. கவிஞர் இன்குலாப்-நாடக ஆசிரியர்
  31. பேராசிரியர் இரா.ராஜு-நவீன நாடக இயக்குநர்
  32. தங்கராஜ் என்ற எம்எல்ஏ தங்கராஜ்-நாடக நடிகர்
  33. வி.மூர்த்தி-நாடக நடிகர்
  34. தேவிப்பிரியா என்ற ரமணதேவி-நாடக நடிகை
  35. வி.ஆர்.திலகம்-பழம்பெரும் நாடக நடிகை
  36. சி.ஐ.டி.சகுந்தலா-பழம்பெரும் திரைப்பட நடிகை
  37. பா.விஜய்-திரைப்பட பாடலாசிரியர்
  38. நா.முத்துக்குமார்-திரைப்பட பாடலாசிரியர்
  39. கபிலன்-திரைப்பட பாடலாசிரியர்
  40. இயக்குநர் பாலா-திரைப்பட கதாசிரியர்
  41. வித்யாசாகர்-திரைப்பட இசையமைப்பாளர்
  42. மது பாலகிருஷ்ணன்-திரைப்பட பின்னணி பாடகர்
  43. திப்பு-திரைப்பட பின்னணி பாடகர்
  44. பாம்பே ஜெயஸ்ரீ-திரைப்பட பின்னணி பாடகி
  45. எம்.வி.பன்னீர்செல்வம்-திரைப்பட ஒளிப்பதிவாளர்
  46. விட்டல்-திரைப்பட எடிட்டர்
  47. நேஷனல் செல்லையா-திரைப்பட புகைப்படக் கலைஞர்
  48. அதிவீர பாண்டியன்-திரைப்பட பத்திரிகை ஆசிரியர்
  49. கே.அம்மச்சி விராமதி-நாட்டுப்புற இசைக் கலைஞர்
  50. ஆக்காட்டி ஆறுமுகம்-நாட்டுப்புற இசைக் கலைஞர்
  51. டாக்டர் கே.ஏ.குணசேகரன்-நாட்டுப்புற இசை ஆய்வாளர்
  52. டிராட்ஸ்கி மருது-ஓவியக் கலைஞர்
  53. சி.ஜெ.பாஸ்கர்-சின்னத்திரை இயக்குநர்
  54. விடுதலை-சின்னத்திரை கதை வசனகர்த்தா
  55. வேணு அரவிந்த்-சின்னத்திரை நடிகர்
  56. போஸ் வெங்கட்-சின்னத்திரை நடிகர்
  57. மௌனிகா-சின்னத்திரை நடிகை
  58. தீபா வெங்கட்-சின்னத்திரை குணச்சித்திர நடிகை
  59. டி.ஜி.தியாகராஜன்-சின்னத்திரை தயாரிப்பாளர்
  60. அலெக்ஸ்-தந்திரக்காட்சி கலைஞர்

Posted in Actor, Actress, Affiliation, Alex, Announcement, Arasi, Arts, Authors, Award, Awards, Bala, Balakumaran, Balu Mahendira, Balu mahendra, Bombat Jayashree, Bombat Jayashri, Bombat Jayasree, Bombat Jayasri, Bombat Jeyashree, Bombat Jeyashri, Bose Venkat, Campaign, Cinema, CJ Baskar, CJ Bhaskar, Comedian, Culture, Devipriya, Director, DMK, Dratski, Dratsky Maruthu, Financier, Government, Govt, Inquilab, Jayam, Jeeva, Jeyam, Kabilan, Kalaimamani, Kalapriya, Madhu Balakrishnan, Magician, Marudhu, Marudu, Maruthu, Maunika, Movies, music, MV Paneerselvam, Na Muthukumar, Nandha, Narthaki, Narthaki Nataraj, Narthaki Natraj, National Chellaia, National Chellaiah, Navya, Navya Nayar, Pa Vijai, Pa Vijay, Paa Vijai, Paa Vijay, Party, Pithamagan, Pithamakan, Poet, Producer, Radhika, Ravi, Recipients, Recognition, Sanjai Subramaniam, Sanjay Subramaniam, Seeman, Selvi, Serial, Sethu, Silambarasan, Simbu, Soaps, Stars, Suba Veerapandiyan, SubaVee, SubaVeerapandiyan, SubaVi, Sun TV, Tamil Nadu, Television, TG Thiagarajan, TG Thiakarajan, TG Thyagarajan, TG Thyakarajan, Thrisha, Tippu, Tratski, Tratsky, Trisha, TV, Vannadasan, Vannadhasan, Venu Aravind, Venu Aravindh, Venu Aravinth, Vidhyasagar, Vidyasagar, Vineet, Vineeth, Vishaal, Vishal, Vittal, VR Thilagam, Writer | Leave a Comment »

NYU professor Srinivasa SR Varadhan awarded 2007 Abel Prize in mathematics

Posted by Snapjudge மேல் மார்ச் 29, 2007

ஆபல் பரிசு

“கணிதத்துக்கான நோபல் பரிசு’ என்று மதிப்புடன் குறிப்பிடப்படும் ஆபல் பரிசு, கணிதத்தில் தனிப்பெரும் சாதனை புரியும் மேதைகளுக்கு ஆண்டுதோறும் வழங்கப்படுவதாகும். நோபல் பரிசு போலவே மிக உயர்ந்த பரிசுத் தொகை (ரூ.4.5 கோடி) கொண்டது.

நார்வே நாட்டு கணித மேதை நீல்ஸ் ஹென்ரிக் ஆபலின் நினைவாக, ஆண்டுதோறும் ஆபல் பரிசு வழங்கப்படும் என 2001-ல் நார்வே அரசு அறிவித்தது. 2003-ம் ஆண்டு முதன் முதலில் ஆபல் பரிசு வழங்கப்பட்டது.

நீல்ஸ் ஹென்ரிக் ஆபல் (1802-1829), நமது நாட்டு மேதை ராமானுஜத்தைப் போலவே, மிக இளம் வயதிலேயே கணிதத்தில் பல சாதனைகள் புரிந்தவர். ராமானுஜத்தைப் போலவே மிக இளம் வயதிலேயே காச நோயால் தாக்கப்பட்டு உயிரைப் பறிகொடுத்தவர். அபிலியன் சார்பு, அபிலியன் குலம், அபிலியன் தேற்றம் போன்றவை கணிதத்துக்கு ஆபலின் குறிப்பிடத்தக்க பங்களிப்புகள்.

கணிதத்துக்கு நோபல் பரிசு வழங்கப்போவதில்லை என்ற தகவல் வெளியானதை அடுத்து, சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்னரே “ஆபல் பரிசு’ உருவாக்கும் திட்டம் முன்வைக்கப்பட்டது. இரண்டாம் ஆஸ்கர் என்ற மன்னர் அதற்கான நிதியுதவி செய்ய முன்வந்தார். ஆனால் நார்வே மற்றும் சுவீடன் நாடுகளுக்கு இடையிலான உறவில் சிக்கல் ஏற்பட்டதை அடுத்து 1905-ல் ஆபல் பரிசுத் திட்டம் கைவிடப்பட்டது. அதன் பின்னர் நீல்ஸ் ஹென்ரிக் ஆபலின் இருநூறாவது ஆண்டை முன்னிட்டு, நார்வே “ஆபல் பரிசை’ அறிவித்தது. உலகளவில் அங்கீகாரம் பெற்ற 5 கணித மேதைகள் கொண்ட குழு, நார்வே அறிவியல் கழகத்தின் சார்பில் பரிசுக்குரியவர்களைத் தேர்ந்தெடுக்கிறது. 2007-ம் ஆண்டுக்கான ஆபல் பரிசைப் பெற்றவர் சென்னையில் பிறந்த, அமெரிக்க வாழ் கணிதப் பேராசிரியர் ஸ்ரீநிவாசா எஸ் வரதன்.

“ஃபீல்ட்ஸ் மெடல்’ எனும் பரிசும் கூட, கணிதத்துக்கான நோபல் பரிசு எனக் குறிப்பிடப்படுகிறது. ஆனால், அது 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை, 40 வயதுக்கும் குறைவானவர்களுக்கே வழங்கப்படுவதாகும். இதேபோல், சுவீடன் அரச கழகம் 1982 முதல் வழங்கி வரும் “கிராஃபூர்டு பரிசு’, 2004 முதல் வழங்கப்பட்டு வரும் “ஷா பரிசு’ போன்றவையும் கணிதத்துக்கான நோபல் பரிசு என்றே வர்ணிக்கப்படுகின்றன.

Posted in Abel, Award, Chennai, mathematics, Maths, Nobel, Prize, probability | Leave a Comment »

GSMA Honours Indian Government for Achievements in Mobile Communications

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 14, 2007

சிறப்பாக செயல்படுவதாக தேர்வு: இந்திய தொலை தொடர்புத்துறைக்கு சர்வதேச விருது

புதுடெல்லி, பிப்.14-

உலக அளவில் இயங்கும் தொலை தொடர்புத்துறைகளில் சிறப்பானவற்றை தேர்ந்து எடுத்து அறிவிக்கும் அமைப்பு, பார்சிலோனாவில் இயங்கி வருகிறது.

இந்த ஆண்டுக்கான விருது பெறும் அரசு சார்பான தொலை தொடர்புத்துறை எது? என்பதை இந்த சர்வதேச அமைப்பு ஆராய்ந்தது. இதில் 700 தொலை தொடர்பு இயக்கங்கள், ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.

இதில் சிறப்பாக தேர்ந்து எடுக்கப்படும் அரசு தொலை தொடர்புத்துறையாக, இந்தியாவின் தொலை தொடர்புத்துறை தேர்ந்து எடுக்கப்பட்டது.

இதற்கான காரணங்கள் வருமாறு:-

1. கடந்த 3 ஆண்டுகளாக இந்திய தொலை தொடர்புத்துறையில் ஏற்பட்டுள்ள அபரிமிதமான வளர்ச்சி.

2. இந்தியாவில் ஒவ்வொரு மாதமும் 60 லட்சம் முதல் 70 லட்சம் வரை புதிய தொலைபேசி சந்தாதார் சேருகிறார்கள்.

3. மத்திய அரசின் சிறப்பான கொள்கையால், இந்த துறை ஊக்கம் பெற்று இருக்கிறது.

4. இந்த துறை நகர பகுதிகளை மட்டும் குறிக்கோளாக கொள்ளாமல், கிராம பகுதிகளையும் மேன்மை படுத்தி இருக்கிறது.

5. மத்திய அரசின் சிறப்பான கொள்கையால், தொலை தொடர்புத்துறையில் அன்னிய முதலீடு 49 சதவீதத்தில் இருந்து 74 சதவீதமாக அதிகரிக்கப்பட்டு இருக்கிறது.

6. உள்நாட்டு மற்றும் சர்வதேச தொலை தொடர்பு செயலாக்கத்தில், சிறப்பான நிர்வாகம் காரணமாக பற்றாக்குறை தவிர்க்கப்பட்டு விட்டது.

இந்திய தொலை தொடர்புத்துறைக்கு விருது வழங்கும் விழா டெல்லியில் நடந்தது. இந்த விருதை, சர்வதேச அமைப்பின் தலைவர் ராப் கான்வே வழங்கினார். விருதை மத்திய தகவல் தொழில் நுட்பம் மற்றும் தொலை தொடர்புத்துறை மந்திரி தயாநிதி மாறன் பெற்றுக்கொண்டார்.

விழாவில் தயாநிதி மாறன் பேசியதாவது:-

மிகவும் சிறப்பு மிக்க சர்வதேச விருது. மத்திய அரசுக்கு வழங்கப்பட்டு இருக்கிறது. இதை நான் பெறுவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

இந்தியாவில், அரசு தொலை தொடர்புத்துறை , தானும் வளர்ந்ததோடு அல்லாமல், தனியார் தொலை தொடர்பு இயக்கத்தையும் வளர்ச்சி பெற வைத்து இருக்கிறது.

சில கடினமான முடிவுகளை, மத்திய அரசு தைரியமாக மேற்கொண்டதால்தான், இந்த விருது கிடைத்து இருக்கிறது. மேலும், அரசு மற்றும் தனியார் தொலை தொடர்பு அமைப்புகளின் கூட்டு முயற்சியும், இந்த விருதை இந்தியா பெற காரணமாகி இருக்கிறது.

இவ்வாறு தயாநிதி மாறன் பேசினார்.

Posted in Award, Cell phone, Communications, Dayanidhi maran, DMK, equipment, Foreign investment, Government, GSM, GSMA, Industry, Information Technology, infrastructure, Manufacturing, Maran, mobile operators, Mobile Phone, network, Recognition, subscribers, Technology, Telecom, telecommunications | Leave a Comment »

Bharathidasan University’s Professor gets ‘Young Scientist’ award

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 14, 2007

பாரதிதாசன் பல்கலை. விரிவுரையாளருக்கு இளம் விஞ்ஞானி விருது

திருச்சி, பிப். 14: பாரதிதாசன் பல்கலைக்கழக தொலை உணர்வு மைய விரிவுரையாளர் சொ. இலக்குமணனுக்கு மத்திய அரசின் அறிவியல், தொழில்நுட்ப அமைச்சகம் “இளம் விஞ்ஞானி’ விருது வழங்கியுள்ளது.

இவருக்கு ஆய்வு நிதியாக ரூ. 10.80 லட்சமும் வழங்கப்படுகிறது.

தமிழக கடலோரப் பகுதிகளில் தொழிற்சாலைக் கழிவுகளால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறித்தும், சுனாமி பேரழிவு, இயற்கைப் பேரிடர்கள் போன்றவற்றால் கடலோர வேளாண் நிலங்கள், சதுப்பு நிலங்கள், இறால் வளர்ப்புப் பகுதிகள், மக்கள் குடியிருப்புப் பகுதிகள் ஆகியன எந்த அளவு பாதிக்கப்பட்டுள்ளன என்றும், இவற்றுக்கான மறுசீரமைப்பு ஏற்பாடுகள் குறித்தும் இவர் ஆய்வு செய்ய இருக்கிறார். இந்த ஆய்வை செயற்கைகோள் மூலம் எடுக்கப்பட்ட நுண்ணிய புகைப்படங்களைக் கொண்டும், புவியியல் தகவல் அமைப்பு தொழில்நுட்பத்தின் மூலமும் மேற்கொள்ள உள்ளார்.

Posted in Agriculture, Award, Bharathidasan University, Environment, Factory waste, Forest, Global Warming, Impact, Lakshmanan, Pollution, Prize, Recognition, Research, S Lackumanan, scientist, Seashore, So Lakkumanan, Technology | Leave a Comment »

New Invention by 7th grade student gets Intel innovation award

Posted by Snapjudge மேல் ஜனவரி 31, 2007

புதிய அறிவியல் கண்டுபிடிப்பு: தமிழக மாணவருக்கு 2 தங்கப்பதக்கம்


புதிய அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கான இளம் சாதனையாளர் விருது பெற்ற கோவை மாணவர் அபிலாஷுடன் இன்டெல் நிறுவன இந்தியாவுக்கான மேலாளர் ராமமூர்த்தி, மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையை சேர்ந்த பேராசிரியர் அனுப் சின்ஹா (வலது).

கோவை, ஜன. 31: புதிய அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கான இளம் சாதனையாளர் விருதாக கோவையைச் சேர்ந்த மாணவருக்கு இரண்டு தங்கப்பதக்கங்கள் கிடைத்துள்ளன.

இன்டெல் நிறுவனம் மற்றும் மத்திய அரசின் அறிவியல் தொழில் நுட்பத் துறை, இந்திய தொழில்கள் கூட்டமைப்பு ஆகியவை இணைந்து இந்த தேசிய அளவிலான கண்காட்சியை ஏற்பாடு செய்வதோடு, ஆண்டுதோறும் புதிய கண்டுபிடிப்புகளுக்கான போட்டியையும் தில்லியில் நடத்துகின்றன.

கடந்த ஆண்டில் (2006) இத்தகைய போட்டி மற்றும் கண்காட்சிக்கான அழைப்பில் 2,000 பேர் விண்ணப்பம் செய்தனர். தேசிய அளவில் 200 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு தங்கள் அறிவியல் கண்டுபிடிப்புகள் மற்றும் ஆக்கங்களை கண்காட்சியில் பார்வைக்கு வைத்தனர்.

இதில் கோவையைச் சேர்ந்த மாணவர் எம்.அபிலாஷ் (தற்போது திருச்சி சின்மயா வித்யாலயத்தில் ஏழாம் வகுப்பு பயில்கிறார்) இரண்டு தங்கப்பதக்கங்களை வென்றுள்ளார். விலங்கியல் துறை சார்ந்த புதிய கண்டுபிடிப்புக்காகவும் வயது வரம்புத் தகுதிக்குள்ளான புதிய கண்டுபிடிப்பாளருக்கான விருதாகவும் ஒரே சமயத்தில் இரண்டு தங்கப்பதக்கங்களை வென்றுள்ளார்.

வரும் பிப். 13 முதல் 16 வரை தில்லியில் நடைபெறும் சர்வதேச இளம் கண்டுபிடிப்பாளர்களுக்கான அறிவியல் கண்காட்சியில் அபிலாஷ் கலந்துகொள்கிறார்.

பயன்படுத்திய பின் வீசியெறியும் பிளாஸ்டிக் பாட்டில் மற்றும் பயன்படுத்திய எக்ஸ்ரே பிலிம்களைக் கொண்டு புதுமையான, அரிய பூச்சிப் பொறியை வடிவமைத்துள்ளார் அபிலாஷ்.

இவரது தாயார் சங்கீதா பணிக்கர், திருச்சி தாவரவியல் துறையில் பேராசிரியையாக உள்ளார்.

Posted in Abhilash, Abilash, Award, Biology, Chinmaya Vidhyalaya, Chinmaya Vidyalaya, Coimbatore, Gold Medal, Industry, Intel, Kovai, M Abhilash, precollege, Prize, Research, Science, scientist, Talent, Technology, Thiruchirapalli, Thiruchirappalli, Trichy, Winner, Young Achiever, Zoology | Leave a Comment »

Alternate fuel Bike Manufacturer ‘Yo Bykes’ gets Best Autombile Company award

Posted by Snapjudge மேல் ஜனவரி 26, 2007

மோட்டார் பைக் நிறுவனத்துக்கு விருது

சென்னை, ஜன. 26-

பெட்ரோல் இல்லாமல் எலெக்டரிக்கில் ஓடும் இரண்டு சக்கர வாகனம் யோபைக்ஸ் ஆகும். இந்த ஆண்டில் சிறந்த ஆட்டோ மொபைல் நிறுவனத்துக்கான விருது யோபைக்ஸ் நிறுவனத்துக்கு வழங்கப்படுகிறது.

இந்த நிறுவனம் 6 வகை மாடல்களில் இந்த பைக்கை தயாரித்துள்ளது. இதன் விலை ரூ.16 ஆயிரம் முதல் ரூ.28 ஆயிரம் வரை ஆகும். கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்ட இந்த வகை பைக்குகள் தற்போது பிரபலமடைந்து உள்ளன.

Posted in Alternate fuel, Auto, Award, battery, Best Autombile Company, Bike, Electric two-wheelers, Electrotherm, Gujarat, Indus, Manufacturer, Smart, Spin, Tamil, two wheelers, Yo Bykes | Leave a Comment »

Padma Vibooshan, Padma Bhooshan, Padmashree awards announced

Posted by Snapjudge மேல் ஜனவரி 26, 2007

பொள்ளாச்சி மகாலிங்கத்துக்கு பத்மபூஷன்; கவிஞர் வாலிக்கு பத்மஸ்ரீ விருது

சென்னை, ஜன. 26-

இந்தியாவின் உயர்ந்த விருதுகளான பாரத ரத்னா, பத்ம விபூஷன், பத்மபூஷன், பத்மஸ்ரீ விருதுகள் ஆண்டுதோறும் குடியரசு தினத்தன்று வழங்கப்படும். 2007-ம் ஆண்டுக்கான விருது பெறுபவர்கள் பட்டியல் நேற்றிரவு வெளியிடப்பட்டது.

இந்தியாவின் மிக உயர்ந்த விருதான பாரத ரத்னா விருது 3-வது ஆண்டாக இந்த ஆண்டும் வழங்கப்படவில்லை.

பத்ம விபூஷன் விருது 10 பேருக்கு வழங்கப்படுகிறது. பத்மபூஷன் விருதுக்கு 32 பேரும் பத்மஸ்ரீ விருதுக்கு 79 பேரும் தேர்வு செய்யப்பட்டனர்.

பத்மவிபூஷன்

பத்மவிபூஷன் விருதுக்கு தேர்வான 10 பேர் விபரம் வருமாறு:-

  1. பாலுசங்கரன் (மருத்துவம்),
  2. நாரிமன் (பொது விவகாரம்),
  3. குஷ்வந்த்சிங் (இலக்கியம்)
  4. என்.என்.வோரா (சிவில் சர்வீஸ்),
  5. நரேஷ்சந்திரா (சிவில் சர்வீஸ்),
  6. நீதிபதி பி.என்.பகவதி,
  7. ராஜாராவ் (மறைவு),
  8. ராஜா ஜேசுதாஸ் செல்லையா (பொது விவகாரம்),
  9. சுதர்சன் சண்டி ஜார்ஜ் (அறிவியல்),
  10. வெங்கட்ராமன் கிருஷ்ணமூர்த்தி (சிவில் சர்வீஸ்)

பத்மபூஷன்

பத்மபூஷன் விருதுக்கு தேர்வான 32 பேரில் தமிழ்நாட்டின் பிரபல தொழில் அதிபர்கள்

  • பொள்ளாச்சி என்.மகாலிங்கம்,
  • ஏ.சிவசைலம் இருவரும் முக்கியமானவர்கள்.
  • சூசுகி நிறுவன அதிபர் ஓ.சூசுகி,
  • தொழில் அதிபர் சுனில் பாரதி மிட்டல்,
  • சமூக சேவகி மோகினி கிரி,
  • அறிவியில் துறையின் பிரபலம் வில்லியனூர் ராமச்சந்திரன் ஆகியோரும் பத்மபூஷன் விருது பெறுகின்றனர்.

பத்மஸ்ரீ விருதுக்கு தேர்வான 79 பேரில் 8 பேர் தமிழர்களாவார்கள். அவர்கள் விபரம் வருமாறு:-

1. பல்தேவ்ராஜ்- அறிவியல் (கல்பாக்கம் அனல் மின்நிலையம்)

2. கே.ஆர்.பழனிச்சாமி (மருத்துவம்)

3. டாக்டர் மயில்வாகணன் நடராஜன்

4. பி.ஆர்.திலகம் (கலை)

5. நம்பெருமாள்சாமி (மருத்துவம்)

6. எஸ்.தட்சிணாமூர்த்தி பிள்ளை (கலை)

7. டி.எஸ்.ரங்கராஜன் (கவிஞர் வாலி) (கலை)

8. விளையப்பட்டி ஏ.ஆர்.சுப்பிரமணியன் (கலை)

பத்மஸ்ரீ விருது பெற்ற தமிழர்களில் டாக்டர் மயில் வாகனன் நடராஜன் சென்னை அரசு பொது மருத்துவமனையில் எலும்பு சிகிச்சை துறை தலைவராக பணியாற்றி வருகிறார். சமீபத்தில் தமிழகத்தின் சிறந்த மருத்துவர் விருதை இவர் பெற்றார். இந்தியாவில் முதன் முதலாக சென்னையில் “எலும்பு வங்கி”யை உருவாக்கிய பெருமை இவருக்கு உண்டு.

எலும்பு புற்று நோயாளிகளின் உயிரைக் காக்க வேண்டி, பாதிக்கப்பட்ட கையையோ, காலையோ வெட்டி எடுத்து விடுவது வழக்கம். ஆனால் டாக்டர் மயில்வாகனன் குறைந்த செலவில் விஞ்ஞான அடிப்படையில் கண்டுபிடித்துத் தயாரிக்கப்பட்ட உலோக எலும்புப் பொருத்திகளைக் கொண்டு சிகிச்சை செய்து எலும்பு புற்று நோயாளிகள் ஊனமுற்ற நிலையை போக்கி சகஜ வாழ்க்கை வாழ வழி அமைத்துக் கொடுத்து மருத்துவ துறைக்கு பெருமை சேர்த்து வருகிறார்.

இந்த புரட்சிகரமான சிகிச்சையை இந்தியாவில் 1988 முதல் தொடர்ந்து செய்து வருகிறார். அவ்வாறு இதுவரை 1200 பேருக்கு இவ்வித அறுவை சிகிச்சை செய்து எலும்பு புற்று நோயாளிகள் தங்களது கை அல்லது கால்களை இழந்து விடாமல் காப்பாற்றியிருக்கிறார்.

சமீபத்தில் பேரிடர் மேலாண்மையில் மருத்துவத்துறையின் பங்கு என்ற தலைப்பில் இயற்கை பேரிடர் சம்பவங்களின் போது மருத்துவ துறையின் செயல்பாடுகள் குறித்து வரைவு முன் வடிவை அனைத்து மருத்துவமனைகளிலும் அறிமுகப்படுத்த அரசிடம் சமர்ப்பித்துள்ளார்.

கடந்த ஆண்டு இந்திய முடநீக்கு இயல் துறையின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதற்கு முன்பு 2000-ம் ஆண்டு தமிழ்நாடு முடநீக்கு இயல் சங்கத்தின் தலைவராகவும் ஆசிய பசிபிக் நாடுகளின் எலும்பு புற்றுநோய் சங்கத்தின் தலைவராகவும் சிறப்பாக பணியாற்றி உள்ளார்.

எலும்பு புற்று நோய் துறையில் இவர் செய்த ஆராய்ச்சிக்காக டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகத்தின் பிஎச்.டி. பட்டமும் மருத்துவ படிப்பில் மிக உயர்ந்த டி.எஸ்சி பட்டமும் பெற்றுள்ளார்.

2003-ம் ஆண்டில் இவரது மருத்துவ சேவையினை பாராட்டி மருத்துவ துறையின் உயர்ந்த விருதான டாக்டர் பி.சி.ராய் விருதினை குடியரசு தலைவர் டாக்டர் அப்துல்கலாம் வழங்கினார்.

பத்மஸ்ரீ விருதுக்கு தேர்வாகி உள்ள டாக்டர் நம்பெருமாள்சாமி மதுரை அரவிந்த் கண் மருத்துவ மனையில் பணியாற்றி வருகிறார்.

டாக்டர் அர்ஜ×ன் ராஜசேகரன் சென்னை அரசு மருத்துவமனையில் பணியாற்றி சேவை செய்தவர்.

பத்மஸ்ரீ விருது பெற்ற கவிஞர் வாலி `மாலை மலர்’ நிருபரிடம் கூறியதாவது:-

இன்று அதிகாலை 5 மணிக்கு முதல்-அமைச்சர் கருணாநிதி என்னுடன் போனில் தொடர்பு கொண்டு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டுள்ள தகவலை கூறி வாழ்த்து தெரிவித்தார். அதன் பிறகுதான் எனக்கு பத்மஸ்ரீ விருது கிடைத்திருப்பது தெரிந்தது.

என்னை முதன் முதலில் வாழ்த்தியது கலைஞர்தான். நிறைய பேர் மகிழ்ச்சி தெரிவித்தனர். எனக்கும் மகிழ்ச்சியாக உள்ளது.

பத்மஸ்ரீ விருது கிடைத்திருப்பது எனக்கு கிடைத்த அங்கீகாரமாக நினைக்கிறேன்.

இவ்வாறு கவிஞர் வாலி கூறினார்.

கவிஞர் வாலி கடந்த 30 ஆண்டுக்கும் மேலாக சினிமா பாடல்கள் எழுதி வருகிறார். 3 தலைமுறைக்கு ஏற்ப பாடல் எழுதி வரும் ஒரே பாடலாசிரியர் வாலி ஒருவர் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தைச் சேர்ந்த ராஜா செல்லையாவுக்கு பத்மவிபூஷண், நம்பெருமாள்சாமிக்கு பத்மஸ்ரீ விருது

புதுதில்லி, ஜன. 27: இந்த ஆண்டு பத்ம விருது பெறுபவர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

10 பேருக்கு பத்ம விபூஷண், 32 பேருக்கு பத்ம பூஷண், 79 பேருக்கு பத்மஸ்ரீ உள்ளிட்ட 121 பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருதுக்கு யார் பெயரும் அறிவிக்கப்படவில்லை.

விருது பெறுவோர் விவரம்:

பத்ம விபூஷண்

சட்ட நிபுணர் ஃபாலி சாம் நாரிமன், எழுத்தாளர் குஷ்வந்த் சிங், முன்னாள் அமைச்சரவை செயலாளர் நரேஷ் சந்திரா, முன்னாள் தலைமை நீதிபதி பி.என்.பகவதி, முன்னாள் உள்துறைச் செயலாளர் என்.என்.வோரா, டாக்டர் பாலு சங்கரன், மறைந்த எழுத்தாளர் ராஜா ராவ், பொருளாதார நிபுணர் ராஜா செல்லையா, முன்னாள் அதிகாரி வி.கிருஷ்ணமூர்த்தி மற்றும் அமெரிக்கா வாழ் சுதர்சன் எரினாக்கல் சாண்டி ஜார்ஜ் ஆகியோரும் பத்ம விபூஷண் விருது பெற தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

பத்மபூஷண்

அரசியல் அறிஞர் விக்கு பரேக், சமூக சேவகர் எலா காந்தி, கவிஞர் கோபால்தாஸ் நீரஜ், பெப்ஸிகோ நிறுவன தலைவர் இந்திரா நூயி, டாடா ஸ்டீல் நிறுவன நிர்வாக இயக்குநர் ஜாம்ஷெட் ஜே.இரானி, இந்தி திரைப்பட பாடலாசிரியர் ஜாவித் அக்தர், அமெரிக்க வாழ் பொருளாதார நிபுணர் ஜெஃப்ரி டி சாக்ஸ் மற்றும் ஜப்பான் தொழிலதிபர் ஓ சுசூகி. சமூக சேவகர் மோகினி கிரி, பாரதி டெலிகாம் தலைவர் சுநீல் பாரதி மித்தல், கேரள நாடக ஆசிரியர் நாராயண் பணிக்கர், பாடகர்கள் ராஜன் மிஸ்ரா, சஜன் மிஸ்ரா, ஓவியர்கள் சையத் ஹைதர் ராசா, தயப் மேத்தா மற்றும் உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி கே.டி.தாமஸ்.

பத்மஸ்ரீ

எழுத்தாளர்கள் அமிதவ கோஷ், விக்ரம் சேத், நடன இயக்குநர் அஸ்தாத் தேவூ, ஆமதாபாத் இந்திய மேலாண்மை கல்வி நிறுவன இயக்குநர் வகுள் டோலக்கியா, மலையாள நடிகர் பாலச்சந்திர மேனன், தில்லி நடனக் கலைஞர் கீதா சந்திரன், கோல்ஃப் விளையாட்டு வீரர் ஜீவ் மில்கா சிங், நாஸ்காம் நிறுவன தலைவர் கிரண் கார்னிக், செஸ் வீராங்கனை கோனேரு ஹம்பி, பாடகர் ரெமோ ஃபெர்னாண்டஸ், கல்வியாளர் முஷீருல் ஹசன், கேரள நெசவு நிபுணர் பி.கோபிநாதன், தமிழக கண் சிகிச்சை நிபுணர் பி.நம்பெருமாள்சாமி, பாடகர் சாந்தி ஹிரானந்த், சமையல் நிபுணர் தர்லா தலால், சமூக சேவகி டீஸ்டா சீதல்வாட், மலையாளர் எழுத்தாளர் சுகுமார் அழிக்கோட் உள்ளிட்டோர் பத்மஸ்ரீ விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

Posted in Award, Balu Sankaran, Fali Nariman, India, Indra Nooyi, J, Jeev Milkha, K Humpy, Khushwant Singh, Mohini Giri, Mushirul Hassan, N N Vohra, Naresh Chandra, O Suzuki, P N Bhagawati, Padhma Awards, Padma, Padma Bhushan, Padma Bushan, Padma Vibhushan, Padma Vibushan, Padmabhushan, Padmashree, Raja Jesudoss Chelliah, Raja Rao, S E Chandy George, Sunil Bharti Mittal, Tamil, Teesta Setalvad, V Krishnamurthy | Leave a Comment »

Mohanlal gets Ujala-Asianet Film ‘best actor’ award

Posted by Snapjudge மேல் ஜனவரி 21, 2007

ஏசியாநெட் விருது: சிறந்த நடிகை-பத்மபிரியா; சிறந்த நடிகர்-மோகன்லால்

திருவனந்தபுரம், ஜன.21-

ஏசியா நெட் நிறுவனம் ஆண்டுதோறும் மலையாள சினிமா துறையைச் சேர்ந்தவர்களுக்கு விருது வழங்கி கவுரவித்து வருகிறது. இந்த ஆண்டு விருது பெறுவோர் பட்டியல் நேற்று அறிவிக்கப்பட்டது.

சிறந்த நடிகராக மோகன்லாலும், சிறந்த நடிகையாக பத்மபிரியாவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் மற்றும் விருது வழங்கப்படுகிறது.

சிறந்த படமாக `கிளாஸ் மெட்’ மலையாள படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த படத்துக்கு ரூ.1 லட்சம் பரிசு மற்றும் விருது வழங்கப்படுகிறது. சிறந்த நகைச்சுவை நடிகராக இன்னசென்ட், சிறந்த வில்லன் நடிகராக சித்திக், சிறந்த இசையமைப்பாளராக ரவீந்திரன், சிறந்த டைரக்டராக ரவி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

விருது வழங்கும் விழா வருகிற 28-ந் தேதி மாலை 6.30 மணிக்கு திருவனந்தபுரம் சந்திரசேகரன் நாயர் ஸ்டேடியத்தில் நடக்கிறது.

Posted in Actress, Aran, Army, Asianet, Award, Cinema, Classmate, Films, Jeeva, Keerthicharka, Kerala, Major Ravi, Malayalam, Mohanlal, Movies, Padmapriya, Sobhana Parameshwaran Nair, Ujala | Leave a Comment »

Divya prem sewa mission gets Madhya Pradesh’s Mahatma Gandhi Award

Posted by Snapjudge மேல் ஜனவரி 17, 2007

2006-07-க்கான மகாத்மா காந்தி விருது: ம. பிரதேசம் அறிவிப்பு

போபால், ஜன. 17: உத்தரப் பிரதேசம் ஹரித்துவாரை மையமாகக் கொண்டு இயங்கும் திவ்யா பிரேம் சேவா மையத்துக்கு மத்தியப் பிரதேச அரசின் 2006-07-க்கான மகாத்மா காந்தி விருது வழங்கப்பட்டுள்ளது.

குழந்தைகளின் கல்வி மற்றும் தொழுநோயாளிகளுக்காக இந்த அமைப்பு செய்துவரும் செயற்கரிய மனிதநேய சேவைகளைப் பாராட்டி இந்த விருது வழங்கப்படுகிறது. ரூ.5 லட்சம் ரொக்கம், பாராட்டுப் பத்திரம் ஆகியவை இந்த விருதில் அடங்கும்.

இத்தகவலை மத்தியப் பிரதேச கலாசார அமைச்சர் லக்ஷ்மிகாந்த் ஷர்மா போபாலில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

Posted in Ashish gautam, Award, Child Education, Child Welfare, Culture Minister, Divya prem seva, Divya prem sewa mission, Donate, Education, Healthcare, India, Lakshmikanth Sharma, Leper, Madhya Pradesh, MP, NGO, Non-profit, Prize, service, Utharanchal, Uttaranchal, Volunteer | Leave a Comment »