Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Automobile’ Category

Orient-Express snubs Tata, says Indian tag tacky: Is India Bad for Jaguar?

Posted by Snapjudge மேல் திசெம்பர் 17, 2007

வெள்ளையர்களின் நீங்காத நிறவெறி

டி.ஜே.எஸ். ஜார்ஜ்

அக்ரஹாரத்தில் கழுதை : டாடா, ஜகு�

எங்கும் பொருளாதார தாராளமயமாக்கல் கொள்கை வியாபித்து நிற்கிறது என்று நாம் மார்தட்டிப் பேசிக் கொள்கிறோம்.

ஆனால், இத்தகைய காலகட்டத்திலும் “வெள்ளையர்களே அனைத்திலும் உயர்ந்தவர்கள்; வெள்ளையர் அல்லாதோர் கீழேதான்’, என்று மற்றவர்களை மட்டந்தட்டும் நிறவெறிக் கொள்கை சர்வதேச நிதி மற்றும் வர்த்தக அமைப்புகளில் தலைதூக்கி நிற்கிறது.

நிறவெறிக் கொள்கை ஊறிவிட்ட உலகில் நாம் வாழ்ந்து வருகிறோம்.

உருக்குத் தொழில் உலகின் மன்னர் என்ற பெருமையாகப் பேசப்படும் வெளிநாடு வாழ் இந்தியரான லட்சுமி மிட்டலும் இந்த நிறவெறிக் கலாசாரத்தால் பாரபட்சமாக நடத்தப்பட்டவர்தான்.

ஐரோப்பாவில் இயங்கும் ஆர்சலர் என்ற நிறுவனத்தின் உரிமையை தனது கட்டுக்குள் கொண்டுவர அவர் முயன்றார். ஆனால் வெள்ளையர் அல்லாத ஒருவரது பணம் எங்களுக்கு வேண்டவே வேண்டாம் என்று அந்த நிறுவனத்தின் நிர்வாகி ஒருவர் நிராகரித்து விட்டார்.

ஆனால் பிற்பாடு, தான் சொன்ன வார்த்தை தவறானது என்பதை அந்த நிர்வாகியே உணர்ந்து, மாற்றிக் கொண்டார் என்பது வேறு கதை. பின்னர் அந்த நிர்வாகியின் எதிரிலேயே ஆர்சலர் நிறுவனம் ஆர்சலர்-மிட்டல் என்று மாறியதும் வேறு விஷயம்.

இன்னொரு சம்பவம் அமெரிக்காவைச் சேர்ந்த சொகுசு ஹோட்டல் நிறுவனமான ஓரியண்ட் எக்ஸ்பிரஸ் தொடர்பானது ஆகும்.

இந்த ஹோட்டலுடன் கூட்டு வைக்க டாடா நிறுவனம் ஆசைப்பட்டது. ஆனால் நிறவெறியில் ஊறிய அதன் தலைமை நிர்வாகம், டாடாவின் ஆசையை நிராகரித்து கேலியும் கிண்டலும் செய்தது.

“சொகுசின் மொத்த உருவகமாகத் திகழும் எமது பிராண்டை உங்களது பிராண்டுடன் சேர்ப்பதால் எங்களது பிராண்டின் நற்பெயர் என்னாவது’ என்று ஓரியண்ட் எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி குத்தலாகப் பேசினார்.

இப்படி அவர் பேசியதற்குக் காரணம் கூட்டுவைக்கும் யோசனை வேண்டாம் என்று ஓரியண்ட் எக்ஸ்பிரஸ் தரப்பில் முன்னதாக தெரிவிக்கப்பட்டும் மீண்டும் அதற்காக டாடா நிறுவனம் முயற்சி மேற்கொண்டதே ஆகும். இப்படி டாடா நிறுவனம் செய்தது தம்மை அவமதிப்பு செய்வதாகக் கருதிவிட்டார் ஓரியண்ட் எக்ஸ்பிரஸின் தலைமை நிர்வாகி பால் வொயிட்.

இன்னொரு சம்பவத்தை இனி பார்ப்போம்.

போர்டு லக்சுரி மாடல் கார் உற்பத்தி நிறுவனத்தை வாங்க டாடா மோட்டார்ஸ் நிறுவனம் முயற்சி செய்தது. அதை அறிந்த அமெரிக்க ஆட்டோமொபைல் நிறுவனம் ஒன்றின் தலைவர் ஒருவர் கடந்த வாரம் பொங்கி எழுந்தார். இதை அமெரிக்க மக்கள் ஏற்க மாட்டார்கள் என்றார்.

இத்தகைய சம்பவங்களை குப்பைகள் என்று ஒதுக்கி, கேலிக்கூத்துகள் என்று தான் எடுத்துக் கொள்ளவேண்டும். டாடா பிராண்ட் என்றாலே தனி மவுசுதான். இதை உலகமே நன்கு அறியும்.

எத்தனையோ இந்தியர்களை அமெரிக்க மக்கள் கனிவுடன் ஏற்றுக் கொண்டுள்ளனர். அமெரிக்காவைச் சேர்ந்த மிகப்பெரிய நிதி நிறுவனம் சிட்டி குரூப். இதன் தலைவராக விக்ரம் பண்டிட்டை அமெரிக்கர்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர்.

இதுபோல் அமெரிக்காவின் தேசிய உணர்வுக்கு அடையாளமாக திகழும் பெப்சி நிறுவனத்தின் தலைவராக இந்திரா நூயி அமர்ந்துள்ளதையும் அந்நாட்டு மக்கள் ஏற்கத்தானே செய்தனர்.

இவர்களுக்கு முன்பாக கியூலெட்-பக்கார்ட் நிறுவனத்தின் பொது மேலாளாராக ராஜீவ் குப்தா, எடி அண்ட் டி நிறுவனத்தின் தலைவராக அரூண் நேத்ரவலி, மெக்கன்சி நிறுவனத்தின் தலைவராக ரஜத் குப்தா போன்றோர் சிறப்பாக செயல்பட்டுள்ளனர்.

ஸ்டான்சார்ட் நிறுவனத்தை ராணா தல்வார் தலைமை ஏற்று நடத்துகிறார்.

மேலும் பென்டியம் சிப்பை உருவாக்கிய வினோத் டாம், ஹாட்மெயிலை நிறுவிய சபீர் பாடியா ஆகியோரும் இந்தியர்கள்தான்.

அறிவாற்றல் என்று வரும்போது வெள்ளையர் அல்லாதோரை விரும்புகிறார்கள் வெள்ளையர்கள். அப்போது, நன்மதிப்பு பற்றிப் பேசுவதில்லை. நிறவெறி என்று வரும்போது அவர்களின் மூர்க்கத்தனம் வெளிப்பட்டு விடுகிறது.

அமெரிக்கத் தூதரகங்களில் பணிபுரியும் அதிகாரிகள் கூட தான் யார் என்பதை காட்டிவிடுகிறார்கள். அண்மையில் கேசவன் என்ற விஞ்ஞானி விசாவுக்காக சென்னையில் உள்ள தூதரகத்துக்குச் சென்றிருந்தார். கொளுத்தும் வெயிலில் அவர் ஒரு மணி நேரம் வெளியில் காத்திருக்க நேர்ந்தது.

பின்னர், உள்ளே சென்றதும் 2 மணி நேரம் காத்திருந்தார். “உங்களிடம் ஆலோசனை நடத்த அவசியம் இல்லை. இந்த வினாத்தாள் பட்டியலை நிரப்பித்தாருங்கள்’ என்று மட்டும் அவரிடம் கூறியுள்ளனர்.

மற்றொரு விஞ்ஞானியான கோவர்தன் மேத்தாவுக்கும் கசப்பான அனுபவம் ஏற்பட்டுள்ளது. தனது ஆராய்ச்சியைப் பற்றி மறைத்துவிட்டதாக காரணம் தெரிவிக்கப்பட்டு அவருக்கு விசா நிராகரிக்கப்பட்டது.

இத்தகைய குளறுபடிகளுக்கு நம்மையேதான் நாம் நொந்து கொள்ளவேண்டும்.

அண்மையில் அமெரிக்காவின் செயல்பாடு பற்றி மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கூட வேதனையுடன் பேசினார்.

அமெரிக்காவில் கிளைகள் திறக்க இந்தியாவைச் சேர்ந்த வங்கிகள் விரும்பினால் அவை மீது அமெரிக்கா பாரபட்சம் காட்டுகிறதாம்.

இப்படிப் புகார் கூறுவதால் அவர்கள் மசிந்து விடுவார்களா என்ன? இந்தியாவில் தொழில் நடத்த வரும் அவர்களை இங்கும் அங்கும் என அலைகழித்தால் எல்லாம் சரியாகிவிடும். இது நடக்குமா?

இது குழம்பிப்போன உலகம். மற்றவர்கள் நமக்கு என்ன செய்ய விரும்புகிறார்களோ அதை நாமும் அவர்களுக்குச் செய்ய வேண்டும். அப்போது மரியாதை தானாகவந்து சேரும்.

கொடுக்கும் வழியிலேயே நாமும் திருப்பிக் கொடுப்போம்.

தமிழில்: ஜி. கணபதி

Posted in acquisition, Analysis, Arcelor, Auto, Automobile, Banks, Brand, Capitalization, Cars, CEO, Citi, CxO, Discrimination, Economy, England, Equity, Finance, Ford, Govt, Hotels, Image, India, Jaguar, Law, Luxury, M&A, Manufacture, Manufacturing, markets, Mergers, Mittal, MNC, NRI, Offshoring, Orient Express, Outsourcing, Private, Protection, Public, racism, Reverse, Rich, rules, Shares, Steel, Stocks, Supremacy, TATA, Tax, Wealthy, White | Leave a Comment »

Chennai’s 20 artery roads to get CCTV installed – CM Karunanidhi

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 2, 2007

சென்னையின் 20 முக்கிய சாலைகளில் கண்காணிப்பு கேமிரா: முதல்வர் அறிவிப்பு

சென்னை, பிப். 3: சென்னை மாநகரில் போக்குவரத்து விதிகளை மீறுவோரைக் கண்டுபிடிக்க 20 முக்கிய இடங்களில் கண்காணிப்புக் கேமிரா வைக்கப்படுகிறது. இதற்கான அறிவிப்பை முதல்வர் கருணாநிதி வெளியிட்டுள்ளார்.

வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிகளை முறையாகக் கடைப்பிடிக்கின்றனரா என்பதைக் கண்டுபிடிக்கவும், விதிகளை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கவும், போக்குவரத்து நெரிசல் ஏற்படும் பகுதிகளில் உடனடி நடவடிக்கை எடுக்கவும் இந்த கண்காணிப்பு கேமிரா மூலமான கண்காணிப்பு உதவும்.

ரூ. 2.1 கோடி செலவில் 20 கண்காணிப்புக் கேமிராக்கள் நிறுவத் திட்டமிடப்பட்டுள்ளது. இவை நிறுவப்படும் இடங்கள்:

  1. போர் நினைவுச் சின்னம்,
  2. தலைமைச் செயலக வெளிப்புற வாயில்,
  3. கத்திப்பாரா சந்திப்பு,
  4. வள்ளுவர் கோட்டம் சந்திப்பு,
  5. அண்ணா சிலை சந்திப்பு,
  6. வீல்ஸ் இந்தியா கம்பெனி சந்திப்பு,
  7. பெரியார் சிலை சந்திப்பு,
  8. வேளச்சேரி விஜயநகர் பேருந்து நிலைய சந்திப்பு,
  9. மத்திய கைலாஷ் சந்திப்பு,
  10. ஹால்டா சந்திப்பு,
  11. ஆளுநர் மாளிகை முதன்மை வாயில் சந்திப்பு,
  12. எஸ்.ஆர்.பி. டூல்ஸ் நிறுவன சந்திப்பு,
  13. எஸ்ஐஇடி கல்லூரி -செனடாப் சாலை சந்திப்பு,
  14. 100 அடி சாலை -வட பழனி சாலை சந்திப்பு,
  15. போரூர் சந்திப்பு,
  16. அசோக் பில்லர் சந்திப்பு,
  17. அண்ணாநகர் ரவுண்டானா சந்திப்பு,
  18. எஸ்என் செட்டி சாலை -சுங்கச் சாவடி சந்திப்பு,
  19. விமான நிலைய சாலை சந்திப்பு,
  20. கிரீன்வேஸ் சாலை சந்திப்பு ஆகிய இடங்களில் இவை நிறுவப்படும். இந்த சாலை சந்திப்புகளில் உள் சுற்று இணைப்பு தொலைக்காட்சிப் பெட்டிகள் (சிசிடிவி) நிறுவப்பட்டு போக்குவரத்து கண்காணிக்கப்படும் என்று அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Posted in Auto, Automobile, Big Brother, CCTV, Chennai, Closed circuit TV, CM, Karunanidhi, Law, Madras, Motor, Order, Police, RMV, Road, Roads, Streets, Surveillance, Tamil Nadu, Terrorism, TN, TV | 1 Comment »

Indian Economic Growth : Analysis by S Gopalakrishnan

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 19, 2006

வளமையே, வா!

எஸ்.கோபாலகிருஷ்ணன்

அறிஞர் எட்வர்டு லூசி (Edward Luce்) தனது சமீபத்திய புத்தகத்தில் (Inspite of the Gods) இரு கருத்துகளைத் தெரிவிக்கிறார்.

ஒன்று, “”இந்தியர்கள் பொதுவாக வெற்றிக்கனியை எட்டிப் பிடிப்பதற்கு முன்னரே, வெற்றி விழா கொண்டாட முற்படுவார்கள்.”

இரண்டு, “”இந்தியாவின் தற்போதைய பொருளாதார வளர்ச்சி தானாக இயங்குவதும் (automatic) அல்ல; அதே நேரம், உத்தரவாதம் கொண்டதும் அல்ல!”

அவரது கூற்றை மறுப்பதற்கில்லை. எனினும், ஒன்றன் பின் ஒன்றாக, வரிசையாக நிகழும் பொருளாதார முன்னேற்றங்கள், நிச்சயமாக நமக்கு மனநிறைவு அளிக்கக்கூடியவையே.

நமது தொழில் உற்பத்தி, கடந்த பத்தாண்டுகளில் இல்லாத வகையில் 12.4 சதவீத வளர்ச்சி கண்டுள்ளது. முதல் முறையாக இரட்டை இலக்கத்தை எட்டியுள்ளது. இதுவரை சேவைத் துறை வளர்ச்சியின் பயனாகவே, ஒட்டு மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜி.டி.பி.) 8 சதவீதத்தைத் தொட்டது. இப்போது, சேவைத்துறை மட்டுமல்லாமல் தொழில் உற்பத்தியும் கணிசமாக அதிகரித்துள்ளது. எனவே, ஜி.டி.பி. வளர்ச்சி விகிதத்தைத் தொடர்ந்து தக்கவைத்துக் கொள்ள முடியும். அடுத்த பத்து ஆண்டுகளில் இந்த வளர்ச்சி இரண்டு மடங்காக உயருவதும் சாத்தியமே.

இன்னொரு விஷயத்தையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்; இந்த இரட்டை இலக்க தொழில் உற்பத்தி வளர்ச்சியில், தகவல் தொழில் நுட்பத் துறையோ, பி.பி.ஓ. எனப்படும் கணினி சார்ந்த சேவையோ சேர்க்கப்படவில்லை. அவை முழுக்க, முழுக்க சேவைத்துறையின்கீழ் வருகின்றன.

இங்கு குறிப்பிடப்படும் தொழில் உற்பத்தி வளர்ச்சி என்பது மூலதனப் பொருள்கள், கட்டமைப்புத் துறை, கார், டிரக் உள்ளிட்ட மோட்டார் வாகனங்கள், உருக்கு, சிமெண்ட், ஜவுளி, மருந்துப் பொருள்கள், தொலைக்காட்சிப் பெட்டிகள், சர்க்கரை, சோப்பு என எண்ணற்றப் பொருள்களின் உற்பத்தியை அடிப்படையாக கொண்டுள்ளது. வேளாண்மைக்கு அடுத்தபடியாக, இந்தியாவின் இரண்டாவது பெரிய தொழில் ஜவுளி. கோட்டா முறை கடந்த ஆண்டு ரத்து ஆன பின், நடப்பாண்டில் ஜவுளி ஏற்றுமதி 26 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்த அபரிமித வளர்ச்சி தொடரும் என்பது மட்டுமல்லாமல், அடுத்த 10 ஆண்டுகளில் இரண்டு மடங்கு உயரும் என்று ஓர் ஆய்வு அறிக்கை கூறுகிறது.

சிறிய கார்கள் உள்ளிட்ட மோட்டார் வாகன ஏற்றுமதியும் கணிசமாக அதிகரித்துள்ளது. சில ஆண்டுகளுக்கு முன், நலிந்த நிலையில் இருந்த காகிதம் மற்றும் காகிதப் பொருள்கள் உலக அளவில் போட்டியை எதிர்கொண்டு, சந்தையை பிடிக்கும் வகையில் நவீனமடைந்துள்ளன; வலுவடைந்துள்ளன. நம் நாட்டு மின் விசிறிகள், சீன மின் விசிறிகளைப் பின்னுக்குத் தள்ளி, அதே விலையில், “வால்-மார்ட்’க்கு விற்பனை ஆகின்றன என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்!

டாடா ஸ்டீல் தங்கள் உற்பத்தியை இரண்டு மடங்காக உயர்த்தியுள்ளது. ஆனால், அவர்களது ஊழியர்களின் எண்ணிக்கையை குறைத்து வருகிறது என்பது தனிக்கதை. சுரங்கம், மின் உற்பத்தித் துறைகள் 13 சதவீதத்துக்கு மேல் முன்னேற்றம் அடைந்துள்ளன.

ஏற்றுமதியும், உள் நாட்டுத் தேவையும் பல மடங்கு அதிகரித்துள்ளன. ஏற்கெனவே, பிரபலமாக உள்ள நிறுவனங்கள், மற்றும் தொடர்ந்து வெற்றிக் கதைகள் படைக்கும் நிறுவனங்களைப் பற்றி மட்டும் நாம் இங்கு குறிப்பிடவில்லை. மாறாக, கடந்த காலங்களில் தள்ளாடிக் கொண்டிருந்த, சற்றே நலிவடைந்திருந்த தொழில் நிறுவனங்களும் தலை நிமிரத் தொடங்கி உள்ளன என்பதுதான் கவனிக்கத்தக்கது. அடிப்படை ரசாயனப் பொருள்கள், மருந்துகள், பெட்ரோலியப் பொருள்களின் ஏற்றுமதி 27.5 சதவீதம் உயர்ந்துள்ளது.

குறிப்பிட்ட கால கட்டத்தில், வங்கிகளின் கடனுதவி தொழில்துறைக்கு 31 சதவீதம் உயர்ந்துள்ளது. பாரத ரிசர்வ் வங்கியின் நடப்பு நிதி ஆண்டின் முதல் 3 மாதங்களுக்கான பொருளாதார ஆய்வு அறிக்கையும் இந்த வளர்ச்சியை உறுதிப்படுத்துகிறது. நாட்டின் தனி நபர் சேமிப்பு விகிதம் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது. அத்துடன், இதில் நடுத்தர மக்களின் பங்களிப்பு பெருமிதம் கொள்ளத்தக்கதாக உள்ளது.

இன்றைய சூழலில், பொருளாதார வளர்ச்சியின் பயனாக, வேலை வாய்ப்பு அதிகரிப்பதில்லை என்பதுதான் கசப்பான உண்மை. உதாரணமாக, வங்கி மற்றும் நிதித்துறை சேவை அமைப்புகள் மற்றும் காப்பீட்டுத் துறைகள் என்னதான் வளர்ந்தாலும், இத்துறைகளில் புதிய வேலை வாய்ப்புகள் உருவாகவில்லை. மாறாக, தொழில்நுட்ப மேம்பாட்டின் விளைவாக 1.31 லட்சம் வேலை வாய்ப்புகள் குறைந்துள்ளன என்கிறது ஓர் ஆய்வு. ஆனால், அதே ஆய்வு தரும் இன்னொரு செய்தி ஆறுதல் அளிக்கக்கூடியது. கட்டுமானத்துறை, தகவல் தொடர்பு, போக்குவரத்து, தொழில்கூட உற்பத்தி, மின்சாரம், மற்றும் இதர சேவைத்துறைகளில் வேலை வாய்ப்பு கணிசமாக அதிகரிக்கும். மொத்தத்தில் தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட மேற்கூறிய துறைகளில் 10 லட்சம் புதிய வேலைகள் உருவாகும் என்பது ஆய்வறிக்கையின் சாரம். ஆனால், ஆண்டுதோறும் 86 லட்சம் புதிய பட்டதாரிகள் வேலை தேடி சந்தையில் நுழைகிறார்கள் என்பதுதான் சோகம்.

நாட்டின் ஒட்டு மொத்த வளர்ச்சி இவ்விதம் இருக்க, தனி நபர்களின் முயற்சியின் பயனாக விளையும் பொருளாதார வளர்ச்சி, உலக அளவில் தனி நபர்களின் வளர்ச்சிக்கு ஈடு கொடுப்பதாக அமைந்துள்ளது. பன்னாட்டுத் தர நிர்ணய அமைப்புகளின் ஆய்வுப்படி, இந்தியாவில் தனி நபர் கோடீஸ்வரர்களின் (நான்கு கோடியே ஐம்பது லட்சம் ரூபாய்க்கு மேல் சொத்து உள்ளவர்கள்) எண்ணிக்கை கடந்த ஓராண்டில் 20 சதவீதம் அதிகரித்துள்ளது!

உலக அளவில் பிரபலமாக “கார்டியன்’ நாளேட்டின் பொருளாதார ஆசிரியர் Larry Elliot தனது சமீபத்திய கட்டுரையில், அமெரிக்க டாலரின் மதிப்பு எப்படி இறங்குமுகத்தில் உள்ளது என்று சுட்டிக் காட்டுகிறார். அவர் மேலும் கூறுகிறார்: “”19-வது நூற்றாண்டில் பிரிட்டன் ஒரு மாபெரும் பொருளாதார சக்தியாகத் திகழ்ந்தது. அப்போது அதன் நாணயமான ஸ்டெர்லிங் உச்சத்தில் இருந்தது. இன்று நிலைமை மாறிவிட்டது. அதேபோல், அமெரிக்கா தன் சக்திக்கு மேல் வாழ்ந்து கொண்டிருக்கிறது. அமெரிக்க நிலை இப்படியே நீடிக்குமானால், 2050-ம் ஆண்டுக்குள், நிச்சயமாக சீனாவும் அனேகமாக இந்தியாவும், அமெரிக்காவை பின்னுக்குத் தள்ளிவிட்டு, உலகின் மிகப் பெரிய பொருளாதார சக்தியாகத் திகழக்கூடும்’.

இந்தச் செய்தியை பார்த்துவிட்டு எட்வர்ட் லூசி கூறுவதுபோல் உடனே இந்தியர்கள் வெற்றி கொண்டாடப் போவதில்லை. ஆனால், அவரே ஒப்புக் கொள்வதுபோல், இந்தியப் பொருளாதார முன்னேற்றம் தானாக இயங்குவதோ  அல்லது, நிச்சயம் நிகழும் (guaranteed) என்றோ சொல்லுவதற்கில்லை. இடையே எத்தனையோ தடைக்கற்கள் உள்ளன. தொழில் சுழற்சியில் மேலே ஏறும்போது, கீழே இறங்குவதும் இயல்பே. கட்டமைப்பு வசதிகள் இன்னும் முழுமை பெறவில்லை. இத்திசையில் ஆற்றிட வேண்டிய பணிகள் நிறைய உள்ளன. நமது துறைமுகங்களில், விமானக் கூடங்களில் கிடைக்கும் வசதிகள் மேலும் மேம்பட வேண்டியது அவசியம். நெடுஞ்சாலைகள், பாலங்கள், மின்சாரம் என பல கட்டமைப்பு வசதிகள் அதிகரிக்கப்பட வேண்டும்.

இதையே இன்னொரு விதமாகவும் பார்க்கலாம். இத்தனை குறைபாடுகள் இருந்தும், இந்த வளர்ச்சி நிகழ்ந்துள்ளது. தடைக் கற்கள் முற்றிலுமாக அகற்றப்பட்டால், வளர்ச்சியின் வேகம் மேலும் அதிகரிக்கும் அல்லவா? இந்த உணர்வுடன் செயல்படுவது, வெற்றிக்கனியைப் பறிப்பதற்கு முன்பே கொண்டாடுகிறோம் என்றாகாது. இன்னும் கொஞ்சம் “தம்’ பிடித்து “எம்பினால்’ புதிய உயரங்களைத் தொட்டு விடலாம் என்ற தன்னம்பிக்கையோடு நூறு கோடி மக்கள் செயல்படுவது நல்லதுதானே?

Posted in Agriculture, Analysis, Automobile, BPO, Commerce, Dinamani, Economy, Edward Luce, Employment, Exports, Finance, GDP, Handlooms, Imports, Industrial Growth, Inspite of the Gods, Loans, Op-Ed, Outsourcing, S Gopalakrishnan, Service sector | Leave a Comment »