Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘autocrat’ Category

Passions Revive Over Spanish Civil War: Vatican Beatifying 498 & Parliament passes law condemning Franco

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 31, 2007

பிரான்சிஸ்கோ ஆட்சியைக் கண்டிக்கும் தீர்மானம்

பிரான்சிஸ்கோ பிரான்கோ
பிரான்சிஸ்கோ பிரான்கோ

ஸ்பெயினில் கடந்த 1975ஆம் ஆண்டு முடிவுக்கு வந்த ராணுவ தளபதி பிரான்சிஸ்கோ பிரான்கோவின் நாற்பது ஆண்டுகால ஆட்சியை அதிகாரபூர்வமாக கண்டிக்கும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சட்டம் ஒன்றை ஸ்பெயின் நாடாளுமன்றம் நிறைவேற்றியுள்ளது.

பிரான்கோவின் பாஸிச ஆட்சி என்று குறிப்பிட்டு கண்டிப்பதோடு 1936ஆம் ஆண்டுக்கும், 1939ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தைச் சேர்ந்த கூட்டுப் புதைகுழிகள் தோண்டப்படுவதற்கான முயற்சிகளுக்கு பிராந்திய நிர்வாகங்கள் நிதி வழங்க வேண்டும் என்று உத்தரவிடும் மசோதாவை நாடாளுமன்றம் ஆதரித்து வாக்களித்துள்ளது.

ஜெனரல் பிரான்கோவின் ஆட்சியை குறிக்கும் வகையிலான சிலைகள், பதாகைகள் மற்றும் சின்னங்கள் அனைத்தும் பொது கட்டிடங்களிலுருந்து அகற்றப்படவேண்டும் என்றும் இந்த உத்தரவு கூறுகின்றது.

ஆறிய வடுக்களை மீண்டும் கிளறிவிட்டு சமுதாயத்தை பிளவுபடுத்த பார்க்கிறது சோஷலிஸ அரசு என்று பழமைவாத எதிர்கட்சி குற்றம்சாட்டியுள்ளது.

Posted in Angel Acebes, Angels, Assassin, Assassinations, Atrocities, atrocity, Autocracy, autocrat, Autocratic, Aznar, beatification, Beatify, bishop, Catholic, Catholicsm, CCP, Ceremony, Christ, Christian, Christianity, Church, Civil, clergy, Condemn, Conservative, Conservatives, Coup, Criminal, Cruz Laplana y Laguna, Dictator, Dictators, Dictatorship, executed, executions, Fascism, fascist, Fear, Francisco, Francisco Franco, Franco, Gen. Francisco Franco, General, Germans, Germany, graves, inequality, Jose Maria Aznar, Judges, Jury, Justice, Laguna, Law, Left, legislation, massacre, Military, Militia, NCCP, Oppression, Order, parliament, Passions, PM, Popular Party, Power, President, Rebellion, Regime, Religion, repression, Republicans, Right, Ruler, Russia, sainthood, Saints, Senate, Socialism, Socialist, Soviets, Spain, Spanish, USSR, Vatican, victims, War, Wealth, Zapatero | Leave a Comment »

Warrants of Arrest for the Minister of Humanitarian Affairs of Sudan, and a leader of the Militia/Janjaweed

Posted by Snapjudge மேல் மே 3, 2007

சூடானின் முன்னாள் உள்துறை அமைச்சருக்கு சர்வதேச நீதிமன்றம் பிடியாணை

ஜான் ஜாவீத் அமைப்பின் உறுப்பினர் ஒருவர்
ஜான் ஜாவீத் உறுப்பினர் ஒருவர்

சூடானின் டார்பூரில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர் குற்றங்கள் தொடர்பில் தி ஹேக்கில் உள்ள சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் முதல் தடவையாக பிடியாணையைப் பிறப்பித்துள்ளது.

இவற்றில் ஒன்று சூடானின் முன்னாள் உள்துறை அமைச்சர் அஹ்மட் ஹரூனுக்கு எதிரானதாகும்.

அவர் மீதான குற்றச்சாட்டின்படி, அவர், ஜன்ஜவீட் தீவிரவாதிகளுக்கு நிதி வழங்கினார் என்றும், தனிப்பட்ட முறையில் ஆயுத உதவி செய்தார் என்றும் பொதுமக்கள் மீதான தாக்குதல்களுக்காக அவர்களைத் தூண்டினார் என்று கூறப்படுகிறது.

யுத்த உபாயத்தின் ஒரு பாகமாக பாலியல் வல்லுறவையும் மற்றும் சித்திரவதையையும் வளர்த்ததாகக் கூறப்படும் ஜன்ஜவீட் தளபதிகளில் ஒருவராக வர்ணிக்கப்படும் அலி குசாயிப் அவர்கள் மீதும் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஜன்ஜவீட் அமைப்புடன் தமது அமைச்சர்கள் எவருக்கும் இந்த விதமான தொடர்பும் கிடையாது என்று சூடானிய அரசாங்கம் கூறுகிறது.

இந்த நீதிமன்றத்துக்கு எந்த ஒரு சந்தேக நபரையும் அது கையளிக்காது என்றும் சூடானிய அரசாங்கம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது


அம்னெஸ்டி அமைப்பின் புகாரை சீனாவும் ரஷியாவும் மறுத்துள்ளன

அம்னெஸ்டி நிறுவனத்தின் சின்னம்
அம்னெஸ்டி நிறுவனத்தின் சின்னம்

சூடானின் டார்பூர், பகுதிக்கு ஆயுதங்களைக் கொடுக்கக் கூடாது என்ற ஐ நாவின் தடையை மீறி, சீனாவும், ரஷ்யாவும் சூடானிய அரசுக்கு ஆயுதங்களை அளித்தன என்று லண்டனைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் அனைத்துலக அபயஸ்தாபனமான அம்னெஸ்ட்டி இன்டர்நேஷனல், கூறியிருந்த புகாரை சீனாவும், ரஷ்யாவும் மறுத்துள்ளன.

டார்பூரில் உள்ள பொதுமக்களுக்கு எதிராக பயன்படுத்தத்தக்க ராணுவ விமானங்களை சூடான் அரசுக்கும், பிற ஆயுதங்களை ஆயுதக் குழுக்களுக்கம் இந்நாடுகள் அளித்ததாக அம்னெஸ்ட்டி கூறியுள்ளது.

ஆனால் சீனா மற்றும் ரஷ்ய வெளியுறவு அமைச்சுக்கள் இந்தப் பிரச்சனை தொடர்பாக ஐ நா தீர்மானங்களை தத்தம் நாடுகள் கடைபிடிப்பதாக கூறியுள்ளன.

ஐ நாவுக்கான சூடானிய தூதரும் இந்தக் குற்றச்சாட்டை நிராகரித்துள்ளார். திரித்துக் கூறுவதையே வரலாராகக் கொண்ட, ஒரு நிறுவனம் வெளியிட்டுள்ள ஒரு தவறான அறிக்கை இது என்று அவர் இதை வர்ணித்துள்ளார்.

Posted in africa, AI, Amnesty, Arms, Arrest, Autocracy, autocrat, Berkshire, Blasts, Bombs, China, crimes, Darfur, defence, Destruction, Exports, Fidelity, genocide, ICC, Janjaweed, Law, Leader, Lord of war, Militants, Military, Militia, Order, Police, Regime, Russia, Soviet, Sudan, Supply, support, Terrorism, UN, USSR, War, Warrants, Warren, Weapons | Leave a Comment »

Bangladesh’s controversial election commission members resign en masse

Posted by Snapjudge மேல் ஜனவரி 31, 2007

வங்கதேச தேர்தல் ஆணையத்தின் ஐந்து உறுப்பினர்கள் ராஜினாமா

வங்கதேசம்
வங்கதேசம்

வங்காளதேசத்தில் பிரதான அரசியல் கூட்டணிகளில் ஒன்றின் பல மாத கால அழுத்தத்திற்குப் பிறகு அந்நாட்டின் தேர்தல் ஆணையத்தின் ஐந்து உறுப்பினர்களும் தங்களது பதவியினை ராஜினாமா செய்து விட்டார்கள்.

இந்த ஐந்து பேரும் தேர்தல் ஆணைய உறுப்பினர்களாக இருக்கும் வரை தாங்கள் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என பிரதான கூட்டணி ஒன்றின் தலைவியும் முன்னாள் பிரதமருமான ஷேக் ஹசீனா முன்னதாகத் தெரிவித்திருந்தார்.

இன்றைய ராஜினாமாக்கள், புதிதாக மாற்றியமைக்கப்பட்ட ஒரு தேர்தல் ஆணையத்தின் கீழ் பொதுத் தேர்தல்கள் நடைபெற வழி வகை செய்யும். வாக்குப் பதிவில் மோசடி செய்தனர் என்கின்ற குற்றச்சாட்டை இந்த ஐந்து ஆணையர்களும் எதிர்நோக்கியிருந்த நிலையில், ஜனவரி மாதம் 22ம் தேதி நடைபெறவிருந்த தேர்தல்கள் ரத்து செய்யப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.


வங்காளதேசத்துக்கு தேர்தல் ஜனநாயகம் பொருந்தாது என்கிறார் அந்த நாட்டு இராணுவத் தளபதி

வங்காளதேசத்தை தமது நேரடிக் கட்டுப்பாட்டில் கொண்டுவரும் நோக்கம் இல்லை என்கிறது இராணுவம்
வங்காளதேசத்தை தமது நேரடிக் கட்டுப்பாட்டில் கொண்டுவரும் நோக்கம் இல்லை என்கிறது இராணுவம்

வங்காளதேசத்தில் மோசமான நிர்வாகத்தைச் சமாளிப்பதற்கு புதிய பாணியிலான ஜனநாயகம் ஒன்று தேவை என்று அந்த நாட்டின் இராணுவத் தளபதி, லெப்டினண்ட் ஜெனரல் மூயின் அஹ்மட் கூறியுள்ளார்.

தேர்தல் மாதிரியிலான ஜனநாயகத்தில் ஊழல் பரவி, அதனால் ஆட்சி பாதிக்கப்படும் என்று கூறிய அவர் அப்படியான ஒன்றை தான் விரும்பவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

இராணுவ ஆதரவிலான இடைக்கால அரசாங்கத்தின் முக்கிய நோக்கம், அங்கு ஒரு நியாயமான மற்றும் சுதந்திரமான தேர்தலை நடத்துவதே என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஒரு குறித்த கால எல்லை குறித்துக் கருத்துக் கூற அவர் மறுத்துவிட்டார்.


Posted in Army, autocrat, Awami League, Bangladesh, Bangladesh Nationalist Party, CEC, Chief Election Commissioner, defence, Defense, Democracy, Democratic, election commission, executive, Fakhruddin Ahmed, Govt, Iajuddin Ahmed, interim government, Judiciary, Khaleda Zia, Legislature, M A Aziz, Mahfuzur Rahman, Military, President, Republic, Rule, Sheikh Hasina | Leave a Comment »

Egypt: Mubarak to ease restrictions on presidential bids

Posted by Snapjudge மேல் நவம்பர் 20, 2006

எகிப்தில் அரசியலமைப்பை மாற்றப் போவதாக அதிபர் முபாரக் கூறுகிறார்

அதிபர் முபாரக்
அதிபர் முபாரக்

எகிப்திய அதிபர் முபாரக் அவர்கள் அதிபர் தேர்தலில் எதிர்க் கட்சிகளும் போட்டியிட வழி விடும் வகையில் அரசியலமைப்புச் சட்டத்தை மாற்றியமைக்கப் போவதாகக் கூறியுள்ளார்.

நாடளுமன்ற ஆண்டுக் கூட்டத் தொடரை ஆரம்பித்து வைத்துப் பேசிய அவர், தான் கொண்டுவரத் திட்டமிட்டுள்ள விரிவான சட்ட மறுசீரமைப்புகள் குறித்து விவரித்தார்.

முபாரக் அவர்களின் தேசிய ஜனநாயகக் கட்சிக்கு சவால் விடுமளவுக்கு எதிர்த்தரப்பினருக்கு சட்ட ரீதியாகப் பெரிய அளவில் நிலைமை கிடையாது என்கிறார் எமது கய்ரோ முகவர்.

தடை செய்யப்பட்ட முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பு போன்ற எதிர்க் கட்சியினர் பயன்பெறும் வகையில் இந்த அரசியலமைப்புச் சட்ட மாற்றங்கள் செய்யப்படவில்லை.

ஐந்தாம் தடவையாக கடந்த 2005ம் ஆண்டு அதிபர் பதவிக்கு வந்த முபாரக் அவர்கள், தனக்கடுத்து தன்னுடைய மகன் ஜெமாலை அப்பதவியில் அமாத்துவதற்காகத் தான் இந்த சட்ட மாற்ற வேலைகளில் ஈடுபட்டுள்ளார் என்று அவரது விமர்சகர்கள் கூறுகின்றனர்.

Posted in al-Jazeera, autocrat, Egypt, Hereditary, Islam, King, Military, Mubarak, National Democratic Party, parliament, President, reforms | Leave a Comment »

DMK Government’s undemocratic collusion with election commission

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 19, 2006

தீதும் நன்றும் பிறர் தர வாரா

தமிழகத்தில் மிகவும் பரபரப்புடன் நடந்து முடிந்த மதுரை மத்திய தொகுதி இடைத்தேர்தலில் திமுக வெற்றிபெற்று, தன் மணிமகுடத்தில் மீண்டும் அந்த வைரத்தைப் பதித்துக்கொண்டது.

சுமார் 31 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் வெற்றி பெற்றது மட்டுமன்றி, முந்தைய தேர்தலில் பெற்ற வாக்குகளைவிட இப்போது சுமார் 7 ஆயிரம் வாக்குகள் கூடுதலாகப் பெற்றிருப்பதும் குறிப்பிடத்தக்கது. அதே நேரத்தில் ஆறு மாதங்களுக்கு முன் 35 ஆயிரம் வாக்குகள் பெற்ற அதிமுக இத்தேர்தலில் 19,909 வாக்குகளே பெற முடிந்துள்ளது. ஆனால், தேர்தல் களத்தில் தனித்துப் போட்டியிட்ட தே.மு.தி.க. கடந்த தேர்தலைவிட சுமார் 5 ஆயிரம் வாக்குகள் அதிகம் பெற்று, மொத்தம் 17 ஆயிரம் வாக்குகளுடன் அதிமுகவை மிக நெருங்கி, 3-வது இடத்தில் வந்திருப்பதும் கவனிக்கத்தக்கது. இதே நிலைதான் உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளிலும் தொடர்கிறது.

மதுரை மாநகரின் வெற்றி திமுகவுக்குப் பெருமை சேர்த்தாலும், சென்னை மாநகராட்சித் தேர்தலில் வாக்குப் பதிவை நிறுத்தி வைக்கும் அளவுக்கு நடந்த வன்முறை, அதன் பெருமையைக் குறைப்பதாய் அமைந்துவிட்டது.

உள்ளாட்சி மற்றும் கூட்டுறவுத் தேர்தல்களில் ஆளுங்கட்சி விரும்பாத சம்பவங்களை சில அதிகாரிகள் பூசிமெழுகுவது வழக்கமான ஒன்றுதான். இது வாக்குச்சாவடி அலுவலர்கள், பூத் ஏஜெண்ட்டுகள் என்ற அளவில் முடிந்து போகும்.

2001-ல் அதிமுக ஆட்சியில் நடந்த சென்னை மாநகராட்சித் தேர்தலிலும் கள்ளவோட்டு, வாக்கு எண்ணிக்கையின்போது தகராறு என பல சம்பவங்கள் இருந்தன. இருப்பினும் தோழமைக் கட்சிகளான கம்யூனிஸ்ட் கட்சியினரும், எந்தக் கூட்டணியிலும் இல்லாத பாஜக, தேமுதிகவினரும் ஒட்டுமொத்தமாகத் திமுகவைக் குற்றம் சாட்டியதைப் போன்ற சம்பவம் இதுவே முதல்முறை.

சென்னை மாநகர முந்தைய மேயரும் இன்றைய உள்ளாட்சித் துறை அமைச்சருமான மு.க.ஸ்டாலின், அப்பதவியிலிருந்து விலக அதிமுக அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளின் மீதான கோபத்தின் வெளிப்பாடுதான்-ஓர் இடத்தில் கூட அதிமுக வந்துவிடக்கூடாது என்ற தீவிரமும், அதைத் தொடர்ந்த வன்முறையும் எனக் கருதப்படுகிறது. திமுகவின் கோபம் நியாயமானதாக இருக்கலாம். அதற்காக வன்முறையை நியாயப்படுத்த முடியாது.

வன்முறைகள் தலைகாட்டியவுடன் மாநிலத் தேர்தல் ஆணையம் உடனடியாக நடவடிக்கையில் இறங்கியிருக்க வேண்டும். “முரசு சின்னத்தை முடக்கிவிட்டீர்கள்’ என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியதும் உடனே எச்சரிக்கை விடுப்பதில் காட்டிய ஆர்வத்தை, வன்முறை நடந்த அனைத்து வாக்குச் சாவடிகளிலும் மறுதேர்தலுக்கு உத்தரவிட்டிருந்தால் இன்று நீதிமன்றத்தில் குட்டுப்படும் நிலைமை ஏற்பட்டிருக்காது. சென்னை மாநகராட்சித் தேர்தலில் திமுக, அதிமுக இரு தரப்பினரும் தெரிந்து கொள்ள வேண்டியது ஒன்றுதான்: “தீதும் நன்றும் பிறர் தர வாரா.’

மதுரை மத்திய தொகுதி இடைத்தேர்தலில் மத்திய தேர்தல் ஆணையம் எடுத்த நடவடிக்கைகள் ஜனநாயகம் மீதான நம்பிக்கையை மீட்டெடுத்தன. அதேபோன்ற நடவடிக்கைகளை மாநில தேர்தல் ஆணையம் செய்யத்தவறி விட்டது. மக்களுக்கு, குறிப்பாக ஊரக மக்களுக்கு, ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கை இதுபோன்ற செயல்களால் குறைந்து போகும்.

தமிழகத்தில் நடந்த பிரசாரங்களில் மத்தியில், மாநிலத்தில், உள்ளாட்சியில் ஒரே கூட்டணி ஆட்சி இருந்தால் முழுமையாகத் திட்டங்கள் மக்களைச் சென்றடையும் என்று பிரசாரம் செய்யப்பட்டது. இதுவே ஒரு பொதுவான ஜனநாயகத்தன்மைக்கு விரோதமானது. இது எதிர்மறை அரசியலாகும். யார் ஆட்சி செய்தாலும் அரசுத் திட்டங்கள் மக்களைச் சென்றடைய வேண்டும் என்பதுதான் ஜனநாயகத்தின் அடிப்படையான நோக்கம்.

Posted in anti-people, autocrat, Chennai, Chief Minister, civic poll, Democracy, Dinamani, DMK, Editorial, election commission, Elections, Karunanidhi, Local Body, Madras, Madurai, MK Stalin, Polls, Tamil Nadu, Violence | Leave a Comment »