Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 31, 2007
பிரான்சிஸ்கோ ஆட்சியைக் கண்டிக்கும் தீர்மானம்
 |
 |
பிரான்சிஸ்கோ பிரான்கோ |
ஸ்பெயினில் கடந்த 1975ஆம் ஆண்டு முடிவுக்கு வந்த ராணுவ தளபதி பிரான்சிஸ்கோ பிரான்கோவின் நாற்பது ஆண்டுகால ஆட்சியை அதிகாரபூர்வமாக கண்டிக்கும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சட்டம் ஒன்றை ஸ்பெயின் நாடாளுமன்றம் நிறைவேற்றியுள்ளது.
பிரான்கோவின் பாஸிச ஆட்சி என்று குறிப்பிட்டு கண்டிப்பதோடு 1936ஆம் ஆண்டுக்கும், 1939ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தைச் சேர்ந்த கூட்டுப் புதைகுழிகள் தோண்டப்படுவதற்கான முயற்சிகளுக்கு பிராந்திய நிர்வாகங்கள் நிதி வழங்க வேண்டும் என்று உத்தரவிடும் மசோதாவை நாடாளுமன்றம் ஆதரித்து வாக்களித்துள்ளது.
ஜெனரல் பிரான்கோவின் ஆட்சியை குறிக்கும் வகையிலான சிலைகள், பதாகைகள் மற்றும் சின்னங்கள் அனைத்தும் பொது கட்டிடங்களிலுருந்து அகற்றப்படவேண்டும் என்றும் இந்த உத்தரவு கூறுகின்றது.
ஆறிய வடுக்களை மீண்டும் கிளறிவிட்டு சமுதாயத்தை பிளவுபடுத்த பார்க்கிறது சோஷலிஸ அரசு என்று பழமைவாத எதிர்கட்சி குற்றம்சாட்டியுள்ளது.
Posted in Angel Acebes, Angels, Assassin, Assassinations, Atrocities, atrocity, Autocracy, autocrat, Autocratic, Aznar, beatification, Beatify, bishop, Catholic, Catholicsm, CCP, Ceremony, Christ, Christian, Christianity, Church, Civil, clergy, Condemn, Conservative, Conservatives, Coup, Criminal, Cruz Laplana y Laguna, Dictator, Dictators, Dictatorship, executed, executions, Fascism, fascist, Fear, Francisco, Francisco Franco, Franco, Gen. Francisco Franco, General, Germans, Germany, graves, inequality, Jose Maria Aznar, Judges, Jury, Justice, Laguna, Law, Left, legislation, massacre, Military, Militia, NCCP, Oppression, Order, parliament, Passions, PM, Popular Party, Power, President, Rebellion, Regime, Religion, repression, Republicans, Right, Ruler, Russia, sainthood, Saints, Senate, Socialism, Socialist, Soviets, Spain, Spanish, USSR, Vatican, victims, War, Wealth, Zapatero | Leave a Comment »
Posted by Snapjudge மேல் நவம்பர் 26, 2006
புல் அறுத்ததால் நிலம் தீட்டாம்: தலித் பெண்ணின் மூக்கறுத்த பிகார் நில உடைமையாளர்
Chennai Online News Service – View News: “Dalit woman raped by upper caste youths”
முஸாபர்நகர், நவ. 26: தலித் பெண் ஒருவர் வயலில் நுழைந்து புல் அறுத்ததால் நிலம் தீட்டுப்பட்டுவிட்டதாகக்கூறி அப் பெண்ணின் மூக்கை நிலத்தின் உரிமையாளரும் அவரது மகனும் அறுத்துள்ளனர்.
பிகார் மாநிலம் முசாபர்நகர் மாவட்டம் நரோட்டம்பூர் கிராமத்தில் வியாழக்கிழமை இச் சம்பவம் நடந்துள்ளது.
இக் கிராமத்தில் ரந்தீர் என்பவருக்குச் சொந்தமான வயலில் தலித் பெண் ஒருவர் கால்நடைக்கு புல் அறுத்துள்ளார். அப்போது நில உரிமையாளர் ரந்தீரும் அவரது மகனும் வந்தனர். தலித் பெண் நுழைந்ததால் தனது நிலம் தீட்டுப்பட்டுவிட்டதாக நிலப்பிரபு கூச்சலிட்டார். அவருடன் தலித் பெண் வாக்குவாதம் செய்தார்.
அப்போது திடீரென அப் பெண் வைத்திருந்த அரிவாளை வாங்கி அவருடைய மூக்கை நிலப்பிரபு அறுத்துவிட்டார். ரத்தம் கொட்டியபடி ஆபத்தான நிலையில் அப் பெண் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதனால் கிராமத்தில் ஏற்பட்ட பதற்றம் காரணமாக போலீஸôர் குவிக்கப்பட்டுள்ளனர்.
Posted in Atrocities, Bihar, Mussafarnagar, muzaffarnagar, Narottampur, SC, Scheduled Caste, ST, Tewra, Upper Caste, Youths | Leave a Comment »
Posted by Snapjudge மேல் நவம்பர் 17, 2006
விடுதலைப்புலிகள் ஆயுதம் கடத்த இந்திய படகுகள்: இலங்கை அரசு குற்றச்சாட்டு
கொழும்பு, நவ. 17- இந்திய மீன்பிடி படகுகளில் விடுதலைப்புலிகள் ஆயு தம் கடத்தி வருவதாக இலங்கை அரசு புகார் கூறியுள்ளது.
இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கும் அரசுக்கும் ஜெனீவாவில் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததை தொடர்ந்து இரு தரப்பினருக்கும் இடையே மீண்டும் மோதல் அதிகரித்து வருகிறது. குறிப்பாக கடற்படையினருக்கும் விடுதலைப்புலிகளின் கடற்புலிகளுக்கும் மோதல் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. இதில் இலங்கை கடற் படையினருக்கு பெரும் சேதம் ஏற்பட்டு வருகிறது.
இந்த மோதல் பற்றி இலங்கை அரசின் செய்தி தொடர்பாளர் ஒருவர் கூறியதாவது:-
தாக்குதல் நடத்தி வரும் விடுதலைப்புலிகளின் படகுகளை மூழ்கடித்து வருகிறோம். இந்திய மீன்பிடி படகுகள் மூலம் விடுதலை புலிகளுக்கு ஆயுதம் கடத்தப்பட்டு வருகின்றன. விடுதலைப்புலிகளுக்கு இந்திய மீன்பிடி படகுகளில் அயுதங்கள் கடத்தப்படுவதை இந்தியா தடுத்து நிறுத்த வேண்டும். இதில் உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி இந்திய அரசை கேட்டு இருக்கிறோம்.
இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.
இதற்கிடையே விடுதலைப்புலிகளுடன் மீண்டும் பேச்சு வார்த்தை நடத்ததயாராக இருப்பதாக இலங்கை அரசு தெரிவித்து இருக்கிறது.
இது தொடர்பாக இலங்கை அதிபர் ராஜபச்சே பாராளுமன்றத்தில் பேசும்போது “விடுதலைப்புலிகளை பேச்சு வார்த்தைக்கு வரும் படி மீண்டும் நான் அழைப்பு விடுக்கிறேன். அமைதி முயற்சி மூலம் பிரச்சினைக்கு தீர்வுகான இலங்கை அரசு தயார்” என்று கூறியுள்ளார்.
இந்த நிலையில் ராணுவ செலவுக்கு 45 சதவீதம் கூடுதலாக அவர் ஒதுக்கி இருக்கிறார்.
Posted in Allegations, Atrocities, Countercharges, Eezham, Fight, Geneva, Independence, Jenoa, Liberation, LTTE, Rajapakse, Refugees, Sri lanka, Tamil, Terrorism, Viduthalai Puligal, War, Weapons | Leave a Comment »