பிரணாப், டாடா, டெண்டுல்கருக்கு பத்மவிபூஷண் விருது
சென்ற வருடம்: Padma Vibooshan, Padma Bhooshan, Padmashree awards announced « Tamil News: “பொள்ளாச்சி மகாலிங்கத்துக்கு பத்மபூஷன்; கவிஞர் வாலிக்கு பத்மஸ்ரீ விருது”
- மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி ,
- கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர்,
- தொழிலதிபர்கள் ரத்தன் டாடா,
- லட்சுமி மித்தல்,
- இன்ஃபோசிஸ் தலைவர் என்.ஆர். நாராயணமூர்த்தி
உள்ளிட்ட 13 பேர் பத்ம விபூஷண் விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
- பத்ம பூஷண் விருதுக்கு அமெரிக்கவாழ் இந்திய விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் உள்ளிட்ட 35 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
- பத்மஸ்ரீ விருதுக்கு பல்வேறு துறைகளைச் சேர்ந்த 71 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
- தொடர்ந்து ஏழாவது ஆண்டாக இந்த ஆண்டும் நாட்டின் மிக உயரிய விருதான “பாரத ரத்னா’ விருதுக்கு எவரும் தேர்வு செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
“பாரத ரத்னா’ விருதை முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு அளிக்கலாம் என எல்.கே. அத்வானி பரிந்துரைத்து கடிதம் எழுதினார். இதையடுத்து கம்யூனிஸ்ட் கட்சியினர் ஜோதிபாசுவுக்கும், உத்தரப்பிரதேச முதல்வர் மாயாவதி தங்கள் கட்சித் தலைவர் கான்சி ராமுக்கும் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
2001-ம் ஆண்டு பாரத ரத்னா விருது லதா மங்கேஷ்கர் மற்றும் பிஸ்மில்லா கானுக்கு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மத்திய அமைச்சராக உள்ள ஒருவர் பத்ம விபூஷண் விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.
பத்மவிபூஷண் விருது பெறுவோர்:
- மத்திய அமைச்சர் பிரணாப் முகர்ஜி,
- தொழிலதிபர்கள் ரத்தன் டாடா,
- லட்சுமி மித்தல்,
- இன்ஃபோசிஸ் நாராயணமூர்த்தி,
- ஹோட்டல் அதிபர் பிஆர்எஸ் ஓபராய்,
- சுற்றுச் சூழல் ஆர்வலர் ஆர்.கே. பச்செüரி,
- தில்லி மெட்ரோ ரயில் தலைவர் இ. ஸ்ரீதரன்,
- உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ஏ.எஸ். ஆனந்த்,
- பிரபல பின்னணிப் பாடகி ஆஷா போஸ்லே,
- கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த்,
- டெண்டுல்கர்,
- இந்திரா காந்தியின் முதன்மைச் செயலராக பணியாற்றிய பி.என். தர்.
எவரெஸ்ட் சிகரத்தை முதலில் தொட்ட எட்மண்ட் ஹிலாரிக்கு மரணத்துக்கு பின்பு பத்ம விபூஷண் வழங்கப்படுகிறது.
- நாகா தீவிரவாதிகளுடன் பேச்சு நடத்தியதில் முக்கிய பங்காற்றிய முன்னாள் மத்திய உள்துறைச் செயலர் கே. பத்மனாபையா,
- பிரபல வர்ணனையாளர் ஜஸ்தேவ் சிங்,
- சிட்டி வங்கி தலைவர் விக்ரம் பண்டிட்,
- ஐசிஐசிஐ தலைவர் கே.வி. காமத் ஆகியோர் பத்ம பூஷண் விருது பெறுவோரில் முக்கியமானவர்களாவர்.
பத்மஸ்ரீ விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில்
- டி.வி. நிருபர்கள் பர்கா தத்,
- ராஜ்தீப் சர்தேசாய்,
- வினோத் துவா,
- ஜம்மு காஷ்மீர் பல்கலைக் கழகத்தின் துணை வேந்தர் அமிதாப் மட்டூ,
- பின்னணிப் பாடகர் ஜவஹர் வட்டாள் ஆகியோரும் அடங்குவர்.
திரைப்படத் துறையில்
- நடிகை மாதுரி தீட்சித்,
- இயக்குநர் மனோஜ் நைட் ஷியாமளன்,
- நடிகர் டாம் ஆல்டர்,
- கால்பந்து வீரர் பாய்சுங் புடியா,
- நீச்சல் வீராங்கனை புலா செüத்ரி,
ஆகியோர் பத்மஸ்ரீ விருது பெறுவோரில் முக்கியமானவர்களாவர்.
- தமிழகத்தைச் சேர்ந்த நரம்பியல் மருத்துவ நிபுணர் சி.யு. வேல்முருகேந்திரன்,
- “தினத்தந்தி’ அதிபர் சிவந்தி ஆதித்தன்,
- பிரபல பாடகரும் டாக்டருமான சீர்காழி சிவசிதம்பரம் ஆகியோரும் பத்மஸ்ரீ விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டோரில் அடங்குவர்.