Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Assembly elections’ Category

TN CM effects reshuffle of portfolios: Why? MK Stalin vs MK Azhagiri (Kalki)

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 30, 2007

மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சராக இருந்த கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச் சந்திரனின் இலாகா பறிப்பு, கருணாநிதி குடும்பத்திலுள்ள அதிகார மையங்களி டையே நடக்கும் உரசலின் வெளிப் பாட்டை மீண்டும் வெளிச்சத்துக்குக் கொண்டு வந்துள்ளது. தென் மாவட்டங் களைப் பொறுத்தமட்டில், ஆட்சி மட்டத் திலும் கட்சி மட்டத்திலும் அழகிரியின் சொல்லே இறுதியானது. மாறன் சகோ தரர்களுடன் நடந்த மோதலில் தான் நினைத்ததை நடத்திக் காட்டிய அழகிரி, கே.கே.எஸ்.எஸ்.ஆரின் இலாகாவைப் பறித்ததன் மூலம் ஸ்டாலினுடன் மீண்டும் உரசத் துவங்கிவிட்டார் என்கிறார்கள்.

தென் மாவட்டங்களில் ஸ்டாலினின் உறுதியான ஆதரவாளர்களில் ஒருவராக இருப்பவர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். அவருக் கும் அழகிரிக்கும் ஆரம்பம் முதலே சுமுக உறவு இல்லை என்று சொல்லப்படுகிறது. விருதுநகர் மாவட்டச் செயலாளராக கே.கே.எஸ்.எஸ்.ஆர். வருவதில் அழகிரிக் குச் சற்றும் உடன்பாடில்லையாம். “அழ கிரி அண்ணன் அவரை ஒரு முன்னாள் அ.தி.மு.க.காரராகவே பார்த்தார்” என் கிறார்கள். தம்முடைய சிஷ்யர் தங்கம் தென்னரசுக்குச் செயலாளர் பொறுப்பை வாங்கித் தந்துவிட வேண்டும் என்று தீவிரமாக முயன்று பார்த்தாராம் அழகிரி. ஆனால், தென் மாவட்டங்களில் தமக்கு நம்பிக் கையான ஆட்கள் தேவை என்ற அடிப்படையில், கே.கே.எஸ்.எஸ்.ஆர், கருப்பசாமி பாண்டியன், (மறைந்த) தா.கிருஷ்ணன் போன்றவர்களுக்குத் தமது ஆதரவைக் கொடுத்து ஊக்குவித்தாராம் ஸ்டாலின். அந்த
வகையில் மாவட்டச் செயலாளரானவர்தான் கே.கே.எஸ். எஸ்.ஆர்.

இந்நிலையில் 2006ல் கலைஞர் மீண் டும் ஆட்சிக்கு வந்தவுடன் கே.கே.எஸ். எஸ்.ஆர். ஸ்டாலின் ஆசீர்வாதத்துடன் அமைச்சராகி விட்டார். ஆனால், செல் வாக்கு மிக்க மக்கள் நல்வாழ்வுத் துறை அவருக்குக் கொடுக்கப்பட்டதை கடுமை யாக எதிர்த்தாராம் அழகிரி. என்றாலும், ஸ்டாலின் பக்கபலமாக இருந்ததால் எதுவும் செய்ய முடியவில்லை என்கிறார்கள்.

அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். மிகச் சுறு சுறுப்பாகவே செயல்பட்டார் என்பது கோட்டை அதிகாரிகளின் கமெண்ட். “அவர் ரொம்ப
பிராக்டிக்கலானவர், கலந்தாலோசித்தே முடிவுகளை எடுப்பார்” என்கிறார்கள். இருந்தும் சென்னையை ஒட்டியுள்ள ஒரு சிறுபான்மை கல்வி நிறுவனம், மருத்துவக் கல்லூரி துவங்கும் விவகாரத்தில் அவர் சர்ச்சையில் சிக்கிவிட்டார் என்ற பேச்சும் இருக் கிறது. இதுதவிர, சமீபத்தில் கிட்னி மோசடி விவ காரத்தில் இரண்டு மருத்துவ
மனைகளின் அங்கீ காரம் ரத்து தொடர்பான பிரச்னை எழுந்தது.

இதில் ஒரு மருத்துவமனை முக்கிய தி.மு.க. பிரமுகா¢ன் நெருங்கிய உறவினர் நடத்துவது. இதுவும் அமைச்சர் பதவி பிடுங்கப்பட காரணம் என்கிறார்கள். விருதுநகர் மாவட்டத்தின் ஒரு பேரூராட்சியில் அ.தி.மு.க. வெல்வதற்கு மறை முகமாக உதவியதால்தான் அழகிரி சரியான சமயமாகப் பார்த்து வேட்டு வைத்துவிட்டார் என்று சொல்வோரும் உண்டு.

ஸ்டாலினால் இந்த முறை கே.கே.எஸ்.எஸ். ஆரைக் காப்பாற்ற முடியவில்லை. அவரைச் சுத்த மாக அமைச்சர் பதவியிலிருந்தே நீக்க வேண்டும் என்பதுதான் மதுரையிலிருந்து வந்த விருப்பமாம். ஆனால், ஜெயலலிதா போல் இல்லாமல் கலை ஞர் தமது அமைச்சர்களைக் கழற்றிவிட விரும்பாத வர். எனவேதான் பிற்பட்டோர் நலத்துறைக்கு அவரை மாற்றி விட்டாராம். இருந்தும் அழகிரியின் கோபம் தணியாததால் அவரைச் சில அமைச்சர்கள் சமாதானம் செய்தார்களாம். மக்கள் நல்வாழ்வுத் துறை இப்போது ஸ்டாலினின் மற்றோர் ஆதர வாளரும் வட மாவட்டத்தைச் சேர்ந்தவருமான எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்திடம் கொடுக்கப் பட்டுள்ளது. இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி கருப்பசாமி பாண்டியனை அமைச்சராக்க ஸ்டாலின் செய்த முயற்சியும் எடுபடவில்லை என்கிறார்கள்.

நெல்லையில் இளைஞர் அணி மாநாடு நடைபெறப்போகும் நிலையில், ஒரு நல்ல அமைப்பாளர் உற்சாகம் இழக்கும் நிலை ஏற் பட்டுவிட்டதே என்று அப் செட்டில் இருக்கிறாராம் ஸ்டாலின்.

Posted in ADMK, AIADMK, Alagiri, Alakiri, Assassin, Assassination, Assembly, Assembly Election, Assembly elections, assembly polls, Azagiri, Azakiri, Azhagiri, Azhakiri, backward, BC, Chicken, Chicken gunya, Chicken Kuniya, Chicken Kunya, Chicken pox, Chickenkunya, Chickenpox, chickun gunya, CM, Districts, DMK, dynasty, Fights, Health, hierarchy, JJ, K K S S R Ramachandran, Kalainjar, Kalainjar TV, Kalanidhi, Kalanidhy, Kalanithi, Kalanithy, Kalimuthu, Kalinjar, Kalki, Kanimoli, Kanimozhi, Kanimozi, Karunanidhi, Karunanidhy, Karunanidi, Karunanithi, Kill, Kingdom, Kings, KKSSR, M R K Pannerselvam, Minister, Ministers, minority, MK, Monarchy, MRK, Panneerselvam, Pannerselvam, Pannirselvam, Party, Politics, Ponmudi, portfolios, Power, Ramachandran, Registration, reshuffle, Stalin, Sureshrajan, TN, Tourism | Leave a Comment »

CPI hails CPI(M) stand not to associate with Mulayam

Posted by Snapjudge மேல் திசெம்பர் 8, 2006

முலாயம் அரசுக்கு எதிராக வி.பி.சிங் 5 நாள் பிரசாரம்

மசூரி, டிச. 8: உத்தரப் பிரதேசத்தில் முலாயம் சிங் ஆட்சிக்கு எதிராக 5 நாள் பிரசாரத்தை முன்னாள் பிரதமர் வி.பி.சிங் வியாழக்கிழமை துவக்கினார்.

வரும் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, அவர் இந்தப் பிரசாரத்தைத் தொடக்கியுள்ளார். ஜன் மோர்ச்சா கட்சி தலைவரும், நடிகருமான ராஜ் பாப்பரும் இந்தப் பிரசாரத்தில் ஈடுபடுகிறார். சமாஜ்வாதி கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்ட பிறகு, ஜன் மோர்ச்சாவை ஆரம்பித்து அதற்கு தலைவராகி உள்ளார் ராஜ்பாப்பர்.

5 நாள் பிரசார யாத்திரையில், உத்தரப் பிரதேசத்தின் மேற்குப் பகுதியில் பல்வேறு பகுதிகளுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இவர்கள் திட்டமிட்டுள்ளனர்.

உ.பி.சட்டசபை தேர்தல்: முலாயம்சிங்கை ஆதரித்து ஜெயலலிதா பிரசாரம்

புதுடெல்லி, டிச.6- பாராளுமன்ற வளாகத்தில் நடந்த எம்.ஜி.ஆர். சிலை திறப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா டெல்லி சென்றுள்ளார்.

அங்கு அவர் உத்தரபிரதேச முதல்-மந்திரி முலாயம்சிங்கை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு தேசிய அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

இதற்கிடையே இன்று நடந்த எம்.ஜி.ஆர். சிலை திறப்பு விழாவில் சமாஜ்வாடி கட்சி பொதுச்செயலாளர் அமர்சிங் கலந்து கொண்டார்.

நிகழ்ச்சி முடிந்ததும் அமர்சிங்கை நிருபர்கள் சந்தித்து ஜெயலலிதா-முலாயம்சிங் சந்திப்பு குறித்து கேட்டனர்.

இதற்கு பதில் அளித்த அமர்சிங் “உத்தரபிரதேச தேர்தலில் சமாஜ்வாடி கட்சிக்கு பிரசாரம் செய்யவரும்படி ஜெயலலிதாவை அழைத்தோம். அவர் எங்கள் அழைப்பை ஏற்றுக்கொண்டார். எனவே எங்களுக்காக தேர்தல் பிரசாரம் செய்வார்” என்றார்.

Posted in AB Bardhan, ADMK, AIADMK, Assembly elections, BSP, Communism, Communist, Communist parties, Communists, CPI, CPI (M), CPI(M), Dalit, Indian Justice Party, Indian Muslims, Jan Morcha, Jayalalitha, Mayavathi, Mayavathy, MGR, Mulayam Singh Yadav, NCP, Rahul Gandhi, Raj Babbar, Raj Bappar, Rajinder Sachar committee report, Samajwadi Party, UP, Uttar Pradesh, Uttaranchal, VP Singh, Women's Reservation Bill | Leave a Comment »