Posted by Snapjudge மேல் ஜூலை 13, 2007
அவர்களும் இந்நாட்டு மன்னர்களே!
எஸ். சையது இப்ராஹிம்
தீவிரவாதச் செயல்கள் தொடர்பாக உளவுத் துறை அண்மையில் மத்திய அரசுக்கு ஓர் அறிக்கை அளித்தது. அதில், “வடகிழக்கு மாநிலங்களில் வேகமாக வளர்ந்து வரும் தொழிலாக தீவிரவாதம் மாறி வருகிறது. கடந்த ஆண்டு இந்தத் தொழிலில் புழங்கிய தொகை ரூ. 250 கோடி’ என்று அதில் கூறப்பட்டுள்ளது.
- அருணாசலப் பிரதேசம்,
- அசாம்,
- மணிப்பூர்,
- மேகாலயா,
- மிஜோரம்,
- நாகாலாந்து,
- திரிபுரா ஆகியவை வடகிழக்கு மாநிலங்கள் ஆகும். இவை 7 சகோதரிகள் என்றும் அழைக்கப்படுகின்றன.
சீனா, மியான்மர், வங்கதேசம், பூடான் ஆகிய நாடுகளால் சூழப்பட்டுள்ள இந்த மாநிலங்களின் மொத்த மக்கள்தொகை சுமார் 3 கோடி.
நாடு சுதந்திரம் பெற்று 60 ஆண்டுகளாகியும் இன்னும் 6 மாநிலத் தலைநகரங்களுக்கு ரயில் வசதி இல்லை. இடாநகர் (அருணாசலப் பிரதேசம்), கொஹிமா (நாகாலாந்து), ஷில்லாங் (மேகாலயா) ஆகிய தலைநகரங்களில் அனைத்து வசதிகளும் கொண்ட விமான நிலையங்கள் இல்லை.
இயற்கை வளங்கள் மிகுதியாக இருந்தும், நவீன வேளாண்மை நுட்பம் தெரியாததால் ஆண்டுதோறும் ரூ. 3500 கோடிக்கு அத்தியாவசியப் பொருள்களைப் பிற மாநிலங்களில் இருந்து இறக்குமதி செய்யும் அவலம் நிலவுகிறது.
நாட்டின் மொத்த தேயிலை உற்பத்தியில் மூன்றில் இரு பங்கு, பிளைவுட் உற்பத்தியில் 60 சதவீதத்தை அளித்தாலும் வருவாயில் ஒரு பைசா கூட திரும்ப முதலீடு செய்யப்படுவதில்லை. கல்வி, சுகாதாரம், தகவல் தொடர்பு இன்னும் எட்டாக்கனியாகவே உள்ளன. இன்னும் மின்சாரத்தைப் பார்க்காத பல கிராமங்கள் உள்ளன. கடந்த நிதியாண்டில் மத்திய நிதி நிறுவனங்கள் ஒதுக்கீடு செய்த ரூ. 50 ஆயிரம் கோடியில் அசாம் மாநிலத்திற்கு வழங்கப்பட்டது வெறும் ரூ. 114 கோடி. நாகாலாந்துக்கோ ரூ. 4 கோடி மட்டுமே. மற்ற மாநிலங்களுக்கு ஒரு பைசா கூட வழங்கப்படவில்லை.
இதனால் உணவுப்பற்றாக்குறை, வேலையில்லாத் திண்டாட்டம், நிதி நெருக்கடி போன்ற பிரச்னைகளில் சிக்கி இந்த மாநிலங்கள் திணறுகின்றன. அசாமின் கடன்சுமை ரூ. 10 ஆயிரம் கோடி.
இந்த நிலைக்கு யார் காரணம்? அண்டை நாடுகளில் இருந்து அகதிகளாக வருபவர்களை இரு கரம் நீட்டி வரவேற்று, அன்பு காட்டி அரவணைக்கும் அரசு, ஏன் இந்த 3 கோடி மக்களின் வளர்ச்சித் திட்டங்களில் அக்கறை காட்டாமல் புறக்கணிக்கிறது?. வடகிழக்கு மாநிலங்கள் புறக்கணிக்கப்பட்டு வருவது பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் தொடங்கியது. புறக்கணிப்புக்கு இதுதான் காரணம் என்று ஏதேனும் ஒன்றை மட்டும் சுட்டிக்காட்டி விட முடியாது. புறக்கணிப்பின் விளைவு தீவிரவாதம்.
“1960-களில் ஷில்லாங் பகுதியில் ஏற்பட்ட கடும் பஞ்சத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மத்திய- மாநில அரசுகள் உரிய நிவாரணம் வழங்கியிருந்தால் நாங்கள் ஆயுதங்களைக் கையில் எடுத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்காது’ என்று மிஜோ தேசிய அமைப்பின் தலைவர் லால்தெங்கா தெரிவித்தது நினைவுக்கு வருகிறது. அவர் கூறுவதும் உண்மைதான்.
ஆரம்பத்தில் போராட்டங்களை ஒடுக்க ராணுவத்தை ஏவி மக்களை ஆயுதம் தூக்க வைத்தது மத்திய அரசு என்றால் மிகையல்ல. இருப்பினும் அரசின் இந்த முயற்சிக்கு வெற்றி கிடைக்கவில்லை.
நாகாலாந்தில் நாகா சோஷலிஸ்ட் தேசிய கவுன்சில் அமைப்புடன் மத்திய அரசு மேற்கொண்ட உடன்படிக்கையால் அங்கு தற்போது அமைதி நிலவுகிறது. பேச்சுவார்த்தைக்குக் கிடைத்த வெற்றி இது.
ஆனால், அசாம் மாநிலத்தில் உல்ஃபாவுடன் மத்திய அரசு செய்து கொண்ட உடன்படிக்கை 2006-ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தோடு முடிவடைந்தது. இதையடுத்து, தற்போது அந்த மாநிலத்தில் தீவிரவாத செயல்கள் மீண்டும் தலைதூக்கியுள்ளன என்பதை அண்மைச் சம்பவங்கள் உணர்த்துகின்றன. இதை மனதில் கொண்டு பல்வேறு தீவிரவாத அமைப்புகளுடன் மத்திய அரசு பேச்சு நடத்த வேண்டும். பேச்சுவார்த்தை மீது தீவிரவாத அமைப்புகளுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் கீழ்கண்டவற்றையும் செய்யலாம்.
வடகிழக்கு மாநிலங்களில் மட்டும் நடைமுறையில் உள்ள மக்கள் நலனுக்கு எதிரான ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை திரும்பப் பெற வேண்டும். மத்திய திட்டக்குழுவின் துணைத் தலைவர் மான்டேக் சிங் அலுவாலியாவின் பரிந்துரைப்படி, வடகிழக்கு மாநிலங்களுக்கு உரிய போக்குவரத்து வசதி செய்துதர வேண்டும். குறிப்பாக “வடகிழக்கு ஏர்லைன்ஸ்’ என்ற பெயரில் புதிய விமான நிறுவனத்தைத் தொடங்கி சேவை அளிக்க வேண்டும்.
இந்தத் திட்டத்தை அமல்படுத்தினால் 7 மாநிலங்களில் இயற்கை எழில் மிகுந்த பகுதிகளைப் பார்வையிட ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருவர். இதன் மூலம் பொருளாதாரம் வளர்ச்சி அடைய வாய்ப்பு உள்ளது. ஏற்கெனவே அறிவித்த வடகிழக்கு மாநிலங்களுக்கானக் கொள்கையை அமல்படுத்துவதில் மத்திய அரசு உரிய கவனம் செலுத்தலாம். மியான்மர் சாலையைத் திறந்துவிடலாம்.
இது போன்ற நடவடிக்கைகள் வடகிழக்கு மாநில மக்களின் சமூக, பொருளாதார நிலையை உயர்த்தினால், பேச்சுவார்த்தையே ஒருவேளை தேவையில்லாமல் போய்விடும்.
இருப்பினும், வடகிழக்கு மாநிலங்களில் உள்ள 3 கோடி மக்களும் நம் சகோதரர்கள், அவர்களும் இந்நாட்டு மன்னர்கள் என்பதைக் கருத்தில் கொண்டு இப் பிரச்னையில் மத்திய அரசு உரிய கவனம் செலுத்துமா?
Posted in abuse, AGP, Ahluwalia, AP, Arunachal, Arunachal Pradesh, Asom, Assam, Bangladesh, Banks, Bengal, Bhutan, Budget, Burma, Bus, Capital, Care, Center, China, coffee, Commerce, defence, Defense, Destination, Development, Dilse, Drought, Electricity, Employment, Environment, Exports, Extremism, Flights, Floods, Forest, Funds, GDP, Govt, Green, Growth, IMF, Imports, Improvements, Industry, ISI, Itanagar, Jobs, Kohima, Loans, Mahantha, Manipur, Manirathnam, Maniratnam, Manisha, Manufacturing, Megalaya, Meghalaya, Military, Misa, Mizoram, Montek, Mynamar, Naga, Nagaland, Nature, NE, Neglect, Northeast, Pakistan, Party, Planes, Plants, Plywood, Politics, Pollution, POTA, Power, Preity, Railways, Rains, Roads, Rubber, Shahrukh, Shillong, State, Students, Surface, TADA, Tea, Teak, Terrorism, Terrorists, Tourist, Trains, Transport, Travel, Trees, Tripura, ULFA, Uyire, Water, WB, Wood, Youth, Zinta | Leave a Comment »
Posted by Snapjudge மேல் மார்ச் 7, 2007
இந்தியர் அல்லாதவர் எம்.பி. ஆனது எப்படி? மக்களவையில் பாஜக கேள்வி
புதுதில்லி, மார்ச் 8: இந்தியர் அல்லாத ஒருவர் எம்.பி. ஆக எப்படி தேர்ந்தெடுக்கப்பட்டார் என்று நாடாளுமன்றத்தில் பாஜக புதன்கிழமை குரல் எழுப்பியது.
அவை கூடியதும் பாஜக வைச் சேர்ந்தவரும், எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான மல்ஹோத்ரா, இந்த பிரச்சினையைக் கிளப்பினார்.
அவர் பேசும் போது, அசாம் தேஜ்பூர் தொகுதியில் இருந்து தேந்தெடுக்கப்பட்ட காங்கிரஸ் எம்.பி.யான சுப்பா, இந்தியாவைச் சேர்ந்தவர் அல்ல. அவர் நேபாளத்தைச் சேர்ந்தவர் என்று பத்திரிகையில் படித்தேன் என்று குறிப்பிட்டார்.
ஆனால், மக்களவைத் தலைவர் சோம்நாத் சாட்டர்ஜி, “இந்த விவகாரம் தொடர்பாக பேச முன் அனுமதி கோரி நோட்டீஸ் அளிக்கப்படவில்லை. அதனால் பேச அனுமதிக்க முடியாது’ என்று கூறினார்.
Posted in Asom, Assam, BJP, Citizen, Cong (I), Cong(I), Congress, Congress (I), Congress Party, Congress(I), Lok Sabha, LokSabha, LS, Moni Kumar Subba, MP, Nationality, Nepal, Nepali, Subba, Tejpur, Tezpur | Leave a Comment »
Posted by Snapjudge மேல் பிப்ரவரி 15, 2007
தேசிய விளையாட்டு போட்டி: 62 கிலோ பளுதூக்குதலில் தமிழக வீரருக்கு தங்கம்
குவாஹாட்டி, பிப். 15: குவாஹாட்டியில் நடைபெற்றுவரும் 33-வது தேசிய விளையாட்டுப் போட்டியில், தமிழக பளுதூக்குதல் வீரர் தன்ராஜ் சுடலைமுத்து தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார்.
பளுதூக்குதல் போட்டி புதன்கிழமை தொடங்கியது.
62 கிலோ எடைப் பிரிவில் மொத்தம் 257 கிலோ தூக்கி முதலிடத்தை பிடித்தார் சுடலைமுத்து.
சத்தீஸ்கர் மாநிலத்தின் ருஷ்தாம் சாரங் 252 கிலோ தூக்கி வெள்ளியையும், மத்தியப்பிரதேச மாநில வீரர் பிஜூ வெண்கலத்தையும் வென்றனர்.
வாலிபாலில் வெள்ளி: மகளிருக்கான வாலிபால் இறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் தமிழக அணியும், கேரள அணியும் மோதின. இதில் தமிழக அணியை 25-20, 25-16, 25-14 என்ற செட் கணக்கில் தோற்கடித்து தங்கம் வென்றது கேரளம்.
மேற்கு வங்கம் வெண்கலப் பதக்கத்தை பெற்றது.
ஆடவர் அணி தோல்வி: ஆடவர் பிரிவில் வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில், கேரள அணி 25-22, 25-20, 25-20 என்ற செட் கணக்கில் தமிழகத்தை தோற்கடித்தது.
மணிப்பூர் முன்னிலை: பதக்கப்பட்டியலில் 43 தங்கம், 16 வெள்ளி உள்பட 77 பதக்கங்களுடன் முன்னிலை வகிக்கிறது மணிப்பூர்.
சர்வீசஸ் அணி 19 தங்கம், 22 வெள்ளி, 22 வெண்கலம் உள்ளிட்ட 63 பதக்கங்களுடன் 2-ம் இடத்தில் உள்ளது.
தமிழகம் 5 தங்கம், 7 வெள்ளி, 7 வெண்கலம் உள்ளிட்ட 12-ம் இடத்தில் உள்ளது. கேரளம் 9 தங்கம் உள்பட 28 பதக்கங்களுடன் 10-ம் இடத்தில் உள்ளது.
State Gold Silver Bronze Total
- Manipur 43 17 21 81
- Services 34 26 26 86
- Assam 19 28 28 75
- Delhi 16 19 19 54
- Maharashtra 16 18 19 53
- Uttar Pradesh 15 16 29 60
- Haryana 15 15 16 46
- Karnataka 15 14 19 48
- Punjab 13 26 23 62
- Kerala 13 9 15 37
- Andhra Pradesh 11 10 10 31
- Tamil Nadu 6 8 10 24
- Madhya Pradesh 4 14 27 45
- West Bengal 4 6 7 17
- Uttarakhand 4 2 3 9
- Jammu & Kashmir 3 2 7 12
- Himachal Pradesh 3 1 1 5
- Orissa 3 1 1 5
- Gujarat 2 4 8 14
- Chandigarh 2 2 6 10
- Jharkhand 2 2 0 4
- Chhattisgarh 2 1 0 3
- Sikkim 1 1 2 4
- Nagaland 1 0 5 6
- Andaman & Nicobar 0 1 1 2
- Mizoram 0 0 3 3
- Rajasthan 0 0 2 2
- Arunachal Pradesh 0 0 2 2
- Goa 0 0 2 2
Overall 247 243 312 802
தேசிய விளையாட்டு: அருண்ஜீத் 3 தங்கம் வென்று சாதனை!
குவாஹாட்டி, பிப். 16: அசாமில் நடைபெற்றுவரும் 33-வது தேசிய விளையாட்டுப் போட்டியில், கடைசி நாளான வியாழக்கிழமை 3 தங்கப் பதக்கங்களை வென்று சாதனை படைத்தார் கேரளத்தை சேர்ந்த தட கள வீரர் எஸ். அருண்ஜீத்.
பதக்கங்களை பெறுவதில் கேரளத்துக்கும் சர்வீசஸ் (ராணுவ படைப்பிரிவு) அணிக்கும் இடையில் பலத்த போட்டி இருந்தாலும் கேரளம் முந்தியது.
100 மீட்டர் ஓட்டப் பந்தயம், 200 மீட்டர் ஓட்டப் பந்தயம், 400 மீட்டர் தொடர் ஓட்டம் ஆகியவற்றில் அருண்ஜீத் தங்கப் பதக்கங்களை வென்றார். இவர், கேரளத்தின் பதக்க வேட்டைக்கு பெரிதும் உதவினார்.
கேரளம் மொத்தம் 11 தங்கம், 7 வெள்ளி, 5 வெண்கலப் பதக்கங்களை தட களப் பிரிவில் கைப்பற்றியது. சர்வீசஸ் அணி 6 தங்கம், 3 வெள்ளி, 6 வெண்கலம் பெற்றது.
பிரீஜா ஸ்ரீதரன் சாதனை: பிரீஜா ஸ்ரீதரனும் 3 தங்கப் பதக்கங்களை வென்று கேரளத்தின் பதக்கப் பட்டியலை வலுப்பெற வைத்தார்.
1,500 மீட்டர், 5,000 மீட்டர், 10,000 மீட்டர் ஆகிய இடைநிலைத் தொலைவு ஓட்டப் பந்தயங்களில் பிரீஜா ஸ்ரீதரன் முதலிடத்தை வென்றார். இப் பிரிவுகளில் அவர் ஓடியபோது, எந்த போட்டியாளரும் அவர் அருகில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. அந்த அளவுக்கு ஆதிக்கம் செலுத்தினார்.
சர்வீசஸ் பதக்கம் பறிப்பு: சர்வீசஸ் அணிக்கு 20 கிலோ மீட்டர் நடைப் போட்டியில் வழங்கிய தங்கப் பதக்கத்தை போட்டி அமைப்புக் குழு திரும்பப் பெற்றது.
20 கிலோ மீட்டர் நடைப் போட்டியில் சர்வீசஸ் வீரர் சோமேந்திர சிங் முதல் இடத்தைப் பிடித்து தங்கப் பதக்கம் பெற்றார். இரண்டாவது இடத்தில் வந்த அசாம் வீரர் அவரது நடை குறித்து ஆட்சேபம் தெரிவித்தார். அதையடுத்து, போட்டியின்போது எடுக்கப்பட்ட விடியோ காட்சிகள் போட்டுப் பார்க்கப்பட்டன. அதில் சோமேந்திர சிங் ஒரு தப்படி குறைவாக நடந்திருப்பது தெரியவந்தது.
இதையடுத்து அவரிடம் கொடுத்த தங்கப் பதக்கத்தை திரும்பப் பெற்றனர்.
பிறகு அசாம் வீரருக்கு தங்கப் பதக்கம் வழங்கப்பட்டது. இரண்டாவது இடத்தில் சர்வீசஸ் அணியின் பி. ஜெலனும் 3-வது இடத்தில் அசாமின் குர்மீத் சிங்கும் வந்தனர்.
Posted in 33, Arun Jeet, Asom, Assam, athletics, Dhanraj Sudalaimuthu, guwahati, Kerala, Manipur, Medal Tally, National Games, Services, Sports, Tamil Nadu, TN, Track and field, Volleyball, Weightlifting, XXXIII | Leave a Comment »