Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Artistes’ Category

Thirukkural Chellammal: Karagattam Dancer – Folk Dances of Tamil Nadu

Posted by Snapjudge மேல் நவம்பர் 30, 2007

முகங்கள்: கரகாட்டத்தில் திருக்குறள்!

வி. கிருஷ்ணமூர்த்தி

ஆண்டு: 1957; இடம்: வந்தவாசி அருகே மங்கலம் கிராமம்; கையில் எப்போதும் இருக்கும் திருக்குறள் புத்தகம். எதற்கும் திருக்குறள் மேற்கோள். சீனிவாசனை உறவினர்கள் மட்டுமல்லாது ஊரில் உள்ளவர்களும் திருக்குறள் பைத்தியம் என கிண்டலடித்தனர். ஆனால் அவரைப் பைத்தியம் என்று ஒதுக்கவில்லை, அவரது சகோதரி மகளான செல்லம்மாள்.

திருக்குறள் சொல்பவரை பைத்தியம் என்கிறார்களே ஏன்? அப்படி திருக்குறளில் என்னதான் இருக்கிறது என்ற ஆர்வத்தில் திருக்குறளை படிக்க ஆரம்பித்தார் அவர். 10 வயதில் ஏற்பட்ட திருக்குறள் ஆர்வம், செல்லம்மாவை குறளுக்கு அடிமையாக்கிவிட்டது என்றே சொல்லலாம். திருக்குறள் மீது ஆர்வம் வருவதற்குப் பலருக்குப் பல காரணங்கள் உண்டு. செல்லம்மாளுக்கு ஏற்பட்ட ஆர்வம் இந்த வகையில் வித்தியாசமானதுதானே?

6-வது படிக்கும் போது செல்லம்மாள் கரகாட்டத்தைக் கற்றுக் கொண்டார். திருக்குறளும், கரகாட்டமும் தனது வாழ்க்கையை எந்த அளவுக்கு ஆட்கொள்ளப் போகிறது என்பது அப்போது தெரியாது செல்லம்மாளுக்கு. இந்த இரண்டிலும் ஏற்பட்ட ஆர்வம் திருக்குறளுக்குக் கரகாட்டம் ஆடும் அளவுக்கு அவரை உயர்த்தியது.

  • திருக்குறள் மாமணி,
  • திருக்குறள் தூதர்,
  • திருக்குறள் செம்மல்,
  • திருக்குறள் திருத்தொண்டர்

என ஏராளமான விருதுகளைப் பெற்ற, பெற காரணமாக இருந்த தனது அனுபவங்களை நம்முடன் பகிர்ந்து கொள்ளும் புலவர் கோ.ப. செல்லம்மாள் இனி உங்களுடன்…
“”திருக்குறள், கரகாட்டம் இவற்றுடன் எனது பள்ளிப்படிப்பு நல்லபடியாக முடிந்தது.

பள்ளிப்பருவத்தில் கரகாட்டம் ஆடியும், திருக்குறளை பாடியும் பல்வேறு போட்டிகளில் ஆர்வத்துடன் பங்கேற்று வெற்றிப் பெற்றதால் ஆசிரியர்கள் மட்டுமல்லாது சக மாணவர்களிடமும் பாராட்டுகளைப் பெற முடிந்தது. பள்ளிப்படிப்பு முடித்து ஆசிரியர் பயிற்சி அதுவும் திருக்குறள், கரகாட்டத்துடன் வெற்றிகரமாக முடிய ஆசிரியர் பணி கிடைத்தது.

ஆசிரியர் பணிக்கிடையே கரகாட்டத்துடன் எம்.ஏ., எம்.ஃபில், பிஎச்.டி., டி.டி.எச். என படிப்பிலும் பல்வேறு சிகரங்களைத் தொட திருக்குறள் அடிப்படையாக இருந்தது.

படிப்பில் ஏற்பட்ட உயர்வு எனது பணியின் நிலையையும் மேம்படுத்தியது. உதவி ஆசிரியையாக, தலைமை ஆசிரியை வரை பல்வேறு உயர்வுகள் கிடைத்தன.

ஆசிரியர் பணியில் இருந்த 33 ஆண்டுகளும் எனது வாழ்க்கையில் மறக்க முடியாத அனுபவங்களாக அமைந்துவிட்டன. ஆசிரியர் பணியில் ஈடுபட்டிருந்தபோது, என்னிடம் படித்த மாணவர்கள், மாணவிகளுக்குக் கரகாட்டத்தைச் சொல்லிக் கொடுத்து அவர்களைக் கல்வி மட்டுமல்லாது கலையிலும் வல்லவர்களாக உருவாக்கினேன்.

வெறுமனே கரகாட்டத்தை எப்படி ஆடுவது என சொல்லிக் கொடுக்காமல் மாணவர்களுக்குக் கரகாட்டத்தின் தோற்றம், வளர்ச்சி, சிறப்புகள், தற்போதைய நிலை ஆகியவைக் குறித்துச் சொல்லிக் கொடுப்பதால் நான்படித்தக் கலையை மற்றவர்களுக்கு முழுமையாகக் கொண்டு சேர்த்த திருப்தி கிடைத்துள்ளது.

ஆசிரியர் பணியின்போது நூற்றுக்கணக்கான மாணவர்களுக்குக் கரகாட்டத்தைக் கற்றுக் கொடுத்திருந்தாலும் அதில் மது, சந்திரா உள்ளிட்ட சில மாணவமணிகள் இந்தக் கலையில் பெரிய அளவில் சிறப்பு பெற்றிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

கரகாட்டம் கற்றுக் கொடுக்கும்போது மாணவர்களுக்குத் திருக்குறளையும் கற்றுக்கொடுத்தேன். அனைத்து மாணவர்களையும் திருக்குறளை முழுமையாகப் படிக்கச் செய்து, அதில் போட்டிகள் நடத்தியும், மற்ற இடங்களில் நடக்கும் போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெறும் அளவுக்குத் தயார்படுத்தினேன்.

இந்தச் சமயத்தில், கரகாட்டத்துக்கு வழக்கமான கிராமியப் பாடல்கள், பக்திப் பாடல்களுக்குப் பதிலாக திருக்குறளின் சில பகுதிகளைப் பாடலாக மாற்றி கரகாட்டம் நடத்தினேன். பார்வையாளர்களிடம் இதற்குக் கிடைத்த வரவேற்பு இதனை மேலும் சிறப்பாகச் செய்யத் தூண்டியது. இதனால், பக்தி மற்றும் கிராமியப் பாடல்களே இல்லாமல் அவற்றின் மெட்டில் திருக்குறளையும் அது வலியுறுத்தும் கருத்துகளையும் பாடலாக அமைத்து கரகாட்டம் நடத்த தொடங்கினோம். பல மாணவர்களுக்கு இதனை கற்றுக் கொடுத்தேன்.

உலகத் திருக்குறள் மையத்தில் இணைந்தது, எனது திருக்குறள் பணியை மேலும் விரிவுப்படுத்தியதுடன் என்னை திருக்குறள் தூதராக்கியது. திருக்குறள் கருத்துகளை மக்களிடம் விளக்க பல இடங்களுக்குச் சுற்றுப்பயணம் சென்றேன். 1996-ம் ஆண்டில் திருச்சி மாவட்டம் நடுப்பட்டியில் திருக்குறள் கருத்து விளக்கத்துக்காகச் சென்ற போது திருக்குறள் இசைப் பாடலுக்குக் கரகாட்டம் ஆடியது பலராலும் பாராட்டப்பட்டது.

திருக்குறள் பிரசாரம் தொடர்பான பணியில் ஈடுபட்டுள்ள ஏராளமான மன்றங்கள், மையங்களில் என்னை இணைத்துக் கொண்டேன். இது எனது திருக்குறள் பணியின் எல்லையை மேலும் விரிவுபடுத்தியது. தமிழகம் மட்டுமல்லாது, மற்ற மாநிலங்கள் அதனைத் தொடர்ந்து சிங்கப்பூர், மலேசியா, நேபாளம் உள்ளிட்ட நாடுகளிலும் திருக்குறள் பிரசார மாநாடுகளில் பங்கேற்றேன்.

ஒரு கட்டத்துக்கு பின்னர் எனது அன்றாட செயல்களில் ஒன்றாகவே திருக்குறள் பிரசாரம் மாறிவிட்டது. எனது மகன் மகள் இருவருக்கும் திருக்குறளுடன் கரகாட்டத்தைக் கற்று கொடுத்து மேடை ஏற்றிவிட்டேன். வீட்டுக்கு வெளியில் மட்டுமல்ல, வீட்டுக்குள்ளும் எந்த நிகழ்ச்சியும் திருக்குறள் இல்லாமல் இல்லை என்ற நிலை உருவாகிவிட்டது.

திருக்குறள் பிரசாரத்தில் கிடைத்த சந்தோஷம் அதிகம் இருந்தாலும், கரகாட்டத்தின் தற்போதைய நிலை கவலை அளிப்பதாக உள்ளது. நமது கலாசாரத்தில் நடைமுறை வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு உருவானது கரகாட்டகலை. ஒரு சமயத்தில் கடவுள் வழிபாடாக மட்டும் இருந்த கரகாட்டகலை பிற்காலத்தில் பொழுதுபோக்காகவும் மாறியது. இந்தக் காலகட்டத்தில் பொழுதுபோக்காக இருந்தாலும் அதன் அடிப்படை புனிதத்தன்மை பாதிக்கப்படாமல் இருக்க பல்வேறு விதிகள் வகுக்கப்பட்டன. அதன்படி ஆடும்போது பல்வேறு சாகசங்கள் செய்து மக்களை அசத்துவதோடு ஆச்சரியப்பட வைத்தனர் கரகாட்ட கலைஞர்கள். ஆனால், தற்போது கரகாட்டத்தை முறையாகக் கற்றுக் கொண்டு வருபவர்களின் எண்ணிக்கை குறைந்து விட்டதாலும் மற்ற பொழுதுபோக்குகளில் இருந்து மக்களை தங்கள் பக்கம் ஈர்ப்பதற்காகவும் கரகாட்டக் கலைஞர்கள் பல தவறான அணுகுமுறைகளைக் கையாளத் தொடங்கியுள்ளனர். ஆபாச சைகைகள் போன்றவற்றால் இந்தக் கலையின் எதிர்காலம் கேள்விக்குறியாக மாறியுள்ளது கவலை அளிக்கிறது” என்றார் செல்லம்மாள்.

Posted in Artistes, artists, Arts, Chellammal, Couplets, Cultural, Culture, Dancers, Dances, Folk, Heritage, Instructor, Karaga, Karagam, Karagattam, Kural, Literature, Performances, Performers, Shows, Stage, Students, Teacher, Temple, Theater, Theatre, Thirukkural, Thiruvalluvar, Tradition, Traditional, Valluvar | Leave a Comment »

Thavil performer G Muthukumarasamy passes away – Carnatic Musician: Anjali

Posted by Snapjudge மேல் நவம்பர் 29, 2007

தவில் வித்வான் ஜி.முத்துகுமாரசுவாமி பிள்ளை காலமானார்

கும்பகோணம், நவ. 29: கர்நாடக சங்கீத இசையுலகின் பிரபல தவில் வித்வான் திருச்சேறை முத்துக்குமாரசாமி பிள்ளை (86) புதன்கிழமை இரவு திருச்சேறையில் அவரது இல்லத்தில் காலமானார்.

சிறிது காலம் அவர் உடல் நலமின்றியிருந்தார். அவருக்கு மனைவியும் 3 மகன்களும் 3 மகள்களும் உள்ளனர்.

நாகசுர இசையுலகின் மிக மூத்த தவில் கலைஞரான அவர் இளம் வயதில் தன் தந்தை கோவிந்தசாமிப் பிள்ளையிடமே தவில் கற்றார்.

பின்னாளில் நாகசுர மேதைகளான டி.என்.ராஜரத்தினம், குழிக்கரை பிச்சையப்பா, காருகுறிச்சி அருணாசலம், ஷேக் சின்ன மெüலானா உள்ளிட்ட பல கலைஞர்களுக்கு தவில் வாசித்தார்.

திருவையாறு தியாகப் பிரம்ம சபை துணைத் தலைவராக இருந்தவர். கலைமாமணி உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்றவர்.

இன்று மிகப் பெரும் தவில் வித்வானாக விளங்கும் ஹரித்வாரமங்கலம் ஏ.கே. பழனிவேல் உள்பட ஏராளமான சீடர்களைத் தயார் செய்த பெருமைக்குரியவர்.

Posted in Anjali, Artiste, Artistes, artists, Arts, Carnatic, G Muthukumarasami, G Muthukumarasamy, G Muthukumaraswami, G Muthukumaraswamy, Isai, music, Musician, Muthukumarasaami, Muthukumarasaamy, Muthukumarasami, Muthukumarasamy, Muthukumaraswami, Muthukumaraswamy, Performer, Performers, Shows, Stage, Thavil | 3 Comments »

Losing our heritage & Folk Arts Tradition – Interview with World cultural forum் Member

Posted by Snapjudge மேல் ஜூன் 29, 2007

புதிய பார்வை: “”நாட்டுப்புறக் கலைகளை பிசினஸ் ஆக்கிவிட்டார்கள்!”

உலகமயத்தினால் கிராமப்புறம் அழிந்து கொண்டிருக்கிறது. நாட்டுப்புறக் கலைகள் அழிந்து கொண்டிருக்கின்றன. நமது நாட்டைத் தொழில்மயம் ஆக்கவேண்டும் என்பதற்காக மேற்கத்தியமயமாக்கி விட்டார்கள்.

நமக்கு நல்ல ரோடே இல்லை. ரோல்ஸ்ராய்ஸ், ஃபோர்டு, பென்ஸ் போன்ற கார்கள் இங்கு அவசியமா?”

-இப்படியெல்லாம் ஆவேசப்படுகிறார், World cultural forum் என்கிற அமைப்பின் உறுப்பினரான சாரதா ராமநாதன்.

இவர் ஒரு திரைப்பட இயக்குநரும் கூட. தேவதாசிகளின் வாழ்வை மையமாக வைத்து இவர் எடுத்த திரைப்படம் “சிருங்காரம்’ சென்ற ஆண்டு கோவாவில் நடந்த சர்வதேசத் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது.

அவரை அவருடைய இல்லத்தில் சந்தித்துப் பேசினோம்.

உலகமயத்தால் நாட்டுப்புறக் கலைகள் அழிந்து வருகின்றன என்று எப்படிச் சொல்கிறீர்கள்?

உலகமயம், தொழில்மயம் என்கிற பெயரில் நாம் கிராமப்புறங்களைக் கவனிக்க மறந்துவிட்டோம். அதனால் கிராமப்புறங்களில் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கிறார்கள். வேலை தேடி நகர்ப்புறங்களுக்கு வருகிறார்கள். இதனால் கிராமப்புறக் கலைகள் அழிந்து வருகின்றன.

உலகமயத்தால் ஓரளவுக்கு பலன் பெற்றது நடுத்தர மக்கள்தாம். நடுத்தர மக்கள் மட்டும்தான் இந்தியாவா? எல்லாரும் கம்ப்யூட்டர் வேலைக்கு வர முடியுமா? அப்படி வந்து விட்டால் விவசாயம் செய்வது யார்? உணவு எப்படிக் கிடைக்கும்?

தொழில்மயத்திற்கு கொடுத்த முக்கியத்துவத்தை நாம் விவசாயத்திற்குக் கொடுக்கவில்லை. நம்மிடம் தண்ணீரைச் சீராகப் பயன்படுத்துவதற்கான உருப்படியான திட்டங்கள் எதுவுமில்லை.

கிராமப்புறம் நசிந்து போனால் நாட்டுப்புறக் கலைகள் உயிர்வாழ்வது எப்படி? நமது பாரம்பரியச் செவ்வியல் கலைகள் கோயில் குளத்தைச் சுற்றி வளர்ந்தவை. நாட்டுப்புறக்கலைகள் கிராமப்புறத்தையும் அங்குள்ள மக்களின் வாழ்வைச் சுற்றியும் வளர்ந்தவை. நாட்டுப்புறக் கலைகள் மேம்பட வேண்டுமானால் நாட்டுப்புறம் மேம்பட வேண்டும்.

சினிமாவிலும் டிவியிலும் இன்று நாட்டுப்புறப் பாடல்கள் பயன்படுத்தப்படுகின்றன. பலர் நாட்டுப்புறப் பாடல்களைப் பதிவு செய்து ஆடியோ கேசட் வெளியிடுகிறார்கள். அப்படியானால் நாட்டுப்புறக் கலைகள் வளர்வதாகத் தானே அர்த்தம்?

டிவியிலும் சினிமாவிலும் நாட்டுப்புறக் கலைகளைப் பிசினஸ் ஆக்கிவிட்டார்கள். இதனால் நாட்டுப்புறக் கலைகளில் ஒரிஜினாலிட்டி போய்விட்டது. நாட்டுப்புறக் கலைகள் சுயமாக வளர வேண்டும்.

நாட்டுப்புறப் பாடல்களை ஆடியோ கேசட்களிலும், சிடியிலும் சிலர் பதிவு செய்து விற்கிறார்கள். ஆனால் அது தாத்தா போட்ட பாட்டு. இவர்கள் என்ன நாட்டுப்புறப் பாடலுக்குப் புதிதாகச் செய்தார்கள்? என்பதுதான் கேள்வி. சினிமாவில் கானாப் பாட்டு அதன் தனித்தன்மையை இழந்துவிட்டது.

கானாப்பாட்டில் சினிமாத்தனம் வந்துவிட்டது. மக்கள் பாடும் கானாப் பாட்டில் இருந்த அந்த உயிர்ப்பு எங்கே? உணர்வு எங்கே?

கிரியேட்டிவிட்டிக்கு முழுச் சுதந்திரம் அவசியம். நாட்டுப்புறக் கலைகள் வளர எந்தத் தடையும் இல்லாத முழுச்சுதந்திரம் அவசியம். சினிமாவுக்கோ, டிவிக்கோ லாபம்தான் முக்கியம். லாப நோக்கம் வருகிறபோது சுதந்திரம் அடிபட்டுப் போகிறது. லாப நோக்குடன் இயங்கும் சினிமாவால் கிரியேட்டிவ் கலைகளான நாட்டுப்புறக் கலைகளை எப்படி வளர்க்க முடியும்? இயல்பான அகத் தூண்டுதலால் ஒருவர் பெயின்டிங் பண்ணுவது என்பது வேறு. பெயின்டிங் பண்ணினால் லண்டனில் நல்ல விலை கொடுத்து வாங்குவார்கள் என்பதற்காகப் பெயின்டிங் பண்ணுவது என்பது வேறு. அது இயல்பானதல்ல; அங்கே கிரியேட்டிவிட்டிக்கு இடமில்லை. பணத்துக்குத்தான் இடம். பணம் பண்ணும்போது கிரியேட்டிவிட்டி அடிபட்டுப் போகிறது.

உலகமயத்தின் விளைவாக நமது நாட்டில் கம்ப்யூட்டர் தொழில் வளர்ந்திருக்கிறது. பலருக்கு வேலைவாய்ப்பு கிடைத்திருக்கிறது? வளர்ச்சியை மறுக்க முடியுமா?

உலகமயத்தால் கம்ப்யூட்டர் தொழில் வளர்ந்திருக்கிறது என்பது உண்மை. இதனால் பலன் பெற்றோர் நடுத்தர வர்க்க மக்களே. நடுத்தர வர்க்க மக்கள் கோட், சூட், டை அணிவதற்காக கிராமப்புற மக்கள் பாதிக்கப்படுகிறார்கள். கிராமப்புறத்தை நாம் அமுக்கினோம் என்றால் நாமும் சேர்ந்து அமுங்கிவிடுவோம் என்பதைப் பலர் மறந்துவிடுகிறார்கள்.

“இந்தியா கிராமங்களில் வாழ்கிறது’ என்றார் மகாத்மா காந்தி. அவர் சொன்னதை நாம் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை. கிராமப்புறத்தை மேம்படுத்த வேண்டும் என்பதுதான் காந்தியின் குறிக்கோள்.

ஆனால் நமது அரசியல்வாதிகள் ஏழை மக்களை ஏழைகளாகவே வைத்திருக்க ஆசைப்படுகிறார்கள். அப்போதுதான் ஐந்து வருடத்துக்கு ஒரு முறை பொய்யான வாக்குறுதிகளைக் கொடுத்து அவர்களின் வாக்குகளைப் பெற முடியும்.

இன்றையச் சூழலில் நாட்டுப்புறக் கலைகளை வளர்க்க வாய்ப்பே இல்லையா?

நம்மிடம் பழம்பெருமை பேசும் பழக்கம் உள்ளது. பழம் பெருமை பேசுவதைவிட பழைமையை உயர்த்த என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்ய வேண்டும்.

நமது பரதநாட்டியம், கர்நாடக சங்கீதம் போன்ற செவ்வியல்கலைகள், நாட்டுப்புறப் பாடல், ஆடல் போன்ற நாட்டுப்புறக் கலைகள், நமது பாரம்பரிய இலக்கியங்கள் இவற்றைப் பாதுகாக்க வேண்டும்.

“நமக்காகப் பணம்’ என்பது போய் “பணத்திற்காக நாம்’ என்று ஆகிவிட்டதுதான் பிரச்சினை.

உலகமயம் வந்தபின்னால் எதுவுமே இயற்கையாக இல்லை. நல்ல தண்ணீர் கிடைக்கிறதா? ஆக்சிஜன் கிடைக்கிறதா? எதுவுமே இயற்கையாகக் கிடைத்து நூறாண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது.

நாட்டுப்புறக் கலைகளை வளர்க்க நேரடியாக அவற்றை மக்களிடம் எடுத்துச் செல்வதுதான் வழி. அது போல கிராமப்புற மேம்பாட்டிலும் கவனம் செலுத்த வேண்டும். மக்கள் நாட்டுப்புறக் கலைகளில் ஆர்வமாக இருக்கிறார்கள்.

அதைவிடக் கிராமப்புறத்தில் வளர்ச்சி ஏற்பட்டால்தான் நாட்டுப்புறக் கலைகளும் அதன் இயல்பான போக்கில் வளர்ச்சி அடையும்.

கிராமப்புறங்களில் தண்ணீர் பிரச்சினையைத் தீர்ப்பது வளர்ச்சிக்கு மிக முக்கியமானது. நமது அரசியல்வாதிகள் கொஞ்சநாட்கள் உலகமயத்தை மறந்துவிட்டு கிராமப்புறத்தின் பக்கம் தங்கள் கவனத்தைத் திரும்பினால்தான் இதற்கு விடிவு ஏற்படும்.

கம்ப்யூட்டர் தொழில் அதிபர் நாராயணமூர்த்தி தேசிய ஹீரோவா? நமது கிராமப்புற மக்கள் தேசிய ஹீரோவா? என்பதுதான் இப்போதைய முக்கியமான கேள்வி.

Posted in Artistes, artists, Arts, Chrungaram, Cinema, Crafts, Culture, Dance, Docu Drama, Documentary, Faces, Films, Folk, Folklore, global, Globalization, Goa, Heritage, Interview, Mime, Movie, people, Performance, Performers, Pride, Sarada, Saradha, Saratha, Sharada, Sharada Ramanathan, Sharadha, Sharatha, Srungaram, Srunkaram, Street, Tradition | Leave a Comment »

Needy artistes to get Rs. 1000 per month – CM Karunanidhi

Posted by Snapjudge மேல் மார்ச் 20, 2007

நலிந்த கலைஞர்களுக்கு ரூ. 1,000 உதவித் தொகை: முதல்வர் அறிவிப்பு

சென்னை, மார்ச் 20: நலிவடைந்த கிராமியக் கலைஞர்கள் 500 பேருக்கு மாதம் ரூ.1,000 உதவித் தொகை வழங்கப்படும் என முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார்.

இசை, நடனம், நாடகம் உள்ளிட்ட கலைக்காக தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்து வாழ்ந்த கிராமியக் கலைஞர்கள் வறுமையில் வாடக் கூடாது என்பதற்காக மாதாந்திர ஓய்வூதியத் திட்டம் அறிவிக்கப்பட்டது. இதன்படி 8,063 கலைஞர்களுக்கு நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது.

மாதந்தோறும் ரூ. 500 பெற்று வந்த கலைஞர்களின் உதவித் தொகை ரூ.1,000-மாக உயர்த்தப்பட்டது. நடப்பு ஆண்டில் மேலும் 500 பேருக்கு உதவித் தொகை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இதன் மூலம் அரசுக்கு ஆண்டுக்கு ரூ. 60 லட்சம் கூடுதல் செலவாகும்.

உதவித் தொகை ஏப்ரல் 1 முதல் வழங்கப்படும். இதற்கான உத்தரவை முதல்வர் பிறப்பித்துள்ளார் என அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Posted in Artistes, Arts, CM, Culture, Funds, Karunanidhi | Leave a Comment »

Kanimozhi presents ‘Chennai Sangamam’ – Tamil Sangamam

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 20, 2007

கலை, பண்பாட்டை மக்களிடம் சேர்க்கும் முயற்சியே “சென்னை சங்கமம்’: கனிமொழி

சென்னையில் செவ்வாய்க்கிழமை தொடங்க உள்ள “சென்னை சங்கமம்’ கலை மற்றும் கலாசார நிகழ்ச்சிக்கான “ஆடியோ சிடி’யை, திங்கள்கிழமை வெளியிட்டார் எழுத்தாளர் சுஜாதா. உடன் (இடமிருந்து) சென்னை சங்கமத்தின் ஒருங்கிணைப்பாளர் கவிஞர் கனிமொழி, திரைப்பட இயக்குநர் வசந்த், தமிழ் மையம் அமைப்பின் நிறுவனர் கஸ்பர் ராஜ்.

சென்னை, பிப். 20: தமிழகத்தின் பாரம்பரிய கலை மற்றும் பண்பாட்டை மக்களிடம் சேர்க்கும் முயற்சியாக “சென்னை சங்கமம்’ திருவிழா நடத்தப்படுவதாக நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் கனிமொழி தெரிவித்தார்.

சென்னையில் பிப். 20-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை “சென்னை சங்கமம்’ திருவிழா நடைபெறவுள்ளது. இதன் அங்கமாக “தமிழ்ச் சங்கமம்’ என்ற விழா பிப். 21-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை நடைபெறவுள்ளது.

இதுதொடர்பாக திங்கள்கிழமை சென்னையில் நிருபர்களிடம் அவர் கூறியது:

“சென்னை சங்கமம்’ சென்னை நகரத்துக்கான விழா. இதன் மூலம் தமிழ்ப் பாரம்பரிய கிராமிய இசை, நடனக் கலை, நாடகம் ஆகியவை சென்னை நகரின் தெருக்களிலும், திறந்த வெளியிலும் நடத்தப்படவுள்ளன.

இதில் 700 கலைஞர்கள் கலந்துகொண்டு 37 கலை வடிவங்களை சென்னை நகரின் பல பகுதிகளில் நிகழ்த்தவுள்ளனர். இந்த அரிய கலை நிகழ்ச்சிகளை அனைவரும் கண்டுகளிக்க வேண்டும்.

புதன்கிழமை ஒன்றரை மணி நேர பாரம்பரிய இசை மற்றும் நடன நிகழ்ச்சி பிலிம் சேம்பர் திரை அரங்கில் நடைபெறும். இது முதல் ஆண்டு என்பதால் சில தவறுகள் இருக்கலாம். அடுத்த ஆண்டு அவை திருத்தப்பட்டு பொங்கல் விழாவாகக் கொண்டாடப்படும். மேலும் இது விரிவடைந்து தமிழக விழாவாக மாற்றவும் முயற்சி எடுக்கப்படும் என்றார்.

அமைச்சர் தங்கம் தென்னரசு: தமிழ் மையம், பொது நூலகத்துறை, சுற்றுலா மற்றும் பண்பாட்டுத் துறை ஆகியவை இணைந்து இந்நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளன. நாட்டுப்புற இசை, நாட்டியத்துக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் இவ்விழா கொண்டாடப்படுகிறது. நூலகத்துறை குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலே நூலகத்துறை இவ்விழாவை ஏற்பாடு செய்வதில் அங்கமாகத் திகழ்கிறது என்றார்.

அண்ணா நகர், மயிலாப்பூர், ராயபுரம் பூங்காக்களில் தப்பாட்டம்: நையாண்டி மேளம் நிகழ்ச்சிகள் இலவசமாக கண்டு களிக்கலாம்

சென்னை, பிப். 20-

தமிழ்நாட்டின் பாரம்பரிய கலைகளை பிரபலப்படுத்தும் முயற்சியாக “சென்னை சங்கமம்” என்ற கலை விழாவை தமிழ் மையம் என்ற அமைப்பு நடத்துகிறது. கிரா மிய கலைஞர்களுக்கும் மக்க ளுக்கும் இடையே நல்லுறவை ஏற்படுத்தும் இந்த கலாச்சார நிகழ்ச்சிகளில் 1300 பேர் பங் கேற்கிறார்கள்.

மக்கள் அதிகம் கூடும்

  • அண்ணா நகர் டவர் பூங்கா,
  • மயிலாப்பூர் நாகேசுவரராவ் பூங்கா,
  • தி.நகர் நடேசன் பூங்கா,
  • கே.கே.நகர் சிவன் பூங்கா,
  • ராயபுரம் ராபின்சன் பூங்கா,
  • மாட வீதி,
  • பிலிம் சேம்பர்,
  • பெசன்ட் கடற்கரை,
  • கோட்டூர்புரம் பூங்கா,
  • நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானம்,
  • கலைவாணர் அரங்கம்,
  • மிïசிக் அகாடமி,
  • ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரி அரங்கம்,
  • தியாகராய ஹால்,
  • பாரதி இல்லம் உள்பட பல இடங்களில் நிகழ்ச்சி நடக் கிறது.
  • கர்நாடக சங்கீதம்,
  • மயி லாட்டம்,
  • ஒயிலாட்டம்,
  • தப்பாட்டம்,
  • நையாண்டி மேளம்,
  • பாவைக் கூத்து,
  • காவடி ஆட்டம் உள்பட பல நிகழ்ச்சிகள் நடக்கும் இந்த பிரமாண்ட கலை-பண்பாடு, இலக்கியத் திருவிழாவை இன்று (செவ்வாய்) மாலை முதல்-அமைச்சர் கருணாநிதி தொடங்கி வைக்கிறார். இந்த கலை விழா நாளை முதல் 25-ந் தேதி வரை 5 நாட்கள் நடைபெறும்.

நாளை (புதன்) நடக்கும் கலை நிகழ்ச்சிகள், இடம் நேரம் விபரம் வருமாறு:-

மிïசிக் அகாடமி-சிம் போனி இசை (மாலை 6.30)

தியாகராய ஹால்-இறை யன் கூத்து, இஸ்லாமிய இசை. மற்றும் நாடகம் (மாலை 6.30)

தி.நகர் நடேசன் பூங்கா: காலை 6 மணி-நாதசுரம், 6.30-கே.காயத்ரி வாய்ப் பாட்டு

மாலை 5.10: கட்டை கால் ஆட்டல்

6.15: சென்னை இளைஞர் குழு இசை

இரவு 7.00: சுதா ரகுநாதன் பாட்டு

புஷ்பவனம் குப்புசாமி

கே.கே.நகர் சிவன் பூங்கா:

காலை 6.00: தேவார திருப் புகழ்

6.30: வாலிவலம் வெங்கட் ராமன் பாட்டு

மாலை 5.00: தப்பாட்டம், காவடி ஆட்டம்

6.30: புஷ்பவனம் குப்புசாமி பாடும் கிராமிய பாடல்கள்

ராயபுரம் ராபின்சன் பூங்கா:- மாலை 5.00: குதிரை ஆட்டம், கானா பாடல்கள்

6.30: கிரேஸ் குழுவின் இசை கச்சேரி

கோட்டூர்புரம் பூங்கா:

மாலை 5.00: காளியாட்டம், மாடட்டம், மயிலாட்டம்

மயிலாப்பூர் நாகேசுவரராவ் பூங்கா:-

காலை 6.00: நாதசுரம்

6.30: அக்கரை சகோதரிகள் வயலின் இசை நிகழ்ச்சி.

நையாண்டி மேளம்

மாலை 5.00:- நையாண்டி மேளம், பாவைக் கூத்து.

6.30: டி.எம்.கிருஷ்ணா வாய்ப்பாட்டு

அண்ணா நகர் டவர் பூங்கா:-

காலை: நாதசுரம்,

6.30: மகதி வாய்ப்பாட்டு

மாலை 5.00: புலியாட்டம் மண்ணின் பாடல்

6.30: சாருமதி ராமச்சந்திரன் சுபஸ்ரீ ராமச்சந்திரன், வாய்ப்பாட்டு

பிலிம் சேம்பர்:-

மாலை 5.00:- பாப்பம்பாடி ஜமா குழுவினரின் பறையாட் டம்

6.00: பட்டிமன்றம், நடுவர்: சாரதா நம்பி ஆரூரான்.

Posted in Artistes, Arts, Attraction, Books, Carnatic, Casper Raj, Chennai, Chennai Sangamam, Culture, Dance, Drama, Events, Folk, Gasper Raj, Gasperraj, Heritage, Kaavadi, Kanimozhi, Kavadi Aattam, Madras, Mayilattam, music, Naiyandi Melam, Native, Oyilattam, Paavai Koothu, Pattimanram, Sujatha, Tamil Sangamam, Thamizh, Thangam Thennarasu, Thappaattam, Theater, Tourist, Vasanth | 3 Comments »

Thanksgiving to Karunanidhi – Tamil Cinema Artistes Celebrate Tax-free Status

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 25, 2006

திரையுலகம் சார்பில் கருணாநிதிக்கு இன்று பாராட்டு விழா: ரஜினி, கமலஹாசன் பங்கேற்பு

சென்னை, செப். 23-

கருணாநிதி முதல்- அமைச்சராக பொறுப்பேற்றதும் திரைப்படத்துறையினருக்கு பல்வேறு சலுகைகளை அறிவித்தார்.

ராஜாஜி மண்டபத்துக்கான படப்பிடிப்பு கட்டணத்தை ரூ.25 ஆயிரத்தில் இருந்து ரூ.10 ஆயிரமாக குறைத்தார். ரூ.10 ஆயிரம் கட்டணம் வசூலிக்கப்பட்ட இடங்களுக்கு ரூ.5 ஆயிரம் கட்டணமும் ரூ.5 ஆயிரம் வசூலிக்கப்பட்ட இடங்களுக்கு ரூ.3 ஆயிரமும் நிர்ணயிக்கப்பட்டன. தமிழில் பெயர்சூட்டப்பட்ட படங்களுக்கு கேளிக்கை வரியில் இருந்து விலக்கும் அளிக்கப்பட்டுள்ளது.

இது போன்று மேலும் அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. இதையடுத்து திரையுலகினர் கருணாநிதிக்கு பாராட்டு விழா எடுக்கின்றனர்.

இன்று மாலை 5.30 மணிக்கு நேரு உள் விளையாட்டு அரங்கில் இந்த விழா நடக்கிறது. மராட்டிய மாநில கவர்னர் எஸ்.எம்.கிருஷ்ணா விழாவுக்கு தலைமை தாங்குகிறார்.

நடிகர்கள் ரஜினிகாந்த், கமலஹாசன் உள்ளிட்ட முன்னணி நடிகர்- நடிகைகள் விழாவில் பங்கேற்கிறார்கள். டைரக்டர்கள், தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் தியேட்டர் அதிபர்கள், பெப்சி நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.

விழா நடைபெறும் நேரு உள் விளையாட்டரங்கம் விழாக்கோலம் பூண்டுள்ளது. கொடி தோரணங்கள் கட்டப்பட்டுள்ளன. கருணாநிதி உருவப்பட பேனர்களும் வைக்கப்பட்டுள்ளன.

விழாவுக்கு அழைப்பிதழ் உள்ளவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள். பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

படப்பிடிப்பு ரத்து: நடிகர், நடிகைகள் 2 மணி நேர கலை நிகழ்ச்சி

திரையுலகம் சார்பில் முதல்- அமைச்சர் கருணாநிதிக்கு இன்று பாராட்டு விழா நடப்பதையொட்டி 2 நாள் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது. மும்பை, ஐதராபாத், திருவனந்தபுரம் பகுதிகளில் படப்பிடிப்பில் பங்கேற்ற நடிகர், நடிகைகள் நேற்று சென்னை திரும்பினார்கள். மேடையில் பலர் நடனமாட இருப்பதால் மாலை நடன ஒத்திகையில் ஈடுபட்டனர்.

பிரபல நடன இயக்குனர்கள் பயிற்சி அளித்தார்கள். கருணாநிதி பராசக்தி படத்தில் எழுதிய கா…கா…கா… உள்ளிட்ட பாடல்கள் ரீமிக்ஸ் செய்து பாடப்படுகிறது.

கருணாநிதியை பாராட்டி கவிஞர்கள் வைரமுத்து, பா.விஜய் ஆகியோர் பாடல்கள் எழுதியுள்ளனர். இந்த பாட்டுக்கு பிரபல இசையமைப்பாளர்கள் இசையமைத்து இருக்கிறார்கள். அந்த பாட்டுக்கு நடிகர்கள் மேடையில் நடனம் ஆடுகிறார்கள்.

இசையமைப்பாளர்கள் தேவா, சபேஷ்- முரளி ஸ்ரீகாந்த் தேவா ஆகியோரின் இசை நிகழ்ச்சி நடக்கிறது. இதில் பிரபல பின்னணி பாடகர்கள் மேடையில் தோன்றி பாடுகிறார்கள்.

நடிகர்கள் சிம்பு, பிரசாந்த், அப்பாஸ், பிரகாஷ்ராஜ், கார்த்திக், ஜீவா, ஜெயம்ரவி, மாதவன், ஸ்ரீகாந்த், பரத், `ஜித்தன்’ரமேஷ், சிபிராஜ், பிரசன்னா, ஆர்யா, நடிகைகள் அசின், சதா, ஸ்ரேயா, ரீமா சென், `உயிர்’சங்கீதா, மும்தாஜ், பூஜா, அபர்னா, லட்சுமிராய், தியா, சிந்து துலானி, ரகசியா, தேஜாஸ்ரீ, பத்மபிரியா, பாவனா, சமிக்ஷா ஆகியோர் நடனம் ஆடுகிறார்கள்.

சித்திரம் பேசுதடி படத்தில் பிரபலமான வாளமீனுக்கும் விலாங்குமீனுக்கும் கல்யாணம் என்ற பாட்டுக்கு நடிகை ரசியா நடனம் ஆடுகிறார். சிவகாசி படத்தில் இடம்பெற்ற “வடுமாங்கா” பாட்டுக்கு லட்சுமிராய் ஆடுகிறார். 4 ஸ்டூடன்ஸ் படத்தில் இடம் பெற்ற லஜ்ஜாவதியே பாட்டுக்கு பரத் ஆடுகிறார். நடன குழுவினருடன் நடிகர் சிம்பு லூசு பெண்ணே என்ற பாட்டுக்கு ஆடுகிறார். நமீதாவும் ஆடுகிறார்.

பாக்யராஜ், வடிவேலு, விவேக், நெப்போலியன், தியாகு, அலெக்ஸ் ஆகியோரின் நகைச்சுவை நாடகமும் இடம் பெறுகிறது.

டைரக்டர் சீமானின் புதுமை நாடகமும், 100 குழந்தைகள் பங்கேற்கும் சிறப்பு வரவேற்பு நடன நிகழ்ச்சியும் இடம்பெறுகிறது.

கலைநிகழ்ச்சிகள் மாலை 5 மணியில் இருந்து 7.30 மணி வரை 2 மணி நேரம் நடக்கிறது.

Posted in Actors, Actresses, Artistes, CM, Film, Kamal, Karunanidhi, Kollywood, Movies, nadigai, nadigar, Rajni, Tamil, Tamil Nadu, Tax | Leave a Comment »

US Consulate rejects Visa to Gujarat MLAs & Artistes

Posted by Snapjudge மேல் ஓகஸ்ட் 30, 2006

அமெரிக்கா செல்ல 2 காங். எம்.எல்.ஏ.க்களுக்கு விசா மறுப்பு

ஆமதாபாத், ஆக. 30: குஜராத் மாநில காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் இருவர் மற்றும் அந்த மாநில பா.ஜ.க. மூத்த தலைவர் ஆகியோர் அமெரிக்கா செல்ல விசா வழங்க மறுத்துள்ளது அதன் துணைத் தூதரகம்.

வரும் 1 முதல் 3-ம் தேதி வரை அமெரிக்காவில் உள்ள நியூஜெர்ஸியில், உலக குஜராத் மாநாடு நடைபெற உள்ளது.

இந்த மாநாட்டில் பங்கேற்க குஜராத் மாநில காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பல்தேவ்ஜி, ஜெகதீஷ் தாகூர் மற்றும் குஜராத் பா.ஜ.க. மூத்த தலைவர் புருஷோத்தம் ரூபலா ஆகியோர் விசா வேண்டி அமெரிக்கா துணைத் தூதரகத்தில் விண்ணப்பம் செய்திருந்தனர்.

இந்நிலையில், இவர்களுக்கு விசா வழங்க அந்த தூதரகம் மறுத்துள்ளது.

மேலும், குஜராத் பல்கலைக் கழக துணைவேந்தர் பரிமல் திரிவேதி மற்றும் சில குஜராத் கலைக்குழுக்களுக்கும் விசா மறுக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டில் நரேந்திர மோடி: கடந்த ஆண்டில் அமெரிக்கா செல்ல குஜராத் முதல்வர் மோடிக்கும் விசா வழங்க அமெரிக்கா மறுத்தது குறிப்பிடத்தக்கது.

Posted in America, Artistes, Baldevji, Congress, Congress(I), Consulate, Immigration, Jagadeesh Thakur, MLA, Modi, Mumbai, New Jersey, Parimal Trivedhi, Purushotham Roobala, Racist, reject, Tamil, US, USA, Visa | Leave a Comment »