துருக்கிய எழுத்தாளருக்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசு
![]() |
![]() |
நோபல் பரிசு பெற்ற துருக்கிய எழுத்தாளர் |
இந்த ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசு துருக்கியைச் சேர்ந்த ஓர்ஹான் பகுக்கிற்கு வழங்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு ஆர்மேனிய மக்களின் படுகொலைகளை எழுப்பியதற்காக கடந்த ஆண்டு இவர் மீது வழக்கு தொடுக்கப்பட்டது.
அவரது சொந்த நகரமான இஸ்தான்புல்லில் உள்ள பல்வேறு கலாச்சரங்களிடையேயான மோதல்களையும் அவை எவ்வாறு பின்னிப் பிணைந்துள்ளன என்பதையும் மிகத் சிறப்பாக வெளிக்கொண்டுவந்த அவரது திறமையை சுவீடிஷ் அகாடமி பாராட்டியுள்ளது.
இந்த பரிசளிப்பிற்கு ஒரு திடமான அரசியல் எதிரொலி இருப்பதாக பிபிசியின் செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
குர்து இன மக்களுக்கு ஆதரவாகவும், ஆர்மேனிய மக்களின் படுகொலைகள் குறித்த இவரது கருத்துக்களை வெளியிட்டதற்காகவும் இவர் பல சர்ச்சைகளுக்கு ஆளானாது மட்டுமல்லாமல், வழக்குகளையும் எதிர் கொள்ள வேண்டியதாயிற்று.
துருக்கியில் கருத்துச் சுதந்திரம் குறித்து நடைபெறும் வாதங்களின் பகுதியாக இந்த வழக்குகள் விளங்குகின்றன என எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைய துருக்கிக்கு உள்ள தகுதியின் ஒரு பகுதியாகவும் இந்த வழக்குகள் திகழ்கின்றன.