Posted by Snapjudge மேல் ஜனவரி 31, 2007
5 ஆண்டுகளில் இந்தியா மிகப்பெரியஆயுதச் சந்தையாக மாறும்: அமெரிக்க ஆயுத தயாரிப்பு நிறுவனம் தகவல்
புதுதில்லி, ஜன. 31: உயர் ரக போர் ஆயுதங்களை இந்திய ராணுவத்துக்கு விற்கத் தயாராக இருப்பதாக அமெரிக்காவின் முன்னணி ஆயுத தயாரிப்பு நிறுவனமான ரேதியான் கூறியுள்ளது.
5 ஆண்டுகளில் ரேதியான் நிறுவனத்தின் தயாரிப்புகளை விற்பதற்கான மிகப்பெரிய, மிகமுக்கியமான சந்தையாக இந்தியா மாறும் எனவும் அந் நிறுவனம் கூறியுள்ளது.
அமெரிக்காவின் மசாசூசெட்ஸ் நகரைத் தலைமையகமாகக் கொண்ட ஆயுத நிறுவனம் ரேதியான். அந் நிறுவனத்தின் ஆசிய விற்பனைப் பிரிவு தலைவர் அட்மிரல் (ஓய்வு) வால்டர் எஃப் டோரன், தில்லியில் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:
தட்டுப்பாடின்றி கிடைக்கக் கூடிய உயர் ரக போர்த் தொழில்நுட்பங்களை இந்தியாவிற்கு விற்பனை செய்வதில் எவ்விதத் தயக்கமும் இல்லை. அமெரிக்க ஏவுகணைகள், விண்வெளி சாதனங்கள் மற்றும் பிற முன்னணி தொழில்நுட்பங்களை இந்திய ராணுவத்திற்கு வழங்க ரேதியான் விருப்பம் கொண்டுள்ளது.
இந்திய ராணுவத்தில் ரஷிய தொழில்நுட்பங்களே பெருமளவு இடம்பெற்றுள்ளன. பிரான்ஸ், பிரிட்டன் மற்றும் இஸ்ரேல் தயாரிப்பு போர்த் தளவாடங்களும் இடம்பெற்றுள்ளன. இந்த வரிசையில் மிகப்பிந்தி நுழைந்துள்ள அமெரிக்க நிறுவனங்களால் இந்திய ஆயுதச் சந்தை மிகவும் போட்டி மிகுந்ததாகவும், தொழில்நுட்பம் சார்ந்ததாகவும் மாற்றமடையும்.
தற்போது ரேதியான் நிறுவனத்தின் இந்திய விற்பனை ரூ.135 கோடி அளவில்தான் உள்ளது. ஆனால் அடுத்த 5 ஆண்டுகளில் எங்கள் நிறுவனத்தின் மிகப்பெரிய சந்தையாக இந்தியா மாறும் என்றார் டோரன். இது குறிப்பாக எந்த அளவு வளர்ச்சி அடையும் என்பதைத் தெரிவிக்க மறுத்த டோரன், பல நூறு கோடி அமெரிக்க டாலர்கள் அளவில் விற்பனை இருக்கும் என வல்லுநர்கள் எதிர்பார்ப்பதாகக் கூறினார்.
Posted in armed forces, Arms, Army, Boeing, Bombs, cruise missiles, F-16, F-18/A, F18, IAF, India, Lockheed-Martin, Massachusetts, Military, Missile, missile shield, Pakistan, Patriot II, Raytheon, Technology, weapon | Leave a Comment »
Posted by Snapjudge மேல் திசெம்பர் 3, 2006
இந்தியாவைச் சுற்றிலும் சீன கடற்படை தளங்கள்: இந்திய கடற்படை தலைமை தளபதி தகவல்
புதுதில்லி, டிச. 3: இந்தியாவின் அண்டை நாடுகள் உதவியுடன் இந்திய கடற்பகுதியைச் சுற்றிலும் சீனா தனது கடற்படை தளங்களை அமைத்து வருவதாக இந்திய கடற்படைத் தலைமை தளபதி அட்மிரல் சுரேஷ் மேத்தா தெரிவித்துள்ளார்.
சீனாவின் இத்தகைய நடவடிக்கை எதிர்காலத்தில் இந்தியாவின் நலனுக்கு பாதகமாகவே இருக்கும் என்றும் அவர் சொன்னார்.
கடற்படை தினத்தையொட்டி, தில்லியில் சனிக்கிழமை நிருபர்களிடம் பேசிய தலைமை தளபதி சுரேஷ் மேத்தா மேலும் கூறியதாவது:
மியான்மர் போன்ற இந்தியாவின் அண்டை நாடுகள் உதவியுடன் தனது கடற்படை தளத்தை சீனா அமைத்து வருகிறது. மியான்மர் போன்ற நாடுகள் இப்போது இந்தியாவுக்கு எதிரான நாடுகளாக இல்லை. இருப்பினும் 20 ஆண்டுகளுக்குப் பின் இந்தியாவுக்கு எதிராக மாற வாய்ப்பு உண்டு.
பாகிஸ்தான், இலங்கை போன்ற நாடுகளுடனும் கடற்படை தொடர்பாக சீனா நல்ல உறவை கடைப்பிடித்து வருகிறது. நமது கடற்படை கட்டமைப்பு திட்டங்களில் சீன நிறுவனங்களை அனுமதிக்கக் கூடாது. இதனால் நம்மிடம் உள்ள நுட்ப தகவல்களை அவர்கள் (சீனா) தவறாக பயன்படுத்த வாய்ப்புள்ளது.
நமது கடற்கரை பகுதியில் சீன நிறுவனங்கள் செயல்பட அனுமதிக்கக்கூடாது. சீன பொருள்களை வாங்காத நாடுகள் அரிது. இந்நிலையில் இந்தியப் பெருங்கடல் பகுதி வாயிலாக சீனாவுக்கு பொருள்கள் ஏற்றுமதி ஆவதால் அந்நாட்டின் பொருளாதார வளம்தான் மேலும் மேலும் வலுவடையும்.
பாகிஸ்தானின் நீர்மூழ்கி கப்பல்கள் வங்கதேசத்துக்கு விற்கப்படுவதாக செய்திகள் வந்துள்ளன. இந்நிலையில் வங்காள விரிகுடாவில் முக்கிய பகுதிகளில் நீர்மூழ்கி எதிர்ப்பு ஏவுகணைகளை நிறுவ வேண்டும்.
Posted in Admiral Sureesh Mehta, armed forces, Bangaladesh, Bangladesh, Burma, China, Defense, Eezham, LTTE, Military, Myanmar, Navy, Pakistan, Ports, Sri lanka, Submarines, Suresh Mehta, Suresh Mehtha | Leave a Comment »