Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Arcelor’ Category

Orient-Express snubs Tata, says Indian tag tacky: Is India Bad for Jaguar?

Posted by Snapjudge மேல் திசெம்பர் 17, 2007

வெள்ளையர்களின் நீங்காத நிறவெறி

டி.ஜே.எஸ். ஜார்ஜ்

அக்ரஹாரத்தில் கழுதை : டாடா, ஜகு�

எங்கும் பொருளாதார தாராளமயமாக்கல் கொள்கை வியாபித்து நிற்கிறது என்று நாம் மார்தட்டிப் பேசிக் கொள்கிறோம்.

ஆனால், இத்தகைய காலகட்டத்திலும் “வெள்ளையர்களே அனைத்திலும் உயர்ந்தவர்கள்; வெள்ளையர் அல்லாதோர் கீழேதான்’, என்று மற்றவர்களை மட்டந்தட்டும் நிறவெறிக் கொள்கை சர்வதேச நிதி மற்றும் வர்த்தக அமைப்புகளில் தலைதூக்கி நிற்கிறது.

நிறவெறிக் கொள்கை ஊறிவிட்ட உலகில் நாம் வாழ்ந்து வருகிறோம்.

உருக்குத் தொழில் உலகின் மன்னர் என்ற பெருமையாகப் பேசப்படும் வெளிநாடு வாழ் இந்தியரான லட்சுமி மிட்டலும் இந்த நிறவெறிக் கலாசாரத்தால் பாரபட்சமாக நடத்தப்பட்டவர்தான்.

ஐரோப்பாவில் இயங்கும் ஆர்சலர் என்ற நிறுவனத்தின் உரிமையை தனது கட்டுக்குள் கொண்டுவர அவர் முயன்றார். ஆனால் வெள்ளையர் அல்லாத ஒருவரது பணம் எங்களுக்கு வேண்டவே வேண்டாம் என்று அந்த நிறுவனத்தின் நிர்வாகி ஒருவர் நிராகரித்து விட்டார்.

ஆனால் பிற்பாடு, தான் சொன்ன வார்த்தை தவறானது என்பதை அந்த நிர்வாகியே உணர்ந்து, மாற்றிக் கொண்டார் என்பது வேறு கதை. பின்னர் அந்த நிர்வாகியின் எதிரிலேயே ஆர்சலர் நிறுவனம் ஆர்சலர்-மிட்டல் என்று மாறியதும் வேறு விஷயம்.

இன்னொரு சம்பவம் அமெரிக்காவைச் சேர்ந்த சொகுசு ஹோட்டல் நிறுவனமான ஓரியண்ட் எக்ஸ்பிரஸ் தொடர்பானது ஆகும்.

இந்த ஹோட்டலுடன் கூட்டு வைக்க டாடா நிறுவனம் ஆசைப்பட்டது. ஆனால் நிறவெறியில் ஊறிய அதன் தலைமை நிர்வாகம், டாடாவின் ஆசையை நிராகரித்து கேலியும் கிண்டலும் செய்தது.

“சொகுசின் மொத்த உருவகமாகத் திகழும் எமது பிராண்டை உங்களது பிராண்டுடன் சேர்ப்பதால் எங்களது பிராண்டின் நற்பெயர் என்னாவது’ என்று ஓரியண்ட் எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி குத்தலாகப் பேசினார்.

இப்படி அவர் பேசியதற்குக் காரணம் கூட்டுவைக்கும் யோசனை வேண்டாம் என்று ஓரியண்ட் எக்ஸ்பிரஸ் தரப்பில் முன்னதாக தெரிவிக்கப்பட்டும் மீண்டும் அதற்காக டாடா நிறுவனம் முயற்சி மேற்கொண்டதே ஆகும். இப்படி டாடா நிறுவனம் செய்தது தம்மை அவமதிப்பு செய்வதாகக் கருதிவிட்டார் ஓரியண்ட் எக்ஸ்பிரஸின் தலைமை நிர்வாகி பால் வொயிட்.

இன்னொரு சம்பவத்தை இனி பார்ப்போம்.

போர்டு லக்சுரி மாடல் கார் உற்பத்தி நிறுவனத்தை வாங்க டாடா மோட்டார்ஸ் நிறுவனம் முயற்சி செய்தது. அதை அறிந்த அமெரிக்க ஆட்டோமொபைல் நிறுவனம் ஒன்றின் தலைவர் ஒருவர் கடந்த வாரம் பொங்கி எழுந்தார். இதை அமெரிக்க மக்கள் ஏற்க மாட்டார்கள் என்றார்.

இத்தகைய சம்பவங்களை குப்பைகள் என்று ஒதுக்கி, கேலிக்கூத்துகள் என்று தான் எடுத்துக் கொள்ளவேண்டும். டாடா பிராண்ட் என்றாலே தனி மவுசுதான். இதை உலகமே நன்கு அறியும்.

எத்தனையோ இந்தியர்களை அமெரிக்க மக்கள் கனிவுடன் ஏற்றுக் கொண்டுள்ளனர். அமெரிக்காவைச் சேர்ந்த மிகப்பெரிய நிதி நிறுவனம் சிட்டி குரூப். இதன் தலைவராக விக்ரம் பண்டிட்டை அமெரிக்கர்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர்.

இதுபோல் அமெரிக்காவின் தேசிய உணர்வுக்கு அடையாளமாக திகழும் பெப்சி நிறுவனத்தின் தலைவராக இந்திரா நூயி அமர்ந்துள்ளதையும் அந்நாட்டு மக்கள் ஏற்கத்தானே செய்தனர்.

இவர்களுக்கு முன்பாக கியூலெட்-பக்கார்ட் நிறுவனத்தின் பொது மேலாளாராக ராஜீவ் குப்தா, எடி அண்ட் டி நிறுவனத்தின் தலைவராக அரூண் நேத்ரவலி, மெக்கன்சி நிறுவனத்தின் தலைவராக ரஜத் குப்தா போன்றோர் சிறப்பாக செயல்பட்டுள்ளனர்.

ஸ்டான்சார்ட் நிறுவனத்தை ராணா தல்வார் தலைமை ஏற்று நடத்துகிறார்.

மேலும் பென்டியம் சிப்பை உருவாக்கிய வினோத் டாம், ஹாட்மெயிலை நிறுவிய சபீர் பாடியா ஆகியோரும் இந்தியர்கள்தான்.

அறிவாற்றல் என்று வரும்போது வெள்ளையர் அல்லாதோரை விரும்புகிறார்கள் வெள்ளையர்கள். அப்போது, நன்மதிப்பு பற்றிப் பேசுவதில்லை. நிறவெறி என்று வரும்போது அவர்களின் மூர்க்கத்தனம் வெளிப்பட்டு விடுகிறது.

அமெரிக்கத் தூதரகங்களில் பணிபுரியும் அதிகாரிகள் கூட தான் யார் என்பதை காட்டிவிடுகிறார்கள். அண்மையில் கேசவன் என்ற விஞ்ஞானி விசாவுக்காக சென்னையில் உள்ள தூதரகத்துக்குச் சென்றிருந்தார். கொளுத்தும் வெயிலில் அவர் ஒரு மணி நேரம் வெளியில் காத்திருக்க நேர்ந்தது.

பின்னர், உள்ளே சென்றதும் 2 மணி நேரம் காத்திருந்தார். “உங்களிடம் ஆலோசனை நடத்த அவசியம் இல்லை. இந்த வினாத்தாள் பட்டியலை நிரப்பித்தாருங்கள்’ என்று மட்டும் அவரிடம் கூறியுள்ளனர்.

மற்றொரு விஞ்ஞானியான கோவர்தன் மேத்தாவுக்கும் கசப்பான அனுபவம் ஏற்பட்டுள்ளது. தனது ஆராய்ச்சியைப் பற்றி மறைத்துவிட்டதாக காரணம் தெரிவிக்கப்பட்டு அவருக்கு விசா நிராகரிக்கப்பட்டது.

இத்தகைய குளறுபடிகளுக்கு நம்மையேதான் நாம் நொந்து கொள்ளவேண்டும்.

அண்மையில் அமெரிக்காவின் செயல்பாடு பற்றி மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கூட வேதனையுடன் பேசினார்.

அமெரிக்காவில் கிளைகள் திறக்க இந்தியாவைச் சேர்ந்த வங்கிகள் விரும்பினால் அவை மீது அமெரிக்கா பாரபட்சம் காட்டுகிறதாம்.

இப்படிப் புகார் கூறுவதால் அவர்கள் மசிந்து விடுவார்களா என்ன? இந்தியாவில் தொழில் நடத்த வரும் அவர்களை இங்கும் அங்கும் என அலைகழித்தால் எல்லாம் சரியாகிவிடும். இது நடக்குமா?

இது குழம்பிப்போன உலகம். மற்றவர்கள் நமக்கு என்ன செய்ய விரும்புகிறார்களோ அதை நாமும் அவர்களுக்குச் செய்ய வேண்டும். அப்போது மரியாதை தானாகவந்து சேரும்.

கொடுக்கும் வழியிலேயே நாமும் திருப்பிக் கொடுப்போம்.

தமிழில்: ஜி. கணபதி

Posted in acquisition, Analysis, Arcelor, Auto, Automobile, Banks, Brand, Capitalization, Cars, CEO, Citi, CxO, Discrimination, Economy, England, Equity, Finance, Ford, Govt, Hotels, Image, India, Jaguar, Law, Luxury, M&A, Manufacture, Manufacturing, markets, Mergers, Mittal, MNC, NRI, Offshoring, Orient Express, Outsourcing, Private, Protection, Public, racism, Reverse, Rich, rules, Shares, Steel, Stocks, Supremacy, TATA, Tax, Wealthy, White | Leave a Comment »

Mukesh to be world’s richest Indian

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 27, 2007

லட்சுமிமிட்டலை முந்தினார் மிகப்பெரிய பணக்கார இந்தியர் முகேஷ் அம்பானி 

புதுடெல்லி, பிப். 27-

ஒரு லட்சம் கோடிக்கும் அதிகமாக சொத்து சேர்த்து உலகின் மிகப்பெரிய பணக்கார இந்தியர் என்ற அந்தஸ்திலும் உலக அளவில் எடுக்கப்பட்ட பணக்காரர்கள் பட்டியலில் 5-வது இடத்திலும் இருந்தார்இரும்பு எஃகு தொழிலில் உலகின் நம்பர் ஒன் தொழில் அதிபர் லட்சுமி மிட்டல். இங்கிலாந்தில் 600கோடி ரூபாய்க்கு ஒரு ஆடம்பர மாளிகையை வாங் கியது, ரஷ்யாவின் அர் செலர் இரும்பு ஆலையை பல்வேறு சவால்களுக்கு இடையே விலைக்கு வாங்கி யது போன்றவற்றில் உலக பிரபலங்கள் பலரை வியக்க வைத்தார்.

தற்போது இந்த ஜாம்ப வானை சொத்து மதிப்பில் முந்தியுள்ளார் அம்பானி சகோதரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானி.

இந்தியாவின் மிகப்பெரிய தனியார் நிறுவனமாக கரு தப்படும் ரிலையன்ஸ் இந்தியா லிமிடெட்டின் பங்குகளை அதிகஅளவு பெற்றதில் அடிப்படையில் முகேஷ் அம்பானியின் தனிபட்ட சொத்து மதிப்பு 1லட்சத்து 4ஆயிரத்து 40 கோடி ரூபாயாக உள்ளது.

லட்சுமி மிட்டலின் சொத்து மதிப்பு 96ஆயிரத்து 480கோடி ரூபாயாக உள்ளதால் லட்சுமி மிட்டலை முந்தி உலகின் மிகப்பெரிய பணக்கார இந்தியர் என்ற அந்தஸ்தை முகேஷ் அம்பானி அடைந்துள்ளார். முகேஷ் அம்பானி இந்தியா விலேயே தொழில் செய்கிற வர் லட்சுமி மிட்டலின் பெரும்பாலான தொழில்கள் வெளிநாட்டிலேயே நடக்கின் றன. அவர் வெளிநாட்டில் வசிக்கிறார் என்றாலும் அவர் இந்திய பாஸ்போட்டை வைத்திருப்பவர் இந்தியா வில் பிறந்தவர் என்ற அடிப்படை யில் இந்திய தொழில் அதிபராக கருதப்படுகிறார்.

Posted in Ambani, Arcelor, Arcelor Mittal, Bill Gates, Birla, Cash, Equity, Forbes, Fortune, Guru, Lakshmi Mittal, Lakshmi Niwas Mittal, Manirathnam, Maniratnam, Microsoft, Mittal, Money, Mukesh Ambani, Poor, Reliance, Reliance Industries Limited, Rich, RIL, Shares, Steel, Stocks, TATA, Valuation, Vimal | Leave a Comment »

India’s Tata Steel wins Corus with $12 bln offer

Posted by Snapjudge மேல் ஜனவரி 31, 2007

கோரஸ் நிறுவனத்தை வாங்குவதில் இந்தியாவின் டாடா வெற்றி

இந்தியாவின் மாபெரும் நிறுவனங்களில் ஒன்று டாடா
இந்தியாவின் மாபெரும் நிறுவனங்களில் ஒன்று டாடா

ஐரோப்பாவின் மிகப் பெரிய எஃகு தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான கோரஸ் என்கிற நிறுவனத்தை வாங்கும் போட்டியில் இந்தியாவின் மிகப் பெரிய வர்த்தக நிறுவனங்களில் ஒன்றான டாடா எஃகு நிறுவனம் வெற்றி கண்டுள்ளது.

பிரிட்டிஷ் எஃகு நிறுவனம் மற்றும் ஹீகுவென்ஸ் என்ற பிரிட்டிஷ்-டச்சு நிறுவனங்கள் இணைந்ததினால் உருவாக்கப்பட்ட கோரஸ் நிறுவனத்தை வாங்க டாடா நிறுவனத்திற்கும், பிரேசில் நாடின் சி எஸ் என் நிறுவனத்திற்கும் கடுமையான போட்டி இருந்தது.

கோரஸ் நிறுவனத்தை 11.3 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிற்கு வாங்க டாடா நிறுவனம் முன்வந்துள்ளது. உலக அளவில் ஒப்பிடுகையில், டாடா எஃகு நிறுவனம் ஒரு சிறிய எஃகு தயாரிக்கும் நிறுவனம்தான். இருந்த போதும் இதற்கு பெரிய டாடா வர்த்தக நிறுவனக் கூட்டமைப்பின் பின்புலம் இருக்கிறது.

இந்தியாவின் நான்கு மிகப் பெரிய நிறுவனங்களில் டாடாவும் ஒன்று, தவிர இந்தியாவில் அனைவருக்கும் பரிச்சயமான ஒரு வர்த்தகப் பெயரும் கூட.

எங்கும் டாடா என்பதே பேச்சு

உலக அளவிலான எஃகு வர்த்தகத்தில் ஈடுபடும் முயற்சியாக ஆங்கிலோ டச்சு நிறுவனமான கோரஸ் நிறுவனத்தை வாங்கியிருப்பதன் மூலம் இந்தியத் தொழில்துறைக்குப் பெருமை சேர்த்துள்ளது டாடா நிறுவனம்.

வெளிநாட்டு நிறுவனங்களை வாங்கிய நிகழ்வுகள் ஏற்கெனவே நடைபெற்றுள்ளன. ஜெர்மனி மருந்து நிறுவனம் பீட்டாபார்ம், பெல்ஜிய நிறுவனம் ஈவ்ஹோல்டிங் ஆகியவை இந்தியத் தொழிலதிபர்களால் முன்பு வாங்கப்பட்டன என்றாலும் அவற்றின் மதிப்பு ஏறக்குறைய 50 கோடி அமெரிக்க டாலர்கள்தான். ஆனால், கோரஸ் நிறுவனப் பங்குகளை மொத்தம் 1130 கோடி அமெரிக்க டாலர்களுக்கு இந்திய நிறுவனம் ஒன்று வாங்குவது இதுவே முதல்முறை. இதனால் டாடா நிறுவனம் இரட்டிப்பு மகிழ்ச்சிக்கு தகுதி பெற்றுள்ளது.

உலக எஃகு வர்த்தகத்தில் 56-வது இடத்தில் உள்ள டாடா நிறுவனம் (இதன் ஆண்டு உற்பத்தி 53 லட்சம் டன்), கோரஸ் நிறுவனத்தை வாங்கியதன் மூலம் 5வது இடத்துக்கு வந்துள்ளது. இதனால் உலக அளவில் மிகப்பெரிய எஃகு நிறுவனமாக உருவெடுப்பதுடன், கோரஸ் நிறுவனத்தின் அதிநுட்ப உருக்கு தொழில்நுட்பத்தையும் டாடா நிறுவனம் பெறுகிறது. உலகச் சந்தையில் விற்பனையை அதிகரிப்பதுடன், மூலப்பொருள் வாங்குதல், சந்தைப்படுத்துதல் ஆகிய நடைமுறைச் செலவுகள் டாடா நிறுவனத்துக்குப் பெருமளவு குறைந்துவிடுகின்றன.

உலக எஃகு வர்த்தகத்தில் சென்ற ஆண்டு 9-வது இடத்தில் இருந்த கோரஸ் நிறுவனம் (ஆண்டு உற்பத்தி 182 லட்சம் டன்) தன்னை டாடா நிறுவனத்துக்கு விற்றுக்கொள்வதன் மூலம் உலக அளவில் அதிவேகமாக வளர்ந்துவரும் இந்தியச் சந்தையில் வெகு எளிதாக நுழைய முடியும்.

இந்த நிறுவனத்தை வாங்கியிருப்பதன் மூலம் டாடா நிறுவனத்துக்கு வர்த்தக ரீதியில் மிகப் பெரிய வளர்ச்சி ஏற்பட்டாலும், சில தவிர்க்க முடியாத சுமைகளும் உண்டு. கோரஸ் நிறுவனத்தில் பணியாற்றும் 47,300 தொழிலாளர்களையும் ஏற்றுக் கொண்டாக வேண்டும். மேலும் கோரஸ் ஓய்வூதிய நிதியம் மூலம் 1.65 லட்சம் பேர் பயனடைந்து வருகின்றனர். இந்த ஓய்வூதிய நிதி நல்ல நிலையில் இருப்பதால் இப்போதைக்கு டாடாவுக்கு பிரச்சினை கிடையாது.

கோரஸ் நிறுவனத்தை வாங்கியதன் மூலம் சர்வதேச சந்தையில் இந்தியாவின் பெருமையை உயர்த்தியது மட்டுமன்றி, உள்நாட்டுச் சந்தையில் டாடா நிறுவனத்தின் மதிப்பு பன்மடங்காக உயர்ந்துள்ளது.

இந்தியச் சந்தையில் டாடா குழுமத்தின் 96 நிறுவனங்கள் அனைத்து வகையான நுகர்பொருள்களையும் விற்பனை செய்து வருகின்றன. இனி இந்தப் பொருள்களுக்கு உள்நாட்டுச் சந்தையில் அதிக வரவேற்பு இருக்கும். விற்பனை அதிகரிக்கும்.

மேற்கு வங்க மாநிலத்தில் குறைந்த விலை கார் தயாரிப்புத் தொழிற்சாலை தொடங்கும் பிரச்சினையில் டாடா நிறுவனத்துக்கு எதிராக கிளர்ச்சிகள் நடந்தன. டாடா நிறுவனத்தின் பொருள்களைப் புறக்கணிக்கும்படி திரிணமூல் காங்கிரஸ் தலைவி மம்தா பானர்ஜி கூறினார். ஆனால் எதையெல்லாம் புறக்கணிப்பது? டாடா நிறுவனத்தின் உற்பத்திப் பொருள்களின் பட்டியல் விரிவானது. தேயிலை, கைக்கடிகாரம், அணிகலன்கள், கார், பேருந்து, கணிப்பொறித் தொழில்நுட்பம், செல்போன், மருந்து உற்பத்தி என நீண்டுகொண்டிருந்த பட்டியலில் புறக்கணிக்கக் கூடிய பொருள்கள்-தங்களுக்குத் தேவை இல்லாதவை என்பதாக மட்டுமே இருக்க முடியும்.

டாடா நிறுவனத்தின் ஆண்டு விற்றுமுதல் மதிப்பு 2,100 கோடி அமெரிக்க டாலர்கள். அதாவது இந்தியாவின் மொத்த உற்பத்தி மதிப்பில் 3 சதவீதம்.

டாடா நிறுவன புகழ் கிரீடத்தில் வேறு சில முத்துகளும் உண்டு. தொழிலாளர்களுக்குச் சம்பளத்துடன் விடுப்பு வழங்குவது, தொழிலாளர் சேம நலநிதி ஆகியன சட்ட வடிவம் பெறுவதற்கு கால் நூற்றாண்டுக்கு முன்பாகவே அவற்றை 1920ல் நடைமுறைப்படுத்திய நிறுவனம் டாடா.

Posted in ABN AMRO, acquisition, Arcelor, Benjamin Steinbruch, Brazil, Companhia Siderurgica Nacional, Corus, Credit Suisse Group, CSN, Deutsche Bank, Esmark, Goldman Sachs, Hoogovens, India, Industry, Iron, J.P. Morgan, Lazard, M&A, Mamtha bannerjee, Minerals, Mittal Steel, MNC, Muthuraman, Rothschild, Singur, Standard & Poor's, Steel, steel maker, TATA, Tata Steel, TISCO, TMC, Trinamool Congress | Leave a Comment »