Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Arab’ Category

Arms race in Arab & Gulf states – US, Israel: War zones

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 3, 2007

அமைதியைக் குலைக்கும் ஆயுத பேரம்!

எஸ். ராஜாராம்

“”சவூதி அரேபியா மற்றும் அரபு நாடுகளுக்கு ஆயுதங்களை விற்பதன் மூலம், சகோதரர்களாக இருக்கும் எங்களைப் பிரிக்க அமெரிக்கா முயற்சிக்கிறது. அரபு நாடுகளுக்கு நண்பன்போல காட்டிக்கொள்ள திட்டமிடும் அமெரிக்காவின் இந்த ஆயுத பேரத்தால் மத்திய கிழக்கில் பதற்றம்தான் அதிகரிக்கும்”.

அரபு நாடுகளுடனான அமெரிக்காவின் சமீபத்திய ஆயுதபேர பேச்சுவார்த்தை குறித்து ஈரான் அதிபர் அகமதி நிஜாதி சொன்னது இது.

ஈரானின் முக்கியமான கூட்டாளியான சிரியாவும் இந்த ஆயுத பேரத்தை அபாயகரமானது எனக் கண்டித்துள்ளது.

உலக நாடுகளுக்கு அமெரிக்கா ஆயுதங்களை விற்பது ஒன்றும் புதிதல்ல. ஆனால், இந்த முறை மத்திய கிழக்கு நாடுகளைக் குறிவைத்து குறிப்பாக, அரபு நாடுகளுடன் ஆயுதபேர பேச்சுவார்த்தையை அமெரிக்கா நடத்தியுள்ளது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

அரபு நாடுகளான எகிப்து, ஜோர்டானுக்கு 13 பில்லியன் (ஒரு பில்லியன் – 100 கோடி) டாலருக்கும், சவூதி அரேபியா, கத்தார், பஹ்ரைன், ஓமான், ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளுக்கும் மொத்தம் 20 பில்லியன் டாலருக்கும் ஆயுதங்களை அமெரிக்க விற்பனை செய்ய உள்ளது.

அத்துடன் இஸ்ரேலுக்கு 30 பில்லியன் டாலர் அளவுக்கு ஆயுதங்களை வழங்க அமெரிக்கா உடன்பாடு செய்துகொண்டுள்ளது. அடுத்த 10 ஆண்டுகளில் இந்த ஆயுதங்கள் வழங்கப்படும்.

இதில் விசேஷம் என்னவென்றால் சவூதி அரேபியா உள்ளிட்ட நாடுகளுக்கு ஆயுதங்களை விற்பனை செய்யும் அமெரிக்கா, இஸ்ரேலுக்கு மட்டும் “ராணுவ உதவியாக’ அளிக்கிறது. ஏனென்றால் இஸ்ரேல் எப்போதுமே அமெரிக்காவின் செல்லப் பிள்ளை. அமெரிக்காவிடம் இருந்து இதுவரை அதிக அளவில் ராணுவ உதவியைப் பெற்ற நாடு இஸ்ரேல்தான்.

கடந்த 10 ஆண்டுகளில் 20 பில்லியன் டாலர் மதிப்பில் இஸ்ரேலுக்கு ராணுவ உதவியை அமெரிக்கா வழங்கியுள்ளது.

கடந்த ஆண்டு லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியபோது, அமெரிக்காவுடனான ஒப்பந்தத்தை மீறி கொத்துக் குண்டுகளை மக்கள் குடியிருப்புப் பகுதிகளில் வீசியது. இதுகுறித்து பல அமைப்புகள் கண்டனம் தெரிவித்தபோதிலும், அமெரிக்கா கண்டுகொள்ளவில்லை. தற்போது இஸ்ரேலுக்கு அளிக்கும் உதவியைக்கூட நியாயப்படுத்தவே செய்கிறது.

“”மத்திய கிழக்குப் பிராந்தியம் கடந்த 10 அல்லது 20 ஆண்டுகளுக்கு முன்பிருந்ததைவிட இப்போது அபாயாகரமானதாக உள்ளது. இஸ்ரேலும் பல அபாயங்களை எதிர்கொள்கிறது.

லெபனான், பாலஸ்தீன தீவிரவாதிகளுக்கு ஈரானும், சிரியாவும் உதவுகின்றன. அதைச் சமாளிக்கும் வகையில் இஸ்ரேல் தனது ராணுவ பலத்தை மேம்படுத்திக் கொள்ளவே இந்த உதவி” என்கிறார் அமெரிக்க வெளியுறவுத் துறை துணைச் செயலர் நிக்கோலஸ் பர்ன்ஸ்.

நேரம்பார்த்து அடிப்பது என்பார்கள்… அதை அரபு நாடுகளில் தனது முக்கியமான கூட்டாளியான சவூதி அரேபியா மூலம் ஈரானுக்கு எதிராக கச்சிதமாக நிறைவேற்றுகிறது அமெரிக்கா.

சக அரபு நாடான லெபனானில் நிலையற்ற தன்மையைத் தவிர்க்க இணைந்து செயல்படுவது என சமீபத்தில்தான் ஈரானும், சவூதி அரேபியாவும் முடிவு செய்தன.

ஈரான் ஷியா பிரிவு ஆளுமையிலும், சவூதி அரேபியா ஸன்னி பிரிவு ஆளுமையிலும் உள்ள நாடுகள். ஆனால், இராக்கில் சிறுபான்மை ஸன்னி பிரிவு மக்களுக்கு எதிராகச் செயல்பட ஷியா பிரிவு தீவிரவாதிகளுக்கு ஈரான் உதவுகிறது என்பதில் சவூதிக்கு சிறிய நெருடல். அந்த நெருடலை தற்போதைய ஆயுத விற்பனை மூலம் அமெரிக்கா பெரிதாக்கிவிட்டதாகக் கருதுகிறார்கள் சர்வதேச அரசியல் நோக்கர்கள்.

ஈரானின் அணுசக்தி திட்டங்கள் மட்டுமின்றி, மத்திய கிழக்கில் ஈரானின் செல்வாக்கும் அமெரிக்காவை கவலைகொள்ளச் செய்துள்ளது. ஏனெனில் ஈரானில் ஆளும்சக்தியான ஷியா பிரிவு முஸ்லிம்கள்தான் இராக், லெபனானிலும் பெரும்பான்மையாக உள்ளனர்.

மேலும், தனது நண்பனான சிரியாவுடன் சேர்ந்து பாலஸ்தீனத்தில் ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு ஈரான் உதவுவதாக அமெரிக்கா கருதுகிறது. மொத்தத்தில் மத்திய கிழக்கில் தனது ஆதிக்கத்தை எதிர்க்கும் ஈரானை தனிமைப்படுத்தவே இந்த ஆயுத விற்பனையில் அமெரிக்கா ஈடுபட்டுள்ளது.

இதை அமெரிக்காவின் வெளியுறவு அமைச்சர் காண்டலீசா ரைஸ் வெளிப்படையாகவே சொல்கிறார். “”மத்திய கிழக்கில் அமெரிக்காவின் “விருப்பத்துக்கு’ எதிரான ஒரே நாடு ஈரான்தான்” என்கிறார் அவர்.

இதற்கிடையே, மத்திய கிழக்கில் அமைதியை நிலவச்செய்வது தொடர்பாக இந்த ஆண்டு இறுதியில் சர்வதேச மாநாடு நடத்தப்படும் என அமெரிக்க அதிபர் புஷ் அறிவித்துள்ளார்.

“”மத்திய கிழக்கில் அமைதியின்மைக்குக் காரணமே அமெரிக்காதான். இருப்பினும் அமெரிக்கா நடத்தும் இந்த மாநாட்டில் பங்கேற்க ஆர்வமாக இருக்கிறோம்” என சிரியா தெரிவித்துள்ளது.

“”அரபு நாடுகள் அமெரிக்காவிடம் இருந்து ஆயுதங்களை வாங்குவதற்குச் செலவிடும் தொகையை தங்கள் நாடுகளின் முன்னேற்றத்திற்குச் செலவிட வேண்டும்” என்று அழைப்பு விடுத்துள்ளார் ஈரான் அதிபர்.

“”மத்திய கிழக்கில் ஆயுதப்போட்டியை ஏற்படுத்த அமெரிக்கா முயற்சிக்கிறது. தனது ஆயுதத் தொழிற்சாலையைத் தொடர்ந்து இயக்கவும், உலகக் கடனாளியாகித் திவாலாவதைத் தவிர்க்கவுமே இந்த ஆயுத விற்பனையில் அமெரிக்கா ஈடுபட்டுள்ளது” எனக் குற்றம்சாட்டுகிறார் ஈரான் பாதுகாப்பு அமைச்சர் முஸ்தபா முகமது நஜ்ஜார்.

உலகின் தலைவராகத் தன்னைக் கருதிக்கொள்ளும் அமெரிக்கா, ஈரானுடனான தனது தனிப்பட்ட வெறுப்புக்காக மத்திய கிழக்கில் அமைதியைக் குலைக்கும் நடவடிக்கையில் ஈடுபடுவது நியாயமல்ல.

Posted in America, Ammunitions, Arab, Arabia, Arms, ascendant, Bahrain, Boeing, Commerce, Democracy, Dubai, Economy, Egypt, Embargo, Emirates, Employment, Freedom, Gaza, Gulf, Haliburton, Hamas, Independence, Iran, Iraq, Islam, Israel, Jobs, Jordan, King, Kingdom, Kuwait, Lebanon, Mid-east, Mideast, Missiles, Monarchy, Muslims, Oman, Palestine, Peace, Qatar, Quatar, Race, sales, Saudi, Sharjah, Shia, Sunni, Syria, UAE, US, USA, War, warlord, Weapons, Yemen | Leave a Comment »

Blair departs, leaving Brown to rebuild their New Labour

Posted by Snapjudge மேல் ஜூன் 28, 2007

கார்டன் பிரவுன் கடந்துவந்த பாதை

கார்டன் பிரவுன் டோனி பிளேர்ருக்கு அடுத்தபடியாக பிரதமராக வரக்கூடிய அதிகபட்ச சாத்தியக்கூறுள்ளவர் என்று பல ஆண்டுகளாக கருதப்பட்டவர்.

கடந்த 10 ஆண்டுகளாக, அவர் பிரிட்டனின் நிதித்துறையின் பொறுப்பை வகித்து வந்தார். சுமார் இருநூறு ஆண்டுகளில் இந்த அளவு அதிக காலம் நிதித்துறை அமைச்சராக இருந்தவர் இவர்தான்.

சான்சலராக ( பிரிட்டிஷ் நிதியமைச்சர் அவ்வாறுதான் அழைக்கப்படுகிறார்) அவர் இருந்த காலத்தில், வெகு நீண்ட காலம் பிரிட்டனில், பொருளாதார வளர்ச்சி நீடித்தது. கடந்த மாதம் தனது இறுதி வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பித்து பேசிய பிரவுன், வர்த்தக முதலீடு மற்றும் வேலைவாய்ப்பு ஆகிய இரண்டுமே அதிகரித்து வருவதாகவும், கடன் வாங்குவது குறைந்திருப்பதாகவும் குறிப்பிட்டார்.

ஆனால்,பிரவுனை விமர்சிப்பவர்களும் இல்லாமல் இல்லை. ஆளும் தொழிற்கட்சியின் சில உறுப்பினர்கள், சில சமயங்களில், பிரவுன் வெளிப்படுத்துகின்ற உற்சாகமற்ற – முசுட்டுத்தனமான தோற்றம், இளமையான, ஊடகங்களுக்கு நட்பான, எதிர்க்கட்சித் தலைவர், டேவிட் கேமரூனுடன் சாதகமாக கருதப்படாது போகலாம் என்று அஞ்சுகின்றனர்.

பிரவுன், ஸ்காட்லாந்தில் பிறந்து அங்கேயே கல்வி பயின்றவர். அரசியலில் அவருக்கு இருந்த ஆர்வம், எடின்பரோ பல்கலைக்கழகத்தில் அவர் படித்த காலத்திலேயே வெளிப்பட்டது. 1992ல் கன்சர்வேடிவ் கட்சி ஆட்சியில் இருந்த போது, எதிர்க்கட்சியின் நிழல் நிதி அமைச்சராகப் பொறுப்பேற்றபின்னர், அவர் எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற முன்வரிசையில், கஜானவுக்கு அதாவது திரைசேரிக்கு, நிழல் தலைமைச்செயலாரகவும், வர்த்தக மற்றும் தொழில் துறை நிழல் செயலராகவும் இரண்டு மூத்த பொறுப்புகளை வகித்தார்.

புதிய தொழிற்கட்சி என்று அறியப்பட்ட கட்சியை புதுமையாக்கும் முயற்சியின் மையமாக டோனி பிளேரும் கார்டன் பிரவுனும் இருந்தனர். வழமையான சோசலிசத்தை கைவிட்டு அவர்கள் ஒரு மைய இடது சாரி அணுகுமுறையை கைக்கொண்டனர். ஆயினும், இருவருக்கும் இடையே, கருத்து வேற்றுமைகளும் வெளிவந்தன. அவர்களது ஆதரவாளர்கள் முறையே பிளேரைட்ஸ் மற்றும் பிரவுனைட்ஸ் என்று குறிப்பிடப்பட்டனர்.

சர்வதேச அரங்கில், பிரவுன் ஆப்ரிக்காவில் வறுமையைக் குறைக்கும் பிரிட்டனின் முயற்சிகளில் ஒரு முக்கியமான பங்கை வகித்தார். அவரது பரவலான அனுபவம் அவருக்கு கை கொடுக்கும் என்கிறார் பி பி சியின் பொருளாதார செய்தி ஆசிரியர் ஆண்ட்ரூ வாக்கர்


பிரிட்டிஷ் பிரதமராக கார்டன் பிரவுன் பொறுப்பேற்பு

பிரிட்டனில், புதிய பிரதமராக கார்டன் பிரவுன் அவர்கள் முறைப்படி பதவியேற்றுள்ளார். பத்து ஆண்டுகளுக்கும் மேலாக பிரதமராகப் பதவி வகித்த டோனி பிளேயர் தனது பதவியை ராஜினாமா செய்த பிறகு கார்டன் பிரவுன் பதவியேற்றுள்ளார்.

அனைவரும் தங்களுக்குரிய நல்வாயப்புக்களை அடையக் கூடிய நிலையை உருவாக்குவது தனது முக்கியப் பணியாக இருக்கும் என்று எலிசபெத் ராணியால் புதிய அரசு அமைக்குமாறு அழைக்கப்பட்ட பிரவுன் கூறினார்.

தனது பதவியை ராஜினாமா செய்யும் முன்பாக, பிளேயர் நாடாளுமன்றத்தில் கேட்கப்பட்ட பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார். அவர் கேள்விகளுக்கு பதில் சொல்லி முடித்த பிறகு, உறுப்பினர்கள் அனைவரும் தங்கள் இருக்கைகளில் இருந்து எழுந்து நின்று கரகோஷம் எழுப்பினர். இது ஒரு அபூர்வ நிகழ்வாகும்.


மனைவியுடன் கார்டன் பிரவுன்மனைவியுடன் கார்டன் பிரவுன்

குடும்பத்தினருடன் கார்டன் பிரவுன்

குடும்பத்தினருடன் கார்டன் பிரவுன்


மத்திய கிழக்கு பகுதிக்கு சிறப்புத் தூதராக டோனி பிளையர் நியமனம்

டோனி பிளயரும் பாலத்தீன அதிபர் அப்பாஸும்
டோனி பிளயரும் பாலத்தீன அதிபர் அப்பாஸும்

பிரிட்டனின் பிரதமராக புதன்கிழமை பதவி விலகிய டோனி பிளயர் மத்திய கிழக்கு பகுதிக்கான சிறப்பு தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அமெரிக்கா, ரஷியா, ஐ நா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகிய நால்வர் அணியால், மத்திய கிழக்கு பகுதிக்கான சிறப்பு தூதர் என புதிதாக உருவாக்கப்பட்ட ஒரு பதவியில் டோனி பிளையர் நியமிக்கப்பட்டுள்ளார். இது குறித்து அதிகார்வபூர்வ அறிவிப்பை ஐநா வெளியிட்டுள்ளது.

டோனி பிளயருக்கு உதவியாக ஒரு சிறு வல்லுநர் குழு ஜெரூசலத்திலிருந்து செயல்படும். மத்திய கிழக்கு பகுதியில் இஸ்ரேலுக்கும் பாலத்தீனத்திற்கும் இடையே ஒரு அமைதியை ஏற்படுத்தி அந்தப் பிராந்தியத்தின் ஸ்திரத்தன்மையை வலுப்படுத்துவது டோனி பிளையரின் முக்கிய பணியாக இருக்கும்.

இந்தப் பொறுப்பிற்கு டோனி பிளையர் நியமிக்கப்பட்டுள்ள போதிலும், அரபு உலகத்தில் இது குறித்து கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன என பிபிசியின் செய்தியாளர்கள் கூறுகிறார்கள்.

இது குறித்த பெட்டகத்தை இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்


பிரிட்டனின் புதிய அமைச்சரவை அறிவிப்பு

புதிய அமைச்சரவையின் முதல் கூட்டம்
புதிய அமைச்சரவையின் முதல் கூட்டம்

பிரிட்டனின் புதிய பிரதமாரக பதவியேற்றுள்ள கார்டன் பிரவுன், தனது அலுவலின் முதல் முழு நாளான இன்று தனது புதிய அமைச்சரவையை அறிவித்தார்.

டோனி பிளையரிடமிருந்து நேற்று கார்டன் பிரவுன் பிரதமர் பொறுப்பை ஏற்றுக் கொண்டார்.

டோனி பிளயரின் அமைச்சரவையிலிருந்த அமைச்சர்கள் அனைவருமே கிட்டத்தட்ட மாற்றப்பட்டுள்ளனர்.

ஆலிஸ்ட்டர் டார்லிங் புதிய நிதியமைச்சாரிகிறார். புதிய உள்துறை அமைச்சாராக ஜாக்கி ஸ்மித் நியமிக்கப்பட்டிருக்கிறார். முதல் முறையாக ஒரு பெண்மணிக்கு உள்துறை அமைச்சர் பொறுப்பு அளிக்கப்பட்டிருக்கிறது.

வெளியுறவுத் துறையில் புதிய அமைச்சராகிறார் டேவிட் மிலிபேண்ட். இவர் முன்னதாக சுற்றுச் சூழல் துறையின் அமைச்சராக இருந்தவர்.

இராக் மீதான போர் மற்றும் லெபனான் மீது இஸ்ரேலின் தாக்குதல் ஆகியவை குறித்து தனிப்பட்ட முறையில் அவர் மாற்றுக் கருத்துக்களை கொண்டிருந்தார்.

பொறுமையும் பயனுள்ளதாகவும் இருக்கக் கூடிய இராஜதந்திர வழிகளை தாம் கையாளவுள்ளதாக அவர் உறுதியளித்துள்ளார்.


Posted in africa, Arab, Biosketch, Blair, Britain, Brown, Cabinet, Cameron, Chancellor, Charles, Commons, Commonwealth, Conflict, Conservative, Diana, Downing, Dubai, Egypt, Election, England, EU, Faces, Fatah, Finance, financial, Gordon, Gordon Brown, Government, Govt, Gulf, Hamas, Iraq, Ireland, Islam, Israel, Jerusalem, Kuwait, Labor, Labour, Leader, London, Mid-east, Mideast, NATO, Opposition, Palestine, Party, people, PM, Polls, Post, Prime Minister, Ruler, Russia, Saudi, Scotland, Shuffle, Thatcher, Tony, Tory, Treasury, UAE, UK, UN, War | Leave a Comment »

Haniya cuts short Arab tour amid Hamas-Fatah tension

Posted by Snapjudge மேல் திசெம்பர் 14, 2006

பாலத்தீனப் பிரதமர் காசா செல்வதை தடுத்தது இஸ்ரேல்

பாலத்தீனப் பிரதமர் இஸ்மாயில் ஹனியா
பாலத்தீனப் பிரதமர் இஸ்மாயில் ஹனியா

மத்திய கிழக்கில் காசாவிற்கும் எகிப்திற்கும் இடையிலுள்ள ரஃபாஹ் பாதையை ஹமாஸ் தீவிரவாதிகள் தகர்த்துள்ளார்கள்.

பாலத்தீனப் பிரதமர் இஸ்மாயில் ஹனியா காசாவிற்கு திரும்புவதை தடுப்பதற்காக இஸ்ரேல் அந்த எல்லைப்புறப் பாதையை மூடியது.

அந்த எல்லையின் பாலத்தீனப் பகுதியில் உள்ள நிலையை தகர்த்து சென்ற ஹமாஸ் தீவிரவாதிகள் அவர்கள் தற்போது அதனை முழுமையாக தமது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளார்கள்.

காசா பகுதிக்குள் 30 மில்லியன் டாலர் பணத்தை இஸ்மாயில் ஹனியா எடுத்துச் செல்வதை தவிர்க்கும் முகமாகத்தான் இந்த எல்லை மூடப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் மற்றும் மேற்கத்திய நாடுகள் விதித்துள்ள பொருளாதாரத் தடை காரணமாக ஹமாஸ் தலைமையிலான பாலத்தீன நிர்வாகம் தனது பல ஆயிரக்கணக்கான ஊழியர்களுக்கு ஊதியம் கொடுக்க இயலாத நிலையில் உள்ளது.

————————————————————————————–

புதுப்பிக்கப்பட்ட நாள்: 13 ஜூன், 2007 – பிரசுர நேரம் 16:40 ஜிஎம்டி

காசா மோதல்கள் மேற்குக்கரைக்கும் பரவியுள்ளன

காசாவில் நடக்கும் கடுமையான மோதல்கள் இப்போது மேற்குக்கரை நகரான நப்லஸுக்கும் பரவியுள்ளன.

அங்கு ஹமாஸ் அமைப்பினருக்கும், பத்தா அமைப்புக்கு ஆதரவான அல் அக்ஸா பிரிகேட் உறுப்பினர்களுக்கும் இடையில் மோசமான துப்பாக்கி மோதல்கள் இடம்பெற்றதை பிபிசி செய்தியாளர் பார்த்திருக்கிறார்.

காசாவில், பிராந்தியம் முழுவதும் ஏற்படுத்தப்பட்டுள்ள வீதித்தடைகள், தான் அந்த ஸ்தம்பித நிலையில் இருந்து தப்பிவருவதற்கு தடையாக இருந்ததாக உள்ளூர்வாசி ஒருவர் பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.

தெற்கு காசாவில் பத்தா அமைப்பின் கட்டுப்பாட்டில் உள்ள பாதுகாப்புச் சேவையின் கட்டிடம் ஒன்றை ஹமாஸ் அமைப்பினர் வெடிவைத்துத் தகர்த்ததில் குறைந்தது 5 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

காசாவைக் கைப்பற்றுவதற்கான நடவடிக்கை ஒன்றில் ஈடுபட்டுள்ளதாக ஹமாஸ் அமைப்பின் மீது, ஐக்கிய நாடுகள் சபையின் மத்திய கிழக்குக்கான மூத்த இணைப்பாளர் மைக்கல் வில்லியம்ஸ் குற்றம் சாட்டியுள்ளார்.


சண்டைகளை நிறுத்துமாறு பல தரப்பினரும் கோரிக்கை

 

காசாவில் தற்போது இடம்பெறுகின்ற, குறைந்தது 60 பேர் பலியாகக் காரணமான சண்டைகளை, மூடத்தனமான சண்டை என்று வர்ணித்துள்ள பாலத்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸ் அவர்கள், சண்டையில் ஈடுபடும் தரப்பினரை மோதலை நிறுத்துமாறு கோரியுள்ளார்.

பத்தா அமைப்புக்குத் தலைமை தாங்கும் அப்பாஸ் அவர்கள், இந்த வன்செயல்கள் காசாவை ஒரு வீழ்ச்சி நிலைக்கு இட்டுச் செல்லலாம் என்று கூறியுள்ளார்.

இந்தச் சண்டைகள் பாலத்தீனர்களின் லட்சியத்துக்கு ஒரு அழிவாக அமையும் என்று அரபு லீக்கின் தலைவரான அம்ர் மௌஸா கூறியுள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியம், ஐக்கிய நாடுகள் சபை மற்றும் ரஷ்யா ஆகியவையும் மோதல் நிறுத்தம் தேவை என்று கோரியுள்ளன.

காசாவில் தமது பாலத்தீன நிவாரணப் பணியாளர்கள் இருவர் சுட்டுக்கொல்லப்பட்டதை அடுத்து, அங்கு தமது நிவாரணப் பணிகளை இடைநிறுத்துவதாக ஐக்கிய நாடுகள் சபை கூறியுள்ளது.


இஸ்ரேலிய அதிபரானார் ஷிமொன் பெரஸ்

பெரஸ்
பெரஸ்

இஸ்ரேலின் மூத்த அரசியல்வாதியான ஷிமோன் பெரஸ் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற இரண்டாவது சுற்று வாக்கெடுப்புக்குப் பிறகு அந்த நாட்டின் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

முதல் சுற்றில் பெரஸ் அவர்களுக்கு அதிக அளவு வாக்குகள் கிடைத்ததன் காரணமாக, அவரை எதிர்த்து நின்ற இரண்டு வேட்பாள்களும் போட்டியில் இருந்து விலகிக் கொண்டனர்.

பாலியல் வல்லுறவு மற்றும் பாலியல் வன்முறை தொடர்பான பல குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகியதன் பிறகு, தற்போதைய இஸ்ரேலிய ஐனாதிபதி மோஷே கட்சவ், பணிக்கு செல்லாமல் விடுப்பில் உள்ளார்.

7 ஆண்டுக்கு முன்பு நடந்த தேர்தலில் ஆளும் கதீமா கட்சியைச் சேர்ந்த பியர்ஸ், காட்சவ்விடம் தோல்வியைத் தழுவினார் என்பது குறிப்பிடத்தக்கது.


புதுப்பிக்கப்பட்ட நாள்: 16 ஜூன், 2007 – பிரசுர நேரம் 15:02 ஜிஎம்டி

பாலஸ்தீன நாடாளுமன்றத்திற்குள் அதிரடியாக நுழைந்தனர் ஃபத்தா அமைப்பினர்

மேற்குக்கரை நகரான ரமல்லாவில் உள்ள பாலத்தீன நாடாளுமன்ற கட்டிடத்தில் ஃபத்தா பிரிவைச் சேர்ந்த ஆயுதபாணிகள் அதிரடியாக நுழைந்தனர்.

அந்தக் கட்டிடத்தில் தமது கொடியை ஏற்ற முனைந்த பத்தா ஆதரவாளர்களைத் தான் தடுக்க முனைந்த போது, தன்னை அவர்கள் அடித்துத் தாக்கியதாக ஒரு சுயேச்சையான துணை சபாநாயகர் பிபிசி க்கு கூறியுள்ளார்.

அந்தக் கட்டிடத்தில் இருந்த கல்வி அமைச்சு உட்பட ஹமாஸுடன் தொடர்புடைய அதிகாரபூர்வ கட்டிடங்களையும் மற்றும் நப்லஸில் உள்ள நகரக் கவுன்ஸில் கட்டிடத்தையும் ஃபத்தா போராளிகள் துவம்சம் செய்தனர்.

ஹமாஸ் அமைப்பின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்ட காசாவில், தற்போது அமைதி நிலவுகிறது, ஆனால் பெரும்பாலான கடைகள் மூடப்பட்டுள்ளன.


Posted in Arab, Arms, Avital, Award, Blast, Bombs, Britain, Colette, Colette Avital, Crisis, dead, Erez, Escalation, Fata, Fatah, Fatha, Fathah, Freedom, Galilee, Gaza, Hamas, Haniya, Independence, Ismail Haniyeh, Israel, Jerusalem, Jimmy Carter, Kadima, Katsav, Knesset, Labor, Labour, Leader, Likud, Mid-east, Middle East, Moshe, Moshe Katsav, Negev, Nobel, Nuclear, Palestine, Palestine: Peace Not Apartheid, Party, Peace, Peres, Perez, PM, Poland, President, Prez, Prime Minister, Prize, Rafah, Reuven, Reuven Rivlin, Rivlin, Shimon, Simon, Simone, UK, Violence, War, Weapons, WWII | 1 Comment »

History of Middle-East Arabian Countries & Jews Israel

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 15, 2006

யூதர்-அரபியர் கூடி வாழ்ந்தால்…

என்.ஆர். ஸத்யமூர்த்தி

இஸ்ரேலுக்கும் லெபனானுக்குமான போர் 12-7-2006 அன்று தொடங்கி, 14-8-06 காலை நிறுத்தப்பட்டுள்ளது. தெற்கு லெபனானில் இயங்கி வரும் ஹிஸ்புல்லா என்ற இயக்கம் இஸ்ரேலின் இரண்டு படைவீரர்களைக் கடத்திச் சென்றதே இப் போருக்குக் காரணம் என்று இஸ்ரேல் சார்பில் சொல்லப்பட்டது. ஹிஸ்புல்லா இயக்கத்தைக் கட்டுப்படுத்தும் வலிமை, லெபனானுக்கு இல்லை என்பதால், அதைப் பலவீனப்படுத்துவது, ஒடுக்குவது தன்னுடைய தேவை என்று இஸ்ரேல் கருதியது.

இஸ்ரேலுக்குத் தன் அண்டை நாடுகளுடன் போர் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது புதியதல்ல. 14-5-1948 அன்று இஸ்ரேல் என்ற தனிநாடு தோற்றம் பெற்ற 24 மணிகளுக்குள்ளாகவே, எகிப்து, ஜோர்டான், சிரியா, லெபனான், ஈராக் ஆகிய நாடுகள் இஸ்ரேல் மீது படையெடுத்தன. பின்னர் 1956ல் எகிப்துடன் போர் மூண்டது. 1967ல் எகிப்து, ஜோர்டான், சிரியா ஆகிய நாடுகளுடன் போரிட வேண்டியிருந்தது. 1973ல் மீண்டும் எகிப்தின் படையெடுப்பைச் சந்திக்க நேர்ந்தது.

போரிலே பிறந்து, போரிலே வாழ்ந்து, போரிலே உயிர் துறக்கும் இஸ்ரேலியர்களின் பூர்வ கதை தெரிந்து கொள்ளப்பட வேண்டியதாகும்.

இஸ்ரேலியர்கள் யூதர்கள். அவர்கள், பைபிளில் பேசப்படுகிற ஆப்ரஹாமின் வம்சாவளியினர். ஆப்ரஹாம் தம் உறவினர், நண்பர்கள் ஆகியோருடன் “”கானான்” என்ற பிரதேசத்தில் குடியமர்ந்தார். இது ஜோர்டான் ஆறு, சாக்கடல் Dead Sea) ஆகியவற்றுக்கும் மத்திய தரைக்கடலுக்கும் இடைப்பட்ட பகுதி. இது நடந்தது சுமாராக கி.மு. 2000-ல்.

கானான் நாட்டில் ஏற்பட்ட பஞ்சத்தின் காரணமாக, அம் மக்கள் எகிப்து நாட்டில் குடியேறினர்; அங்கு துன்புறுத்தலுக்கு ஆளானதால், மோசஸின் தலைமையில் வெளியேறி சினாய்க்குன்றை அடைந்தனர். கானான் நாட்டுக்குத் திரும்பி, அங்கு புனித தேசத்தை நிறுவுமாறும் அது அவர்களுக்கானது எனவும் வாக்களித்தார் இறைவன் எனப்படுகிறது. அதுவே அவர்களுக்கான Promised Land ஆன இஸ்ரேல் ஆனது.

அசீரியர்கள், பாபிலோனியர்கள், பாரசீகத்தினர், கிரேக்கர்கள், ரோமானியர்கள் ஆகியோரின் படையெடுப்புக்களால், இஸ்ரேலியர்கள் தம் நாட்டை விட்டு வெளியேறிச் சிதறியிருந்தாலும், பாலஸ்தீனத்தில் அடங்கிய தம் சொந்த நாடே, அவர்களின் ஆன்மிக மையமாகத் தொடர்ந்தது.

ஆற்றல்மிக்க யூதர்கள் தம் நாட்டை இழந்து பலவிதமான இம்சைகளுக்கு இலக்கானது சோக சரித்திரம். கி.பி. 313ல், கான்ஸ்டண்டைன் பேரரசர் கிறிஸ்தவத்தைத் தேச மதமாக அறிவித்ததை அடுத்து யூதர்களின் நிலங்கள் பறிக்கப்பட்டன; அலெக்ஸôண்ட்ரியாவிலிருந்து யூதர்கள் முழுமையாகப் படுகொலை செய்யப்பட்டனர்.

கி.பி. 1096ல், பாலஸ்தீனத்தை முஸ்லிம்களிடமிருந்து விடுவிப்பதற்காக பிரான்ஸýம் மற்ற ஐரோப்பிய நாடுகளும் போர் தொடுத்தபோது, முதல் காரியமாக யூதர்கள் படுகொலை செய்யப்பட்டனர். கி.பி. 1099ல் அவர்கள் ஜெருசலேத்தைக் கைப்பற்றியபோது, கிறிஸ்தவரல்லாதவர் ஒவ்வொருவரும் கொல்லப்பட்டார். யூதர்கள் எல்லாம் அவர்களின் கோயிலில் அடைக்கப்பட்டு, உயிருடன் கொளுத்தப்பட்டனர். கி.பி. 1290 – 1492க்குள் இங்கிலாந்து, பிரான்சு, ஸ்பெயின் ஆகிய நாடுகளிலிருந்தும் இம்சிக்கப்பட்டு, அவர்கள் வெளியேற்றப்பட்டனர்.

இவ்வாறு வெளியேற்றப்பட்ட யூதர்கள், ஹாலந்து, வடஆப்பிரிக்கா, பால்கன், போலந்து, லிதுவேனியா, ரஷியா எனப் பல நாடுகளில் சென்று வாழ்ந்தனர். கி.பி. 1517-ல், ஓட்டோமானியர்கள், பாலஸ்தீனத்தைக் கைப்பற்றிய போது, தங்கள் மதத்தில் மிக்க ஈடுபாடு கொண்ட பல யூதர்கள், பாலஸ்தீனத்திற்கே வந்தனர்.

மேற்கு ஐரோப்பிய நாடுகளையடைந்த யூதர்களைப் போலன்றி, ரஷியாவுக்குச் சென்றவர்கள், அரசாலும் மக்களாலும் இம்சிக்கப்பட்டனர். கி.பி. 1881ல் இரண்டாம் அலெக்ஸôண்டர் என்ற ஜார் மன்னர், சுட்டுக்கொல்லப்பட்டதற்கு யூதர்கள் பொறுப்பாக்கப்பட்டனர். உலகே வியக்குமளவுக்கு யூத விரோத உணர்ச்சி தாண்டவமாடியது. ஒரு நூற்றாண்டுக்குக் கேள்விப்பட்டிராத அளவில் படுகொலைக்கும் தீவைப்புக்கும் யூதர்கள் ஆளாக்கப்பட்டனர். ரஷியாவிலிருந்து லட்சக்கணக்கான யூதர்கள், அகதிகளாக வெளியேறினர்.

இந்த ரஷியப் படுகொலை, உலகத்து யூதர்களை உலுக்கியது. “”பாதுகாப்பும் சுதந்திரமும் யூதர்களுக்கான தனிநாட்டில்தான் கிடைக்கும்” என்பதை லியோ பின்ஸ்கர் என்ற ரஷிய – யூத மருத்துவர், ‘‘அன்ற்ர் உம்ஹய்ஸ்ரீண்ல்ஹற்ண்ர்ய்’’ என்ற நூல் மூலம் அறிவித்தார்.

ஹங்கேரியின் புடாபெஸ்டு நகரத்தில் பிறந்த தியோடர் ஹெர்ஸல் என்ற பத்திரிகையாளர் ஒருவர் இருந்தார். யூதக் குழந்தைகளுக்கு “ஞானஸ்நானம்’ அளிப்பதே ஒரே தீர்வு எனக் கருதியவர் அவர். பிரெஞ்சு ராணுவத்தில் பணிபுரிந்து வந்த ட்ரேபஸ் என்ற யூத அதிகாரி, ஜெர்மனுக்கு உளவு பார்த்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு 1894-ல் விசாரணை நடந்து வந்தது. பத்திரிகையாளர் என்ற முறையில் அவ் விசாரணையைக் காணச் சென்றார் ஹெர்ஸல். அந்த இளம் பத்திரிகையாளரை அதிர்ச்சியடைய வைத்தது எது என்றால், விவரமறிந்த மக்கள் மிக்க பிரான்ஸ் நாட்டில், நீதிமன்றத்திற்கு வெளியே கூடியிருந்த கூட்டம், “”யூதர்களைக் கொல்லுங்கள்” என்று குரைத்துக் கொண்டிருந்ததுதான்! விளைவு: எல்லாக் காலத்து மக்களையும் ஈர்க்கவல்ல மிகச்சிறந்த பிரசுரம் ஒன்று ‘‘பட்ங் ஒங்ஜ்ண்ள்ட் நற்ஹற்ங்’’ என்ற பெயரில் அவரால் வெளியிடப்பட்டது. கி.பி. 1897ல் ஸ்விட்ஸர்லாந்தின் பாஸ்லே நகரில் “”யூதர்களின் காங்கிரஸ்” ஒன்றை வெற்றி பெற நடத்தினார் அவர். அப்பொழுது அவர், “”இப்பொழுது ஒரு யூத நாட்டின் கருவை உருவாக்கி விட்டேன்… கண்டிப்பாக 50 ஆண்டுகளில் எல்லோரும் அதைக் காண்பார்கள்!” என்று தீர்க்கதரிசனத்தோடு சொன்னார். அது 1948ம் ஆண்டு மே மாதம் 14ம் நாள் மெய்ப்பிக்கப்பட்டது!

கி.பி. 1920ல் லீக் ஆப் நேஷன்ஸ் (League of Nations) பாலஸ்தீன நாட்டை நிர்வகிக்கும் பொறுப்பை பிரிட்டிஷ் அரசுக்கு வழங்கியது. அதில் யூதர்களுக்குத் தனி நாடு பற்றியும் குறிப்பிடப்பட்டிருந்தது. முதலாம் உலகப் போரின் முடிவில், பாலஸ்தீனத்தின் 7,50,000 மக்கள்தொகையில் யூதர்கள் 10 விழுக்காடுதான் இருந்தனர். பல நாடுகளிலிருந்து யூதர்கள் பெருமளவில் குடியேறினால்தான், அவர்களின் கோரிக்கை வெற்றி பெற இயலும். இக் குடியேற்றக் கொள்கை, அரபியர்களிடமிருந்து கடும் ஆட்சேபணையையும் போராட்டத்தையும் தூண்டியது இயல்பே. இருப்பினும், கி.பி. 1933ல் ஹிட்லர், ஜெர்மனின் அதிபரான பிறகு யூதர்கள் இம்சிக்கப்பட்டு, 60 லட்சம் பேர் படுகொலை செய்யப்பட்டனர்; மேலும் 61,854 யூதர்கள், பாலஸ்தீனத்திற்கு அகதிகளாக வந்தனர்.

யூதர்களின் தனி நாடு கோரிக்கையை பிப்ரவரி, 1947ல் ஐ.நா. சபைக்குக் கொண்டு சென்றது பிரிட்டன். ஐ.நா. சபை, ஒரு சிறப்புக் கமிஷனை நியமித்தது. பாலஸ்தீனத்தை ஒரு சிறிய நாடாகவும், ஒரு பெரிய அரபிய நாடாகவும் பிரிக்கப் பரிந்துரை செய்தது அக் கமிஷன் (1-9-1947). யூதர்கள் ஏற்றுக் கொண்டனர்; அரபியர்களும் பிரிட்டனும் எதிர்த்தனர். பரிந்துரைத்ததைவிட அதிகமான பகுதி அரபியர்களுக்கு எனும் சிறிய மாற்றத்துடன், அத் திட்டத்தை ஐ.நா. பொதுச்சபை ஏற்றுக்கொண்டது.

செய்தி கேட்டவுடனே, பாலஸ்தீன அரபியர்கள் வன்முறையில் இறங்கினர். யூதர்கள் படுகொலை செய்யப்பட்டனர். பிரிட்டிஷ் அரசு பாலஸ்தீனத்தை நிர்வகிக்கும் தன் பொறுப்பிலிருந்து 15-5-48 அன்று விடுபடுவதாக அறிவித்தது.

அறிவித்ததற்கு ஒருநாள் முன்னதாக, 1948, மே 14 காலை 9 மணிக்கு பிரிட்டிஷ் ஹைகமிஷனர் பாலஸ்தீனத்தை விட்டு விடைபெற்றார். அன்று மாலையே 4 மணிக்கு, டேவிட் பென் குரியன் இஸ்ரேலின் சுதந்திரப் பிரகடனத்தை அறிவித்தார். அமெரிக்க அதிபர், அதனை அங்கீகரித்து, ஏற்கெனவே அளித்த வாக்குறுதியைக் காப்பாற்றினார்! சில மணிகளில், சோவியத் யூனியனும் அங்கீகரித்தது. 2000 ஆண்டுகளுக்குப் பின், இறைவன் வாக்களித்த நாட்டை, இஸ்ரேலியர்கள் பெற்றனர்!

இஸ்ரேலைச் சுற்றியுள்ள அரபு நாடுகள் அதை ஏற்க மறுத்துத் தீவிரவாதத்தை ஊக்குவிப்பதும் இஸ்ரேலை உலக வரைபடத்திலிருந்தே ஒழித்துவிட வேண்டும் என்று சொல்வதும் நீடித்தது. எப்பொழுதும் அரபியர்கள் படையெடுக்கக் கூடும் என்ற அச்சத்தாலும் வருமுன் காத்தல் கருதியும் இஸ்ரேல் எப்பொழுதும் போர் புரியத் தயார் நிலையிலேயே இருக்க வேண்டியுள்ளது.

கி.பி. 638ல் இஸ்லாமியர்கள் பாலஸ்தீனத்தைக் கைப்பற்றியபோதும், கி.பி. 711ல் ஸ்பெயினில் இஸ்லாம் பரவியபோதும் யூதர்களின் அறிவும் ஆற்றலும் பயன்படுத்தப்பட்டு, பறிக்கப்பட்ட உரிமைகளெல்லாம் மீண்டும் தரப்பட்டன. நாடு திரும்பிய யூதர்கள், பாலஸ்தீன இஸ்லாமிய அரசால், தங்கள் நிலங்களை மீட்டுக்கொள்ள அனுமதிக்கப்பட்டனர். யூதர்களுடன் சகவாழ்வு (Co – existence) காரணமாக, இஸ்லாமிய அரசுகள் பெற்ற நலனைக் கண்டு, முன்பு விரோதம் காட்டிய கிறிஸ்தவர்களும் அவர்களைப் பயன்படுத்தலாயினர். வரலாற்றின் வளமான இந்நிகழ்வுகளை அரபியர்கள், இஸ்ரேலியர்கள் ஆகிய இருவருமே சிந்தித்துப் பார்க்கக் கடமைப்பட்டவர்கள்!

பாலைவனத்தைச் சோலைவனமாக்கியவர்கள், பல சோதனைகளையும் பொறுத்துக் கொண்டு விவசாயம், விஞ்ஞானம் போன்ற துறைகளில் சாதனை படைத்தவர்கள், நாட்டுப்பற்றும் துணிவும் இறையுணர்வும் மிக்க இஸ்ரேலியர்களும் அதே இயல்புகளும் கலாசாரச் சிறப்பும் மிக்க அரபியர்களும் கூடி வாழ்ந்தால் கோடிகோடி நன்மை விளையும். மாறாக தங்களுக்குள் போரிட்டுத் தங்களைச் சிதைத்துக் கொள்வது அவர்களை உள்ளடக்கிய உலகிற்கே உகந்ததல்ல.

யூதர்கள், கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் ஆகிய மூவருக்கும் பரம பவித்திரமாய் விளங்கும் ஜெருசலேத்தின் புனிதம் போர்களினால் பாதிக்கப்பட அனுமதிப்பது, ஆண்டவன் அளித்த அறிவுடைமைக்கு அழகல்ல.

Posted in Arab, Arabia, Europe, Hezbolla, History, Israel, Jews, Lebanon, Mid-east, Middle East, Palestine, Russia, Spain, Tamil | 24 Comments »