Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘APJ Abdul Kalam’ Category

President Abdul Kalam: ‘Journalists can partner national development’ – Ramnath Goenka Excellence in Journalism Awards Speech

Posted by Snapjudge மேல் ஜூலை 18, 2007

நாட்டின் வளர்ச்சியில் நாளேடுகள்!

“பத்திரிகைத் துறையில் சிறந்த சேவைபுரிந்தமைக்காக ராம்நாத் கோயங்கா பெயரிலான விருதுகள் வழங்கும் விழாவில் பங்கேற்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். விருது பெற்றவர்களுக்குப் பாராட்டுகளையும் விழாவில் பங்கேற்கும் உங்களுக்கு வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

பத்திரிகைகளுக்கு வாய்ப்பூட்டு, பத்திரிகைச் சுதந்திரத்துக்குக் கட்டுப்பாடு, பத்திரிகைகளுக்குத் தணிக்கை என்ற நெருக்கடியான காலகட்டத்தில்கூட பத்திரிகைச் சுதந்திரத்துக்காக அஞ்சாமல் பாடுபட்டவர் ராம்நாத் கோயங்கா. சுதந்திரப் போராட்ட வீரர், தொழில் அதிபர், பத்திரிகைச் சுதந்திரத்துக்காக அயராது பாடுபடுபவர் என்று பன்முகச் சிறப்பு பெற்றவர் ராம்நாத் கோயங்கா.

நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்னரும் சுதந்திரம் அடைந்த பிறகும் அவர் வெளியிட்ட பத்திரிகைகள் அனைத்துமே அவருடைய நாட்டுப்பற்றுக்கும், அச்சமின்மைக்கும் சான்றாகத் திகழ்கின்றன. 1932-ல் இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையின் அதிபரானார். பிறகு வெவ்வேறு இந்திய மொழிகளிலும் பத்திரிகைகளைத் தொடங்கினார். அவருடைய சீரிய வழிகாட்டுதலில் எல்லா பத்திரிகைகளும் மக்களால் பேசப்படும் அளவுக்குச் சிறப்பாக வெளிவந்தன.

“”பத்திரிகையாளர்கள் தேச வளர்ச்சியின் பங்குதாரர்கள்” என்ற தலைப்பில் இன்று உங்களுடன் விவாதிக்க விரும்புகிறேன்.

1944-ல் எனக்கு 13 வயது. இரண்டாவது உலகப் போர் நடந்து கொண்டிருந்தது. என்னுடைய அண்ணன் சுதேசமித்திரன், தினமணி ஆகிய நாளிதழ்களுக்கு துணை முகவராக இருந்தார். வேலைக்காக அவர் இலங்கை சென்றதால், ராமேஸ்வரத்தில் இவ்விரு பத்திரிகைகளையும் விநியோகிக்கும் பொறுப்பை நான் ஏற்க நேர்ந்தது. மாணவனாக இருந்த நான், உலகப் போர் குறித்த செய்திகளை ஆர்வமாகப் படித்து வந்தேன். முதலில் தினமணி நாளிதழை வாங்கியதும், ஸ்பிட்ஃபயர் ஃபைட்டர் விமானம், லுஃப்ட்வாஃப் விமானத்துக்கு எதிராக எப்படி சண்டை போட்டது என்பதை ஆர்வமாகப் படிப்பேன். விமானவியலில் எனக்கு ஆர்வத்தை விதைத்ததே தினமணிதான். உலகம் முழுவதுமே மக்களின் ஆர்வத்தைத் தூண்டும் விஷயங்கள் அன்றாடம் ஆயிரம் நடக்கலாம். பத்திரிகையாளர்கள் அவற்றை ஊன்றிக் கவனித்து உரிய வகையில் செய்தியாகத் தர வேண்டும்.

1999-ல் டெல் அவிவ் நகருக்குச் சென்றேன். ஹமாஸ் போராளிகள் லெபனான் எல்லையில் ராணுவத்துக்குக் கடும் சேதத்தை ஏற்படுத்திவிட்டனர் என்று தொலைக்காட்சியில் முக்கிய செய்தியை அடிக்கடி ஒளிபரப்பிக் கொண்டிருந்தனர். அடுத்த நாள் பத்திரிகைகளை வாங்கியபோது, இந்தச் செய்தியை முதல் பக்கத்திலேயே காண முடியவில்லை. ரஷியாவிலிருந்து இஸ்ரேலுக்கு வந்த ஒரு விவசாயி, பாலைவனப் பகுதியில் மூன்று ஆண்டுகளாகத் தங்கி காய்கறி, பழச்சாகுபடியை அமோகமாக மேற்கொண்டு சாதனை படைத்திருப்பது குறித்த செய்திதான் முதல் பக்கத்தில் வெளியாகியிருந்தது. மக்களும் அச்செய்தியைத்தான் ஆர்வமாகப் படித்தார்கள். பத்திரிகைத் துறையின் சிறந்த பங்களிப்பு என்றே அச் செய்தியை நானும் கருதுகிறேன்.

எல்லா பத்திரிகைகளிலும் ஆராய்ச்சிப் பிரிவு இருக்க வேண்டும். செய்திகளைத் தர, ஆய்வுசெய்ய, முக்கியமானவற்றை எடுத்துரைக்க இதைப் பயன்படுத்த வேண்டும். கல்வி நிலையங்களில் உள்ள பத்திரிகையியல் ஆய்வுப்பிரிவுடன் இந்தப் பிரிவு இணைக்கப்பட வேண்டும். தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பிரச்னைகளை ஆய்வுக்கு எடுத்துக்கொண்டு அது ஏன், எதனால் ஏற்படுகிறது, அதற்கு நீண்டகால, குறுகியகால தீர்வு என்ன என்று அறிய இது உதவும். மூத்த பத்திரிகையாளர்களும் இளைஞர்களும் இதில் சேர வேண்டும். இதனால் பத்திரிகையின் தரமும் உயரும்.

வெளிநாட்டுப் பத்திரிகைகளில் ஒரு செய்தியை வெளியிடுவதற்கு முன், அதை ஆய்வுப்பிரிவுக்கு அனுப்புகின்றனர். அயல்பணி ஒப்படைப்பு என்ற அவுட்-சோர்சிங் முறை குறித்து அமெரிக்காவில் கடுமையான ஆட்சேபம் எழுந்தபோது, ஆய்வு செய்து செய்தி தர ஒரு பத்திரிகையாளர் அமெரிக்காவிலிருந்து இங்கே வந்தார். அயல்பணி ஒப்படைப்பு நிறுவனங்கள் பயன்படுத்தும் கருவிகள், சாதனங்களில் 90% அமெரிக்கா, ஐரோப்பாவிலிருந்துதான் இறக்குமதி செய்யப்படுகின்றன என்பதை அறிந்து, செய்தியாக அளித்தார். அது அமெரிக்க, ஐரோப்பிய மக்களுக்கு வியப்பை அளித்தது.

இந்தியாவில் தகவல் தொழில்நுட்பத்துறை (ஐ.டி.) எப்படி வளர்ந்திருக்கிறது என்று அறிய “டிஸ்கவரி’ சேனலின், தாமஸ் ஃப்ரீட்மேன் இந்தியாவுக்கு வந்து பெங்களூர் போன்ற ஊர்களில் ஒரு மாதத்துக்கும் மேல் தங்கினார். “”தி வேர்ல்ட் ஈஸ் ஃபிளாட்” (உலகம் தட்டையானது) என்ற புத்தகத்தை எழுதினார். இந்தியாவில் மட்டும் அல்ல, உலகெங்கும் இப் புத்தகம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் இந்தியப் பத்திரிகையாளர்களும் இப்படி ஏதாவது ஒரு விஷயத்தை எடுத்துக் கொண்டு ஆய்வு செய்யலாம்.

பத்திரிகைகள் சமுதாயத்துக்குப் பயன் தரும் வகையில் செயலாற்ற முடியும் என்பதற்கு இரண்டு சமீபத்திய உதாரணங்களைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

மகாராஷ்டிரத்தில் விதர்பா பகுதிக்கு கடந்த மாதம் சென்றேன். அங்கு விவசாயிகளின் பிரச்னை குறித்து விவசாயிகள், அதிகாரிகள், வேளாண்துறை நிபுணர்கள், பத்திரிகையாளர்கள், சமூக சேவகர்கள் ஆகியோருடன் விவாதித்தேன். இதேபோல பத்திரிகைகளின் ஆய்வுக்குழுவும் நேரடியாகவே அந்தந்த இடங்களுக்குச் சென்று செய்தி சேகரித்தால் பிரச்னையை அடையாளம் காணவும், அரசுக்கு தீர்வுக்குண்டான வழிகளைச் சொல்லவும் உதவியாக இருக்கும்.

கடந்த ஜூன் மாதம் 15-ம் தேதி மகாராஷ்டிரத்தின் யவத்மால் மாவட்டத்துக்குச் சென்றேன். பீட்டா காட்டன் என்ற மரபணு மாற்றம் செய்யப்பட்ட புதியவகை பருத்தியைச் சாகுபடி செய்து நஷ்டம் ஏற்பட்டதால் அந்த மாவட்ட விவசாயிகள் மனம் நொந்த நிலையில் இருந்தனர். வறட்சி காரணமாக மகசூல் குறைந்தது; அல்லது சாவியாகிப் போயிருந்தது. தண்ணீர் பற்றாக்குறை இல்லாமல் தொடர்ந்து கிடைத்துவந்தால்தான் பீட்டா காட்டன் விதைகளால் நல்ல மகசூல் கிடைக்கும் என்ற உண்மை அவர்களுக்கு அனுபவம் வாயிலாகத்தான் கிடைத்தது. இதுவே முன்கூட்டி தெரிந்திருந்தால் அவர்களின் நஷ்டத்தைத் தவிர்த்திருக்க முடியும். தரமான விதை, சாகுபடி முறையில் விவசாயிகளுக்கு முறையான பயிற்சி, உரிய நேரத்தில் வங்கிக் கடன், விளைபொருளை உடனே சந்தைப்படுத்த நல்ல வசதி, மழை இல்லாமல் போனால் பாசன நீருக்கு மாற்று ஏற்பாடு ஆகியவற்றுக்கு ஏற்பாடு செய்திருந்தால் பிரச்னை இந்த அளவுக்கு முற்றியிருக்காது.

அடுத்தது பாசனத் தண்ணீர் பற்றியது. வாய்க்கால்களை வெட்டுவது, மடையை மாற்றுவது ஆகிய வேலைகளை யார் வேண்டுமானாலும் செய்யலாம்; ஆறே இல்லாத இடங்களில் தண்ணீரை எப்படிக் கொண்டுவருவது? மழைக்காலத்தில் எந்தெந்த வழிகளில் எல்லாம் நீரைச் சேமிக்கலாம் என்பதை விவசாயிகளுக்குச் சொல்லித்தந்து உடன் இருந்து அமல் செய்தால் வறட்சி காலத்தில் அது கைகொடுத்து உதவும். இவை மட்டும் அல்லாது மாவட்டத்தில் உள்ள ஜவுளி ஆலைகளும் சாகுபடியாளர்களுக்குச் சாதகமாகச் செயல்பட்டு அவர்களுடைய விளைபொருள்களைக் கொள்முதல் செய்ய வேண்டும். இடைத்தரகர்கள் இல்லாமல் நேரடியாக விற்கும் வசதி செய்யப்பட வேண்டும். கந்துவட்டிக்காரர்களிடம் விவசாயிகள் சிக்காமல் இருக்க, எல்லா கிராமங்களுக்கும் வங்கிகளின் சேவை கிடைக்க வேண்டும்.

விவசாயிகள் வேளாண் உற்பத்தித் திறனைப் பெருக்கிக் கொள்ளவும், விளைபொருள்களுக்கு நல்ல விலையைப் பெறவும் ஐ.டி.சி. லிமிடெட் நிறுவனம் பெரிதும் உதவியாக இருந்து வருகிறது.

பஞ்சாபின் கேரி புத்தார் என்ற இடத்தில் விவசாயிகள், தொழில்துறையினர், ஆய்வு நிலையம், கல்விக்கூடம் ஆகியவற்றின் நெருங்கிய ஒத்துழைப்பால் பருத்திவிதையின் உற்பத்தித்திறன் இருமடங்காகப் பெருகியது. விவசாயிகளுக்கு நிவாரணம் தரும் திட்டங்களை யாருக்குத் தர வேண்டும் என்பதை முதலிலேயே தீர்மானித்து குறிப்பிட்ட காலவரம்புக்குள் அளிக்க வேண்டும். இதற்கு நல்ல நிர்வாக அமைப்பும், திட்ட நிறைவேறலுக்கு இன்னின்னார்தான் பொறுப்பு என்ற நிர்வாக நடைமுறையும் அவசியம். விதர்பாவில் பிரச்னை என்ன, தீர்வு என்ன என்பதை பத்திரிகைகளின் ஆய்வுக்குழுக்கள் கண்டுபிடித்து எழுத முடியும்.

போரிலும், உள்நாட்டுக் கலவரங்களிலும் இறப்பவர்களைவிட சாலை விபத்துகளிலும் பிற நெருக்கடிகளிலும் இறப்பவர் எண்ணிக்கை நாட்டில் மிக அதிகமாக இருக்கிறது. ஒரு நாளைக்கு இப்படி இறப்பவர்கள் அல்லது காயம்படுகிறவர்களின் எண்ணிக்கை பத்து லட்சத்தை எட்டும் என்று ஒரு கணக்கெடுப்பு தெரிவிக்கிறது. இந்த 10 லட்சம் பேரைக் காப்பாற்ற ஒருங்கிணைந்த, உதவித் திட்டம் அவசியம். ஆந்திர மாநிலத்தில் அப்படியொரு திட்டம் அற்புதமாகச் செயல்படுத்தப்படுகிறது. நெருக்கடிகால மேலாண்மை-ஆய்வு என்ற அமைப்பு ஹைதராபாதைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படுகிறது.

சாலை விபத்து, பிரசவ காலத்தில் தாய்க்கும், சேய்க்கும் ஏற்படும் ஆபத்துகள், கிரிமினல் நடவடிக்கைகளால் உயிர்களுக்கு ஏற்படும் ஆபத்து, வீடுகளில், தொழிற்சாலைகளில், அலுவலகங்களில் ஏற்படும் தீ விபத்து, மின்சார விபத்து, ரசாயன விபத்து, நில நடுக்கம், ஆழிப் பேரலை, மிருகங்களால் விபத்து என்று எதுவாக இருந்தாலும் தகவல் கிடைத்த 30 நிமிஷங்களுக்குள் அந்தப் பகுதிக்கு முதலுதவி ஆம்புலன்ஸ்களுடன் சென்று சம்பந்தப்பட்டவர்களைக் காப்பாற்றி, உயர் சிகிச்சைக்குத் தாமதம் இன்றி, அமைப்பின் தகவல் தொடர்பு-வாகன வசதிகளைப் பயன்படுத்தி கொண்டுபோய்ச் சேர்ப்பதுதான் இந்த முறை. இதற்கு முதல்படியே, நெருக்கடி காலத்தில் 108 என்ற எண்ணைத் தொடர்புகொண்டு என்ன நெருக்கடி, எந்த இடம் என்ற தகவலைச்சுருக்கமாக, தெளிவாகச் சொன்னால் போதும், மற்றவற்றை அவர்கள் பார்த்துக் கொள்வார்கள்.

இந்த அமைப்பு ஏற்பட்ட பிறகு ஆந்திரத்தின் 23 மாவட்டங்களில் 380 ஆம்புலன்ஸ்கள் அவசர உதவி, மீட்புப் பணிகளில் உதவி வருகின்றன. இதுவரையில் 11,500 பேரின் உயிர் உரிய நேரத்தில் உதவிகள் அளித்து காப்பாற்றப்பட்டுள்ளது. இந்த சேவை 24 மணி நேரமும் வாரம் முழுவதும் கிடைப்பது இதன் தனிச்சிறப்பு. இச் சேவையைப் பிற மாநிலங்களுக்கும் யூனியன் பிரதேசங்களுக்கும் விரிவுபடுத்த நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. இதில் அரசும், தனியார் நிறுவனங்களும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் இணைந்து செயல்பட வேண்டும். பத்திரிகையாளர்கள் இதில் முக்கியத் தொடர்பாளர்களாக இருந்து சேவை புரியலாம்.

பத்திரிகை என்பது வாசகர்களுக்குத் தகவல்களையும் கல்வியையும் அளிப்பது. பத்திரிகைகள் நன்கு செயல்பட்டால் தேசம் வலுவடையும். பரபரப்பு செய்திக்கு பத்திரிகைகள் முக்கியத்துவம் தரக்கூடாது. துணிச்சலாக, உண்மையாக, உத்வேகம் ஊட்டுகிற வகையில் செய்திகளைத் தருவதுதான் உண்மையான பத்திரிகையியலாகும். அது தேசத்தின் பொருளாதார, அரசியல் வளர்ச்சிக்கு உதவும். பத்திரிகைகளால் இளைஞர்களின் மனத்தை மாற்ற முடியும் என்பதால், ஆக்கபூர்வமாகச் செயல்படுவது மிகமிக அவசியம்.

100 கோடி இந்தியர்களின் தேவையைக் கருத்தில்கொண்டு, பத்திரிகையியலுக்கான ராம்நாத் கோயங்கா விருதில் மேலும் 2 பிரிவுகளையும் தொடங்க வேண்டும்.

1. ஊரக வளர்ச்சிக்கு உதவும் வகையில் செய்தி தருவதற்கும்,

2. பஞ்சாயத்து ராஜ் அமைப்பை ஊக்குவிக்கும் வகையில் செயல்பட்டதற்கும்

என்று 2 விருதுகளை 2007-08 முதல் வழங்க வேண்டும்.

(ராம்நாத் கோயங்கா பெயரிலான பத்திரிகையியல் விருதுகளை வழங்கி தில்லியில் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் திங்கள்கிழமை ஆற்றிய உரையின் சுருக்கம்)

————————————————————————————————-
பெருமைக்குப் பெருமை…

“எந்தவொரு பதவிக்கும் அதற்கான பெருமையோ, அதிகாரமோ கிடையாது. அதை அலங்கரிக்கும் நபர்கள் நடந்துகொள்ளும் விதத்தால்தான் பதவிகள் பெருமைகளையும் அதிகாரங்களையும் பெறுகின்றன’ – இந்த வாசகங்கள் எந்த அளவுக்கு உண்மை என்பதை உலகத்துக்கு உணர்த்தி இருக்கிறார் இன்று தனது பதவிக்காலம் முடிந்து ஓய்வுபெறும் நமது குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம்.

இந்தியக் குடியரசின் தலைவர்களாக இருந்த ஒவ்வொருவரும் அந்தப் பதவிக்குச் சில கௌரவங்களைச் சேர்த்தார்கள். அவர்களது தனித்தன்மையால் அந்தப் பதவி மேலும் பரிமளித்தது. ஓரிரு சம்பவங்களைத் தவிர, பெரிய அளவில் இந்தியக் குடியரசின் தலைமைப் பதவி அதை அலங்கரித்தவர்களால் களங்கப்பட்டதில்லை. களங்கம் என்று அரசியல் பார்வையாளர்களால் குறிப்பிடப்படும் சம்பவங்களும்கூட, அன்றைய ஆட்சியாளர்களின் தவறால் நிகழ்ந்தவையே தவிர குடியரசுத் தலைவராக இருந்தவரால் ஏற்படவில்லை.

மிகப்பெரிய எதிர்பார்ப்புகள் எதுவும் இல்லாமல், எந்த அளவுக்கு இந்தப் பதவிக்கு கௌரவம் சேர்ப்பார் என்று தெரியாத நிலையில்தான் அந்தப் பதவியில் அமர்ந்தார் அப்துல் கலாம். ஐந்து ஆண்டுகள் கடந்து இப்போது பதவியிலிருந்து அவர் ஓய்வுபெறும்போது, இப்படி ஒரு குடியரசுத் தலைவர் இனி இந்தியாவுக்கு எப்போது கிடைக்கப்போகிறார் என்ற ஆதங்கத்தை அனைவரது இதயங்களும் வெளிப்படுத்தும் அசாதாரணப் புகழோடு விடைபெறுகிறார்.

அரசியல்வாதி அல்லாத ஒருவர், குழப்பமான அரசியல் சூழ்நிலையில் செயல்பட முடியுமா என்பதற்கு விடையளித்திருப்பதுதான் அப்துல் கலாமின் முதல் வெற்றி. அரசியல்வாதிகள் மீது அதிகரித்து வரும் அதிருப்திக்கு நடுவிலும், நாளைய இந்தியா பற்றிய நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் தனது குடியரசுத் தலைவர் பதவியைத் திறம்பட நிர்வகித்தது அப்துல் கலாமின் அடுத்த வெற்றி. இனிமையாகவும் எளிமையாகவும் உயர்ந்த பதவியில் இருப்பவர்கள் செயல்பட முடியும் என்பதற்கு எடுத்துக்காட்டாகச் செயல்பட்டு, ஓர் உண்மையான மக்களின் குடியரசுத் தலைவராக வாழ்ந்து காட்டியது அவரது மிகப்பெரிய வெற்றி.

குடியரசுத் தலைவரின் ஆணைப்படி ஒரு விஷயம் குடியரசுத் தலைவர் மாளிகையில் இதுவரை ரகசியமாகக் காக்கப்பட்டு வந்தது. கடந்த ஆண்டு அவரைச் சந்தித்து அவருடன் ஒரு சில நாள்கள் தங்கிப்போக விழைந்தனர் அவரது உறவினர்கள். குடியரசுத் தலைவரின் வேண்டுகோளின்படி, ராமேஸ்வரத்திலிருந்து புதுதில்லி ரயில் நிலையத்தில் வந்திறங்கிய அவரது 53 உறவினர்களும், குடியரசுத் தலைவர் மாளிகை ஊழியர்களால் வரவேற்கப்பட்டு, ஊர் சுற்றிக் காண்பிக்கப்பட்டு, விருந்தினர்களுக்கான எல்லா உபசரிப்புகளுடனும் கவனிக்கப்பட்டனர். ஒரு வாரம் தங்கியிருந்து விடையும் பெற்றனர்.

அவர்கள் ஊர் சுற்றிப் பார்ப்பதற்காக, ஒருமுறைகூட அரசு வாகனம் பயன்படுத்தப்படவில்லை. அதுமட்டுமல்ல, அவர்களது உணவுக்கான செலவைக்கூடத் தனது தனிப்பட்ட கணக்கில் சேர்த்து அதற்கான கட்டணத்தை வசூலித்துவிட வேண்டும் என்கிற கண்டிப்பான உத்தரவைப் பிறப்பித்திருந்தார் குடியரசுத் தலைவர். தனது சம்பளப் பணத்திலிருந்து சுமார் மூன்றரை லட்சம் ரூபாயை அரசுக் கணக்குக்கு மாற்ற உத்தரவிட்டார் ஒரு குடியரசுத் தலைவர் என்று நாளைய குடியரசுத் தலைவர் மாளிகை ஆவணங்கள் இதை வெளிப்படுத்தும்.

இரண்டே இரண்டு பெட்டிகளுடன் வெளியேற இருக்கும் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் பெருமையை இந்திய வரலாறு பக்கம் பக்கமாக எழுத இருக்கிறது. அந்த அளவுக்கு, அந்தப் பதவிக்கு அவர் பெருமை சேர்த்ததற்குக் காரணம், அவரது நேர்மையும் எளிமையும்; தனது மனதுக்குத் தவறு என்று பட்டதை தைரியமாக வெளிப்படுத்திய உள்ளத்தூய்மை. நாளைய தலைமுறைக்கு நம்பிக்கை அளித்தவர் என்பதுதான் இந்தியக் குடியரசுக்கு அப்துல் கலாமின் மிகப்பெரிய பங்களிப்பு.

இவரைத் தொடர்ந்து இனி யார் அந்தப் பதவியில் அமர்ந்தாலும், அவர்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கு ஒரு முன்னுதாரணத்தை ஏற்படுத்திச் செல்வது – அப்துல் கலாமின் தனி முத்திரை. இதுவரை குடியரசுத் தலைவராக இருந்தவர்கள் பதவி ஓய்வுபெற்ற பிறகுதான் “பாரத ரத்னா’ பட்டம் பெற்றார்கள். “பாரத ரத்னா’ குடியரசுத் தலைவர் பதவியை அலங்கரித்த முன்னுதாரணம் அப்துல் கலாமால்தான் நிகழ்ந்தது.

இவர்போல இன்னொருவர்…? வருவார், வரவேண்டும். அதுதான் அப்துல் கலாமின் எதிர்பார்ப்பும். அது பொய்த்துவிடலாகாது!

——————————————————————————————————————–
அப்துல் கலாமின் 10 கட்டளைகள்

புது தில்லி, ஜூலை 25: வளரும் நாடாக இருக்கும் இந்தியா வல்லரசாக மாற, 10 கட்டளைகளைத் தெரிவித்தார் குடியரசுத் தலைவர் பதவியிலிருந்து ஓய்வு பெறும் அப்துல் கலாம் (75).

மக்களின் தேவைகளை, கோரிக்கைகளை நிறைவேற்றுகிற வகையில் அரசு செயல்பட வேண்டும், அரசின் நடவடிக்கைகள் வெளிப்படையாக அமைய வேண்டும், லஞ்சம்-ஊழல் அறவே இல்லாத நிலைமை ஏற்பட வேண்டும் என்று அவர் விருப்பம் தெரிவித்தார்.

5 ஆண்டு பதவிக்காலம் முடிவு பெறுவதை ஒட்டி நாட்டு மக்களுக்கு செவ்வாய்க்கிழமை வானொலி, தொலைக்காட்சிகள் மூலம் நேரடியாக உரை நிகழ்த்திய கலாம் பேசியதாவது:

“நம் நாட்டின் நூறு கோடி இதயங்களையும் எண்ணங்களையும் இணைத்து, “”நம்மால் முடியும்” என்ற நம்பிக்கையை வளர்த்து, நாட்டை வல்லரசாக்குவதே என்னுடைய எஞ்சிய வாழ்நாளின் லட்சியம்.

குடியரசுத் தலைவராக நான் பதவி வகித்த ஐந்து ஆண்டுகளும் அழகானதாகவும், அடுக்கடுக்கான பல சம்பவங்கள் நிறைந்ததாயும் வேகமாகக் கழிந்தன. 2020-க்குள் இந்தியாவை வல்லரசாக்கும் நல்ல முயற்சியில் நாட்டு மக்களாகிய உங்களுடன் நானும் சேர்ந்துகொள்வேன்.

பதவி வகித்த ஒவ்வொரு நிமிஷத்தையும் நான் நன்கு ரசித்தேன். அரசியல் தலைவர்கள், வர்த்தகர்கள், நீதித்துறையைச் சேர்ந்தவர்கள், கல்வியாளர்கள், இளைஞர்கள், சிறப்புக் குழந்தைகள் என்று பலதரப்பட்டவர்களுடன் குடியரசுத் தலைவர் மாளிகையில் நான் கழித்த நாள்களை மறக்க முடியாது.

இந்தியாவை வல்லரசாக்க 10 அம்சங்களில் அரசு கவனம் செலுத்த வேண்டும்.

1. நகர்ப்புற மக்களுக்கும் கிராமப்புற மக்களுக்கும் வாழ்க்கைத் தரத்தில் வித்தியாசம் இருக்கக்கூடாது.

2. அத்தியாவசியமான பண்டங்களையும் சேவைகளையும் அனைவரும் பெறும் வகையில் சமத்துவம் நிலவ வேண்டும்.

3. மின்சாரம் உள்ளிட்ட எரிபொருள்களும், தரமான குடிநீரும் அனைவருக்கும் கிடைக்க வேண்டும்.

4. அரசு நிர்வாகமானது மக்களின் தேவைகளை, விருப்பங்களைப் புரிந்து அவற்றை நிறைவேற்றுவதாக இருக்க வேண்டும்.

5. அரசின் நிர்வாக நடவடிக்கைகள் வெளிப்படையாக இருக்க வேண்டும். யாருக்கும், எதற்கும் சலுகை காட்டப்படுவதாக மக்கள் நினைக்கக் கூடாது.

6. அரசு நிர்வாகத்தில் லஞ்சம், ஊழல், வேண்டியவர்களுக்குச் சலுகை காட்டுவது போன்ற குறைகள் இருக்கக்கூடாது.

7. எல்லா வகையிலும் வாழ்வதற்குச் சிறந்த இடம் என்ற பெயரை நமது நாடு பெற வேண்டும்.

8. நம்நாட்டு அரசியல் தலைமையையும் மற்ற துறைகளில் உள்ள தலைமையையும் நினைத்து நாம் பெருமைப்படும் விதத்தில் அவை தங்களை மேலும் சிறப்பாக மேம்படுத்திக் கொள்ள வேண்டும்.

எச்சரிக்கை: விரைவான பொருளாதார வளர்ச்சிக்காக, நமது தொன்மையான-பலதரப்பட்ட கலாசாரத்தையும் நாகரிகத்தையும் தொலைத்துவிடக்கூடாது. எதிர்கால சந்ததிக்காக அவற்றைப் பாதுகாக்கும் கடமை நமக்கு இருக்கிறது.

9. ஏழைகள் எந்த அளவுக்கு முன்னேறியிருக்கிறார்கள் என்பதை அடிப்படையாகக் கொண்டுதான் நமது தேசத்தின் செல்வச் செழிப்பை நாம் கணக்கிட வேண்டும்.

10. மொத்த பொருளாதார உற்பத்தி அளவு எப்படி உயர்ந்திருக்கிறது, மக்களின் வாழ்க்கைத்தரம் எப்படி மேம்பட்டிருக்கிறது, பழைய மரபுகளை, பண்புகளை நாம் இன்னமும் எப்படி கட்டிக்காத்து வருகிறோம் என்பதையும் கணக்கிட வேண்டும்.

நம் நாட்டிலிருந்தே வறுமையை ஒழிக்க வேண்டும், படிக்காதவர்களே இல்லை என்ற வகையில் சமுதாயத்தை முன்னேற்ற வேண்டும், பெண்களுக்கும்-குழந்தைகளுக்கும் குற்றம் இழைக்கும் கொடுமைகள் மறைய வேண்டும்.

திறமைசாலிகளான அறிஞர்கள், அறிவியலாளர்கள், முதலீட்டாளர்கள் இந்தியாவைத் தேடிவரும் வகையில் நம் நாடு முன்னேற வேண்டும்.

அனைவருக்கும் கல்வி: சமூக, பொருளாதார வித்தியாசம் பாராமல் தகுதி வாய்ந்த எல்லா மாணவர்களுக்கும் அவர்கள் விரும்பும் கல்வி பயில வாய்ப்பு தரப்பட வேண்டும்.

அனைவருக்கும் சுகாதார வசதிகள் கிடைக்க வேண்டும்.

வேளாண்மை, தொழில், சேவைத்துறை ஆகியவற்றுக்கிடையே ஒருங்கிணைந்த ஒத்துழைப்பு ஏற்பட்டு நமது நாட்டின் முன்னேற்றத்துக்கு உறுதி செய்ய வேண்டும்.

நாட்டின் 6 லட்சம் கிராமங்களுக்கும் அதிகாரம் அளிப்பதும், 7 ஆயிரம் மையங்களில் நகர்ப்புற வசதிகளை, கிராமங்களுக்கே கொண்டு செல்லும் மையங்களை (புரா) நிறுவதலும் வளர்ச்சிக்கு வழி வகுக்கும்.

முப்படையினர் தியாகம்: நமது ராணுவத்தின் முப்படையினரும் இரவிலும் கண்விழித்து நாட்டைப் பாதுகாப்பதால், நாமெல்லாம் கண்மூடி நிம்மதியாகத் தூங்க முடிகிறது.

சியாசின் பனி முகட்டில் குமார் முனை என்ற இடத்துக்குச் சென்றேன்; சிந்துதர்சக் நீர்மூழ்கிக் கப்பலில் கடலுக்கடியில் சாகசப் பயணம் மேற்கொண்டேன். “”சுகோய்-30” ரக போர் விமானத்தில் படுவேகமாகப் பறந்து சென்றேன். இந்த 3 அனுபவங்கள் மூலம் நம்முடைய ராணுவ வீரர்களின் அறிவு, திறமை, உள்ள உறுதி, தியாகம், வீரம் ஆகியவற்றை நன்கு உணர்ந்துகொண்டேன்.

ஆப்பிரிக்க தொலைத்தகவல் தொடர்பு: ஆப்பிரிக்க நாடுகளின் தொலைதூரப் பகுதிக்கும் தகவல்-தொழில்நுட்பத்தின் நவீன பலன்கள் கிடைக்க, “”அனைத்து ஆப்பிரிக்க ஈ நெட்வொர்க்” என்ற இணையதள வசதியைச் செய்துதரும் இந்திய அரசின் திட்டம் மகோன்னதமானது.

இதன் மூலம் இந்தியாவின் 7 பல்கலைக்கழகங்களும் ஆப்பிரிக்காவின் 5 பல்கலைக்கழகங்களும், 17 சூப்பர்-ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைகளும், 53 தொலை-மருத்துவ மையங்களும், 53 தொலைக்கல்வி நிலையங்களும் இணைக்கப்படும்.

இந்தியாவின் பன்முகத்தன்மையும், கலாசார வேற்றுமையிலும் ஒற்றுமை காணும் மக்களின் அருங்குணமும் எனக்குள் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

25 வயதுக்குக் குறைவான 54 கோடி இளைஞர்கள் வாழும் ஒரே நாடு இந்தியாதான்; இப்பூவுலகில் மிகப்பெரிய சொத்தாக இதையே கருதுகிறேன். இவர்களுக்கு நல்ல கல்வி, தலைமைப்பண்பு ஆகியவற்றைக் கற்றுக்கொடுத்து, நல்ல தலைவர்களாக உருவாக்க வேண்டும்’ என்றார் கலாம்.

Posted in 10, Abdul Kalaam, Abdul Kalam, Analysis, APJ, APJ Abdul Kalaam, APJ Abdul Kalam, Attention, Awards, Bharat Ratna, Bharath, Bharath Rathna, Bharath Ratna, Biosketch, Dev, Development, Education, Excellence, Express, Faces, Freedom, Future, Goenka, Honest, Honesty, Independence, Indian Express, Integrity, Journal, journalism, journalist, Journalists, Kalam, Mag, magazine, Media, MSM, Nation, News, Newspaper, Op-Ed, Opportunity, Path, people, Plan, Planning, Politician, Politics, President, Principle, Prizes, Profits, Ramnath, Ramnath Goenka, Ratna, Reporter, responsibility, revenue, RNG, sales, Sensation, Sensationalism, solutions, Suggestions | Leave a Comment »

APJ Abdul Kalam – Why two party system will not work for India? (Op-ed)

Posted by Snapjudge மேல் மே 30, 2007

விபரீத யோசனை

சிப்பாய் புரட்சி ஏற்பட்ட 150-வது ஆண்டு விழாவையொட்டி நாடாளுமன்றத்தின் கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றிய குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் எழுப்பிய ஒரு கருத்து, அரசியல் வட்டாரங்களில் சலசலப்பை ஏற்படுத்தி இருப்பதில் வியப்பில்லை.

பிரிட்டன் மற்றும் அமெரிக்கா போன்ற மேலைநாடுகளைப் போல் இந்தியாவிலும் இரண்டு கட்சி ஆட்சி முறை ஏற்படுவது நல்லது என்பதுதான் அவர் கூறியிருக்கும் கருத்து. சாதாரணமாக அரசியல் சம்பந்தப்பட்ட விஷயங்களில் கருத்துக் கூறாமல் இருக்கும் குடியரசுத் தலைவர், தனது பதவிக்காலம் முடிய இருக்கும் நேரத்தில் இப்படியொரு சர்ச்சையைக் கிளப்ப வேண்டிய அவசியம் தான் என்ன?

மேலைநாடுகளைப் பொருத்தவரை, நமது நாட்டில் இருப்பது போல இந்த அளவு

  • சாதி,
  • மத,
  • மொழி,
  • சமுதாய,
  • பொருளாதார ரீதியிலான பிரிவினைகள் கிடையாது. அதுமட்டுமல்ல, ஒரு சிலர் தவிர மற்ற அனைவருமே அடிப்படைக் கல்வி கற்றவர்களாக இருப்பதுடன், பொருளாதார ரீதியில் அடிப்படை வருமானம் உடையவர்களாகவும் இருக்கின்றனர்.

இந்தியாவைப் பொருத்தவரை, அத்தனை பிரிவினரின் குரலையும், தேவைகளையும் பிரதிபலிக்கவும், அவர்களது உணர்வுகளை ஆட்சியாளர்களின் கவனத்துக்கு எடுத்துச் செல்லவும், தேசியக் கட்சிகளால் இயலாமல் போனதன் விளைவுதான் இத்தனை கட்சிகளும், மாநிலக் கட்சிகளின் வளர்ச்சியும்.

ஒட்டுமொத்த தேசத்தின் நலனைக் கருத்தில் கொண்டு செயல்படும்போது சில பல சிறிய பிரிவினரின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற முடியாமல் போவது சகஜம். பல சந்தர்ப்பங்களில், சில பிரிவினரின் எதிர்ப்பார்ப்புகளும் உணர்வுகளும் புரிந்து கொள்ளப்படாமல் இருக்கும் சாத்தியமும் உண்டு. அதன் விளைவுதான் பல்வேறு அரசியல் கட்சிகள். பல கட்சி ஆட்சிமுறையில், குறிப்பாக நாடாளுமன்ற ஆட்சி முறையில் இது தவிர்க்க முடியாத நிர்பந்தம்.

பிரிட்டன் போன்ற மக்கள்தொகை குறைந்த, பொருளாதார மற்றும் கல்வி ரீதியில் வளர்ச்சி அடைந்த நாடுகளிலும், அதிபர் முறை ஆட்சி அமைப்புள்ள அமெரிக்கா போன்ற நாடுகளிலும் நடைமுறையில் இருக்கும் இரு கட்சி ஆட்சிமுறை என்பது இந்தியாவைப் போன்ற மக்கள்தொகை அதிகமுள்ள, சமுதாய, மொழிவாரிப் பிரிவினைகளை உள்ளடக்கிய நாடுகளுக்குப் பொருந்தாது என்பது அரசியல் நிர்ணய சபை விவாதத்தின்போதே ஏற்றுக் கொள்ளப்பட்ட விஷயம்.

இந்த இரு கட்சி ஆட்சி முறையில் இன்னோர் அபாயமும் உண்டு. சுயநல சக்திகள் விரும்பினால் இரண்டு கட்சிகளையும் விலைக்கு வாங்கி ஜனநாயகத்தையே தனது கைக்குள் போட்டுக்கொண்டுவிட முடியும். அதுவும் உலகமயமாக்கல், தாராளமயமாக்கல் என்கிற நோக்கத்துடன் நடைமுறைப்படுத்தப்படும் பொருளாதார சீர்திருத்தம், இதுபோன்ற விஷம சக்திகளுக்கு இரண்டு கட்சி ஆட்சி முறையில் பூரண சுதந்திரத்தை அளித்துவிடும்.

இந்தியப் பொதுமக்கள் அதிபுத்திசாலிகள். எந்த நேரத்தில் தங்களுக்கு எது வேண்டும் என்பதைத் தீர்மானித்துத் தேர்ந்தெடுப்பதில் நமது வாக்காளர்கள் கெட்டிக்காரர்கள். இரண்டு கட்சிக் கூட்டணிக்கு தேசிய அளவில் வழிகோலிய அவர்கள், இரண்டு கட்சி ஆட்சியைப் பல மாநிலங்களில் ஏற்றுக்கொள்ளவும் தயங்கவில்லை.

இரண்டு கட்சி ஆட்சி முறை அதுவாகவே உருவாக வேண்டும். உருவாக்கப்படக் கூடாது. அப்படி உருவாக்கப்பட்டால் அது இந்திய ஜனநாயகத்தையும், பொருளாதாரத்தையும், ஒரு சிலரின் கஜானாவிற்குள் அடகு வைத்துவிடும். பல்வேறு பிரிவினரின் உணர்வுகளைப் பிரதிபலிக்காத ஜனநாயகமாக இந்தியா மாறிவிடும். அதன் விளைவு பிரிவினைவாதத்திற்கு வழிகோலும். அதனால் வேண்டாமே இப்போது இரண்டு கட்சி ஆட்சி முறை!

Posted in ADMK, APJ Abdul Kalam, Assembly, BJP, BSP, Canada, Caste, Citizen, Communism, Communist, Communist parties, Communist Party of India, Communists, Community, Cong (I), Cong(I), Congress, Congress (I), Congress Party, Congress(I), Conservative, CPI, CPI (M), CPI(M), CPI(ML), CPI-ML, Democracy, Democrats, Dems, Disintegration, DMK, Economy, Election, England, Federal, Foreign, France, Freedom, Globalization, Govt, Identity, Independence, India, Integration, Italy, Janata Dal, Janata Dal (Secular), Janata Dal (United), Janatha, Janatha Dal, Janatha Party, Kalam, Labor, Language, Liberal, LokSaba, Minister, MP, National, Op-Ed, parliament, Party, PM, Politics, Polls, Population, President, Quebec, Region, Religion, Reps, Republic, Republicans, Rule, Sect, SP, Speaker, Tory, UK, USA, Vote | 4 Comments »

Amitabh Bhachan to contest for Indian President Election?

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 12, 2007

ஜனாதிபதி பதவிக்கு அமிதாப்பச்சன் போட்டியா?

புதுடெல்லி, பிப். 12-

ஜனாதிபதி அப்துல்கலாமின் பதவி காலம் முடிகிறது. எனவே ஜுன் மாதத்துக் குள் புதிய ஜனாதிபதி தேர்ந் தெடுக்கப்பட வேண்டும். அப்துல் கலாமையே மீண்டும் ஜனாதிபதி பதவிக்கு நிறுத்த சில கட்சிகள் விரும்பு கின்றன. ஆனால் அவர் 2-வது முறை யாக ஜனாதிபதியாக இருக்க விரும்பவில்லை.

காங்கிரஸ் சார்பில் மத்திய மந்திரி சுஷில்குமார் ஷிண்டே, முன்னாள் மத்திய மந்திரி கரண்சிங் இருவரில் ஒருவரை நிறுத்த முடிவு செய்துள்ளது. அப்துல்கலாம் மீண்டும் போட்டியிட பாரதீய ஜனதா கூட்டணி வற்புறுத்தி வருகிறது. அவர் நிற்காவிட்டால் தற்போதைய துணை ஜனாதிபதி பைரோன்சிங் ஷேகாவத்தை நிறுத்த பாரதீய ஜனதா விரும்புகிறது.

சமாஜ்வாடி கட்சி நடிகர் அமிதாப்பச்சனை நிறுத்த விரும்புகிறது. தெலுங்கு தேசம், அ.தி.மு.க. கட்சிகளின் ஆதர வுடன் நிறுத்த அவர்கள் காயை நகர்த்தி வருகின்றனர். நான் அரசியலுக்கு ஏற்றவன் அல்ல என்று ஏற்கனவே அமி தாப்பச்சன் கூறி இருந்தார். எனவே அவர் இந்த பதவிக்கு போட்டியிட விரும்புவாராப என்று தெரியவில்லை.

கம்ïனிஸ்டு கட்சிகள் சபாநாயகர் சோம்நாத் சட் டர்ஜியை நிறுத்த விரும்பு கின்றன. இதற்கு காங்கிரசின் ஆதரவை பெறவே முயற்சித்து வருகின்றனர். ஆனால் கம்ï னிஸ்டு கட்சிக்கு துணை ஜனாதிபதி பதவியை வழங்க லாம் என காங்கிரஸ் நினைக் கிறது.

நாளை பஞ்சாப்பிலும், அடுத்து மே மாதத்தில் உத்தர பிரதேசத்திலும் சட்டமன்ற தேர்தல் நடக்க இருக்கின்றன. ஜனாதிபதி தேர்தலுக்கு எம்.எல்.ஏ.க்களும் ஓட்டு போட வேண்டும் என்பதால் தேர்தல் முடிவுக்கு பிறகு கட்சிகள் இதுபற்றி முடிவு எடுக்க உள்ளன.

Dinamani Editorial (Feb 13, 2007)

மீண்டும் கலாம்

குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் பதவிக்காலம் ஜூலை மாதத்துடன் முடிவடைய உள்ள நிலையில் அடுத்து இப் பதவிக்கான வேட்பாளராக யார் நிறுத்தப்படலாம் என்பது பற்றி ஊகங்கள் வெளிவரத் தொடங்கியுள்ளன. இப் பதவிக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் கரண்சிங், மக்களவைத் தலைவர் சோம்நாத் சட்டர்ஜி, குடியரசுத் துணைத் தலைவர் ஷெகாவத் ஆகியோரின் பெயர்கள் அடிபடுவதாகச் செய்திகள் கூறுகின்றன.

குடியரசுத் துணைத் தலைவராக இருந்து வருபவரை குடியரசுத் தலைவர் பதவிக்கு நிறுத்துவது ஒரு சம்பிரதாயமாக இருந்து வந்த காலம் உண்டு. கே.ஆர். நாராயணன், சங்கர்தயாள் சர்மா, ஆர். வெங்கட்ராமன் போன்றவர்கள் இவ்விதம் குடியரசுத் தலைவர்களாக ஆனவர்களே. எனினும் மத்தியிலும் பெருவாரியான மாநிலங்களிலும் காங்கிரஸின் ஆதிக்கம் நிலவிய காலங்களில் இதெல்லாம் சாத்தியமாக இருந்தது. இப்போது அந்த நிலை இல்லை. காங்கிரஸ் கட்சியும், பிரதான எதிர்க்கட்சியான பாஜகவும் சேர்ந்து யாரை ஆதரிக்கிறார்களோ அவர்தான் குடியரசுத் தலைவராக முடியும்.

குடியரசுத் தலைவர் தேர்தலில் நாடாளுமன்ற உறுப்பினர்களும் மாநிலங்களின் சட்டமன்ற உறுப்பினர்களும் வாக்களிக்கிறார்கள். எனவே காங்கிரஸ் தனது சொந்த பலத்தை நம்பி யாரையும் குடியரசுத் தலைவர் பதவிக்கு வேட்பாளராக நிறுத்தி வெற்றி பெறச் செய்ய இயலாது.

இப் பின்னணியில் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமை இரண்டாம் முறையாக மீண்டும் குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கலாம் என மக்களின் பல தரப்புகளில் இருந்தும் கோரிக்கைகள் எழுந்துள்ளன. இணையதளத்தில் இதற்கான தீவிர இயக்கம் நடந்து வருகிறது. இதுதொடர்பான கருத்துக்கணிப்புகளில் அப்துல் கலாமையே மீண்டும் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று பெருவாரியானவர்கள் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.

நாடு இப்போது இருக்கின்ற தருணத்தில் குடியரசுத் தலைவர் பதவிக்கு அப்துல் கலாமைவிடப் பொருத்தமானவர் வேறு யாரும் இருக்க முடியாது எனலாம். கவிஞர், எழுத்தாளர், சிந்தனையாளர், விஞ்ஞானி, அப்பழுக்கற்றவர், எந்த அரசியல் சார்பும் பெற்றிராதவர் என பல பரிமாணங்களைக் கொண்ட அப்துல் கலாம், குடியரசுத் தலைவர் பதவிக்குப் புதிய இலக்கணம் வகுத்துள்ளார். குடியரசுத் தலைவர் பதவி என்பது அலங்காரப் பதவியாகவும் அப் பதவியில் உள்ளவரை யாரும் எளிதில் நெருங்க முடியாது என்றும் இருந்த காலம் உண்டு. ஆனால் “அறிவியல் முனிவர்’ என்று வர்ணிக்கத்தக்க அப்துல் கலாம் குடியரசுத் தலைவர் மாளிகையில் இருந்து இறங்கி வந்து மக்களுடன் நெருங்கிப் பழகி வருபவர். குழந்தைகளின் அபிமானத்தைப் பெற்றவர். இளைஞர்கள் மனத்தில் லட்சியக் கனவைத் தோற்றுவித்து அவர்களிடையே எழுச்சியை உண்டாக்கி வருபவர்.

அப்துல் கலாமை மீண்டும் குடியரசுத் தலைவர் ஆக்குவதை பாஜக விரும்புவதாகத் தெரிகிறது. கடந்த டிசம்பரில் பாஜக தலைவர்கள் அப்துல் கலாமைச் சந்தித்து அவர் மீண்டும் போட்டியிடுவதானால் தங்களது ஆதரவு உண்டு என்று தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. காங்கிரஸ் கட்சி இக் கட்டத்தில் தங்கள் நிலையை அறிவிக்க விரும்பவில்லை என்று தோன்றுகிறது. நீட்டிய காகிதத்தில் கையெழுத்துப் போடுகிறவர் அல்ல என்று அப்துல் கலாம் ஒன்றுக்கும் மேற்பட்ட தடவைகள் நிரூபித்துள்ளதால் அவரை மீண்டும் நிறுத்துவதில் காங்கிரஸýக்குத் தயக்கம் இருக்கலாம். ஆனால் குடியரசுத் தலைவர் தேர்தல் முடிவை நிர்ணயிப்பதில் காங்கிரஸ், பாஜக அல்லாத கட்சிகளுக்கும் போதுமான பலம் உள்ளது.

அந்தவகையில் தமிழ்நாட்டில் உள்ள கட்சிகள் அனைத்தும் மீண்டும் அப்துல் கலாமை தேர்ந்தெடுப்பதில் முனைப்புக் காட்ட வேண்டும். அப்துல் கலாம் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் என்பதற்காக அல்ல. அவர் இந்தியாவின் மாமனிதர் என்பதற்காக.

Posted in Affiliation, Amar Singh, Amitabh, Amitabh Bachaan, Amitabh Bhachan, APJ Abdul Kalam, Assembly, Author, BJP, Byron Singh Shekavat, Byronsingh Shekawath, Communist, Cong (I), Congress, Congress (I), Congress Party, CPI, CPI (M), Election, Indira Congress, Kalam, Karan Singh, KR Narayan, Lok Sabha, Marxist, Marxist Communist, MLA, MP, Mulayam, Mulayam Singh Yadav, Politics, President, President Election, Punjab, R Venkatraman, scientist, Shankar Dayal Sharma, SJP, Somnath Chatterjee, Sushil Kumar Shinde, Thinker, UP, Uttar Pradesh, vice-president | Leave a Comment »

Zee gets notice for arrest warrants against President

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 8, 2007

“ஜீ நியூஸ்’ தொலைக்காட்சி, நிருபருக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

புது தில்லி, பிப். 8: கீழ்நீதிமன்றத்தில் லஞ்சம் கொடுத்து குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் மற்றும் நீதிபதிகள் ஆகியோருக்கு எதிராக வாரண்ட் பிறப்பித்தது தொடர்பான வழக்கில் ஜீ நியூஸ் மற்றும் அதன் நிருபர் விஜய் சேகர் ஆகியோருக்கு உச்ச நீதிமன்றம் புதன்கிழமை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

குஜராத்தில் கீழ்நீதிமன்றங்களில் நடைபெறுவதாகக் கூறப்படும் ஊழல்கள் குறித்து வெளிப்படுத்த, ஜோடிக்கப்பட்ட ஒரு வழக்கில், ஆமதாபாத் கீழ்நீதிமன்றத்தில் லஞ்சம் கொடுத்து குடியரசுத் தலைவர் அப்துல் கலாம், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி வி.என்.கரே, நீதிபதி பி.பி.சிங் மற்றும் உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் ஆர்.கே.ஜெயின் ஆகியோருக்கு வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. இதுதொடர்பான செய்தியை ஜீ நியூஸ் தொலைக்காட்சி ஒளிபரப்பியது.

மேலும் லஞ்சம் கொடுத்து யார் மீது வேண்டுமானால் ஜாமீனில் வெளிவரமுடியாத வாரண்ட் பிறப்பிக்க முடியும் என்பது தொடர்பான ஒரு ஜோடிக்கப்பட்ட செய்தியை கடந்த 2004-ல் இந்த தொலைக்காட்சி ஒளிபரப்பியது.

இந்த சம்பவம் குறித்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் தலைமையிலான மூன்று பேரடங்கிய டிவிஷன் பெஞ்ச் விசாரணை நடத்தியது. “உங்கள் மீது ஏன் விசாரணை நடத்தக்கூடாது. இதுதொடர்பாக அனுப்பப்பட்டுள்ள நோட்டீஸýக்கு நீங்கள் விளக்கம் தரவேண்டும்’ என்று ஜீ நியூஸ் மற்றும் அதன் நிருபருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

Posted in APJ Abdul Kalam, Bribery, Bribes, Corruption, Counsel, Courts, Government, Gujarat, High Court, journalism, journalist, Judge, Judiciary, Jury, Justice, kickbacks, Law, Magistrates, Media, Order, Power, President, Publicity, sting operation, Stunt, Summons, TV, Vijay Shekar, Warrant, Zee, Zee News | Leave a Comment »

Justice KG Balakrishnan sworn-in as Chief Justice of India

Posted by Snapjudge மேல் ஜனவரி 16, 2007

உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியாக பதவி ஏற்றார் கே.ஜி. பாலகிருஷ்ணன்

புது தில்லி, ஜன. 15: உச்ச நீதிமன்றத்தின் 37-வது தலைமை நீதிபதியாக கே.ஜி. பாலகிருஷ்ணன் (61) பதவியேற்றார்.

குடியரசுத் தலைவர் மாளிகையின் அசோகா அரங்கில் ஞாயிற்றுக்கிழமை காலை இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவருக்குப் பதவிப் பிரமாணம், ரகசிய காப்புப் பிரமாணம் செய்துவைத்தார்.

உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியாகப் பதவி ஏற்கும் முதல் தலித் இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் 2010 மே 12-ம் தேதி வரை இப்பதவி வகிப்பார். சமீபத்திய ஆண்டுகளில் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியாக அதிக ஆண்டுகள் பதவியில் இருக்கப் போவது இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

கேரளத்தில் பிறந்து, சட்டம் பயின்று வழக்கறிஞராகத் தொழில் தொடங்கி பிறகு படிப்படியாக உயர்ந்து மாவட்ட முன்சீப், உயர் நீதிமன்ற நீதிபதி, தமிழ்நாடு, குஜராத் உயர் நீதிமன்றங்களின் தலைமை நீதிபதி, உச்ச நீதிமன்ற நீதிபதியானவர் பாலகிருஷ்ணன். நண்பர்கள் இவரை பாலா என்றே செல்லமாக அழைப்பர்.

பதவியேற்பு விழாவைக் காண அவருடைய தாயார் கே.எம். சாரதா சக்கர நாற்காலியில் வந்திருந்தார். பாலகிருஷ்ணனின் மனைவி நிர்மலாவும் உடன் இருந்தார்.

குடியரசு துணைத் தலைவர் பைரோன் சிங் ஷெகாவத், மக்களவைத் தலைவர் சோம்நாத் சட்டர்ஜி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, மத்திய அமைச்சர்கள் சிவராஜ் பாட்டீல், ஏ.கே. அந்தோனி, லாலு பிரசாத், ஹன்ஸ்ராஜ் பரத்வாஜ், சுசீல்குமார் ஷிண்டே, ராம்விலாஸ் பாஸ்வான், மீரா குமார், கபில் சிபல், ஓய்வுபெறும் கே.என். சபர்வால் மற்றும் ஏற்கெனவே ஓய்வுபெற்ற நீதிபதிகள் கே.என். சிங், ஏ.எம். அகமதி, ஏ.எஸ். ஆனந்த், வி.என். கரே, ஆர்.சி. லஹோட்டி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

வாழ்க்கைக் குறிப்பு: கேரளத்தின் கோட்டயம் மாவட்டத்தின் தாலயோலபரம்பு கிராமத்தில் 1945 மே 12-ம் தேதி பிறந்தார். எர்ணாகுளம் மகாராஜா சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்றார். கொச்சியில் 1968 மார்ச் 16-ம் தேதி வழக்கறிஞராகப் பதிவு செய்துகொண்டு பணியைத் தொடங்கினார்.

1973 ஜனவரி 10-ல் கேரள நீதித்துறையில் முன்சீஃபாக நியமிக்கப்பட்டார். 1982 ஜூலை 23-ல் உதவி செஷன்ஸ் நீதிபதியாகப் பதவி உயர்வு பெற்றார். பிறகு கேரள உயர் நீதிமன்றத்தின் துணை பதிவாளராகப் பணியாற்றினார். 1985 செப்டம்பர் 26-ல் கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். 1986 ஜூலை 11-ல் நிரந்தரமாக்கப்பட்டார்.

குஜராத் மாநில உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியாக 1998 ஜூலை 16-ல் நியமிக்கப்பட்டார்.

பிறகு, சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியாக 1999 செப்டம்பர் 9-ல் நியமிக்கப்பட்டார்.

நீதித்துறை- நாடாளுமன்றம் இடையே நெருங்கிய உறவு ஆபத்தானது: ஓய்வுபெறும் தலைமை நீதிபதி சபர்வால் கருத்து

புதுதில்லி, ஜன. 14: நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களுக்கும் நீதித்துறைக்கும் இடையே நெருங்கிய உறவு இருப்பதும் ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தும். நீதிமன்றங்கள் சுதந்திரமாகத் தீர்ப்பு வழங்குவதைப் பாதிக்கும் என்று கருத்துத் தெரிவித்தார் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஒய்கே. சபர்வால்.

சனிக்கிழமையுடன் பதவி ஓய்வு பெறும் நிலையில், செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார் சபர்வால். நீதித்துறைக்கும் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களுக்கும் இடையே மோதல் போக்கு அதிகரித்து வருவதாகக் கூறப்படுவது குறித்துக் கேட்டதற்கு அவர் மேற்கண்டவாறு பதிலளித்தார். விவரம்:

தலைமை நீதிபதியாகப் பதவி வகித்த காலத்தில், பல பிரச்சினைகளைச் சந்தித்து தீர்வு கண்டிருக்கிறேன். திருப்தியுடன் ஓய்வு பெறுகிறேன்.

நீதி வழங்குவதில் காலதாமதம் இருக்கக் கூடாது என்பது எனது கருத்து. அதை நான் தொடர்ந்து வலியுறுத்தி வந்திருக்கிறேன். கீழ் நீதிமன்றங்களிலும், உயர் நீதிமன்றங்களிலும் வழக்குகள் பத்து ஆண்டுகள் கூட தேங்கிக் கிடக்கின்றன. இருபது ஆண்டுகளைக் கடந்து, நிலுவையில் உள்ள வழக்குகளும் இருக்கின்றன. அதனால், நீதித்துறையில் பல்வேறு சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும்.

அரசியல்வாதிகள், அதிகாரிகள் போன்றோருக்கு எதிராக உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க, தனிப்பிரிவு அமைக்க வேண்டும் என உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகளுக்குக் கூட கடிதம் எழுதியிருக்கிறேன்.

பிறழ் சாட்சிகளால் வழக்குகள் மேலும் காலதாமதமடைவதைத் தடுக்கும் வகையில், சாட்சிகளின் வாக்குமூலங்களைப் பதிவு செய்ய வேண்டும். அவ்வாறு செய்வதன் மூலம், தங்களது முந்தைய நிலையிலிருந்து மாறும் சாட்சிகள் மீது நடவடிக்கை எடுக்க முடியும்.

வாக்குமூலங்களை ஒளி, ஒலிப்பதிவு செய்ய கூடுதல் மாஜிஸ்திரேட்டுகள், நீதிபதிகள் நியமனம் செய்யப்பட்ட வேண்டும். நீதிமன்றங்களுக்கு போதிய கட்டமைப்பு வசதிகளைச் செய்துதர வேண்டும்.

நீதித்துறைக்கு நிதி சுதந்திரம் அளிக்கப்பட வேண்டும். அப்போதுதான், நீதித்துறை முழுத்திறமையுடன் செயல்பட முடியும். வேறு துறைகளில் ஒதுக்கீட்டைக் குறைத்துக் கொண்டு, நீதித்துறைக்கான ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும்.

புதிய தலைமை நீதிபதியாகப் பொறுப்பேற்க உள்ள கே.ஜி. பாலகிருஷ்ணன், மிகவும் திறமையான நீதிபதி. ஏற்கெனவே துவக்கப்பட்ட திட்டங்களை அவர் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வார் என்பதில் சந்தேகமில்லை.

நீதித்துறையில் கறுப்பு ஆடுகள்: நீதித்துறையில் ஊழல் இன்னொரு கவலை தரக்கூடிய விஷயம். எல்லோர் மீதும் களங்கம் இல்லாவிட்டாலும், ஒரு சில கறுப்பு ஆடுகளும் உள்ளன. அப்படிப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதில் இருவேறு கருத்துக்கு இடமில்லை.

நீதித்துறைக்கும் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களுக்கும் இடையே மோதல் அதிகரித்து வருவதாகக் கருத்து நிலவுகிறது. ஒவ்வொரு துறையும் தங்கள் அதிகார வரம்புக்கு உள்பட்டு பணியாற்றினால் எந்த மோதலும் வர வாய்ப்பில்லை. தற்போதைய நிலையில் எந்த உரசலும் இருப்பதாக நான் கருதவில்லை.

நீதிபதிகள் நியமனத்தில் தற்போது வெளிப்படையான அணுகுமுறை உள்ளது.

ஊடகங்கள், ஊழலை அம்பலப்படுத்துவதில் தவறில்லை. அதே நேரத்தில், அது நீதிபதிகளின் தீர்ப்பைப் பாதிக்கும் வகையில் இருந்தால், அதைவிட மோசமானது ஏதும் இருக்க முடியாது.

எந்த ஒரு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவருக்கும் சட்ட உதவி மறுக்கப்படக்கூடாது. வழக்கறிஞர்கள் தனிப்பட்ட கருத்துக்கும், உணர்வுகளுக்கும் மதிப்பளிக்காமல், யாரும் சட்ட உதவி கிடைக்காமல் தனிமைப்படுத்தக்கூடாது என்ற உணர்வுடன் தொழிலை மட்டும் கவனத்தில் கொண்டு பணியாற்ற வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன் என்றார் சபர்வால்.

Posted in APJ Abdul Kalam, Biography, Biosketch, Chief Justice of India, Corruption, Dalit, election commission, Ernakulam, Government Law College, Judge, Judiciary, Jury, Justice, K J Gopinathan, Kerala, Kerala High Court, KG Balakrishnan, KM Saradha, Konakuppakattil Gopinathan Balakrishnan, Kottayam, Law, Legislature, Lifesketch, Newsmakers, Nirmala, Order, people, Supreme Court | Leave a Comment »

Sakshat – Pilot portal project by HRD for Educational Needs

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 30, 2006

இலவச கல்வி இணையதளம்: தில்லியில் கலாம் தொடங்கி வைத்தார்

புதுதில்லி, அக். 31: மாணவர்களின் கல்வித் தேவைகள் அனைத்தையும் ஓரே குடையின் கீழ் வழங்கும், ஒருங்கிணைந்த இலவச இணைய தளத்தை குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் திங்கள்கிழமை தொடக்கிவைத்தார்.

மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தின் முயற்சியில் உருவாகியுள்ள இந்த இணைய தளத்துக்கு “சாட்சாத்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. தில்லியில் நடந்த இந்த விழாவில் கலாம் பேசியது:

நம் நாட்டில் இத்தகைய இணைய தளம் உருவாக்கப்படுவது இதுவே முதல்முறை. இம்முயற்சி வெற்றிபெற வேண்டுமானால், மக்களுக்கு இன்டர்நெர் இணைப்பு இலவசமாகக் கிடைக்கவேண்டும்.

நாட்டில் கல்வி கற்பிக்கப்படும் முறையை மாற்றி அமைப்பதற்காக தொடக்க முயற்சி இது. இந்த இணைய தளத்தின் உள்ளடக்கத்தை பல்கலைக் கழக மானியக் குழு, இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக் கழகம், அகில இந்திய தொழில் நுட்பக் கழகம் போன்ற கல்வி அமைப்புகள் உருவாக்கியுள்ளன.

21-ம் நூற்றாண்டின் அறிவு சார் தேவைகளைப் பூர்த்தி செய்ய, நன்கு படித்த இளைஞர்கள் அதிக எண்ணிக்கையில் நாட்டுக்குத் தேவைப்படுகின்றனர். அவர்கள் கல்வி பெற உதவுவதோடு, சர்வதேச அளவில் போட்டியிட உதவும் தொழில் திறனையும் அவர்களுக்கு ஏற்படுத்தித் தருவது குறித்தும் சாட்சாத் சிந்திக்க வேண்டும் என்றார் அவர்.

Posted in AICTE, APJ Abdul Kalam, CBSE, digital library, digital repository, e-books, Education, HRD, Human Resources, IGNOU, IISc, IIT, NCERT, portal, Sakshat, UGC | Leave a Comment »

Sonia wants Madhya Pradesh govt employees out of RSS

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 29, 2006

ஆர்.எஸ்.எஸ். நடவடிக்கையில் பங்கேற்க ம.பி. அரசு ஊழியர்களுக்கு அனுமதியை ஆட்சேபித்து கலாமுக்கு சோனியா கடிதம்

புதுதில்லி, செப்.29:ஆர்.எஸ்.எஸ். நடவடிக்கையில் மத்தியப் பிரதேச அரசு ஊழியர்கள் பங்கேற்க அந்த மாநில அரசு அனுமதியளித்துள்ளதை எதிர்த்து குடியரசுத் தலைவர் அப்துல் கலாமுக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கடிதம் எழுதியுள்ளார். ம.பி. அரசின் இது தொடர்பான உத்தரவை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.

சோனியா காந்தியின் இக்கடிதத்தை காங்கிரஸ் மூத்த தலைவர் மோதிலால் வோரா தலைமையிலான குழு குடியரசுத் தலைவர் அப்துல் கலாமிடம் வியாழக்கிழமை அளித்தது.

கடிதத்தில் சோனியா கூறியிருப்பதாவது:

மத்தியப் பிரதேச அரசின் நடவடிக்கை அரசமைப்பு சட்டத்துக்கு முற்றிலும் எதிரானது. மாநில ஆளுநருக்கு தெரியாமலேயே அரசு இந்த விஷயத்தில் முடிவு எடுத்துள்ளது.

இது தேசநலனை கருத்தில் கொண்டு எடுக்கப்பட்ட முடிவு அல்ல. முறையற்ற சட்டவிரோதமான ம.பி.அரசின் உத்தரவை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.

குஜராத் மாநில அரசும் இதே போன்ற உத்தரவை கடந்த 2000-ம் ஆண்டில் பிறப்பித்தது. காங்கிரஸ் முறையீட்டை அடுத்து அப்போதைய குடியரசுத் தலைவர் கே.ஆர்.நாராயணன் தலையீட்டின் பேரில் அந்த உத்தரவு திரும்பப் பெறப்பட்டது என்று சோனியா கூறியுள்ளார்.

கலாமை சந்தித்த காங்கிரஸ் உயர்நிலைக் குழுவில் சோனியா காந்தியின் அரசியல் ஆலோசகர் அகமது படேல், காங்கிரஸ் மூத்த தலைவர்கள் மார்க்ரெட் ஆல்வா, அசோக் கெலாட், மத்தியப் பிரதேச முன்னாள் முதல்வர் திக்விஜய் சிங், எதிர்க்கட்சித் தலைவர் ஜமுனா தேவி மற்றும் மத்தியப் பிரதேச காங்கிரஸ் நிர்வாகிகள் இடம் பெற்றனர்.

Posted in APJ Abdul Kalam, BJP, Congress, employee, Government, Govt, Gujarat, KR Narayanan, Madhya Pradesh, Motilal Vohra, MP, President, RSS, Sonia Gandhi, Tamil | Leave a Comment »

APJ Abdul Kalam – Kumudam Biography Series

Posted by Snapjudge மேல் ஓகஸ்ட் 4, 2006

விமானப்படை விமானியாக வேண்டும் என்பது அவரது கனவு; மகன் கலெக்டராக வேண்டும் என்பது தந்தையின் கனவு; ஆனால், இறைவனின் எண்ணம் வேறாக இருந்தது. ‘இவன் நல்லவன்; அறிவுத்திறன் நிறைந்த வல்லவன்!’ என்றுணர்ந்த வல்லான் இறைவன், அந்த மனிதரை ராக்கெட் பொறிஞராக அருள்புரிந்தான். இதோ, அந்த மாண்புமிகு மனிதர் _ இந்தியத் தலைக்குடிமகனாகி, இந்திய இளைய தலைமுறை இதயங்களில் க்ரியா ஊக்கியாக நிறைந்து கிடக்கிறார்.

‘இளைய தலைமுறையே… கனவு காணுங்கள்’ என்று மேடைக்கு மேடை முழங்கும் அப்துல்கலாம், சிறுவயதில் மிகப் பெரும் கனவு ரசிகன். பறவைகளைப் பார்க்கும்போது, தன்னால் அப்படிப் பறக்க முடியவில்லையே என்ற ஏக்கத்துடன் சிறகுகளற்ற தோள்பட்டை வெறுமையைத் தொட்டுப்பார்த்துக் கொள்வான். ‘சிறகுகள் இல்லாவிட்டால் என்ன… நானும் ஒருநாள் வானத்து உச்சியை எட்டுவேன்’ என்ற வைராக்கியம் அந்தப் பிஞ்சு நெஞ்சுக்குள் பீறிடும்.

அந்த வைராக்கியம் பலித்தது. கனவுச் சிறகுகள் மூலம் வானவீதியில் உலாவந்த அந்தச் சிறுவன், பெரியவனானபோது, ராக்கெட்டுகள் மூலம் வானத்தை ரகளை செய்தான்.

மாதா… பிதா!

அப்துல்கலாமின் தந்தை : ஜைனுல்லாபுதீன். தாய்: ஆஷியம்மா. இருவருமே நல்ல உயரம்; அழகு. நெறிமுறைகளைப் பின்பற்றும் ஜைனுல்லாபுதீனுக்கு தேவையற்ற வசதிகளும் ஆடம்பரமும் பிடிக்காது. ராமேஸ்வரம் மசூதித் தெருவில் அமைந்த அவர்களது வீடு, சுண்ணாம்பு, செங்கற்களால் கட்டப்பட்டதல்ல; அன்பு, பாசம் என்ற ஆழ்ந்த உணர்ச்சிகளால் கட்டப்பட்டிருந்தது.

ராமேஸ்வரத்தில் ஆரம்பக்கல்வியை முடித்த கலாம், மாவட்டத் தலைநகரான ராமநாதபுரத்துக்குச் சென்று உயர்நிலைக் கல்வி கற்றார்.

ராமநாதபுரம் _ ஸ்வார்ட்ஜ் உயர்நிலைப்பள்ளியில் படிப்பு. புதிய சூழல் கலாமுக்குச் சரிப்படவில்லை.

வீட்டு ஞாபகம் துன்புறுத்தியபோதும், அவற்றைத் தூக்கி எறிந்தார் கலாம். தான் கலெக்டராக வேண்டும் என்ற அப்பாவின் கனவை நனவாக்க வேண்டும் என்பதே அவர் மனதில் வேள்வித் தீயாய் எரிந்து கொண்டிருந்தது.

அங்கு படிப்பு முடிந்தபிறகு, 1950ல் திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் இன்டர்மீடியட் படிப்பு. இங்கு நான்காமாண்டு படிப்பின்போதுதான் கலாமுக்கு இலக்கியம் மீது ஆர்வம் பிறந்தது. டால்ஸ்டாய், ஸ்காட், ஹார்டியின் படைப்புகளைப் படித்து உள்ளம் கவர்ந்திழுக்கப்பட்டார். இந்தக் காலகட்டத்தில்தான் கலாமுக்கு இயற்பியல் மீது ஈடுபாடு வளர்ந்தது.

கடின உழைப்பு! இன்டர்மீடியட் முடித்து, எம்.ஐ.டி. (விணீபீக்ஷீணீs மிஸீstவீtutமீ ஷீயீ ஜிமீநீலீஸீஷீறீஷீரீஹ்)யில் விண்ணப்பித்தார்; தேர்வானார். ஆனால், அதைப் படிக்க அந்தக் காலத்தில் ஆயிரம் ரூபாயாவது தேவை. அவ்வளவு பணத்தைக் கலாமின் அப்பாவால் தயார் செய்யமுடியாது. கலாமின் சகோதரி ஜோஹரா கைகொடுத்தார். தனது தங்கநகைகளை அடமானம் வைத்துப் பணம் கொடுத்தார். எம்.ஐ.டி.யில் விமானப் பொறியியல் படிப்பின்போது, தாழ்வாகப் பறந்து தாக்கும் ஒரு போர் விமானத்தை வடிவமைக்கும் திட்டப் பணியை கலாமுடன் இன்னும் நான்கு சகமாணவர்கள் கூட்டாக முடிக்கவேண்டும் என்று பொறுப்பு கொடுத்தார்கள். ஏரோ டைனமிக் டிஸைன் வரையும் பொறுப்பு கலாமுக்கு. டிஸைன் தயாராவது தாமதமானது. அதற்குப் பல்வேறு காரணங்கள். ஒருநாள் எம்.ஐ.டி. இயக்குநர் ஸ்ரீசீனிவாசன் ‘மூன்றே நாட்களுக்குள் வரைபடம் தயாராக வேண்டும். இல்லாவிட்டால் உதவித் தொகை நிறுத்தப்படும்’ என்று எச்சரித்து விட்டுச் சென்றார். கலாம் திகைத்தார். அவர் படிப்பின் உயிரோட்டமே அந்த உதவித் தொகைதானே! அன்று இரவு…. வரைபலகை முன் உட்கார்ந்தவர்தான். ஊண், உறக்கம் மறந்த கடின உழைப்பு அது. வரை படத்தைத் தயாரித்து முடித்துதான் வெளியே வந்தார் கலாம். ‘‘சாத்தியமில்லாத கெடுவுக்குள் இவ்வளவு கச்சிதமாக முடிப்பீர்கள் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை!’’ என்று புகழ்ந்தார் ஸ்ரீனிவாசன்.

எம்.ஐ.டி.யில் வெற்றிகரமாகப் படிப்பை முடித்து விமானப் பொறியியல் பட்டதாரியாக வெளியே வந்தார் கலாம்.

தனது கனவான விமானப் படையில் வேலைக்கு விண்ணப்பித்தார். அங்கு வேலை கிடைக்காத நிலையில் பாதுகாப்பு அமைச்சகத்தின் தொழில் நுட்ப வளர்ச்சி மற்றும் உற்பத்தி (விமானம்) இயக்குநரகத்தில் முதுநிலை விஞ்ஞானி உதவியாளராக வேலையில் சேர்ந்தார். அதன்பிறகு, கலாமின் கேரியர் டேக்_ஆஃப் ஆனது. பிறகு, மிஷிஸிளி, ஞிஸிஞிலி, ஞிஸிஞிளி என்று பல்வேறு அமைப்புகளில் பணிகள்; பல்வேறு பொறுப்புகள்; அனுபவங்கள்! கலாம் அனைத்திலும் தனது முழு ஆர்வத்தைக் காட்டினார்.

நன்றியுள்ள குழந்தை!

கலாமின் சாதனைகளில் முக்கியமானது, ‘அசெம்பிளிங் டெக்னாலஜி’யாக இருந்த இந்திய ராக்கெட் தொழில் நுட்பத்தை’ ‘புரொடக்ஷன் டெக்னாலஜி’யாக மாற்றியமைத்ததுதான்.

வெளிநாடுகளிடம் உதிரிபாகங்களை வாங்கி அசெம்பிள் செய்வது சாதனையல்ல; நாம் வடிவமைக்கும் ஒவ்வொன்றிலும் நூறு சதம் நம் தயாரிப்பிலான பொருட்களே இடம்பெறவேண்டும். சின்ன சின்ன விஷயங்களில் கூட அடுத்தவர்களைச் சார்ந்திருக்காமல், தொழில்நுட்பத் தன்னிறைவு காணவேண்டும் என்பதே கலாமின் வேட்கையாக இருந்தது.

வல்லரசு தொழில்நுட்பத் தாங்குக் கட்டைகளை வீசியெறிந்துவிட்டு, நம் சொந்தக் காலில் நிற்கவேண்டும் என்பதே இந்த ராமேஸ்வர மனிதனின் ஜெபமாய் இருந்திருக்கிறது. இந்த வேட்கை ஒரு சாதாரண தொழில்நுட்ப அறிஞருக்கு வந்துவிடாது. உண்மையான தேசப்பற்றும் தேசத் தொண்டும் நிறைந்த உள்ளத்தில்தான் அத்தகைய எண்ணம் உருவாக முடியும். கலாம் இந்தியாவின் காதலன்; இந்தியத் தாயிடம் நன்றியுள்ள குழந்தை!

கூட்டு முயற்சி!

கலாம் பணியாற்றிய நிறுவனங்களிªல்லாம் நல்ல திறமையான விஞ்ஞானிகள் இருந்தனர். ஆனால், அவர்கள் நம்மால் முடியும் என்பதை மறந்து, தன்னால் மட்டுமே எல்லாம் முடியும் என்ற ‘தன்னம்பிக்கை’யோடு இறுமாந்திருந்தனர். கூட்டு முயற்சியின் மேன்மை அவர்களுக்குப் புரிந்திருக்கவில்லை. கூட்டு முயற்சியின் மேன்மையை அவர்களுக்குப் புரியவைத்தார் கலாம்.

இயல்பான, நட்புரீதியான கலாமின் அணுகுமுறை கடின இதயங்களையும் வெற்றி கண்டது.

திறமையான சகாக்கள்; கலாமைப் புரிந்துகொண்டு சுதந்திரமளித்த டாக்டர் விக்ரம் சாராபாய், டாக்டர் பிரம்மபிரகாஷ் போன்ற உயரதிகாரிகள்; பாதுகாப்புத்துறை அமைச்சராய் இருந்த ஆர்.வெங்கட்ராமன் போன்றோரின் ஒத்துழைப்பு; பிரதமர்களாய் இருந்த இந்திராகாந்தி, ராஜீவ்காந்தி போன்றோரின் ஊக்குவிப்பு… விளைவு… எஸ்.எல்.வி, பிருத்வி, ஆகாஷ், அக்னி என்று கலாம் தொட்டதெல்லாம் துலங்கியது.

ராஜபாட்டை!

ராக்கெட் தொழில்நுட்பத்தில், கலாமின் செயல்திட்டங்களும் அணுகுமுறைகளும் மற்ற இந்தியத் தொழில்நுட்பங்களிலும் பரவலாக்கப்படவேண்டும். கம்ப்யூட்டரிலிருந்து கட்டுமானத் தொழில்நுட்பம் வரை _ அதில் இடம்பெறும் ஒவ்வொரு உதிரிப் பாகத்திலும் ‘விணீபீமீ வீஸீ மிஸீபீவீணீ’ என்று பொறிக்கப்பட வேண்டுமானால் ஒவ்வொரு இந்தியனும் கலாமாக மாறவேண்டும்.

கலாமின் வாழ்வை ஆராயும் போது, அதிலே ததும்பி நிற்பவையெல்லாம் ஆன்மீகத் தத்துவங்களும், துடிப்பான எண்ணங்களும், வண்ண மயமான கனவுகளும்தான்! அவை வல்லரசு என்ற நிலையை இந்தியா அடைவதற்கான ராஜபாட்டை. அதில் பயணிப்போம்; சாதிப்போம்.

இந்தியா _ 2020

‘2020_ம் ஆண்டுக்குள் இந்தியாவை வளம் படைத்த வல்லரசாக மாற்ற வேண்டும்’. என்று கூறும் கலாமின் 2020 லட்சியங்களில் சில: ‘உலகின் ஐந்து பொருளாதார வல்லரசு நாடுகளில் ஒன்றாக இந்தியா திகழ வேண்டும். தேசப் பாதுகாப்பில் தன்னிறைவு. வேளாண் உற்பத்தியில் அதிவேக முன்னேற்றம் கண்டு வேளாண் பொருட்கள் ஏற்றுமதி செய்யும் நாடாக உயரவேண்டும். நம் கனிம வளங்களை மூலதனமாக்கி தொழில்துறை வல்லரசாக வேண்டும். கடல் வளங்களைப் பொருளாதார சக்தியாக மாற்ற வேண்டும். மென்பொருள் தயாரிப்புத்துறையில் முதன்மையான பங்களிப்பு. விண்வெளி, அணுசக்தி, தேசப்பாதுகாப்பு போன்ற துறைகளில் நிபுணத்துவம். அடிப்படைத் தேவைகளில் அதிவிரைவான வளர்ச்சி,’ _ கலாமின் கனவுகள் நனவாகிக் கொண்டிருக்கின்றன.

 _ பெ.கருணாகரன்

Posted in Abdul Kalaam, Abdul Kalam, APJ Abdul Kalam, Biography, Kumudam, Tamil | 21 Comments »