Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Anna Nagar’ Category

State of public transit – Chennai Metro: Electric Trains

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 9, 2007

காற்று வாங்கும் ரயில் நிலையங்கள்; வீணாகும் ரூ. 8 கோடி

சென்னை கடற்கரையில் இருந்து அண்ணாநகர் நோக்கிச் செல்லும் மின்சார ரயில்கள் அனைத்தும் பயணிகள் இல்லாமல் காத்தாடுகின்றன. குறிப்பாக, பாடி, அண்ணாநகர் ரயில் நிலையங்களை 10 பேர் வரைதான் பயன்படுத்துகின்றனர். இதனால், அந்த ரயில் நிலையங்கள் வெறிச்சோடிக் காணப்படுகின்றன. இதன் மூலம், அவற்றுக்கு செலவிடப்பட்ட மக்களின் வரிப்பணம் ரூ. 8 கோடி வீணாகி வருகிறது.

சென்னை கடற்கரை-அண் ணாநகர்-கடற்கரை மார்க்கத்தில் தினமும் 5 ரயில்கள் இயக்கப்படு கின்றன. காலை 7 மணிக்கு அண் ணாநகரில் இருந்து முதல் ரயில் கிளம்புகிறது. இதையடுத்து, பிற் பகல் 12 மணிக்கே அடுத்த ரயில் புறப்படுகிறது.
இதே நேரங்களில் தான் கடற்கரையில் இருந்தும் அண்ணாநக ருக்கு ரயில் புறப்படுகிறது. பிற்பகல் ரயிலுக்குப் பிறகு இரண்டு மணி நேர இடைவெளியில் இரண்டு ரயில்களும், அதன் பின்பு, 4 மணி நேரத்துக்குப் பின்பு கடைசி ரயிலும் விடப்படு கிறது.
சென்னை கடற்கரையில் இருந்து புறப்படும் ரயில், ராயபுரம், வண்ணாரப்பேட்டை, வியா சர்பாடி ஜீவா, பெரம்பூர், வில்லி வாக்கம், பாடி வழியாக அண் ணாநகரை அடைகிறது.
“கடற்கரையில் இருந்து வில்லி வாக்கம் வரை ஓரளவு பயணிகள் ஏறுவார்கள். அதுவும் 100 முதல் 150 வரை தான் இருக்கும்.
வில்லிவாக்கத்துக்குப் பின்பு பாடி, அண்ணாநகரை ரயில் அடையும் போது வெறும் வண் டியாகத் தான் இருக்கும். ஆயி ரம் பேர் வரை ஏறக் கூடிய ரயி லில் வெறும் 100 பேர் பயணம் செய்தால் ரயில்வேக்கு எவ்வளவு நஷ்டம் ஏற்படும்” என்றார் ரயில்வே பணியாளர் ஒருவர்.
பொட்டல் காடாகக் காட்சி அளிக்கும் ரயில் நிலையங்கள்: பாடி, அண்ணாநகர் ரயில் நிலையங்களை மக்கள் பயன்ப டுத்தாத காரணத்தால், அவை பொட்டல் காடாகக் காட்சி அளிக்கின்றன.
“”காலை 7 மணிக்குப் புறப்படும் முதல் ரயிலுக்குப் பின்பு உடனடி யாக ரயில் இயக்கப்படுவ தில்லை. நெரிசல் மிகுந்த நேரங்க ளில் ரயில்களை இயக்கினால் பயணிகள் அதிகமாக வருவார் கள். ஆனால், அதைச் செய்வ தில்லை. பாடி, அண்ணாநகரில் ரயில்வே இருப்புப்பாதை போடப்பட்டது என்பதற்காக, ரயிலை விட்டுக் கொண்டிருக்கி றார்கள்” என்றார் ரயில் நிலைய அதிகாரி.
வீணாகும் ரூ. 8 கோடி: பாடி, அண்ணாநகர் ரயில் நிலையங்கள் கடந்த 3 ஆண்டுக ளுக்கு முன்பு அமைக்கப்பட் டன. இந்த திட்டத்துக்கு ரூ. 8 கோடி வரை செலவிடப்பட் டன. மக்கள் பயன்பாட்டில் இல் லாததால், இரண்டு ரயில் நிலை யங்களும் முடங்கியுள்ளன.
ரயில் நிலையங்களின் கழிவ றைகளுக்கு பூட்டுப் போடப்பட் டுள்ளந. குடிநீர் குழாய்கள் மரச் சக்கைகளால் அடைத்து வைக் கப்பட்டுள்ளன.
“”மாதத்தின் தொடக்கத்தில் டிக்கெட் மூலம் தினமும் ரூ. 500 வரை வருவாய் கிடைக்கும்.
மாதக் கடைசியில் ரூ. 150 கிடைத்தாலே ஆச்சர்யம் தான்.
பயணிகள் யாருமே வராத நிலை யில் நாங்கள் என்ன செய்வது.
ஓய்வெடுக்க வேண்டியது தான்” என்றார் அண்ணாநகரில் உள்ள ரயில்வே ஊழியர்.
“”சென்னை கடற்கரையில் இருந்து வில்லிவாக்கத்துக்கு ரயி லில் 20 நிமிடப் பயணம் தான்.
இதற்கு ஒரு ரயில் என்பதை ஏற் றுக் கொள்ள முடியாது. கோயம் பேடு வரை ரயில் சேவையை நீட் டித்திருந்தால் பயணிகளுக்கு பெரும் பயன் அளித்திருக்கும்” என்றார் பஸ் – ரயில் பயணிகள் நலச் சங்கத் தலைவர் வழக்கறி ஞர் ரவிக்குமார்.
அலட்சியமே அனைத்துக் கும் காரணம்: தற்போது நடைமுறையில் இருக்கும் திட் டத்தால் யாருக்கும் எந்தப் பய னும் இல்லை என பல்வேறு தரப் பினரும் கருத்து தெரிவித்துள்ள னர். சென்னை கடற்கரையில் இருந்து அண்ணா நகருக்குப் பதி லாக, கோயம்பேடுக்கு ரயில் சேவையைத் தொடங்கி இருக்க வேண்டும்.
இதைச் செய்ய ரயில்வே நிர்வா கம் தவறி விட்டது. இதைத் தொடர்ந்து, இந்தப் பகுதியில் அடுத்தகட்ட திட்டங்களை நிறைவேற்றுவதில் ரயில்வே துறை அலட்சியம் காட்டி வருகி றது. இந்த அலட்சியமே தற் போது நடைமுறையில் இருக் கும் திட்டம் வீணாகுவதற்கு முக் கிய காரணம்.

சென்னை அண்ணாநகர் ரயில் நிலையத்துக்கு பயணிகள் மிகக் குறைவாக வருவதால், வாகனம் நிறுத்தும் இடமாக மாறியுள்ள கழிப்பறை . மதிய உணவை முடித்து விட்டு ஆழ்ந்த தூக்கத்தில் இருக்கும் ரயில்வே ஊழியர்கள் .

Posted in Anna Nagar, Annanagar, Annangar, Beach, Chennai, City, Commute, Commuter, Electric, Express, Fast, Madras, Metro, Paadi, Padi, Public, Railways, Rapid, Station, Suburban, Trains, transit, Transport, Transportation, Work, Worker | Leave a Comment »

Neelima Naidu & TV Actress Meenakshi arrested – Prostitutes are warned & let go

Posted by Snapjudge மேல் ஜனவரி 25, 2007

நடிப்பதற்கு ஒத்திகை பார்ப்பதாக கூறி தயாரிப்பு நிர்வாகியுடன் படுக்கையில் புரண்ட தென்இந்திய அழகி கைது

சென்னை, ஜன. 24-

சென்னை விபசார தடுப்பு பிரிவு போலீஸ் உதவி கமிஷனர் சங்கரபாண்டியனுக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு தொலை பேசியில் ரகசிய தகவல் வந்தது.

அதில் பேசிய நபர் அண்ணா நகர் பகுதியில் உள்ள ஒரு அடுக்கு மாடி குடியிருப்பு, வீட்டில் நடிகைகள் சிலர் பலான தொழிலில் ஈடுபடுவதாகவும் சிலர் கார்களில் அங்கு வந்து செல்வ தாகவும் புகார் கூறினார்.

இதையடுத்து உதவி கமிஷனர் தலைமையில் போலீசார் அந்தப் பகுதியில் மாறு வேடத்தில் கண்காணித்தனர். பின்னர் அதிரடியாக சம்பந்தப்பட்ட வீட்டினுள் நுழைந்த போலீசார் சோதனை நடத்தினர்.

அப்போது அங்குள்ள ஒரு அறையில் ஆந்திர மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்த நீலிமா நாயுடு ஒரு வாலிபருடன் கட்டிபுரண்டு கிடந்தார். நீலிமா நாயுடு தென்னிந்திய அழகி பட்டம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. மற்றொரு அறையில் ஆழ்வார் பேட்டையை சேர்ந்த டி.வி. நடிகை மீனாட்சி ஒரு நடுத்தர வயது ஆணுடன் உல்லாசத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். மீனாட்சி பிரபல ஜவுளி கடையின் விளம்பர டடத்தில் நடித்துள்ளார்.

பெண் போலீசார் உதவியுடன் விபசார தடுப்பு பிரிவு போலீசார் 2 ஜோடிகளையும் கையும், களவுமாக மடக்கினர். இதில் 2 அழகிகளையும் விபசாரத்தில் ஈடுபடுத்திய புரோக்கர் சரவணன் போலீஸ் பிடியில் சிக்கினார்.

மேலும் நீலிமா நாயுடுவிடம் உல்லாசமாக இருந்தவர் பிரபல சினிமா தயாரிப்பு நிறுவனத்தின் நிர்வாகி. மீனாட்சியுடன் இருந்தவர் பிரபல தனியார் தொலை காட்சி ஊழியர். இவர்கள் 2 பேரையும் போலீசார் எச்சரித்து அனுப்பினர்.

இதையடுத்து போலீசார் நீலிமா நாயுடுவிடம் விசாரித்தனர். அவர் போலீசில் கூறியதா வது:-

நான் நிறைய விளம்பர படங்களில் நடித்துள்ளேன். என்னுடைய அழகையும், இளமையையும் பார்த்த பல சினிமா டைரக்டர்கள் என்ëனை நடிக்க அழைத்தனர். நான் ஐதராபாத்தில் மாடலிங் செய்து வந்தால் அங்குள்ள ஆண் நண்பர்கள் மூலம் நிறைய புதிய தொடர்புகள் ஏற்பட்டது.

அதில் சரவணனும் ஒருவர். அவ்வப்போது அழகி போட்டிகளில் பங்கு பெற பெங்களூர், மும்பை என செல்வேன். அப்போது சரவணனும் என்னுடன் வருவார். ஆரம்பத்தில் தொழில் முறை நண்பராக பழகிய அவர் எங்கள் குடும்ப நண்பரானார். அதோடில்லாமல் எனது லைனில் அக்கறை உள்ளவர் போல் நடந்து கொண்டார். இதனால் நான் அவரை முழுமையாக நம்பினேன்.

வாரத்திற்கு ஒரு முறை என்னை சில தொழில் அதிபர்கள் சந்திக்க வருவார்கள். அவர்களை சரவணன்தான் அழைத்து வருவார். அவர்களுக்கு தேவையான சகல உதவிகளையும் செய்வேன். அப்படி வந்த சினிமா தயாரிப்பு நிர்வாகி ஒருவர் சென்னை வந்தால் சினிமாவில் நடிக்க எளிதில் வாய்ப்பு கிடைக்கும். உனது உடற்கட்டு, தமிழக ரசிகர்களை கிறங்கடிக்கும் வகையில் உள்ளது.

மேக்கப் டெஸ்ட் எடுப்பதற்கு என்று எனக்கு தெரிந்த பலர் சென்னை அண்ணா நகரில் உள்ளனர் என்று கூறி இங்கு அழைத்து வந்தார்.

இங்கு நான் தங்கியிருந்த அறைக்கு, டி.வி.நடிகை மீனாட்சி சில மணி நேரத்திற்கு முன்பு வந்தார். உடலை எப்படி இளமை பொலிவுடன் வைத்துக் கொள்வது என 2 பேரும் பேசிக் கொண்டு இருந்தோம். அப்போது சரவணன் 2 பேரை அழைத்து வந்தார். அதில் ஒருவர் ஏற்கனவே அறிமுகமான தயாரிப்பு நிர்வாகி, மற்றொருவர் பிரபல தனியார் தொலைக்காட்சியில் முக்கிய பொறுப்பில் இருப்பவர் என்றும் கூறி என் அருகில் அமர்ந்தனர்.

சிறிது நேரம் என்னிடம் பேசிக் கொண்டிருந்த அவர் மீனாட்சியை அழைத்துக் கொண்டு அடுத்த அறைக்கு சென்று விட்டார். எனது அறையில் இருந்த தயாரிப்பு நிர்வாகி என்னிடம் சிறிய அளவிலான வண்ண வண்ண ஆடைகளை உடுத்தச் சொல்லி மேக்கப் டெஸ்ட் எடுத்தார்.

தனது செல்போன் காமிராவால் பல கோணங்களில் படம் பிடித்தார். ஒரு கட்டத்தில் நெருக்கமான பாடல் காட்சிகளில் எப்படி நடிக்க வேண்டும் என ஒத்திகை பார்ப்பதாக கூறி என்னை இறுக்கி அணைத்தார். அவர் பிடியில் என்னை இழந்தேன். பின்னர் தான் தெரிந்தது சரவணன் என்னை நடிக்க வைப்பதாக கூறி விபசாரத்தில் ஈடுபடுத்தியது.

நான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து தப்பி செல்ல முயன்றேன். அதற்குள் 2-வது முறையாக என்னை பிடித்து வலுக்கட்டாய படுக்கையில் தள்ளி பலவந்தப்படுத்தினார்.

இவ்வாறு கூறி கண்ணீர் விட்டு கதறி அழுதார்.

ஆனால் சரவணனோ நீலிமா நாயுடு தாமாக விரும்பிதான் சினிமா தயாரிப்பு நிர்வாகியோடு படுக்கையை பகிர்ந்து கொண்டதாக கூறினார். இதற்கிடையே போலீசிடம் இருந்து தப்பி சென்ற தயாரிப்பு நிர்வாகியும், தனியார் தொலைக்காட்சி ஊழியரும் தங்களுக்குள்ள செல்வாக்கை பயன்படுத்தி விபசார தடுப்பு பிரிவு போலீசாருக்கு சரவணனை விடுவிக்க நெருக்கடி கொடுத்ததாக கூறப்படுகிறது.

அதனை தொடர்ந்து சரவ ணனிடம் இருந்து ரூ.22 ஆயி ரம் ரொக்கப் பணத்தை கைப்பற்றிக் கொண்டு போலீ சார் அவரை எச்சரித்து அனுப்பினர். தென் இந் திய அழகி நீலிமா நாயுடு, டி.வி.நடிகை மீனாட்சி ஆகிய 2 பேரையும் விபசார வழக் கில் கைது செய்தனர். அவர் களிடம் இருந்து விலை உயர்ந்த செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. 2 பேரும் எழும்பூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

Posted in Age Restriction, Andhra Pradesh, Anna Nagar, Casting Couch, Consensus Sex, Films, Hyderabad, Illegal Sex, Legal Sex, Meenakshi, Movies, Neelima Naidu, Pictures, Prostitutes, prostitution, Raid, Saravanan, TV | Leave a Comment »