குர்திஸ்தான் மீது தாக்குதல் நடத்த வேண்டும் என்று துருக்கிய இராணுவத் தளபதி கூறுகிறார்
![]() |
![]() |
ஜெனரல் யாசர் புயுகாணிட் |
இராக்கின் வடபகுதியில் உள்ள குர்திஸ்தான் கிளர்ச்சியாளர்களை ஒடுக்க தமது நாட்டின் இராணுவம் படை நடவடிக்கையை முன்னெடுக்க வேண்டும் என துருக்கியின் இராணுவப் படைகளின் தலைவர் கூறியுள்ளார்.
எல்லை தாண்டி இராக்கிலுள்ள குர்திஸ்தானிற்குள் சென்று இராணுவ நடவடிக்கைகளை எடுக்க துருக்கி அரசு அனுமதிக்க வேண்டும் என துருக்கியின் இராணுவத் தலைவர் ஜெனரல் யாசர் புயுகாணிட் கேட்டுக் கொண்டுள்ளார்.
குர்திஷ் பிரிவினைக் குழுவினரான பிகேகே யின் ஆயிரக்கணக்கானவர்கள் வட இராக்கை தளமாக வைத்துக் கொண்டு துருக்கி மீதான தாக்குதல்களை நடத்துகிறார்கள் என துருக்கி எண்ணுகிறது.
இதனிடையே அடுத்த மாதம் துருக்கியில் நடைபெறவுளள அதிபர் தேர்தலில் வெற்றி பெறுபவர் மதசார்பற்றவராக இருக்க வேண்டும் எனவும் துருக்கியின் இராணுவத் தளபதி ஜெனரல் புயுகாணிட் மேலும் கூறியுள்ளார்.