Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Anil Ambani’ Category

Abishek Bachan & Aiswarya Rai Engagement – Marriage set for Feb 5; Star Gala Reception on Feb 19

Posted by Snapjudge மேல் ஜனவரி 16, 2007

அடுத்த மாதம் திருமணம்: அபிஷேக்-ஐஸ்வர்யாராய் நிச்சயதார்த்தம் நடந்தது

மும்பை, ஜன.16-

பிரபல இந்தி நட்சத்திரங்களான அபிஷேக் பச்சனும், ஐஸ்வர்யாராயும் காதலித்து வந்தனர். இருவீட்டு பெற்றோ ரும் இந்த காதலுக்கு பச்சைக்கொடி காட்டி விட்டனர். அமிதாப்பச்சன் குடும்பத் தினரின் பல்வேறு நிகழ்ச்சிக ளில் ஐஸ்வர்யாராய் பங்கேற்றார்.

கடந்த நவம்பர் 26-ந் தேதி வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோவிலில் சிறப்பு பூஜை நடத்தப்பட்டது.

இதற்கிடையே அபிஷேக் பச்சன்-ஐஸ்வர்யாராய் திருமண நிச்சயதார்த்தம் மும்பை புறநகரான ஜ×குவில் உள்ள அமிதாப்பச்சன் வீட்டில் நேற்று முன்தினம் இரவு நடந்தது.

இரவு 8.30 மணி முதல் 9 மணி வரை நிச்சயதார்த்த நிகழ்ச்சி நடந்தது. ஐஸ்வர்யாராய் கையில் அபிசேக் பச்சன் மோதிரம் அணிவித்தார். குரு பட நிகழ்ச்சிக்காக இருவரும் அமெரிக்கா சென்று விட்டு திரும்பிய 1 மணி நேரத்தில் நிச்சயதார்த்தம் நடந்தது. திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் நடிகர் அமிதாப்பச்சன், அவரது மனைவி ஜெயாபச்சன், சமாஜ் வாடி கட்சி பொதுச்செயலாளர் அமர்சிங், தொழில் அதிபர் அனில் அம்பானி, அவரது மனைவி டினா ஆகியோர் கலந்து கொண்டனர்.

அபிஷேக்-ஐஸ்வர்யா திருமணம் அடுத்த மாதம் நடக்கிறது. அபிஷேக் பச்சனுக்கு பிப்ரவரி 5-ந் தேதி 31 வயது பிறக்கிறது. இதனால் அன்றைய தினம் 33 வயதான ஐஸ்வர்யாராயை திருமணம் செய்யலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிப்ரவரி 19 அல்லது மார்ச் 7-ந் தேதி இவர்களது திருமணம் நடைபெறும் என்று மற்றொரு தகவல் கூறுகிறது. பிப்ரவரி 19-ந் தேதிக்காக மும்பையில் உள்ள ஹோட்டல் ஹியாத்தில் புக்கிங் செய்யப்பட்டுள்ளதாக அமிதாப்பச்சனின் குடும்ப வட்டாரங்கள் தெரிவித்தன.

நிச்சயதார்த்தத்தின் போது திருமண தேதி குறித்து எதுவும் முடிவு செய்யப்படவில்லை. அபிஷேக்-ஐஸ்வர்யா திரு மண தேதி இன்னும் முடிவு செய்யப்படவில்லை. எனது குடும்பத்தினர் பலர் இங்கு வரவில்லை. அவர்களுடன் ஆலோசனை செய்யப்படும். இரு வீட்டு குடும்பத்தினரும் முடிவு செய்து திருமண தேதியை அறிவிப்போம். எல்லா தகவல்களையும் நிருபர்களிடம் பகிர்ந்து கொள்ள இயலாது.

குரு படத்தில் அபிஷேக்கின் நடிப்பு பிரமாதமாக இருக்கிறது. நடிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு உள்ளது. இதற்காக அவரை வாழ்த்துகிறேன்.

இவ்வாறு அமிதாப்பச்சன் கூறினார்.

நிச்சயதார்த்த நிகழ்ச்சிக்கு பிறகு அபிஷேக்பச்சன் நிருபர் களிடம் கூறியதாவது:-

எனது திருமணத்தை ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளேன். நானும், ஐஸ்வர்யாவும் மகிழ்ச்சியுடன் இருக்கிறோம். திருமண தேதி குறித்து நான் எதுவும் கூற இயலாது.

ஐஸ்வர்யா ஒரு சிறந்த நடிகை. திருமணத்திற்கு பிறகு தொடர்ந்து நடிப்பாரா என்பதை அவர்தான் முடிவு செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அபிஷேக் பச்சனுக்கும், நடிகை கரிஷ்மா கபூருக்கும் நிச்சயதார்த்தம் நடந்து திருமணம் நடக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Posted in Abhishek Bhachan, Abishek Bachan, Abishek Bhachan, Aishwarya Rai, Aiswarya, Aiswarya Rai, Amitabh, Anil Ambani, Ash, Betrothal, Engagement, Hyatt, Jaya Bachan, Marriage, Reception | Leave a Comment »

Anil Ambani supports Mani Ratnam’s Guru – Mukesh Ambani wants to watch it

Posted by Snapjudge மேல் நவம்பர் 17, 2006

சிக்கலில் மணிரத்னத்தின் “குரு’

ஐஸ்வர்யா ராய், அபிஷேக் பச்சன் ஆகியோரை வைத்து மணிரத்னம் இயக்கும் “குரு’ படம், மறைந்த தொழிலதிபர் திருபாய் அம்பானியின் கதை என்ற கருத்து பரவியது. இதையடுத்து படத்தை வெளியிடும் முன் தனக்கு திரையிட்டுக் காட்ட வேண்டும் என்று மணிரத்னம் தரப்பிடம் அம்பானியின் மூத்த மகன் முகேஷ் அம்பானி கூறியுள்ளார். அதே சமயம் அம்பானியின் இன்னொரு மகன் அனில் அம்பானி “குரு’ படத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். அவருடைய அட்லாப்ஸ் நிறுவனம்தான் இப்படத்தின் விநியோக உரிமையைப் பெற்றுள்ளது.

“முருகா’ போஸ்டருக்கு தடை

காக்டெய்ல் ட்ரீம் ஃபிலிம்ஸ் பட நிறுவனம் தயாரித்து வரும் புதிய படம் “முருகா’. இதில் அசோக், ஸ்ருதிசர்மா என்ற இரு புதுமுகங்கள் நடித்துள்ளனர். இவர்களுடன் வடிவேலு, சமிக்ஷா, ரியாஸ்கான், மகாதேவன், அசோகன் வின்சென்ட், சுதா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கார்த்திக் ராஜா இசையமைக்கும் இந்தப் படத்தை இயக்குபவர் ஆர்.டி.நேசன். திரைப்படக் கல்லூரி மாணவரான இவருக்கு இது முதல் படம்.

இந்தப் படத்துக்காக சென்னை நகர் முழுவதும் மிக அதிகமான விளம்பர பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. யதார்த்தமாக இருக்க வேண்டும் என்பதற்காக, கதாநாயகனை போலீஸ் அதிகாரி ஒருவர் சேற்றில் வைத்து காலால் அழுத்தும் (படத்தில் வரும்) காட்சியை விளம்பர பேனராக அமைத்து சென்னை அண்ணா சாலையில் வைத்திருந்தனர். இதைப் பார்த்த போலீஸ் கமிஷனர் இது போன்ற பேனர் வைத்தால் மனித உரிமை மீறல் சட்டத்தின் கீழ் பதிவு செய்து வழக்கு தொடரப்படும் என எச்சரித்ததையடுத்து அந்த பேனர் உடனடியாக அகற்றப்பட்டு வேறு பேனர் வைக்கப்பட்டுவிட்டது.

Posted in Adlabs, Anil Ambani, Banner, Bollywood, Guru, Hindi Movie, Human Rights, Kollywood, Mani Ratnam, Movies, Mukesh Ambani, Muruga, Poster, Reliance, Tamil Cinema | 1 Comment »

Hrithik Roshan gets 12 Crores per Movie >> Sharukh, Salman & Aamir

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 26, 2006

ஒரு படத்துக்கு ரூ. 12 கோடி: அதிக சம்பளம் வாங்கும் நடிகர் ஹிருத்திக்ரோஷன்

இந்தி திரையுலகில் பொது வாக ஷாருக்கான், சல்மான் கான், அமீர்கான் ஆகிய 3 கான் நடிகர்களின் ஆதிக்கம் தான் மோலோங்கியிருக்கும். ஆனால் இவர்களுக்கு போட்டி யாக தனி ரூட்டில் வளர்ந்து, இன்று அந்த 3 நடிகர்களின் சம்பளத்தையே தூக்கிச் சாப்பிடும் அளவிற்கு தனது புதிய படங்களுக்கு சம்பளம் பெற இருக்கிறார் ஹிருத்திக் ரோஷன்.

ஷாருக்கான், சல்மான், அமீர்கான் ஆகிய 3 பேரும் ஒரு படத்தில் நடிக்க 5லிருந்து 8 கோடி ரூபாய் வரை சம்பளம் பெற்று வருகிறார்கள். இவர் களுக்கு இணையாக அமிதாப் பச்சனும் சம்பளம் பெற்று வருகிறார்.

இந்நிலையில் ஹிருத்திக் ரோஷனின் வளர்ச்சியை பார்த்து வியந்த அனில் அம்பாணியின் அட்லாப்ஸ் பட நிறுவனம் அவரை வைத்து 3 புதிய படங்களைத் தயாரிக்க உள்ளது.

ஒரு படத்திற்கு ரூ. 12 கோடி வீதம் இந்த 3 படங்களிலும் நடிக்க 35 கோடி ரூபாய்க்கு ஹிருத்திக் ரோஷனை அந் நிறுவனம் ஒப்பந்தம் செய் துள்ளதாகக் கூறப்படுகிறது.

ஒரு படத்திற்கு ரூ. 12 கோடி வாங்குவதன் மூலம் இந்திப் பட உலகில் அதிக சம்பளம் பெறும் நடிகர் என்ற பெயரும் இந்தியாவில் ரஜினிக்கு அடுத்தபடியாக அதிக சம்பளம் பெறும் நடிகர் என்ற பெயரும் ஹிருத்திக்குக்கு கிடைத்துள்ளது.

இந்த ஒப்பந்தம் பற்றி கேள்விப்பட்ட பல பாலிவுட் நட்சத்திரங்கள் ஆச்சர்யத்தில் உள்ளனர்.

இந்த 3 படங்களுக்குமான சம்பள பணத்தை செக் காகவே அட்லாப்ஸ் நிறு வனம் ஹிருத்திக்குக்கு வழங்கப் போவதாகவும், இதன் மூலம் கறுப்புப் பணப் புழக்கம் சினிமா வில் தவிர்க்கப்படுவ தற்கு இது உதாரண ஒப்பந்த மாக அமையும் என்றும் கூறப் படுகிறது.

இந்த ஒப்பந்தம் பற்றிய தக வல்களை அட்லாப்ஸ் நிறு வனத்திடம் கேட்ட போது, “அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் வரை வெளி யாகும் எந்த தகவலும் உத்தேச மானவையே” என்று கூறி னர்.

Posted in Aamir Khan, Actor salary, Adlabs, Amitabh Bhachan, Anil Ambani, Bollywood, Compensation, Hindi, Hrithik Roshan, Movies, Salman Khan, Sharukh khan | Leave a Comment »

Mulayam Singh Yadav – UP Political Calculations : Freebies, Alliances

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 4, 2006

ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்வாரா முலாயம்?

நீரஜா சௌத்ரி

தமிழில்: சாரி.

இலவசங்களை அள்ளி வழங்க, மீரட்டுக்குக் கடந்த வாரம் சென்றிருந்தார் உத்தரப் பிரதேச முதலமைச்சர் முலாயம் சிங் யாதவ்.

  • வேலை இல்லாத இளைஞர்களுக்கு ஆண்டுதோறும் ஆறாயிரம் ரூபாய்,
  • இன்டர்மீடியட் வரை படித்த பெண்களுக்கு இருபதாயிரம் ரூபாய் என்ற இரட்டைச் சலுகையைத் தீவிரமாக அமல்படுத்தி வருகிறார் முலாயம்.

யாதவர்கள், முஸ்லிம்களையும் தாண்டி பிற வகுப்பினரிடையேயும் தனக்கு வாக்கு வங்கிகள் ஏற்படும் என்று அரசியல் ஆதாயக் கணக்கு போடுகிறார் முலாயம்.

அத்துடன், தனது பழைய சோஷலிஸ்ட் சகா ஜார்ஜ் பெர்னாண்டஸ் சேர்த்துக் கொள்ளவும் முற்பட்டிருக்கிறார். ராம் மனோகர் லோகியாவிடம் அரசியல் பாலபாடம் பயின்று மது லிமாயே, கர்ப்பூரி தாக்கூர், சரண் சிங் ஆகியோரிடம் குருகுலவாசம் செய்த முலாயம் சிங் சமீபத்திய காலத்தில் அமிதாப் பச்சன், சுபவிரத ராய், அனில் அம்பானி ஆகிய செல்வச் சீமான்களிடம் நட்பு கொண்டார். சட்டப் பேரவைக்கு பொதுத்தேர்தல் நெருங்கும் இவ்வேளையில் ஜானேஸ்வர் மிஸ்ரா, வேணி பிரசாத் வர்மா போன்ற “”மறக்கப்பட்ட சமதர்ம சகாக்களை” மீண்டும் தோளோடு தோள் சேர்க்க ஆரம்பித்துள்ளார்.

மக்கள் ஜனநாயக கட்சி (பி.டி.பி.) என்ற அமைப்பிலிருந்து, தனது நண்பரும் ஷியா பிரிவு முஸ்லிம்களின் மத குருவுமான ஜாவத் கல்பேயை விலக்கி, மீண்டும் தன் பக்கம் அழைத்துவந்துவிட்டார்.

உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டவுடனேயே உத்தரப் பிரதேசத்தில் அரசியல் அரங்கு சூடுபிடிக்க ஆரம்பித்துவிட்டது. காங்கிரஸ், பாரதீய ஜனதா இரண்டும் வலுவிழந்த நிலையில் இருப்பதால், அவற்றின் வசம் இருந்த நகராட்சிகளை சமாஜவாதி கட்சி கைப்பற்றும் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது.

அதே சமயம், எங்கும் எதிலும் ஊழல், சட்டம்-ஒழுங்கு நிலையில் சீர்குலைவு போன்றவற்றால் நடுத்தர வர்க்கம் சமாஜவாதி கட்சிக்கு எதிராகத் திரும்பியிருக்கிறது. எல்லா வேலையும் யாதவர்களுக்குத்தான் தரப்படுகிறது, எங்கும் முலாயமின் உறவினர்கள் ஆதிக்கமே அதிகரித்து வருகிறது என்ற எண்ணமும் மக்களிடையே பரவி வருகிறது.

ஈரான் அணுசக்தி நிலையங்களை ஐ.நா. குழு பார்வையிடத் திறந்துவிட வேண்டும் என்று கூறியதாலும், அமெரிக்காவுக்கு ஆதரவாக வெளியுறவுக் கொள்கையில் விட்டுக்கொடுப்பதாலும் முஸ்லிம்கள் காங்கிரஸ் கட்சியை ஆதரிக்காமல், தன்னையே முழு மூச்சாக ஆதரிப்பார்கள் என்று கருதுகிறார் முலாயம்.

ராஜபுத்திரர்களின் ஆதரவு நீடிக்கிறது என்பது முலாயமுக்கு மகிழ்ச்சியான விஷயமாகும். ராஜபுத்திரர்களும் பிராமணர்களும் என்றைக்கும் ஒரே அணியில் இருந்தது கிடையாது. இந்த முறை பிராமணர்கள், மாயாவதியை ஆதரிக்க முடிவு செய்துள்ளனர்.

அஜீத் சிங் தலைமையிலான ராஷ்ட்ரீய லோக தளம் கட்சி யாருடன் கூட்டு சேரப் போகிறது என்பது கவனிக்கப்பட வேண்டும். கடந்த பேரவைத் தேர்தலில் அக்கட்சி மேற்கு மாவட்டங்களில் 15 இடங்களை எளிதாகக் கைப்பற்றியிருக்கிறது. இப்போது ஆளும் கூட்டணியில் இடம் பெற்றாலும், தேர்தல் நேரத்தில் யாருடனும் அக் கட்சி கூட்டுசேர வாய்ப்பு இருக்கிறது.

இந்த முறை தேர்தல் முடிவை நிர்ணயிக்கப்போகிற முக்கிய சக்தி வி.பி. சிங்தான். அவரைப் பற்றித்தான் முலாயம் மிகவும் கவலைப்படுகிறார். இரண்டு நாளைக்கு ஒருமுறை சிறுநீரக சுத்திகரிப்பு செய்துகொள்ள வேண்டிய மோசமான உடல் நிலையுடன் உள்ள வி.பி. சிங்கின் பொதுக்கூட்டங்களுக்கு மக்கள் தாங்களாகவே பெரும் எண்ணிக்கையில் வருகின்றனர். அவருடைய விவசாயிகள் ஆதரவு, ஏழைகள் ஆதரவு பேச்சுகளுக்கு அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது.

சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்கு விவசாயிகள் இடையே பலத்த எதிர்ப்பு இருக்கிறது என்று உணர்ந்து கொண்டதால் இப்போது அடக்கி வாசிக்க ஆரம்பித்திருக்கிறது காங்கிரஸ் கட்சி.

முலாயம் சிங் யாதவுக்கு ஆதரவாளர்கள் யாரோ, அவர்களே வி.பி. சிங்குக்கும் ஆதரவாளர்களாக உள்ளனர். வி.பி. சிங்குக்கு பதவி ஆசை கிடையாது என்பது அவருக்குக் கூடுதல் பலம். வி.பி. சிங் அமைத்துள்ள ஜன மோர்ச்சா என்ற கதம்பக் கூட்டணியில்

  • இந்திய கம்யூனிஸ்ட் கட்சி,
  • தேசியவாத காங்கிரஸ் கட்சி,
  • ராஷ்ட்ரீய ஜனதா தளம்,
  • ராம்விலாஸ் பாஸ்வானின் லோக ஜனசக்தி,
  • உதித் ராஜின் நீதிக்கட்சி,
  • இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்),
  • பாரதீய கிசான் யூனியன்,
  • மக்கள் ஜனநாயக முன்னணி,
  • ராஜ் பப்பரின் ஜன மோர்ச்சா ஆகிய சிறிய கட்சிகள் இடம் பெற்றுள்ளன. ஆட்சியைப் பிடிக்கிறதோ இல்லையோ, இக் கூட்டணி முலாயம் சிங் யாதவுக்கு எதிரான உணர்வை வளர்த்துக் கொண்டிருக்கிறது. இதனால்தான் முலாயம் சிங் கலக்கம் அடைந்திருக்கிறார்.

இந்தமுறை பேரவைத் தேர்தல் முலாயமுக்கு மிகப்பெரிய அக்னிப் பரீட்சையாக அமையக்கூடும். அவர் மட்டும் அல்ல, மற்றவர்களும் நம்பிக்கையோடு இல்லை. இம் முறையும் பேரவைத் தேர்தலுக்குப் பிறகு “”குதிரை பேரம்தான்” தலைதூக்கும் என்று தெரிகிறது.

Posted in Ajith Singh, Amitabh Bhachan, Anil Ambani, BDP, BJP, BSP, Congress (I), CPI-ML, Jaaneswar Mishra, Local Body Polls, Mayawathi, Mulayam Singh Yadav, Neeraja Chowdhry, Ram Vilas Paswan, Samajwadi Party, Shia, Tamil, Uttar Pradesh, Veni Prasad, VP Singh | Leave a Comment »