அடுத்த மாதம் திருமணம்: அபிஷேக்-ஐஸ்வர்யாராய் நிச்சயதார்த்தம் நடந்தது
மும்பை, ஜன.16-
பிரபல இந்தி நட்சத்திரங்களான அபிஷேக் பச்சனும், ஐஸ்வர்யாராயும் காதலித்து வந்தனர். இருவீட்டு பெற்றோ ரும் இந்த காதலுக்கு பச்சைக்கொடி காட்டி விட்டனர். அமிதாப்பச்சன் குடும்பத் தினரின் பல்வேறு நிகழ்ச்சிக ளில் ஐஸ்வர்யாராய் பங்கேற்றார்.
கடந்த நவம்பர் 26-ந் தேதி வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோவிலில் சிறப்பு பூஜை நடத்தப்பட்டது.
இதற்கிடையே அபிஷேக் பச்சன்-ஐஸ்வர்யாராய் திருமண நிச்சயதார்த்தம் மும்பை புறநகரான ஜ×குவில் உள்ள அமிதாப்பச்சன் வீட்டில் நேற்று முன்தினம் இரவு நடந்தது.
இரவு 8.30 மணி முதல் 9 மணி வரை நிச்சயதார்த்த நிகழ்ச்சி நடந்தது. ஐஸ்வர்யாராய் கையில் அபிசேக் பச்சன் மோதிரம் அணிவித்தார். குரு பட நிகழ்ச்சிக்காக இருவரும் அமெரிக்கா சென்று விட்டு திரும்பிய 1 மணி நேரத்தில் நிச்சயதார்த்தம் நடந்தது. திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் நடிகர் அமிதாப்பச்சன், அவரது மனைவி ஜெயாபச்சன், சமாஜ் வாடி கட்சி பொதுச்செயலாளர் அமர்சிங், தொழில் அதிபர் அனில் அம்பானி, அவரது மனைவி டினா ஆகியோர் கலந்து கொண்டனர்.
அபிஷேக்-ஐஸ்வர்யா திருமணம் அடுத்த மாதம் நடக்கிறது. அபிஷேக் பச்சனுக்கு பிப்ரவரி 5-ந் தேதி 31 வயது பிறக்கிறது. இதனால் அன்றைய தினம் 33 வயதான ஐஸ்வர்யாராயை திருமணம் செய்யலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிப்ரவரி 19 அல்லது மார்ச் 7-ந் தேதி இவர்களது திருமணம் நடைபெறும் என்று மற்றொரு தகவல் கூறுகிறது. பிப்ரவரி 19-ந் தேதிக்காக மும்பையில் உள்ள ஹோட்டல் ஹியாத்தில் புக்கிங் செய்யப்பட்டுள்ளதாக அமிதாப்பச்சனின் குடும்ப வட்டாரங்கள் தெரிவித்தன.
நிச்சயதார்த்தத்தின் போது திருமண தேதி குறித்து எதுவும் முடிவு செய்யப்படவில்லை. அபிஷேக்-ஐஸ்வர்யா திரு மண தேதி இன்னும் முடிவு செய்யப்படவில்லை. எனது குடும்பத்தினர் பலர் இங்கு வரவில்லை. அவர்களுடன் ஆலோசனை செய்யப்படும். இரு வீட்டு குடும்பத்தினரும் முடிவு செய்து திருமண தேதியை அறிவிப்போம். எல்லா தகவல்களையும் நிருபர்களிடம் பகிர்ந்து கொள்ள இயலாது.
குரு படத்தில் அபிஷேக்கின் நடிப்பு பிரமாதமாக இருக்கிறது. நடிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு உள்ளது. இதற்காக அவரை வாழ்த்துகிறேன்.
இவ்வாறு அமிதாப்பச்சன் கூறினார்.
நிச்சயதார்த்த நிகழ்ச்சிக்கு பிறகு அபிஷேக்பச்சன் நிருபர் களிடம் கூறியதாவது:-
எனது திருமணத்தை ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளேன். நானும், ஐஸ்வர்யாவும் மகிழ்ச்சியுடன் இருக்கிறோம். திருமண தேதி குறித்து நான் எதுவும் கூற இயலாது.
ஐஸ்வர்யா ஒரு சிறந்த நடிகை. திருமணத்திற்கு பிறகு தொடர்ந்து நடிப்பாரா என்பதை அவர்தான் முடிவு செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அபிஷேக் பச்சனுக்கும், நடிகை கரிஷ்மா கபூருக்கும் நிச்சயதார்த்தம் நடந்து திருமணம் நடக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.