Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Amnesty’ Category

Central African Republic: Law and Order Collapsing as Civilians Flee Violence and Killings

Posted by Snapjudge மேல் ஜூன் 27, 2007

மத்திய ஆப்ரிக்க குடியரசு குறித்து அம்னெஸ்டி கவலை

 

மத்திய ஆப்ரிக்க குடியரசில் சட்டம் ஒழுங்கு நிலைமை சீரழிந்து குலைந்துவிடும் நிலையின் விளிம்பில் உள்ளது என சர்வதேச மனித உரிமைகள் அமைப்பான அம்னெஸ்டி இண்டர்நேஷனல் கூறியுள்ளது.

அங்கு, பிரான்ஸ் நாட்டின் 700 துருப்புகளின் ஆதரவு இருந்தாலும் அரசின் அதிகாரம் தலைநகர் பாங்குயில் மட்டும்தான் செல்லுபடியாகிற நிலையில் உள்ளது.

அந்த நாட்டிலிருந்து ஆயிரக்கணக்கான பொது மக்கள் அண்டை நாடுகளான சாட், சூடான் மற்றும் காமெரூன் ஆகியவற்றுக்கு வெளியேறிச் சென்றுள்ளார்கள் என அண்மையில் அங்கிருந்து திரும்பியுள்ள ஒரு ஆய்வாளர் தெரிவிக்கிறார்.

கிளர்ச்சியாளர்கள், கொள்ளையர்கள் மற்றும் அரசுத் துருப்புக்களால் தாக்கப்பட்டதாலேயே தாம் அங்கிருந்து வெளியேறியாதாக அவர் கூறுகிறார்.

அங்கு அரச துருப்புக்களால் பொதுமக்கள் தாக்கப்படுவதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை, அந்நாட்டின் அதிபரின் சார்பில் பேசவல்ல அதிகாரி புறந்தள்ளியுள்ளார். மேலும் இந்தக் குற்றச்சாட்டு கேலிக்குரியது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பல ஆண்டுகளாக மத்திய ஆப்ரிக்க குடியரசில் ஒரு ஸ்திரத்தன்மை இல்லாத நிலையில், அது பல பாதிப்புகளை சந்தித்துள்ளது.

2003 ஆம் ஆண்டு இராணுவத்தின் முன்னாள் தளபதி ஃபிரான்சுவா பொழியே அதிரடியாக ஆட்சியைப் பிடித்த பிறகு, அங்கு நிலைமைகள் மேலும் மோசமடைந்துள்ளன.


Posted in abuse, africa, AI, Amnesty, Amnesty International, Arms, Bangui, car, Central African Republic, CFA Francs, Chad, Children, Conflict, Criminal, defence, Defense, Democracy, ethnic, Ethnicity, Exploit, Extremism, France, Francs, French, Govt, HR, killings, Law, Military, Money, Opposition, Order, Peace, Poor, Power, Republic, Rich, Security, Sudan, Terrorism, troops, UN, Violence, War, Weapons, West Africa | 1 Comment »

Sri Lanka government vs LTTE – Eezham Conflict: Updates, current developments

Posted by Snapjudge மேல் மே 21, 2007

இலங்கை மோதல்கள் – ஒரு அலசல்

யாழ்ப்பாணத்தில் மோதலின் போது டாங்கிகள்
யாழ்ப்பாணத்தில் மோதலின் போது

இலங்கையின் வடபகுதியில் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளைச் சுற்றவரவுள்ள இடங்களில் கடந்த 4 மாதங்களில் இடம்பெற்ற கடுமையான மோதல்களில் ஐந்நூறுக்கும் அதிகமான விடுதலைப்புலிகளைத் தாம் கொன்றதாக இலங்கை இராணுவம் கூறுகிறது.

இந்த எண்ணிக்கையுடன் முரண்படும் விடுதலைப்புலிகள், சிங்களப் பெரும்பான்மை சமூகத்தின் மத்தியில், இந்தப் போரில் தாம் வெல்வதாகக் காட்டிக்கொள்ள அரசாங்கம் முனைகிறது என்று கூறுகிறார்கள்.

இன்று திங்கட்கிழமை இரு வேறு சம்பவங்களில் 4 இராணுவத்தினர் கொல்லப்பட்டதாகக் கூறும் இலங்கை இராணுவம், அந்தப் பகுதியில் தமது தரப்பில் இது வரையில் 48 பேர் கொல்லப்பட்டதாக ஒப்புக்கொள்கிறார்கள்.

கிழக்கில் தமது கட்டுப்பாட்டில் இருந்த பல பகுதிகளில் இருந்து விடுதலைப்புலிகள் விரட்டப்பட்டதை அடுத்து, பெரும்பாலான மோதல்கள் தற்போது வடக்குக்கு நகர்ந்துள்ளன.

அரசாங்க மற்றும் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டு முன்னரங்கப் பகுதிகளுக்கு இடையேயான பகுதி எங்கிலும், சிறு மோதல்களும், பெரும் சண்டைகளும் தொடர்ந்து வருகின்றன.

2002 ஆம் ஆண்டு செய்துகொள்ளப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தம், புறக்கணிக்கப்படுகிறது.

தாக்குதல் நடத்தும் விடுதலைப் புலிகள்
தாக்குதல் நடத்தும் விடுதலைப் புலிகள்

அவர்களது நிலைகளை நோக்கி தாக்குதல் நடவடிக்கைகள் ஜனவரி மாத நடுப்பகுதியில் ஆரம்பித்தது முதல், விடுதலைப்புலிகள் அமைப்பைச் சேர்ந்த 541 பேர் கொல்லப்பட்டதாக இலங்கை இராணுவத்தின் சார்பில் பேசவல்ல பிரிகேடியர் பிரசாத் சமரசிங்க தெரிவித்துள்ளார்.

ஆனால் இது மிகவும் தீவிரமான மிகைப்படுத்தல் என்று கூறும் விடுதலைப்புலிகள் தரப்பு பேச்சாளரான இராசையா இளந்திரையன், உண்மையான எண்ணிக்கை 60 க்கு சமீபமாக இருக்கும் என்று கூறுகிறார்.

விடுதலைப்புலிகள் வான் வழித்தாக்குதல்களை ஆரம்பித்த பின்னர், பெரும்பான்மை சிங்கள மக்களைச் சமாளிக்க அரசாங்கம் முயல்கிறது என்று அவர் கூறுகிறார்.

சிறிய விமானங்களைப் பயன்படுத்தி தலைநகருக்கு அருகாக உள்ள இலக்குகள் மீது இரு தடவை குண்டுகளை வீசிய விடுதலைப்புலிகள், ஒரு இராணுவ தளத்தையும் தாக்கிவிட்டு பாதுகாப்புடன் தமது தளத்துக்குத் திரும்பியிருக்கிறார்கள்.

இழப்புகள் பற்றிய எண்ணிக்கையைப் பொறுத்தவரை இலங்கையில் போரில் ஈடுபடுகின்ற தரப்பினரும் மிகவும் மும்முரமாக அதில் முரண்படுகின்றனர்.

தாமே வெற்றிபெறுவதாக இரு தரப்பும் காண்பிக்க முனைகின்றன. ஆனால் எண்ணிக்கையை சுயாதீனமாக உறுதி செய்ய முடியவில்லை.

தமிழர்களுக்கு ஒரு தாயகம் கோரி விடுதலைப்புலிகள் போராடுகிறார்கள்.

அவர்களை இரண்டு மூன்று வருடங்களில் தோற்கடித்துவிடுவோம் என்று உயர் அதிகாரிகள் கூறுகிறார்கள்.

இன்று திங்களன்று துப்பாக்கி மோதல் ஒன்றில் இரண்டு இலங்கைச் சிப்பாய்கள் கொல்லப்பட்டனர். வடபகுதியில் இடம்பெற்ற வீதியோரக் குண்டு வெடிப்பொன்றில் மேலும் இருவர் உயிரிழந்தனர்.

கடந்த 4 மாதங்களில் தாம் 48 சிப்பாய்களை இழந்ததாக இப்போது இலங்கை இராணுவம் கூறுகிறது.


அம்னெஸ்டி நிறுவனத்தின் ஆண்டறிக்கை வெளியாகியது
அம்னெஸ்டி நிறுவனத்தின் ஆண்டறிக்கை வெளியாகியது

இலங்கையில் மனித உரிமை நிலமைகள் மோசமடைந்துள்ளது எனக் கூறுகிறது சர்வதேச அபய நிறுவனம்

இலங்கையில் மனித உரிமை நிலைமைகள் மிகவும் மோசமாக வீழ்ச்சியடைந்து வருவதாக சர்வதேச மனித உரிமைகள் அமைப்பான அம்னெஸ்டி இண்டர்நேஷனலின் அறிக்கை குறிப்பிட்டுள்ளது.

சட்டத்திற்கு புறம்பான் கொலைகள், சிறுவர்களை படையணிகளில் சேர்ப்பது, ஆட்கடத்தல்கள் உட்பட பல மனித உரிமை மீறல்கள் மற்றும் போர் குற்றங்கள் அங்கு அதிகரித்து வருவதையும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

இலங்கை அரசாங்கத்திற்கும், விடுதலைப் புலிகள் அமைப்புக்கும் இடையே மோதல்கள் அதிகரித்து வரும் சூழலில், பொதுமக்கள் இந்த இருதரப்பாலும் தாக்கப்படுகின்றனர் என்றும் அந்த அறிக்கை கூறுகிறது.

அம்னெஸ்டி அமைப்பின் கருத்துப் படம்
அம்னெஸ்டியின் கருத்துப் படம் ஒன்று

2006 ஆம் ஆண்டின் இறுதிப் பகுதியில், நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்றும் இரண்டு லட்சத்திற்கும் அதிகமானவர்கள் இடம் பெயர்ந்துள்ளனர் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போர் நிறுத்த உடன்படிக்கையை இருதரப்பினரும் கடைபிடிப்பதாகக் கூறினாலும், 2006 ஆம் ஆண்டின் மத்தியில் போர் நிறுத்த ஒப்பந்தம் செயற்பாட்டளவில் கைவிடப்பட்ட நிலை அடைந்துள்ளது எனவும், 2005 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் அமல்படுத்தப்பட்ட, அவசரகால நிலையை இன்னமும் தொடர்ந்து அங்கு நடைமுறையில் உள்ளது எனவும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

இலங்கையில் பொதுமக்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றும், அங்கு அதிகரித்து வரும் கொலைகள், ஆட்கடத்தல்களை தடுக்க போதுமான நடவடிக்கையோ அல்லது வழிமுறைகளோ இல்லை என்றும் அந்த அமைப்பின் சார்பில் பேசவல்ல அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

அங்கு சர்வதேச மனித உரிமைகள் சமூகத்தின் பிரசன்னம் தேவைப்படுகிறது என்றும் அந்த அறிக்கை கருத்து வெளியிட்டுள்ளது.


Posted in AI, Air Force, Airforce, Amnesty, Arms, Army, battle, BBC, dead, defence, Defense, Developments, Eelam, Eezam, Eezham, Fatality, Fisherman, fishermen, Freedom, guns, HR, Human Rights, Independence, India, Infantry, LTTE, Media, Murder, Navy, Refugees, rights, Sri lanka, Srilanka, Status, Tamils, Updates, Viduthalai, Viduthalai Puli, Viduthalai Puligal, Viduthalai Pulikal, Vituthalai Puli, Vituthalai Pulikal, Weapons | 1 Comment »

Warrants of Arrest for the Minister of Humanitarian Affairs of Sudan, and a leader of the Militia/Janjaweed

Posted by Snapjudge மேல் மே 3, 2007

சூடானின் முன்னாள் உள்துறை அமைச்சருக்கு சர்வதேச நீதிமன்றம் பிடியாணை

ஜான் ஜாவீத் அமைப்பின் உறுப்பினர் ஒருவர்
ஜான் ஜாவீத் உறுப்பினர் ஒருவர்

சூடானின் டார்பூரில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர் குற்றங்கள் தொடர்பில் தி ஹேக்கில் உள்ள சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் முதல் தடவையாக பிடியாணையைப் பிறப்பித்துள்ளது.

இவற்றில் ஒன்று சூடானின் முன்னாள் உள்துறை அமைச்சர் அஹ்மட் ஹரூனுக்கு எதிரானதாகும்.

அவர் மீதான குற்றச்சாட்டின்படி, அவர், ஜன்ஜவீட் தீவிரவாதிகளுக்கு நிதி வழங்கினார் என்றும், தனிப்பட்ட முறையில் ஆயுத உதவி செய்தார் என்றும் பொதுமக்கள் மீதான தாக்குதல்களுக்காக அவர்களைத் தூண்டினார் என்று கூறப்படுகிறது.

யுத்த உபாயத்தின் ஒரு பாகமாக பாலியல் வல்லுறவையும் மற்றும் சித்திரவதையையும் வளர்த்ததாகக் கூறப்படும் ஜன்ஜவீட் தளபதிகளில் ஒருவராக வர்ணிக்கப்படும் அலி குசாயிப் அவர்கள் மீதும் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஜன்ஜவீட் அமைப்புடன் தமது அமைச்சர்கள் எவருக்கும் இந்த விதமான தொடர்பும் கிடையாது என்று சூடானிய அரசாங்கம் கூறுகிறது.

இந்த நீதிமன்றத்துக்கு எந்த ஒரு சந்தேக நபரையும் அது கையளிக்காது என்றும் சூடானிய அரசாங்கம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது


அம்னெஸ்டி அமைப்பின் புகாரை சீனாவும் ரஷியாவும் மறுத்துள்ளன

அம்னெஸ்டி நிறுவனத்தின் சின்னம்
அம்னெஸ்டி நிறுவனத்தின் சின்னம்

சூடானின் டார்பூர், பகுதிக்கு ஆயுதங்களைக் கொடுக்கக் கூடாது என்ற ஐ நாவின் தடையை மீறி, சீனாவும், ரஷ்யாவும் சூடானிய அரசுக்கு ஆயுதங்களை அளித்தன என்று லண்டனைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் அனைத்துலக அபயஸ்தாபனமான அம்னெஸ்ட்டி இன்டர்நேஷனல், கூறியிருந்த புகாரை சீனாவும், ரஷ்யாவும் மறுத்துள்ளன.

டார்பூரில் உள்ள பொதுமக்களுக்கு எதிராக பயன்படுத்தத்தக்க ராணுவ விமானங்களை சூடான் அரசுக்கும், பிற ஆயுதங்களை ஆயுதக் குழுக்களுக்கம் இந்நாடுகள் அளித்ததாக அம்னெஸ்ட்டி கூறியுள்ளது.

ஆனால் சீனா மற்றும் ரஷ்ய வெளியுறவு அமைச்சுக்கள் இந்தப் பிரச்சனை தொடர்பாக ஐ நா தீர்மானங்களை தத்தம் நாடுகள் கடைபிடிப்பதாக கூறியுள்ளன.

ஐ நாவுக்கான சூடானிய தூதரும் இந்தக் குற்றச்சாட்டை நிராகரித்துள்ளார். திரித்துக் கூறுவதையே வரலாராகக் கொண்ட, ஒரு நிறுவனம் வெளியிட்டுள்ள ஒரு தவறான அறிக்கை இது என்று அவர் இதை வர்ணித்துள்ளார்.

Posted in africa, AI, Amnesty, Arms, Arrest, Autocracy, autocrat, Berkshire, Blasts, Bombs, China, crimes, Darfur, defence, Destruction, Exports, Fidelity, genocide, ICC, Janjaweed, Law, Leader, Lord of war, Militants, Military, Militia, Order, Police, Regime, Russia, Soviet, Sudan, Supply, support, Terrorism, UN, USSR, War, Warrants, Warren, Weapons | Leave a Comment »