Posted by Snapjudge மேல் ஜூன் 27, 2007
மத்திய ஆப்ரிக்க குடியரசு குறித்து அம்னெஸ்டி கவலை
மத்திய ஆப்ரிக்க குடியரசில் சட்டம் ஒழுங்கு நிலைமை சீரழிந்து குலைந்துவிடும் நிலையின் விளிம்பில் உள்ளது என சர்வதேச மனித உரிமைகள் அமைப்பான அம்னெஸ்டி இண்டர்நேஷனல் கூறியுள்ளது.
அங்கு, பிரான்ஸ் நாட்டின் 700 துருப்புகளின் ஆதரவு இருந்தாலும் அரசின் அதிகாரம் தலைநகர் பாங்குயில் மட்டும்தான் செல்லுபடியாகிற நிலையில் உள்ளது.
அந்த நாட்டிலிருந்து ஆயிரக்கணக்கான பொது மக்கள் அண்டை நாடுகளான சாட், சூடான் மற்றும் காமெரூன் ஆகியவற்றுக்கு வெளியேறிச் சென்றுள்ளார்கள் என அண்மையில் அங்கிருந்து திரும்பியுள்ள ஒரு ஆய்வாளர் தெரிவிக்கிறார்.
கிளர்ச்சியாளர்கள், கொள்ளையர்கள் மற்றும் அரசுத் துருப்புக்களால் தாக்கப்பட்டதாலேயே தாம் அங்கிருந்து வெளியேறியாதாக அவர் கூறுகிறார்.
அங்கு அரச துருப்புக்களால் பொதுமக்கள் தாக்கப்படுவதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை, அந்நாட்டின் அதிபரின் சார்பில் பேசவல்ல அதிகாரி புறந்தள்ளியுள்ளார். மேலும் இந்தக் குற்றச்சாட்டு கேலிக்குரியது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
பல ஆண்டுகளாக மத்திய ஆப்ரிக்க குடியரசில் ஒரு ஸ்திரத்தன்மை இல்லாத நிலையில், அது பல பாதிப்புகளை சந்தித்துள்ளது.
2003 ஆம் ஆண்டு இராணுவத்தின் முன்னாள் தளபதி ஃபிரான்சுவா பொழியே அதிரடியாக ஆட்சியைப் பிடித்த பிறகு, அங்கு நிலைமைகள் மேலும் மோசமடைந்துள்ளன.
Posted in abuse, africa, AI, Amnesty, Amnesty International, Arms, Bangui, car, Central African Republic, CFA Francs, Chad, Children, Conflict, Criminal, defence, Defense, Democracy, ethnic, Ethnicity, Exploit, Extremism, France, Francs, French, Govt, HR, killings, Law, Military, Money, Opposition, Order, Peace, Poor, Power, Republic, Rich, Security, Sudan, Terrorism, troops, UN, Violence, War, Weapons, West Africa | 1 Comment »
Posted by Snapjudge மேல் நவம்பர் 1, 2006
சீனாவில் மரண தண்டனை சீர்திருத்தம்
 |
 |
சீனாவில் தான் உலக அளவில் அதிக மரண தண்டனைகள் |
சீனாவில் மரண தண்டனையை நிறைவேற்றுவது குறித்து புதிய நடைமுறைகள் கொண்டுவரப்பட்டுள்ளன. இதன்படி மரண தண்டனைகளை விதிக்க, இனி நாட்டின் உச்ச நீதிமன்றத்தின் அனுமதியைப் பெற்றாக வேண்டும்.
அடுத்த ஆண்டு முதல் நடைமுறைக்கு வரவுள்ள இந்தப் புதிய விதிகள், சீனா மரண தண்டனை தொடர்பாக கடந்த இருபது ஆண்டுகளில் செய்த மிகப் பெரிய சீர்திருத்தம் என்று அந் நாட்டின் அரச ஊடகம் தெரிவிக்கிறது.
இதனால் மரண தண்டனை வழங்கும் அதிகாரம் இனி மாகாண நீதிமன்றங்களுககு இருக்காது.
உலகிலேயே அதிக அளவு மரண தண்டனைகள் சீனாவில்தான் விதிக்கப்படுகின்றன. பல சமயங்களில் அநீதி இழைக்கப்படுகிறது என்ற குரல்கள் எழுவதால், அதைச் சமாளிக்க இது போன்ற சீர்திருத்தம் மேற்கொள்ளப்படுவதாக பீஜீங்கில் இருக்கும் பி பி சி நிருபர் தெரிவிக்கிறார். ஆனால் அதே சமயம் மரண தண்டனையை சீனா ஒழிக்கும் என்பதற்கான தடையங்கள் ஏதும் தென்படவில்லை என்றும் அவர் கூறுகிறார்.
Posted in Amnesty International, Capital punishment, China, Death Sentence, Judge, Life sentence, Supreme Court, Xinhua | Leave a Comment »