Archive for the ‘Amitabh Bhachan’ Category
Posted by Snapjudge மேல் நவம்பர் 7, 2007
- ஷாரூக்குக்கு ரூ. 8 கோடி;
- அமிதாப்புக்கு 6 கோடி;
- சச்சினுக்கு 3 கோடி!
- ஆமீர் கான் ரூ. 5 கோடி;
- ராகுல் டிராவிட் ரூ. 2.5 கோடி;
- யுவராஜ் சிங் ரூ. 2 கோடி;
டிவி’ விளம்பரங்களில் நடிக்க
இதெல்லாம், இவர்களுக்கு ஒரு படத்தில் நடிக்க ஊதியமா… ஒரு கிரிக்கெட் பந்தயத்தில் சதம் அடிக்க கிடைத்த பணமா… பத்து விநாடி வந்து போகக்கூடிய, “டிவி’ விளம்பரத்தில் நடிப்பதற்காக கிடைக்கும் ஊதியம் இது.
பாலிவுட் நடிகர்கள், நடிகைகள், கிரிக்கெட் வீரர்கள் நடித்து வெளிவரும், “டிவி’ விளம்பரங்கள், 60 சதவீதம் அதிகரித்துள்ளன. கடந்த 2005ம் ஆண்டு, கிரிக்கெட் சரிவுகளால், கிரிக்கெட் வீரர்கள் தோன்றும் விளம்பரங்கள் ஓரளவு குறைந்தாலும், பாலிவுட் நட்சத்திரங்களின் விளம்பரங்கள் அதிகரித்தன. கடந்தாண்டு, மீண்டும், கிரிக்கெட் வீரர்கள் நடித்த விளம்பரங்கள் அதிகரித்தன. முந்தைய ஆண்டை விட, கடந்தாண்டு, 60 சதவீதம் அளவுக்கு அதிகமாக கிரிக்கெட் வீரர்கள் தோன்றும் விளம்பரங்கள் வெளியாயின. இந்தாண்டு, அதை விட அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து, “டாம் மீடியா’ நிறுவனம் எடுத்த சர்வேயில் தெரியவந்துள்ள தகவல்கள்:
பேனா முதல் கார் வரை, இந்தியாவில், 9,000 பிராண்டுகளில் விற்பனை செய்யப்படுகிறது. இவற்றில், 250 பிராண்டுகள், பாலிவுட் நட்சத்திரங்கள் மற்றும் கிரிக்கெட் வீரர்களை நடிக்க வைத்து விளம்பரம் வெளியிடப்படுகிறது. கடந்தாண்டு, பாலிவுட் நட்சத்திரங்களை நடிக்கவைத்து, 53 விளம்பரங்கள் வெளிவந்தன. கிரிக்கெட் வீரர்கள் நடித்த விளம்பரங்கள் எண்ணிக்கை 191.
இவர்கள் நடித்தது எல்லா விளம்பரங்களும், பெரிய நிறுவனங்களுடையவை. இதனால், கோடிக்கணக்கில் இவர்களுக்கு ஊதியம் தரப்பட்டுள்ளது. “டிவி’ விளம்பரங்களால், பாலிவுட் நடிகர்களும், கிரிக்கெட் வீரர்கள் எக்கச்சக்கமாக அள்ளுகின்றனர். அவர்களை அடுத்து, பிரபல மாடலிங் தொழிலில் உள்ளவர்களுக்கு கிடைக்கிறது.
பிரபல மாடல் அழகி யானா குப்தா, பத்து விநாடி “டிவி’ விளம்பரத்தில் நடிக்க, ஒன்று முதல் இரண்டு கோடி வரை ஊதியம் வாங்குகிறார். மற்றவர்கள் சில ஆயிரம் முதல் மூன்று லட்சம் ரூபாய் வரை வாங்குகின்றனர். இவ்வாறு சர்வேயில் தெரியவந்துள்ளது.
Posted in Aamir, Ad, Ads, Advt, Advts, Amitab, Amitabh, Amitabh Bachaan, Amitabh Bhachan, Bollywood, Cinema, Compensation, Cricket, Dravid, Fame, Famous, Films, Khan, Media, Movies, people, Prices, Promotions, Sachin, Salary, Shahrukh, Sports, Stars, Tendulkar, TV, Yuvraj | Leave a Comment »
Posted by Snapjudge மேல் ஓகஸ்ட் 8, 2007
தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு: அமிதாப்பச்சனுக்கு சிறந்த நடிகர் விருது- சிறந்த இசையமைப்பாளராக லால்குடி ஜெயராமன் தேர்வு
புதுடெல்லி, ஆக. 8-
2005-ம் ஆண்டுக்கான தேசிய திரைப்பட விருதுகள் டெல்லியில் நேற்று மாலை அறிவிக்கப்பட்டன. தேசிய விருதுகள் வழங்குவது குறித்து டெல்லி கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டதால் இந்த ஆண்டு விருதுகளை அறிவிப்பதில் தாமதம் ஏற்பட்டது.
தேசிய திரைப்பட விருது அறிவிப்பில், 2005-ம் ஆண்டுக்கான சிறந்த நடிகர் விருது அமிதாப்பச்சனுக்கு கிடைத்தது. `பிளாக்’ படத்தில் மன வளர்ச்சி குன்றிய ஒரு குழந்தையை வளர்த்து ஆளாக்குவதில் அவர் தத்ரூபமான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். அதனைப் பாராட்டி அமிதாப்பச்சனை சிறந்த நடிகராக தேர்வுக்குழுவினர் தேர்ந்தெடுத்தனர்.
இதே போல் சிறந்த நடிகைக்கான விருதிற்கு சரிகா தேர்வானார். `பர்சானியா’ என்னும் ஆங்கிலப் படத்தில் அவரது சிறப்பான நடிப்பை பாராட்டி சிறந்த நடிகைக்கான விருது வழங்கப்படுகிறது.
தேசிய அளவில் சிறந்த படமாக புத்ததேவ் தாஸ் குப்தாவின் வங்காளி மொழிப் படமான `கால்புருஷ்’ தேர்வானது. இந்த படத்திற்கு தங்கத் தாமரை விருதும், 50 ஆயிரம் ரொக்கமும் வழங்கப்படும்.
மற்ற முக்கியமான விருதுகள் வருமாறு:
சிறந்த இயக்குனர்– ராகுல் தோடாக்கியா (பர்சானியா)
அறிமுக இயக்குனர்களுக்கான இந்திரா காந்தி விருது பெற்ற படம்- பரிநீதா.
சிறந்த பொழுதுபோக்கு படம்- ரங் கே பசந்தி (இந்தி)
சிறந்த குழந்தைகள் படம்- புளூ அம்பரல்லா.
நடுவர் குழுவின் சிறந்த நடிகர் விருது- அனுபம் கெர் (மைனே காந்தி கோ நாகின் மாரா).
தேசிய ஒருமைப்பாட்டிற்கான சிறந்த படம் (நர்கீஸ் தத் விருது)- தைவனமாதில் (மலையாளம்).
சமூக பிரச்சினைக்கான சிறந்த படம்- இக்பால் (இந்தி)
சிறந்த குழந்தை நட்சத்திரம்- சாய்குமார்( பொம்மலதா-தெலுங்கு)
சிறந்த பின்னணி பாடகர்– நரேஷ் அய்யர் (ரங் கே பசந்தி)
சிறந்த பின்னணி பாடகி– ஸ்ரேயா கோஷால்(பகெலி)
சிறந்த இசையமைப்பாளர்– வயலின் வித்வான் லால்குடி ஜெயராமன் (சிருங்காரம்-தமிழ்)
சிறந்த பாடலாசிரியர்– பர்குரு ராமச்சந்திரா (தாயி- கன்னடம்)
சிறந்த எடிட்டர்– பி.எஸ்.பாரதி(ரங் கே பசந்தி).
சிறந்த நடன அமைப்பாளர்- சரோஜ் (சிருங்காரம்- தமிழ்)
சிறந்த வசன கர்த்தாக்கள்- பிரகாஷ் ஷா, ஸ்ரீதர் ராகவன், மனோஜ் தியாகி.(அப்காரன்)
சிறந்த ஆர்ட் டைரக்டர்- சி.பி.மோர் (தாஜ் மகால் ஆன் எட்னர்ல் லவ் ஸ்டோரி).
சிறந்த ஆடை வடிவமைப்பாளர்கள்- அன்னா சிங் (தாஜ் மகால் ஆன் எட்னர்ல் லவ் ஸ்டோரி), சப்யாச்சி முகர்ஜி (பிளாக்).
தமிழில் சிறந்த படமாக டி.வி. சந்திரன் இயக்கிய ஆடும் கூத்து தேர்வாகியுள்ளது.
சேரன் படங்களுக்கு தேசிய விருது08 ஆகஸ்ட் 2007கோவா திரைப்பட விழாவில் தனக்கு அங்கீரகாரம் கொடுக்கவில்லை என்று அரங்கத்தை விட்டு வெளியேறினார் சேரன். இப்போது அவருடைய படங்களுக்கு தேசிய விருது கிடைத்திருக்கிறது.
டி.வி.சந்திரன் இயக்கத்தில் சேரன் நடித்த `ஆடும்கூத்து‘ சிறந்த படத்திற்கான தேசிய விருதை பெற்றிருக்கிறது. அதேபோல் அவர் இயக்கி நடித்த `தவமாய் தவமிருந்து‘ படத்திற்கு சிறந்த குடும்ப படத்திற்கான தேசிய விருது கிடைத்திருக்கிறது.
இந்தப் படத்தில் தன்னை விட முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்த ராஜ்கிரணுக்கு விருது கிடைக்கும் என்று எதிர்பார்த்தார் சேரன்.
ஆனால் அது கிடைக்காவிட்டாலும் சிறந்த குடும்ப படத்திற்கான விருது `தவமாய் தவமிருந்து’ படத்திற்கு கிடைத்ததில் சந்தோசமாய் இருக்கிறார் சேரன்.
ஷியாம் பெனெகலுக்கு தாதா சாகேப் பால்கே விருது08 ஆகஸ்ட் 2007
திரைப்படத் துறையில் மிக உயரியதாகக் கருதப்படும் தாதா சாகேப் பால்கே விருது, பழம்பெரும் இயக்குனர் ஷியாம் பெனெகலுக்கு வழங்கப்படுகிறது.
திரைப்படத்துறைக்கு ஆற்றிய சிறப்பான சேவையை பாராட்டி 2005ம் ஆண்டுக்கான விருதுக்கு, 72 வயதாகும் ஷியாம் பெனகல் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இந்த ஆண்டு இறுதியில் நடைபெறும் விழாவில் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் ஷியாம் பெனகலுக்கு இந்த விருதையும், ரூ 2 லட்சம் பரிசுத் தொகையும் வழங்குவார்.
இவர் இயக்கிய முதல் படமான ‘அன்கூர்‘, மிகச்சிறந்த இயக்குனராக அவரை அடையாளம் காட்டியது. பூமிகா, மந்தான் உள்ளிட்ட பல்வேறு படங்களை இவர் இயக்கியுள்ளார்.
இயக்குனர் ஷியாம் பெனெகல் கடந்த 1934ம் ஆண்டு ஆந்திர மாநிலத்தில் பிறந்தார். இதற்கு முன் பதமஸ்ரீ, பத்மபூஷன் ஆகிய உயரிய விருதுகளையும் ஷியாம் பெனெகல் பெற்றுள்ளார்.
Posted in 2005, Aadum Koothu, Aamir, Aamir Khan, Actor, Actress, Amir, Amitab, Amitabh, Amitabh Bachaan, Amitabh Bhachan, Animation, Anniyan, Anupam, Anupam Kher, Apaharan, Art, Audio, Audiography, Award, Awards, Bengal, bengali, Best, Black, Bollywood, Bombay, Bommalata, Bommalatta, Budhadeb, Budhadeb Dasgupta, Camera, CG, Chandhran, Chandran, Cheran, Child, Children, Chopra, choreographer, choreography, Cinematography, Computer, Costume, Costumes, Daivanamathil, Dasgupta, Direction, Director, Dutt, Editing, Effects, Elxsi, Engg, Entertainment, Environment, Film, Gaurav A. Jani, Geek, Ghoshal, Graphics, Gujarat, Hindi, Indira Gandhi, Integration, Iqbal, Jayaraman, Jeyaraman, Kaalpurush, Kamal, kamalahasan, Kamalahassan, Kamalhasan, Kamalhassan, Kher, Kid, Lalgudi, Lalgudi Jayaraman, Lalkudi, Lyrics, Malayalam, Mumbai, music, Nargis, National, Paheli, Parineeta, Parineetha, Parzania, Playback, Pradeep Sarkar, Prizes, Rang de basanthi, Rang De Basanti, Recognition, Riding Solo to the Top of The World, Sarika, Screenplay, Sets, Shreya, Singer, Software, Special Effects, Sreya, Sringaram, Swarna Kamal, SwarnaKamal, Tamil, Tamil Actor, Tamil Actors, Tamil Actress, Tamil Actresses, Tamil Cinema, Tamil Film, Tamil Films, Tamil Isai, Tamil Movie, Tamil Movies, Tamil Music, Tamil Nadu, Tamil Padam, Tamil Pictures, Tamil Stars, Tamil Story, Tamil Theater, Tamil Theatres, Tamil Writer, TamilNadu, TATA, Tata Elxsi, Technology, Tharani, Thavamai Thavamirunthu, Thotta, Thotta Tharani, Thutturi, TV Chandran, Urvashi, Urvasi, Vidhu Vinod Chopra, Welfare | Leave a Comment »
Posted by Snapjudge மேல் ஜூன் 19, 2007
பாடப்புத்தகத்தில் இடம் பிடித்த அமிதாப்
இந்தி நடிகர் அமிதாப்பச்சன் புகழின் உச்சமாக தற்போது பாடப்புத்தகத்திலும் இடம் பிடித்து விட்டார். அவர் நடித்த `தீவார்'(தமிழிலில் ரஜினி நடிக்க “தீ” என்ற பெயரில் வெளியானது) படத்தில் ஒரு காட்சி.
ஷூ பாலீஷ் போட்டு பிழைப்பு நடத்தி வரும் சிறு வயது அமிதாபிடம் ஷூ பாலீஸ் போடுவதற்காக வில்லன் கோஷ்டியினர் இருவர் வருவார்கள். ஷூபாலீஸ் போட்டு முடிந்ததும் அதற்குரிய நாணயத்தை கையில் கொடுக்காமல் தூக்கி ஏறிவார்கள்.
தன்னை அவமானப்படுத்து கிறார்கள் என்று கோபமடையும் அந்த சிறுவன் “துட்ட எடுத்து கையில் கொடுத்துட்டு” போய்யா என்பான் “சின்ன வயதிலேயே உனக்கு இவ்வளவு திமிரா” என்று வில்லன்களில் ஒருவர் அடிக்கப்பாய மற்றொருவரோ அவரைத் தடுத்து கையில் காசை எடுத்து, கையில் கொடுத்துவிட்டுப் போவார்.
சற்று தொலைவில் சென்றதும் “இந்த பையன் வருங்காலத்துல பெரிய ஆளா வருவான் பாறேன்” என்பார்.
தனிமனித சுயகவுரவத்தை யாரும் எந்த நேரத்திலும் விட்டுக்கொடுக்கக் கூடாது என்பதை வலியுறுத்தும் இந்த காட்சி அதை கருத்தை வலியுறுத்துவதற்காக சமீபத்தில் வெளியான என்.சி.ஆர்.டி. சமூக அறிவியல் பாட புத்தகங்களில் இடம் பெற்றுள்ளது. ஒரு பாடமாக இந்த காட்சி விளக்கப் பட்டுள்ளது. தீவார் படத்தில் அமிதாப் பச்சனின் ஸ்டில் ஒன்றும் அதில் அச்சடிக்கப் பட்டுள்ளது.
இதன் மூலம் வாழும் காலத்திலேயே பாடப் புத்தகத்தில் இடம்பிடித்த நடிகர் என்ற பெயர் அமிதாப்புக்கு கிடைத்துள்ளது.
சினிமா காட்சிகளின் மூலம் வாழ்க்கைத் தத்துவங் களை விளக்க மேலும் பல சிறந்த படங்களின் சிறந்த காட்சிகளை பாடப்புத்தகங்களில் பாடமாக வைக்கவும் என்.சி.ஆர்.டி. முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. அப்படி பரிசீலிக்கப்படும் படங்களில் அமீர்கானின் “லகானும்” ஒன்று. சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்திய இந்தபடம் தலைமைப்பண்பின் சிறப்பை விளக்குவதற்காக பாடமாக வைக்க பரிசீலிக்கப் பட்டு வருகிறது.
ஹிருத்திக்ரோஷன், ஷாருக்கான் போன்ற தற்கால இளைஞர்களின் உள்ளங்களை அதிக அளவில் கொள்ளை கொண்ட நடிகர்களையும், பாடபுத்தகங்களில் இடம்பெறச் செய்யவேண்டும் என்ற கோரிக்கையும் வடஇந்திய மாணவர்களிடையே எழுந்துள்ளது.
Posted in Aamer, Aamir, Aamir Khan, AamirKhan, Amir, Amitab, Amitabh, Amitabh Bachaan, Amitabh Bhachan, Bachan, Bollywood, Caste, Cinema, class, Dalit, Dignity, Education, Hindi, Khan, Kollywood, Lagaan, Lagan, Lessons, Movies, NCERT, Oppressed, Rajini, Respect, School, Social Sciences, Students, Study, Textbook | Leave a Comment »
Posted by Snapjudge மேல் மார்ச் 19, 2007
சொத்து விவரங்களை மறைத்தது ஏன்? ஜெயாபச்சனுக்கு தேர்தல் கமிஷன் நோட்டீஸ்
புதுடெல்லி, மார்ச். 18-
ஆதாயம் தரும் பதவி வகிக்கும் சர்ச்சை தொடர்பாக இந்தி நடிகர் அமிதாப்பச்சனின் மனைவியும், நடிகையுமான ஜெயாபச்சன் எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார்.
பின்னர் அவர் சமாஜ் வாடி கட்சி சார்பில் உத்தர பிரதேசத்தில் இருந்து டெல்லி மேல்-சபைக்கு மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அவரது எம்.பி. பதவிக்கு மீண்டும் இப்போது ஆபத்து ஏற்படும் சூழ்நிலை உருவாகி உள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் பாராபாய்கி மாவட்டத்தைச் சேர்ந்த காங்கிரஸ் தலைவர் அமீர் ஹைதர் தேர்தல் கமிஷ னரிடம் ஒரு புகார் மனு கொடுத்தார்.
அதில் அவர், “கடந்த ஜுன் மாதம் நடந்த டெல்லி மேல்-சபை தேர்தலில் போட்டியிட்ட ஜெயாபச்சன் தனது வேட்புமனுவில் கணவர் அமிதாப்பச்சனுக்கு தவுலத் பூரில் 2 நிலங்கள் இருப்பதை தெரிவிக்காமல் மறைத்து விட்டார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண் டும்” என்று கூறியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த தேர்தல் கமிஷன் ஏற்கனவே இதுபற்றி பதில் அளிக்கும்படி ஜெயாபச்சனுக்கு நோட்டீஸ் அனுப்பி இருந்தார். அதற்கு அவர் பதில் அனுப்பவில்லை. இப்போது அவருக்கு மேலும் ஒரு நோட்டீசை தேர்தல் கமிஷன் அனுப்பி உள்ளது.
ஏப்ரல் 15-ந்தேதிக்குள் இதுபற்றி விளக்கம் அளிக்க வேண்டும். பதில் வரா விட்டால் நீங்கள் பதில் அளிக்க விரும்பவில்லை என கருதி தேர்தல் கமிஷன் தன் னிச்சையாக முடிவு எடுக்கும் என்று தேர்தல் அதிகாரி பாண்டே அந்த நோட்டீசில் கூறியுள்ளார். ஜெயாபச்சன் பதில் அளிக்காவிட்டால் அவரது எம்.பி. பதவி பறிபோகும் அபாயம் ஏற்படும்.
===================================================
முலாயம் சொத்து மதிப்பு ரூ. 2.25 கோடி
புடாவன் (உ.பி.), மார்ச் 29: வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகத் தொடரப்பட்ட வழக்கைச் சந்தித்து வரும் உத்தரப் பிரதேச மாநில முதல்வர் முலாயம் சிங் யாதவ், தமது மொத்த சொத்தின் மதிப்பு ரூ. 2.25 கோடி எனத் தெரிவித்துள்ளார்.
குனார் சட்டப்பேரவைத் தொகுதி வேட்புமனுவுடன் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் அவர் இதைத் தெரிவித்துள்ளார்.
Posted in ABCL, Amitabh, Amitabh Bachaan, Amitabh Bhachan, Assets, Bachchans, case, Corruption, Declaration, Declare, Disproportionate, Election, Hid, Hide, Jaya Bachan, Jayabachan, Jeya Bachan, Jeyabachan, kickbacks, Law, lies, MP, Mulayam, Order, Polls, Rajya Saba, Rajya Sabha, RS, Samajvadi, Samajvadi Party, Samajwadi, Samajwadi Party, UP, Uttar Pradesh, voter | Leave a Comment »
Posted by Snapjudge மேல் பிப்ரவரி 27, 2007
19-ந்தேதி ஐஸ்வர்யா-அபிஷேக் திருமணம்: ஆடம்பர அழைப்பிதழ் தயாராகிறது
ஐஸ்வர்யாராய்,அபிஷேக் பச்சன், திருமணம் நிச்சய தார்த்தம் ஒரு வழியாய் முடிந்த நிலையில் இந்தியாவின் மிகப் பெரிய ஸ்டார்கள் இல்லற வாழ்வில் இணையும் அந்த ஜொலி ஜொலிப்பு விழா எப் போது அரங்கேறும் எனற் ஆர்வம் கரைபுரண்டு ஓடுகிறது.
இந்தியாவெங்கிலும் இருந்து பல்வேறு துறைகளின் வி.வி. ஐ.பிக்கள் ஒரே இடத்தில் குவியும் அந்த திருமண விழா அடுத்த மாதம் 19-ந்தேதி நடக் கிறது. இந்த தேதி முறைப்படி அறிவிக்கப்படவில்லை என் றாலும் அதில் திருமணம் நடத்துவதற்கான வேலைகள் தடபுடலாக நடந்து வருகின்றன. நேற்று நடிகர் பிரபுவின் மகன் திருமணத்திற்கு வந்த அமி தாப்பச்சன் மண்டபத்தில் இருந்த சில முக்கிய தமிழ் திரையுலகபுள்ளிகளிடம் 19-ந்தேதி திருமணம் அன் றைக்கு வேறு வேலைகள் ஏதும் வைத்துக்கொள்ளாதீர் கள் என்று அன்போடு கேட்டுக் கொண்டாராம்.
இவர்களிடம் மட்டுமல்ல தனது நெருங்கிய உறவினர்கள், அரசியல் வி.வி.ஐ.பி.க்கள், பாலிவுட் பிரபலங்கள் என தனக்கு மிக நெருக்கமானவர்களிடம் 19ந்தேதி திருமணம் என்பதை கூறி அன்று வேறு வேலைகள் எதையும் வைத்துக்கொள்ளா மல் தயாராக இருங்கள் என்று அன்புக்கட்டளை இட்டிருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நட்சத்திர திருமணம் ஜோத்பூரில் உள்ள உனமத்பவன் அரண்மனையில் கோலாகலமாக நடக்க உள்ளது.
இதே அரண்மனையில்தான் ஹாலிவுட் நடிகை எலிசபெத் குர்லேயும் இந்திய தொழில் அதிபர் அருண் நாயரும் திருமணம் செய்ய உள்ளனர். குறிப்பாக இந்த இடத்தை தேர்ந்தெடுத்ததற்குக் காரணம் இந்த அரண்மனையில் உம்ராவ் ஜான் பட ஷூட்டிங் நடந்த போது தான் ஐஸ்வர்யாராய்க்கும் அபி ஷேக்பச்சனுக்கும் இடையே காதல் மலர்ந்ததாம்.
திருமணத்தை மிகவும் ஆடம்பரமாக நடத்த தீர்மா னிக்கப்பட்டுள்ளதால் அதற் கேற்ப விலை உயர்ந்த அழைப் பிதழ்களை அச்சடிக்க ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளன. ஒரு அழைப்பிதழின் விலை மட்டும் ரூ.5ஆயிரம் என்று கூறப் படுகிறது. அழைப்பிதழை பெறுபவர்கள் அதை வாழ்நாள் முழுவதும் போற்றி பாதுகாக்கும் அளவுக்கு அதன் வடிவமைப்பு இருக்குமாம்.
Posted in Abhishek, Abhishek Bhachan, Abishek Bachan, Abishek Bhachan, Aishwarya Rai, Aiswarya, Aiswarya Rai, Amitabh, Amitabh Bachaan, Amitabh Bhachan, Bollywood, Cinema, Gossip, Invitation, Jodhpur, Jothpur, Marriage, Palace, Rumour, Umrao Jaan, Umrao Jan, Venue, Wedding | 1 Comment »
Posted by Snapjudge மேல் பிப்ரவரி 12, 2007
ஜனாதிபதி பதவிக்கு அமிதாப்பச்சன் போட்டியா?
புதுடெல்லி, பிப். 12-
ஜனாதிபதி அப்துல்கலாமின் பதவி காலம் முடிகிறது. எனவே ஜுன் மாதத்துக் குள் புதிய ஜனாதிபதி தேர்ந் தெடுக்கப்பட வேண்டும். அப்துல் கலாமையே மீண்டும் ஜனாதிபதி பதவிக்கு நிறுத்த சில கட்சிகள் விரும்பு கின்றன. ஆனால் அவர் 2-வது முறை யாக ஜனாதிபதியாக இருக்க விரும்பவில்லை.
காங்கிரஸ் சார்பில் மத்திய மந்திரி சுஷில்குமார் ஷிண்டே, முன்னாள் மத்திய மந்திரி கரண்சிங் இருவரில் ஒருவரை நிறுத்த முடிவு செய்துள்ளது. அப்துல்கலாம் மீண்டும் போட்டியிட பாரதீய ஜனதா கூட்டணி வற்புறுத்தி வருகிறது. அவர் நிற்காவிட்டால் தற்போதைய துணை ஜனாதிபதி பைரோன்சிங் ஷேகாவத்தை நிறுத்த பாரதீய ஜனதா விரும்புகிறது.
சமாஜ்வாடி கட்சி நடிகர் அமிதாப்பச்சனை நிறுத்த விரும்புகிறது. தெலுங்கு தேசம், அ.தி.மு.க. கட்சிகளின் ஆதர வுடன் நிறுத்த அவர்கள் காயை நகர்த்தி வருகின்றனர். நான் அரசியலுக்கு ஏற்றவன் அல்ல என்று ஏற்கனவே அமி தாப்பச்சன் கூறி இருந்தார். எனவே அவர் இந்த பதவிக்கு போட்டியிட விரும்புவாராப என்று தெரியவில்லை.
கம்ïனிஸ்டு கட்சிகள் சபாநாயகர் சோம்நாத் சட் டர்ஜியை நிறுத்த விரும்பு கின்றன. இதற்கு காங்கிரசின் ஆதரவை பெறவே முயற்சித்து வருகின்றனர். ஆனால் கம்ï னிஸ்டு கட்சிக்கு துணை ஜனாதிபதி பதவியை வழங்க லாம் என காங்கிரஸ் நினைக் கிறது.
நாளை பஞ்சாப்பிலும், அடுத்து மே மாதத்தில் உத்தர பிரதேசத்திலும் சட்டமன்ற தேர்தல் நடக்க இருக்கின்றன. ஜனாதிபதி தேர்தலுக்கு எம்.எல்.ஏ.க்களும் ஓட்டு போட வேண்டும் என்பதால் தேர்தல் முடிவுக்கு பிறகு கட்சிகள் இதுபற்றி முடிவு எடுக்க உள்ளன.
Dinamani Editorial (Feb 13, 2007)
மீண்டும் கலாம்
குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் பதவிக்காலம் ஜூலை மாதத்துடன் முடிவடைய உள்ள நிலையில் அடுத்து இப் பதவிக்கான வேட்பாளராக யார் நிறுத்தப்படலாம் என்பது பற்றி ஊகங்கள் வெளிவரத் தொடங்கியுள்ளன. இப் பதவிக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் கரண்சிங், மக்களவைத் தலைவர் சோம்நாத் சட்டர்ஜி, குடியரசுத் துணைத் தலைவர் ஷெகாவத் ஆகியோரின் பெயர்கள் அடிபடுவதாகச் செய்திகள் கூறுகின்றன.
குடியரசுத் துணைத் தலைவராக இருந்து வருபவரை குடியரசுத் தலைவர் பதவிக்கு நிறுத்துவது ஒரு சம்பிரதாயமாக இருந்து வந்த காலம் உண்டு. கே.ஆர். நாராயணன், சங்கர்தயாள் சர்மா, ஆர். வெங்கட்ராமன் போன்றவர்கள் இவ்விதம் குடியரசுத் தலைவர்களாக ஆனவர்களே. எனினும் மத்தியிலும் பெருவாரியான மாநிலங்களிலும் காங்கிரஸின் ஆதிக்கம் நிலவிய காலங்களில் இதெல்லாம் சாத்தியமாக இருந்தது. இப்போது அந்த நிலை இல்லை. காங்கிரஸ் கட்சியும், பிரதான எதிர்க்கட்சியான பாஜகவும் சேர்ந்து யாரை ஆதரிக்கிறார்களோ அவர்தான் குடியரசுத் தலைவராக முடியும்.
குடியரசுத் தலைவர் தேர்தலில் நாடாளுமன்ற உறுப்பினர்களும் மாநிலங்களின் சட்டமன்ற உறுப்பினர்களும் வாக்களிக்கிறார்கள். எனவே காங்கிரஸ் தனது சொந்த பலத்தை நம்பி யாரையும் குடியரசுத் தலைவர் பதவிக்கு வேட்பாளராக நிறுத்தி வெற்றி பெறச் செய்ய இயலாது.
இப் பின்னணியில் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமை இரண்டாம் முறையாக மீண்டும் குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கலாம் என மக்களின் பல தரப்புகளில் இருந்தும் கோரிக்கைகள் எழுந்துள்ளன. இணையதளத்தில் இதற்கான தீவிர இயக்கம் நடந்து வருகிறது. இதுதொடர்பான கருத்துக்கணிப்புகளில் அப்துல் கலாமையே மீண்டும் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று பெருவாரியானவர்கள் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.
நாடு இப்போது இருக்கின்ற தருணத்தில் குடியரசுத் தலைவர் பதவிக்கு அப்துல் கலாமைவிடப் பொருத்தமானவர் வேறு யாரும் இருக்க முடியாது எனலாம். கவிஞர், எழுத்தாளர், சிந்தனையாளர், விஞ்ஞானி, அப்பழுக்கற்றவர், எந்த அரசியல் சார்பும் பெற்றிராதவர் என பல பரிமாணங்களைக் கொண்ட அப்துல் கலாம், குடியரசுத் தலைவர் பதவிக்குப் புதிய இலக்கணம் வகுத்துள்ளார். குடியரசுத் தலைவர் பதவி என்பது அலங்காரப் பதவியாகவும் அப் பதவியில் உள்ளவரை யாரும் எளிதில் நெருங்க முடியாது என்றும் இருந்த காலம் உண்டு. ஆனால் “அறிவியல் முனிவர்’ என்று வர்ணிக்கத்தக்க அப்துல் கலாம் குடியரசுத் தலைவர் மாளிகையில் இருந்து இறங்கி வந்து மக்களுடன் நெருங்கிப் பழகி வருபவர். குழந்தைகளின் அபிமானத்தைப் பெற்றவர். இளைஞர்கள் மனத்தில் லட்சியக் கனவைத் தோற்றுவித்து அவர்களிடையே எழுச்சியை உண்டாக்கி வருபவர்.
அப்துல் கலாமை மீண்டும் குடியரசுத் தலைவர் ஆக்குவதை பாஜக விரும்புவதாகத் தெரிகிறது. கடந்த டிசம்பரில் பாஜக தலைவர்கள் அப்துல் கலாமைச் சந்தித்து அவர் மீண்டும் போட்டியிடுவதானால் தங்களது ஆதரவு உண்டு என்று தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. காங்கிரஸ் கட்சி இக் கட்டத்தில் தங்கள் நிலையை அறிவிக்க விரும்பவில்லை என்று தோன்றுகிறது. நீட்டிய காகிதத்தில் கையெழுத்துப் போடுகிறவர் அல்ல என்று அப்துல் கலாம் ஒன்றுக்கும் மேற்பட்ட தடவைகள் நிரூபித்துள்ளதால் அவரை மீண்டும் நிறுத்துவதில் காங்கிரஸýக்குத் தயக்கம் இருக்கலாம். ஆனால் குடியரசுத் தலைவர் தேர்தல் முடிவை நிர்ணயிப்பதில் காங்கிரஸ், பாஜக அல்லாத கட்சிகளுக்கும் போதுமான பலம் உள்ளது.
அந்தவகையில் தமிழ்நாட்டில் உள்ள கட்சிகள் அனைத்தும் மீண்டும் அப்துல் கலாமை தேர்ந்தெடுப்பதில் முனைப்புக் காட்ட வேண்டும். அப்துல் கலாம் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் என்பதற்காக அல்ல. அவர் இந்தியாவின் மாமனிதர் என்பதற்காக.
Posted in Affiliation, Amar Singh, Amitabh, Amitabh Bachaan, Amitabh Bhachan, APJ Abdul Kalam, Assembly, Author, BJP, Byron Singh Shekavat, Byronsingh Shekawath, Communist, Cong (I), Congress, Congress (I), Congress Party, CPI, CPI (M), Election, Indira Congress, Kalam, Karan Singh, KR Narayan, Lok Sabha, Marxist, Marxist Communist, MLA, MP, Mulayam, Mulayam Singh Yadav, Politics, President, President Election, Punjab, R Venkatraman, scientist, Shankar Dayal Sharma, SJP, Somnath Chatterjee, Sushil Kumar Shinde, Thinker, UP, Uttar Pradesh, vice-president | Leave a Comment »
Posted by Snapjudge மேல் பிப்ரவரி 8, 2007
அமிதாப் மகனுக்கு பரிசளிக்கப்பட்ட ரூ.1.5 கோடி கார் யாருக்கு சொந்தமானது? அமர்சிங் விளக்கம்
புதுதில்லி, பிப். 9: அமிதாப் மகன் அபிஷேக் பச்சனின் பிறந்த நாளன்று பரிசளிக்கப்பட்ட ரூ.1.5 கோடி மதிப்புள்ள பெண்ட்லே சொகுசு காரை, தானே விலை கொடுத்து வாங்கியதாக சமாஜவாதி கட்சித் தலைவர் அமர்சிங் கூறியுள்ளார்.
லண்டனில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட அந்த காருக்கு, அனைத்து சுங்கத் தீர்வைகளையும் முறையாகச் செலுத்திவிட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
காரின் பதிவுக்காக (ரெஜிஸ்ட்ரேஷன்) விண்ணப்பித்த ஆவணத்தில் அமர்சிங் “ஜல்ஸô, மும்பை’ என வீட்டு முகவரியை அளித்திருந்தார். இந்த முகவரி குறித்து ஐயம் எழுப்பிய தில்லி போக்குவரத்து துறை, அது தவறான தகவல் என்றால் அமர்சிங் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என புதன்கிழமை கூறியிருந்தது.
இதை மறுத்துள்ள அமர்சிங், அமிதாப் குடும்பத்துக்குச் சொந்தமான ஜல்ஸô இல்லத்தை, மும்பைக்கு செல்லும்போது தங்குவதற்காக, கடந்த 20 ஆண்டுகளாக பயன்படுத்தி வருவதாகவும், அமிதாப் இதை மறுக்கும் பட்சத்தில் சட்ட நடவடிக்கைக்கு தயாராக இருப்பதாகவும் கூறியுள்ளார்.
மேலும், தவறான தகவலை அளித்ததற்காக தில்லி மாநில முதல்வர் மற்றும் தில்லி போக்குவரத்துத் துறை அமைச்சர் ஹாரூண் யூசுப் ஆகியோர் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்போவதாகவும் அமர்சிங் எச்சரித்துள்ளார்.
பெண்ட்லே காரை அபிஷேக் பச்சனுக்கு பரிசளித்தது யார் என்பதைக் கூற அவர் மறுத்துவிட்டார்.
அபிஷேக் பச்சனுக்கு வெளிநாட்டு கார்: அமர்சிங் ரூ. 85 லட்சம் சுங்க வரி செலுத்தினார்
புதுடெல்லி, பிப். 12-
பிரபல ஹாலிவுட் நடிகர் அமிதாப்பச்சனின் மகனும், நடிகருமான அபிஷேக் பச்சன் கடந்த 5-ந் தேதி தனது பிறந்த நாளை கொண்டாடினார்.
இதையொட்டி அமிதாப்பின் நெருங்கிய குடும்ப நண்பரும், சமாஜ்வாடி கட்சி பொதுச் செயலாளருமான அமர்சிங் வெளிநாட்டு காரை பிறந்த நாள் பரிசாக வழங்கினார்.
விலை உயர்ந்த காரை அபிஷேக் பச்சனுக்கு பரிசாக வழங்கியது சர்ச்சையை கிளப்பியது. உடனே அது தனது கார் அபிஷேக்குக்கு பரிசாக கொடுக்கவில்லை என்று அமர்சிங் மறுத்து இருந்தார்.
இந்த நிலையில் வெளிநாட்டு காருக்கு அமர்சிங் ரூ. 85 லட்சம் சுங்க வரி கட்டியுள்ளது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக டெல்லி போக்குவரத்து மந்திரி ஹாரூன் ïசுப் கூறியதாவது:-
லண்டனில் இருந்து `பென்ட்லி’ கார் கடந்த 31-ந் தேதி விமானம் மூலம் வந்தது. இந்த காரின் மதிப்பு ரூ. 1.76 கோடி என்று கூறி அதற்கு ரூ. 85 லட்சம் சுங்க வரியை அமர்சிங் செலுத்தியுள்ளார்.
கடந்த 1-ந் தேதி அந்த கார் வடக்கு டெல்லியில் உள்ள போக்குவரத்து அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டது. அந்த காருக்கு நம்பர் வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
Posted in Abhishek, Abhishek Bhachan, Abishek Bachan, Abishek Bhachan, abuse, Aishwarya Rai, Aiswarya, Aiswarya Rai, Amar Singh, Ambani, Amitabh, Amitabh Bachaan, Amitabh Bhachan, Auto, Automotive, Bachchans, Bentley, Birthday, Bribe, Bribery, car, Chief Minister, CM, Congress, Congress(I), Corruption, Customs, customs duties, Delhi, Extravaganza, general secretary, Gift, Harun Yusuf, Import, Income Tax, kickbacks, London, Luxury, maharashtra, Mangal, Mangalsutra, Marriage, Mulayam Singh, Mulayam Singh Yadav, New Delhi, owner, peepal tree, Power, Reception, Reliance, Samajvadi Party, Samajwadi Party, Sheila Dikshit, SJP, SP, tax evasion, Transport Department, Transport Minister | Leave a Comment »
Posted by Snapjudge மேல் ஜனவரி 17, 2007
அபிஷேக்-ஐஸ்வர்யா ஜெய்ப்பூரில் திருமணம்: 6 ஆயிரம் பேர் பங்கேற்கலாம்
ஜெய்ப்பூர், ஜன. 17-
பிரபல இந்தி நட்சத்திரங்களான அபிஷேக் பச்சனும், ஐஸ்வர்யாராயும் காதலித்து வருகின்றனர். இந்த காதலுக்கு ஏற்கனவே பச்சைக் கொடி காட்டப்பட்டது. அனைவ ராலும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட இவர்களது திருமண நிச்சயதார்த்தம் மும்பையில் கடந்த 14-ந் தேதி இரவு நடந்தது. நிச்சயதார்த்தத்தின் போது திருண தேதி முடிவு செய்யப்படவில்லை.
பிப்ரவரி 19 அல்லது மார்ச் 7-ந்தேதி திருமணம் நடை பெறலாம் என்று ïகங்கள் வெளியாகி உள்ளது.
அபிஷேக்-ஐஸ்வர்யாராய் திருமணமோ அல்லது திருமண பார்ட்டியோ ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெறலாம் என்று ïகங்கள் எழுந்துள்ளன. பாரம் பரியமிக்க ஜெய்ப்பூர் அல்லது உதய்ப்பூரில் திருமணம் நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அமிதாப்பச்சனின் குடும்பத்தினர் ராஜஸ்தான் சென்று திருமணம் நடைபெறும் இடம் குறித்து பேசி வருகிறார்கள். சமூக அந்தஸ்தில் அமிதாப்பச்சன் மிக உயர்ந்த இடத்தில் உள்ளார். இதனால் அவரது மகன் திருமணத்திற்கு அரசியல் பிரபலங்கள, முக்கிய பிரமுகர்கள், தொழில் அதிபர்கள், இந்தி நடிகர், நடிகைகள் என 6 ஆயிரம் பேர் பங்கேற்கலாம் என்று கருதப்படுகிறது.
திருமண நிச்சயதார்த்தம் முடிந்த மறுநாள் சூட்டிங்கில் பங்கேற்பதற்காக ஜெயா பச்சன் மகன் அபிஷேக்குடன் ராஜஸ்தான் சென்றார். அவர் ஜெய்ப்பூர் அரண்மனையின் முன்னாள் ராணி பத்மா தேவியை சந்தித்து பேசினார். இதனால் ஜெய்ப்பூர் அரண்மனையில் திருமணம் நடை பெறலாம் என்று கருதப்படுகிறது.
ஜெய்ப்பூர் அரண்மனையில் திருமணத்தை நடத்த அமிதாப்பச்சன் விரும்புகிறார். முக்கிய வி.ஐ.பி.க்கள் வருவதால் பாதுகாப்பு எப்படி கொடுக்க முடியும் என்ற கவலையும் அவருக்கு உள்ளது என்று ஜெய்ப்பூர் அரண்மனை வட்டாரங்கள் தெரிவித்தனர்.
அதே நேரத்தில் உதய்பூரிலும் திருமண பார்ட்டி நடைபெறலாம் என்ற தகவலும் வெளியாகி உள்ளது. அங்குள்ள ஜகா மந்திர் கார்டன் புகழ் பெற்றது. இங்கு 3 ஆயிரம் பேர் பங்கேற்கும் வகையில்தான் இட வசதி உள்ளது. உதய்பூரில் நடிகை ரவீணாதண்டன் – தொழில் அதிபர் அனில் தாண்டனி திருமணம் 2004-ம் ஆண்டும், இந்தி நடிகர் விக்ரம் சாவல் திருமண பார்ட்டி 2006-ம் ஆண்டிலும் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
Posted in Abhishek Bhachan, Abishek Bachan, Abishek Bhachan, Aishwarya Rai, Aiswarya, Aiswarya Rai, Amitabh, Amitabh Bachaan, Amitabh Bhachan, Attendance, Dates, Engagement, Gossip, Invites, Jaipur, Kisu Kisu, Marriage, Reception, Rumor, Venue | Leave a Comment »
Posted by Snapjudge மேல் ஜனவரி 16, 2007
திருமணத்தின் போது கட்டுவதற்காக ஐஸ்வர்யாவுக்கு ரூ.2 லட்சத்தில் பனாரஸ் பட்டுப்புடவை
வாரணாசி, ஜன. 16-
அபிஷேக் பச்சன்- ஐஸ்வர்யாராய் நிச்சயதார்த்தம் நடந்ததையொட்டி திருமணத் திற்கான ஏற்பாடுகளை அமிதாப்பச்சன் குடும்பத்தினர் மும்முரமாக செய்து வருகி றார்கள்.
திருமணத்தின் போது தனது மருமகள் விலை உயர்ந்த பட்டுப்புடவையை கட்ட வேண்டும் என்பதை அமிதாப்பச்சன் விரும்புகிறார். இதற்காக அவர் வாரணாசியில் உள்ள பிரபல கடையில் ஆர்டர் கொடுத்துள்ளார்.
திருமணத்தின் போது ஐஸ்வர்யாராய் கட்டுவதற்காக பனாரஸ் பட்டுப்புடவை தயாரிக்கப்பட்டு வருவதாகவும் இந்த மாத இறுதியில் தயா ராகி விடும் என்று கடை உரிமையாளர் ஜலான் தெரி வித்தார். பனாரஸ் லேகன்யா பட்டுப்புடவையின் விலையை தெரிவிக்க அவர் மறுத்து விட்டார். ஆனால் அதன் விலை ரூ.2 லட்சம் இருக்கும் என்று தெரிய வந்துள்ளது.
21 புடவைகள்
கடந்த நவம்பர் 27-ந் தேதி அமிதாப்பச்சன் குடும்பத்தினர் வாரணாசி சென்ற போது ரூ.50 ஆயிரம் மதிப்பில் 11 சேலைகளை வாங்கி சென்றனர். அப்போது ரூ.2 லட்சத்து 33 ஆயிரம் மதிப்பில் 21 சேலைகளுக்கு ஆர்டர் கொடுக்கப்பட்டது. அந்த சேலைகள் நேற்று அமிதாப்பச்சன் வீட்டிற்கு பார்சலில் அனுப்பப்பட்டன.
Posted in Abhishek Bhachan, Abishek Bachan, Abishek Bhachan, Aishwarya Rai, Aiswarya, Aiswarya Rai, Amitabh Bhachan, Benaras, Benares, Marriage, Reception, Sarees, Saris, Silk Saree, Silk Sari, Varanasi | Leave a Comment »
Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 26, 2006
ஒரு படத்துக்கு ரூ. 12 கோடி: அதிக சம்பளம் வாங்கும் நடிகர் ஹிருத்திக்ரோஷன்
இந்தி திரையுலகில் பொது வாக ஷாருக்கான், சல்மான் கான், அமீர்கான் ஆகிய 3 கான் நடிகர்களின் ஆதிக்கம் தான் மோலோங்கியிருக்கும். ஆனால் இவர்களுக்கு போட்டி யாக தனி ரூட்டில் வளர்ந்து, இன்று அந்த 3 நடிகர்களின் சம்பளத்தையே தூக்கிச் சாப்பிடும் அளவிற்கு தனது புதிய படங்களுக்கு சம்பளம் பெற இருக்கிறார் ஹிருத்திக் ரோஷன்.
ஷாருக்கான், சல்மான், அமீர்கான் ஆகிய 3 பேரும் ஒரு படத்தில் நடிக்க 5லிருந்து 8 கோடி ரூபாய் வரை சம்பளம் பெற்று வருகிறார்கள். இவர் களுக்கு இணையாக அமிதாப் பச்சனும் சம்பளம் பெற்று வருகிறார்.
இந்நிலையில் ஹிருத்திக் ரோஷனின் வளர்ச்சியை பார்த்து வியந்த அனில் அம்பாணியின் அட்லாப்ஸ் பட நிறுவனம் அவரை வைத்து 3 புதிய படங்களைத் தயாரிக்க உள்ளது.
ஒரு படத்திற்கு ரூ. 12 கோடி வீதம் இந்த 3 படங்களிலும் நடிக்க 35 கோடி ரூபாய்க்கு ஹிருத்திக் ரோஷனை அந் நிறுவனம் ஒப்பந்தம் செய் துள்ளதாகக் கூறப்படுகிறது.
ஒரு படத்திற்கு ரூ. 12 கோடி வாங்குவதன் மூலம் இந்திப் பட உலகில் அதிக சம்பளம் பெறும் நடிகர் என்ற பெயரும் இந்தியாவில் ரஜினிக்கு அடுத்தபடியாக அதிக சம்பளம் பெறும் நடிகர் என்ற பெயரும் ஹிருத்திக்குக்கு கிடைத்துள்ளது.
இந்த ஒப்பந்தம் பற்றி கேள்விப்பட்ட பல பாலிவுட் நட்சத்திரங்கள் ஆச்சர்யத்தில் உள்ளனர்.
இந்த 3 படங்களுக்குமான சம்பள பணத்தை செக் காகவே அட்லாப்ஸ் நிறு வனம் ஹிருத்திக்குக்கு வழங்கப் போவதாகவும், இதன் மூலம் கறுப்புப் பணப் புழக்கம் சினிமா வில் தவிர்க்கப்படுவ தற்கு இது உதாரண ஒப்பந்த மாக அமையும் என்றும் கூறப் படுகிறது.
இந்த ஒப்பந்தம் பற்றிய தக வல்களை அட்லாப்ஸ் நிறு வனத்திடம் கேட்ட போது, “அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் வரை வெளி யாகும் எந்த தகவலும் உத்தேச மானவையே” என்று கூறி னர்.
Posted in Aamir Khan, Actor salary, Adlabs, Amitabh Bhachan, Anil Ambani, Bollywood, Compensation, Hindi, Hrithik Roshan, Movies, Salman Khan, Sharukh khan | Leave a Comment »
Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 4, 2006
ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்வாரா முலாயம்?
நீரஜா சௌத்ரி
தமிழில்: சாரி.
இலவசங்களை அள்ளி வழங்க, மீரட்டுக்குக் கடந்த வாரம் சென்றிருந்தார் உத்தரப் பிரதேச முதலமைச்சர் முலாயம் சிங் யாதவ்.
- வேலை இல்லாத இளைஞர்களுக்கு ஆண்டுதோறும் ஆறாயிரம் ரூபாய்,
- இன்டர்மீடியட் வரை படித்த பெண்களுக்கு இருபதாயிரம் ரூபாய் என்ற இரட்டைச் சலுகையைத் தீவிரமாக அமல்படுத்தி வருகிறார் முலாயம்.
யாதவர்கள், முஸ்லிம்களையும் தாண்டி பிற வகுப்பினரிடையேயும் தனக்கு வாக்கு வங்கிகள் ஏற்படும் என்று அரசியல் ஆதாயக் கணக்கு போடுகிறார் முலாயம்.
அத்துடன், தனது பழைய சோஷலிஸ்ட் சகா ஜார்ஜ் பெர்னாண்டஸ் சேர்த்துக் கொள்ளவும் முற்பட்டிருக்கிறார். ராம் மனோகர் லோகியாவிடம் அரசியல் பாலபாடம் பயின்று மது லிமாயே, கர்ப்பூரி தாக்கூர், சரண் சிங் ஆகியோரிடம் குருகுலவாசம் செய்த முலாயம் சிங் சமீபத்திய காலத்தில் அமிதாப் பச்சன், சுபவிரத ராய், அனில் அம்பானி ஆகிய செல்வச் சீமான்களிடம் நட்பு கொண்டார். சட்டப் பேரவைக்கு பொதுத்தேர்தல் நெருங்கும் இவ்வேளையில் ஜானேஸ்வர் மிஸ்ரா, வேணி பிரசாத் வர்மா போன்ற “”மறக்கப்பட்ட சமதர்ம சகாக்களை” மீண்டும் தோளோடு தோள் சேர்க்க ஆரம்பித்துள்ளார்.
மக்கள் ஜனநாயக கட்சி (பி.டி.பி.) என்ற அமைப்பிலிருந்து, தனது நண்பரும் ஷியா பிரிவு முஸ்லிம்களின் மத குருவுமான ஜாவத் கல்பேயை விலக்கி, மீண்டும் தன் பக்கம் அழைத்துவந்துவிட்டார்.
உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டவுடனேயே உத்தரப் பிரதேசத்தில் அரசியல் அரங்கு சூடுபிடிக்க ஆரம்பித்துவிட்டது. காங்கிரஸ், பாரதீய ஜனதா இரண்டும் வலுவிழந்த நிலையில் இருப்பதால், அவற்றின் வசம் இருந்த நகராட்சிகளை சமாஜவாதி கட்சி கைப்பற்றும் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது.
அதே சமயம், எங்கும் எதிலும் ஊழல், சட்டம்-ஒழுங்கு நிலையில் சீர்குலைவு போன்றவற்றால் நடுத்தர வர்க்கம் சமாஜவாதி கட்சிக்கு எதிராகத் திரும்பியிருக்கிறது. எல்லா வேலையும் யாதவர்களுக்குத்தான் தரப்படுகிறது, எங்கும் முலாயமின் உறவினர்கள் ஆதிக்கமே அதிகரித்து வருகிறது என்ற எண்ணமும் மக்களிடையே பரவி வருகிறது.
ஈரான் அணுசக்தி நிலையங்களை ஐ.நா. குழு பார்வையிடத் திறந்துவிட வேண்டும் என்று கூறியதாலும், அமெரிக்காவுக்கு ஆதரவாக வெளியுறவுக் கொள்கையில் விட்டுக்கொடுப்பதாலும் முஸ்லிம்கள் காங்கிரஸ் கட்சியை ஆதரிக்காமல், தன்னையே முழு மூச்சாக ஆதரிப்பார்கள் என்று கருதுகிறார் முலாயம்.
ராஜபுத்திரர்களின் ஆதரவு நீடிக்கிறது என்பது முலாயமுக்கு மகிழ்ச்சியான விஷயமாகும். ராஜபுத்திரர்களும் பிராமணர்களும் என்றைக்கும் ஒரே அணியில் இருந்தது கிடையாது. இந்த முறை பிராமணர்கள், மாயாவதியை ஆதரிக்க முடிவு செய்துள்ளனர்.
அஜீத் சிங் தலைமையிலான ராஷ்ட்ரீய லோக தளம் கட்சி யாருடன் கூட்டு சேரப் போகிறது என்பது கவனிக்கப்பட வேண்டும். கடந்த பேரவைத் தேர்தலில் அக்கட்சி மேற்கு மாவட்டங்களில் 15 இடங்களை எளிதாகக் கைப்பற்றியிருக்கிறது. இப்போது ஆளும் கூட்டணியில் இடம் பெற்றாலும், தேர்தல் நேரத்தில் யாருடனும் அக் கட்சி கூட்டுசேர வாய்ப்பு இருக்கிறது.
இந்த முறை தேர்தல் முடிவை நிர்ணயிக்கப்போகிற முக்கிய சக்தி வி.பி. சிங்தான். அவரைப் பற்றித்தான் முலாயம் மிகவும் கவலைப்படுகிறார். இரண்டு நாளைக்கு ஒருமுறை சிறுநீரக சுத்திகரிப்பு செய்துகொள்ள வேண்டிய மோசமான உடல் நிலையுடன் உள்ள வி.பி. சிங்கின் பொதுக்கூட்டங்களுக்கு மக்கள் தாங்களாகவே பெரும் எண்ணிக்கையில் வருகின்றனர். அவருடைய விவசாயிகள் ஆதரவு, ஏழைகள் ஆதரவு பேச்சுகளுக்கு அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது.
சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்கு விவசாயிகள் இடையே பலத்த எதிர்ப்பு இருக்கிறது என்று உணர்ந்து கொண்டதால் இப்போது அடக்கி வாசிக்க ஆரம்பித்திருக்கிறது காங்கிரஸ் கட்சி.
முலாயம் சிங் யாதவுக்கு ஆதரவாளர்கள் யாரோ, அவர்களே வி.பி. சிங்குக்கும் ஆதரவாளர்களாக உள்ளனர். வி.பி. சிங்குக்கு பதவி ஆசை கிடையாது என்பது அவருக்குக் கூடுதல் பலம். வி.பி. சிங் அமைத்துள்ள ஜன மோர்ச்சா என்ற கதம்பக் கூட்டணியில்
- இந்திய கம்யூனிஸ்ட் கட்சி,
- தேசியவாத காங்கிரஸ் கட்சி,
- ராஷ்ட்ரீய ஜனதா தளம்,
- ராம்விலாஸ் பாஸ்வானின் லோக ஜனசக்தி,
- உதித் ராஜின் நீதிக்கட்சி,
- இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்),
- பாரதீய கிசான் யூனியன்,
- மக்கள் ஜனநாயக முன்னணி,
- ராஜ் பப்பரின் ஜன மோர்ச்சா ஆகிய சிறிய கட்சிகள் இடம் பெற்றுள்ளன. ஆட்சியைப் பிடிக்கிறதோ இல்லையோ, இக் கூட்டணி முலாயம் சிங் யாதவுக்கு எதிரான உணர்வை வளர்த்துக் கொண்டிருக்கிறது. இதனால்தான் முலாயம் சிங் கலக்கம் அடைந்திருக்கிறார்.
இந்தமுறை பேரவைத் தேர்தல் முலாயமுக்கு மிகப்பெரிய அக்னிப் பரீட்சையாக அமையக்கூடும். அவர் மட்டும் அல்ல, மற்றவர்களும் நம்பிக்கையோடு இல்லை. இம் முறையும் பேரவைத் தேர்தலுக்குப் பிறகு “”குதிரை பேரம்தான்” தலைதூக்கும் என்று தெரிகிறது.
Posted in Ajith Singh, Amitabh Bhachan, Anil Ambani, BDP, BJP, BSP, Congress (I), CPI-ML, Jaaneswar Mishra, Local Body Polls, Mayawathi, Mulayam Singh Yadav, Neeraja Chowdhry, Ram Vilas Paswan, Samajwadi Party, Shia, Tamil, Uttar Pradesh, Veni Prasad, VP Singh | Leave a Comment »