Posted by Snapjudge மேல் மே 28, 2007
தேர்தல் தோல்வியால் தொழில்துறையினருக்கு பிரதமர் அறிவுரை வழங்கவில்லை: அம்பிகா சோனி
புதுதில்லி, மே 28: தேர்தல் தோல்வியாலோ அல்லது இடதுசாரி கட்சிகளின் நிர்பந்தத்தினாலோ தொழிற்துறையினருக்கு பிரதமர் அறிவுரை வழங்கவில்லை என்று மத்திய அமைச்சர் அம்பிகா சோனி விளக்கம் அளித்துள்ளார். ஆனால் அதே நேரம், மத்திய அமைச்சரவையின் மாண்புகளை மணிசங்கர் அய்யர் உடைத்து விட்டார் என்று அவர் குற்றம்சாட்டினார்.
“தொழிற்துறையினருக்கு பிரதமர் மன்மோகன் சிங் அறிவுரை வழங்கியது என்பது தேர்தல் ஆதாயத்திற்காக என்று நான் கருதவில்லை. ஒரு பிரச்னை தொடர்பாக என்ன முடிவு எடுக்க வேண்டும், எப்போது எடுக்க வேண்டும் என்பதை தீர்மானிக்கும் சக்தியாக தேர்தல் முடிவு விளங்குகிறது. இடதுசாரி கட்சிகளின் நிர்பந்தத்தினாலும் பிரதமர் அவ்வாறு பேசவில்லை’ என்றார் அம்பிகா சோனி.
இந்திய தொழில், வர்த்தக கூட்டமைப்பின் ஆண்டு பொதுக்குழுக் கூட்டம் வியாழக்கிழமை புதுதில்லியில் நடந்தது. அதில் பேசிய பிரதமர் மன்மோகன் சிங், பொருளாதார ரீதியில் பின்தங்கியவர்களுக்கு வேலைவாய்ப்பு, கல்வி உதவி வழங்க தொழில்துறையினர் முன்வர வேண்டும், மாறாக உரிமையாளர்கள் மற்றும் உயர் அதிகாரிகளின் சொத்துகளை அதிகரித்து காட்டுவதற்காக ஊதியத்தை உயர்த்திக் கொண்டே செல்லக் கூடாது என்றார்.
இந்நிலையில் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் மத்திய அமைச்சர் மணிசங்கர் அய்யர், இந்தியப் பொருளாதாரம் 9.2 சதவீதம் வளர்ச்சி அடைந்திருப்பதாக பெருமைப்பட்டுக் கொள்கிறோம், ஆனால் அதன் பலன் 10 அல்லது 15 சதவீத மேல்தட்டு மக்களை மட்டுமே அடைந்திருக்கிறதே தவிர சராசரி ஏழையின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவில்லை, விலைவாசி உயர்வு, வேலையின்மை, வறுமை ஆகியவற்றால் அடித்தட்டு மக்களின் விழிபிதுங்குகிறது, அரசுக்கு எதிரான அபாய மணி அலறுகிறது என்றார்.
சிஎன்என்- ஐபிஎன் தொலைக்காட்சியில் ஞாயிற்றுக்கிழமை ஒளிபரப்பான கரண் தபார் நிகழ்ச்சியில் பங்கேற்று மத்திய அமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலருமான அம்பிகா சோனி மேலும் கூறியது:
பொது இடத்தில் பிரதமர் பேசியதற்கும் மணிசங்கர் அய்யர் பேசியதற்கும் வேறுபாடு உள்ளது. மத்திய அமைச்சர் பதவியும், பிரதமர் பதவியும் ஒன்று அல்ல. மத்திய அமைச்சரவையில் இடம் பெற்றுக் கொண்டே இது போன்ற பொது நிகழ்ச்சிகளில் மணிசங்கர் எவ்வாறு இப்படி பேசலாம்?.
ஒரு பிரச்னை குறித்து அமைச்சரவைக்குள் மாறுபட்ட கருத்துகள் இருக்கலாம். அது தொடர்பாக விவாதங்கள் கூட நடந்திருக்கலாம்.
அப்படி இருக்கையில் அதை வெளியிடங்களில் பேசுவது தவறு. இதன் மூலம் மத்திய அமைச்சரவையின் மாண்புகளை அய்யர் உடைத்துவிட்டார் என்றார்.
Posted in Aiyar, Ambiga, Ambika, Ambika Soni, Business, CEO, Comment, Communist, Compensation, Congress, CPI, Economy, Election, Employment, executive, executives, Finance, Government, Govt, Industry, Iyer, Jobs, Mani, Mani Shankar Aiyar, Manmohan, Marxist, Needy, Pay, PM, Poor, Prime Minister, Profit, Rich, Salary, Shares, Soni, Stocks, UPA, Wealth, Wealthy, Welfare | Leave a Comment »
Posted by Snapjudge மேல் திசெம்பர் 10, 2006
கதாநாயகிகள் சோக கதை: அதிகரிக்கும் நடிகைகள் விவாகரத்து
சென்னை, டிச. 9-
நடிகைகள் விவகாரத்து அதிகரிக்கிறது.
திருமணத்துக்கு பின் கணவனை பிரிந்து வாழும் நடிகைகள் எண்ணிக்கை சமீப காலமாக அதிகரித்து வருகிறது. விவாகரத்து செய்வோரும் பெருகி வருகிறார்கள்.
அண்மையில் மரணம் அடைந்த ஸ்ரீவித்யாவின் கடைசி காலம் கல் நெஞ்சையும் இளக வைக்கும். கணவனை பிரிந்த அவர் கோவிலில் கடைசி நாட்களை ஒட்டினார். பின்னர் ஆஸ்பத்திரியில் பரிதாபமாக மூச்சை நிறுத்தினார்.
அம்பிகா கதாநாயகியாக வலம் வந்த காலம் மறக்க முடியாதவை அந்த ஏழு நாட்கள், நான் பாடும் பாடல், சகலகலா வல்லவன், எங்கேயோ கேட்ட குரல், படிக்காதவன் என இவர் நடித்த ஹிட் படங்கள் நிறைய ஆனாலும் திருமண வாழ்க்கை தோற்றது.
- லட்சுமி,
- நளினி,
- சுகன்யா,
- சொர்ணமால்யா,
- அஞ்சு,
- பானுப்பிரியா,
- கவுதமி,
- ஐஸ்வர்யா என இல்லறத்தில் நொடிந்த நாயகிகள் பட்டியல் நீழ்கிறது.
- வனிதா விஜயகுமாரும் விவகாரத்துக்கு மனு போட்டுள்ளார். மேலும் சில நடிகைகள் வெளியே தெரியாமல் பிரிந்து வாழ்கிறார்கள்.
கதாநாகிகள் வாழ்க்கைத் தான் இப்படி நொறுங்கி கிடக்கிறதே தவிர ஆடை குறைப்பு செய்து அலுக்கி குலுக்கி ஆடிய கவர்ச்சி நடிகைகள் இல்லற வாழ்க்கையில் சந்தோஷமாக உள்ளனர் என்பது விசேஷம்.
கவர்ச்சிக்கு ஒரு காலத்தில் பரபரப்பாக பேசப்பட்டவர் ஜெயமாலினி. அவர் இல்லற வாழ்க்கை இனிமையாக நடக்கிறது. அவரது மகள் ஜோதி மீனா கவர்ச்சி ஆட்டத்தில் கலக்குகிறார்.
டிஸ்கோ சாந்தி தெலுங்கு நடிகர் ஸ்ரீஹரியை திருமணம் செய்து சந்தோஷமாக வாழ்கிறார். ஸ்ரீஹரி மாமியார் வீட்டுக்கு மளிகை சாமான்கள் வாங்கிப்போடுவது வரை எல்லா உதவிகளையும் இன்று வரை செய்துவருகிறாராம். டிஸ்கோ சாந்தியின் தங்கை லலிதா குமாரி வில்லன் நடிகர் பிரகாஷ்ராஜை திருமணம் செய்து மகிழ்ச்சியாக குடும்பம் நடத்துகிறார்.
முன்னாள் கவர்ச்சி கன்னி அனுராதா டான்ஸ் மாஸ்டர் சதீஷை திருமணம் செய்து இணை பிரியாமல் வாழ்கிறார். ஒரு விபத்தில் அனுராதா கணவர் கோமா ஸ்டேஜில் பல நாட்கள் படுத்த படுக்கையானார். அப்போது கணவரை குழந்தை போல் பாவித்து அருகில் இருந்து கவனித்து காப்பாற்றினார்.
குடும்ப பாங்காக கதாநாயகர்கள் ஜோடியாக நடித்து பெண்கள் மனதில் இடம் பிடித்த கதாநாயகிகள் வாழ்க்கையும் மோசமாக நடித்து பெண்களை முகம் சுழிக்க வைத்த கவர்ச்சி நடிகைகள் வாழ்க்கையும் நிஜத்தில் உல்டாவாக மாறி இருப்பது வியப்பான விஷயம்.
இன்னொரு புறம் காதல் தோல்வியால் கதாநாயகிகள் தற்கொலை முயற்சியில் ஈடுபடுவதும் அதிகமாகியுள்ளது.
தற்கொலை முயற்சியை தடுக்கவும் குடும்ப வாழ்க்கையை இனிமைப்படுத்தவும் நடிகர் நடிகைகளுக்கு விழிப்புணர்வு முகாம்களை நடத்த நடிகர் சங்கம் முடிவு செய்துள்ளது.
Posted in Ambiga, Ambika, Cinema, Kollywood, Maalaimalar, Tamil Actress, Tamil Films, Tamil Movies | Leave a Comment »
Cut excessive pay to CEOs: Manmohan Singh – Ambika Soni defends Prime Minister’s premise
Posted by Snapjudge மேல் மே 28, 2007
தேர்தல் தோல்வியால் தொழில்துறையினருக்கு பிரதமர் அறிவுரை வழங்கவில்லை: அம்பிகா சோனி
புதுதில்லி, மே 28: தேர்தல் தோல்வியாலோ அல்லது இடதுசாரி கட்சிகளின் நிர்பந்தத்தினாலோ தொழிற்துறையினருக்கு பிரதமர் அறிவுரை வழங்கவில்லை என்று மத்திய அமைச்சர் அம்பிகா சோனி விளக்கம் அளித்துள்ளார். ஆனால் அதே நேரம், மத்திய அமைச்சரவையின் மாண்புகளை மணிசங்கர் அய்யர் உடைத்து விட்டார் என்று அவர் குற்றம்சாட்டினார்.
“தொழிற்துறையினருக்கு பிரதமர் மன்மோகன் சிங் அறிவுரை வழங்கியது என்பது தேர்தல் ஆதாயத்திற்காக என்று நான் கருதவில்லை. ஒரு பிரச்னை தொடர்பாக என்ன முடிவு எடுக்க வேண்டும், எப்போது எடுக்க வேண்டும் என்பதை தீர்மானிக்கும் சக்தியாக தேர்தல் முடிவு விளங்குகிறது. இடதுசாரி கட்சிகளின் நிர்பந்தத்தினாலும் பிரதமர் அவ்வாறு பேசவில்லை’ என்றார் அம்பிகா சோனி.
இந்திய தொழில், வர்த்தக கூட்டமைப்பின் ஆண்டு பொதுக்குழுக் கூட்டம் வியாழக்கிழமை புதுதில்லியில் நடந்தது. அதில் பேசிய பிரதமர் மன்மோகன் சிங், பொருளாதார ரீதியில் பின்தங்கியவர்களுக்கு வேலைவாய்ப்பு, கல்வி உதவி வழங்க தொழில்துறையினர் முன்வர வேண்டும், மாறாக உரிமையாளர்கள் மற்றும் உயர் அதிகாரிகளின் சொத்துகளை அதிகரித்து காட்டுவதற்காக ஊதியத்தை உயர்த்திக் கொண்டே செல்லக் கூடாது என்றார்.
இந்நிலையில் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் மத்திய அமைச்சர் மணிசங்கர் அய்யர், இந்தியப் பொருளாதாரம் 9.2 சதவீதம் வளர்ச்சி அடைந்திருப்பதாக பெருமைப்பட்டுக் கொள்கிறோம், ஆனால் அதன் பலன் 10 அல்லது 15 சதவீத மேல்தட்டு மக்களை மட்டுமே அடைந்திருக்கிறதே தவிர சராசரி ஏழையின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவில்லை, விலைவாசி உயர்வு, வேலையின்மை, வறுமை ஆகியவற்றால் அடித்தட்டு மக்களின் விழிபிதுங்குகிறது, அரசுக்கு எதிரான அபாய மணி அலறுகிறது என்றார்.
சிஎன்என்- ஐபிஎன் தொலைக்காட்சியில் ஞாயிற்றுக்கிழமை ஒளிபரப்பான கரண் தபார் நிகழ்ச்சியில் பங்கேற்று மத்திய அமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலருமான அம்பிகா சோனி மேலும் கூறியது:
பொது இடத்தில் பிரதமர் பேசியதற்கும் மணிசங்கர் அய்யர் பேசியதற்கும் வேறுபாடு உள்ளது. மத்திய அமைச்சர் பதவியும், பிரதமர் பதவியும் ஒன்று அல்ல. மத்திய அமைச்சரவையில் இடம் பெற்றுக் கொண்டே இது போன்ற பொது நிகழ்ச்சிகளில் மணிசங்கர் எவ்வாறு இப்படி பேசலாம்?.
ஒரு பிரச்னை குறித்து அமைச்சரவைக்குள் மாறுபட்ட கருத்துகள் இருக்கலாம். அது தொடர்பாக விவாதங்கள் கூட நடந்திருக்கலாம்.
அப்படி இருக்கையில் அதை வெளியிடங்களில் பேசுவது தவறு. இதன் மூலம் மத்திய அமைச்சரவையின் மாண்புகளை அய்யர் உடைத்துவிட்டார் என்றார்.
Posted in Aiyar, Ambiga, Ambika, Ambika Soni, Business, CEO, Comment, Communist, Compensation, Congress, CPI, Economy, Election, Employment, executive, executives, Finance, Government, Govt, Industry, Iyer, Jobs, Mani, Mani Shankar Aiyar, Manmohan, Marxist, Needy, Pay, PM, Poor, Prime Minister, Profit, Rich, Salary, Shares, Soni, Stocks, UPA, Wealth, Wealthy, Welfare | Leave a Comment »