Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Ambaarai’ Category

Mannar Residents should move out of their establishments – Tigers leaflet or Sri Lankan Govt Campaigns?

Posted by Snapjudge மேல் நவம்பர் 14, 2007

மன்னார் பகுதியில் மக்களை வெளியேறக் கூறி துண்டுப் பிரசுரங்கள்

விடுதலைப் புலிகள் அமைப்பினர்கள்
விடுதலைப் புலிகள் அமைப்பினர்கள்

இலங்கையின் வடமேற்கே மன்னார் நகரம் மற்றும் வங்காலை பிரதேசத்தில் இராணுவ முகாம்களுக்கு அருகில் வசிப்பவர்கள் எதிர்வரும் 27 ஆம் திகதியை முன்னிட்டு, உடனடியாக வெளியேறி 5 கிலோ மீற்றர் தொலைவுக்கு அப்பால் செல்லுமாறு விடுதலைப் புலிகளின் தற்கொலைப்படைப் பிரிவினர் என்று கூறப்படுபவர்களால், துண்டுப் பிரசுரங்கள் மூலமாகக் கோரப்பட்டிருப்பதாக தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மையம் தெரிவித்துள்ளது.

இந்தத் துண்டுப் பிரசுரத்தினால் அச்சமடைந்துள்ள பொதுமக்கள் இது குறித்து இராணுவத்தினரின் கவனத்திற்குக் கொண்டுவந்து, தமது பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு வேண்டுகோள் விடுத்துள்ளதாகவும் அந்த ஊடகத் தகவல் மையம் குறிப்பிட்டுள்ளது.

ஆனால், இந்தத் துண்டுப் பிரசுரங்கள் விடுதலைப் புலிகளினால் வெளியிடப்படவில்லை என்றும், எதிர்வரும் 27 ஆம் திகதி நடைபெறவுள்ள விடுதலைப் புலிகளின் மாவீரர் தின வைபவங்களைக் குழப்புவதற்காக அரச படையினர் மேற்கொண்ட ஒரு நடவடிக்கையே இது என்றும் விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளதாக வன்னியிலிருந்து கிடைக்கும் தகவல்கள் கூறுகின்றன.

அதேவேளை கிழக்கே அம்பாறை மாவட்டத்தில், விடுதலைப்புலிகள் என்று கூறப்பட்டு இலங்கை விசேட அதிரடிப்படையினரால், சுட்டுக்கொலை செய்யப்பட்ட மூன்று பேரும் கண்ணகிபுரம் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக அங்கிருந்துவரும் செய்திகள் கூறுகின்றன.

கொலைசெய்யப்பட்ட இந்தப் பொதுமக்களின் சடலங்கள் நீதிமன்ற உத்தரவுக்கு அமைய உறவினர்களிடம் தற்போது கையளிக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் கூறுகின்றன.

இலங்கை அரசின் விமானப்படை விமானம்
இலங்கை அரசின் விமானப்படை விமானம் ஒன்று

இதற்கிடையில் வடக்கே முல்லைத்தீவு மாவட்டத்தில் விடுதலைப் புலிகளின் இலக்குகள் மீது இன்று காலை விமானப்படையினர் விமானக் குண்டுத் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மையம் தெரிவித்துள்ளது. முல்லைத்தீவுக்கு மேற்கில் விடுதலைப் புலிகளின் முகாம் ஒன்றும், அலம்பில் கடற்கரையோரப்பகுதியில் விடுதலைப் புலிகள் படகுகளை நிறுத்தி வைக்கும் மறைவிடம் ஒன்றும் தாக்கப்பட்டதாகவும், இந்தத் தாக்குதல்களில் பலத்த சேதங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மையம் தெரிவித்துள்ளது.

மன்னார், பாலம்பிட்டி பகுதியில் நேற்று மாலை படையினர் மறைந்திருந்து நடத்திய தாக்குதல் ஒன்றில் வாகனம் ஒன்றில் பிரயாணம் செய்த 4 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டதாகவும், மற்றுமொரு மோதல் சம்பவத்தில் 2 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது.

Alleged LTTE leaflet in Mannar asking people to vacate their residencesயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி பகுதியில் இன்று அதிகாலை சுற்றுக்காவல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த படையினர் மீது கைக்குண்டுத் தாக்குதல் நடத்த முற்பட்ட ஒருவரைப் படையினர் சுட்டுக்கொன்றுள்ளதாக இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.

கொல்லப்பட்டவரின் உடைமையில் இருந்த தேசிய அடையாள அட்டையிலிருந்து இறந்தவர் மல்லாகத்தைச் சேர்ந்த ந.மயூரன் என தெரியவந்துள்ளதாகவும் சடலம் யாழ் போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் யாழ்ப்பாணம் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, நேற்று மாலை மடுக்கோவில் பகுதியில் வீழ்ந்து வெடித்த எறிகணையினால் படுகாயமடைந்திருந்த சிறுவன் கிளிநொச்சி வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றபோது உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

கிழக்கே அம்பாறை மாவட்டத்தில் அக்கரைப்பற்றுப் பகுதியில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் அமைப்பின் அலுவலகம் ஆயுதபாணிகளால் தாக்கப்பட்டதில், அந்த அமைப்பின் உறுப்பினர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.

மற்றுமொருவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக பொலிஸார் தேரிவித்துள்ளனர்.


Posted in Airforce, Ambaarai, Ambarai, Arms, Athikkuli, Attacks, Campaigns, dead, defence, Defense, Eelam, Eezham, Govt, Jaffna, Karuna, leaflet, LTTE, Mannaar, Mannar, Military, Mullai, Mullai River, Mullai Theevu, Peace, responsibility, Spin, Sri lanka, Srilanka, Vanni, Wanni, Weapons | Leave a Comment »

Nov 12. : Fighting intensiifies in northern Sri Lanka

Posted by Snapjudge மேல் நவம்பர் 12, 2007

இலங்கையின் வடகிழக்கு வன்செயல்களில் குறைந்தது 10 பேர் பலி

 

இலங்கையின் வடக்கே இன்று யாழ்குடா நாட்டில் இடம்பெற்ற வெவ்வேறு வன்செயல்களில் இரண்டு பொதுமக்கள் உட்பட 7 பேர்வரை கொல்லப்பட்டதாக அங்கிருந்து கிடைக்கும்செய்திகள் கூறுகின்றன.

யாழ் குருநகரைச் சேர்ந்த வர்த்தகராகிய 40 வயதுடைய பிரான்ஸிஸ் பிலிப் என்பவர் இன்று காலை யாழ் இராசவின் தோட்டம் பகுதியில் இனந்தெரியாதோரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

அதேவேளை இன்று காலை 9.30 மணிக்கு மற்றுமொருவர் அடையாளம் தெரியாதோரால் கச்சேரி- நல்லூர் வீதியில் வைத்துச் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். இந்த இரண்டாவது சம்பவத்தில் கொல்லப்பட்டவர் இன்னமும் அடையாளம் காணப்படவில்லை.

இதற்கிடையே, முகமாலை இராணுவ முன்னரங்க பகுதியில் இன்று அதிகாலை 5 மணியளவில் விடுதலைப் புலிகளின் முன்னரங்க பதுங்கு குழிகள் மீது இராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் 5 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டுள்ளதாகப் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

யாழ் நகர்
யாழ் நகர்

இதன்போது ஏற்பட்ட சண்டையில் இராணுவச் சிப்பாய் ஒருவர் காயமடைந்து பலாலி இராணுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது,

மன்னார் இராணுவ முன்னரங்க பிதேசமாகிய பெரியபண்டிவிரிச்சான், நரிக்குளம் ஆகிய பகுதிகளில் இராணுவத்தினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் நேற்று இடம்பெற்ற வெவ்வேறு மோதல் சம்பவங்களில் 7 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டுள்ளதாக தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மையம் கூறியுள்ளது.

எனினும் இந்த மோதல் சம்பவங்கள் தொடர்பாக விடுதலைப் புலிகள் தரப்பிலிருந்து உடனடியாகத் தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.

இதேவேளை, மன்னார் பெரியதம்பனை பகுதியில் இராணுவத்தினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் இடம்பெற்ற மோதலில் கொல்லப்பட்ட 6 விடுதலைப் புலிகளின் சடலங்களும் வவுனியா வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டு, இன்று சர்வதேச செஞ்சிலுவைக் குழுவினரின் ஊடாக விடுதலைப் புலிகளிடம் ஒப்படைக்கப்பட்டதாக இராணுவம் தெரிவித்துள்ளது,

இந்த மோதல் சம்பவத்தில் இராணுவச்சிப்பாய் ஒருவர் கொல்லப்பட்டதுடன், மேலும் இருவர் காயமடைந்ததாக இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.

அதேவேளை கிழக்கே அம்பாறை மாவட்டத்தில் இடம்பெற்ற சம்பவம் ஒன்றில், இலங்கை விசேட அதிரடிப்படையினரின் துப்பாக்கிப் பிரயோகத்தில் 3 பேர் கொல்லப்பட்டுள்ளார்கள்.

செமினிக்குளம் என்னும் இடத்தில் காட்டுப்பகுதியில் இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் உழவு இயந்திரத்தில் பயணித்த நிலையில் சுட்டுக்கொல்லப்பட்டவர்கள், விடுதலைப்புலிகள் அமைப்பின் உறுப்பினர்கள் என்று இராணுவத்தினர் கூறுகிறார்கள்.


Posted in Ambaarai, Ambarai, defence, Defense, Jaffna, LTTE, Mannaar, Mannar, Military, Narikkulam, Narikulam, Palaali, Palali, Sri lanka, Srilanka | Leave a Comment »

LTTE’s cocine farming video shown to the reporters by Sri Lanka Defence Ministry

Posted by Snapjudge மேல் ஜனவரி 17, 2007

விடுதலைப்புலிகள் கஞ்சா வளர்த்ததாகக் காண்பிக்கும் காட்சிகள் காட்டப்பட்டன

விடுதலைப்புலிகள் மீது இராணுவம் குற்றச்சாட்டு
விடுதலைப்புலிகள் மீது இராணுவம் குற்றச்சாட்டு(ஆவணப்படம்)

அம்பாறை மாவட்டத்தில் கஞ்சிக்குடிச்சாறில் உள்ள விடுதலைப்புலிகளின் முகாமில் கஞ்சாச் செடிகள் வளர்க்கப்பட்டிருந்ததாகக் கூறப்படும் வீடியோ படங்களை, இலங்கை பாதுகாப்புத் துறையினர் இன்று செய்தியாளர்களுக்குக் காண்பித்திருக்கிறார்கள்.

விடுதலைப்புலிகளின் இந்த முகாமை இலங்கைப் படையினர் கைப்பற்றிய போது அங்கு கஞ்சா செடிகள் பயிரிடப்பட்டிருந்ததாகவும், அத்தோடு அங்கு அரச சார்பற்ற சில நிறுவனங்களின் பொருட்கள் காணப்பட்டதாகவும் கூறிய இலங்கை பாதுகாப்பு விவகாரங்கள் குறித்துப் பேசிய அமைச்சர் கெகலிய ரம்புக்வெல்லை அவர்கள், சில அரச சார்பற்ற நிறுவனங்கள் புலிகளுக்கு உதவுவதாகவும் குற்றஞ்சாட்டினார்.

இப்படியான அமைப்புகளின் இலட்சினை பொறித்த சில பொருட்கள், அந்த முகாமில் காணப்படும் வீடியோ படங்களும் இன்று செய்தியாளர்களுக்கு காண்பிக்கப்பட்டன.

Posted in Ambaarai, Ambarai, Cocaine, defence, drug trafficking, Drugs, Eezham, Ganja, Kanja, Kehelia Rambukwella, LTTE, Smuggling, Sri lanka, Viduthalai Puligal, Viduthalai Pulikal | 2 Comments »