Archive for the ‘Aiswarya Rai’ Category
Posted by Snapjudge மேல் மார்ச் 9, 2007
அடுத்த வாரம் ஐஸ்வர்யாராய்-அபிஷேக் பச்சன் திருமணம் குவாலியரில் நடக்கிறது
குவாலியர், மார்ச்.8-
இந்தி நடிகை ஐஸ்வர்யாராய்-நடிகர் அபிஷேக்பச்சன் திருமணம் ராஜஸ்தான் மாநிலத்தில் நட்சத்திர ஓட்டலில் நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால் அங்குள்ள நட்சத்திர ஓட்டல்களில் நடத்துவதில் சிக்கல் இருப்பதால், அவர்கள் திருமணம் மத்திய பிரதேச மாநிலம் குவாலியருக்கு மாற்றப்பட்டுள்ளது.
குவாலியரில் நட்சத்திர ஓட்டல் ஒன்றில் மார்ச் 17-ந் தேதியில் இருந்து 19-ந் தேதிக்குள் திருமணம் நடக்க இருப்பதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அபிஷேக் பச்சனின் தாயாரும், நடிகையுமான ஜெயா பச்சன் சமீபத்தில் குவாலியரில் தேர்தல் பிரசாரம் செய்தார். அவர் அங்கு திருமணத்துக்கான ஏற்பாடுகளையும் கவனித்து விட்டு சென்றதாக கூறப்படுகிறது. ஆனால் ஓட்டல் நிர்வாகமோ, இன்னும் தங்களுக்கு எந்த தகவலும் வரவில்லை என்று கூறியுள்ளது.
Posted in Abhishek, Abhishek Bhachan, Abishek Bachan, Aishwarya Rai, Aiswarya, Aiswarya Rai, Amitabh, Amitabh Bachaan, Gwalior, Jaya, Jeya, Jeya Bachan, Marriage, Reception, Wedding | Leave a Comment »
Posted by Snapjudge மேல் பிப்ரவரி 27, 2007
19-ந்தேதி ஐஸ்வர்யா-அபிஷேக் திருமணம்: ஆடம்பர அழைப்பிதழ் தயாராகிறது
ஐஸ்வர்யாராய்,அபிஷேக் பச்சன், திருமணம் நிச்சய தார்த்தம் ஒரு வழியாய் முடிந்த நிலையில் இந்தியாவின் மிகப் பெரிய ஸ்டார்கள் இல்லற வாழ்வில் இணையும் அந்த ஜொலி ஜொலிப்பு விழா எப் போது அரங்கேறும் எனற் ஆர்வம் கரைபுரண்டு ஓடுகிறது.
இந்தியாவெங்கிலும் இருந்து பல்வேறு துறைகளின் வி.வி. ஐ.பிக்கள் ஒரே இடத்தில் குவியும் அந்த திருமண விழா அடுத்த மாதம் 19-ந்தேதி நடக் கிறது. இந்த தேதி முறைப்படி அறிவிக்கப்படவில்லை என் றாலும் அதில் திருமணம் நடத்துவதற்கான வேலைகள் தடபுடலாக நடந்து வருகின்றன. நேற்று நடிகர் பிரபுவின் மகன் திருமணத்திற்கு வந்த அமி தாப்பச்சன் மண்டபத்தில் இருந்த சில முக்கிய தமிழ் திரையுலகபுள்ளிகளிடம் 19-ந்தேதி திருமணம் அன் றைக்கு வேறு வேலைகள் ஏதும் வைத்துக்கொள்ளாதீர் கள் என்று அன்போடு கேட்டுக் கொண்டாராம்.
இவர்களிடம் மட்டுமல்ல தனது நெருங்கிய உறவினர்கள், அரசியல் வி.வி.ஐ.பி.க்கள், பாலிவுட் பிரபலங்கள் என தனக்கு மிக நெருக்கமானவர்களிடம் 19ந்தேதி திருமணம் என்பதை கூறி அன்று வேறு வேலைகள் எதையும் வைத்துக்கொள்ளா மல் தயாராக இருங்கள் என்று அன்புக்கட்டளை இட்டிருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நட்சத்திர திருமணம் ஜோத்பூரில் உள்ள உனமத்பவன் அரண்மனையில் கோலாகலமாக நடக்க உள்ளது.
இதே அரண்மனையில்தான் ஹாலிவுட் நடிகை எலிசபெத் குர்லேயும் இந்திய தொழில் அதிபர் அருண் நாயரும் திருமணம் செய்ய உள்ளனர். குறிப்பாக இந்த இடத்தை தேர்ந்தெடுத்ததற்குக் காரணம் இந்த அரண்மனையில் உம்ராவ் ஜான் பட ஷூட்டிங் நடந்த போது தான் ஐஸ்வர்யாராய்க்கும் அபி ஷேக்பச்சனுக்கும் இடையே காதல் மலர்ந்ததாம்.
திருமணத்தை மிகவும் ஆடம்பரமாக நடத்த தீர்மா னிக்கப்பட்டுள்ளதால் அதற் கேற்ப விலை உயர்ந்த அழைப் பிதழ்களை அச்சடிக்க ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளன. ஒரு அழைப்பிதழின் விலை மட்டும் ரூ.5ஆயிரம் என்று கூறப் படுகிறது. அழைப்பிதழை பெறுபவர்கள் அதை வாழ்நாள் முழுவதும் போற்றி பாதுகாக்கும் அளவுக்கு அதன் வடிவமைப்பு இருக்குமாம்.
Posted in Abhishek, Abhishek Bhachan, Abishek Bachan, Abishek Bhachan, Aishwarya Rai, Aiswarya, Aiswarya Rai, Amitabh, Amitabh Bachaan, Amitabh Bhachan, Bollywood, Cinema, Gossip, Invitation, Jodhpur, Jothpur, Marriage, Palace, Rumour, Umrao Jaan, Umrao Jan, Venue, Wedding | 1 Comment »
Posted by Snapjudge மேல் பிப்ரவரி 8, 2007
அமிதாப் மகனுக்கு பரிசளிக்கப்பட்ட ரூ.1.5 கோடி கார் யாருக்கு சொந்தமானது? அமர்சிங் விளக்கம்
புதுதில்லி, பிப். 9: அமிதாப் மகன் அபிஷேக் பச்சனின் பிறந்த நாளன்று பரிசளிக்கப்பட்ட ரூ.1.5 கோடி மதிப்புள்ள பெண்ட்லே சொகுசு காரை, தானே விலை கொடுத்து வாங்கியதாக சமாஜவாதி கட்சித் தலைவர் அமர்சிங் கூறியுள்ளார்.
லண்டனில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட அந்த காருக்கு, அனைத்து சுங்கத் தீர்வைகளையும் முறையாகச் செலுத்திவிட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
காரின் பதிவுக்காக (ரெஜிஸ்ட்ரேஷன்) விண்ணப்பித்த ஆவணத்தில் அமர்சிங் “ஜல்ஸô, மும்பை’ என வீட்டு முகவரியை அளித்திருந்தார். இந்த முகவரி குறித்து ஐயம் எழுப்பிய தில்லி போக்குவரத்து துறை, அது தவறான தகவல் என்றால் அமர்சிங் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என புதன்கிழமை கூறியிருந்தது.
இதை மறுத்துள்ள அமர்சிங், அமிதாப் குடும்பத்துக்குச் சொந்தமான ஜல்ஸô இல்லத்தை, மும்பைக்கு செல்லும்போது தங்குவதற்காக, கடந்த 20 ஆண்டுகளாக பயன்படுத்தி வருவதாகவும், அமிதாப் இதை மறுக்கும் பட்சத்தில் சட்ட நடவடிக்கைக்கு தயாராக இருப்பதாகவும் கூறியுள்ளார்.
மேலும், தவறான தகவலை அளித்ததற்காக தில்லி மாநில முதல்வர் மற்றும் தில்லி போக்குவரத்துத் துறை அமைச்சர் ஹாரூண் யூசுப் ஆகியோர் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்போவதாகவும் அமர்சிங் எச்சரித்துள்ளார்.
பெண்ட்லே காரை அபிஷேக் பச்சனுக்கு பரிசளித்தது யார் என்பதைக் கூற அவர் மறுத்துவிட்டார்.
அபிஷேக் பச்சனுக்கு வெளிநாட்டு கார்: அமர்சிங் ரூ. 85 லட்சம் சுங்க வரி செலுத்தினார்
புதுடெல்லி, பிப். 12-
பிரபல ஹாலிவுட் நடிகர் அமிதாப்பச்சனின் மகனும், நடிகருமான அபிஷேக் பச்சன் கடந்த 5-ந் தேதி தனது பிறந்த நாளை கொண்டாடினார்.
இதையொட்டி அமிதாப்பின் நெருங்கிய குடும்ப நண்பரும், சமாஜ்வாடி கட்சி பொதுச் செயலாளருமான அமர்சிங் வெளிநாட்டு காரை பிறந்த நாள் பரிசாக வழங்கினார்.
விலை உயர்ந்த காரை அபிஷேக் பச்சனுக்கு பரிசாக வழங்கியது சர்ச்சையை கிளப்பியது. உடனே அது தனது கார் அபிஷேக்குக்கு பரிசாக கொடுக்கவில்லை என்று அமர்சிங் மறுத்து இருந்தார்.
இந்த நிலையில் வெளிநாட்டு காருக்கு அமர்சிங் ரூ. 85 லட்சம் சுங்க வரி கட்டியுள்ளது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக டெல்லி போக்குவரத்து மந்திரி ஹாரூன் ïசுப் கூறியதாவது:-
லண்டனில் இருந்து `பென்ட்லி’ கார் கடந்த 31-ந் தேதி விமானம் மூலம் வந்தது. இந்த காரின் மதிப்பு ரூ. 1.76 கோடி என்று கூறி அதற்கு ரூ. 85 லட்சம் சுங்க வரியை அமர்சிங் செலுத்தியுள்ளார்.
கடந்த 1-ந் தேதி அந்த கார் வடக்கு டெல்லியில் உள்ள போக்குவரத்து அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டது. அந்த காருக்கு நம்பர் வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
Posted in Abhishek, Abhishek Bhachan, Abishek Bachan, Abishek Bhachan, abuse, Aishwarya Rai, Aiswarya, Aiswarya Rai, Amar Singh, Ambani, Amitabh, Amitabh Bachaan, Amitabh Bhachan, Auto, Automotive, Bachchans, Bentley, Birthday, Bribe, Bribery, car, Chief Minister, CM, Congress, Congress(I), Corruption, Customs, customs duties, Delhi, Extravaganza, general secretary, Gift, Harun Yusuf, Import, Income Tax, kickbacks, London, Luxury, maharashtra, Mangal, Mangalsutra, Marriage, Mulayam Singh, Mulayam Singh Yadav, New Delhi, owner, peepal tree, Power, Reception, Reliance, Samajvadi Party, Samajwadi Party, Sheila Dikshit, SJP, SP, tax evasion, Transport Department, Transport Minister | Leave a Comment »
Posted by Snapjudge மேல் ஜனவரி 21, 2007
17.01.07 சினிமா
தனது படத்தின் கதா பாத்திரங்களைப் போலவே அளந்துதான் பேசுகிறார் மணிரத்னம். இந்தியாவின் முன்னணி இயக்குநர் என்று அவரைப் பார்த்து முடிவு செய்ய முடியவில்லை. அவ்வளவு சிம்பிள். ‘குரு’ படத்தின் ரிலீஸ் பிஸியிலிருந்தவரை, அவரது ‘மெட்ராஸ் டாக்கீஸ்’ அலுவலகத்தில் சந்தித்தோம்.
‘கி விணீஸீவீக்ஷீணீtஸீணீனீ திவீறீனீ’ _இந்த ஒரு விஷயத்துக்காகவே மக்கள் படம் பார்க்க வந்துடுவாங்க. அப்படி இருக்கும்போது, உங்க படத்துக்கு அபிஷேக்பச்சன், ஐஸ்வர்யா ராய் போன்ற முன்னணி நடிகர்கள் ஏன் தேவைப்படுகிறார்கள்?
‘‘ஒரு படத்துல 50% வேலை. சரியான நடிகர், நடிகைகளைத் தேர்வு செய்வதன் மூலம் முடிஞ்சிடும். அதனால ஸ்டார் கேஸ்ட் ரொம்ப முக்கியம்.. எங்கே நிக்கணும், கையை எவ்வளவு தூரம் உயர்த்தணும் போன்ற அடிப்படை விஷயங்களைக் கூட, ஒரு நடிகருக்குச் சொல்லிட்டிருக்க முடியாது. அதற்காகத்தான் அனுபவமிக்க நடிகர்களைத் தேர்ந்தெடுக்கறேன். அவ்வளவுதான்.’’
குரு_அம்பானி காண்ட்ரவர்ஸியை எப்படி சால்வ் செய்தீங்க? முகேஷ் அம்பானி படம் போட்டு காண்பிக்கும்படி கேட்டாரா, நீங்கள் ஸ்பெஷலாக அவர்களுக்குப் போட்டுக் காண்பித்தீர்களா?
‘‘அது ஒரு காண்ட்ரவர்ஸியே கிடையாது. ரிலையன்ஸ் நிறுவனம் மிகப் பெரிய எம்பையர். அந்த நிறுவனத்தின் பொறுப்பில் இருப்பவர்களுக்கு ‘குரு’ படத்தில் நடக்கும் விஷயங்களைப் பற்றி யோசிக்க நேரம் இருக்குமாங்கிறதுகூட சந்தேகம் தான். அவங்களுக்கு இருக்கும் வேலைகளுக்கு மத்தியில் இந்தப் படத்தின் கருவைப் பற்றி நினைத்து, சர்ச்சையைக் கிளப்ப சான்ஸே இல்லை. அம்பானி குடும்பத்திலிருந்து நேரடியாக யாரும் என்னுடன் பேசலை, படத்தைப் போட்டுக் காண்பிக்கச் சொல்லலை. நானும் போட்டுக் காட்டவில்லை. திருபாய் அம்பானி என்ற தனிமனிதனின் வாழ்க்கை, வரலாறு கிடையாது! கனவைத் துரத்துகின்ற ஒவ்வொரு மனிதனுடைய கதை. ஒவ்வொருத்தரும் தங்களுடைய வாழ்க்கையில் நடந்த ஏதாவது ஒரு சம்பவத்தை, இந்தப் படத்தில் பார்க்கலாம்.
அப்புறம், ‘குரு’ தமிழ் டப்பிங்குக்காக ரொம்பமெனக்கிட்டிருக்கோம். அபிஷேக்குக்கு சூர்யாதான் டப்பிங் பேசியிருக்கார். அபிஷேக் நடிக்க எடுத்துக் கொண்ட முயற்சிகளை விட, சூர்யா டப்பிங்கில் அந்த கேரக்டருக்கு உயிர் கொடுக்க எடுத்துக் கொண்ட முயற்சிகள் அதிகம். ரொம்ப பிரமாதமா பேசியிருக்கார். படம் தொடங்கிய சில நிமிடங்கள் அபிஷேக் மறைந்து சூர்யா நடிச்சிருக்கார்ங்கிற ஃபீலிங் வந்துடும். நிச்சயமா மற்ற டப்பிங் படங்கள் போல இருக்காது.’’
உங்க மனைவி சுஹாசினி திறமையான நடிகை. திருமணத்துக்குப் பிறகு நடிச்சிட்டிருக்காங்க. அவரை ஏன் உங்க ஒரு படத்தில்கூட நடிக்க வைக்கலைன்னு தெரிஞ்சுக்கலாமா?
‘‘என்னுடைய முதல் படமான கன்னட படத்துல அவங்களைத்தான் ஹீரோயினாக நடிக்கக் கேட்டேன். நடிக்க மாட்டேன்னு சொல்லிட்டாங்க… அவ்வளவுதான். அதிலிருந்து என் படத்தில் நடிக்கிறீங்களான்னு கேட்கமாட்டேன், அவங்களும் கேட்டதில்லை. ஆனால், என் ஒவ்வொரு படத்திலும் ஸ்கிரிப்ட் டைட்டில் குறிப்பாக வசனங்களில் ரொம்ப ஹெல்ப் பண்ணுவாங்க. எல்லாப் படங்களிலும் ஒரு சீனுக்காவது அவங்க வசனம் எழுதியிருப்பாங்க, இலவசமா எனக்குக் கிடைக்கிற ஹெல்ப் இது!’’
மணிரத்னம், ஏ.ஆர்.ரகுமான் கூட்டணி பிரமாண்டமான ஹிட் சாங் கொடுத்திருக்கு. அதே மாதிரி, இதற்கு முன்பு இளையராஜாவும் நீங்களும் இணைந்த படங்களும் மியூசிக்கல் ஹிட்தான், மணிரத்னம், இளையராஜா கூட்டணி மீண்டும் எதிர்பார்க்கலாமா?
‘‘நிச்சயமாக. இளையராஜா ஒரு ஜீனியஸ். அவருடைய பாடல்கள் தற்செயலாக கேட்டால்கூட சில சுவாரஸ்யமான நினைவுகளை எனக்கு நினைவூட்டும். அவர் வித்தியாசமாக இசையமைக்கும்படியான_ஒரு வித்தியாசமான கதையைத் தயார் செய்து அவருடன் அதில் வேலை செய்ய விருப்பம். அவருக்கும் விருப்பம் இருக்கும் பட்சத்தில் மறுபடியும் அவருடன் இணைந்து வொர்க் பண்ணுவேன்.’’
பத்தொன்பது படங்கள், பெரும்பாலானவை மெகா ஹிட், சாதிச்சிருக்கோம்கிற ஃபீலிங் கிடைச்சிருக்கா?
‘‘எனக்கு இதுவரை எந்தப் படமும் திருப்திகரமாக அமைந்ததில்லை, அமையவும் அமையாது. ஏன்னா எல்லோரும் படத்தைப் பார்த்துட்டு இது நல்லா இருக்கு, அந்த சீன் சூப்பர்னு சொல்வாங்க. ஆனா எனக்கு படம் பார்க்கும்போது, இதை இன்னும் பெட்டரா பண்ணியிருக்கலாம்னு தான் தோணும். எப்போது நான் திருப்தியா ஃபீல் பண்றேனோ அப்போதான் சாதிச்சிட்டோம்ங்கிற உணர்வும் கிடைக்கும்.’’
அடுத்தும் லஜ்ஜோ என்ற ஹிந்திப் படம்தான் பண்ணப் போறீங்க, இனி ஹிந்திப் படம் மட்டும்தானா? தமிழ் படங்களுக்கு குட்பை சொல்லப் போறீங்களா?
‘‘எப்படி முடியும்? இந்தப் படத்தை முடிச்சிட்டு அடுத்து கண்டிப்பா தமிழ் படம்தான்!’’
ரஜினியுடன் இணைந்து, படம் பண்ணப் போவதாக வரும் செய்திகள்?
‘‘உண்மை இல்லை!’’
ஹிந்தியில் தமிழ்க் கலைஞர்களை வளரவிடாமல் தடுக்கும் வழக்கம் இருந்திருக்கு. இந்த பாலிடிக்ஸை எப்படி சமாளிச்சிருக்கீங்க?
‘‘வளரவிடாமல் தடுத்தால், நாம விட்டுடுவோமா? திறமை இருக்கணும், நம்ம வேலையை கரெக்டா செய்தால், யாரும் ஒண்ணும் பண்ணமுடியாது. நம்ப தமிழ்நாட்டுக்காரர் அப்துல்கலாம் அங்கே இந்திய ஜனாதிபதியாக இல்லையா? தகுதியும், திறமையும் இருந்தால் யாரையும் யாராலும் தடுக்க முடியாது…’’ _ அதிரடியாகக் கூறுகிறார் இயக்குநர் மணிரத்னம்!
_ஜனனி
Posted in Abhishek Bhachan, Abishek Bachan, Abishek Bhachan, Aishwarya Rai, Aiswarya, Aiswarya Rai, Guru, Interview, Kumudam, Kumudham, mani Rathnam, Mani Ratnam | 1 Comment »
Posted by Snapjudge மேல் ஜனவரி 17, 2007
அபிஷேக்-ஐஸ்வர்யா ஜெய்ப்பூரில் திருமணம்: 6 ஆயிரம் பேர் பங்கேற்கலாம்
ஜெய்ப்பூர், ஜன. 17-
பிரபல இந்தி நட்சத்திரங்களான அபிஷேக் பச்சனும், ஐஸ்வர்யாராயும் காதலித்து வருகின்றனர். இந்த காதலுக்கு ஏற்கனவே பச்சைக் கொடி காட்டப்பட்டது. அனைவ ராலும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட இவர்களது திருமண நிச்சயதார்த்தம் மும்பையில் கடந்த 14-ந் தேதி இரவு நடந்தது. நிச்சயதார்த்தத்தின் போது திருண தேதி முடிவு செய்யப்படவில்லை.
பிப்ரவரி 19 அல்லது மார்ச் 7-ந்தேதி திருமணம் நடை பெறலாம் என்று ïகங்கள் வெளியாகி உள்ளது.
அபிஷேக்-ஐஸ்வர்யாராய் திருமணமோ அல்லது திருமண பார்ட்டியோ ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெறலாம் என்று ïகங்கள் எழுந்துள்ளன. பாரம் பரியமிக்க ஜெய்ப்பூர் அல்லது உதய்ப்பூரில் திருமணம் நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அமிதாப்பச்சனின் குடும்பத்தினர் ராஜஸ்தான் சென்று திருமணம் நடைபெறும் இடம் குறித்து பேசி வருகிறார்கள். சமூக அந்தஸ்தில் அமிதாப்பச்சன் மிக உயர்ந்த இடத்தில் உள்ளார். இதனால் அவரது மகன் திருமணத்திற்கு அரசியல் பிரபலங்கள, முக்கிய பிரமுகர்கள், தொழில் அதிபர்கள், இந்தி நடிகர், நடிகைகள் என 6 ஆயிரம் பேர் பங்கேற்கலாம் என்று கருதப்படுகிறது.
திருமண நிச்சயதார்த்தம் முடிந்த மறுநாள் சூட்டிங்கில் பங்கேற்பதற்காக ஜெயா பச்சன் மகன் அபிஷேக்குடன் ராஜஸ்தான் சென்றார். அவர் ஜெய்ப்பூர் அரண்மனையின் முன்னாள் ராணி பத்மா தேவியை சந்தித்து பேசினார். இதனால் ஜெய்ப்பூர் அரண்மனையில் திருமணம் நடை பெறலாம் என்று கருதப்படுகிறது.
ஜெய்ப்பூர் அரண்மனையில் திருமணத்தை நடத்த அமிதாப்பச்சன் விரும்புகிறார். முக்கிய வி.ஐ.பி.க்கள் வருவதால் பாதுகாப்பு எப்படி கொடுக்க முடியும் என்ற கவலையும் அவருக்கு உள்ளது என்று ஜெய்ப்பூர் அரண்மனை வட்டாரங்கள் தெரிவித்தனர்.
அதே நேரத்தில் உதய்பூரிலும் திருமண பார்ட்டி நடைபெறலாம் என்ற தகவலும் வெளியாகி உள்ளது. அங்குள்ள ஜகா மந்திர் கார்டன் புகழ் பெற்றது. இங்கு 3 ஆயிரம் பேர் பங்கேற்கும் வகையில்தான் இட வசதி உள்ளது. உதய்பூரில் நடிகை ரவீணாதண்டன் – தொழில் அதிபர் அனில் தாண்டனி திருமணம் 2004-ம் ஆண்டும், இந்தி நடிகர் விக்ரம் சாவல் திருமண பார்ட்டி 2006-ம் ஆண்டிலும் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
Posted in Abhishek Bhachan, Abishek Bachan, Abishek Bhachan, Aishwarya Rai, Aiswarya, Aiswarya Rai, Amitabh, Amitabh Bachaan, Amitabh Bhachan, Attendance, Dates, Engagement, Gossip, Invites, Jaipur, Kisu Kisu, Marriage, Reception, Rumor, Venue | Leave a Comment »
Posted by Snapjudge மேல் ஜனவரி 16, 2007
திருமணத்தின் போது கட்டுவதற்காக ஐஸ்வர்யாவுக்கு ரூ.2 லட்சத்தில் பனாரஸ் பட்டுப்புடவை
வாரணாசி, ஜன. 16-
அபிஷேக் பச்சன்- ஐஸ்வர்யாராய் நிச்சயதார்த்தம் நடந்ததையொட்டி திருமணத் திற்கான ஏற்பாடுகளை அமிதாப்பச்சன் குடும்பத்தினர் மும்முரமாக செய்து வருகி றார்கள்.
திருமணத்தின் போது தனது மருமகள் விலை உயர்ந்த பட்டுப்புடவையை கட்ட வேண்டும் என்பதை அமிதாப்பச்சன் விரும்புகிறார். இதற்காக அவர் வாரணாசியில் உள்ள பிரபல கடையில் ஆர்டர் கொடுத்துள்ளார்.
திருமணத்தின் போது ஐஸ்வர்யாராய் கட்டுவதற்காக பனாரஸ் பட்டுப்புடவை தயாரிக்கப்பட்டு வருவதாகவும் இந்த மாத இறுதியில் தயா ராகி விடும் என்று கடை உரிமையாளர் ஜலான் தெரி வித்தார். பனாரஸ் லேகன்யா பட்டுப்புடவையின் விலையை தெரிவிக்க அவர் மறுத்து விட்டார். ஆனால் அதன் விலை ரூ.2 லட்சம் இருக்கும் என்று தெரிய வந்துள்ளது.
21 புடவைகள்
கடந்த நவம்பர் 27-ந் தேதி அமிதாப்பச்சன் குடும்பத்தினர் வாரணாசி சென்ற போது ரூ.50 ஆயிரம் மதிப்பில் 11 சேலைகளை வாங்கி சென்றனர். அப்போது ரூ.2 லட்சத்து 33 ஆயிரம் மதிப்பில் 21 சேலைகளுக்கு ஆர்டர் கொடுக்கப்பட்டது. அந்த சேலைகள் நேற்று அமிதாப்பச்சன் வீட்டிற்கு பார்சலில் அனுப்பப்பட்டன.
Posted in Abhishek Bhachan, Abishek Bachan, Abishek Bhachan, Aishwarya Rai, Aiswarya, Aiswarya Rai, Amitabh Bhachan, Benaras, Benares, Marriage, Reception, Sarees, Saris, Silk Saree, Silk Sari, Varanasi | Leave a Comment »
Posted by Snapjudge மேல் ஜனவரி 16, 2007
அடுத்த மாதம் திருமணம்: அபிஷேக்-ஐஸ்வர்யாராய் நிச்சயதார்த்தம் நடந்தது
மும்பை, ஜன.16-
பிரபல இந்தி நட்சத்திரங்களான அபிஷேக் பச்சனும், ஐஸ்வர்யாராயும் காதலித்து வந்தனர். இருவீட்டு பெற்றோ ரும் இந்த காதலுக்கு பச்சைக்கொடி காட்டி விட்டனர். அமிதாப்பச்சன் குடும்பத் தினரின் பல்வேறு நிகழ்ச்சிக ளில் ஐஸ்வர்யாராய் பங்கேற்றார்.
கடந்த நவம்பர் 26-ந் தேதி வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோவிலில் சிறப்பு பூஜை நடத்தப்பட்டது.
இதற்கிடையே அபிஷேக் பச்சன்-ஐஸ்வர்யாராய் திருமண நிச்சயதார்த்தம் மும்பை புறநகரான ஜ×குவில் உள்ள அமிதாப்பச்சன் வீட்டில் நேற்று முன்தினம் இரவு நடந்தது.
இரவு 8.30 மணி முதல் 9 மணி வரை நிச்சயதார்த்த நிகழ்ச்சி நடந்தது. ஐஸ்வர்யாராய் கையில் அபிசேக் பச்சன் மோதிரம் அணிவித்தார். குரு பட நிகழ்ச்சிக்காக இருவரும் அமெரிக்கா சென்று விட்டு திரும்பிய 1 மணி நேரத்தில் நிச்சயதார்த்தம் நடந்தது. திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் நடிகர் அமிதாப்பச்சன், அவரது மனைவி ஜெயாபச்சன், சமாஜ் வாடி கட்சி பொதுச்செயலாளர் அமர்சிங், தொழில் அதிபர் அனில் அம்பானி, அவரது மனைவி டினா ஆகியோர் கலந்து கொண்டனர்.
அபிஷேக்-ஐஸ்வர்யா திருமணம் அடுத்த மாதம் நடக்கிறது. அபிஷேக் பச்சனுக்கு பிப்ரவரி 5-ந் தேதி 31 வயது பிறக்கிறது. இதனால் அன்றைய தினம் 33 வயதான ஐஸ்வர்யாராயை திருமணம் செய்யலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிப்ரவரி 19 அல்லது மார்ச் 7-ந் தேதி இவர்களது திருமணம் நடைபெறும் என்று மற்றொரு தகவல் கூறுகிறது. பிப்ரவரி 19-ந் தேதிக்காக மும்பையில் உள்ள ஹோட்டல் ஹியாத்தில் புக்கிங் செய்யப்பட்டுள்ளதாக அமிதாப்பச்சனின் குடும்ப வட்டாரங்கள் தெரிவித்தன.
நிச்சயதார்த்தத்தின் போது திருமண தேதி குறித்து எதுவும் முடிவு செய்யப்படவில்லை. அபிஷேக்-ஐஸ்வர்யா திரு மண தேதி இன்னும் முடிவு செய்யப்படவில்லை. எனது குடும்பத்தினர் பலர் இங்கு வரவில்லை. அவர்களுடன் ஆலோசனை செய்யப்படும். இரு வீட்டு குடும்பத்தினரும் முடிவு செய்து திருமண தேதியை அறிவிப்போம். எல்லா தகவல்களையும் நிருபர்களிடம் பகிர்ந்து கொள்ள இயலாது.
குரு படத்தில் அபிஷேக்கின் நடிப்பு பிரமாதமாக இருக்கிறது. நடிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு உள்ளது. இதற்காக அவரை வாழ்த்துகிறேன்.
இவ்வாறு அமிதாப்பச்சன் கூறினார்.
நிச்சயதார்த்த நிகழ்ச்சிக்கு பிறகு அபிஷேக்பச்சன் நிருபர் களிடம் கூறியதாவது:-
எனது திருமணத்தை ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளேன். நானும், ஐஸ்வர்யாவும் மகிழ்ச்சியுடன் இருக்கிறோம். திருமண தேதி குறித்து நான் எதுவும் கூற இயலாது.
ஐஸ்வர்யா ஒரு சிறந்த நடிகை. திருமணத்திற்கு பிறகு தொடர்ந்து நடிப்பாரா என்பதை அவர்தான் முடிவு செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அபிஷேக் பச்சனுக்கும், நடிகை கரிஷ்மா கபூருக்கும் நிச்சயதார்த்தம் நடந்து திருமணம் நடக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Posted in Abhishek Bhachan, Abishek Bachan, Abishek Bhachan, Aishwarya Rai, Aiswarya, Aiswarya Rai, Amitabh, Anil Ambani, Ash, Betrothal, Engagement, Hyatt, Jaya Bachan, Marriage, Reception | Leave a Comment »
Posted by Snapjudge மேல் திசெம்பர் 19, 2006
ஐஸ்வர்யாராய்க்கு பிப்ரவரி 19-ந்தேதி திருமணம்
பெங்களூர், டிச.19-
பெங்களூரில் வசித்து வரும் ஐஸ்வர்யாராயின் குடும்ப ஜோதிடரான சந்திரசேகர சுவாமிகள் நிருபர்களிடம் கூறியதாவது:-
அபிஷேக் பச்சனுக்கு பிப்ரவரி 5-ந் தேதி 32-வது வயது பிறக்கிறது. அன்று முதல் அவருக்கு யோகம் நிறைந்த நாள். ஐஸ்வர்யாராய்-அபிஷேக் பச்சனுக்கு இடையேயான திருமண தடை அனைத்தும் நீங்கி விட்டன.
இந்தநிலையில் ஐஸ்வர்யாராய்-அபிஷேக் பச்சன் ஜோடிக்கு வருகிற பிப்ரவரி 19-ந் தேதி திருமணம் நடக்கிறது. இந்த திருமணம் மும்பையில் உள்ள ஹயத் இண்டர்நேஷனல் என்ற ஐந்து நட்சத்திர ஓட்டலில் நடக்க உள்ளது. பிப்ரவரி மாதம் 20-ந் தேதி மும்பையிலும், 21-ந் தேதி டெல்லியிலும் வரவேற்பு நிகழ்ச்சி நடக்க இருக்கிறது.
இவ்வாறு ஜோதிடர் சந்திரசேகர சுவாமிகள் கூறினார்.
ஆனால், இந்த திருமணதேதி பற்றி அபிஷேக்பச்சன் குடும்பமோ, ஐஸ்வர்யாராய் குடும்பமோ எந்த தகவலும் தெரிவிக்க மறுத்துவிட்டனர்.
Posted in Abhishek Bhachan, Abishek Bachan, Aiswarya Rai, Amitabh Bachaan, Bollywood, Gossip, Guru, Hindi Actors, Hindi Actress, Hollywood, Hyatt International, Jaya Bhaduri, Kisukisu, Kollywood, Mani Ratnam, Manirathnam, Marriage, Movies, Mumbai, Personal Life, Reception, Stars, Tamil | 35 Comments »
Posted by Snapjudge மேல் ஓகஸ்ட் 4, 2006
அ. சுனஹல் ரஹ்மான்,
திருச்சி.
«இளம் விதவையின் காமதாகம் பார்த்தீர்களா?
ரிட்டு பர்ணகோஷ் சிறந்த இயக்குநர். காசநோயினால் கணவன் இறந்துவிட, ஆதரவற்ற நிலையில் தன் தோழியின் கணவனிடம் உடல் மற்றும் மனரீதியாக சரணடையும் ஒரு பெண்ணின் (ஐஸ்வர்யாராய்) பரிதாபமான முடிவை, ஒரு கலைப்பட நேர்த்தியில், அதாவது மகா மெதுவான பாணியில் சொல்லியிருக்கிறார். தமிழ் ரசிகர்களை இதைப் பார்க்க வைக்க, ஒரே வழி காமதாகம் என்று முடிவு செய்து, ஐஸ்வர்யாராய் அழைக்கிறார் என்று விளம்பரம் வேறு. இதைவிடத் தமிழர்களைக் கேவலப்படுத்த முடியாது!
Posted in Aiswarya Rai, Ishwaryaa Rai, Kaama Dhaagam, Kumudham, Tamil | Leave a Comment »