Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Airlines’ Category

Emirates to end 10-yr deal with Lankan Airlines & Ceasefire abrogation to benefit LTTE: Sri Lanka opposition

Posted by Snapjudge மேல் ஜனவரி 7, 2008

சிறிலங்கன் ஏர்லைன்ஸை நிர்வகிப்பதிலிருந்து வெளியேறியது எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ்

 

இலங்கை அரசாங்கத்தின் தேசிய விமான சேவையான சிறிலங்கன் எயர்லைன்ஸ் நிறுவனத்தில் சுமார் 43.6 விகித பங்குகளுடன் அதனை நிர்வகித்துவரும் எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் நிறுவனம் சிறிலங்கன் எயர்லைன் ந்டன் தான் செய்துகொண்ட முகாமைத்துவ உடன்படிக்கையிலிருந்து எதிர்வரும் மார்ச் மாதம் இறுதியுடன் வெளியேறுவதாக அறிவித்திருக்கிறது.

1998 மார்ச் மாதத்தில் ஏர் லங்கா தனது சேவைகளையும், வருமானத்தினையும் அதிகரிக்கும் நோக்கில் அதன் பங்குகளில் 43.6 விகித்தத்தினை விற்பனை செய்திருந்ததுடன், அதன் முகாமைத்துவத்தையும் பத்துவருட உடன்படிக்கையின்கீழ் எமிரேட்ஸ் எயர்லைன்ஸிடம் கையளித்திருந்தது.

இது குறித்து கருத்துவெளியிட்டுள்ள எமிரேட்ஸ் நிறுனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் ரிம் கிளார்க் எதிர்வரும் மார்ச் 31ம் திகதியுடன் சிறிலங்கன் ஏர்லைன்ஸ் முகாமைத்துவத்துவப் பொறுப்புக்கள் அனைத்தையும் தாம் இலங்கை அரசிடம் ஒப்படைக்கவிருப்பதாகவும், சுமார் 150 மில்லியன் அமெரிக்க டாலர்கள் பெறுமதியுள்ள 43.6 விகித பங்குகளையும் யாராவது கொள்வனவு செய்யமுன்வந்தால் அவற்றினை விற்பதற்கு அந்த அமைப்பு தயாராகவிருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்.

அண்மையில் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராகபக்ஷவின் லண்டனிற்கான விஜயத்தின் பின்னர் சிறிலங்கா எயர்லைஸிற்கும், அதனை நிர்வகித்துவரும் எமிரேட்ஸ் ஏர்லைன்ஸிற்குமிடையில் பல சச்சரவுகள் தொன்றியிருந்தன. இதன் ஒரு அங்கமாக எமிரேட்ஸின் சார்பில் சிறிலங்கா ஏர்லைன்ஸினை நிர்வகித்துவந்த அதன் பிரதம நிறைவேற்று அதிகாரி பீட்டர் ஹில்லினுடைய தொழில் அனுமதியை இலங்கை அரசு ரத்துச் செய்திருந்தது.

இந்தச் சச்சரவு தொடர்பாக உள்ளூர் ஊடகங்களிற்குக் கருத்துவெளியிட்டுள்ள சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் சாமல் ராஜபக்ஷ எமிரேட்ஸ் நிறுவனத்தின் நிபந்தனைகளிற்கு சிறிலங்கன் எயர்லைன்ஸ் நிறுவனம் ஒருபோது விட்டுக்கொடுக்கப்போவதில்லை என்றும் அதனுடனான ஒப்பந்தத்தினை தொடந்து புதுப்பிப்பதில் அரசிற்கு நாட்டமேதுமில்லை என்றும் தெரிவித்திருக்கிறார்.


சர்வதேச அரங்கில் இலங்கை அரசின் நிலைபாட்டை போர்நிறுத்த ஒப்பந்த விலகல் பலவீனப்படுத்தியுள்ளது: ஐக்கிய தேசியக் கட்சி

போர்நிறுத்த ஒப்பந்தத்திலிருந்து இலங்கை அரசு தன்னிச்சையாக விலகியிருப்பது, இலங்கை அரசின் நிலைப்பட்டை சர்வதேச அரங்கில் பலவீனப்படுத்தியிருப்பதாக, இலங்கையின் பிரதான எதிர்கட்சியான ஐக்கிய தேசிய கட்சி குற்றம்சாட்டியுள்ளது.

இலங்கை அரசின் இந்த முடிவு, விடுதலைப்புலிகளின் தனிநாடு கோரிக்கைக்கு வலுசேர்ப்பதாக இருப்பதாக அமையும் என்றும் அந்த கட்சி கூறியுள்ளது.

இலங்கை அரசின் நட்பு நாடுகளான அமெரிக்கா, ஜப்பான், இந்தியா ஆகிய நாடுகளும், ஐ.நா.சபையும் இலங்கை அரசின் முடிவு குறித்து தமது கடும் அதிருப்தியையும், ஏமாற்றத்தையும் தெரிவித்துள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நாடுகள் இலங்கைக்கு அளித்து வந்த ராணுவ உதவிகள் என்பவை, போர்நிறுத்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையிலும், அதன் தொடர்ச்சியான சமாதான நடவடிக்கைகளின் அடைப்படையிலும் அமைந்தவை என்றும் ஐக்கிய தேசிய கட்சியின் அறிக்கை தெரிவித்துள்ளது.

இந்த பின்னணியில், இலங்கை அரசின் முடிவு, சர்வதேச ரீதியிலும் இலங்கைக்குள்ளும் அரசின் நிலையை வலுவிழக்க செய்திருப்பதாகவும் ஐக்கிய தேசிய கட்சியின் அறிக்கை தெரிவிக்கிறது.

இது குறித்து ஐக்கிய தேசிய கட்சியின் துணைத்தலைவர் டி.எம்.சுவாமிநாதன் அவர்களின் செவ்வியை நேயர்கள் கேட்கலாம்.


Posted in Airlines, Ceasefire, deal, Eelam, Eezham, Emirates, LTTE, Opposition, Ranil, Sri lanka, Srilanka | Leave a Comment »

Discount carriers – Air India Express to fly direct to Trichy for Rs. 99

Posted by Snapjudge மேல் ஏப்ரல் 25, 2007

ரூ.99-ல் திருச்சிக்கு விமானம்: ஏர் இந்தியா சலுகை

சென்னையில் இருந்து திருச்சி மற்றும் மும்பைக்கு செல்லும் விமானங்களின் கட்டணத்தை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் அதிரடியாகக் குறைத்துள்ளது.

இதன்படி சென்னையில் இருந்து திருச்சிக்கு செல்ல ரூ.99 கட்டணமாக வசூலிக்கப்படும். வரிகளுடன் சேர்த்து இந்த கட்டணம் ரூ 1099-ஆக இருக்கும்.

இதேபோல், சென்னையில் இருந்து மும்பைக்கு செல்ல கட்டணம் ரூ.299 வரிகளுடன் சேர்த்து ரூ.1299-ஆக கட்டணம் வசூலிக்கப்படும்.

இந்த சலுகைக் கட்டண விமானம், சென்னையில் இருந்து ஒவ்வொரு வியாழக் கிழமை மதியம் 2.25 மணிக்குப் புறப்பட்டு மாலை 4.25 மணிக்கு மும்பையை சென்றடையும். வெள்ளி மற்றும் சனிக் கிழமைகளில் சென்னையில் இருந்து பகல் 12.10 மணிக்கு மும்பை செல்லும் விமானத்திற்கும் இந்த சலுகைக் கட்டணம் பொருந்தும்.

திங்கள், புதன் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் சென்னையில் இருந்து காலை 11.40 மணிக்கு திருச்சிக்கு புறப்படும் ஏர் இந்தியா விமானத்தில், சலுகைக் கட்டணத்தில் பயணம் செய்யலாம்.

மேலும் விவரங்களுக்கு 1412 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தகவல்களை பெறலாம். இதுதவிர www.airindiaexpress.in என்ற இணையதளத்திலும் தகவல்கள் அறியலாம்.

ஏர் இந்தியா பயணச் சீட்டு விற்பனை மேலாளர் ஜே.வி.ஜே. சுப்பிரமணியம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.

Posted in Aeroplanes, Air, Air India, Air India Express, Airlines, Cheap, Discount, Flight, GoAir, IndiGo, Price, Southwest, SpiceJet, Thiruchirappalli, Trichy | Leave a Comment »