இந்திய விமானப் படையின் புதிய தலைமைத் தளபதி ஃபாலி எச் மேஜர்
புதுதில்லி, ஜன. 31: இந்திய விமானப் படையின் அடுத்த தலைமைத் தளபதி(ஏர் சீஃப் மார்ஷல்)-யாக ஃபாலி எச் மேஜர் செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்டார்.
விமானப்படையின் கிழக்குப் பிரிவின் தலைமைத் தளபதியாக அவர் தற்போது இருந்து வருகிறார். தலைமைத் தளபதியாக பொறுப்பேற்க இருக்கும் முதல் “ஹெலிகாப்டர் பைலட்’ இவர்தான்.
தற்போது விமானப் படை தலைமைத் தளபதியாக இருக்கும் எஸ்.பி.தியாகி வரும் மார்ச் 31-ல் ஓய்வு பெறுகிறார். அதன்பிறகு மேஜர் இப்பொறுப்பை ஏற்றுக்கொள்வார்.
இவரைத் தேர்வு செய்ததன் மூலம், போர் விமான பைலட்டுகள்தான் இந்திய விமானப் படை தலைமைத் தளபதியாக பொறுப்பேற்க முடியும் என்ற மரபு மாற்றப்பட்டுள்ளது.