Posted by Snapjudge மேல் ஏப்ரல் 25, 2007
ரூ.99-ல் திருச்சிக்கு விமானம்: ஏர் இந்தியா சலுகை
சென்னையில் இருந்து திருச்சி மற்றும் மும்பைக்கு செல்லும் விமானங்களின் கட்டணத்தை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் அதிரடியாகக் குறைத்துள்ளது.
இதன்படி சென்னையில் இருந்து திருச்சிக்கு செல்ல ரூ.99 கட்டணமாக வசூலிக்கப்படும். வரிகளுடன் சேர்த்து இந்த கட்டணம் ரூ 1099-ஆக இருக்கும்.
இதேபோல், சென்னையில் இருந்து மும்பைக்கு செல்ல கட்டணம் ரூ.299 வரிகளுடன் சேர்த்து ரூ.1299-ஆக கட்டணம் வசூலிக்கப்படும்.
இந்த சலுகைக் கட்டண விமானம், சென்னையில் இருந்து ஒவ்வொரு வியாழக் கிழமை மதியம் 2.25 மணிக்குப் புறப்பட்டு மாலை 4.25 மணிக்கு மும்பையை சென்றடையும். வெள்ளி மற்றும் சனிக் கிழமைகளில் சென்னையில் இருந்து பகல் 12.10 மணிக்கு மும்பை செல்லும் விமானத்திற்கும் இந்த சலுகைக் கட்டணம் பொருந்தும்.
திங்கள், புதன் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் சென்னையில் இருந்து காலை 11.40 மணிக்கு திருச்சிக்கு புறப்படும் ஏர் இந்தியா விமானத்தில், சலுகைக் கட்டணத்தில் பயணம் செய்யலாம்.
மேலும் விவரங்களுக்கு 1412 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தகவல்களை பெறலாம். இதுதவிர www.airindiaexpress.in என்ற இணையதளத்திலும் தகவல்கள் அறியலாம்.
ஏர் இந்தியா பயணச் சீட்டு விற்பனை மேலாளர் ஜே.வி.ஜே. சுப்பிரமணியம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.
Posted in Aeroplanes, Air, Air India, Air India Express, Airlines, Cheap, Discount, Flight, GoAir, IndiGo, Price, Southwest, SpiceJet, Thiruchirappalli, Trichy | Leave a Comment »
Posted by Snapjudge மேல் ஜனவரி 19, 2007
தொழிலதிபர் நுஸ்லி வாடியாவின் சூட்கேஸில் கைத்துப்பாக்கி, குண்டுகள்: விமான நிலையத்தில் பறிமுதல்
மும்பை, ஜன. 20: மும்பையிலிருந்து ஏர்~இந்தியா விமானத்தில் துபைக்குச் சென்ற பிரபல தொழிலதிபர் நுஸ்லி வாடியாவின் சூட்கேஸில் கைத்துப்பாக்கியும் 30 குண்டுகளும் இருந்தது துபை விமான நிலையத்தில் நடந்த பாதுகாப்புச் சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டது. அதையடுத்து அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
கடந்த வாரம் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. உலகம் முழுவதும் பயங்கரவாத அச்சுறுத்தல் அதிகரித்து இருப்பதை அடுத்து விமான நிலையங்களில் தீவிரப் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. ஆனால், அனைத்துப் பாதுகாப்புச் சோதனைகளையும் கடந்து கைத்துப்பாக்கியையும் குண்டுகளையும் ஒருவர் தன்னுடன் எடுத்துச் செல்ல அனுமதித்தது எப்படி என்பது குறித்து ஏர்~இந்தியா நிறுவனம் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.
பணியில் கவனக் குறைவாக இருந்ததாக இரு ஊழியர்களை ஏர்~இந்தியா நிறுவனம் பணியிடைநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது.
ஜனவரி 13-ம் தேதி, மும்பையில் உள்ள சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட விமானத்தில் அவர் சென்றுள்ளார். அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த அதிகாரிகளும் கவனக் குறைவாக இருந்துள்ளனர்.
ஆனால், துபையில் அவர் இறங்கியபோது விமான நிலையத்தில் நடந்த பாதுகாப்புச் சோதனையில் அவரது சூட்கேஸில் கைத்துப்பாக்கியும் குண்டுகளும் இருப்பது தெரியவந்தது. துப்பாக்கி வைத்துக்கொள்வதற்கான உரிமத்தை அதிகாரிகளிடம் வாடியா காட்டியதை அடுத்து, அவரிடமிருந்து துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டதற்கான ரசீதை அதிகாரிகள் அளித்தனர்.
பாம்பே டையிங் நிறுவன அதிபரான நுஸ்லி வாடியா, “கோஏர்’ என்னும் விமானப் போக்குவரத்து நிறுவனத்தையும் நடத்திவருகிறார்.
இச் சம்பவம் குறித்து விசாரித்தபோது, “”வாடியாவின் வீட்டுப் பணியாள், அந்தத் துப்பாக்கியையும் குண்டுகளையும் தெரியாமல் வாடியாவின் சூட்கேஸில் வைத்து, விமான நிலையத்தில் கொண்டுவந்து அவரிடம் கொடுத்துவிட்டார்” என்று அவரது நிறுவனத்தைச் சேர்ந்த செய்தித் தொடர்பாளர் ஒருவர் விளக்கம் அளித்தார்.
Posted in Air India, Airport, Ambani, arms licence, baggage, Bombay, Bombay Dyeing, breach, cartridges, civil aviation, Dubai, firearm, GoAir, gun, Guru, mani Rathnam, Ministry, Mumbai, Nusli Wadia, Reliance, revolver, Security, X-ray | Leave a Comment »
Posted by Snapjudge மேல் நவம்பர் 17, 2006
மேலும் 10 ஆயிரம் பேருக்கு ஹஜ் பயணம் செல்ல நிதி உதவி: மத்திய அரசு அறிவிப்பு
புதுடெல்லி, நவ. 17- இஸ்லாமியர்களின் முக்கிய கடமைகளில் ஹஜ் புனித பயணம் மேற்கொள்வதும் ஒன்றாகும். இந்தியாவில் இருந்து சவுதி அரேபியாவுக்கு ஹஜ் பயணம் செய்பவர்கள் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. இந்த ஆண்டுக்கான ஹஜ்பய ணம் இந்த மாத இறுதியில் தொடங்கும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
ஹஜ்பயணம் செல்ல விரும்பும் முஸ்லிம்கள் நல னுக்காக மத்திய அரசு ஆண்டு தோறும் மானியம் வழங்கி வருகிறது. கடந்த ஆண்டு 1 லட்சம் முஸ்லிம்கள் மத்திய அரசு மானியம் மூலம் பயன் பெற்றனர்.
இந்த ஆண்டு மேலும் 10 ஆயிரம் பேருக்கு புனித ஹஜ் பயண நிதி உதவி வழங்க மத்திய அரசு முன்வந்துள்ளது. மத்திய மந்திரிசபை கூட்டத்தில் நேற்று இதற்கான முடிவு எடுக் கப்பட்டது. எனவே இந்த ஆண்டு 1 லட்சத்து 10 ஆயிரம் ஹஜ் பயணிகள் மத்திய அரசு மானியம் பெறுவார்கள்.
இதற்கான பயனாளிகளை ஹஜ்கமிட்டி தேர்வு செய்கிறது. தேர்வு பெறுபவர்களுக்கு மத்திய அரசு தலா ரூ.45 ஆயிரம் பயண கட்டணத்தை மானியமாக வழங்கும். இத னால் மத்திய அரசுக்கு ரூ.3.5 கோடி கூடுதல் செலவு ஏற்படும் என்று தெரிய வந்துள்ளது.
ஹஜ்பயணிகள் ஏர் இந்தியா விமானங்களில் அழைத்துச் செல்லப்படுவார்கள். இதற் காக
- கொல்கத்தா,
- கள்ளிக் கோட்டை,
- நாகபுரி,
- அவுரங் காபாத்,
- பாட்னா,
- கவுகாத்தி,
- ஜெய்ப்பூர்,
- ஸ்ரீநகரில் இருந்து ஏர் இந்தியா விமானங்கள் இயக்கப்படும்.
Posted in Air India, Budget, Economics, Finance, Free, Haj, Holiday, Holy, India, Islam, Mecca, Medina, Muslim, Pilgrimage, Politics, Religion, Tamil, Trips, Vacation | 2 Comments »