லெபனானின் மீள் கட்டமைப்புக்கு 7.6 பில்லியன் டொலர்கள்
பிரான்ஸின் தலைநகர் பாரிஸில் நடைபெற்ற அனைத்துலக உதவி வழங்கும் மாநாட்டில், லெபனானை மீண்டும் கட்டியெழுப்ப 7.6 பில்லியன் டொலர்களை வழங்குவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளதாக பிரான்ஸ் நாட்டு அதிபர் ஜாக் ஷிராக் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா, பிரான்ஸ், ஐரோப்பிய ஒன்றியம், சவுதி அரேபியா ஆகியவையும் உலக வங்கியும் இணைந்து வழங்கும் இந்த உதவி நிதியுதவியாகவும், கடனாகவும் வழங்கப்படவுள்ளது.
இஸ்ரேலுக்கும், ஹெஸ்பொல்லா அமைப்புக்கும் இடையில் கடந்த ஆண்டு நடந்த சண்டையை அடுத்து லெபனான் சாம்பலில் இருந்து மறு அவதாரம் எடுக்கிறது என்று ஜாக் ஷிராக் கூறினார்.
லெபனானுக்கு உதவி வழங்கும்படி அந்த நாட்டுப் பிரதமர் முன்னர் கோரிக்கை விடுத்திருந்தார்.