Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Affirmative’ Category

Tamil Nadu Reservations for the Minority – Benefit Analysis by Dinamalar

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 23, 2007

.யாருக்கு பாதிப்பு?

தமிழக மக்கள் தொகையில் 11 சதவீதம் உள்ள முஸ்லிம், கிறிஸ்தவர்களில் பிற்படுத்தப்பட்டவர்கள் ஏழு சதவீதத்துக்கும் குறைவாகவே இருப்பார்கள். ஆனால், தமிழக அரசு ஏழு சதவீத இடஒதுக்கீடு வழங்கியுள்ளது.

தமிழகத்தில் 2001ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்புப்படி மொத்தம் ஆறு கோடியே 24 லட்சத்து ஐந்தாயிரத்து 679 மக்கள் உள்ளனர்.

  1. இதில், இந்துக்கள் ஐந்து கோடியே 49 லட்சத்து 85 ஆயிரத்து 79 பேர். அதாவது மொத்த மக்கள் தொகையில் 88.1 சதவீதத்தினர் இந்துக்கள்.
  2. முஸ்லிம்கள் மக்கள் தொகை 34 லட்சத்து 70 ஆயிரத்து 647. மொத்த மக்கள் தொகையில் 5.5 சதவீதம்.
  3. கிறிஸ்தவர்கள் மக்கள் தொகை 37 லட்சத்து 85 ஆயிரத்து 60. இது 6.06 சதவீதம்.

தற்போது தமிழகத்தில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 69 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இதில்,

  • ஆதிதிராவிடர்கள் மற்றும் பழங்குடியினருக்கு 19 சதவீதமும்,
  • மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு 20 சதவீதமும்,
  • பிற்படுத்தப்பட்டோருக்கு 30 சதவீதமும்

பிரித்து வழங்கப்படுகிறது.

இந்த பிற்படுத்தப்பட்டோருக்கான 30 சதவீதத்தில் இருந்து

  • ஏழு சதவீதத்தை பிரித்து முஸ்லிம்களுக்கு 3.5 சதவீதமும்,
  • கிறிஸ்தவர்களுக்கு 3.5 சதவீதமும் உள்ஒதுக்கீடு

அளிக்க தமிழக அரசு அவசரச் சட்டம் கொண்டு வந்துள்ளது

.தற்போதுள்ள 37 லட்சம் கிறிஸ்தவர்களில் 65 முதல் 75 சதவீதம் பேர் மதம் மாறிய ஆதிதிராவிடர்கள். இவர்களுக்கு ஆதிதிராவிடர்களுக்கான இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று தேசிய அளவில் போராடி வருகின்றனர். இதற்கான கமிஷன் அமைக்கப்பட்டு, அதன் பரிந்துரைகளும் பிரதமரிடம் வழங்கப்பட்டுள்ளன.

இந்த பிரிவினரை ஒதுக்கிவிட்டு பார்த்தால், கிறிஸ்தவர்களில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மொத்த மக்கள் தொகையில் இரண்டு சதவீதம் கூட இருக்க மாட்டார்கள். எனவே, மதம் மாறிய ஆதிதிராவிடர்களுக்கு தனியாக இடஒதுக்கீடு வழங்கும் பட்சத்தில், தற்போது வழங்கப்பட்டுள்ள 3.5 சதவீத இடஒதுக்கீடு மிகவும் அதிகமானதாகி விடும்.

இதேபோல, முஸ்லிம்களிலும் பல்வேறு பிரிவினர் உள்ளனர். இவர்களில் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் உள்ள முஸ்லிம்களுக்கு 3.5 சதவீத இடஒதுக்கீடு என அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமுள்ள 5.5 சதவீதத்தில் பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்கள் என பிரித்து அவர்களுக்கு 3.5 சதவீத ஒதுக்கீடு வழங்கியிருப்பது, அந்த மக்கள் தொகைக்கு ஏற்ற விகிதாச்சாரத்தில் இடஒதுக்கீடு வழங்குவது போலாகும்.

அதன்படி பார்த்தால், இந்துக்கள் 88.1 சதவீதத்தினர் உள்ளனர். இவர்களில் பிற்படுத்தப்பட்டோருக்கு தற்போது 23 சதவீத இடஒதுக்கீடு தான் கிடைக்கிறது. மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு 20 சதவீத இடஒதுக்கீடு உள்ளது. இந்துக்களில் 70 சதவீதத்துக்கும் அதிகமானோர் பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகங்களைச் சேர்ந்தவர்கள்.

தற்போதைய தமிழக அரசின் அவசரச் சட்டத்தால் இந்துக்களில் உள்ள பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். முஸ்லிம், கிறிஸ்தவ மக்கள் தொகை அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்குவது போல, இந்துக்களுக்கும் மக்கள் தொகை அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்கியிருக்க வேண்டும் என்பதே பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சேர்ந்தவர்களின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பு.

Posted in AA, AathiDravidar, ADMK, Affirmative, Affirmative Action, Analysis, Anthropology, BC, Benefit, Brahmins, Calculations, Caste, Castes, Census, Christianity, Christians, Community, Demography, Dinamalar, DMK, Dravidian, Education, Employment, FC, Islam, Jobs, MBC, minority, Muslims, OBC, Observations, OC, Op-Ed, Opportunity, Percentage, Population, Reservation, Reservations, SC, Social, Sociology, ST, Stats, Tamil Nadu, TamilNadu, TN | Leave a Comment »

Bringing caste into equation for the Visually Challenged: Government’s Discrimination with Reservations for the Blind

Posted by Snapjudge மேல் ஜூன் 17, 2007

அரசின் “பார்வை’ சரியா?

சென்னை, ஜூன் 17: பார்வையற்றவர்களில் ஜாதிப் பிரிவுண்டா? உண்டு என்கிறது இந்திய அரசின் இட ஒதுக்கீட்டுக் கொள்கை.

இந்தியாவில் இட ஒதுக்கீட்டுக் கொள்கை, பார்வையற்றவர்களின் மத்தியிலும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது என்பது அதிர்ச்சி தரும் செய்தி.

உடல் ஊனமுற்றோர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவது வரவேற்கத் தக்கது. இந்தியாவில் 2.5 கோடி ஊனமுற்றோரில் 12 லட்சம் பேர் கண்பார்வை அற்றவர்கள். இந்தக் கண்பார்வை அற்றோரில் “பிரெய்லி’ மொழி மூலம் படித்தவர்கள் பலர் உள்ளனர். படிக்காதவர்களும் உள்ளனர்.

கடந்த 1982 முதல் அரசு வேலை மற்றும் கல்வி நிறுவனங்களில் பார்வையற்றோருக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. அரசின் இந்த நடவடிக்கை மனிதநேயத்தின் அடையாளமாகக் கருதப்படுகிறது.

எத்தனை சதவீதம் இட ஒதுக்கீடு: அரசு வேலைகளில் பார்வையற்ற, உடல் ஊனமுற்றவர்களுக்கு 3 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இதில், ஒரு சதவீதம் பார்வையற்றோருக்கும், ஒரு சதவீதம் உடல் ஊனமுற்றோருக்கும், மீதமுள்ள ஒரு சதவீதம் மனவளர்ச்சி குன்றியோருக்கும் வழங்கப்படுகிறது.

இதேபோன்று, அரசு கல்வி நிறுவனங்களில் மொத்தமுள்ள 4 சதவீத இட ஒதுக்கீட்டில், பார்வையற்றோருக்கு 2 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது.

பார்வையற்றவருக்கான இட ஒதுக்கீடு பழங்குடியினர், தாழ்த்தப்பட்டோர், இதர பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பொதுப் பிரிவு என்ற நிலையில் வழங்கப்படுகிறது. பொதுப் பிரிவில் உயர் வகுப்பைச் சேர்ந்த பார்வையற்றவர்கள் வருகிறார்கள்.

“இட ஒதுக்கீட்டில் பாகுபாடு?’

இதன் மூலம், ஒருவர் பார்வையற்றவராகவும், பிற்படுத்தப்பட்ட அல்லது தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சார்ந்தவராகவும் இருந்தால்தான் அவருக்கு இட ஒதுக்கீடு உறுதி. பிற வகுப்பைச் சேர்ந்தவர் என்றால் அவருக்கு இட ஒதுக்கீட்டில் இடம் கிடையாது.

பார்வையற்றவர்கள் எல்லோரையும் ஒரே பிரிவாகக் கருதாமல் அவர்களுக்கு மத்தியிலும் ஜாதிப் பாகுபாட்டை ஏற்படுத்தி பேதப்படுத்துவது மனித நேயமே இல்லாத கண்மூடித்தனம்.

“”பார்வையற்றவர்களை உயர் வகுப்பினர், பின்தங்கிய வகுப்பினர் எனப் பிரித்து ஜாதி அடிப்படையில் கல்வி நிறுவனங்களிலும், அரசு அலுவலகங்களிலும் இட ஒதுக்கீட்டுக் கொள்கையை நிர்ணயிப்பது நியாயம் இல்லை என்கிறார் “நந்தினி வாய்ஸ்’ என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் அறங்காவலர் எஸ்.என். வெங்கட்ராமன்.

இது குறித்து, தமிழக அரசுக்குக் கடிதம் எழுதியும் எந்த பதிலும் வரவில்லை என்றார் வெங்கட்ராமன்.

இட ஒதுக்கீட்டில் மாற்றம் வருமா?

ஜாதி அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்குவதால், திறமையிருந்தும் வேலை கிடைக்காத நிலையில் பார்வையற்றோர் பலர் உள்ளனர். இதனால், ஊனமுற்றோருக்கான இட ஒதுக்கீட்டில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என்று பல்வேறு தன்னார்வ அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன. பார்வையற்றோரில் பழங்குடியினர், தாழ்த்தப்பட்டோர் என வகைப்படுத்தாமல் தகுதியும் திறமையும் உள்ள அனைவருக்கும் அரசு நிறுவனங்களில் வேலைவாய்ப்பு அளிக்க வேண்டும் என தன்னார்வ அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.

இது என்னங்க நியாயம்?

தொலைபேசி பேசுவதற்காக வருவோரிடம் ஆங்கிலத்தில் சரளமாகப் பேசுகிறார் சென்னை தி. நகரில் பிசிஓ நடத்தும் பார்வையற்றவரான மீனாட்சி சுந்தரி.

அந்தப் பேச்சில் தன்னம்பிக்கை மிளிர்கிறது. ஆனால், அருகே சென்று பேசினால், இந்த நம்பிக்கை பல சமயங்களில் உடைக்கப்படுவதாக சோகத்துடன் கூறுகிறார் மீனாட்சிசுந்தரி. அதுவும் அரசின் இட ஒதுக்கீட்டால் என்கிறார்.

மீனாட்சிசுந்தரி பிறந்த 6 மாதங்களுக்குள் காய்ச்சல் காரணமாக கண் பார்வை இழந்தார். தூத்துக்குடியில் பிறந்த அவர், தனது பள்ளிப் படிப்பை பாளையங்கோட்டையில் உள்ள பார்வையற்றோர் பள்ளியில் படித்தார்.

தொடர்ந்து விடாமுயற்சியுடன் கல்வியைத் தொடர்ந்த அவர் பட்டப்படிப்பு வரை படித்தார். “”கோவையில் உள்ள அவிநாசிலிங்கம் உயர் கல்வி நிறுவனத்தில் இளங்கலை ஆங்கிலம் படித்தேன். இதன்பின், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் எம்.ஏ. ஆங்கிலம் படித்தேன்.

1989-ல் பட்டப்படிப்பை முடித்த பின்பு, சென்னை வந்தேன். சுருக்கெழுத்து மற்றும் தொலைபேசி ஆபரேட்டர் பயிற்சியில் சேர்ந்தேன். இரு பயிற்சிகளிலும் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றேன்” எனக் கூறும் மீனாட்சி சுந்தரி, தொலைபேசி ஆபரேட்டராக 2 வருடங்கள் அனுபவம் பெற்றுள்ளார்.

“”இன்சூரன்ஸ் நிறுவனத்தில் தொலைபேசி ஆபரேட்டர் வேலைக்கு விண்ணப்பித்தேன். தகுதியிருந்தும் மறுக்கப்பட்டது. ரயில்வே துறை ஏராளமான எழுத்தர் வேலைகளுக்கு விண்ணப்பித்தேன். அனைத்தும் நிராகரிக்கப்பட்டன. பார்வையற்றவர்களுக்கான இட ஒதுக்கீட்டுக்குள் நான் வரவில்லை. காரணம், உயர் வகுப்பைச் சேர்ந்தவர் என்பதுதான்” என்றார் மீனாட்சி சுந்தரி.

இவரைப் போன்று இன்னும் எத்தனை பேர் இருக்கின்றனரோ? பார்வையற்றவர் மீதான அரசின் இந்தப் பார்வை சரியா?

Posted in AA, Action, Affirmative, Applicant, Aryan, Autism, BC, Blind, Braille, Caste, Challenged, Colleges, Community, Denial, Development, Disabled, Discrimination, Disease, Disorder, disturbed, Dravidian, Education, EEO, Employment, Equal, Eyes, FC, Forward, Govt, Handicapped, Health, Ill, Jobs, MBC, Mental, Merit, NGO, OBC, OC, Opportunity, PCO, prejudice, psychological, Qualification, Race, Reservation, SC, Schizophrenia, Schools, service, sightless, Society, ST, Students, Study, Treatment, University, Vision, Volunteer | Leave a Comment »