Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Advertisements’ Category

Interview with ‘Ramanujan’ Documentary filmmaker MV Bhaskar – Dinamani Kathir

Posted by Snapjudge மேல் திசெம்பர் 29, 2007

ஆவணம்: “”கலையும் அறிவியலும் கலந்த இடம்தான் கோவில்!”

சமூகத்தில் பிரமிக்கதக்க சாதனைகளைச் செய்திருப்பவர்களைப் பாருங்கள். பெரும்பாலும் சப்தமே இல்லாமல் வேலை செய்து கொண்டிருப்பவர்களாகத்தான் இருப்பார்கள். அப்படிப்பட்டவர்களில் ஒருவர்தான் எம்.வி. பாஸ்கர் – பன்முக ஆளுமை.

விளம்பரத் துறையில் பாஸ்கருடைய பணிகள் சர்வதேச அளவிலான விருதுகளை அவருக்குப் பெற்றுத் தந்திருக்கின்றன. அவருடைய “ராமானுஜன்’ ஆவணப் படம், கணித மேதை ராமானுஜன் பற்றிய காட்சிப் பதிவுகளில் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. யேல் பல்கலைக்கழகத்துக்காக அவர் செய்த “ஊர்’ விவரணப் படம் தமிழ் மரபின் ஆதார வேர்களைத் தேடிச் சென்றது. பழங்குடியின மக்களின் கலாசாரத்தை, அவர்களுடைய வாழ்வியலைப் பதிவு செய்த “ட்ரைபாலஜி’ ஆவணப் படத்தில் அவருடைய பங்களிப்பு முக்கியமானது.

“”கலையும் அறிவியலும் சந்திக்கும் இடங்கள் எனக்கான தளங்கள்” எனக் குறிப்பிடும் பாஸ்கர், தமிழில் அதற்கான பணிகளில் ஈடுபட்டிருக்கும் ஒரு சிலரில் குறிப்பிடத்தக்கவர்.

மறைந்து கொண்டிருக்கும் சுவரோவியங்களைப் பதிவுகளாக்கி அடுத்தத் தலைமுறையினரிடம் கொண்டு செல்லும் பணியில் தற்போது ஈடுபட்டிருக்கிறார்.

ஒரு வரலாற்று ஆய்வாளனின் வேட்கையோடு கலை, அறிவியல், இசை, ஒளிப்பதிவு, இயக்கம், மின்பதிப்பு எனப் பல்வேறு தளங்களிலும் இயங்கிக் கொண்டிருக்கும் பாஸ்கரைப் பற்றி எழுதுவதைவிடவும் முக்கியமானது அவரிடம் பேசுவது. தமிழில் பாஸ்கரைப் பற்றிய முதல் பதிவு இது. இனி பாஸ்கருடன்…

வெவ்வேறு துறை அறிமுகம் பலமா, பலகீனமா?

பலம்தான். ஒரே விஷயத்தைத் திரும்பத்திரும்ப செய்வது அயர்வையே தருகிறது. மாறாக வெவ்வேறு விஷயங்கள் மீதான ஈடுபாடு, நிறைய கற்றுக்கொள்ளும் வாய்ப்பை அளிக்கிறது. தவிர, ஒரு துறையில் பெற்ற அனுபவம் மற்றொரு துறையில் ஏதேனும் ஒரு வகையில் உதவும். அதுவே உங்களை வித்தியாசப்படுத்தவும் செய்யும்.

விளம்பரப் படமும் ஆவணப் படமும் இருவேறு உலகங்கள். உங்களிடம் இவை இரண்டையும் இணைத்தது எது?

ஒரு படைப்பாளி எத்தனை ஈடுபாட்டுடன் செய்தாலும் விளம்பரங்கள் பிறருடைய திருப்தியையே முதல் நோக்கமாகக் கொண்டவை. மிகைப்படுத்தலும் போலித்தனமும் அங்கு அதிகம். தொடக்கக் காலத்திலிருந்தே இது என்னை அழுத்திக் கொண்டிருந்தது. நாம் செய்ய வேண்டிய காரியங்கள் வேறு என்பதை நன்கு உணர்ந்திருந்தேன்.

இந்நிலையில்தான், ராமானுஜத்தின் நூற்றாண்டையொட்டி அவர் பற்றிய ஆவணப் படத்தை இயக்கினேன். அப்போது அது எனக்குத் திருப்தி அளிப்பதாக இருந்தது.

ஓர் இடைவெளிக்குப் பின்னர், “ட்ரைபாலஜி’ செய்தோம். ஒரிஸôவில் வாழும் பழங்குடி இன மக்களின் கலாசாரம் குறித்த பதிவு அது. அதன் பின்னர், “ஊர்’. பேராசிரியர் இ. அண்ணாமலை எனக்கு அளித்த வேலை அது. வெளிநாட்டு மாணவர்கள் மத்தியில் நமது கலை, கலாசாரம், பாரம்பரிய மரபுகள் பற்றிய ஓர் அறிமுகமாகவே அப்பணியைச் செய்தோம்.

நவீன வாழ்வு பழங்குடிகளைப் பாதித்திருக்கிறதா?

பழங்குடிகள் குறித்த நமது பார்வை மலிவானவை. பழங்குடிகளில் இன்றைய நவீன வாழ்வின் அனைத்து வசதிகளோடும் வாழ்பவர்களும் இருக்கிறார்கள்; தன் ஆதி அடையாளம் மாறாமல் வாழ்பவர்களும் இருக்கிறார்கள்.

பணம் இல்லாத ஒரு வாழ்வை ஒரு கணமேனும் நம்மால் நினைத்துப் பார்க்க முடியுமா? ஆனால், பணமே இல்லாத ஒரு வாழ்க்கை அவர்களுக்குச் சாத்தியமாகி இருக்கிறது. அவர்களுடைய வீடுகளை அவர்களே கட்டுகிறார்கள். அவர்களுடைய உணவை, உடைகளை அவர்களே தேடிக் கொள்கிறார்கள். அவர்களுடைய ஒவ்வொரு தேவையையும் அவர்களால் சுயமாக அடைய முடிகிறது. இயற்கையோடான அவர்களுடைய வாழ்க்கையிலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய முக்கியமான பாடம் வாழ்க்கையை வாழக் கற்றுக் கொள்வது.

“ஊர்’ அனுபவம் எப்படி?

தமிழின் உன்னதங்கள் உறைந்திருக்கும் 88 இடங்களுக்கு அந்தப் படத்துக்காகச் சென்றோம். உண்மையாகவே சொல்கிறேன். நம்மைவிடவும் மோசமான ஒரு சமூகம் இருக்க முடியாது. உலகளவில் போற்றத்தக்க எத்தனையோ கலைகள், கலைப் படைப்புகள் நம்மிடம் இருக்கின்றன. அவை அனைத்தையும் சாகடித்துக் கொண்டிருக்கிறோம் நாம். நம்முடைய மோசமான செயல்பாட்டுக்கு கோயில்களின் இன்றைய நிலை ஓர் உதாரணம்.

கோயில்கள் அழிந்து கொண்டிருக்கின்றனவா?

ஆமாம். நம்முடைய வாழ்க்கை முறையே கோயில் சார்ந்ததாகத்தான் இருந்திருக்கிறது. கோயில்கள்தான் எல்லாமும். கேளிக்கைகளும் கொண்டாட்டங்களும் கூடிய அங்குதான் எல்லா கலைகளும் வாழ்ந்திருக்கின்றன.

கலையும் அறிவியலும் ஒன்றுகூடிய இடம் கோயில். இன்றைய நிலையோ வேறு. மதம் சார்ந்த விஷயமாக மட்டுமே கோயில் அணுகப்படுகிறது. உன்னதமான சிற்பங்களும் சுவரோவியங்களும் அழிந்து கொண்டிருக்கின்றன. கோயில் சார்ந்த கலை மரபுகள் வழக்கொழிந்து வருகின்றன. கலைஞர்கள் அருகி வருகிறார்கள். கலையின் அழிவும் கலைஞர்களின் அழிவும் ஒரு சமூகத்தினுடைய அடையாளத்தின் அழிவு.

நம் மரபுகளை அடுத்த தலைமுறைக்கு எப்படி எடுத்துச் செல்வது?

நிறைய பணிகள் இருக்கின்றன. முக்கியமாகத் திணிப்பு கூடாது. குழந்தைகளை குழந்தைகளாக இருக்க அனுமதிக்க வேண்டும். குழந்தைகளுக்கான கதைகள், இசை, கலை என எதையும் நாம் சிந்திப்பதே இல்லை. அவர்களை, பணம் பண்ணும் இயந்திரமாக்க நாம் துடித்துக்கொண்டிருக்கிறோம். நம் குழந்தைகளை முதலில் வீடுகளைவிட்டு வெளியே அழைத்து வர வேண்டும்; எந்தவித நோக்கமும் இல்லாமல். அதாவது, ஊர் சுற்றுவதுபோல்.

வாசிக்கும் பழக்கமும் ஊர் சுற்றும் பழக்கமும் எல்லாவற்றையும் கற்றுக் கொடுக்கும். வாழ்க்கை கொண்டாட்டத்துக்குரியது. கொண்டாட்டங்களின் – கேளிக்கைகளின் ஒரு வடிவம்தான் கலை. நம்முடைய கலை, கலாசார ஆதாரங்களை அடுத்தத் தலைமுறைக்கு எப்படியேனும் எடுத்துச் செல்ல வேண்டும். தமிழ் சமூகம் எதிர்கொண்டிருக்கும் மிகப் பெரிய சவால் அதுதான்.

Posted in Ads, Advertisements, Advt, Archeology, Arts, Bhaskar, Castes, Cinema, Community, Culture, Documentary, Films, Heritage, Hindu, Hinduism, History, Movies, MV Bhaskar, MV Bhaskhar, Paintings, Raamanujan, Raamanujar, Ramanujan, Ramanujar, SC, Science, ST, Temples, Tribes, Vaishnavism, Vaishnavite | Leave a Comment »

Billboards – Advertising Planks: Dangerously hanging on top

Posted by Snapjudge மேல் திசெம்பர் 18, 2007

தொடர்ந்து சரியும் விளம்பரப் பலகைகள்…

சென்னையில் திங்கள்கிழமை வீசிய பலத்த காற்றில் நுங்கம்பாக்கம் ரயில் நிலையம் அருகே சரிந்து விழுந்த விளம்பரப் பலகை. (உள்படம்) காயமடைந்த ரெஜீனா.

சென்னை, டிச. 18: சென்னையில் விளம்பரப் பலகைகள் சரிவது தொடர் கதையாகி வருகிறது. செப்டம்பர் 27-ம் தேதி பலத்த காற்று வீசியபோது எழும்பூர் லட்சுமிபதி ருக்மணி சாலையில் வைக்கப்பட்டிருந்த பெரிய விளம்பரப் பலகை சரிந்து விழுந்தது. இதில் ஒருவரும் பாதிக்கப்படவில்லை.

சாலையில் மையப் பகுதிகளில் வைக்கப்படும் சிறிய விளம்பரங்கள், சாலைகளில் சரிந்து விழுகின்றன. இதனால் போக்குவரத்தும் தடைபடுகிறது.

சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையம் அருகில் வைக்கப்பட்டிருந்த பெரிய விளம்பரப் பலகை திங்கள்கிழமை வீசிய பலத்த காற்றில் சரிந்து விழுந்தது. அந்த வழியே சென்ற ரெஜினா என்ற பெண் காயமடைந்தார். அதிர்ஷ்டவசமாக அவர் உயிர் தப்பினார்.

இச் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்றபோதும் விளம்பரப் பலகைகளைச் சோதனையிடவோ, விதிகளைக் கடுமையாக்கவோ இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நேமம் என்ற இடத்தில் அண்மையில் இதுபோல் பெரிய விளம்பரப்பலகை சரிந்து விழுந்தது. இந்த விபத்தில் 14 வயது சிறுவன் உடல் நசுங்கி இறந்தார். 13 பேர் படுகாயம் அடைந்தனர். இதையடுத்து, உறுதித்தன்மை இல்லாத விளம்பரப் பலகைகளை அப்புறப்படுத்த திருவனந்தபுரம் மாநகராட்சி உத்தரவிட்டது. விளம்பரப் பலகை வைக்க விண்ணப்பிப்பவர்கள், அங்கீகரிக்கப்பட்ட வடிவமைப்புப் பொறியாளரிடமிருந்து சான்றிதழ்பெற்று விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

ஹைதராபாதிலும் விளம்பரப் பலகைகள் வைக்க கடுமையான விதிகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. சட்டசபை, தலைமைச் செயலகம், ராஜ்பவன் செல்லும் சாலைகளில் விளம்பரங்கள் வைக்கத் தடை விதிக்கப்பட்டது. இதேபோல் எல்.சி.டி. விளம்பரப் பலகைகளுக்கும் தடை விதித்து, நகரில் வைக்கப்பட்டிருந்த ஒரு சில எல்.சி.டி. விளம்பரப் பலகைகளைளும் அப்புறப்படுத்தப்பட்டன.

விதிகளை மீறி விளம்பரப் பலகை வைக்கும் ஏஜென்டுகளுக்கு முதல்முறை ரூ. 5 ஆயிரம் அபராதமும், இரண்டாவது முறை ரூ. 10 ஆயிரமும், மூன்றாவது முறை என்றால் உரிமத்தை ரத்து செய்து, ரூ. 25 ஆயிரம் அபராதமும் விதிக்கிறது ஹைதராபாத் மாநகராட்சி.

சென்னையில் விளம்பரப் பலகைகளின் அளவுக்கு ஏற்ப, பலமான தாங்குக் கம்பிகள் வைக்கப்படுவதில்லை. இதனால் பலத்த காற்று வீசும்போது பாரம் தாங்க முடியாமல் சாய்ந்து விடுகின்றன என்று போக்குவரத்துப் போலீஸôர் தெரிவிக்கின்றனர்.

சென்னை உள்பட தமிழகம் முழுவதும் விளம்பரப் பலகைகள் தகுந்த அளவீடுகளின்படி வைக்கப்பட்டுள்ளனவா என்று சோதனையிட அரசு உத்தரவிட வேண்டும்.

மழை, பலத்த காற்று போன்ற இயற்கைச் சீற்றங்களுக்குப் பின் அந்தந்த விளம்பரங்களின் உரிமையாளர்கள் மூலம், விளம்பரத்தைத் தாங்கி நிற்கும் கம்பிகளின் உறுதித் தன்மையைச் சோதனையிடவும் உத்தரவிடப்பட வேண்டும். விதிகளை மீறும் விளம்பர ஏஜென்டுகளுக்குக் கடுமையான அபராதம் விதிக்கவேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

சென்னையில் வைக்கப்பட்டுள்ள சில விளம்பரப் பலகைகள் எல்.சி.டி., மின் விளக்குகள் மூலம் அலங்கரிக்கப்பட்டுள்ளன. இவை காற்றினால் விழும்போது மின்சாரம் தாக்கும் வாய்ப்பும் இருப்பதை அதிகாரிகள் கவனத்தில் கொள்ள வேண்டும்.

Posted in Accidents, Ad, Ads, Advertisements, Advertising, Arcot, banners, Bill boards, Billboards, Chennai, Cut-out, Cut-outs, cutouts, dead, gigantic, Killed, Oversight, Planks, posters, Veerasamy | Leave a Comment »

Makkal TV – Advertisement costs, Special Programmes: Info

Posted by Snapjudge மேல் நவம்பர் 14, 2007

Makkal TV Logo

makkal TV Programming Offerings Telecast

Makkal TV Ad Rates Tariff Product Promotions

Posted in Ads, Advertisement, Advertisements, Advt, Anbumani, Info, Makkal, Media, PMK, Product, Programmes, Promotions, Ramadas, Ramadoss, Rates, Serials, Tariffs, TV, Viewers, Viewrs | Leave a Comment »

Ramzan Shopping == Christmas Santa Claus == Deepavali Celebrations

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 25, 2006

வர்த்தகமயமாகும் ரம்சான் பண்டிகை

ரம்ஜான் தொழுகையில் இஸ்லாமியர்கள்
ரம்ஜான் தொழுகையில் இஸ்லாமியர்கள்

ரம்சான் காலத்தில் முஸ்லீம்கள் வீடுகளிலேயே அதிக நேரம் தங்கியிருக்கின்றனர். இதனால் இவர்கள் அதிக நேரம் டி வி பார்ப்பதாக தொலைக்காட்சி நிலைய உரிமையாளர்கள் கூறுகின்றனர். முஸ்லீம் நாடுகளில் செய்யப்படும் மொத்த விளம்பரங்களில 30 சதவீதம் ரம்சான் மாத காலத்தில் செய்யப்படுவதாக கணிக்கப்பட்டுள்ளது. செயற்கைக் கோள் மூலம் செய்யப்படும் டி வி ஒளிபரப்புகள் உலகம் முழுவதிலும் உள்ள முஸ்லீம் குடும்பங்களை சென்றடைகின்றன.

நோன்பு காலத்தில் உணர்ச்சிமயமான விளம்பரங்களை விளம்பரதாரர்கள் தயாரிக்கின்றனர். நோன்பு இருப்பவர்களுடன் தொடர்புகொள்ள நீதிக் கதைகளை சொல்வது ஒரு வழியாக உள்ளது என்கிறார் லியோ பர்னேட் நிறுவனத்தின் ஐரோப்பா, மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்கப் பிரிவின் தலைவர் ரிச்சர்ட் பிண்டெர்.

ரம்சான் போது ஷாப்பிங் செய்யாதீர்கள் என்று கூறுகிறார் இமாம் அஜ்மால் மசூர். அதிக அளவுவிலான வர்த்தக் குறுக்கீட்டால், ரம்சானின் உண்மையான நோக்கம் பாதிக்கப்படக் கூடிய அபாயம் இருப்பதாக இமாம் அஜ்மல் மசூர் கருதுகிறார்.

உலகம் முழுவதிலும் 100 கோடிக்கும் அதிகமான முஸ்லீம்கள் உள்ளனர். இதில் பலர் வேகமாக வளரும் நாடுகளில் உள்ளனர். எனவே ரம்சான் மாதத்தில் வர்த்தகத்துக்கான வாய்ப்புகள் மிகவும் அதிகம். கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது ஏராளமாக பொருள் செலவிடப்படுவதை ஏற்றுக் கொள்ளாத சில முஸ்லீம்கள், தற்போது ரம்சானுக்கும் அதே போன்றதொரு நிலை ஏற்பட்டுள்ளதோ என்று எண்ணுகின்றனர்.

Posted in Ads, Advertisements, Celebrations, Christmas, Customer, Deepavali, Economy, Marketing, Ramadan, Ramzan, sales, Santa Claus, Shopping, TV | 2 Comments »

Craigslist.Org – Concept & Execution

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 12, 2006

ஒரு மாதத்துக்கு கோடி விளம்பரம்!

ஆர்.வெங்கடேஷ்

இணையம் என்றாலே எல்லாம் ஓசியில் சுலபமாகக் கிடைக்க வேண்டும், அங்கே எந்த ஒரு வியாபார நோக்கமும் இருக்கக்கூடாது என்பது இணைய ஆர்வலர்களின் எதிர்பார்ப்பு. வியாபார நோக்கம் தலைதூக்கி விட்டால், இணையம் வளரவே வளராது என்பது இவர்களின் வாதம். இணையத்தைப் பயன்படுத்துபவர்களின் தேவையை ஒட்டி சேவைகள் உருவாக்கப்பட்டு, அது முற்றிலும் இலவசமாகவே அவர்களுக்குக் கொடுக்கப்பட வேண்டும் என்பது இந்த ஆர்வலர்களின் கருத்து.

இது எவ்வளவு தூரம் சாத்தியம், சாத்தியமில்லை என்பது தனிக்கதை. ஆனால், மக்களின் தேவைகளை ஒட்டியே சேவைகள் உருவாக்கப்பட வேண்டும் என்பது மட்டும் நூறு சதவிகிதம் உண்மை. அப்படி உருவான சேவைகளில் ஒன்றுதான் ‘கிரெய்க்ஸ்லிஸ்ட்’ (லீttஜீ://ஷ்ஷ்ஷ்.நீக்ஷீணீவீரீsறீவீst.ஷீக்ஷீரீ/). வரி விளம்பரங்களை மக்களே இலவச மாக சேர்க்கும் வசதிகொண்ட வலைதளம் இது.

நாளிதழ்களில் வெளியாகும் வரி விளம்பரங்களுக்கு அல்ப ஆயுசு. அடுத்த இதழ் வந்துவிட்டால், சென்ற இதழை எல்லாரும் மறந்து போவார்கள். மேலும் வரி விளம்பரங்கள் பற்றி மக்களுக்கு உள்ளூர சில சந்தேகங்கள் உண்டு. குறிப்பாக, அதில் சொல்லப்பட்டிருப்பது எவ்வளவு தூரம் உண்மை என்பது குறித்து சந்தேகம் எழுவதுண்டு. வரி விளம்பரங்களைக் கொண்டு ஏமாற்றும் பேர்வழிகளும் இருக்கிறார்கள் என்பதால்தான் இத்தகைய ஓர் அவநம்பிக்கை மக்கள் மனதில் இருக்கிறது. சொல்லப்போனால் வரி விளம்பரத்தை நம்புவதைவிட, அதை வெளி யிடும் பத்திரிகையின் மேல்தான் மக்கள் அதிகம் நம்பிக்கை வைத்திருக்கிறார்கள்.

இணையம் இந்தப் பிரச்னைகளைச் சுலபமாகக் கடந்துவிட்டது. ‘கிரெய்க்ஸ்லிஸ்ட்டே’ இதற்கு பெரிய உதாரணம். 1995&ல் தொடங்கப்பட்ட இந்த இணையம், அமெரிக்காவில் உள்ள சான்பிரான்சிஸ்கோ ஏரியாவில் உள்ள விளம்பர தாரர்களின் பயன்பாட்டுக்குத் தொடங்கப்பட்டது. பின்னர் 1999&ல் இந்த வலைதளம் ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனமாகப் பதிவு செய்யப்பட்டது. அதன்பிறகுதான் இதன் வளர்ச்சி, பிரமிக்கத்தக்க அளவில் விரிந்தது. 2000&ம் ஆண்டில் மேலும் ஒன்பது நகரங்கள் இந்த சேவையில் இணைக்கப்பட்டன. 2003&ல் 14 நகரங்கள் இணைந்துகொண்டன. 2006 ஜூன் மாதத்தின் கணக்குப்படி, இப்போது இந்த லிஸ்ட்டில் உலகெங்கும் உள்ள 310 நகரங்கள் இணைந்துள்ளன. அதில் நமது சென்னையும், பெங்களூரும், டெல்லியும்கூட அடக்கம்.

இதன் வளர்ச்சியை மேலும் புரிந்துகொள்ள இந்த விவரங்களை கொஞ்சம் பாருங்கள். ஒவ்வொரு மாதமும் இந்த லிஸ்ட்டில் கிட்டத்தட்ட ஒரு கோடி புதிய வரி விளம்பரங்கள் சேர்க்கப்படுகின்றன. அதில் கிட்டத்தட்ட ஐந்து லட்சம் விளம்பரங்கள் வேலைவாய்ப்புக்கு மட்டுமே பதியப்படுகின்றன. சொல்லப்போனால், வேலைவாய்ப்புக்கு என்றே இருக்கும் வலைதளங்களில் பதியப்படும் விளம்பரங்களை விட இந்த எண்ணிக்கை அதிகம். அதேபோல், இந்த ‘கிரெய்க்ஸ்லிஸ்ட்’டில் இருக்கும் விவாத அரங்கில் எண்பது தலைப்புகளில் கிட்டத்தட்ட நான்கு கோடி பேர்கள் பங்கேற்று கருத்துகள் சொல்லியிருக்கிறார்கள்.

இந்த வலைதளத்தின் சிறப்புக்களில் ஒன்று, அதன் எளிமை. பொதுவாக, வலைதளங்கள் என்றாலே அதில் எண்ணற்ற விளம்பரங்கள் ஓடிக்கொண்டிருக்கும். பல சமயங்களில், இந்த விளம்பரங்கள் அந்தக் குறிப்பிட்ட வலைப்பக்கம் டவுன்லோட் ஆவதைத் தாமதப் படுத்திவிடும். அல்லது விளம்பரம் முதலில் டவுன்லோட் ஆகிவிடும். வலைப்பக்கத்தில் உள்ள விவரங்கள் டவுன்லோட் ஆகத் தாமதமாகும்.

ஆனால், ‘கிரெய்க்ஸ்லிஸ்ட்’டில் மருந்துக்குக்கூட ஒரு விளம்பரம் கிடையாது. இத்தனை ஆண்டுகளாக இந்த வலைதளம் நடந்துகொண்டிருந்தும் இதுவரை ஒரு விளம்பர பேனர்கூட அங்கே போடப்பட்டது கிடையாது. ஆச்சரியமாக இல்லை? விளம்பரம் போட்டா லென்ன என்று ‘கிரெய்க்ஸ்லிஸ்ட்’டின் அதிபர் கிரெய்க் நியூமார்க்கிடம் கேட்டபோது அவர் சொன்ன பதில்: “மக்கள் இதைக் கேட்கவில்லையே!”

ஆம்! மக்கள் விருப்பமே மகேசன் விருப்பம்! பல ஆச்சரியங்கள் இந்த வலை தளத்தில் நடந்திருக்கின்றன. ஒவ்வொரு முறையும் ஏதேனும் புதிதாக ஒன்றை இந்த வலைதளத்தில் செய்ய வேண்டுமென்றால், கிரெய்க் நியூமார்க் செய்யும் ஒரே வேலை, அதன் உறுப்பினர்களின் கருத்தைக் கேட்டு அறிவதுதான். ‘கிரெய்க்ஸ்லிஸ்ட்’டைப் பயன்படுத்துபவர்கள் என்ன சொல்கிறார்களோ அதைத்தான் அவர் தன் வலைதளத்தில் செய்வார். ஒவ்வொரு நகரத் துக்கும் இந்த லிஸ்ட்டை விரிவு படுத்துவதும் மக்களின் தேவையை ஒட்டிதான். தொடர்ந்து இணைய மக்களிடமிருந்து, எங்கள் நகரத்துக்கும் இந்த லிஸ்ட்டை ஏற்படுத்தினால் பயனுள்ளதாக இருக்கும் என்று கோரிக்கை வந்தால் மட்டுமே அந்த நகருக்கு இந்த லிஸ்ட் விரிவு படுத்தப்படும்!

இன்னொரு சம்பவம் இன்னும் சுவாரஸ்யமானது. ஒருமுறை ‘மைக்ரோசாஃப்ட்’ நிறுவனம் ‘கிரெய்க்ஸ்லிஸ்ட்’டில் விளம்பரம் செய்ய முன்வந்தது. ‘கிரெய்க்ஸ்லிஸ்ட்’டின் பாப்பு லாரிட்டியைப் பார்த்து, தானாகவே வந்த விளம்பர வாய்ப்பு அது. அதுவும், எந்த டிஸ்கவுண்டும் கோராமல், அன்று சந்தையில் விளம்பரங்களுக்கு என்ன ரேட் இருக்கிறதோ அதைத் தருகிறோம் என்று சொன்னது ‘மைக்ரோசாஃப்ட்’. கிரெய்க், வேண்டாம் என்று சொல்லிவிட்டார். ஏன் என்று பிற்பாடு அவரிடம் கேட்டபோது, முதல் காரணமாக அவர் சொன்னது, ‘அப்போது எனக்குப் பணம் வேண்டியிருக்கவில்லை’ என்பதுதான். அடுத்து சொன்னது: ‘மக்கள் இதைக் கேட்க வில்லையே!’ அன்று எடுத்த முடிவு இன்றுவரை விளம்பரமே இல்லாமல், முழுமையாக மக்கள் பயன்பாட்டுக்கு என்றே இந்த வலைதளம் இருக்கிறது.

விளம்பர நிறுவனங்களுக்கு எல்லாம் கொஞ்சம் சந்தேகம். ‘என்ன இவர்கள் மடையர்களாக இருக்கிறார்களே? கம்யூனிஸ்ட் களாக இருப்பார்களோ? பணம் சம்பாதிக்காமல் என்ன பெரிதாகச் சாதித்துவிடப் போகி றார்கள்?’ என்று ஒவ்வொரு நாள் ராத்திரியும் தூக்கமில்லாமல் தவித்தவர்கள் மற்றவர்கள்தான். ஆனால், இப்படி மக்களின் விருப்பத்தைச் சார்ந்தே இருந்ததால்தான் இந்த அசுர வளர்ச்சியை எட்டிப்பிடிக்க முடிந்தது.

பொதுவாக இணையத்தில் வரும் விளம் பரங்கள் பற்றி அதிக நம்பிக்கை இருப்பதில்லை. ஆனால், ‘கிரெய்க்ஸ்லிஸ்ட்’டில் வெளியாகும் வரிவிளம்பரங்களை மக்கள் நம்புகிறார்கள். அதில் கொடுக்கப்பட்டுள்ள விவரங்கள் சரியாகவே இருக்கும் என்று எதிர்பார்க்கிறார்கள். விளம்பரங்களைப் போடுபவர்களிடமும் விளம்பரங்களைப் படிப்பவர்களிடமும் மெள்ள மெள்ள இந்த அசைக்க முடியாத நம்பிக்கை வேரூன்ற ஆரம்பித்துவிட்டது.

2006&ல் ‘கிரெய்க்ஸ்லிஸ்ட்’ மீண்டும் தனது பயனர்களிடம் சென்றது. இந்தச் சேவையை மேலும் தொடர போதிய வருமானம் வேண்டும் என்பது விவாதிக்கப்பட, பின்னர் விளம்பரம் கொடுக்க வரும் நிறுவனங் களிடம் இருந்து பணம் பெறலாம், தனி நபர்களிடம் இருந்து பெறக் கூடாது என்று மக்கள் கருத்துத் தெரி வித்தனர். அதன் பின்னரே, மூன்றே மூன்று அமெரிக்க நகரங்களில் மட்டும் கட்டணம் வசூலிக்கப்படத் தொடங்கியது.

இதே வரி விளம்பர ஐடியாவை வைத்துக் கொண்டு, வேறு எண்ணற்ற வலைதளங்கள் இணை யத்தில் அவ்வப்போது தோன்றிக்கொண்டே இருக்கிறது. எல்லாவற்றிலும் எப்படியாவது பணம் சம்பாதித்துவிட வேண்டும் என்ற துடிப்புத்தான் அதிகம் இருக்கும். ‘கிரெய்க்ஸ்லிஸ்ட்’ இன்றுவரை பெரும் வருமானத்தை ஈட்டவில்லை. ஆனால், மிகப்பெரும் நம்பிக்கையை மட்டும் ஈட்டி இருக்கிறது!

Posted in Ads, Advertisements, Classified Ads, Craigslist, Craigslist.Org, Free Paper, Junior Vikatan.com, Profits, R Venkatesh, Tamil, Web Models, Web2.0 | Leave a Comment »