Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Advertisement’ Category

Makkal TV – Advertisement costs, Special Programmes: Info

Posted by Snapjudge மேல் நவம்பர் 14, 2007

Makkal TV Logo

makkal TV Programming Offerings Telecast

Makkal TV Ad Rates Tariff Product Promotions

Posted in Ads, Advertisement, Advertisements, Advt, Anbumani, Info, Makkal, Media, PMK, Product, Programmes, Promotions, Ramadas, Ramadoss, Rates, Serials, Tariffs, TV, Viewers, Viewrs | Leave a Comment »

Advertisements – Noise & Light Pollutions

Posted by Snapjudge மேல் ஜூலை 16, 2007

ஒலி, ஒளி, விளம்பரத் தொல்லை

க.ப. அறவாணன்

அயல் நாட்டிலிருந்து நம் நாட்டுக்கு வருவோருக்கும், அயல்நாடு சென்று திரும்புவோருக்கும் அதிர்ச்சியாகவும் அதிசயமாகவும் முதலில் கண்ணில்படுவதும், காதில் விழுவதும் நம் ஊர் வாகனங்கள் எழுப்பும் பேரிரைச்சல். நம் நாட்டில் சுமார் 5 கோடியே 89 லட்சம் வாகனங்கள் நாளும் சாலையில் ஓடுகின்றன. இவற்றுள் சுமார் 4 கோடியே 15 லட்சம் இருசக்கர வாகனங்களும் 76 லட்சம் கார்களும் 7 லட்சம் பஸ்களும் 30 லட்சம் லாரிகளும் இன்னபிற 61 லட்சம் வாகனங்களும் 33 லட்சம் கிலோமீட்டர் நீளமுள்ள நம் சாலைகளில் ஓடிக் கொண்டிருக்கின்றன.

நம் வண்டி ஓட்டுநர்கள் வண்டியை எடுத்தவுடன் தம் கையால் பற்றுவது ஒலிப்பான்களைத்தான், சிலர் வைத்த கையை எடுப்பதே இல்லை. சாலைகளில் செல்வோர் அனைவருக்கும் காது கிழிந்துவிடும் அளவிற்கு ஹாரன்களை விடாமல் ஒலித்துக் கொண்டிருப்பார்கள். ஒலி அளவு உலகச் சுகாதார சபை வரையறுத்துள்ள 45 டெசிபலாக க்க்ஷ இருத்தல் வேண்டும் என்ற அளவை நம் நகரங்கள் பலமடங்கு கடந்துவிட்டன. மோட்டார் வாகனங்களைக் கண்டுபிடித்து வடிவமைத்த நாடுகளில் லட்சக்கணக்கில் வாகனங்கள் ஓடினாலும், அவர்கள் ஹாரன்களை ஒலிப்பதே இல்லை. ஒலிப்பது அநாகரிகம் என்பது அவர்கள் கருத்து. வண்டியின் முன்புறமும், பின்புறமும் அமைந்துள்ள வலது, இடது புறச் சிக்னல் விளக்குகளைப் போட்டுவிட்டுத் திரும்புவதையும் முந்திச் செல்வதையும் முறைப்படச் செய்கின்றனர்.

வாகனங்கள் வழி ஒலிமாசை உண்டாக்குவதில் இந்தியா தலைமை இடம் வகிக்கிறது. மனிதர்களின் காதுகளைச் செவிபடச் செய்வதுடன் சாலைகளின் இருமருங்கிலும் உள்ள பறவைகளையும், விலங்குகளையும் தம் இருப்பிடத்தைவிட்டு வாகன இரைச்சல் விரட்டி விடுகிறது. செடிகொடிகள் இயல்பாகத் தழைப்பதைத் தடுக்கிறது. நகர்வன, ஊர்வன, பறப்பன, நடப்பன ஆகிய உயிரினங்களின் இதயத்தை ஒலிமாசு தொடர்ந்து பாதிக்கிறது. குறிப்பாக வாகனங்கள் வெளிப்படுத்தும் கார்பன் – மோனாக்ûஸடு வாழ்நாளைக் குறைத்து நாளடைவில் உயிரையே பறிக்கவல்லது.

ஒலியைப் பெருக்குவதில் வாகனங்களுடன் போட்டி போடுகின்றவை நம் அரசியல்வாதிகளின் மேடைப் பேச்சுகள். அவர்கள் நடுவீதி மேடைகளின்மேல் முன் உரக்கக் கத்துவதை ஒலிப்பெருக்கிகள் நாலாபுறமும் உச்சஸ்தாயிலில் எடுத்துச் செல்லுகின்றன. நம்மூர்க் கோயில் திருவிழா, பூப்பு, திருமணம், வளைகாப்பு முதலான அனைத்துச் சடங்குகளிலும் கூம்பு வடிவ ஒலிபெருக்கிகளைக் கட்டி, பாடல்களைப் போட்டு, பெருத்த தொல்லையை ஏற்படுத்துகிறார்கள். உறக்கம் போகிறது; அமைதியும் போகிறது. காவல்துறையின் அனுமதி என்பது பெயருக்குத்தான்.

நம் ஜனநாயகத் தேர்தல் முறையின் அண்மைப் பிரசவம் ஆட்டோக்களில் ஒலிபெருக்கிகளைக் கட்டித் தெருவெல்லாம் அலற விடுவது, நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலின்போது ஆயிரக்கணக்கான ஆட்டோக்கள் இந்த முறையில்தான் ஜனநாயகத்தைக் காப்பாற்றின; காப்பாற்றுகின்றன. மக்கள் இந்தச் சப்தத்தைக் கேட்டா வோட்டு போடுகிறார்கள்? அவ்வளவு அறிவு குறைந்தவர்களா அவர்கள்? ஒருக்காலும் அல்லர்.

மிகச் சப்தமாகப் பேசுவதும், மேடையில் ஒலிபெருக்கிக்கு முன் முழங்குவதும், அதை மேலும் ஒலிபெருக்கி வைத்து நாலாபுறமும் அமைதியை அழிப்பதும், தேர்வுக்குப் படிக்கின்ற குழந்தைகளைப் பற்றியோ, நோயாளிகளைப் பற்றியோ, முதியவர் பற்றியோ எந்தவித அக்கறையும் இல்லாமல் ஒலிபெருக்கிகளை அலறவிடுவதும், சுதந்திர நாட்டில் நம் உரிமைகள் ஆகிவிட்டன.

அயல்நாட்டு ஐந்தாண்டு பணியின்போது ஆப்பிரிக்கக் கண்டத்து செனகால் நாட்டில் நானும், என் குடும்பத்தினரும் ஒரு வீட்டில் தங்கியிருந்தோம். நான், என் மனைவி, ஏழே வயதான என் மகன். புதிதாக வாங்கி வீட்டில் வைத்திருந்த வானொலியையும், தொலைக்காட்சியையும் நம் ஊரைப்போல மிக உரத்து வைப்பது மகனுடைய வழக்கம். இரண்டுநாள் பார்த்தபிறகு எங்கள் வீட்டுக்குப் பின்வீட்டில் இருந்த ஓர் ஆப்பிரிக்கப் பெண்மணி எங்கள் வீட்டிற்கு வந்தார். வாயில் மணியை அடித்துவிட்டு (என்னை மன்னித்துக்கொள்ளுங்கள்) என்று ஃபிரெஞ்ச் மொழியில் சொல்லி, வாயிலில் நின்றவர், “”உங்கள் வீட்டில் வானொலியும், தொலைக்காட்சியும் மிக உச்சஸ்தாயில் அலறுகின்றன. அவற்றை ஒலிகுறைத்து வீட்டில் உள்ளவர் மட்டுமே கேட்கும்படியாக வைத்து ரசிக்க வேண்டும்” என்று சொல்லிவிட்டு, மீண்டும் மன்னிப்புக் கேட்டுக்கொண்டு விடைபெற்றுவிட்டார்.

ஆப்பிரிக்க, தென்அமெரிக்கக் கண்டங்களில் உள்ள வளரும், வளரா நாடுகளில் கூடத் தேர்தலின் போது இத்தனைக் கூச்சல் இல்லை. தெரு முழக்கம் இல்லை, தெருக்கூட்டம் இல்லை. ஐரோப்பிய, அமெரிக்க ஜப்பான், சிங்கப்பூர் உள்ளிட்ட தென்கிழக்கு ஜனநாயக நாடுகளில் ஆர்ப்பாட்டம் எதுவுமின்றித் தேர்தல்கள் நடக்கின்றன. நம் நாட்டில் மட்டும் இந்த அளவு சப்தம் ஏன்? ஆர்ப்பாட்டம் ஏன்? இது மட்டுமா? தீபாவளிக்கு மட்டும் வெடிக்க வேண்டிய பட்டாசுகளை அரசியல்வாதிகளின் பிறந்தநாள்களின்போதும், தேர்தல் வெற்றிகளின்போதும், வெடித்துச் சப்தம் எழுப்புகிறார்கள். இச் சப்தம் மக்களுக்கு மகிழ்ச்சியைத் தருமா எரிச்சலை ஊட்டுமா என்பது பற்றிச் சிந்திப்பதே இல்லை.

மிகுந்த சப்தத்தைக் கேட்பதிலும், பொறுத்துப் போவதிலும் ஆர்வமும் இயல்பும் இருத்தலைப் போலக் கண் கூசும் வெளிச்சத்திலும் நமக்கு இயல்புக்கு மீறிய மோகம் இருக்கிறது. சாலைகளிலும் சந்திப்புகளிலும் அரசியல் கூட்டங்களிலும் கண்ணைக் கூசச் செய்யும் விளக்குகளைப் பொருத்துவது நம் பழக்கம். கோயில் திருவிழாக்களிலும் அப்படியே. மின்சாரப் பற்றாக்குறை உள்ள நாட்டில் வெற்று ஆர்ப்பாட்டங்களுக்காக, மின்சக்தியை வீணாக்குவது என்ன நியாயம், என்ன சமூக நீதி?

நம் நகர்ப்புறச் சுவர்களுக்கு உயிர் மட்டும் இருக்குமானால் தலையில் அடித்துக் கொண்டு ஒப்பாரி வைத்து அழும். அவ்வளவு சுவரொட்டிகள். சுவரொட்டிகளுக்கு மேல் சுவரொட்டிகள். அதுமட்டும்தானா? ஒரு கட்சிப்பிரமுகர் வருகிறார் என்றால் அவர் உருவம் பொறித்த பல கட்அவுட்களும் பல அடி உயரத்தில் வழிநெடுக நிறுத்தப்படுகின்றன. சாலைகளின் இருமருங்கும் தோண்டிக் குழிபறித்து வளைவுகள் அமைக்கப் பெறுகின்றன. இவற்றால் சமூக ஆரோக்கியத்தைக் குலைக்கும், தனிமனித வழிபாடு ஒருவேளை வரலாம். ஆனால் அவ்வழிபாடும் வளருகிற வேகத்தில் மறந்துவிடும். இவற்றால் ஈர்க்கப்பட்டு மக்கள் வோட்டுப் போட்டு விடுவார்களா என்ன? தமக்கோ தொகுதிக்கோ என்னென்ன செய்தார் என்று சீர்தூக்கிப் பார்க்கும் பகுத்தறிவு நம் மக்களிடம் இல்லையா என்ன? விளம்பரம் செய்யத் தொலைக்காட்சிகள் வந்துவிட்டன. வானொலிகள் வந்துவிட்டன. இவற்றைப் பொதுமக்கள் பார்க்கிறார்கள், கேட்கிறார்கள். இவற்றை மட்டுமே பயன்படுத்திப் பிரசாரங்களை அரசியல்கட்சிகள் அமைத்துக் கொள்ள வேண்டும். பாதிக்குப்பாதி படிக்காத மக்கள் உடைய நாட்டில் ஆடம்பர வாசகங்களை உடைய சுவரொட்டிகளை ஒட்டுவதால் காசும், காலமும் சுவர்களும்தான் வீணாகின்றன.

காதைப் பிளக்கும் சப்தமும், கண்ணைப் பறிக்கும் வெளிச்சமும், கருத்தைக் குழப்பும் விளம்பரமும், நாம் இன்னும் உரிய பக்குவத்தை அடையவில்லை என்றே காட்டுகின்றன. இவற்றை முற்றுமாக வெறுக்கும் படித்த இளைஞர்கள், பெரியவர்கள், நடுத்தரமக்கள் அறுபது சதவீதத்துக்கு மேலாக இருக்கிறார்கள். மிதமிஞ்சிய சப்தமும், வெளிச்சமும், விளம்பரமும் உரியவர்களைக் கணிசமான மக்களிடமிருந்து அந்நியப்படுத்துகின்றன; அந்நியப்படுத்தும் என்பதே உண்மை!

(கட்டுரையாளர்: முன்னாள் துணைவேந்தர், மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகம்.)

Posted in Ad, Ads, Advertisement, Banner, Cinema, Disturbance, Elections, Electronic, Environment, Hoardings, Impact, Light, Motor, Nature, Noise, Party, Politics, Polls, Pollution, Sound, Vehicles, Vision | Leave a Comment »

Sri Lanka to ban thinly clad models from Ads

Posted by Snapjudge மேல் மார்ச் 15, 2007

விளம்பரங்களில் நிர்வாணத்திற்கு இலங்கை அரசு தடை

மாடல் அழகி ஒருவர்
மாடல் அழகி ஒருவர்

இலங்கையில் விளம்பரங்களின் போது ஆபாசமாக, அதாவது நிர்வாண, அரைநிர்வாண பெண்ணையோ அல்லது ஆண்களையோ பயன்படுத்தப்படுவதற்கு எதிராக இலங்கை அரசு தடை விதிப்பதாக அறிவித்திருக்கிறது.

இந்த அறிவிப்பு கலாச்சார அலுவல்கள் அமைச்சினால் பத்திரிகைகள் மூலம் விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது. ஆபாச விளம்பரங்களினால் பாதிக்கப்பட்ட மக்களின் நலன்களிற்காகவே அரசு இந்த முடிவினை எடுத்துள்ளதாகத் தெரிவித்துள்ள கலாச்சார அமைச்சு பொது விளம்பரங்களின் போது நிர்வாண அல்லது அரைநிர்வாணக் கோலத்தில் மாடல் அழகிகள்/இளைஞர்கள் பயன்படுத்தப்படுவதற்கு எதிராக விளம்பரதாரர்கள் மற்றும் விளம்பர நிறுவனங்கள் எச்சரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

Posted in 1984, Ad, Ads, Advertisement, Agency, Ban, Billboards, Cloth, Clothes, Clothless, Culture, Female, Force, Immoral, Judgmental, Law, male, Model, Moral, Nude, Order, Policing, Pose, Publishers, Seminude, Sexy, Sri lanka, Srilanka, Values | Leave a Comment »

Shilpa Shetty uses underworld criminals to collect her payment arrears – Praful Saris

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 26, 2007

தொழிலதிபருக்கு மிரட்டல்: ஷில்பாவை விசாரிக்க போலீஸ் யோசனை

Pankaj Aggarwal, the owner of Prafful Sarees who signed Shilpa in 1998 for a contract worth Rs 4 lakh a year, submitted tapes to police in Surat in which he was threatened by criminals allegedly hired by her parents to recover arrears, the actress said “the tapes were doctored”.

ஆமதாபாத், பிப். 26: தொழிலதிபர் ஒருவருக்கு மிரட்டல் வந்தது தொடர்பாக பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியை விசாரிப்பது குறித்து சூரத் போலீசார் ஆலோசித்து வருகின்றனர்.

சூரத் துணிக்கடை தொழிலதிபர் பங்கஜ் அகர்வால். இவருக்கு 2003-ல் தொலைபேசி மூலம் மிரட்டல் வந்தது. இதையடுத்து போலீசார் விசாரித்த போது ஃபசல் உல் ரெஹ்மான் என்பவர் மிரட்டியது தெரியவந்தது. இதன்பின்னர் அவரைக் கைது செய்து தில்லி போலீசார் விசாரித்தனர்.

அப்போது, “”ஷில்பா ஷெட்டி என்னிடம் உதவி கோரினார். அதனால்தான் பங்கஜ் அகர்வாலை மிரட்டினேன்” என்று போலீசாரிடம் அவர் வாக்குமூலம் அளித்தார்.

இப்போது இந்த வழக்கு தொடர்பாக ரெஹ்மானை விசாரிக்க சூரத் போலீசார் திட்டமிட்டுள்ளனர். ஷில்பா ஷெட்டியும் விசாரணைக்கு அழைக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதுதொடர்பாக சூரத் போலீஸ் துணை கமிஷனர் சுபாஷ் திரிவேதி கூறியது:

தில்லி உயர்நீதிமன்றக் காவலில் உள்ள ரெஹ்மானை எங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்து விசாரிக்க அனுமதி கோரியுள்ளோம். ரெஹ்மானிடம் விசாரித்த பிறகு, ஷில்பாவிடமான விசாரணை குறித்து முடிவு செய்யப்படும் என்றார்.

இதற்கிடையில் இந்த மிரட்டல் வழக்கு தொடர்பாக ஷில்பாவின் தாயார் சுனந்தா, 2003-ல் கைது செய்யப்பட்டு, ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இப்போதும் இவர் ஜாமீனில்தான் இருந்து வருகிறார். இந்த வழக்கு தொடர்பாக ஷில்பாவின் தந்தையார் மீதும் அப்போது வழக்கு தொடரப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Posted in abuse, Ad, Advertisement, Big Brother, Controversy, Extortion, Goonda, Gunda, Law, Model, Money, Munnabhai, Order, Pankaj Aggarval, Pankaj Aggarwal, Police, Power, Prafful Sarees, Praful, Sarees, Saris, Shilpa Shetty, Surat, Vasool Raja | Leave a Comment »

‘Lalitha’s Paattukku Paattu – Kushbu TV Advertisement should be banned’

Posted by Snapjudge மேல் ஜனவரி 24, 2007

குஷ்பு நடிக்கும் விளம்பரத்தை எதிர்த்து தலைமை நீதிபதியிடம் புகார்

சென்னை, ஜன.24: நீதித்துறையை அவமதிக்கும் நோக்கில் டிவியில் வெளியாகும் தங்க நகை விளம்பரத்துக்குத் தடை விதிக்க வேண்டும் என்று தலைமை நீதிபதியிடம் வழக்கறிஞர் டி. ரவிகுமார் புகார் கொடுத்துள்ளார்.

அவரது புகாரில் கூறியிருப்பதாவது: கடந்த 21-ம் தேதி காலை 8.30 மணிக்கு சன் டிவியில் லலிதாவின் பாட்டுக்குப் பாட்டு என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பானது. அந்த நிகழ்ச்சியில் லலிதா ஜுவல்லரியின் விளம்பரம் இடம் பெற்றது. அதில் நடிகை குஷ்பு நீதிமன்றத்தில் குற்றவாளி கூண்டில் நின்று கொண்டு லலிதா ஜுவல்லரியின் சலுகைகளைப் பற்றி எடுத்துக் கூறுவார். அதைக் கேட்ட நீதிபதி மற்றும் வழக்கறிஞர்கள் திடீரென காணாமல் போவது போல (நீதிமன்றமே காலியாக இருப்பது போல) விளம்பரக் காட்சி இடம் பெறுகிறது.

இந்த விளம்பரம் நீதித்துறையையும் நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்களைக் கேவலப்படுத்துவது போல உள்ளது. எனவே இந்த விளம்பரத்தை மீண்டும் ஒளிபரப்பாமல் இருக்க தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகாரில் வழக்கறிஞர் ரவிகுமார் கூறியுள்ளார்.

Posted in Ads, Advertisement, Advt, case, Court, Gangai Amaran, Gangai Amaren, Judge, Justice, Kushboo, Kushbu, Lalitha, Lalitha's Paattukku Paattu, Law, Lawsuit, Paattukku Paattu, Sun TV, TV | Leave a Comment »

Tamil Nadu Murpokku Ezhuthalargal Sangam expresses regret for Ilaiyaraja’s decison

Posted by Snapjudge மேல் நவம்பர் 14, 2006

“பெரியார்’ திரைப்பட விவகாரம்: இளையராஜாவுக்கு பகிரங்க வருத்தம் தெரிவிக்க த.மு.எ.ச. முடிவு

திருநெல்வேலி, நவ. 15: “பெரியார்’ திரைப்படத்திற்கு இசை அமைக்க மறுத்த இளையராஜாவுக்கு பகிரங்கமாக வருத்தம் தெரிவிப்பது என தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் முடிவு செய்துள்ளதாக, அதன் பொதுச் செயலர் ச. தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:

மதுரையில் நடைபெற்ற தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் செயற்குழுக் கூட்டத்தில் முக்கியமான சில முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

இசை அமைப்பளர் இளையராஜா, “பெரியார்’ திரைப்படத்துக்கு இசை அமைக்க மறுத்து கோபமாக பேசிய வார்த்தைகள் முற்போக்கு எண்ணம் கொண்ட அத்தனை தமிழ் மக்களின் நெஞ்சங்களிலும் பெருத்த வேதனையை உண்டாக்கியுள்ளது.

அவர் ஆத்திகராக இருப்பதும், எந்த ஒரு படத்துக்கும் இசை அமைக்க மறுப்பதும் அவரது ஜனநாயக உரிமை. ஆனால், ஆத்திகராக இருப்பதால், “பெரியார்’ படத்துக்கு இசை அமைக்க மாட்டேன் என கூறியிருப்பது பல கேள்விகளை எழுப்புகிறது.

மேலும், அவரது கருத்துக்கு ஆதரவாக மதவாத சக்திகள் குரல் கொடுப்பது தமிழ்ப் பண்பாட்டுச் சூழலில் மிகுந்த கவலை அளிக்கிறது.

எனவே, நல்லெண்ணத்தின் அடிப்படையில் எங்களது வருத்தத்தை பகிரங்கமாக இளையராஜாவுக்கு தெரிவிக்க முடிவு செய்துள்ளோம். அதை அவர் புரிந்து கொண்டு மக்களின் பக்கம் நிற்க வேண்டும்.

நடிகை ராதிகாவுக்கு கண்டனம்: தமிழக மக்களின் மனங்களில் மிகச் சிறந்த குணச்சித்திர நடிகையாக இடம் பெற்றிருக்கும் திரைப்படக் கலைஞர் ராதிகா, கோக கோலா குளிர்பான விளம்பரம் ஒன்றில் நடித்த காட்சிகள் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வருகின்றன.

எந்த நிறுவனத்தின் விளம்பரத்திலும் நடிப்பது அவரது தனிப்பட்ட உரிமை. கோக கோலாவுக்கு எதிராக நாடு முழுவதும் மக்கள் போராடிக் கொண்டிருக்கும் வேளையிலும், அதைக் குடிக்கச் சொல்லி ஒரு விளம்பரத்தில் நடிப்பது கூட அவரது சுதந்திரம்தான். ஆனால், அறிவியல் பூர்வமாக அந்த குளிர்பானத்தை குடிப்பது ஆபத்தில்லை என்று சொல்ல ஒரு விஞ்ஞானிக்குத்தான் உரிமை உண்டு. ராதிகா ஒரு விஞ்ஞானியைப் போல அந்த நிறுவனத்திற்கு ஆதரவாகப் பேசி இருப்பது கண்டனத்திற்குரியது.

எனவே, ராதிகா அவ்வாறு நடித்திருப்பதைக் கண்டித்தும், அந்த விளம்பரத்தை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தியும், அவர் வீட்டுக்கு தமிழகம் முழுவதுமிருந்து ஆயிரக்கணக்கான அஞ்சல் அட்டைகளை அனுப்ப முடிவு செய்துள்ளோம்.

இலங்கைத் தமிழர் துயரம்: இலங்கையில் அப்பாவித் தமிழர்கள் மீது குண்டு மழை பொழியும் அந்நாட்டு ராணுவத்தின் நடவடிக்கைகள் நிறுத்தப்பட வேண்டும். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் மாவட்டக் குழுவினர், அந்தந்த மாவட்டங்களில் உள்ள இலங்கை அகதிகள் முகாமுக்குச் சென்று அவர்களின் குறைகளை கேட்டறிந்து அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சிறந்த திரைப்படம்: கடந்த ஆண்டு வெளியான தமிழ் திரைப்படங்களில் சிறந்த படமாக இயக்குநர் சேரன் இயக்கிய “தவமாய்த் தவமிருந்து’ செயற்குழுவால் தேர்வு செய்யப்பட்டுள்ளது. சென்னையில் டிசம்பரில் நடைபெறும் விழாவில், அதற்கான பரிசு வழங்கப்படும் என்றார் தமிழ்ச்செல்வன்.

Posted in Advertisement, BJP, Coke, cola, Eezham, EVR, Ila Ganesan, Ilaiyaraja, Isainjaani, music, Periyar, Politics, Radhika, Religion, Religion/Politics, Sa Thamizhselvan, Tamil, Tamil Cinema, Tamil Movies, Tamil Nadu Murpokku Ezhuthalargal Sangam | Leave a Comment »