Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘activism’ Category

Inter News Network consultant Dr. Jeya Sridhar Interview – State of HIV+ and AIDS patients

Posted by Snapjudge மேல் ஜனவரி 11, 2008

விழிப்புணர்வு: பயமுறுத்துவது பிரசாரமல்ல!

பிரபல தமிழ் வார இதழ் ஒன்றில் பதினைந்தாண்டுகளுக்கு முன்னால் “எய்ட்ஸ் எரிமலை’ என்னும் தலைப்பில் டாக்டர் ஜெயா ஸ்ரீதர் எழுதிய எயிட்ஸ் விழிப்புணர்வுக் கட்டுரைகளின் தொகுப்பு, தமிழ் வாசகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. எய்ட்ஸ் விழிப்புணர்வு தொடர்பாக பல ஆய்வுகளுக்குக் காரணமாக இருந்தது.

தற்போது 55 நாடுகளில் எச்.ஐ.வி. விழிப்புணர்வு அளிக்கும் “இன்டர் நியூஸ் நெட்வொர்க்’ என்னும் உலகளாவிய அமைப்பின் மருத்துவ ஆலோசகராக இருக்கிறார் டாக்டர் ஜெயா ஸ்ரீதர். எய்ட்ஸ் விழிப்புணர்வு குறித்தும், அவர் சார்ந்த அமைப்பின் செயல்பாடுகள் குறித்தும் நாம் எழுப்பிய கேள்விகளுக்கு, விரிவாக அவர் அளித்த பதில்கள்…

இந்தியாவில் எச்.ஐ.வி. பாதிப்பு கடந்த சில வருடங்களாக குறைந்திருப்பதால், இது குறித்த விழிப்புணர்வும் குறைந்திருக்கிறது. எதிர்காலத்தில் எத்தகைய விளைவை இது ஏற்படுத்தும்?

இந்தியாவில் எத்தனையோ பன்னாட்டுக் குளிர்பானங்கள் விற்பனையில் சக்கைப் போடு போட்டுக் கொண்டிருக்கின்றன. ஆனாலும் எந்த காலத்திலும் அவர்களின் விளம்பரங்களைக் குறைத்துக் கொண்டதே இல்லை. குளிர்பானத்திற்கே விளம்பரம் முக்கியம் என்னும்போது, உயிரையே குடிக்கும் எய்ட்ஸýக்கு எதிரான விழிப்புணர்வுப் பிரசாரத்தை நாம் குறைத்துக் கொள்வது எந்த விதத்திலும் நியாயமாகாது. இன்னமும் போலியோவுக்கு எதிரான விழிப்புணர்வுப் பிரசாரங்களை நாம் தொடர்ந்து கொண்டுதானே இருக்கிறோம். குறைந்திருக்கிறது என்பதற்காக எச்.ஐ.வி. விழிப்புணர்வுப் பிரசாரங்களை குறைத்துக் கொள்ளக்கூடாது. சமூகத்தில் எச்.ஐ.வி. குறித்த உண்மை நிலையைத் தொடர்ந்து பிரசாரங்களின் மூலமாகத்தான் அளிக்கமுடியும்.

பள்ளிகளில் வரப்போகும் பாலியல் விழிப்புணர்வுக் கல்வி இதற்குத் தீர்வாகுமா?

பள்ளிகளில் படிக்கும் வளர் இளம் பருவத்தினருக்கான கல்வித் திட்டமாக இதைக் கொண்டு வரவிருக்கின்றனர். முதலில் பாலியல் விழிப்புணர்வுக் கல்வி என்ற பெயரில் மேற்கத்திய நாடுகளை மனதில் கொண்டு உருவாக்கியதற்குத்தான், நம் நாட்டில் பரவலான எதிர்ப்பு கிளம்பியது. நம் நாட்டு கலாசாரத்துக்கு ஏற்றவகையில் உருவாக்கியிருக்கும் இந்த முறைக்கு பரவலான ஆதரவு பெருகியுள்ளது. வளர் இளம் பருவத்தினருக்கு இத்தகைய விழிப்புணர்வு தேவையான ஒன்றுதான். அவர்களின் வயதுக்கே உரிய சந்தேகங்களை அனுசரிப்போடு கற்றுத் தருவதற்கு ஆசிரியர்களை விடச் சிறந்தவர்களாக யார் இருப்பார்கள்?

திருமணத்திற்குப் பின், எச்.ஐ.வி. பாதிப்புடன், கணவனையும் இழந்து தவிக்கும் இளம் விதவைகளின் எண்ணிக்கை குறைவதற்கு முன் எச்சரிக்கை நடவடிக்கையாக என்ன செய்யலாம்?

தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் அரசாங்கத்தின் நம்பிக்கை மையங்கள் பரவலாகச் செயல்படுகின்றன. இங்கு முழுக்க முழுக்க இலவசமாகவே எச்.ஐ.வி. ரத்தப்பரிசோதனைகள் செய்யப்படுகின்றன. முப்பது நிமிடங்களில் ரத்தப் பரிசோதனை செய்த முடிவுகளும் கிடைத்துவிடும். திருமணத்திற்கு முன்பே, ஆண், பெண் இருபாலரும் ரத்தப்பரிசோதனையைச் செய்து கொள்வது நல்லது. மூன்று வாரங்கள் முதல் மூன்று மாதங்கள் இடைவெளியில் இரண்டு முறை ஒருவர் ரத்தப் பரிசோதனை செய்து கொள்ளவேண்டும். எச்.ஐ.வி. கிருமியை அழிப்பதற்கு நம் உடலில் எதிர்ப்பணுக்கள் உருவாவதற்கான கால அளவைத்தான் சாளரக் காலம் என்கிறார்கள். இந்த சாளரக் காலத்திற்குள் ரத்தப் பரிசோதனை செய்யும்போது, அதில் எச்.ஐ.வி. எதிர்ப்பணுக்கள் தெரியாது.

அப்படியென்றால், சாளரக் காலத்திற்குள் ரத்த வங்கியிலிருந்து ஒரு நோயாளிக்கு ரத்தத்தை பயன்படுத்துவதில் எச்.ஐ.வி. பரவும் அபாயத்தை எப்படித் தவிர்ப்பது?

அரசு மருத்துவமனைகளில் காசுக்காக ரத்தத்தை விற்பவர்களை ஆதரித்த காலம் ஒன்று இருந்தது. இப்போது எந்த மருத்துவமனையிலும் ரத்தத்தை விற்பவர்களை ஆதரிப்பதில்லை. மூன்று முறை எல்லிசா பரிசோதனை செய்வதன் மூலம், எச்.ஐ.வி. பாதிப்பில்லாத ரத்தம்தான் என்பதை தற்போது உறுதி செய்கின்றனர். அதோடு ரத்த வங்கியிலிருந்து முழுமையாக ரத்தம் ஒருவருக்கு ஏற்றப்படுவது குறைவு. தற்போது ரத்தத்திலிருக்கும் வெள்ளை அணுக்கள், சிவப்பணுக்கள், பிளாஸ்மா போன்ற கூறுகளை தனித்தனியாகப் பிரித்தே சேமித்து வைக்கின்றனர். இதுதவிர, ஹீட் ட்ரீட்மென்ட் போன்ற முறைகளால் வங்கியிலிருந்து பெறப்படும் ரத்தம் பரிசோதிக்கப்படுகிறது.

வெஸ்டன்-பிளாட் சோதனை செய்யும் வசதி தற்போது எல்லா மாவட்டத்திலிருக்கும் அரசுப் பொது மருத்துவமனைகளிலும் இருக்கிறதா?

இல்லை. மூன்று கட்டங்களாக எல்லிசா பரிசோதனையின் மூலமாகவே அரசு மருத்துவமனைகளில் எச்.ஐ.வி. பாதிப்பு இருப்பது உறுதிசெய்யப்படுகின்றது.

கூட்டு மருந்து சிகிச்சையில் முதல் கட்டம், இரண்டாவது கட்டம் என்பது என்ன?

எச்.ஐ.வி. கிருமி நம் உடலின் தற்காப்பு மண்டலத்தை செயலிழக்கவைப்பதால், பலவகையான நோய்கள் நம்மைத் தாக்கும். நமது உடலில் நோய் எதிர்ப்புத் திறனை அதிகரிப்பதுடன், பலவிதமான நோய்களை எதிர்ப்பதற்கான மருந்தையும் சேர்த்து வழங்குவதுதான் கூட்டு மருந்து சிகிச்சை. இந்த மருந்தை மருத்துவர்களின் ஆலோசனைப்படி, ஒரு நாள், ஒரு வேளை கூட மறக்காமல் சாப்பிடவேண்டும். ஒரு வேளை தவறினாலும் பாதிப்புகள் அதிகமாக இருக்கும். முதல் கட்ட சிகிச்சையைச் சரியாகத் தொடராதவர்களுக்குத்தான் இரண்டாவது கட்ட சிகிச்சை அளிக்கப்படுகின்றது. முதல் கட்ட கூட்டு மருந்து சிகிச்சை தமிழகம் முழுவதும் பரவலாக இலவசமாகவே அளிக்கப்படுகின்றன. இரண்டாவது கட்டத்தையும் இலவசமாக வழங்கவேண்டும் என்ற கோரிக்கையை இந்தாண்டு அரசு பரிசீலிக்கும் என்று நினைக்கிறேன்.

உங்கள் ஆலோசனையின் கீழ் செயல்படும் “இன்டர் நியூஸ் நெட்ஒர்க்கின்’ செயல்பாடுகள் என்ன?

எய்ட்ஸ் தொடர்பான எத்தகைய விழிப்புணர்வு அளிக்கும் செய்திகளாக இருந்தாலும் அதை முறையாக, எங்கள் அமைப்பில் பாதுகாத்து வருகிறோம். இந்த அமைப்பு முழுக்க முழுக்க பத்திரிகையாளர்களுக்காக, பத்திரிகையாளர்களின் உதவியோடே செயல்படும் அமைப்பு. எய்ட்ஸ் தொடர்பான எத்தகைய ஆராய்ச்சிக் கட்டுரைகளை எழுதுவதாக இருந்தாலும் சரி, அல்லது வானொலி நிலையத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சியை செய்வதாக இருந்தாலும் சரி, அதற்கு தேவையான ஆவணங்களையும், புள்ளிவிவரங்களையும், எப்படிச் சேர்க்கலாம், எந்த மாவட்டத்தில் யாரைச் சந்திக்கலாம் என்பது போன்ற விவரங்களையும் எங்களின் அமைப்பின் மூலம் பெறலாம். கல்லூரிகளில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் சமுதாய வானொலிகளுக்கும் எச்.ஐ.வி. விழிப்புணர்வுக் கருத்துக்களை, நாடகம், இசைப் பாடல் போன்ற எந்த வடிவத்தையும் எங்களின் “மினி’ ஸ்டுடியோவில் ஒலிப்பதிவு செய்யும் வசதி உள்ளது.

பொதுவாகவே மருத்துவம் சார்ந்த துறைகளில் ஆங்கிலத்தில்தான் செய்திக் குறிப்புகளும், தகவல்களும் அளிக்கப்படுகின்றன. ஆகவே இந்தத் துறையில் எச்.ஐ.வி. குறித்த செய்திகளை தமிழில் எழுதும் போது எத்தகைய சொற்களைப் பயன்படுத்தலாம் என்பதை தமிழ்ப் பத்திரிகையாளர்களைக் கொண்டு வரையறுத்த வார்த்தைகளை அடிப்படையாகக் கொண்ட இதழாளர்களுக்கான கையேடை நாங்கள் வெளியிட்டுள்ளோம். “ரிசப்டார்ஸ்’ என்னும் ஆங்கில வார்த்தைக்கு “ஏற்பி’ என்று தமிழில் வார்த்தை சொல்லியிருக்கிறார்கள். இதுபோன்ற பத்து வார்த்தைகளை தமிழ்ப் பத்திரிகையாளர்களே உருவாக்கியிருக்கின்றனர்.

எச்.ஐ.வி. பாதித்தவர் என்ற காரணத்தால் ஆந்திராவில் ஒருவரை பொதுமக்கள் அடித்துக் கொன்றதையும், கேரளத்தில் எச்.ஐ.வி. பாதித்த குழந்தைகளை பள்ளிகளில் சேர்க்காமல் இருக்கும் செய்திகளையும் குறித்து என்ன நினைக்கிறீர்கள்?

செய்தி, மக்கள் தொடர்புச் சாதனங்களிலும் ஊடகங்களிலும் “எய்ட்ஸ் அரக்கன்’ என்பது போன்ற வார்த்தைகளைப் பிரயோகிப்பதன் விளைவுதான் இது. தவறான பிரசார யுக்திகளால் ஏற்படும் விளைவுகள் இவை. மக்களை பயமுறுத்துவது நல்ல பிரசார முறையாகாது.

எய்ட்சுக்கான மருந்தை எப்போது மருத்துவ உலகம், மனித குலத்துக்கு வழங்கப்போகிறது?

அதற்கான ஆராய்ச்சி உலகம் முழுவதும் நடந்து கொண்டிருக்கின்றது. எச்.ஐ.வி. தடுப்பு மருந்து பரிசோதனை கூட தற்போது சென்னையில் நடந்துகொண்டிருக்கின்றது.

Posted in activism, AIDS, Awareness, Bacteria, Blood, Campaigns, Checks, Condoms, cure, Disease, diseases, doctors, Donors, Education, HIV, Hospitals, Infection, Inn, Inter News Network, Interview, Jaya Sridhar, Jeya Sridhar, medical, Medicine, NGO, patients, Pharmaceuticals, Plasma, Red Ribbon, Sex, Sridhar, Tests, Transfusion, Trials, Virus | 1 Comment »

Law on protection of waterbodies vs Govt buildings encroachment – Environment

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 16, 2007

நீர்நிலை ஆக்கிரமிப்பில் அரசு கட்டடங்கள்

வி. கிருஷ்ணமூர்த்தி

தமிழகம் முழுவதும் ஏரி, குளங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அடுத்த ஆண்டு மே மாதத்துக்குள் அகற்றுமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்தத் தீர்ப்பு வெளியாவதற்கு ஒரு சில நாள்களுக்கு முன்னர்தான் ஏரி, குளங்களை ஆக்கிரமிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு வழி வகுக்கும் சட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் சுமார் 38 ஆயிரத்துக்கும் அதிகமான குடும்பங்கள் நீர்நிலைகளை ஆக்கிரமித்து வசித்து வருவதாகத் தெரிய வருகிறது. இந்த ஆக்கிரமிப்புகள் அனைத்தும் நீர்நிலைகளின் ஏதாவது ஒரு பகுதியில் மட்டும்தான் இருக்கின்றன. ஆனால், நீர்நிலைகளை ஒட்டுமொத்தமாக அழிக்கும் வகையில் பல்வேறு அரசுத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன என்பதுதான் அதிர்ச்சியூட்டும் செய்தி.

நீதிமன்ற அலுவலகங்கள், அரசு போக்குவரத்துக் கழகப் பணிமனைகள், தாலுகா அலுவலகங்கள், சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகங்கள், பள்ளிகள், உள்ளாட்சி அமைப்புகளின் வணிக வளாகங்கள், வீட்டு வசதி வாரியக் குடியிருப்புகள், சமுதாயக்கூடங்கள், நூலகங்கள், பஸ் நிலையங்கள் என அரசின் பல்வேறு துறை சார்ந்த கட்டடங்கள் நீர்நிலைகளையொட்டியே அமைந்துள்ளன.

மதுரை உலகனேரி கண்மாயில் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை அலுவலக கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர்-சிவகாசி சாலையில் உள்ள அத்திகுளம், செங்குளம் கண்மாயில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் கட்ட அப்போதைய தலைமை நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு தலைமையில் அடிக்கல் நாட்டுவிழா நடைபெற்றது. தாம்பரத்தை அடுத்த கோவிலம்பாக்கம் ஏரி என பல்வேறு நீர்நிலைகளில் அரசு பள்ளி உள்ளிட்ட பொதுப் பயன்பாட்டுக்கான கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன.

2006 ஆகஸ்டில் சென்னை பழைய மாமல்லபுரம் சாலையில் துரைப்பாக்கத்தில் “ரெட்டைக் குளத்தை’ வணிக வளாகமாக்கும் அரசின் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், “”அரசியல் சட்டத்தின் 51-ஏ (ஜி) பிரிவின்படி ஏரி, குளங்கள் உள்ளிட்ட நீர் ஆதாரங்களைப் பாதுகாக்க வேண்டியது ஒவ்வொரு குடிமகனின் கடமை. எனவே, அவற்றில் ஆக்கிரமிப்புகளை அனுமதிக்காமல், ஏற்கெனவே இடம்பெற்றிருக்கும் ஆக்கிரமிப்புகளை அகற்றி அவற்றை முறையாகப் பராமரிக்க வேண்டும்” என்றனர்.

இருப்பினும், இந்த வழக்கில் தொடர்புடைய குளத்தைப் பாதுகாக்க வேண்டும் என்ற மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

2005 ஜூன் 27-ல் ஆக்கிரமிப்பு தொடர்பான ஒரு வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் மார்க்கண்டேய கட்ஜு, இப்ராஹிம் கலிஃபுல்லா ஆகியோர் அனைத்து நீர்நிலைகளிலும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டனர். இப்போது போலவே அப்போதும் கால வரம்பு நிர்ணயித்தனர்.

1997-ல் உச்ச நீதிமன்றம், நீர்நிலைகளை பொதுப் பயன்பாடு என்ற காரணத்துக்காக எடுப்பதும் தவறு என வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை அளித்தது.

2005 ஜூனில் ஏரி பாதுகாப்பு தொடர்பான ஒரு வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் கற்பகவிநாயகம், சி. நாகப்பன் ஆகியோர் மேற்கூறிய தீர்ப்பை தங்களது தீர்ப்பில் சுட்டிக்காட்டி நீர்நிலைகளைப் பாதுகாக்க அரசுக்கு உத்தரவிட்டனர்.

ஆக்கிரமிப்புகளை அகற்ற பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகளை மதிக்காத அதிகாரிகளை நீதித்துறையினரும், நீர்நிலைகளில் அரசு சார்பில் கட்டப்பட்ட கட்டடங்களை தங்கள் அலுவலகங்களாக ஏற்றுக்கொள்ளும் நீதித்துறையினரை அதிகாரிகளும் எப்படி பார்க்கிறார்கள் என்பதே மக்களிடம் எழுந்துள்ள கேள்வி.

நீர்நிலைகளைப் பாதுகாக்க வேண்டும் என நீதிமன்றங்கள் பிறப்பிக்கும் உத்தரவுகளை நடைமுறைப்படுத்த அரசும் குறிப்பாக, வருவாய்த்துறையினரும் ஆர்வம் காட்டுவதில்லை. தீர்ப்புகளை நடைமுறைப்படுத்தாததும் ஒருவகையில் நீதிமன்ற அவமதிப்பே. எனவே, இந்த உத்தரவுகளை நடைமுறைப்படுத்தாத அதிகாரிகளின் செயலை நீதிமன்றங்கள் தாமாக முன்வந்து, அவமதிப்பு வழக்காக ஏன் எடுத்துக்கொள்வதில்லை?

எத்தனை தீர்ப்பு வந்தாலும், எத்தனை சட்டம் போட்டாலும் நாங்கள் இப்படித்தான் இருப்போம் என்ற அதிகாரிகளின் மனப்போக்கு மாற வேண்டும் அல்லது மாற்றப்பட வேண்டும்.

ஆக்கிரமிப்புகளை அகற்றுவது தொடர்பாக மாநில, மாவட்ட அளவில் குழுக்கள் அமைக்கப்பட்டு உறுப்பினர்களும் கடந்த ஆண்டு நியமிக்கப்பட்டனர். இதற்கு அதிகாரம் அளிப்பதற்காகவே தற்போது சட்டம் இயற்றப்பட்டுள்ளது.

ஏழைகள் என்பதற்காக ஏரி, குளங்களை ஆக்கிரமித்தவர்களை விட்டுவிட முடியாது. என்றாலும், அவர்களுக்கு உரிய விலையில் உறைவிட வசதிகளை அரசு அளிக்கத் தவறுவதே, பிரச்னைக்கு அடிப்படைக் காரணம். அதேவேளையில், நீர்நிலைகளைப் பொதுப் பயன்பாட்டுக்காக அரசுத் துறைகள் ஆக்கிரமிப்பதை எந்த விதத்திலும் அனுமதிக்கவும் கூடாது.

விவசாயம், நீர்ப்பாசனம் என்பதோடு நிற்காமல் நிலத்தடி நீர் வளப் பாதுகாப்பு, சுற்றுச்சூழல் சமநிலை ஆகியவையும் இந்த நீர்நிலைகளைச் சார்ந்தே இருக்கிறது. ஏரி, குளங்களை நமது முன்னோர் உருவாக்கியது ஏன் என்பதை அனைவருக்கும் குறிப்பாக, நீர்நிலைகளுக்கு அருகில் வசிக்கும் மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியது அரசின் பொறுப்பு. அரசு கட்டடமோ, தனியார் குடியிருப்போ எதுவாக இருந்தாலும், ஆக்கிரமிப்புகளை அகற்றுவதும் புதிய ஆக்கிரமிப்புகள் வராமல் தடுப்பதும்தான் தற்போதைய அவசர, அவசியத் தேவை.

————————————————————————————–

ஏரி ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் அதிகாரிகள் மவுனம்: ஐகோர்ட் உத்தரவை செயல்படுத்துமா அரசு?


சென்னை: ஏரி, குளம், கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்ற காலக்கெடு விதித்துள்ள ஐகோர்ட் உத்தரவை அரசு செயல்படுத்த வேண்டும் என்பது ஒட்டு மொத்த பொதுமக்களின் எதிர்ப்பார்ப்பாக உள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதியில் குடிநீர் ஆதாரமாக 300 ஏரிகள் உள்ளன. இதில், சென்னை நகரில் 30 ஏரிகளும், புறநகரில் 270 ஏரிகளும் உள்ளன. ஒவ்வொரு ஏரியும் குறைந்தபட்சம் நுõறு ஏக்கருக்கு மேற்பட்ட பரப்பளவு கொண்டது.

ஏரிகள் அனைத்தும் “மராமத்து’ முறையில் அந்தந்த கிராம மக்களே துõர்வாரி, கரையை பலப்படுத்தி வந்தனர். இப்பணி பொதுப்பணித் துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. 30 ஆண்டுகளில் சென்னை மற்றும் புறநகர் பகுதி அசுர வேகத்தில் வளர்ச்சியடைந்தது. குடியிருப்புகளும் அதிகரிக்க ஆரம்பித்தன. இதன் விளைவாக விவசாய நிலங்கள் அனைத்தும் பட்டா நிலங்களாக மாற்றப்பட் டன.

ஏரியை சுற்றி குடியிருப்புகள் வளர்ந்ததால் ஒவ்வொரு ஆண்டு பருவ மழைக்கும் ஏரி நிரம்பி உபரி நீர் கலங்கலில் வெளியேறி போக்கு கால்வாய் வழியாக கடலில் கலந்தது.

ஏரிகள், நீர் இல்லாமல் தரிசு நிலம் போல காட்சியளித்தன. அரசும் சென்னை மற்றும் அதன் அருகில் உள்ள சில ஏரி நிலங்களின் ஒரு பகுதியை வீட்டுவசதி வாரியம், குடிசை மாற்று வாரியம் என பல தரப்பட்ட துறைக்கு பிரித்து கொடுத்தது. ஏரியின் பரப்பளவு மூன்றில் ஒரு பங்காக சுருங்கியது. இதைப் பார்த்த அரசியல்வாதிகள், உள்ளூர் கட்சி பிரமுகர்கள் மற்றும் சமூக விரோத கும்பல்களுக்கு குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்க வழி கிடைத்தது.

சென்னை புறநகரில் உள்ள பல ஏரிகளின் ஒரு பக்க கரையை உடைத்து ஆக்கிரமிக்கப்பட்டது. அந்த இடங்கள் கூறு போட்டு அப்பாவி பொதுமக்களுக்கு சொற்ப விலைக்கு விற்கப்பட்டன. ஆக்கிரமித்த இடங்களுக்கு பல துறையினர் “மாமுல்’ பெற்று சாலை வசதி, மின் இணைப்பு மற்றும் ரேஷன் கார்டு உள்ளிட்டவை வழங்கி ஆக்கிரமிப்பு இடங்களில் குடியிருக்க அனுமதியும் அளிக்கப் பட்டது.

இதனால், சென்னை மற்றும் புறநகரில் நீர்நிலைகளுக்கு ஆதாரமாக உள்ள பல நீர்பிடிப்பு பகுதிகள் மற்றும் ஏரிகள் காணாமல் போயின. மிகப்பெரிய ஏரிகளாக விளங்கிய வேளச்சேரி ஏரி, பள்ளிக்கரணை ஏரி, போரூர் ஏரி உள்ளிட்ட பல ஏரிகள் பல மடங்கு சுருங்கின.அதேபோல, ஒவ்வொரு ஏரிக் கும் கலங்கல் இருந்தது. அந்த கலங்கல் வழியாக வெளியேறும் உபரிநீர் கடலில் கலக்க நுõறடிக்கும் மேற்பட்ட அகலம் கொண்ட போக்கு கால்வாய் இருந்தது.

சில ஆண்டுகளாக மழை பொய்த் ததால் பெரும்பாலான வாய்க் கால்கள் இருக்கும் இடம் தெரியாத அளவிற்கு ஆக்கிரமித்து விட்டனர். நீர்நிலை பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற அரசுக்கு ஐகோர்ட் காலக்கெடு விடுத்துள் ளது. ஐகோர்ட்டின் உத்தரவை தமிழக அரசு மதித்து ஏரிகள், போக்கு கால் வாய் ஆகியவற்றில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, மீண்டும் ஆக்கிரமிப்புகள் ஏற்படாவண்ணம் ஏரி யை கம்பிவேலி போட்டு பாதுகாக்க வேண்டும் என்பது ஒட்டுமொத்த மக்களின் எதிர்ப்பார்ப்பாக உள்ளது. இதனால், குடிநீர் பிரச்னைக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்படும்.

ஆக்கிரமிப்புகள் அகற்ற கெடு:

ஏரியை காப்பாற்றி ஆக்கிரமிப்புகளை அகற்ற பொதுநல அமைப்புகள் வழக்கு தொடர்ந்தன. இவ்வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி ஏ.பி.ஷா, நீதிபதி ஜோதிமணி ஆகியோர் அடங்கிய முதல் பெஞ்ச் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:

* நீர் நிலைகள் ஆக்கிரமிப்புகளை அகற்ற வரும் நவம்பர் மாதத்திற்குள் ஒரு திட்டம் இறுதி செய்யப்பட வேண்டும்.

* ஆக்கிரமிப்பாளர்களுக்கு மாற்று இடம் வழங்க அரசு பரிசீலிக்கலாம்.

* நீர் நிலை ஆக்கிரமிப்புகளை எதிர்த்து தொடரப்படும் வழக்குகளை சிவில் கோர்ட் அனுமதிக்கக்கூடாது.

* பாதிக்கப்பட்டவர் ஐகோர்ட் டை அணுகலாம்.

* நீர் நிலைகளை ஆக்கிரமித்து நிலங்களை விற்றவர்கள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

* எதிர்காலத்தில் நீர்நிலைகளில் ஆக்கிரமிப்பு செய்தால் நோட்டீஸ் வழங்காமலே ஆக்கிரமிப்புகளை அகற்றலாம்.

* ஆக்கிரமிப்புகள் அகற்றியது குறித்து வரும் 2008ம் ஆண்டு ஜூன் 15ம் தேதிக்குள் பொதுப்பணித்துறை செயலர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

Posted in activism, Activists, Adambakkam, Agriculture, Assets, Boundary, Buildings, Civic, Drink, Drinking, encroachers, encroachment, encroachments, Enforcement, Environment, Evict, Eviction, Farmers, Govt, Ground water, groundwater, harvest, harvesting, Irrigation, KANCHEEPURAM, Lakes, Land, Law, Order, Original, Pallavaram, peasants, Peerkankaranai, penal, Private, Protection, Public, Rain, Rajakilpakkam, resettlement, rice, River, structures, Tambaram, Tanks, Temple, Ullagaram, Water, waterbodies, waterbody | Leave a Comment »

Bush announces new sanctions on Burma – Buddhist monks, nuns lead pro-democracy protests

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 25, 2007

பர்மா போராட்டங்களில் பல்லாயிரக் கணக்கானோர்

பர்மாவின் இராணுவ அரசாங்கத்துக்கு எதிராக இன்றும் பல்லாயிரக் கணக்கான மக்கள், புத்த துறவிகளின் தலைமையில் ரங்கூன் நகரின் தெருக்களிலும் வீதிகளிலும் பேரணியாகச் சென்றனர்.

அரசாங்கத்து எதிரான பதாகைகளைச் சுமந்து சென்ற அவர்கள், அரச எதிர்ப்புக் கோஷங்களையும் எழுப்பினார்கள்.

தற்போது இந்தப் பேரணிகள் முடிவுக்கு வந்ததை அடுத்து பாதுகாப்புப் படையினரின் வாகனங்கள் வீதிகளில் ரோந்தில் ஈடுபட்டுள்ளதைக் காணக் கூடியதாக உள்ளது.

மேலும் குறைந்தது 10 நகரங்களில் இப்படியான பேரணிகளைக் காணக்கூடியதாக் இருந்தது.

இந்த ஆர்ப்பாட்டங்களில் கலந்துகொள்ள வேண்டாம் என்று ஒலிபெருக்கிகள் மூலம் இராணுவத்தினர் கேட்டுக்கொண்டிருந்தனர்.

தாம் இப்படியான ஆர்ப்பாட்டங்களுக்கு எதிராக பலத்தைப் பிரயோகிப்போம் என்று இராணுவத்தினர் எச்சரித்திருந்தனர்.

 


யார் இந்த பர்மா ஜெனரல்கள்?

ஜனநாயக ஆதரவுத் தலைவியான ஆங் சான் சூச்சியும், இராணுவ ஆட்சித் தலைவர் தான் சுவேயும்
ஜனநாயக ஆதரவுத் தலைவியான ஆங் சான் சூச்சியும், இராணுவ ஆட்சித் தலைவர் தான் சுவேயும்

பர்மாவின் 5 கோடி மக்களும், மிகவும் நெருக்கமாக இறுக்கப்பட்ட, 12 உயர் ஜெனரல்களைக் கொண்ட ஒரு இராணுவக் குழுவால் ஆட்சி செய்யப்படுகிறார்கள்.

அரச சமாதான மற்றும் அபிவிருத்திக் குழு என்ற பெயரில் செயற்படுகின்ற இந்தக் குழுவே பர்மாவில் முக்கிய முடிவுகள் அனைத்தையும் எடுக்கிறது.

இந்தக் குழுவின் தலைவராகச் செயற்படுபவர் மூத்த தளபதி ஜெனரல் தான்-சுவே. இவரே அரசாங்கத்தின் தலைவரும் இராணுவத்தின் நேரடி தளபதியுமாவார்.

பொதுமக்கள் மத்தியில் ஊர்வலமாக தான் சுவே
பொதுமக்கள் மத்தியில் ஊர்வலமாக தான் சுவே

பர்மா மீது தாக்கம் செலுத்தக் கூடிய முக்கிய முடிவுகளை எடுக்கும் போது, ஜோதிடர்களை ஆலோசிக்கின்ற ஒருவராகவும், ஒரு ஆழ்ந்த மத நம்பிக்கை உடையவராகவும் இவர் இருகின்ற போதிலும், ஒரு கடும் போக்காளராகவே இவர் பார்க்கப்படுகிறார்.

பொதுமக்கள் மத்தியில் மிகவும் குறைவாகவே பிரசன்னமாகும் ஒருவரான தான்-சுவே அவர்கள், மிகவும் சுகயீனமுற்று இருக்கிறார் என்று வதந்திகள் வருகின்ற போதிலும், இந்த ஆர்ப்பாட்டங்களை, போராட்டங்களை எவ்வாறு கையாள்வது என்பது தொடர்பில், இறுதி முடிவு இவர் வசம் இருப்பது போல்தான் தென்படுகின்றன.

எப்படியிருந்த போதிலும், எவ்வாறு நிலைமையை மீண்டும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவது என்பது தொடர்பில், இராணுவத் தலைமைப்பீடத்தின் மத்தியில் கருத்து முரண்பாடு காணப்படுவதாக வதந்திகள் வருகின்றன.

தனது இரண்டாம் நிலைத் தலைவர்களுடன் தான் சுவே
தனது இரண்டாம் நிலைத் தலைவர்களுடன் தான் சுவே

தான்-சுவா அவர்களுக்கு, அவரது இரண்டாம் நிலைத் தலைவரான , மாவுங் ஆயி அவர்களுடன் ஒரு பதற்றமான உறவே காணப்படுகிறது.

ஜனநாயக ஆதரவுத் தலைவியான ஆங் சான் சூச்சி அவர்களை, பர்மாவின் அரசியல் பொது வாழ்வில் இருந்து தள்ளி வைக்க வேண்டும் என்பதில், இவர்கள் இருவரும் உடன்படுகின்ற போதிலும், இந்த ஆர்ப்பாட்டங்களின் அளவும், ஆட்சிக்கு எதிராக அதிகரித்து வருகின்ற அச்சுறுத்தலும், இவர்களுக்கு இடையிலான கருத்து வேறுபாட்டை அதிகரிக்கலாம்.

இந்த ஜெனரல்களின் அனைத்து முடிவுகளும், மூடிய கதவுகளுக்கு பின்னாலேயே மேற்கொள்ளப்படுகின்றன. ஆகவே அவர்கள் என்ன திட்டமிடுகிறார்கள் என்பது குறித்து, சமிக்ஞைகள் கிடைப்பது முடியாத காரியமாகும்.

1988இல் இடம்பெற்ற கிளர்ச்சியின் போது தமது ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள தாம் பயன்படுத்திய யுக்திகளையே- அதாவது ஆர்ப்பாட்டங்களை முடிவுக்குக் கொண்டுவர வன்செயலைப் பயன்படுத்தும் யுக்தியையே – இராணுவ அரசாங்கம் கைக்கொள்ளும் என்று, பர்மாவிலும், வெளிநாடுகளிலும் உள்ள பலர் அஞ்சுகிறார்கள்.


பர்மாவின் மீது மேலும் பொருளாதாரத் தடைகளுக்கு அதிபர் புஷ் பரிந்துரை

அதிபர் புஷ்
அதிபர் புஷ்

பர்மாவின் இராணுவ ஆட்சியின் மீது புதிய பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படும் என்பதனை அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் உறுதி செய்துள்ளார்.

இந்த ஆண்டிற்கான ஐ நா வின் பொதுச் சபையின், துவக்க மாநாட்டின் போது உரையாற்றிய புஷ் அவர்கள் இதனைத் தெரிவித்தார்.

பர்மியத் தலைவர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் மீதான விசா கட்டுப்பாடுகள் மேலும் விரிவுபடுத்தப்படும் என்று அப்போது அவர் கூறினார்.

பத்தொன்பது ஆண்டுகளாக ஒரு பயங்கர ஆட்சியை மக்கள் மீது திணித்து வருவதாக பர்மிய அரசின் மீது குற்றம் சுமத்தியுள்ள புஷ் அவர்கள், அந்த அரசாங்கத்தின் மீது மற்ற நாடுகளும் தமது வழியில் அழுத்தங்களை கொடுக்க வேண்டும் என்றும் வலியுறித்தியுள்ளார்.

முன்னதாக இந்த மாநாட்டில் உரையாற்றிய ஐக்கிய நாடுகள் சபையின் தலைமைச் செயலர் பான் கீ மூன், அரசுக்கு எதிரான போராட்டங்கள் அதிகரித்து வரும் நிலையில், பர்மிய அதிகாரிகள் கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்ள வேண்டும் என்று கோரியுள்ளார்.


புத்தம் சரணம் கச்சாமி!

மியான்மரில் கடந்த ஒரு வாரமாக வெடித்திருக்கும் போராட்டத்தின் விளைவுகள் பெரிய மாற்றங்களை ஏற்படுத்துமா இல்லையா என்று உலகமே உற்றுநோக்கும் அளவுக்கு மக்கள் புரட்சி வலுவடைந்திருப்பது வரவேற்கத்தக்க மாற்றம்.

இந்தியாவைப் போலவே பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்தின் கீழ் இருந்த பர்மா, இப்போது மியான்மர், 1948ஆம் ஆண்டு விடுதலை பெற்றது. தன்னைச் சுதந்திர நாடாக அறிவித்த பர்மாவால் ஒரு குடியரசாக சுமார் 14 ஆண்டுகள்தான் தொடர முடிந்தது. அன்றைய பர்மா அரசைக் கவிழ்த்துவிட்டு ஆட்சியைக் கைப்பற்றிய தளபதி நீ வின்னின் தலைமையில் ராணுவ ஆட்சி நிறுவப்பட்டது என்பது மட்டுமல்ல, ராணுவத்தின் அசுரப்பிடியில் இப்போதும் பர்மா, மியான்மர் என்கிற பெயர் மாற்றத்துடன் தொடர்கிறது என்பதுதான் வருத்தமான விஷயம்.

1988-ல் வெடித்த மக்கள் போராட்டம், ராணுவ ஆட்சியைக் கலகலக்க வைத்தது. போராட்டத்தின் விளைவாக நடந்த தேர்தலில் ஆங் சாங் சூகியின் கட்சி மகத்தான வெற்றி பெற்றதே தவிர, ராணுவத் தளபதிகளால் ஆட்சி அமைக்க அனுமதிக்கப்படவில்லை. அதுமட்டுமல்ல, சூகி கைது செய்யப்பட்டு இன்றுவரை வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருக்கிறார்.

அடங்கி இருந்த மக்களின் எழுச்சி மறுபடியும் எழுந்திருக்கிறது. இந்த முறை, மக்களின் போராட்டத்துக்குத் தலைமை தாங்க முன்வந்திருப்பது அரசியல்வாதிகளோ, சுதந்திரப் போராளிகளோ அல்ல, புத்த பிக்குகள்! அதுதான், ராணுவ ஆட்சியாளர்களை நெருக்கடியில் ஆழ்த்தியிருக்கும் பிரச்னை. ராணுவத்தினரிடமிருந்து “பிச்சை’ வாங்க மாட்டோம் என்று புத்தபிக்குகள் அறிவித்திருப்பது, ஆட்சியாளர்களுக்குத் தரப்பட்டிருக்கும் சம்மட்டி அடி.

புத்தமத வழக்கப்படி, ஒவ்வொரு பௌத்தரும் புத்த பிக்குவுக்குத் தினசரி அருந்த உணவு வழங்குவது என்பது மதக்கடமைகளில் ஒன்று. இதை புத்தபிக்கு ஏற்றுக்கொள்ளாமல் இருப்பது, எந்தவொரு பௌத்தருக்கும் அவமானகரமான விஷயம். அவரால் தாங்கிக் கொள்ள முடியாது. இந்த நிலையில், தங்களது ராணுவ வீரர்களே எதிராக எழுவார்கள் என்று ஆட்சியாளர்கள் பயப்படத் தொடங்கி இருக்கிறார்கள். உங்களிடமிருந்து பிச்சை வாங்குவதாக இல்லை என்பதைத் தெரிவிக்கும்வகையில் தங்களது பிச்சைப் பாத்திரத்தைத் தலைகீழாகப் பிடித்தபடி ஊர்வலமாக புத்தபிக்குகள் சென்றிருக்கிறார்கள் என்பது தகவல்.

யாங்கூனில் மட்டும் ஒரு லட்சம் பேருக்கும் அதிகமான மக்கள் புத்தபிக்குகளின் தலைமையில் ஊர்வலத்தில் பங்கு பெற்றிருக்கிறார்கள். இதேபோன்ற போராட்டங்கள், மாண்டாலே உள்ளிட்ட சுமார் ஏழு முக்கிய நகரங்களில் நடைபெற்றிருக்கின்றன. சுமார் ஐந்தரைக் கோடி மக்கள்தொகையுள்ள மியான்மரில் ஏறத்தாழ நான்கு லட்சத்துக்கும் அதிகமான புத்தபிக்குகள் உள்ளனர் என்பது மட்டுமல்ல, மதம் இந்த நாட்டு மக்களின் உணர்வுடன் கலந்த விஷயமாகவும் இருக்கிறது. துப்பாக்கிச் சூட்டில் மக்களில் பலர் காயமடைந்திருப்பதும் சிலர் இறந்திருப்பதும் போராட்டத்தை வலுப்படுத்துமா பலவீனப்படுத்துமா என்பது தெரியவில்லை. ஆனால், புத்தபிக்குகள் போராட்டத்திற்குத் தலைமை தாங்க முன்வந்திருப்பது நிச்சயமாக ராணுவத் தலைமையைப் பலவீனப்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.

சீனாவின் துணையோடு, பாகிஸ்தானின் ரகசிய உதவியுடன் மியான்மர் ராணுவ ஆட்சி அணுகுண்டு தயாரிப்பில் இறங்கி, எந்த நிமிடத்திலும் குண்டை வெடித்துப் பரிசோதனை நடத்தும் நிலையில் இருக்கிறது என்று தெரிகிறது. ராணுவ ஆட்சியின் கையில் அணுகுண்டு என்பது போன்ற ஆபத்து எதுவுமில்லை. இந்தியாவில் ஒருபுறம் பாகிஸ்தான், மறுபுறம் மியான்மர். அதைப் பற்றி நமது அரசு கவலைப்படுவதாகத் தெரியவில்லை. மியான்மரில் மக்களாட்சி மலராவிட்டால் ஆபத்து நமக்கும்தான்.

எதற்கெடுத்தாலும் ராணுவம் வர வேண்டும், ராணுவ ஆட்சிதான்மேல் என்று விவரம் புரியாமல் சொல்பவர்களுக்கு நமது பதில் – ராணுவ ஆட்சியின் லட்சணத்தை மியான்மரில் பாருங்கள்!

Posted in activism, Activists, Airforce, Army, Arrest, Aung, Aung San, Aung San Suu Kyi, Ban, Bangkok, Buddha, Buddhism, Buddhist, Burma, Bush, civilians, Corruption, crowd, Curfew, dead, defence, Defense, Democracy, Demonstration, demonstrators, Fight, Fighter, Freedom, General, Government, Govt, HR, Jail, kickbacks, Kingdom, Kyi, Leaders, Mandalay, march, marches, Military, Mob, Monarchy, monks, Myanmar, Navy, Nobel, nuns, Opposition, Oppression, Pakokku, Peace, Prison, Protests, Rangoon, Republic, rights, Rule, Ruler, San, sanctions, Sathyagraha, Satyagraha, Tianamen, Tiananmen, tiananmen square, Torture, US, USA | 1 Comment »

Raman Raja: Assisted Suicide, Jack Kevorkian & Euthanasia

Posted by Snapjudge மேல் ஜூன் 19, 2007

நெட்டில் சுட்டதடா…: மருத்துவர் நடத்திய மரண விளையாட்டு!

ராமன் ராஜா

உலகில் எவ்வளவோ நாடுகளில் எவ்வளவோ மக்கள், தங்கள் உரிமைகளுக்காகப் போராடுகிறார்கள். பேச்சுரிமை, எழுத்துரிமை, விரும்பின கலர் சட்டை போட்டுக் கொள்ளும் உரிமை என்று சின்னதும் பெரியதுமாகப் பல விடுதலைப் போராட்டங்கள். இதில் கட்டக் கடைசி என்று சொல்லத் தக்கது, உயிரை விடும் உரிமை. தற்கொலை செய்து கொள்வது சில நாடுகளில் சட்டப்படி செல்லும்; சிலவற்றில் குற்றம். தற்கொலையாளியின் பக்கத்தில் இருந்து பிரார்த்தனை செய்த பாதிரியார் ஒருவர் கூட சமீபத்தில் சிறைக்குப் போயிருக்கிறார்.

ஆனால் மருத்துவர் உதவியுடன், வலியில்லாமல் பிசிறில்லாமல் தற்கொலை செய்துகொள்கிற உரிமையைக் கேட்டுப் போராடும் பல குழுக்கள் இருக்கின்றன. ABCD என்பது அவற்றில் முக்கியமான அமெரிக்க இயக்கம்.

“”தீர்க்க முடியாத வியாதிகளால் வருடக் கணக்காக வலியும் வேதனையும் அனுபவித்து, சேர்த்து வைத்த சொத்தெல்லாம் பயனில்லாமல் ஆஸ்பத்திரிச் செலவுக்குக் கரைந்து, உறவினருக்கும் பாரமாய், உயிர் பிரியாமல் அவஸ்தைப்படுபவர்கள் எவ்வளவோ பேர் இருக்கிறார்கள். போகிற உயிரைச் செயற்கையாகப் பிடித்து வைத்துக் கொண்டு என்ன சாதிக்கப் போகிறீர்கள்? அவர்களுக்கு இறுதி விடுதலை கொடுங்கள்; அமைதியாகத் தூங்க விடுங்கள்” என்று இவர்கள் பிரசாரம் செய்கிறார்கள். பதினைந்து வருடம் கோமாவில் கிடந்த டெர்ரி ஷியேயோ என்ற பெண்மணியின் ஆக்ஸிஜன் டியூபைப் பிடுங்க வேண்டும் என்று அவர் கணவர் போட்ட வழக்கில் வெற்றியும் பெற்றார். ஆனால் அதற்குள் அமெரிக்காவே இரண்டு கட்சியாகப் பிரிந்து அடித்துக் கொண்டது.

சென்ற வாரம் முழுவதும் டாக்டர் ஒருவர் சிறையிலிருந்து விடுதலையான செய்தியை உலகத்து மீடியா முழுவதும் பேசியது: அவர்தான் மரண மருத்துவர் (டாக்டர் டெத்) என்று செல்லமாகப் பெயர் படைத்த டாக்டர் கெவார்க்கியன். “”மரணம் எங்கள் பிறப்புரிமை” என்று முழங்கியவர்; பற்பல உயிர்களை முழுங்கியவர். “”ஒவ்வொரு மனிதனுக்கும் தன்னுடைய சொந்த உயிரின் மீது முழு அதிகாரம் உண்டு. அதைப் போற்றிப் பாதுகாப்பதோ, போக்கிக் கொள்வதோ, அவரவர் இஷ்டம். அரசாங்கமோ, சட்டமோ இதில் தலையிடக் கூடாது.” என்று வாதாடினார். பேச்சுடன் நிற்காமல் நூற்றுக்கும் மேற்பட்ட சாவுகளைப் பக்கத்தில் இருந்து பக்குவமாக நடத்தியும் வைத்தார்.

டாக்டர் கெவார்க்கியனுக்கு இப்போது பழுத்த எழுபத்தேழு வயது. அமெரிக்காவின் மிஷிகன் நகரைச் சேர்ந்தவர். இளமைப் பருவத்தில், டாக்டர் தொழிலின் காரணமாக நூற்றுக்கணக்கில் போஸ்ட் மார்ட்டம் செய்து தள்ள வேண்டியிருந்தது. அதனால் அவருக்கு மரணத்தின் மேலேயே ஓர் அலாதியான ஈர்ப்பு வந்துவிட்டது. உயிர் பிரியும் அந்தக் கடைசிக் கணத்தில் ஒரு நோயாளியின் கண்கள் எப்படி இருக்கும் என்று காத்திருந்து போட்டோ எடுத்திருக்கிறார். வாழ்ந்த சூடு இன்னும் மாறாமல் இருக்கும் பிணங்களிலிருந்து ரத்தத்தை உறிஞ்சி உயிருள்ள பேஷண்டுகளுக்குக் கொடுக்கமுடியுமா என்று ஒரு முயற்சி. கடைசியாக மரண தண்டனை பெற்ற கைதிகளை வைத்துக் கொண்டு உயிரோடு அறுத்துப் பார்த்து ஆராய்ச்சி செய்ய முயன்றதில், பல்கலைக் கழகத்தினர் அதிர்ச்சி அடைந்து டாக்டரை வீட்டுக்கு அனுப்பிவிட்டார்கள்! ஆனால் கெவார்க்கியன் அசரவில்லை; நேராகப் பத்திரிகை அலுவலகத்துக்குப் போய் ஒரு விளம்பரம் கொடுத்தார்: “”ஏதாவது காரணத்துக்காக உயிர் வாழ்வதில் ஆர்வம் இழந்து விட்டவர்கள் என்னிடம் வரலாம். தொல்லை நிறைந்த இந்த உலகத்திலிருந்து வலியில்லாமல் விடுதலை வாங்கித் தருகிறேன்.” இதைப் பார்த்ததும் புதிய ரஜினி படத்துக்கு முன் பதிவு செய்யும் வேகத்தில் விண்ணப்பங்கள் வந்து குவிந்து விட்டன!

கெவார்க்கியன், கருணை வள்ளல்; தன் கையால் கொலை பாதகம் செய்ய மாட்டார். அவர் தயாரித்த “தானட்ரான்’ என்ற இயந்திரம்தான் அந்த வேலையைச் செய்யும். தற்கொலை கேûஸ அமைதியாகப் படுக்க வைத்து “”சாமியைக் கும்பிட்டுக்கப்பா” என்று சொல்லிக் கையில் பச்சை நரம்பு தேடி, ஊசி குத்தி சலைன் பாட்டிலை இணைப்பார். இப்போது நோயாளியே இயந்திரத்தில் ஒரு பட்டனை அழுத்த வேண்டும். முதலில் ஒரு விஷ மருந்து சொட்டுச் சொட்டாகக் கையில் இறங்கும்; மெல்ல ஆசாமி கோமா நிலைக்குப் போவார். சில நிமிடம் கழித்து தானட்ரான், தானாகவே மற்றொரு ரசாயனத்தைத் திறந்துவிடும். அது இதயத்துடிப்பை கப்பென்று பிடித்து நிறுத்திவிடும்.

இப்படிச் சில பல கொலைகள் செய்த பிறகு “ஆபத்தான ஆசாமி’ என்று கெவார்க்கியனின் மருத்துவ லைசென்ஸ் ரத்து செய்யப்பட்டது; இப்போது அவர் சட்டப்படி யாருக்கும் ஊசி மருந்து எழுதித் தர முடியாது. எனவே மறுபடி முனைந்து மெர்ஸிட்ரான் என்று மற்றொரு மெஷின் கண்டுபிடித்தார்: கடையில் கிடைக்கும் கார்பன் மோனாக்ûஸடு வாயு சிலிண்டரை வாங்கி வைத்துக் கொண்டு சுவாசித்து மூச்சடைக்கும் இயந்திரம் இது. டெக்னிகலாகப் பார்த்தால் டாக்டர் யாரையும் கொல்லவில்லை; அவரவர்கள் தாங்களேதான் வீட்டு ஃபிரிஜ்ஜை டீஃப்ராஸ்ட் பண்ணுவது போல ஒரு பொத்தானை அமுக்கிக் கொண்டு செத்தார்கள். 1990-ல் ஆரம்பித்து ஏழெட்டு வருடத்திற்குள், இப்படி 130 பேருக்கு எமலோகத்துக்கு டிக்கெட் வாங்கிக் கொடுத்து டாட்டா காட்டியிருக்கிறார் டாக்டர்.

தன்னிடம் வந்து தற்கொலை செய்து கொண்டவர்கள் எல்லாமே நோயாளிகள், வாழ்க்கையின் இறுதித் கட்டத் துன்பம் தாங்காமல் வந்தவர்கள்தான் என்று சாதித்தார் கெவார்க்கியன். ஆனால் பிறகு அவர்களில் பலரை போஸ்ட்மார்ட்டம் செய்தபோது அப்படியொன்றும் கடும் வியாதி இருந்ததாகத் தெரியவில்லை. காதல், கடன், பிளஸ் டூ பரீட்சை போன்ற வழக்கமான காரணங்களுக்காகத்தான் பெரும்பாலோர் பட்டனை அமுக்கித் தொலைத்திருக்கிறார்கள்.

கடைசியில் 1998 செப்டம்பரில் கெவார்க்கியன் நடத்தி வைத்த ஒரு தற்கொலைதான் அவரை ஜெயிலுக்கு அனுப்பியது: தாமஸ் யூக் என்ற நோயாளி; ஐம்பது வயது தாண்டியவர். அவர் கையைக் காலை அசைக்க முடியாத பக்கவாதத்தினால் பாதிக்கப்பட்டிருந்ததால், கெவார்க்கியன் தானே தன் கையால் விஷ ஊசியைப் போட்டு வழியனுப்பி வைத்தார். அதை அப்படியே வீடியோ படமாக எடுத்து, இந்தியன் கமல்ஹாசன் பாணியில் டி.வி.யில் வேறு போட்டுக் காட்டினார்! இதைப் பார்த்துத் திகைத்துப் போன பொதுமக்கள் கொழு மோர் காய்ச்சிக் குடித்தார்கள்; குழந்தைகள் பல நாள் வரை திருடன்-போலீஸ் விளையாட்டை மறந்து டாக்டர்- விஷ ஊசி விளையாட்டில் ஈடுபட்டார்கள். இந்த வீடியோ ஆதாரத்தின் பேரில் கெவார்க்கியன் கைது செய்யப்பட்டார்.

கோர்ட்டில் கெவார்க்கியன் “”செத்தவனைப் போய்க் கேளுங்க” என்று சுலபமாகத் தப்பித்திருக்கலாம். தற்கொலைக்கு உதவி செய்வது தப்பா, சரியா என்பது பற்றி சுப்ரீம் கோர்ட்டே தெளிவாக இல்லை; மாநிலங்கள் ஒவ்வொன்றும் மனம் போனபடி சட்டம் போட்டுக் கொண்டிருக்கின்றன. நல்ல வக்கீலாக வைத்துக் கொண்டிருந்தால் அவர் லாகவமாக லா பாயிண்டைப் போட்டுக் குழப்பி வாங்கித் தந்திருப்பார். ஆனால் கெவார்க்கியன் கொஞ்சம் விளம்பரப் பிரியர்; மீடியா மொத்தமும் ஆர்க் விளக்குகளைத் தன் மீது திருப்பியதில் நிலை மறந்து விட்டார். தன் கேûஸத் தானே வாதாடிக் கொள்வதாகச் சொல்லி, கோர்ட்டில் மனோகரா சிவாஜி கணேசன் மாதிரி உணர்ச்சிகரமாக உரையாற்றினார். ஆனால் பழம் பெருச்சாளியான அரசாங்க வக்கீல் தூவிய நுணுக்கமான சட்டப் பொடிகளைச் சமாளிக்க முடியாமல் தும்மிவிட்டார். டாக்டருக்கு இரண்டாவது டிகிரி கொலை செய்ததற்காக இருபத்தைந்து வருடம் வரை சிறைத் தண்டனை கிடைத்தது.

இப்போது எட்டு வருட தண்டனையை அனுபவித்த பிறகு, மோசமடைந்து கொண்டிருக்கும் உடல் நிலையைக் காரணம் காட்டி கெவார்க்கியனை பரோலில் விடுதலை செய்திருக்கிறார்கள்; “”வெளியே போனதும் சமர்த்துப் பையனாக இருக்கவேண்டும்; யாரையும் கொல்லக் கூடாது” என்ற நிபந்தனையுடன். வெளியே காத்திருந்த டாக்டரின் ரசிகர்கள் விழாவே கொண்டாடிவிட்டார்கள். வாழ்வின் கடைசிக் கட்டத்தில் இருக்கும் நோயாளிகள் பலர், சக்கர நாற்காலியில் அமர்ந்தபடியே அவரைச் சுற்றிச் சுற்றி வந்து ஆதரவு தெரிவித்தார்கள். “”இறப்போரின் உரிமைக்காக இறுதி மூச்சு வரை போராடுவேன்” என்று சூளுரைத்திருக்கிறார் டாக்டர் கெவார்க்கியன்.

ஒரு வயதான பெண்மணி ஐ.சி.யூவில் நினைவின்றிப் படுத்திருக்க, பக்கத்தில் ஒட்டுக் கேட்கப்பட்ட உரையாடல்: “”இவங்கதான் என் மாமியார். வயசு அறுபதுக்கு மேலே ஆகிவிட்டது. வீட்டிலே இருக்கும்போதெல்லாம் “நொய் நொய்’னு ஒரே பிடுங்கல். நீங்களாவது கொஞ்சம் பார்த்து ஆபரேஷன் பண்ணுங்க டாக்டர். என்ன செலவானாலும் பரவாயில்லை!”

“”உம். புரியுது, புரியுது. முடிச்சுருவோம்!”

Posted in activism, Activist, Arrest, Christianity, dead, Death, discussion, Disease, Doctor, Euthanasia, Healthcare, Illness, Issue, Justice, Kevorkian, Law, Medicine, Murder, Order, Pain, physician, Raman Raja, Ramanraja, Religion, SNEHA, suffering, Suicide, US, USA, Will | Leave a Comment »

Two SC judges differ on courts giving directives to Government

Posted by Snapjudge மேல் மே 30, 2007

மார்க்கண்டேய கட்ஜு, மன்னிக்கவும்!

அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்துக்கு வந்த வழக்கு ஒன்றில் இரண்டு நீதிபதிகள் இருவேறு கருத்துகளைத் தெரிவித்திருக்கின்றனர். இரண்டு நீதிபதிகளுமே அவர்களது அனுபவத்திற்கும், நாணயத்திற்கும், தெளிவான சிந்தனைக்கும் மதிக்கப்படுபவர்கள் என்பதால் அவர்களது தீர்ப்புகளும், கருத்துகளும் ஆழமாகச் சிந்திக்க வைக்கின்றன.

விஷயம் வேறொன்றுமில்லை. அலகாபாத் உயர் நீதிமன்றம் உத்தரப் பிரதேச அரசுக்கு அந்த மாநிலத்தில் நுகர்வோர் நீதிமன்றங்கள் அமைப்பதைப் பற்றி சில வழிகாட்டுதல்களை வழங்கி இருக்கிறது.

  • குறைந்தது ஐந்து நுகர்வோர் நீதிமன்றங்கள் அமைக்கப்பட வேண்டும் என்றும்,
  • அந்த நீதிமன்றங்களின் நீதிபதிகளுக்கான சம்பளம் நிர்ணயிக்கப்பட வேண்டும் என்றும்,
  • இதற்கான மாற்றங்களை நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தில் திருத்தமாகக் கொண்டுவர வேண்டும்

என்பதும்தான் உயர் நீதிமன்றம் உத்தரப் பிரதேச அரசுக்கு வழங்கியிருந்த வழிகாட்டுதல்கள்.

ஒரு மாநில அரசுக்கும் நிர்வாகத்திற்கும் எப்படி செயல்பட வேண்டும் என்று வழிகாட்டுதல்களை வழங்கும் அதிகாரம் நீதிமன்றங்களுக்குக் கிடையாது

என்பது உத்தரப் பிரதேச அரசின் வாதம். அலகாபாத் உயர் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து அந்த மாநில அரசு தொடுத்த மேல் முறையீடு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எஸ்.பி. சின்ஹாவும், மார்க்கண்டேய கட்ஜுவும்.
“”அரசு மற்றும் அதிகாரிகளின் மெத்தனப்போக்கு, பொதுமக்களின் அன்றாடப் பிரச்னைக்குத் தீர்வு வழங்குவதற்காக சட்டத்தின் மூலம் உருவாக்கப்பட்டிருக்கும் நீதி வழங்கும் அமைப்புகளைப் பாதிக்குமேயானால், உயர் நீதிமன்றங்கள் தலையிட்டு முறையான வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும். சட்டத்தின் மூலம் உருவாக்கப்பட்ட அமைப்புகள் முறையாகச் செயல்படுகின்றனவா, அரசு நடைமுறைப்படுத்துகிறதா என்று பார்க்க வேண்டிய கடமையை அரசியல் சட்டம் நீதிமன்றங்களுக்கு வழங்கி இருக்கிறது” என்பது எஸ்.பி. சின்ஹாவின் அபிப்பிராயம்.

ஆனால், இந்த வழக்கை விசாரித்த மற்றொரு நீதிபதியான மார்க்கண்டேய கட்ஜுவின் கருத்து நேர் எதிராக அமைந்திருக்கிறது. “”சட்டப்பேரவை மற்றும் நிர்வாகத்தின் செயல்பாடுகளில் தலையிடும் எண்ண ஓட்டத்தை நீதிமன்றங்கள் தவிர்க்க வேண்டும். இந்த விஷயத்தில் நீதித்துறை சுயகட்டுப்பாட்டுடன் செயல்படுவதுதான் முறையானது.

எந்தவொரு சட்டமும் அரசியல் சட்டத்துக்கு முரணானதாக இருக்குமேயானால் அதை நிராகரிக்கும் உரிமை நீதிமன்றத்துக்கு நிச்சயமாக உண்டு. ஆனால், சட்டத்தை மாற்றவோ, சட்டப்பேரவைகளின் சான்றாண்மையை விமர்சிக்கவோ நீதிமன்றத்துக்கு உரிமை இல்லை” – இதுதான் மார்க்கண்டேய கட்ஜுவின் வாதம்.

மார்க்கண்டேய கட்ஜு கூறியிருக்கும் அத்தனை கருத்துகளுமே ஏற்புடையவைதான். சட்டப்பேரவையும் அரசியல்வாதிகளும் வருங்காலச் சிந்தனையுடன் செயல்படுவார்களேயானால், ஒட்டுமொத்த மக்களின் உணர்வுகளைப் பிரதிபலிப்பவர்களாக இருப்பார்களேயானால், ஓட்டு வங்கி அரசியலை மட்டுமே கருத்தில் கொண்டு செயல்படாதவர்களாக இருப்பார்களேயானால், மார்க்கண்டேய கட்ஜுவின் கருத்து நூற்றுக்கு நூறு ஏற்புடையது, சரியானதும்கூட.

ஆனால், மக்களின் வெறுப்புக்கும், அவமரியாதைக்கும், கண்டனத்துக்கும் உரிய அரசியல்வாதிகளும், அரசியல் கட்சிகளும் ஒருபுறம். அரசியல்வாதிகளுக்கும், ஆட்சியில் இருப்பவர்களுக்கும் துதிபாடிப் பதவி உயர்வு பெற்று மக்களின் உணர்வுகளையும் தேவைகளையும் பற்றிக் கவலையேபடாத அதிகார வர்க்கம் இன்னொரு புறம்.

இந்த நிலையில், நீதிமன்றங்களும் நீதிபதிகளும்தான் அரசியல் சட்டத்தையும், அரசியல் சட்டத்தின் அடிப்படையில் அமைந்த இந்தியக் குடியரசையும், சராசரி குடிமகனையும் காப்பாற்ற முடியும் என்கிற நிலைமை.

இப்படிப்பட்ட சூழ்நிலையில், எஸ்.பி. சின்ஹாவின் கருத்துகள் ஏற்புடையதே தவிர, மார்க்கண்டேய கட்ஜுவினுடையது அல்ல. கட்ஜுவின் வாதம், சராசரி இந்தியக் குடிமகனின் உணர்வுகளைப் புரிந்துகொள்ளாத நிர்வாகியின் வாதமாக இருக்கிறதே தவிர, நியாயத்தை சீர்தூக்கிப் பார்க்கும் நீதிபதியின் தீர்ப்பாக இல்லை.

Posted in activism, administrators, Allahabad, Bench, Center, Centre, Citizen, Consumer, Consumer Court, Consumer Protection Act, Consumer Rights, Court, CPA, Customer, directives, domain, Government, Govt, High Court, Judges, Jury, Justice, Katju, Law, Lawsuit, legislators, Legislature, Markandey Katju, Order, Party, Politics, Protection, provisions, rights, S.B. Sinha, SC, Sinha, State, temptation, UP, Uttar Pradesh, verdict | Leave a Comment »

President presents Kabir Puraskar, Communal Harmony awards

Posted by Snapjudge மேல் மே 23, 2007

உ.பி. இளைஞருக்கு கபீர் விருது; அசாம் காந்தியவாதிக்கு ஒருமைப்பாட்டு விருது: கலாம் வழங்கினார்

புது தில்லி, மே 24: தேச ஒருமைப்பாடு, வகுப்பு ஒற்றுமைக்காக உழைத்த உத்தரப்பிரதேச சமூக சேவகர் ராம்பாபு சிங் செüஹானுக்கு (34) கபீர் விருதும், அசாமைச் சேர்ந்த ரவீந்திரநாத் உபாத்யாயவுக்கு தேச வகுப்பு ஒற்றுமை விருதும், தில்லியிலிருந்து செயல்படும் சமத்துவ கல்விக்கான தன்னார்வ அமைப்புக்கு தேசிய வகுப்பு ஒற்றுமை விருதும் வழங்கப்பட்டன.

தில்லியில் புதன்கிழமை நடைபெற்ற விழாவில் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் இவ்விருதுகளை வழங்கிப் பேசினார். குடியரசு துணைத் தலைவர் பைரோன் சிங் ஷெகாவத், பிரதமர் மன்மோகன் சிங், உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் எல்.கே. அத்வானி ஆகியோர் பங்கேற்றனர்.

ராம்பாபு சிங் செüஹான்: உத்தரப்பிரதேசத்தின் தம்னாகடி கிராமத்தைச் சேர்ந்த செüஹான், கபீர்தாசரால் மிகவும் ஈர்க்கப்பட்டவர். தேசிய ஒருமைப்பாட்டை வலியுறுத்தி ஹத்ராஸ் என்ற இடத்திலிருந்து ஆக்ராவுக்கு பாத யாத்திரை சென்றார். பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளான முஸ்லிம் பெண்ணுக்கு ஆதரவாகப் பரிந்து பேசி நியாயம் கிடைக்க உதவி செய்தார். அவருக்கு பாராட்டு பத்திரமும் ரூ.50,000 ரொக்கமும் விருதாக தரப்பட்டன.

ரவீந்திரநாத் உபாத்யாய்: அசாமைச் சேர்ந்த காந்தியவாதியான ரவீந்திரநாத் உபாத்யாய் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டவர். இப்போது வட-கிழக்கு மாநிலங்களில் வகுப்பு மோதல்களால் பதற்றம் அடைந்துள்ள பகுதிகளில் அமைதியை ஏற்படுத்த பாடுபட்டு வருகிறார். 2000-வது ஆண்டில் பத்மஸ்ரீ விருது பெற்றார். 2003-ல் ஆக்கபூர்வமான பணிகளில் ஈடுபட்டமைக்காக ஜம்னாலால் பஜாஜ் விருது பெற்றார். 2004-ல் வட-கிழக்கு மாநிலங்களின் நண்பர் என்ற விருதைப் பெற்றார்.

ரவீந்திரநாத் உபாத்யாயாவுக்கு ரூ.2 லட்சம் ரொக்கப் பரிசும் பாராட்டு பத்திரமும் வழங்கப்பட்டன.

சமத்துவ கல்விக்கான நிறுவனம்: தில்லியை மையமாகக் கொண்டு செயல்படும் சமத்துவ கல்விக்கான நிறுவனம் மதச்சார்பின்மை கொள்கையை நிலைநாட்டவும் தேச ஒருமைப்பாட்டை கட்டிக்காக்கவும் இடைவிடாமல் பாடுபட்டு வருகிறது. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சசி பூஷண் இந்த அமைப்பை ஏற்படுத்தி நிர்வகித்து வருகிறார். இந்த அமைப்புக்கும் பாராட்டு பத்திரம், ரூ.5 லட்சம் ரொக்கம் ஆகியவை தரப்பட்டன.

Posted in activism, Activists, Assam, Awards, Charity, Chauhan, citation, communal, Education, Faces, Gandhi, Gandhian, Harmony, Hindi, Hindu, Hinduism, Individual, Integration, Jury, Kabir, Kalam, Leaders, Muslim, Nation, National, NGO, Northeast, organisation, people, Politics, President, Prizes, Puraskar, Rabindra Nath Upadhyay, Rambabu Singh Chauhan, Recognition, secularism, Shashi Bhushan, Socialist, Society, UP, Uttar Pradesh, Volunteer | Leave a Comment »

Actors Activism – Is it for selfish purposes? (Dinakaran Survey)

Posted by Snapjudge மேல் மே 10, 2007

நடிகர்களுக்கு நாட்டு மக்கள் மீதுள்ள அக்கறை…

சினிமா மீது தமிழர்களுக்கு எப்போதும் ஈர்ப்பு உண்டு. நடிகர்களுக்காக எதையும் செய்ய பலர் காத்திருக்கிறார்கள். ஆனால் பதிலுக்கு நடிகர்கள்…?

ஆம்… அதை பற்றித்தான் தமிழக மக்களிடம் கேட்கப்பட்டது. நடிகர்களுக்கு, நாட்டு மக்கள் மீதுள்ள அக்கறை எப்படி என்பதுதான் கேள்வி.

மக்களிடம் நடிகர்கள் அக்கறை கொண்டிருப்பதற்கு காரணம் தங்கள் படம் ஓட வேண்டும் என்பதற்குத்தான் என பெரும்பாலானவர்கள் கருத்துச் சொல்லியுள்ளனர். கருத்துக் கணிப்பில் பங்கேற்றவர்களில் சரியாக பாதி பேர், அதாவது 50 சதவீதம் பேர் இப்படித்தான் சொல்கிறார்கள்.

  • நடிகர்களின் அக் கறையில், தங்கள் படம் ஓட வேண்டும் என்ற சுயநலம் கலந்து இருக்கிறது என்கின்றனர் மக¢கள்.
  •  Ôஅரசியலுக்கு வருவதற்காகத்தான்Õ மக்கள் மீது நடிகர்கள் அக்கறையை கொட்டுகின்றனர் என்பது 31 சதவீதம் பேரின் கருத்து.
  • நடிகர்களின் அக்கறை `உண்மையானது‘ என்று முழுமையாக நம்புபவர்கள் 14 சதவீதம் பேர் மட்டும்தான்.
  • இந்த விஷயத்தில் கருத்து தெரிவிக்காதவர்கள¢ 5 சதவீதம் பேர்.

நடிகர்களின் அக்கறையை விளாசித் தள்ளியவர்களில் நாகர்கோவில் மக்களுக்குத்தான் முதலிடம். அங்கு 65 சதவீதம் பேர், படம் ஓடுவதற்காகத்தான் நடிகர்கள் அக்கறையாக இருக்கிறார்கள் என அதிரடியாக கூறி உள்ளனர்.

அதற்கு அடுத்தபடியாக சென்னைவாசிகள் நடிகர்களை காய்ச¢சி எடுக்கிறார்கள். 58 சதவீத சென்னைவாசிகளுக்கு நடிகர்கள் அக்கறையின் பின்னணி புரிந்திருக்கிறதாம்.

வேலூர் (55 சதவீதம்), சேலம் (52), கோவை (48), திருச்சி (52), மதுரை (51), நெல்லை (43) பகுதிகளிலும் இந்த கருத்துதான் அதிகம் நிலவுகிறது.

புதுவை மக்களில் 30 சதவீதம் பேர் படம் ஓட வேண்டும் என்பதுதான் நடிகர்களின் அக்கறைக்கு காரணம் என கூறியுள்ளனர். 39 சதவீதம் பேர், அவர்களின் அரசியல் ஆசையை காரணம் காட்டுகின்றனர்.

நடிகர்களுக்கு மக்கள் மீது உள்ள அக்கறை Ôஅரசியலுக்கு வருவதற்காகத்தான்‘ என ஒரே போடாக போடுபவர்கள் கொங்கு மண்டலத்தினர்தான். கோவைவாசிகளில் 42 சதவீதம் பேர் இவ்வாறு கூறியுள்ளனர். சென்னையில் இப்படிச் சொன்னவர்கள் 30 சதவீதம் பேர். வேலூர் (37 சதவீதம்), சேலம் (27), திருச்சி (26), மதுரை (30), நெல்லை (30), நாகர்கோவில் (21 சதவீதம்).

நடிகர்கள் அக்கறை நிஜமானதுதான் என அதிகம் நினைப்பவர்கள் நெல்லை சீமையினர்தான். அங்கு 26 சதவீதம் பேர் நடிகர்களின் அக்கறையை பார்த்து நெகிழ்கின்றனர். அதற்கு அடுத்து திருச்சி மக்களில் 18 சதவீதம் பேர் இம்மாதிரி உருகுகின்றனர். நடிகர்கள் அக்கறை உண்மையானது என¢பதில் நம¢பிக்கையில்லாதவர்களாக வேலூர், கோவைவாசிகள் உள்ளனர். இப் பகுதிகளில், 8 சதவீதம் பேர்தான் நடிகர்களின் அக்கறையை நம்புகின்றனர்.

Posted in activism, Actors, Actress, Actresses, Cinema, Dinagaran, Dinakaran, Films, Movies, Rajini, Rajiniganth, Rajinikanth, Rajni, Rajniganth, Selfish, Society, Stars, Sun, Sun TV, Survey, Tamil, Tamil Actor, Tamil Actors, Tamil Actress, Tamil Actresses, Tamil Cinema, Tamil Film, Tamil Films, Tamil Movie, Tamil Movies, Tamil Music, Tamil Padam, Tamil Pictures, Tamil Stars, Tamil Theater, Tamil Theatres, TV, Vijaiganth, Vijaikanth, Vijayaganth, Vijayakanth, Welfare | Leave a Comment »

Annie Raja – International Federation of Women

Posted by Snapjudge மேல் ஏப்ரல் 25, 2007

சர்வதேச மகளிர் சம்மேளன துணைத் தலைவராக இந்தியப் பெண் தேர்வு

புது தில்லி, ஏப். 25: சர்வதேச ஜனநாயக மகளிர் சம்மேளனத்தின் துணைத் தலைவர்களில் ஒருவராக, இந்திய தேசிய மகளிர் சம்மேளனத்தின் பொதுச் செயலர் ஆன்னி ராஜா (படம்) தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

சர்வதேச சம்மேளனத்தின் 14-வது மாநாடு, வெனிசூலா தலைநகர் காரகாஸில் சமீபத்தில் நடைபெற்றது. அதில், இந்திய சம்மேளனத்தின் தலைவர் சாரதாமணி, ஆன்னி ராஜா, கிருஷ்ணா மஜும்தார், பி.வி. விஜயலட்சுமி, ஆந்திரத்தின் பஸ்யா பத்மா, கேரளத்தின் கமலா சதானந்தன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். வெனிசூலா அதிபர் ஹியூகோ சாவேஸ் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.

பெண்களுக்கு அதிக அதிகாரம் அளிக்க வேண்டும் என்றும், ஏழை மக்களைப் பாதிக்கும் தாராளமயக் கொள்கைகளுக்கு எதிராகவும் இந்த மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

சர்வதேச சம்மேளனத்தின் தலைவராக பிரேசில் நாட்டைச் சேர்ந்த மர்கியா கேம்போஸ் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்தியாவின் ஆன்னி ராஜாவுடன், பாலஸ்தீனம், அங்கோலா, ஆர்ஜென்டீனா, சைப்ரஸ் நாடுகளின் பிரதிநிதிகள் துணைத் தலைவர்களாகத் தேர்வு செய்யப்பட்டனர்.

Posted in activism, Angola, Annie Raja, Argentina, Brazil, Caracas, Chavez, Cyprus, Female, Feminism, Kamala Sathanathan, Krishna Mazumdar, Lady, Majumdar, Majumdhar, National Federation for Indian Women, Palestine, Pasya Padma, Sadhanandhan, Sadhananthan, Sarada mani, Saradha mani, Saradhamani, Sarathamani, Sathanandhan, Sathananthan, Vijayalakshmi, Vijayalakshmy, Women | Leave a Comment »

Ralph Nader – Profile & Biosketch: Raman Raja

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 26, 2007

நெட்டில் சுட்டதடா…கலக்கப் புறப்பட்ட கன்ஸ்யூமர் புயல்!

ராமன் ராஜா

உள்ளூர் செய்திகளில் டிராஃபிக் ராமசாமி என்று ஒரு பெயர் அடிக்கடி அடிபடுகிறதே, யார் இவர் என்று கவனித்தேன்; மிகப் பெரிய தலைகளுடன் மோதுவதையே முழு நேரத் தொழிலாக மேற்கொண்டு விட்ட ஒரு கெட்டித் தலை என்று தெரிகிறது. பொதுப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக நீதிமன்றத்தின் கதவுகளைத் தட்டித் தட்டி, பல பேருடைய தூக்கத்தைக் கெடுத்துக் கொண்டிருக்கும் டிராஃபிக் ராமசாமிகள் உலகெங்கும் இருக்கிறார்கள். இதன் அமெரிக்கப் பதிப்புதான் ரால்ப் நாடர். (அமெரிக்காவில் ரால்ப் நோடர் என்றும் அழைப்பர்) கன்ஸ்யூமர் இயக்கத்தின் பிதாமகர். நாடருக்கு மெகா கம்பெனிகள் என்றாலே மகா அலர்ஜி. வால் மார்ட், மைக்ரோ சாஃப்டில் ஆரம்பித்து ஊரில் உள்ள அத்தனை பெரிய நிறுவனங்களுடனும் ஓயாத சண்டை!

1934-ல் பிறந்தவர் நாடர். லெபனானிலிருந்து அமெரிக்காவில் சென்று குடியேறிய குடும்பம். படித்தது வக்கீலுக்கு; ஆனால் உருப்படியாக ப்ராக்டீஸ் செய்வதை விட்டுவிட்டு, ஊர்ப் பிரச்சினைகளுக்காகப் பொது நல வழக்குத் தொடர்ந்து போராடுவதே முழு நேரத் தொழிலாக மேற்கொண்டு விட்டார். தன்னுடைய தாக்குதலுக்கு நாடர் முதலில் நாடியது கார் தயாரிக்கும் கம்பெனிகளை. அந்தக் காலத்து கார்களில் இருந்த சஸ்பென்ஷன் எனப்படும் முக்கியமான தொட்டில் அமைப்பு, எட்டணா கூடப் பெறாது. ஒரு மூலையில் வேகமாகத் திரும்பினால் கார் சட்டென்று பாலன்ஸ் இழந்து பல்டி அடித்து விடும். அதுதவிர ஒவ்வொரு காரிலும், ஒவ்வொரு மாடலிலும் வெவ்வேறு விதமான அமைப்புகளில் கியர் இருந்தது. சிலவற்றில் நியூட்ரல் கியர் முதலில் இருக்கும்; வேறு சில கார்களில் நடு மத்தியில் இருக்கும். பழக்கமில்லாத புதிய காரை ஓட்டுபவர்கள் திணறிப் போவார்கள். சிக்னலில் நின்றுவிட்டுக் கிளம்ப முற்படும்போது பழைய ஞாபகத்தில் முதல் கியரைப் போட்டால், ரிவர்ஸில் சீறிப் புறப்பட்டுப் பின்னால் வரும் வண்டியில் டமாலென்று இடிக்கும். கார் தயாரிப்பு கம்பெனிகள் லாபம் ஒன்றே குறியாக, மக்களின் பாதுகாப்பு குறித்து அக்கறையே இல்லாமல் இருக்கிறார்கள் என்று பொருமினார் நாடர். எல்லாத் தயாரிப்பாளர்களின் கார்களிலும் ஒரே மாதிரியான கியர் இருக்க வேண்டுமென்று வாதாடினார். கார் கம்பெனிகள் “பெப்பே’ என்றன.

அமெரிக்க நெடுஞ்சாலைகளில் சாதாரணமாகவே கார்கள் நூற்று நாற்பது கிலோ மீட்டர் வேகத்தில் பறக்கும். அந்த வேகத்தில் ஒரு விபத்து என்றால் ஸ்டியரிங் வீலில் மோதி ஓட்டுபவரின் நெஞ்சு எலும்பு உடைந்துவிடும். இதயம் நேரடியாக அடி வாங்குவதால், ஆஸ்பத்திரி போகும் வரை ஆத்மா தாங்காது! இதைத் தடுக்க இப்போது எல்லாக் காரிலும் சீட் பெல்ட், ஸ்டியரிங்கின் நடுவே காற்று அடைத்த குஷன் பை என்று பாதுகாப்பு ஏற்பாடுகள் வந்துவிட்டன. சீட் பெல்ட் அணிவதால் மட்டுமே அமெரிக்காவில் ஒவ்வொரு வருடமும் பதினோராயிரம் பேர் உயிர் தப்பிப் பிழைக்கிறார்கள். ஆனால் இதெல்லாம் தேவை என்று நாடர் முதலில் போராடியபோது, “”இந்த மாதிரி அநாவசிய எக்ஸ்ட்ரா ஃபிட்டிங்குகளுக்காக எங்கள் கார் தயாரிப்புச் செலவை ஏற்றிவிட முடியாது” என்று கார் கம்பெனிகளிடமிருந்து பயங்கர எதிர்ப்பு! நாடர் நேராக மக்களிடம் போய்விட்டார். அதிலும் குறிப்பாக அவருடைய அதிரடித் தாக்குதலுக்கு ஆளானது, புகழ் பெற்ற செவர்லே கார். கம்பெனிக்கு உள்ளிருந்தே ஒத்துழைத்த சிலரின் உதவியுடன் நிறைய டெக்னிக்கல் தகவல் திரட்டினார். அவற்றை வைத்து “எந்த வேகத்திலும் தொந்தரவு’ என்று ஒரு புத்தகம் எழுதினார். அதைப் படித்ததும் அதிர்ந்து போனார்கள் மக்கள். அரசாங்கம் என்ன செய்கிறது என்று அதட்ட ஆரம்பித்தார்கள். பொதுக் கருத்து பொங்கி எழுந்தவுடன் சர்க்கார் அவசர அவசரமாகச் சட்டம் போட்டு கார்களின் பாதுகாப்பை முறைப்படுத்தியது. கியர்கள், சஸ்பென்ஷன் என்று கார்களின் எல்லாப் பாகங்களும் திரும்ப வடிவமைக்கப்பட்டன. தனி மனிதரான நாடர் ஒருவரின் முயற்சியால்தான் இன்று அமெரிக்க சாலைகள் இவ்வளவு பாதுகாப்பாக இருக்கின்றன.

ரால்ப் நாடர் டஜன் கணக்கான புத்தகங்களை எழுதிக் குவித்திருக்கிறார். “உங்கள் டாக்டருடன் போராடுவது எப்படி?’ “விமானத்தில் போகிறீர்களா? ஜாக்கிரதை!’, “உங்கள் குழந்தைகளை மெகா கம்பெனிகள் மூளைச் சலவை செய்கிறார்கள்!’, “ஏமாந்து போகாமல் ஷாப்பிங் செய்வது எப்படி?’, “உங்கள் இன்ஷ்யூரன்ஸ் கம்பெனியை ஓட ஓட விரட்டுங்கள்’ என்பவை அவருடைய பிரபலமான புத்தகங்களில் சில. இன்னும் அரசியல், தேர்தல் பற்றித் தெளிவாக நிறைய அலசியிருக்கிறார். அவருடைய வெப் சைட்டில் போய்ப் பார்த்தால், மனிதர் அமெரிக்காவில் முக்கால்வாசிப் பேரிடம் சண்டை போட்டு முடித்துவிட்டார் என்று தோன்றுகிறது.

ஓயாமல் தொல்லை கொடுக்கிறாரே என்று ஜெனரல் மோட்டார் போன்ற கார் தயாரிப்பு கம்பெனிகளுக்கெல்லாம் ஏகக் கடுப்பு. அதற்குள் நாடறிந்த மனிதராகிவிட்டிருந்த நாடரின் நல்ல பெயரை நாசம் செய்வது எப்படி என்று மில்லியன் டாலர் செலவில் தீவிரமாக யோசித்தார்கள். அவர் போகுமிடமெல்லாம் பின் தொடர்ந்து கண்காணிக்க ரகசிய ஏஜெண்டுகள் ராப்பகலாகச் சுற்றி அலைந்தார்கள். ஏதாவது தப்புப் பண்ண மாட்டாரா, கப்பென்று பிடித்துக் கொள்ளலாமே என்று நப்பாசை அவர்களுக்கு. ஒன்றும் சிக்காமல் போகவே ஈனச் சதிகளில் இறங்கினார்கள். விலை மாதர்களை ஏற்பாடு பண்ணி விசுவாமித்திரரின் தவத்தைக் கலைத்த மேனகை போல் அனுப்பி, ஆசாமி செக்ஸ் விவகாரங்களிலாவது சிக்குவாரா என்று பார்த்துவிட்டார்கள். (நாடர் கட்டைப் பிரம்மச்சாரி). வலிய வந்த பெண்ணைப் பார்த்து, கையெடுத்துக் கும்பிட்டுத் திருப்பி அனுப்பிவிட்டார் நாடர். பிறகு தனக்கு எதிராக நடக்கும் சதி வேலைகளைப் புரிந்துகொண்ட அவர், நேராகக் கோர்ட்டுக்குப் போய், தன்னுடைய பிரைவஸியைக் கெடுத்து நிழல் போலத் தொடர்ந்து தொல்லை கொடுக்கிறார்கள் என்று கேஸ் போட்டு நஷ்ட ஈடும் வாங்கிவிட்டார். ஜெனரல் மோட்டார், பப்ளிக்காக நாடரிடம் மன்னிப்புக் கேட்டுவிட்டு ரிவர்ஸ் கியரைப் போட்டுக் கொண்டு ஓட நேர்ந்தது. நஷ்ட ஈடாக வந்த பணத்தில் இளைஞர்களைத் திரட்டி ஒரு பறக்கும் படை அமைத்தார். எங்கெல்லாம் நுகர்வோர் உரிமைகள் பறி போகிறதோ, அங்கெல்லாம் இவர்கள் புகுந்து புறப்பட்டு விலாவரியாகத் தகவல் சேகரித்துக் கொண்டு வருவார்கள். உடனே கோர்ட்தான், கேஸ்தான், புத்தகம்தான், போராட்டம்தான்! நாடர் ஆரம்பித்த நுகர்வோர் இயக்கத்தைப் பற்றியே எவ்வளவோ எழுதலாம். அதுபற்றி மற்றொரு சமயம்.

இப்போது அமெரிக்க ஜனநாயகத்தில் சர்வ சாதாரணமாகப் போய்விட்ட பல உரிமைகள், நாடர் ஆரம்பித்து வைத்தவைதான். சுற்றுச் சூழல் பாதுகாப்பு எஜென்ஸி என்ற அரசாங்க அமைப்பு தோன்றக் காரணமே நாடரின் போராட்டங்கள்தான். இப்போது நம்ம ஊரில் கூடப் பிரபலமாக இருக்கும் தகவல் அறியும் உரிமையை அமெரிக்காவுக்கு அறிமுகப்படுத்தி, அதற்கென்று சட்டம் போட வைத்தவர் -நாடர். அமெரிக்கர்களும் ரொம்பக் காலம் வரை நம்மைப் போல முனிசிபாலிட்டி குழாயில் கால்ரா தண்ணீரைத்தான் குடித்துக் கொண்டிருந்தார்கள். நாடரின் முயற்சியால் 1974-ல் பாதுகாப்பான குடிநீர் சட்டம் வந்தது. குடிக்கிற தண்ணீரில் எத்தனை அளவுக்கு மேல் உப்பு, உலோகங்கள், பாக்டீரியா இருந்தால் ஆபத்து என்று விஞ்ஞானிகளை வைத்துக் கொண்டு விளக்கி, குழம்பின குட்டையைத் தெளியவைத்தவர்- நாடர். அதேபோல் அப்போது கசாப்புக் கடைகளிலெல்லாம் ஒரே ஊழல் மயம். சீக்கு மாடு, சொறி ஆடு எல்லாவற்றையும் வெட்டிக் கலந்து விற்றுக் கொண்டிருந்தார்கள். ஒரு முறை உள்ளே எட்டிப் பார்த்தவர்கள் சைவத்துக்கு மாறிவிடுவார்கள். மாநில சுகாதார இன்ஸ்பெக்டர் வந்து மாமிசக் கூடங்களைச் சோதனை போட்டு சர்டிபிகேட் தர வேண்டும் என்று சட்டம் இயற்ற வைத்தது- நாடர்.

அரசியலிலும் இறங்கி, எலெக்ஷனிலும் நின்று தன்னந்தனியாக விஜயகாந்த் மாதிரி கலக்கினார் நாடர். ஒவ்வொரு ஜனாதிபதி தேர்தலிலும் சுயேச்சையாகப் போட்டியிடத் தவற மாட்டார். 2000-வது வருடத் தேர்தலில் எதிரே ஜார்ஜ் புஷ், அல் கோர் என்று இரண்டு மாபெரும் அரசியல் மலைகள். நாடர் தயங்கவில்லை. “”விற்பனைக்கு அல்ல” (ய்ர்ற் ச்ர்ழ் ள்ஹப்ங்) என்று பொருள் பொதிந்த போர்டு போட்டுக் கொண்டு அரசியல் கடையைத் திறந்தார். ஊர் ஊராகப் பிரசாரம் செய்தார். குடியரசுக் கட்சிக்காரர்கள், ஜனநாயகக் கட்சிக்காரர்கள் இரண்டு பேருமே நாடருக்கு ஓட்டுப் போட்டார்கள். “”இவனும் திருடன், அவனும் திருடன்தானே; ஆகவே நான் ஓட்டெல்லாம் போடும் வழக்கமே இல்லை” என்று வீட்டில் சப்பையாகக் குந்திக் கொண்டு பேப்பர் படித்து விமரிசன மழை பொழிந்து கொண்டிருந்த அறிவு ஜீவிக் கும்பலைக் கூட வெளியே இழுத்துத் தனக்கு ஓட்டுப் போட வைத்தவர் நாடர். இதுவே பெரிய சாதனைதான். மொத்தம் விழுந்த ஓட்டுக்களில் சுமார் மூன்று சதவிகிதம் வாங்கிவிட்டார். அவர் மட்டும் ஓட்டைப் பிளக்கவில்லையென்றால் நிச்சயம் புஷ் வெற்றியடைந்திருக்க முடியாது. பல இடங்களில் புஷ் ஜெயித்த ஓட்டு வித்தியாசத்தை விட நாடருக்கு அதிகம் விழுந்திருந்தது.

டைம் பத்திரிகை செல்வாக்கு மிகுந்த நூறு அமெரிக்கர்களைப் பட்டியலிட்டு அதில் நாடருக்கு ஒரு நாற்காலி கொடுத்திருந்தது. அவரை மையமாக வைத்து நிறைய கார்டூன்கள், டி.வி. காமெடி ஷோக்கள் எல்லாம் உண்டு. ஒரு முறை நாடருக்கு எதிர்க் கட்சி வேட்பாளர் ஜான் கெர்ரியுடன் டி.வி.யில் நேருக்கு நேராக விவாதம் நடத்த ஏற்பாடு செய்திருந்தார்களாம். நிகழ்ச்சி முடிந்தவுடன், சந்திப்பு எப்படி இருந்தது என்று கெர்ரியிடம் கேட்டார்களாம். “”சே…! தப்பிச்சுட்டான். கடைசி நேரத்தில் என்னுடைய துப்பாக்கி வெடிக்காமல் மக்கர் செய்துவிட்டது!” என்று புகைந்தாராம் கெர்ரி.

Posted in activism, America, Analysis, Attorney, Biography, Biosketch, Bush, Capitalism, Consumer Activism, Elections, General Motors, GM, Green Party, John Kerry, Law, Lawsuits, Lawyer, Lebanon, Massachusetts, Order, people, Persons, profile, Ralph Nader | Leave a Comment »

Bihar Government to keep tabs on doctors through a specially-designed website

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 17, 2007

பிகாரில் டாக்டர்களை கண்காணிக்க இணைய தளம்: முதல்வர் நிதீஷ் அறிவிப்பு

பாட்னா, பிப். 17: பிகாரில் அரசு டாக்டர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்களின் அன்றாட பணிகள் என்ன, மருந்து சரியாக கொடுக்கப்படுகிறதா, குறித்த நேரத்தில் அனைவரும் பணிக்கு வருகிறார்களா என்பன உள்ளிட்டவற்றைக் கண்காணிக்க புதிய இணைய தளத்தை அமைக்க உள்ளதாக முதல்வர் நிதீஷ் குமார் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

இந்த இணைய தளம் மூலம் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களும், அரசு மருத்துவமனைகளும் இணைக்கப்படும். இதன்மூலம் நோயாளிகளின் எண்ணிக்கை, அவர்களுக்கு கொடுக்கப்படும் சிகிச்சை, மருந்துப் பொருள்களின் கையிருப்பு ஆகியவற்றை உடனுக்குடன் அறிந்து தக்க நடவடிக்கைகளை எடுக்கமுடியும்.

அனைத்து மருத்துவமனைகளிலும் நவீன ஆய்வகங்கள், கதிரியக்கக் கருவிகள் ஆகியவற்றை வாங்க முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. மருத்துவமனைகளை புதுபிக்கவும், விரிவாக்கம் செய்யவும் விரைவில் நிதி ஒதுக்கப்படும் என்றார்.

4 அரசுக் கல்லூரிகள் உள்பட 13 மருத்துவக் கல்லூரிகளை விரைவில் திறக்க திட்டமிடப்பட்டுள்ளது. மாதேபுரா, நாலந்தா, பெட்டியா ஆகிய பகுதிகளிலும், பாட்னாவில் உள்ள இந்திராகாந்தி மருத்துவ அறிவியல் கழகத்திலும் தலா ஒரு மருத்துவக் கல்லூரி அமைக்கப்படும் என்று சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Posted in activism, Attendance, Bihar, Chief Minister, Complaints, Corruption, doctors, Government, Healthcare, Hospitals, Indian, Instruments, Law, Machines, Madhepura, Malpractice, medical colleges, Medicine, Nalanda, Nalandha, Nitish Kumar, Patna, PHCs, PIL, public health centres, punctuality, sadar hospitals, solutions, state-run hospitals, Tracking, Web, Website | Leave a Comment »

The Right to Information Act (RTI)

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 25, 2006

இந்தியாவில் தகவல் உரிமை பெறும் சட்டம் பயன்களை அளிக்கத் தொடங்கியுள்ளது

தகவல் பெறும் உரிமை வாசகங்கள்
தகவல் பெறும் உரிமை குறித்த விழிப்புணர்வு

இந்தியாவில் உள்ள அரசாங்க அலுவலகங்களுக்குச் சென்று தங்களுக்குத் தேவையான தகவல்களைப் பெறுவது என்பது சாதாரண குடிமக்களுக்ககு இயலாத ஒன்றாக இருந்து வந்தது. ரேஷன் அட்டை, குடிநீர் இணைப்பு, மின் இணைப்பு போன்ற சேவைகளைப் பெறவே பல ஆண்டுகள் காத்திருக்க வேண்டிய நிலை நாட்டின் பல பகுதிகளில் உள்ளது.

லஞ்சம் கொடுத்தால்தான் அரசு அலுவலகங்களில் வேலை நடக்கும் என்கிற எண்ணம் மக்கள் மனதில் வெகுவாக பரவியிருந்த நிலையில்தான் கடந்த ஆண்டு இந்திய அரசால் தகவல் உரிமை பெறும் சட்டம் இயற்றப்பட்டது.

இந்த சட்டத்தின்படி, அரசு அதிகாரிகள் 30 நாட்களுக்குள் சம்பந்தப்பட்டவர்களுக்கு தகவல்களைத் தெரிவிக்க வேண்டும்.

இல்லாவிட்டால் அரசு அதிகாரிகள் அபராதம் செலுத்த நேரிடும். இந்தச் சட்டம் வந்த பிறகு அடித்தளத்தில் இருக்கும் பலர் ஒரு சாதாரண விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, தங்களுக்கு வேண்டிய தகவல்களைப் பெற்றுக் கொள்கின்றனர்.

சில இடங்களில் தங்களுக்கு கிடைக்க வேண்டிய அரசின் நலத் திட்டங்களை அமல்படுத்துவதற்கு மக்கள் இந்தச் சட்டதின் உதவியை நாடியுள்ளனர்.

Posted in activism, BBC, Civic duty, Government, Information, Law, Right to Information Act, RTI | 1 Comment »