Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Aches’ Category

Ayurvedha Corner: Alternate Therapy – Hip hip hooray

Posted by Snapjudge மேல் திசெம்பர் 21, 2007

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: இடுப்புத் தண்டுவடத்தை வலுப்படுத்த…

பேராசிரியர் எஸ். சுவாமிநாதன்

எனது மகளுக்கு 41 வயது ஆகிறது. 5 ஆண்டுகளுக்கு முன் வயலில் நெல் நாற்று கத்தைகளைக் கலைத்துப் போடும்போது பின்புறம் இடுப்பில் தண்டுவடத்திற்கு அருகில் ஒரு நரம்புப் பகுதியில் “கட்’ ஆகிவிட்டது. அலோபதி வைத்தியம் பார்த்து சரியாகவில்லை. ஆழியார் வேதாத்திரி மகரிஷி வைத்தியப் பிரிவில் சில மூலிகைத் தைலம் கொடுத்து தேய்க்கச் சொன்னார்கள். தைலப்பசை இடுப்பில் இருக்கும்போது வலி இல்லை. தைலம் தடவாமல் விட்டுவிட்டால் வலி வந்து விடுகிறது. இதற்கு ஆயுர்வேதத்தில் என்ன மருந்து இருக்கிறது?

முதுகுத் தண்டுவட எலும்புப் பகுதியில் ஓர் எலும்பு அடுத்த எலும்புடன் உராயாமலிருக்கவும், வேகமான நடை, வண்டிப் பயணம், குதித்தல் போன்ற செய்கைகளில் ஏற்படும் அதிர்வலைகளைச் சமாளித்து ஒரு குஷன் போல செயல்படும் வில்லைகள் இருக்கின்றன. உங்கள் மகள் அதிக நேரம் குனிந்து கொண்டு வேலை செய்யும்போது, இந்த வில்லைகளில் அழுத்தம் அதிகரித்திருக்கக் கூடும். அது மாதிரியான நிலையில் பதட்டத்துடன் திடீரென்று திரும்புவது, இடுப்பில் ஏற்படும் வலியால் தடாலென்று தரையில் அமர்வது, குளிர்ந்த தண்ணீரை அதிக அளவில் குடிப்பது; “சில்’ என்று இருக்கும் தண்ணீரில் நிற்பது போன்ற செய்கைகளினால் நீங்கள் கூறும் நரம்பு பிய்த்துக் கொண்ட நிலை ஏற்படலாம். “பதறாத காரியம் சிதறாது’ என்பார்கள். வீட்டில் காலிங்பெல் அடித்தவுடன், விருட்டென்று தலையைத் திரும்பிப் பார்ப்பதன் விளைவாக கழுத்து எலும்பின் வில்லை இடம் பிசகி, கடும் வலியை ஏற்படுத்துவதைப் போல தங்கள் மகளுக்கும் வில்லைப் பகுதி இடுப்பில் பிசகி இருப்பதற்கான சாத்தியங்கள் நிறைய உள்ளன.

மூலிகைத் தைலத்தின் தேய்ப்பால் வலி குறைவதாகக் கூறியுள்ளீர்கள். தேய்க்கவில்லையென்றால் வலி கூடுகிறது. எலும்புகளின் உராய்வைத் தைலப்பசை தடுப்பதை இது காட்டுகிறது. வில்லை செய்ய வேண்டிய வேலையைத் தைலப்பசை செய்கிறது. வில்லை நிரந்தரமாகச் செய்ய வேண்டிய வேலையைத் தைலப்பசை தற்காலிகமாகச் செய்கிறது. வில்லை தன் இருப்பிடத்திற்குத் திரும்பி, தான் இழந்த ஊட்டத்தைப் பெற்று மறுபடியும் எலும்புகளைத் தாங்கி நிறுத்தும் சக்தியைப் பெற பசும்பாலில் வேக வைத்த பூண்டு உதவும். 50 கிராம் தோல் உரித்த சுத்தமான பூண்டு எடுத்து லேசாக நசுக்கி 400 மிலி பசும்பாலுடன் சேர்க்கவும். ஒரு லிட்டர் 600 மில்லி லிட்டர் தண்ணீர் கலந்து அடுப்பில் ஏற்றி, 400 மிலி அதாவது பால் மீதம் ஆகும்வரை கொதிக்கவிட்டு வடிகட்டவும். இந்தப் பாலை, வெதுவெதுப்பாக காலை மாலை வெறும் வயிற்றில் 200 மில்லி லிட்டர் சாப்பிடவும். இதில் தான்வந்திரம் 101 எனும், நெய் மருந்தை 10 சொட்டு கலந்து சாப்பிட மிகவும் நல்லது.

வில்லைகளுக்கு ஏற்படும் ஊட்டத் தடையை மாற்றி போஷாக்கை ஏற்படுத்தும் இம்மருந்தைத் தொடர்ந்து 21 நாள்கள் முதல் 48 நாள்கள் வரை சாப்பிடலாம்.

பாதிக்கப்பட்டுள்ள இடுப்பு தண்டுவடப் பகுதியில் மூலிகைத் தைலத்தைத் தேய்ப்பதைவிட ஊற வைப்பதே நல்லது. ஆயுர்வேத மூலிகைத் தைலமாகிய முறிவெண்ணெய்யுடன் சிறிது தான்வந்திரம் தைலத்தைக் கலந்து இரும்புக் கரண்டியில் சூடாக்கி, சிட்டிகை உப்பு, எண்ணெய்யில் கரைத்த பிறகு பஞ்சில் முக்கி வலி உள்ள இடத்தில் போடவும், சுமார் ஒரு மணிநேரம் ஊறிய பிறகு வேறு ஒரு துணியால் துடைக்கவும். காலை இரவு இருவேளை உணவிற்கு முன்பாக இதுபோலச் செய்யவும்.

ஆஸனவாய் வழியாகச் செலுத்தப்படும் மூலிகைத் தைலமும், கஷாயமும் குடல்காற்றை அடக்கி இடுப்பு எலும்பு மற்றும் வில்லைகளுக்கு வலிவூட்டும் சிகிச்சை முறைகளாகும். இப்படி வாய்வழியாகவும், ஆஸனவாய் வழியாகவும், தோல் வழியாகவும் முதுகு தண்டுவடத்தை பலமாக்கி, வில்லைகளை நேராக்கி, வலியிலிருந்து விடுபடலாம்.

ஆயுர்வேத மருந்துகளில் சஹசராதி கஷாயம், மஹாராஸ்னாதி கஷாயம், க்ஷீரபலா 101 போன்ற மருந்துகள் சாப்பிட நல்லதாகும்.

மூலிகை இலைகளால் ஒத்தடம் கொடுத்தல், பாலில் வேகவைத்த நவர அரிசியினால் தேய்த்து விடுதல், உணவில் பருப்புப் பண்டங்களைக் குறைத்தல், பளுவான பொருட்களைத் தூக்காதிருத்தல், குனிந்த நிலையில் வேலை செய்யாதிருத்தல் போன்றவற்றின் மூலமாகவும் இடுப்புத் தண்டுவடத்தை வலுபடுத்தலாம்.

Posted in Aches, Alternate, Aspirin, Ayurveda, Ayurvedha, Ayurvedha Corner, Ayurvedic, Ayurvetha, Bones, Herbs, Hip, Muscles, Natural, Pain, Sprain, Strain, Therapy, Tylenol | Leave a Comment »

Ayurvedha Corner – Prof. S Swaminathan : Natural Medicines series – How to stregthen the Legs

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 19, 2007


ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: கால்கள் வலுப்பெற…

என் வயது 80. நாற்பது ஆண்டுகளாக மலக்கட்டு உள்ளவன். மூன்று ஆண்டுகளுக்கு முன் மாரடைப்பு ஏற்பட்டது. ஆங்கில மருத்துவமனையில் 15 நாள் இருந்தேன். குணமான பின் இடுப்புக்குக் கீழ் இரு கால்களும் வலுவிழந்துவிட்டது. கோலூன்றி நடக்கின்றேன். கால்கள் பலம்பெற வழிகள் என்ன?

தலைக்கும் காலுக்கும் நரம்பு மூலம் நேர்முகமான ஓர் இணைப்பு இருப்பதை மேல்நாட்டு விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளார்கள். இதைப் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ஆயுர்வேதம் தெளிவுபடுத்தியுள்ளது. இந்த அடிப்படையின் மேல் ஆரோக்கிய பாதுகாப்பு முறைகளை உபதேசித்துள்ளது.

கால்களை அடிக்கடி பரிசுத்தமாய் அலம்பிக் கொள்ளுதல், கால்களுக்கு எண்ணெய் தேய்த்தல், பூட்ஸ் -செருப்பு போன்ற காலணிகளை அணிந்து கொண்டு நடத்தல் போன்ற பாதுகாப்பான நடவடிக்கைகளால் பாதங்கள் பாதுகாக்கப்படுகின்றன. பாதங்களின் பராமரிப்பால் உடலின் மற்ற அங்கங்களுக்கும் பலவிதமான நன்மை ஏற்படுகின்றன. அதிலும் கண்களுக்கு விசேஷமான பலத்தையும் தெளிவையும் அளிக்கின்றன. பாதங்களை இவ்விதம் கவனிக்காமல், எண்ணெய்த் தேய்க்காமல், செருப்பில்லாமல் நடப்பதினால், உடலின் மற்ற அங்கங்களில் கெடுதல் அதிகம் விளையும். சுத்தமான தண்ணீரால் கால்களை அடிக்கடி அலம்புவதால் தலையில் இருக்கும் மூளையின் மேதா சக்தியை வளர்க்கிறது. “”தாரணாவதீ தீ: மேதா”- ஒரு தரம் படித்ததைக் கேட்டதை ஸ்திரமாய் நினைவில் வைத்திருக்கும் புத்தி சக்தி -மேதை.

கால் பெருவிரலின் உள் பக்கவாட்டிலிருந்து மூளைக்கும், கண்கள் முதலிய தலைக்குள்ளிருக்கும் இந்திரியங்களுக்கும் நேர் இணைப்பு கொண்ட நாடி இருப்பை மிகப்பழைய ஆயுர்வேதம் கூறுவதால், நீங்கள் கால்கள் வலுப்பெற, மூளை நரம்புகளை வலுப்பெறச் செய்யவேண்டும். ஆயுர்வேத மூலிகைத் தைலமாகிய க்ஷீரபலா அல்லது சுத்தபலா தைலத்தைத் தலையில் தடவி, சுமார் அரை மணி முதல் ஒரு மணி நேரம் வரை ஊற வைத்து, இடுப்பு கால் பகுதியில் பலா அஸ்வகந்தாதி குழம்பு அல்லது மஹாமாஷ தைலத்தை இளஞ்சூடாக மேலிருந்து கீழாகத் தேய்த்து ஊறவிடவும். மூளைக்கும் கால் நரம்புகளுக்கும் நல்ல பலத்தை இந்த மூலிகைத் தைலங்கள் ஏற்படுத்தித் தரும்.

உடல் நேராக நிமிர்ந்து தள்ளாடாமல் துவண்டு விடாமலிருக்க தலையின் மூளைப் பகுதியைச் சார்ந்த செரிபெல்லம் எனும் பகுதியும், முதுகுத் தண்டு வடமும் முக்கியமானவை. முதுகுத் தண்டுவடத்தின் உள்வட்டப் பாதை சுருங்கினால் ஸ்பைனல் கார்டில் ஏற்படும் அழுத்தம் காரணமாகவும் கால்கள் வலுவின்றி நடக்கும்போது தள்ளாட்டத்தைத் தரும். வாயு தோஷத்தின் குணங்களாகிய வறட்சி, லேசானதன்மை, குளிர்ச்சி, மொரமொரப்பு, நுண்ணியது, அசையும் தன்மை ஆகியவற்றால் வயோதிகத்தில் முதுகுதண்டுவடம் பாதிக்கப்படுவதால் கூன் விழுதல், எலும்பு பலஹீனம், உடல் தள்ளாட்டம் போன்ற உபாதைகள் ஏற்படுகின்றன. பஞ்சமஹா பூதங்களில் வாயுவும் ஆகாசமும் அதிக அளவில் வாயு தோஷத்தில் உள்ளன. அதைச் சரியான அளவில் நிலைநிறுத்த மற்ற மூன்று மஹா பூதங்களாகிய நிலம், நீர், நெருப்பு ஆகியவற்றை அதிகம் கொண்ட இனிப்பு, புளிப்பு, உப்புச் சுவைகளை உணவில் சமச் சீரான அளவில் நீங்கள் சேர்த்துக் கொள்ளவேண்டும். மேலும் மருந்துகளிலும் இந்த மூன்று மஹாபூதங்களை அதிக அளவில் சேர்த்துள்ள விதார்யாதி கஷாயம், அப்ரக பஸ்மம், தசமூல ரஸôயனம் போன்றவற்றைத் தகுந்த ஆயுர்வேத மருத்துவரின் ஆலோசனைப்படி சாப்பிட்டு நீங்கள் கால்கள் வலுப்படும்படி செய்து கொள்ளலாம்.

Posted in Aches, Alternate, arthritis, Ayurveda, Ayurvedha, Ayurvedha Corner, Ayurvedic, Ayurvetha, Body, Calf, diabetes, Head, Heart, heart attack, insulin, Knee, legs, medical, Medicines, Muscles, Natural, oil, Pain, Spasm, Strain, Sugar, Swaminathan | Leave a Comment »

Ayurvedha Corner – Prof. S Swaminathan : Natural Medicines series – How to avoid Exhaustion

Posted by Snapjudge மேல் ஜூன் 29, 2007

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: சோர்வுக்குக் காரணம் என்ன?

பேராசிரியர் எஸ். சுவாமிநாதன், ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி ஆயுர்வேதக் கல்லூரி, நசரத்பேட்டை -602 103 (பூந்தமல்லி அருகே) செல் : 9444441771

எனக்கு வயது 60 ஆகிறது. காலைக்கடன் முடித்தவுடன் நீராகாரம் சாப்பிடுகிறேன். மதியம் 11 மணி சுமார் கேழ்வரகு கஞ்சி சாப்பிடுகிறேன். கைகால் உடம்பு வலி உள்ளது. காலையில் சீக்கிரம் பசி எடுக்கிறது. அடிக்கடி உடல் சோர்வு அடைந்துவிடுகிறது. இது எதனால்?

இரவு படுக்கும்முன் சிறிது சிந்தனை தேவை. இன்று பகல் பொழுதைக் கழித்த விதம், நேற்றிரவைக் கழித்த விதம், இரண்டும் சிந்தனைக்குரியவை. நேரான முறையால் ஏற்பட்ட நன்மை, மன நிறைவு, சீர்கெட்ட முறையால் ஏற்பட்ட உடல்-மனப்பாதிப்பு, இரண்டின் பின்விளைவுகள், இவற்றைச் சீர்தூக்கிப் பார்த்து அதன் அடிப்படையில் நாளைய வாழ்க்கை முறையை அமைத்துக்கொள்ள வேண்டியது, என இவை அனைத்தையும் தினமும் சிந்திக்க வேண்டும். சிந்திப்பது செயலுடன் நெருங்கி இருக்க வேண்டும். செயல் சிந்தனையுடன் நெருங்கி இருக்கவேண்டும். இப்படி நினைப்பவன் துக்கமடைவதில்லை என்று வாக்படர் எனும் முனிவர் குறிப்பிடுகிறார்.

உங்களுடைய உடல்சோர்வு பற்றி அறிவதற்கு கீழ்காணும் கேள்விகள் உதவும்.

1. நீங்கள் செய்யும் பணி உங்கள் சக்திக்கு மீறியதா?

2. தூக்கம் அதிகமா? குறைவா? படுத்தவுடன் தாமதமாகிறதா? அயர்ந்த தூக்கம் ஏற்படுகிறதா? பிறர் நீங்கள் குறட்டை விடுவதாகக் கூறினாலும் நீங்கள் அவ்விதம் தூங்கவில்லை என்று உணர்கிறீர்களா? தூக்கத்தை எது தடைசெய்கிறது?

3. சீக்கிரத்தில் விழிப்பு ஏற்படுகிறதா? விழித்ததும் தெளிவு காண்கிறதா? சோம்பல் தலைவலி, மயக்கம், உடல்வலி வாய் உலர்ந்திருத்தல், கழுத்தில் வலி, மார்பில் வலி, தொண்டையில் இறுக்கம், படபடப்பு, கோபம், தாபம், அழுகை, மனத்தளர்ச்சி, உணர்ச்சிவசப்படுதல், இவற்றில் ஏதாவது ஒன்றா? பல்வேறு காரணங்களா?

நீங்கள் முதுமையில் காலடி எடுத்து வைத்திருப்பதால் உடல் சோர்வு வயது முதிர்ச்சியால் ஏற்படுமானால், ஓரளவு இதற்கு உட்பட்டுத்தான் ஆகவேண்டும்.

மனதைப் பாதிக்கும் நோய்கள் உடலைப் பாதிக்கின்றன. இவற்றில் மனம் கெட்டபின் உடல் கெடுவதாயின் மனநோய்கள் எனவும், உடல் கெட்டபின் மனம் கெடுவதாயின் உடல் நோய்கள் எனவும் ஓரளவு வரையறுக்க முடியும். சில நோய்களை இப்படித் தரம் பிரிக்க முடிவதில்லை. எது முதலில் கெட்டது? உடலா? மனமா? எனத் தெரிந்து கொள்ள முடிவதில்லை. இவற்றை “ûஸகோ úஸôமாடிக்’ நோய்கள் என்று கூறுவர்.

இன்றைய சூழ்நிலையில் கவலைகளுக்கும் நெருக்கடிகளுக்கும் பெரும்பாலானவர் உட்படுகின்றனர். அதனால் உடல் நோய்களுக்கு அளிக்கப்பெறும் மருந்துகள் போதாமல் குழப்பத்தையும் கொந்தளிப்பையும் அடக்கவல்ல மன அமைதி தரும் மருந்துகள் சேர்த்தே தரப்படுகின்றன.

நீங்கள் நீராகாரம், கேழ்வரகு, கஞ்சி போன்ற நல்ல உணவு வகைகளை சாப்பிட்டும் உடல் வலி, உடல் சோர்வு போன்ற உபாதைகளால் அவுதியுறுவதாகத் தெரிவித்திருக்கிறீர்கள். பசியும் நன்றாக எடுக்கிறது. அப்படி என்றால் மனதளவில் உங்களுக்கு ஏதேனும் பிரச்சினை உள்ளதா? மன உணர்ச்சிகளை கொந்தளித்துப் பொங்குமளவிற்கு விட்டுவிடாமல் அவ்வப்போது போக்குக்காட்டி வடித்துவிட முயற்சி செய்யலாம்.

தூக்கம் சரியாக இல்லை என்று தோன்றினால் ஆயுர்வேத மூலிகைத் தைலமாகிய சந்தனாதி தைலம் தலைக்குத் தேய்த்து ஒரு மணி நேரம் ஊறிக் குளிக்கலாம். உள் மருந்தாக மஹாகல்யாணககிருதம் எனும் நெய் மருந்தை 10மிலி காலை மாலை வெறும் வயிற்றில் சாப்பிடவும். உடல் வலி நீங்க தசமூலம் கஷாயம் காலை, மாலை வெறும் வயிற்றில் 60மிலி மேலுள்ள நெய் மருந்துடன் கலந்து சாப்பிடலாம்.

சோர்வை அளவிடமுடியாது. எக்ஸ்ரே, ரத்தப்பரிசோதனை முதலியவற்றால் இதனைக் கணக்கிட முடியாது. நீங்கள் உடல் சுறுசுறுப்பிற்காக வில்வ இலை, கருந்துளசி இலை, மஞ்சள் பூவுள்ள கரிசலாங்கண்ணி இவற்றில் ஒன்றை அரைத்து விழுதாக்கி 5-10 கிராம் அளவு எடுத்து பாலுடன் கலந்து காலையில் சாப்பிடவும்.

Posted in Aches, Active, Alternate, Ayurveda, Ayurvedha, Ayurvedha Corner, Ayurvedic, Ayurvetha, Bodyaches, Boredom, Brain, Cures, energy, Exhausted, Exhaustion, fatigue, Fresh, Health, Healthcare, Hunger, Hungry, Medicines, Pain, Positive, Strength, Thinking, Tired, weary | Leave a Comment »