Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Accident’ Category

Accident triggers riots, curfew in Taj Mahal city of Agra: Truck crushes four

Posted by Snapjudge மேல் ஓகஸ்ட் 29, 2007

ஆக்ராவில் வன்முறை

வன்முறையாளர்கள் பல வண்டிகளை தீயிட்டுக் கொளுத்தினர்
வன்முறையாளர்கள் பல வண்டிகளை தீயிட்டுக் கொளுத்தினர்

உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவில் புதன்கிழமை காலை, நான்கு இளைஞர்கள் சாலை விபத்தில் உயிரிழந்ததைத் தொடர்ந்து, பொதுமக்கள் வன்முறையில் ஈடுபட்டதில் ஒருவர் உயிரிழந்தார். போலீசார் உள்பட ஐம்பதுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதையடுத்து, 6 பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இஸ்லாமியர்களின் ஷபே –பராத் நிகழ்ச்சியில் பங்கேற்றுத் திரும்பியபோது, நான்கு இளைஞர்கள் லாரி மோதி உயிரிழந்தனர். இதையடுத்து, அப்பகுதி பொதுமக்கள் ஆத்திரமடைந்து, வன்முறையில் ஈடுபட்டதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.

தீயணைப்புப் படை வாகனங்கள், போலீஸ் ஜீப் உள்பட முப்பதுக்கும் மேற்பட்ட வாகனங்களை வன்முறையாளர்கள் தீயிட்டுக் கொளுத்தினார்கள். அத்துடன், போலீசார் மீது சரமாரியாக கல்வீச்சு தாக்குதல் நடத்தினார்கள். சில தொழிற்சாலைகளுக்கும் தீ வைக்கப்பட்டது.

உலகம் முழுவதும் இருந்து சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் தாஜ்மஹால், ஆக்ரா நகரில்தான் உள்ளது. அங்கும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பதால் சுற்றுலாப் பயணிகள் தாங்கள் தங்கியிருக்கும் ஹோட்டலை விட்டு வெளியே செல்ல வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டிருப்பதாக அங்கிருக்கும் பத்திரிகையாளர்கள் கூறுகிறார்கள்.

ஆனால், சுற்றுலாப் பயணிகளுக்கு எந்தவிதக் கட்டுப்பாடும் விதிக்கப்படவில்லை என போலீஸ் அதிகாரிகள் கூறுகிறார்கள்.

——————————————————————————————-

லாரி மோதி 4 இளைஞர்கள் இறந்ததால் ஆக்ராவில் வன்முறை: துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் சாவு

ஆக்ரா, ஆக.30: உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவில் நான்கு இளைஞர்கள் புதன்கிழமை அதிகாலை லாரி மோதி இறந்த சம்பவத்தையடுத்து ஏற்பட்ட வன்முறையில் 12 லாரிகள் உள்பட 22 வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டன. நிலைமையைக் கட்டுப்படுத்த போலீஸôர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் இறந்தார்.

நகரில் 8 போலீஸ் நிலையங்களுக்கு உள்பட்ட பகுதிகளில் காலவரையற்ற ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

சாலை விபத்தில் இறந்த 4 இளைஞர்கள்: சுபாஷ் பூங்கா பகுதி அருகே 4 இளைஞர்கள் மீது லாரி மோதியதில் அவர்கள் இறந்தனர். சந்த், கம்ரான், வாஸிம், வாஹித் ஆகியோர் அந்த இளைஞர்கள். சம்பவத்தையடுத்து ஆத்திரமடைந்த கும்பல் நடத்திய தாக்குதல் வன்முறையில் முடிந்தது.

வன்முறையாளர்கள் கடைகளுக்குத் தீ வைத்தனர். இரண்டு ஆலைகளுக்கும் அவர்கள் தீ வைத்தனர். வாகனங்களை அடித்து நொறுக்கினர். 20-க்கும் மேற்பட்ட வாகனங்களுக்கு தீ வைத்தனர். இதில் போலீஸ், தீயணைப்பு வாகனங்களும் அடங்கும்.

5 அதிகாரிகள் உள்பட 50 போலீஸôர் காயம்: வன்முறையாளர்கள் தாக்குதலில் 50 போலீஸôர் காயம் அடைந்தனர். போலீஸ் நிலையம் ஒன்றில் புகுந்த கும்பல் போலீஸôரை தாக்க முயன்றது.

வன்முறை கும்பலைக் கலைக்க வானை நோக்கி போலீஸôர் துப்பாக்கியால் சுட்டனர். அப்போது குண்டு பட்டதில் ஒருவர் இறந்தார். போலீஸ் தடியடி பிரயோகம் செய்ததில் இருவர் படுகாயம் அடைந்தனர்.

மதுரா, அலிகார், பெரோஸôபாத் உள்ளிட்ட அருகிலுள்ள மாவட்டங்களிலிருந்து போலீஸôர் வரவழைக்கப்பட்டனர். ஆக்ராவில் 8 போலீஸ் நிலையங்களுக்கு உள்பட்ட பகுதியில் காலவரையற்ற ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

சுற்றுலா பயணிகள் அவதி: சுற்றுலாப் பயணிகள் தாஜ்மஹால் அருகேயுள்ள ஹோட்டல்களில் தங்கி யுள்ளனர். அந்தப் பகுதியும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட பகுதியில் வருகிறது. ஹோட்டலை விட்டு தாங்கள் குறிப்பிடும் வரை வெளியே வர வேண்டாம் என்று போலீஸôர் அவர்களை கேட்டுக் கொண்டுள்ளனர்.

நஷ்டஈடு: வன்முறை சம்பவத்தில் இறந்தோர் குடும்பத்துக்கு ஒரு லட்ச ரூபாயும், படுகாயமடைந்தோருக்கு தலா ரூ.25 ஆயிரமும் நஷ்டஈடு வழங்கப்படும் என்று மாநில அரசு அறிவித்துள்ளது.

“விபத்தில் நான்கு இளைஞர்கள் இறந்த சம்பவத்துக்கு போக்குவரத்து நிர்வாக குறைபாடே காரணம். கனரக வாகனங்கள் செல்ல தடைவிதிக்கப்பட்ட பகுதியில் குறிப்பிட்ட லாரி வந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. குற்றவாளிகள் தண்டிக்கப்படுவர்’ என்று உள்துறை உயரதிகாரி ஜே.என்.சேம்பர் லக்னௌவில் நிருபர்களிடம் தெரிவித்தார்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி, கல்லூரிகளுக்கு நகர நிர்வாகம் மூன்று நாள் விடுமுறை அறிவித்துள்ளது. அமைதி காக்குமாறு மதத் தலைவர்கள் மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Posted in Accident, Agra, Aligar, Aligarh, Curfew, Ferozabad, Ferozebad, Hindu, Hinduism, Islam, Lorry, Madhura, Madura, Muslim, Politics, Religion, riots, Taj, Truck, UP, Violence | Leave a Comment »

State of the Justice System in India (BMW case: NDTV exposes prosecution-defence nexus)

Posted by Snapjudge மேல் ஜூலை 9, 2007

வழக்கறிஞர்களுக்கு “தண்டனையே’ கிடையாதா?

டி.எஸ்.ஆர். சுப்பிரமணியன்

ஒரு சாலை விபத்து (பி.எம்.டபிள்யூ.) வழக்கில் அரசுத் தரப்பு வழக்கறிஞரும், எதிரியின் வழக்கறிஞரும் சேர்ந்து சாட்சியத்தைக் குலைப்பது பற்றி பேசிக்கொண்டதை என்.டி.டி.வி. சில வாரங்களுக்குமுன் அம்பலப்படுத்தியதைப் பார்த்திருப்பீர்கள்.

அந்த வழக்கு 9 ஆண்டுகளுக்கு முன்னால் தில்லியில் நடந்த சாலை விபத்து பற்றியது. கோடீஸ்வரக் குடும்பத்தைச் சேர்ந்த இளைஞர் குடிபோதையில் காரை ஓட்டி, பிளாட்பாரத்தில் உறங்கிக் கொண்டிருந்த சிலரைக்கொன்றது பற்றியது அந்த வழக்கு. அவர் ஓட்டிய கார் பி.எம்.டபிள்யூ. என்ற வெளிநாட்டுக் கார். இந்தச் சம்பவத்தை நேரில் பார்த்த ஒரே சாட்சி குல்கர்னி என்பவர். அரசுத் தரப்பு ஏதோ காரணத்துக்காக அவரை சாட்சிக் கூண்டில் ஏற்றவே இல்லை!

எதிரியின் வழக்கறிஞர் (பிரபலமான வழக்கறிஞர், காங்கிரஸ்காரரும் கூட), அரசுத் தரப்பு வழக்கறிஞர் (இவரும் பிரபலமான வழக்கறிஞர்தான். ஒரு ரூபாய் கட்டணம் மட்டுமே போதும், குற்றவாளிகளைக் கூண்டில் ஏற்றுவேன் என்று தானாக முன்வந்தவர்) இருவரும், முக்கிய சாட்சியுடன் ஏதோ அன்னியோன்னியமாகப் பேசிக்கொண்டிருந்ததை என்.டி.டி.வி.யின் ரகசிய கேமரா படம் பிடித்துக் காட்டியது. அரசுத் தரப்பு வழக்கறிஞர், சாட்சியாக இருப்பவருக்கு “”புளூ லேபிள்” ஸ்காட்ச் விஸ்கியைக் காட்டி, குடிக்கிறீர்களா என்று கேலியாகக் கேட்டுக் கொண்டிருந்தார். எதிரியின் வழக்கறிஞரோ, அந்த சாட்சியை ரகசியமாகச் சந்தித்துப் பேசிக்கொண்டிருந்தார்.

இந்தக் காட்சிகள் பல வட்டாரங்களிலும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தின. வழக்கறிஞர்கள், பணத்துக்காக எதையும் செய்வார்கள் என்பதை அவை உணர்த்தின. சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தொலைக்காட்சியின் கலந்துரையாடலில் கலந்து கொண்ட தில்லி பார் கவுன்சில் தலைவர் மனான் அறிவித்தார். அதெல்லாம் நடக்காது, இரண்டு வழக்கறிஞர்கள் மீதும் நடவடிக்கை இருக்காது, எல்லாவற்றையும் பூசி மெழுகிவிடுவார்கள் என்று அதே நிகழ்ச்சியில் நான் முடிவுரையாகத் தெரிவித்தேன். அந்த இருவரையும் சில நாள்களுக்கு மட்டும் “சஸ்பெண்ட்’ செய்து, மீண்டும் பணிக்குச் செல்ல அனுமதித்துவிட்டனர்.

அந்த வழக்கின் முழு விவரமும் என்னிடம் கிடையாது – இரு வழக்கறிஞர்களும் அவர்களுடைய பதவிக்குப் பொருந்தாத எதையும் செய்தார்களா என்பதெல்லாம் எனக்குத் தெரியாது. எதிர்காலத்தில் இதுபற்றிய சுவாரசியமான தகவல்கள் வரக்கூடும். இப்போது நம்முடைய கவலை இந்த வழக்கு எப்படிப் போகிறது என்பதல்ல.

நம் நாட்டில் எந்தத் தொழில் செய்கிறவர் ஆனாலும் அவர் மக்களால் அலசப்படுகிறார். அரசு அதிகாரிகள், டாக்டர்கள், பொறியாளர்கள் என்று அனைத்து தரப்பாரும் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் மக்களால் விமர்சிக்கப்படுகிறார்கள். அதே போல வழக்கறிஞர்கள் சமூகத்தை யாரும் விமர்சனக் கண்ணோட்டத்தோடு பார்ப்பதில்லை. வழக்கறிஞர்களின் குணாதிசயங்கள், தொழில்நடத்தும் விதம், பொதுவாக அவர்கள் நடந்துகொள்ளும் முறை ஆகியவை குறித்து ஊடகங்களும், பொதுவிஷயங்களில் அக்கறை உள்ள அமைப்புகளும் வெகு நெருக்கத்திலிருந்து ஆராய வேண்டும்; அந்த ஆய்வு முடிவை மக்கள் அறிய வெளியிட வேண்டும்.

என்னுடைய இளவயதில் மாவட்டங்களில் மாஜிஸ்திரேட்டுகளுடன் எனக்கு முதல் பரிச்சயம் ஏற்பட்டது. உத்தரப் பிரதேசத்தில் கிராமங்களுக்குச் செல்லும்போது அங்குள்ள மக்கள் வழக்கறிஞர்கள் பற்றிச் சொன்னதன்மூலம் பல விஷயங்கள் தெரிந்தன. வட இந்தியாவில் கிட்டத்தட்ட எல்லா வீடுகளிலும் வீடு, நிலம் தொடர்பாக ஏதாவது ஒரு வழக்கு நீதிமன்றத்துக்குச் சென்றது. ராணுவத்திலோ, நகரில் கிடைக்கும் சிறு வேலைகளிலோ கிடைத்த சொற்ப வருவாயை மக்கள் இந்த வழக்குகளுக்காகச் செலவிட்டனர். அதாவது அவை வழக்கறிஞர்களின் பைகளை நிரப்பின.

சாதாரண வழக்குகூட ஆண்டுக்கணக்கில் நீடித்தன, அல்லது நீட்டிக்கப்பட்டன. சில வழக்குகளில் வாதி, பிரதிவாதியின் மறைவுக்குப் பிறகு கூட வழக்குகள் பைசலாகாமல் நீடித்தன. உள்ளூர் போலீஸôர், வருவாய்த்துறை அதிகாரிகளுக்கும் இவற்றில் பங்கு இருந்தது. நம் ஜனநாயகத்தில் எல்லா துறைகளுக்கும், நடைமுறைகளுக்கும் உள்ள சாபக்கேடு இதற்கும் வந்து சேர்ந்தது, அதாவது பணக்காரர்களுக்குச் சாதகமாகவே நீதிமன்ற நடவடிக்கைகள் அமைந்துவிடுகின்றன.

வழக்குகளில் வாய்தா வாங்குவதிலேயே திறமைசாலியான ஒரு வழக்கறிஞர் குறித்து, வழக்கு விசாரணையின்போது நீதிபதியே சுட்டிக்காட்டினாராம்; அதையே அவர் தனக்கு அளித்த சான்றிதழாகக் கருதி பிற வழக்கு விசாரணையின்போதும் குறிப்பிட்டு வாய்தா வாங்கிவிடுவாராம். இதை அந்த தொலைக்காட்சி கலந்துரையாடலில் பேசிய தில்லி பார் கவுன்சில் தலைவர் குறிப்பிட்டார்.

நம் நாட்டு நீதிமுறை குறித்து எழுதிய புத்தகத்திலும் இதைப்பற்றி நான் குறிப்பிட்டிருக்கிறேன். வழக்கறிஞர்கள், நீதிமன்றம் ஆகியவற்றுக்குத் தரப்படும் முக்கியத்துவம் வழக்கில் சம்பந்தப்படும் ஏழைகளுக்குத் தரப்படுவதில்லை.

தில்லி தந்தூர் வழக்கில், முக்கிய எதிரிக்கு உயர் நீதிமன்றம் மரண தண்டனை வழங்கியபோது மக்களிடம் நிம்மதியும் மகிழ்ச்சியும் ஏற்பட்டது. கொலை நடந்து 8 அல்லது 9 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த வழக்கில் ஒரே சாட்சி ஒரு போலீஸ்காரர்தான். அவருக்கு சம்பளம்கூட அதிகம் இல்லை. இந்த இடைப்பட்ட காலத்தில் அவருக்கு எவ்வளவோ பணத்தாசை காட்டியிருக்க முடியும், அல்லது தண்ணியில்லாத காட்டுக்கு மாற்றிவிடுவோம் என்று மிரட்டியிருக்க முடியும். எது எப்படி இருந்தாலும் நீதிக்காக நிலைகுலையாமல் நின்ற அந்த ஒரே சாட்சி காரணமாகத்தான் எதிரிக்கு தண்டனை விதிக்க முடிந்தது. இதில் கேள்வி என்னவென்றால், எப்படி ஒரு சாதாரணமான வழக்கு இத்தனை ஆண்டுகளுக்கு இழுத்துக் கொண்டே போகிறது என்பதுதான்.

அமெரிக்காவில் நியூயார்க், வாஷிங்டன் நகரங்கள் மீது பயங்கரவாதிகளின் விமானத் தாக்குதல் நடந்தவுடன் அரிசோனா மாநிலத்தில் இந்திய சீக்கியர் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டார். 6 மாதங்களுக்குள் வழக்கு விசாரணை நடந்து முடிந்து தாக்கியவருக்கு அதிகபட்ச தண்டனை விதிக்கப்பட்டது. நம் நாட்டிலும் இப்படி ஏன் விரைந்து வழக்குகளை முடிக்கக் கூடாது? கொலைவழக்காக இருந்தால் ஓராண்டுக்குள் விசாரித்து தீர்ப்பு வழங்க வேண்டும் என்பதை ஏற்கிறீர்களா இல்லையா? மூத்த அரசியல்வாதி அல்லது அதிகாரி என்றால் அவர் மீதான லஞ்ச, ஊழல் வழக்கையும் ஓராண்டுக்குள் விசாரித்துத் தண்டிக்க வேண்டும் என்பதை ஏற்பீர்களா?

வழக்கறிஞர்களை மேற்பார்வையிடவோ, கண்காணிக்கவோ யாரும் இல்லை என்ற எண்ணமே சில வேளைகளில் தோன்றுகிறது. பார் அசோசியேஷன் என்பது வழக்கறிஞர்களுடன் தோழமை உள்ள அமைப்பு. பார் கவுன்சில் என்பது வழக்கறிஞர்கள் பணி சட்டத்துடன் தொடர்புள்ளது. அது வழக்கறிஞர்களின் வேலையில் ஒழுங்கையும் கட்டுப்பாட்டையும் கொண்டுவர எப்போதாவது முயற்சி செய்துள்ளதா? வழக்கறிஞர்களைக் கண்காணிப்பதை நீதிமன்றங்கள் செய்ய முடியும், ஆனால் அவையும் அப்படி எதையும் செய்வதில்லை.

1960கள் வரை நீதித்துறையும் நிர்வாகத்துறையும் தனித்தனியே பிரிக்கப்படவில்லை. அப்போது மாவட்ட நிர்வாகம் வழக்குகளைக் கண்காணித்து வந்தது. எத்தனை வழக்குகள் தாக்கலாகின, எத்தனை விசாரிக்கப்பட்டன, எத்தனையில் இறுதித் தீர்ப்பு வந்தது என்று தொடர்ந்து கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இரண்டும் தனித்தனியாக பிரிக்கப்பட்டவுடன் நிர்வாகம், கண்காணிப்பு வேலையை விட்டுவிட்டது.

டிரான்ஸ்பேரன்சி இன்டர்நேஷனல் என்ற அமைப்பு சமீபத்தில் வெளியிட்ட ஒரு அறிக்கையில், இந்தியாவில் நீதித்துறையின் கீழ் நிலையில் ஊழல் இருக்கிறது, இதன் மதிப்பு ஆண்டுக்கு ரூ.25,000 கோடி என்று தெரிவித்தது.

வழக்கறிஞர் தொழிலில் என்ன நடக்கிறது என்று அக்கறை காட்டப்படுவதற்கான நேரம் வந்துவிட்டது. இது வழக்கறிஞர்களின் எதிர்காலத்துக்கு மிகவும் நல்லது. சூரிய வெளிச்சம் எங்கு பாயவில்லையோ அங்கு பாச்சைகளும் கரப்பான்களும் பெருகி வளர்கின்றன. சூரிய ஒளி பட்டால் இவையெல்லாம் விலகி அங்கே தூய்மை நிலவும்.

(கட்டுரையாளர்: முன்னாள் மத்திய அமைச்சரவைச் செயலர்.)

——————————————————————————————–

தேவை, நீதித்துறை சீர்திருத்தம்

உ .ரா. வரதராசன்

நீதிமன்ற அவமதிப்பு வழக்கொன்றில் தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்ற நீதிபதிகள் இருவர் தெரிவித்துள்ள கருத்து ஆழமாகச் சிந்திக்க வேண்டிய ஒன்று.

“”தரக்குறைவாகவும், அவமதிக்கும் வகையிலும் நீதிபதிகளை வசைபாடுவது, சிலரது பொழுதுபோக்காக உள்ளது. இத்தகைய அறிக்கைகள் நீதிமன்றங்களை அவதூறுக்கு உள்ளாக்கி, அவற்றின் எதிர்காலத்தை மதிப்பிழக்கச் செய்ய முற்படுகின்றன; இவற்றை அனுமதிக்கவே முடியாது”, என்று கூறி, சம்பந்தப்பட்ட வழக்கில் நீதிமன்ற அவமதிப்பைச் செய்த நபருக்கு இரண்டு மாதச் சிறைத்தண்டனையை அந்த நீதிபதிகள் வழங்கினர். அதே தீர்ப்பில், கண்ணியமான வார்த்தைகளில் ஒரு நீதிமன்றத்தின் கருத்தை நியாயமான முறையில் விமர்சிப்பதைப் பற்றி கேள்வி கேட்க முடியாது என்றும் தெளிவுபடச் சொல்லப்பட்டது.

இந்தத் தீர்ப்பு, நாளிதழ்களில் வெளியான அதே நாளில், உலக ஊழல் அறிக்கை – 2007 என்ற ஓர் ஆவணத்தை இணையதளத்தில் காண நேரிட்டது. சர்வதேச ஊடுநோக்கி ( பழ்ஹய்ள்ல்ஹழ்ங்ய்ஸ்ரீஹ் ஐய்ற்ங்ழ்ய்ஹற்ண்ர்ய்ஹப்) என்ற அமைப்பின் அறிக்கை நீதித்துறையில் உள்ள ஊழலைப் பற்றியது.

உலகில் இன்று நிலவும் ஊழலின் பரிமாணம் மலைக்க வைப்பதாக உள்ளது. உலகம் முழுவதிலும் ஊழலில் கசிந்து விரயமாகும் நிதியைக் கணக்கிட்டால் அது ஆண்டொன்றுக்கு 30 லட்சம் கோடி டாலர்கள் என்ற வரம்பைத் தாண்டுகிறது என்று ஒரு கணிப்பு தெரிவிக்கிறது. இது ஒருவேளை மிகைப்படுத்தப்பட்ட மதிப்பீடாக இருக்கலாம். ஆனால் உலக நாடுகள் அனைத்திலும் அரசியல், சமூகம், பொருளாதாரம், பண்பாடு, நீதி ஆகிய அனைத்துத் துறைகளையும் இந்த ஊழல் கரையான் செல்லரித்துக் கொண்டிருக்கிறது என்ற உண்மை கசப்பானதும் கவலைக்குரியதுமாகும்.

இதில் நீதித்துறையில் ஊழல் என்பது, மற்ற அனைத்துத் துறைகளையும்விட அபாயகரமானது. மற்ற துறைகளில் நிலவும் ஊழலால் பாதிக்கப்படுகிற எவரும், அவற்றுக்கு எதிராக நீதித்துறையின் தலையீட்டையே நாடுவது இயல்பானது. ஆனால், பரிகாரம் தேடிப் போகும் நீதி தேவதையின் சன்னிதானமே ஊழல் கறை படிந்து காணுமானால், வேறு புகலிடம் ஏது?

ஒருவர் தமக்களிக்கப்படும் அதிகாரத்தைத் தனிப்பட்ட ஆதாயங்களுக்காகத் தவறாகப் பயன்படுத்தும் எந்த நடவடிக்கையும் ஊழலேயாகும். அந்த ஆதாயங்கள் பணமாகவோ, பொருளாகவோ, வேறுவகைப்பட்டதாகவோ இருக்கலாம். நீதித்துறை ஊழல் என்பது நீதி பரிபாலன முறைமைக்கு உள்ளிட்டு செயல்படும் எவரும், அதன் பாரபட்சமற்ற செயல்பாட்டுக்குக் குந்தகம் விளைவிக்கும் செல்வாக்கு செலுத்துவதன் சகல அம்சங்களையும் உள்ளடக்கியதே! இதை அளவிட்டு அறிவதற்காக 62 நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வின் முடிவுகளே இந்த உலக ஊழல் அறிக்கையில் விரிவாக இடம் பெற்றுள்ளன.

நீதித்துறையில் ஊழல் என்பது இரண்டு வகைப்படும். ஒன்று, நீதித்துறையின் செயல்பாட்டில் அரசியல் தலையீடுகளால் நிகழ்வது; மற்றது, நீதித்துறையின் பல மட்டங்களில் புகுந்துவிடும் லஞ்ச லாவண்யம் காரணமாக நடைபெறுவது. நீதித்துறையை அணுகும்போது, நியாயமான பாரபட்சமற்ற தீர்ப்பைப் பெறுகிற அடிப்படை மனித உரிமையை இந்த இருவகை ஊழலும் மறுக்கிறது. எந்த ஒரு நாட்டிலும் நீதித்துறையில் ஊழல் மலிந்தால், அங்கே ஆட்சி அதிகாரத்தின் அனைத்து மட்டங்களிலும் ஊழல் தலைவிரித்தாடுவது தவிர்க்க முடியாததாகி விடும். “”ஊழலா, அது எங்கள் நாட்டில் வாடிக்கையாகிப் போய்விட்ட விவகாரம்” என்று மக்கள் சகித்துக் கொள்ளும் நிலை ஏற்பட்டு விடும்.

தகுதியின் அடிப்படையில் நீதிபதிகள் நியமனம் நடைபெறவில்லையானால், அங்கே நீதித்துறையில் நாணல்போல் வளைந்து, ஊழலுக்கு இடமளிக்கும் நீதிபதிகள் இடம்பெறுவது இயல்பாகிவிடும்.

நீதிபதிகளுக்கான சம்பளம், ஊதிய நிலைமைகள், பாதுகாப்பற்ற சூழல், இடமாற்றல் அச்சுறுத்தல் போன்றவையும் நீதிபதிகளையும் நீதிமன்ற அலுவலர்களையும் ஊழல் நடைமுறைகளுக்கு இட்டுச் செல்லும்.

தவறிழைக்கும் நீதிபதிகளைத் தண்டனைக்கு உட்படுத்தவோ, பதவிநீக்கம் செய்யவோ உரிய ஏற்பாடுகள் இல்லையென்றாலும், நீதித்துறை ஊழலுக்கு உறைவிடமாகி விடும்; நேர்மையாகச் செயல்படும் நீதிபதிகளை ஆட்சியாளர்கள் விருப்பம்போல் பந்தாடும் சூழலும் அதே நிலைமைக்கே இட்டுச் செல்லும்.

நீதிமன்ற நடவடிக்கைகள் ஒளிவு மறைவு அற்றதாகவும், ஊழல் நடைமுறைகளைக் கண்காணிக்கிற ஏற்பாட்டுக்கு இடமில்லாமலும் அமையும் நிலை, நீதித்துறையை ஊழல் அரிப்பதற்கு வாய்ப்பாகி விடும்.

இந்த நான்கு அம்சங்களிலும், நீதித்துறையில் ஊழல் பரவாமல் தடுக்க, பல்வேறு பரிந்துரைகளை உலக ஊழல் அறிக்கை பட்டியலிட்டுள்ளது. இந்தியாவில் நீதித்துறை ஊழல் பற்றிய ஓர் ஆய்வும் இந்த அறிக்கையில் இடம்பெற்றுள்ளது. 2005ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட ஒரு கருத்தாய்வில் வெளிவந்த சில விவரங்களை இந்த அறிக்கை தொகுத்தளிக்கிறது.

“நீதித்துறை ஊழலின்றி செயல்படுகிறதா?’ என்ற கேள்விக்கு “இல்லை’ என்று பதிலளித்தவர்கள் 85 சதவிகிதம் பேர்! நீதித்துறை ஊழல் காரணமாகக் கைமாறும் தொகை ஆண்டுக்கு ரூ. 2,360 கோடி என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியாவில் நீதித்துறை ஊழலுக்குப் பிரதான காரணங்களாக அமைவது, வழக்கு விசாரணையில் நேரிடும் காலதாமதம், நீதிபதிகளின் எண்ணிக்கைக் குறைவு, சிக்கலான நீதிமன்ற நடைமுறைகளேயாகும்.

2006ஆம் ஆண்டு பிப்ரவரி மாத நிலவரப்படி, உச்ச நீதிமன்றத்தில் 33,635 வழக்குகள்; உயர் நீதிமன்றங்களில் 33,41,040 வழக்குகள்; நீதிமன்றங்களில் 2,53,06,458 வழக்குகள் நிலுவையில் இருந்தன. 1999ஆம் ஆண்டில் நடைபெற்ற ஒரு மாநாட்டில் தெரிவிக்கப்பட்ட கருத்து – “”இனி புதிதாக ஒரு வழக்குகூடப் பதிவு செய்யப்படவில்லை என்றாலும்கூட, நிலுவையில் உள்ள வழக்குகளை விசாரித்து முடிக்க இன்னும் 350 ஆண்டுகள் பிடிக்கும்” என்பதாகும்!

இந்த நிலைமையில் வழக்கு விசாரணையைத் துரிதப்படுத்துவதற்கான குறுக்கு வழியாக ஊழல் இடம்பெற்று வருகிறது.

இந்தியாவில் சராசரியாக பத்து லட்சம் நபர்களுக்கு 12 அல்லது 13 நீதிபதிகள் என்ற எண்ணிக்கையிலேயே, நீதித்துறை நியமனங்கள் உள்ளன. இதே பத்து லட்சம் நபர்களுக்கு, அமெரிக்காவில் 107 நீதிபதிகள்; கனடாவில் 75; பிரிட்டனில் 51 என்ற அளவில் உள்ளனர். இதனால் தீர்ப்புகள் தாமதமடைகின்றன. நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்ற உத்தரவு இன்னும் நிறைவேற்றப்படவில்லை.

“தாமதித்து வழங்கிடும் நீதி, மறுக்கப்படும் நீதி’. ஆனால், சட்டத்தை மீறுகிறவர்களுக்கும், குற்றங்களைத் தொழிலாகக் கொண்டு செயல்படுபவர்களுக்கும், வழக்குகளின் தாமதம் ஒரு வரப்பிரசாதமாக அமைந்து விடுகிறது! நீதிபதிகளுக்கான “நீதித்துறை நன்னடத்தைக் கோட்பாடுகள்’ சர்வதேச அளவில் உருவாக்கப்பட்டது இந்தியாவில்தான்! 2002ஆம் ஆண்டு பெங்களூரில் நடைபெற்ற ஒரு சர்வதேச மாநாட்டில் உருவான இந்தக் கோட்பாடுகள்தான், பின்னர் 2006ஆம் ஆண்டில் ஐ.நா. சபை அளவில் ஏற்றுக் கொள்ளப்பட்டன. ஆனால், இந்தக் கோட்பாடுகள் நீதிபதிகளின் சுயவிருப்பத்திற்கிணங்கப் பின்பற்றப்பட வேண்டியவை மட்டுமே.

இதுமட்டுமல்ல, நீதித்துறை சீர்திருத்தம் தொடர்பான குழு அறிக்கைக்கும், நீண்ட நெடிய விவாதங்களுக்கும் நம் நாட்டில் பஞ்சமில்லை. ஆக்கபூர்வமான நடவடிக்கைக்கு அறிகுறியே தென்படவில்லை!

நீதிமன்ற அவமதிப்பு அனுமதிக்கப்பட முடியாததுதான்; ஆனால், நீதித்துறையின் மதிப்பை உயர்த்துவது எப்படி, எப்போது?

(கட்டுரையாளர்: தேசிய செயலர் சி.ஐ.டி.யூ)

————————————————————————————————–

நீதிதேவன் மயக்கம்
Dinamani – Op-ed (September 05 2007)

“”மக்களுக்கு நீதித்துறையின் மீது அதிருப்தி அதிகரித்து வருகிறது என்பது மட்டுமல்ல, தீர்வு காணப்படாமல் தேங்கிக் கிடக்கும் வழக்குகளால் நீதித்துறை மீதான நம்பிக்கையும் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. மக்களுக்கு நீதிபதிகள் மீதும் நீதித்துறையின் மீதும் மதிப்பும் மரியாதையும் நம்பிக்கையும் ஏற்பட வேண்டுமானால், வழக்குகள் அதிக காலதாமதம் இன்றி விசாரிக்கப்பட்டு தீர்ப்பு வழங்கப்பட வேண்டும்”~இப்படி சொல்லியிருப்பது அரசியல்வாதியோ, சமூக ஆர்வலரோ, பத்திரிகையாளரோ அல்ல; நீதிபதிகள்.

வித்தியாசமான, அதேசமயம் மக்களின் மனஓட்டத்தைப் பிரதிபலிக்கும் வகையில் தீர்ப்பு வழங்குவதில் உச்ச நீதிமன்ற நீதிபதி மார்க்கண்டேய கட்ஜுவுக்கு நிகர் அவர்தான். எந்தவித பாரபட்சமும் இல்லாமல் தீர்ப்பு வழங்குபவர் என்கிற பெயர் அவருக்கு எப்போதுமே உண்டு. 1957ஆம் ஆண்டு தொடரப்பட்ட ஒரு வழக்கு, அலகாபாத் உயர் நீதிமன்றத்திலிருந்து மேல் முறையீட்டுக்காக உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் மார்க்கண்டேய கட்ஜு மற்றும் மாத்தூரின் முன் விவாதத்துக்கு வந்தபோதுதான் மேற்கண்ட கருத்தை அவர்கள் தெரிவித்தனர்.

அரை நூற்றாண்டு காலம் ஒரு வழக்கு நீதிமன்றத்தில் தேங்கிக் கிடப்பது என்பது, நமக்கே எரிச்சலையும் கோபத்தையும் ஏற்படுத்தும்போது, சம்பந்தப்பட்டவர்களின் நிலைமை எப்படி இருக்கும் என்பதை நினைத்துக்கூடப் பார்க்க முடியவில்லை.

நாட்டிலுள்ள 21 உயர் நீதிமன்றங்களில் சுமார் 30 லட்சம் வழக்குகள் தீர்ப்பளிக்கப்படாமல் தேங்கிக் கிடக்கின்றன. இரண்டரைக் கோடிக்கும் அதிகமான வழக்குகள் கீழமை நீதிமன்றங்களில் தேங்கிக் கிடக்கின்றன. மிக அதிகமான வழக்குகள் தேங்கிக் கிடப்பது அலகாபாத் உயர் நீதிமன்றத்தில்தான் என்கிறது ஒரு புள்ளிவிவரம். உச்ச நீதிமன்றத்திலும் சரி, நிலைமையில் பெரிய அளவில் மாற்றமில்லை. சுமார் 39,780 வழக்குகள் நிலுவையில் இருப்பதாக 2006-ம் ஆண்டு புள்ளிவிவரம் கூறுகிறது.

சென்னை உயர் நீதிமன்றத்தில் தேங்கிக் கிடக்கும் வழக்குகளின் எண்ணிக்கை 4,06,958. கடந்த ஆண்டு கடைசியில் வெளியிடப்பட்ட புள்ளிவிவரம் இது. தமிழக விசாரணை நீதிமன்றங்களில் சுமார் மூன்றரை லட்சம் கிரிமினல் வழக்குகள் 31 மார்ச், 2007 நிலவரப்படி விசாரணையில் இருப்பதாகவும், இவற்றில் 26,800 வழக்குகள் சிறு குற்றங்கள் தொடர்பானவை என்றும் தெரிகிறது.

வழக்குகள் தேங்கிக் கிடப்பதால் இரண்டு பாதிப்புகள் ஏற்படுகின்றன. குற்றவாளிகள் பலர் தங்களுக்குப் பாதகமான தீர்ப்பு வராமல் வழக்கைத் தள்ளிப்போட்டுத் தப்பிக்க முயல்வது சகஜமாகிவிட்டது. சில வழக்குகளில் குற்றவாளிகள் மரணம்வரை தீர்ப்பு வழங்கப்படாமல் தப்பித்த சரித்திரங்கள் ஏராளம். இதனால், நீதியின் மீதும் நீதிமன்றங்களின் மீதும் அவநம்பிக்கை ஏற்படுகிறது.

அதேபோல, நிரபராதிகள் விடுவிக்கப்படாமல், அடிக்கடி நீதிமன்றங்களால் அலைக்கழிக்கப்படும்போது அது தர்மத்துக்கும் நியாயத்துக்கும் எதிரான செயல்பாடு என்று சொல்லித் தெரிய வேண்டியதில்லை. செய்யாத தவறுக்குத் தண்டனை பெறும் அவலநிலைக்கு நிகரானதுதான் இதுபோன்ற அலைக்கழிப்பு. நிரபராதி, தீர்ப்பு வழங்கப்படாமல் குற்றவாளி என்கிற களங்கத்துடன் காலவரையறையின்றித் தொடர்வது என்பது நீதிதேவனுக்கே அவமானம்.

உடனடி நீதி கிடைக்குமேயானால், லஞ்சமும் ஊழலும்கூடப் பெரிய அளவில் குறைய வாய்ப்பிருக்கிறது. ஒரு சராசரிக் குடிமகனுக்குக் கிடைக்க வேண்டிய நியாயமான உரிமைகள் மறுக்கப்படும்போது, அவன் நீதிமன்றத்தின் மூலம் நியாயம் கேட்க முடியும் என்கிற நிலைமை ஏற்பட்டால், காலதாமதமின்றி அதுபோன்ற வழக்குகளை நீதிமன்றங்கள் பரிசீலித்துத் தீர்ப்பளிக்குமேயானால், அதிகாரத்தில் இருப்பவர்களிடம் பயமும் பொறுப்புணர்வும் ஏற்படும்.

தாமதமாகக் கிடைக்கும் நீதி என்பது கண்கெட்ட பின் சூரியநமஸ்காரம் செய்கிற கதையைப் போன்றதுதான். பொதுமக்களை மட்டும் வருத்திக் கொண்டிருந்த இந்தப் பிரச்னை இப்போது நீதிபதிகளையும் சிந்திக்கவும் செயல்படவும் வைத்திருக்கிறது என்பது ஆறுதலைத் தருகிறது. நீதிதேவன், மயக்கத்திலிருந்து விழித்துக் கொள்ள வேண்டிய நேரம் நெருங்கிவிட்டது!

——————————————————————————————————————–
நாட்டின் தேவை 5 ஆயிரம் புதிய கோர்ட் : தலைமை நீதிபதி பாலகிருஷ்ணன் தகவல்

சென்னை : “நாடு முழுவதும் ஐந்தாயிரம் புதிய கோர்ட்டுகளை துவக்கினால் தான் வழக்குகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த முடியும்’ என்று இந்திய தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

சென்னை ஜுடிசியல் அகடமி நடத்திய, “உரிய நேரத்தில் நீதி வழங்குவதற்கான தொழில்நுட்பம் மற்றும் கருவிகள்’ குறித்த மூன்று நாள் கருத்தரங்கின் நிறைவு விழாவில் கலந்து கொண்டார் தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன்.

தலைமை நீதிபதிபேசியதாவது :

நீதிபதிகள் தங்களுக்கு முன்பாக எந்த மாதிரியான வழக்குகள் வந்துள்ளன என்பதை அறிந்து கொள்ள வேண்டும். மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பான வழக்குகள் ஆண்டுக்கணக்கில் நடக்காமல், அது போன்றவற்றில் நீதிபதிகளே ஆர்வம் எடுத்து விரைவாக தீர்வு காண வேண்டும். மிகச் சாதாரணமான வழக்குகளை விரைவாக தீர்த்து விட வேண்டும்.

தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா ஆகிய நான்கு மாநில நீதிபதிகள் மிகவும் மதிக்கப்படுவதோடு, தனித்தன்மையுடன் செயல்படுகின்றனர். சமுதாயத்துடன் நாம் செல்ல வேண்டும். வழக்கு தொடருபவர் நேரடியாக நம்மிடம் வருகிறார். அவர்களது பிரச்னையை நாம் அணுக வேண்டும். எவ்வளவு விரைவாக பிரச்னையை தீர்த்து வைக்கிறோமோ, அதற்கேற்ப அவர்கள் மகிழ்ச்சியடைவர். வழக்கு

மூலம் தங்களுக்கு ஏதாவது நிவாரணம் கிடைத்தால் அவர்கள் மகிழ்வர். எனவே, பிரச்னைகளை அறியும் கலையை நாம் தெரிந்திருக்க வேண்டும். இது போன்ற கருத்தரங்குகளால் நீதிபதிகள் தங்களுக்குள் கருத்துக்களை பரிமாறவும், அனுபவங்களை பற்றி பேசிக் கொள்ளவும் வாய்ப்புகள் கிடைக்கிறது. நமக்கு தெரியாமலேயே இதனால் நாம் பயனடைகிறோம்.

தமிழக அரசு 72 புதிய கோர்ட்டுகளை அமைக்க ஒப்புதல் அளித்துள்ளது. பல மாநில அரசுகளிடம் கோர்ட்டுகளின் எண்ணிக்கையை அதிகரிக்குமாறு நான் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். சில முதல்வர்கள் உறுதியளிப்பர், ஆனால், விரைவில் நடைமுறைக்கு வராது.

புதிய கோர்ட்கள் :

வழக்குகள் எண்ணிக்கை அதிகரிக்கும் பிரச்னையை தீர்க்க வேண்டுமானால் புதிய கோர்ட்டுகளை ஆரம்பிக்க வேண்டும். வேறு எந்த வழியிலும் இப்பிரச்னைக்கு தீர்வு காண முடியாது. இந்தியாவில் 14 ஆயிரத்து 600 கோர்ட்டுகள் உள்ளன. மேலும் ஐந்தாயிரம் புதிய கோர்ட்டுகளை நாடு முழுவதும் அமைத்தால் தான், வழக்குகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த முடியும். இல்லாவிட்டால் வழக்குகள் குவிந்து கொண்டு தான் இருக்கும். மக்கள், நீதிபதிகள் மீது தான் குற்றம் சாட்டுவர். இவ்வாறு பாலகிருஷ்ணன் பேசினார்.
மாதத்துக்கு நுõறு வழக்குகள் நீதிபதிகள் உத்தரவாதம் : சென்னை:

“மாதத்துக்கு நுõறு வழக்குகளை முடிப்பதாக நீதிபதிகள் உறுதியளித்துள்ளனர்’ என்று, சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஏ.பி.ஷா கூறினார்.

நீதிபதிகளுக்கான பயிற்சி கருத்தரங்கில் ஐகோர்ட் தலைமை நீதிபதி ஏ.பி.ஷா பேசியதாவது: நீதிபதிகளுக்கான கற்பித்தல் பணிமனைகளை மாவட்ட வாரியாக தொடர்ந்து நடத்தி வருகிறோம். சிறு விவகாரங்களுக்கான நீதிபதிகள் மற்றும் மோட்டார் வாகன விபத்து வழக்குகளை விசாரிக்கும் சென்னையில் உள்ள விரைவு நீதிமன்ற நீதிபதிகளிடம், வழக்கின் ஒவ்வொரு கட்டத்திலும் சராசரியாக எடுக்கப்படும் கால அளவு குறித்து கேள்வி கேட்கப்பட்டது. எவ்வாறு இவற்றை விரைவுபடுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நீதிபதிகளிடம் எந்தளவு தங்களது செயல்பாட்டை மேம்படுத்த முடியும் என்று கேட்ட போது, மாதத்துக்கு தற்போது 50 வழக்குகளை முடித்து வருவதற்கு பதிலாக நுõறு வழக்குகளை முடிப்பதாக உறுதியளித்துள்ளனர். ஐகோர்ட்டில் இரண்டு நிரந்தர, “லோக் அதாலத்’கள் அமைக்கப்படும். இதுதவிர, மோட்டார் வாகன விபத்து வழக்குகளை விசாரிக்க மாதத்துக்கு இரண்டு, “லோக் அதாலத்’கள் தனியாக நடத்தப்படுகின்றன.

கோவை மற்றும் திருப்பூரில் கடந்த மார்ச் மாதம் நடத்தப்பட்ட குறை தீர்ப்பு கூட்டத்தில், 143 வழக்குகள் முடிக்கப்பட்டு ரூ.1.54 கோடி இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது; இது ஒரு சாதனை. கடந்த ஜூலை 5ம் தேதியில் இருந்து மாலைநேர கோர்ட்டுகள் செயல்படத் துவங்கிய பின், ஆகஸ்ட் 31ம் தேதி வரை ஒன்பதாயிரத்து 245 வழக்குகள் முடிக்கப்பட்டன.

ஐகோர்ட்டின் மத்தியஸ்தம் மற்றும் நிவாரண மையம் கடந்த ஜூன் முதல் மிக தீவிரமாக செயல்படுகிறது. இந்த மையத்தில் சென்னையில் 140 மத்தியஸ்தர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. “ஸ்டாண்டர்ட் மோட்டார்ஸ்’ வழக்கை வெற்றிகரமாக மத்தியஸ்தம் செய்து முடித்ததற்காக கடந்த ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. இரண்டாயிரத்து 196 தொழிலாளர்கள் சம்பந்தப்பட்ட ரூ.70 கோடி மதிப்பிலான இந்த வழக்கு தான் இந்தியாவிலேயே மத்தியஸ்தம் மூலம் தீர்க்கப்பட்ட மிகப் பெரிய வழக்கு. இவ்வாறு ஏ.பி.ஷா பேசினார்.

Posted in 5000, AA, abuse, Accident, Alcoholism, Arms, Attorney, Balakrishnan, Blood, BMW, Bribery, Bribes, Capital, case, Congress, Corruption, Courts, dead, Delhi, Driver, Driving, Drunk, DUI, escape, Expose, Free, Guilty, HC, Hit, I U Khan, industrialist, Jail, Jethmalani, Judges, Justice, Launch, Law, Lawyer, legal, MP, Nanda, Nandha, NDTV, New, Order, Party, Police, Politics, Poor, Power, Prison, Prosecution, Punishment, R K Anand, Rich, Sanjeev, Sanjeev Nanda, Sanjiv, SC, Sentence, Sunil Kulkarni, Suspension, testimony, Wealthy, Witness | 1 Comment »

US recognizes Ramesh Ganguly for his contributions toward South Asians assimilation

Posted by Snapjudge மேல் ஜூலை 2, 2007

அமெரிக்க-இந்தியருக்கு “விடுதலை உணர்வு விருது’

சிலிக்கான்வேலி, ஜூலை 2: அமெரிக்காவில் வாழும் இந்தியர்கள் மத்தியில் விடுதலை உணர்வை ஏற்படுத்தியதற்கான பங்களிப்பை பாராட்டி அமெரிக்க-இந்திய பேராசிரியருக்கு இந்தாண்டுக்கான சிறந்த விருது வழங்கப்படவுள்ளது.

ramesh Ganguly NRI Awardவிருதை பெறப்போகும் பேராசிரியர் ரமேஷ் கங்குலி(72), வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் கணித மற்றும் இசைப் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார்.

ரமேஷ் கங்குலி பெங்களூரில் பிறந்து, மும்பையில் வளர்ந்தவர். மும்பை பல்கலைக்கழகத்தில் இளம்கலை பட்டம் பெற்றார். 1957-ம் ஆண்டு உதவித் தொகையை பெற்று கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டத்தில் சேர்ந்தார்.

முதுகலை பட்டத்தை வெற்றிகரமாக முடித்த அவர், பின்னர் அமெரிக்காவின் மசாசூசெட் பல்கலைக்கழகத்தில் ஆய்வு படிப்பைத் தொடங்கினார். 1961-ம் ஆண்டு “பிஎச்டி’ பட்டத்தை பெற்றார். இதையடுத்து வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியில் சேர்ந்தார்.

விடுதலை உணர்வை ஏற்படுத்தினார்:

வாஷிங்டனில் பேராசிரியர் பணியைத் தொடங்கியதுமே அமெரிக்காவின் சீட்டேல் பகுதியில் வாழும் இந்தியர்கள் மத்தியில் ரமேஷ் கங்குலி விடுதலை உணர்வை ஏற்படுத்தினார். அவரது இந்தப் பங்களிப்பை பாராட்டித்தான் அவருக்கு தற்போது சிறந்த விருது வழங்கப்படவுள்ளது.

விருது வழங்கும் நிகழ்ச்சி ஜூலை 4-ம் தேதி நடைபெறுகிறது. இந்த விழாவில் ரமேஷ் கங்குலி தவிர்த்து, புதிதாக அமெரிக்க குடியுரிமையைப் பெற்றுள்ள இந்தியர்களும் பாராட்டி கெüரவிக்கப்படுவார்கள். ரமேஷ் கங்குலி 1971-ம் ஆண்டே அமெரிக்க குடியுரிமையை பெற்றுவிட்டார்.

இந்நிலையில் ரமேஷ் கங்குலி கூறும்போது, “தெற்காசியர்களின் கலாசாரத்தை பிறர் அறிந்து கொள்ள இசை ஒரு முக்கியமான ஊடகமாக அமைந்துள்ளது என்று நான் நினைக்கிறேன். எங்குசென்றாலும் இசைக்கென்று தனிப்பட்ட ரசிகர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். இசையின் மூலம் மக்கள் தங்களது கலாசாரத்தை மட்டுமல்லாது உணர்வுகளையும் எளிமையாக பகிர்ந்து கொள்ள முடிகிறது என்ற ரமேஷ், 19-ம் வயதில் ரயில் விபத்து ஒன்றில் தனது இடது கையை இழந்தாலும், தன்னம்பிக்கை என்ற ஆயுதத்தால் இன்று சிறந்த சாதனையாளராகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Posted in Accident, America, Asia, Asian, Award, Democratic, Desi, Disabled, Expat, Freedom, Ganguly, Immigration, Independence, Maths, music, NRI, Prize, Professor, Ramesh, Recognition, Republic, Seattle, South Asian, US, USA, Washington | Leave a Comment »

Samjhauta Express – Indian Consulate: Ambassador’s role

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 23, 2007

இந்தியத் தூதரகத்தின் மனித நேயம்!

இஸ்லாமாபாத், பிப். 23: சம்ஜெüதா எக்ஸ்பிரஸ் ரயிலில் வெடிகுண்டுகள் வெடித்ததால் ஏற்பட்ட சம்பவத்துக்குப் பிறகு, இந்திய ஹைகமிஷன் அதிகாரிகளின் தன்னலமற்ற, மனிதாபிமான நோக்கோடு கூடிய சேவையை பாகிஸ்தானியர் பாராட்டுகின்றனர்.

இது தொடர்பாக “”டான்” பத்திரிகையில், ஆசிரியருக்குக் கடிதம் பகுதியில் ஒருவர் பின்வரும் கடிதம் எழுதியிருக்கிறார்.

“”விபத்தில் தனது பெற்றோரையும் 2 இளம் குழந்தைகளையும் இழந்தார் என்னுடைய பக்கத்து வீட்டுக்காரர்; தொலைக்காட்சிகளிலும் பத்திரிகைகளிலும் வெளியான இந்திய ரயில் நிலைய தொலைபேசி எண்களுக்குத் தொடர்பு கொண்டு அவர் விவரம் கேட்டபோது, எந்த பதிலும் கிடைக்கவில்லை. துக்ககரமான இந்த வேளையில் தகவல்கூட கிடைக்கவில்லையே என்று அவருடன் நாங்களும் வேதனைப்பட்டோம்.

“அப்போது அவருடைய வீட்டுக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. இஸ்லாமாபாதில் உள்ள இந்தியத் தூதரகத்திலிருந்து அதிகாரிகள் பேசினர். ரயிலில் குண்டு வெடிப்புக்குப் பிறகு தீ பரவியதால் உடல்களை அடையாளம் காண்பதில் மிகுந்த சிரமம் ஏற்பட்டதால், அவசரப்பட்டு தகவல் தரவில்லை என்று தெரிவித்தனர். அவருடைய உறவினர்கள் 4 பேரும் இறந்துவிட்டனர் என்ற துக்ககரமான செய்தியை வருத்தத்துடன் தெரிவித்தனர். “அத்துடன், உடல்களைப் பெற்றுக்கொள்ள தூதரகம் செய்துள்ள விசா ஏற்பாடு என்ன, தில்லிக்கு எப்படிச் செல்ல வேண்டும் என்ற தகவல்களைக் கூறி, மேற்கொண்டு இன்ன எண்ணைத் தொடர்பு கொண்டால் தில்லி பயணத்துக்கு உதவத் தயாராக இருப்பதாகத் தெரிவித்தனர். இதன்பிறகே என் பக்கத்து வீட்டுக்காரர் சற்று ஆறுதலும் அமைதியும் அடைந்தார்’ என்று கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார் அந்த வாசகர்.

பாகிஸ்தானுக்கான இந்தியத் தூதர், இந்த விபத்தில் இறந்தவர்களை அடையாளம் காணும் பணியிலும், காயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் பணியிலும் உதவவும், ஒருங்கிணைக்கவும் தில்லி சென்றுவிட்டார். துணைத் தூதரக அதிகாரி டி.சி.ஏ. ராகவன் தலைமையில் இந்தியத் தூதரக அதிகாரிகள் நேரம், காலம் பாராமல் செயல்படுகின்றனர்.

அன்றைய தினம் பயணம் செய்தவர்களின் முகவரி, தொலைபேசி எண் போன்ற தகவல்களைச் சரிபார்த்து ஒவ்வொருவரையும் அழைத்து, வருத்தம் தெரிவிப்பதுடன் தேவைப்படும் உதவிகளை வலியச்சென்று செய்கின்றனர்.

Posted in Accident, Ambassador, Chicken Soup, Dawn, Heartwarming, Helpline, Indian Consulate, Inquiry, Letters to the Editor, Pakistan, passengers, Samjauta, Samjhauta, Samjhauta Express, Victim | Leave a Comment »

Kreedam – Ajith hurts his back: Shooting gets affected

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 7, 2007

முதுகுவலியால் படப்பிடிப்பு ரத்து: அஜீத்குமார் இன்று சென்னை திரும்புகிறார்- ஆஸ்பத்திரியில் மீண்டும் சிகிச்சை

சென்னை, பிப். 6-

நடிகர் அஜீத்குமார் “கிரீடம்” என்ற படத்தில் நடித்து வருகிறார். இதன் படபிடிப்பு விசாகப்பட்டினத்தில் கடந்த சில தினங்களாக நடந்தது. நேற்று சண்டைக்காட்சி படமாக்கினார்கள். அப்போது அஜீத்குமார் டூப் போடாமல் நடித்தார்.

காரின் மேல் இருந்து குதித்தபோது முதுகு பகுதியில் வலி ஏற்பட்டது. அவரால் அசைய முடியவில்லை. வலி தாஙக முடியாமல் அலறினார். இதனால் படப்பிடிப்பு குழுவினர் பதட்டமடைந்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் வலி தீரவில்லை.

இதையடுத்து படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது. அஜீத்குமாரை விமானம் மூலம் சென்னைக்கு அழைத்து வருகிறார்கள். இன்று மாலை சென்னை திரும்புகிறார்.

பின்னர் நுங்கம்பாக்கத்தில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுகிறார். அவருக்கு முதுகு பகுதியில் எக்ஸ்ரே எடுத்து பார்க்கப்படுகிறது. ஏற்கனவே மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் பங்கேற்ற போது விபத்தில் சிக்கினார். முதுகுதண்டில் பாதிப்பு ஏற்பட்டது. தீவிர சிகிச்சைக்குப்பின் குணமடைந்தார்.

அதன்பிறகு படப்பிடிப்பில் பங்கேற்றார். ஒரு சண்டைக்காட்சியில் நடித்த போது விபத்துக்குள்ளானார். முதுகுதண்டு வலித்தது. அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அவர் முதுகில் 9 இடங்களில் ஆபரேஷன் நடந்தது. தீவிரசிகிச்சைக்குப்பின் குண மடைந்தார். அதன்பிறகு சண்டைக்காட்சிகளில் `டூப்’ போடால் நடிப்பதை தவிர்த்தார். தற்போது கிரீடம் படத்தில் `டூப்’ வேண்டாம் என்று கூறி காரில் இருந்து குதித்து விபத்தில் சிக்கிக் கொண்டார்.

அஜீத்துடன் கிரீடம் படக் குழுவினரும் சென்னை திரும்புகிறார்கள். ஏற்கனவே இதே படத்தில் ஒருமுறை விபத்து ஏற்பட்டு அஜீத்குமார் சிகிச்சை பெற்றார். விலை உயர்ந்த ஊசி மருந்து செலுத்தப்பட்டது. இப்போது மறுபடியும் முதுகுவலி ஏற்பட்டுள்ளது.

Posted in Accident, Ajeethkumar, Ajith, Ajitkumar, Fight, Greedam, Hurt, Kreedam, Location, Movie Spot, Shooting, Shoulder, Sick, Tamil Actor, Tamil Actress | 4 Comments »

Asin gets hurt in Vijay’s Pokkiri song picturization by Prabhu Deva

Posted by Snapjudge மேல் திசெம்பர் 7, 2006

படப்பிடிப்பில் அஸின் காயம்

சென்னை, டிச.8: “போக்கிரி‘ படத்தில் இடம்பெறும் ஒரு நடனக் காட்சிக்கான படப்பிடிப்பின்போது நடிகை அஸினுக்கு காயம் ஏற்பட்டது.

நடிகர் விஜய், அஸின் நடித்து வரும் “போக்கிரி’ படத்தின் படப்பிடிப்பு ஏவி.எம். ஸ்டுடியோவில் நடைபெற்று வருகிறது. இப்படத்தின் ஒரு பாடல் காட்சி புதன்கிழமை படமாக்கப்பட்டது.

பட இயக்குநர் பிரபுதேவா நடன அசைவுகளைப் பற்றி விஜய், அஸின் ஆகியோருக்கு விளக்கி படமாக்கிக்கொண்டிருந்தார். அப்போது அஸினிடம் “ஷூவை கழற்றிவிட்டு நடனமாடினால் காட்சி இன்னும் சிறப்பாக வரும்’ என்று கூறியுள்ளார்.

இதனால் பலகைகளால் உருவாக்கப்பட்டிருந்த அந்த மேடையில் அஸின் வெறும் காலுடன் ஆடியுள்ளார். அப்போது பலகையில் இருந்த ஓர் ஆணி அஸின் பாதத்தில் பாய்ந்து ரத்தம் வழிந்துள்ளது.

உடனே அவருக்கு அவசர சிகிச்சை அளிக்கப்பட்டது. மூன்று நாள்கள் ஓய்வுக்குப் பின் மீண்டும் படப்பிடிப்பில் கலந்துகொள்வார் என படக்குழுவினர் தெரிவித்தனர்.

Posted in Accident, Asin, Blood, Dance Master, Heroine, Ilaiya Thalapathi, Ilaiya Thalapathy, Pokkiri, Prabhudeva, Remake, Rest, Shoes, Tamil Actors, Tamil Actress, Tamil Cinema, Tamil Films, Tamil Movies, Tamil songs, Telugu Cinema, Tollywood, Vijay | 4 Comments »

Bridge collapses on train in Bhagalpur (Bihar), 47 killed

Posted by Snapjudge மேல் திசெம்பர் 3, 2006

பீகார் மாநிலத்தில் ரயில் மீது மேம்பாலம் இடிந்து வீழ்ந்து பலர் பலி

E – Tamil : ஈ – தமிழ் – பிண அரசியல்

விபத்து நடைபெற்ற இடம்
விபத்து நடைபெற்ற இடம்

இந்தியாவின் பீகார் மாநிலத்தில் ரயில் நிலையம் ஒன்றில் வைத்து, ரயிலின் மீது பாலம் ஒன்று இடிந்து விழுந்ததில் அகப்பட்டுக்கொண்ட பல பயணிகளை மீட்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்படுவதாக இந்திய ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

140 ஆண்டுகள் பழமை வாய்ந்த பாலம் ஒன்று, பஹல்பூர் ரயில்வே நிலையத்தில், ரயில் ஒன்றின் பெட்டியின் மீது விழுந்ததில் அந்தப் பெட்டி முழுமையாக இடிபாடுகளால் மூடப்பட்டதாக இந்தியாவின் கிழக்குப் பிராந்திய ரயில்வேயின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

அதிகாலை வேளையில் இந்த விபத்து நிகழ்ந்த போது அந்தப் பெட்டியில் நூற்றுக்கும் அதிகமான பயணிகள் இருந்ததாக இந்திய உள்ளூர் ஊடகங்கள் மதிப்பிட்டுள்ளன.

குறைந்தது 14 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டிருக்கிறார்கள்.

Posted in Accident, Bhagalpur, Bihar, Bridge, dead, Fatal, Howrah-Jamalpur Express, Lalu prasad Yadav, Nitish Kumar, Railways, Train, ulta pul | Leave a Comment »

MiG-29 crashes in Ambala, pilot safe

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 29, 2006

ஹரியாணாவில் படைவிமானம் விழுந்து நொறுங்கியது: விமானி உயிர் தப்பினார்

அம்பாலா(ஹரியாணா), செப். 29: இந்திய விமானப்படையைச் சேர்ந்த மிக்-29 ரக விமானம் ஒன்று ஹரியாணா மாநிலம் அம்பாலா அருகே வியாழக்கிழமை விழுந்து நொறுங்கியது. விமானி பாராசூட் உதவியுடன் குதித்து உயிர் தப்பினார்.

விமானம் ஒரு வயலில் விழுந்தது. அங்கு வேலை செய்து கொண்டிருந்த 12 பேரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். அங்கிருந்த ஒரு டிராக்டர், விமானம் மோதியதில் சேதமுற்றது.

வழக்கமான சோதனைக்காக விமானி நாயக் என்பவர் விமானத்தை ஓட்டிச் சென்றார். விமானம் விபத்துக்குள்ளான போது அவர் பாராசூட் உதவியுடன் குதித்து தப்பினார். பின்னர் அவர் ராணுவ மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார்.

விமானத்தின் உடைந்த பகுதிகள் அப்பகுதியில் ஆங்காங்கே சிதறிக் கிடந்தன. கீழே விழுந்த இடத்தில் 10 அடிக்குப் பள்ளம் ஏற்பட்டுள்ளது. உயர் அதிகாரிகள் விபத்து நடந்த இடத்தைப் பார்வையிட்டனர்

இந்த மிக்-29 ரக விமானம் ரஷ்யாவில் தயாரிக்கப்பட்டதாகும். அம்பாலா விமானப்படைத் தளத்திலிருந்து இது புறப்பட்டது. இந்த விபத்து தொடர்பாக ராணுவ நீதிமன்ற விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது

Posted in Aamir Khan, Accident, Ambala, crash, India, Madhavan, MiG-29, Military, pilot, Rang De Basanti, Tamil | Leave a Comment »