Posted by Snapjudge மேல் மார்ச் 9, 2007
அடுத்த வாரம் ஐஸ்வர்யாராய்-அபிஷேக் பச்சன் திருமணம் குவாலியரில் நடக்கிறது
குவாலியர், மார்ச்.8-
இந்தி நடிகை ஐஸ்வர்யாராய்-நடிகர் அபிஷேக்பச்சன் திருமணம் ராஜஸ்தான் மாநிலத்தில் நட்சத்திர ஓட்டலில் நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால் அங்குள்ள நட்சத்திர ஓட்டல்களில் நடத்துவதில் சிக்கல் இருப்பதால், அவர்கள் திருமணம் மத்திய பிரதேச மாநிலம் குவாலியருக்கு மாற்றப்பட்டுள்ளது.
குவாலியரில் நட்சத்திர ஓட்டல் ஒன்றில் மார்ச் 17-ந் தேதியில் இருந்து 19-ந் தேதிக்குள் திருமணம் நடக்க இருப்பதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அபிஷேக் பச்சனின் தாயாரும், நடிகையுமான ஜெயா பச்சன் சமீபத்தில் குவாலியரில் தேர்தல் பிரசாரம் செய்தார். அவர் அங்கு திருமணத்துக்கான ஏற்பாடுகளையும் கவனித்து விட்டு சென்றதாக கூறப்படுகிறது. ஆனால் ஓட்டல் நிர்வாகமோ, இன்னும் தங்களுக்கு எந்த தகவலும் வரவில்லை என்று கூறியுள்ளது.
Posted in Abhishek, Abhishek Bhachan, Abishek Bachan, Aishwarya Rai, Aiswarya, Aiswarya Rai, Amitabh, Amitabh Bachaan, Gwalior, Jaya, Jeya, Jeya Bachan, Marriage, Reception, Wedding | Leave a Comment »
Posted by Snapjudge மேல் பிப்ரவரி 27, 2007
19-ந்தேதி ஐஸ்வர்யா-அபிஷேக் திருமணம்: ஆடம்பர அழைப்பிதழ் தயாராகிறது
ஐஸ்வர்யாராய்,அபிஷேக் பச்சன், திருமணம் நிச்சய தார்த்தம் ஒரு வழியாய் முடிந்த நிலையில் இந்தியாவின் மிகப் பெரிய ஸ்டார்கள் இல்லற வாழ்வில் இணையும் அந்த ஜொலி ஜொலிப்பு விழா எப் போது அரங்கேறும் எனற் ஆர்வம் கரைபுரண்டு ஓடுகிறது.
இந்தியாவெங்கிலும் இருந்து பல்வேறு துறைகளின் வி.வி. ஐ.பிக்கள் ஒரே இடத்தில் குவியும் அந்த திருமண விழா அடுத்த மாதம் 19-ந்தேதி நடக் கிறது. இந்த தேதி முறைப்படி அறிவிக்கப்படவில்லை என் றாலும் அதில் திருமணம் நடத்துவதற்கான வேலைகள் தடபுடலாக நடந்து வருகின்றன. நேற்று நடிகர் பிரபுவின் மகன் திருமணத்திற்கு வந்த அமி தாப்பச்சன் மண்டபத்தில் இருந்த சில முக்கிய தமிழ் திரையுலகபுள்ளிகளிடம் 19-ந்தேதி திருமணம் அன் றைக்கு வேறு வேலைகள் ஏதும் வைத்துக்கொள்ளாதீர் கள் என்று அன்போடு கேட்டுக் கொண்டாராம்.
இவர்களிடம் மட்டுமல்ல தனது நெருங்கிய உறவினர்கள், அரசியல் வி.வி.ஐ.பி.க்கள், பாலிவுட் பிரபலங்கள் என தனக்கு மிக நெருக்கமானவர்களிடம் 19ந்தேதி திருமணம் என்பதை கூறி அன்று வேறு வேலைகள் எதையும் வைத்துக்கொள்ளா மல் தயாராக இருங்கள் என்று அன்புக்கட்டளை இட்டிருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நட்சத்திர திருமணம் ஜோத்பூரில் உள்ள உனமத்பவன் அரண்மனையில் கோலாகலமாக நடக்க உள்ளது.
இதே அரண்மனையில்தான் ஹாலிவுட் நடிகை எலிசபெத் குர்லேயும் இந்திய தொழில் அதிபர் அருண் நாயரும் திருமணம் செய்ய உள்ளனர். குறிப்பாக இந்த இடத்தை தேர்ந்தெடுத்ததற்குக் காரணம் இந்த அரண்மனையில் உம்ராவ் ஜான் பட ஷூட்டிங் நடந்த போது தான் ஐஸ்வர்யாராய்க்கும் அபி ஷேக்பச்சனுக்கும் இடையே காதல் மலர்ந்ததாம்.
திருமணத்தை மிகவும் ஆடம்பரமாக நடத்த தீர்மா னிக்கப்பட்டுள்ளதால் அதற் கேற்ப விலை உயர்ந்த அழைப் பிதழ்களை அச்சடிக்க ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளன. ஒரு அழைப்பிதழின் விலை மட்டும் ரூ.5ஆயிரம் என்று கூறப் படுகிறது. அழைப்பிதழை பெறுபவர்கள் அதை வாழ்நாள் முழுவதும் போற்றி பாதுகாக்கும் அளவுக்கு அதன் வடிவமைப்பு இருக்குமாம்.
Posted in Abhishek, Abhishek Bhachan, Abishek Bachan, Abishek Bhachan, Aishwarya Rai, Aiswarya, Aiswarya Rai, Amitabh, Amitabh Bachaan, Amitabh Bhachan, Bollywood, Cinema, Gossip, Invitation, Jodhpur, Jothpur, Marriage, Palace, Rumour, Umrao Jaan, Umrao Jan, Venue, Wedding | 1 Comment »
Posted by Snapjudge மேல் பிப்ரவரி 8, 2007
அமிதாப் மகனுக்கு பரிசளிக்கப்பட்ட ரூ.1.5 கோடி கார் யாருக்கு சொந்தமானது? அமர்சிங் விளக்கம்
புதுதில்லி, பிப். 9: அமிதாப் மகன் அபிஷேக் பச்சனின் பிறந்த நாளன்று பரிசளிக்கப்பட்ட ரூ.1.5 கோடி மதிப்புள்ள பெண்ட்லே சொகுசு காரை, தானே விலை கொடுத்து வாங்கியதாக சமாஜவாதி கட்சித் தலைவர் அமர்சிங் கூறியுள்ளார்.
லண்டனில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட அந்த காருக்கு, அனைத்து சுங்கத் தீர்வைகளையும் முறையாகச் செலுத்திவிட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
காரின் பதிவுக்காக (ரெஜிஸ்ட்ரேஷன்) விண்ணப்பித்த ஆவணத்தில் அமர்சிங் “ஜல்ஸô, மும்பை’ என வீட்டு முகவரியை அளித்திருந்தார். இந்த முகவரி குறித்து ஐயம் எழுப்பிய தில்லி போக்குவரத்து துறை, அது தவறான தகவல் என்றால் அமர்சிங் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என புதன்கிழமை கூறியிருந்தது.
இதை மறுத்துள்ள அமர்சிங், அமிதாப் குடும்பத்துக்குச் சொந்தமான ஜல்ஸô இல்லத்தை, மும்பைக்கு செல்லும்போது தங்குவதற்காக, கடந்த 20 ஆண்டுகளாக பயன்படுத்தி வருவதாகவும், அமிதாப் இதை மறுக்கும் பட்சத்தில் சட்ட நடவடிக்கைக்கு தயாராக இருப்பதாகவும் கூறியுள்ளார்.
மேலும், தவறான தகவலை அளித்ததற்காக தில்லி மாநில முதல்வர் மற்றும் தில்லி போக்குவரத்துத் துறை அமைச்சர் ஹாரூண் யூசுப் ஆகியோர் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்போவதாகவும் அமர்சிங் எச்சரித்துள்ளார்.
பெண்ட்லே காரை அபிஷேக் பச்சனுக்கு பரிசளித்தது யார் என்பதைக் கூற அவர் மறுத்துவிட்டார்.
அபிஷேக் பச்சனுக்கு வெளிநாட்டு கார்: அமர்சிங் ரூ. 85 லட்சம் சுங்க வரி செலுத்தினார்
புதுடெல்லி, பிப். 12-
பிரபல ஹாலிவுட் நடிகர் அமிதாப்பச்சனின் மகனும், நடிகருமான அபிஷேக் பச்சன் கடந்த 5-ந் தேதி தனது பிறந்த நாளை கொண்டாடினார்.
இதையொட்டி அமிதாப்பின் நெருங்கிய குடும்ப நண்பரும், சமாஜ்வாடி கட்சி பொதுச் செயலாளருமான அமர்சிங் வெளிநாட்டு காரை பிறந்த நாள் பரிசாக வழங்கினார்.
விலை உயர்ந்த காரை அபிஷேக் பச்சனுக்கு பரிசாக வழங்கியது சர்ச்சையை கிளப்பியது. உடனே அது தனது கார் அபிஷேக்குக்கு பரிசாக கொடுக்கவில்லை என்று அமர்சிங் மறுத்து இருந்தார்.
இந்த நிலையில் வெளிநாட்டு காருக்கு அமர்சிங் ரூ. 85 லட்சம் சுங்க வரி கட்டியுள்ளது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக டெல்லி போக்குவரத்து மந்திரி ஹாரூன் ïசுப் கூறியதாவது:-
லண்டனில் இருந்து `பென்ட்லி’ கார் கடந்த 31-ந் தேதி விமானம் மூலம் வந்தது. இந்த காரின் மதிப்பு ரூ. 1.76 கோடி என்று கூறி அதற்கு ரூ. 85 லட்சம் சுங்க வரியை அமர்சிங் செலுத்தியுள்ளார்.
கடந்த 1-ந் தேதி அந்த கார் வடக்கு டெல்லியில் உள்ள போக்குவரத்து அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டது. அந்த காருக்கு நம்பர் வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
Posted in Abhishek, Abhishek Bhachan, Abishek Bachan, Abishek Bhachan, abuse, Aishwarya Rai, Aiswarya, Aiswarya Rai, Amar Singh, Ambani, Amitabh, Amitabh Bachaan, Amitabh Bhachan, Auto, Automotive, Bachchans, Bentley, Birthday, Bribe, Bribery, car, Chief Minister, CM, Congress, Congress(I), Corruption, Customs, customs duties, Delhi, Extravaganza, general secretary, Gift, Harun Yusuf, Import, Income Tax, kickbacks, London, Luxury, maharashtra, Mangal, Mangalsutra, Marriage, Mulayam Singh, Mulayam Singh Yadav, New Delhi, owner, peepal tree, Power, Reception, Reliance, Samajvadi Party, Samajwadi Party, Sheila Dikshit, SJP, SP, tax evasion, Transport Department, Transport Minister | Leave a Comment »