Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘401(k)’ Category

Pension will exceed the Salaries – Government Job retirees pension income

Posted by Snapjudge மேல் திசெம்பர் 10, 2007

ஊதியத்தை மிஞ்சும் ஓய்வூதியம்

புதுதில்லி, டிச. 9: அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தை விட, ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியத் தொகை கணிசமாக அதிகரித்து வருகிறது.

2006-07 நிதியாண்டில் 39,074 கோடி ரூபாயை ஓய்வூதியமாக வழங்கியுள்ளது மத்திய அரசு.

இதே நிதியாண்டில் தற்போது பணியில் உள்ள ஊழியர்களுக்கு 40,047 கோடி ரூபாய் ஊதியம் வழங்கியுள்ளது மத்திய அரசு.

இதேநிலை நீடித்தால் இன்னும் சில ஆண்டுகளில் ஊதியத் தொகையை விட ஓய்வூதியத்தொகை பலமடங்கு அதிகரித்து விடும் என்று கணக்கு தணிக்கை தலைமை அதிகாரி தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தொகை ஆண்டுக்கு 5.47 சதவீதமாக அதிகரித்து வருகிறது. ஆனால் ஓய்வூதியத்தொகை ஆண்டுக்கு 16.20 சதவீதமாக அதிகரித்து வருகிறது.

இந்தியர்களின் ஆயுள்காலம் அதிகரிப்பு, ஓய்வு வயதை அதிகரித்தது உள்ளிட்ட காரணங்களால் ஓய்வூதியத்துக்கான செலவு அதிகரித்து கொண்டே செல்வதாக கணக்கு தணிக்கை தலைமை அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 2001 புள்ளி விவரப்படி மத்திய அரசு நிறுவனங்களில் 38 லட்சத்து 76 ஆயிரம் ஊழியர்கள் பணியாற்றினர். இந்த எண்ணிக்கை 1995-ல் 39 லட்சத்து 82 ஆயிரமாக மட்டுமே உயர்ந்தது.

ஆனால் 1999-2000 நிதியாண்டில் 38 லட்சத்து 3 ஆயிரமாக இருந்த ஓய்வூதியதாரர்களின் எண்ணிக்கை, 2006-07-ல் 45 லட்சத்து 5 ஆயிரமாக அதிகரித்தது.

இந்நிலையில், ஓய்வூதிய செலவைக் குறைப்பது குறித்து ஆராய 6-வது ஊதிய கமிஷன் சிறப்புக் குழுவை நியமித்துள்ளது.

இக்குழு அடுத்த ஆண்டு ஏப்ரலில் தனது பரிந்துரைகளை சமர்பிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் அடிப்படையில் அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

Posted in 401(k), 58, 65, Babyboomers, Budget, Economy, employee, Employment, Factor, family, Finance, Forecasting, Generation, Govt, Impact, Income, Inflation, Jobs, Monetary, Money, Multiply, pension, Poor, Projection, Reduction, Retirement, Rich, Rupees, safety nest, Salary, Savings | Leave a Comment »

Irama Srinivasan – Refinancing, Retirement Planning, Pension Income

Posted by Snapjudge மேல் ஏப்ரல் 2, 2007

மறுதலை அடமானம்

இராம சீனிவாசன்

ஒவ்வொருவருக்கும் பணி ஓய்வுக்குப் பிறகு ஏற்படும் பணத் தேவைக்காக 30 வயதிலிருந்தே சேமிக்க வேண்டும் என்ற கருத்து ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது.

இதற்காகவே பிரத்தியேக சேமிப்புக் கணக்குகள் அரசாலும், வங்கிகளாலும் வழங்கப்பட்டு வருகின்றன. முதியவர்களில் பலர் ஏழ்மையில் வாடும்போது அவர்களின் பொருளாதாரத் தேவைக்காக அரசு பல திட்டங்களை தீட்டியிருந்தும், அத்திட்டங்களால் பயன் பெற முடியாத சூழலில் பலர் உள்ளனர்.

இந்திய சமூகச் சூழலில், வீடு என்ற சொத்தை மட்டுமே வைத்துக்கொண்டு போதுமான வருமானம் இல்லாத முதியோர் பலர் உள்ளனர். உடைந்து வரும் கூட்டுக் குடும்பங்களால் இவர்கள் பொருளாதார ஆதரவு இல்லாமல் இருக்கின்றனர். இவர்களால் வீட்டை விற்று / அடமானம் வைத்து வாழ்க்கையை நடத்த முடியாது. ஏனெனில் வாழ்ந்து வந்த வீட்டின் மீது உள்ள பற்று, பிள்ளைகளுக்குத் தன் சொத்தின் ஒரு பகுதியையாவது விட்டுச் செல்ல வேண்டும் என்ற நோக்கம் உள்ளவர்களாக பல முதியோர்கள் உள்ளனர். இந்தச் சூழலில் “மறுதலை அடமானம்’ மிகப் பெரிய கொடையாக வந்துள்ளது.

வீடு போன்ற நிலையான சொத்துரிமை உள்ளவர்கள், பணி ஓய்வுக்குப் பிறகு தங்களின் வீட்டை “மறுதலை அடமானம்’ என்ற முறையில் அடமானம் வைத்து 15 ஆண்டுகள் வரை தொடர்ச்சியாக ஒவ்வொரு மாதமும் பணம் பெறும் வசதியை ஏற்படுத்தப் போவதாக மத்திய அரசின் “பட்ஜெட் 2007 – 08’ல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இத்திட்டத்தை “தேசிய வீட்டு வங்கி’ செயல்படுத்தப் போவதாக உள்ளது. இதனைத் தொடர்ந்து, வீட்டுக் கடன் வழங்கும் பல வங்கிகள் இத்திட்டத்தைச் செயல்படுத்த முனையலாம். அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் பல ஆண்டுகளாக இத்திட்டம் சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

சாதாரண அடமானத்தில் கடன் பெறுபவர், கடன் தொகை முழுவதையும் ஒரே தவணையில் பெற்று, பின்பு முதல் மற்றும் வட்டியை சிறுகச் சிறுக மாதம்தோறும் செலுத்துகிறார். மறுதலை அடமானத்தில் கடன் பெறுபவர் கடன் தொகையைச் சிறுகச் சிறுக மாதம்தோறும் பெற்று, பின்பு முதல் மற்றும் வட்டியை ஒரே தவணையில் கடைசியில் திரும்பச் செலுத்துகிறார்.

தற்போது உங்கள் வீட்டின் மதிப்பு ரூ. 40 லட்சம். உங்களுக்கு வயது 60. அடுத்த 10 ஆண்டுகளுக்கு நீங்கள் உங்கள் வீட்டை மறுதலை அடமானமாக வங்கியில் வைக்கிறீர்கள்.

வங்கி உங்களுக்கு மாதம் ரூ. 10 ஆயிரம் தருவது எனவும், இதற்கான வட்டி 10 சதவீதம் என்றும் ஒப்புக் கொள்ளப்படுகிறது. 10 ஆண்டுகளின் முடிவில் நீங்கள் ரூ. 12 லட்சம் கடனாகப் பெற்றிருக்கிறீர்கள். இதற்கான வட்டி ரூ. 15 லட்சம் என்று வைத்துக் கொள்வோம். எனவே 10 ஆண்டு முடிவில் ரூ. 27 லட்சம் வங்கிக்குச் செலுத்த வேண்டும்.

இந்நிலையில் உங்கள் வீட்டின் மதிப்பு ரூ. 60 லட்சம் என்று உயர்ந்திருந்தால், வீட்டை விற்று, ரூ. 27 லட்சத்தை வங்கி எடுத்துக் கொண்டு மீதமுள்ள ரூ. 33 லட்சத்தை உங்களுக்குக் கொடுக்கும். மாறாக, நீங்கள் மீண்டும் ரூ. 33 லட்சத்திற்கு உங்கள் வீட்டை மறுதலை அடமானத்திற்கு வைக்கலாம் அல்லது எனக்குப் பணம் வேண்டாம், நான் இருக்கிறவரை, இவ்வீட்டில் இருக்கிறேன், நான் இறந்த பிறகு இவ்வீட்டை விற்றுக் கடனையும், வட்டியையும் எடுத்துக் கொள்ளுங்கள் என்று நீங்கள் வங்கியுடன் ஒப்பந்தம் வைத்துக் கொள்ளலாம்.

அடமான காலம் முடியும் முன்பே, வீட்டு உரிமையாளர் இறந்துவிட்டால், அதுவரை வழங்கப்பட்ட முதல் மற்றும் அதற்கான வட்டியை மட்டுமே எடுத்துக்கொண்டு மீதம் உள்ள தொகை அவரின் வாரிசுகளுக்குக் கொடுக்கப்படும்.

கணவன், மனைவி இருவரும் சேர்ந்து ஒரு வீட்டை “மறுதலை அடமானம்’ வைத்தால், இதில் ஒருவர் இறந்தால், மற்றவர் அடமானம் காலம் வரை தொடர்ந்து பணம் பெறலாம். அதற்குப் பிறகும் அவர் அவ்வீட்டில் வசிக்கலாம். இவ்விருவரின் இறப்புக்குப் பிறகே வீட்டை விற்று வங்கி தனக்குச் சேர வேண்டிய பணத்தை எடுத்துக் கொண்டு, மீதியை அவர்களின் வாரிசுகளுக்கு அளிக்கும்.

ஏற்கெனவே வீட்டின் மீது கடன் வாங்கியவர்கள் இத்திட்டத்தில் பங்கு பெற முடியுமா? முடியும். ஏற்கெனவே பெற்ற கடன் மற்றும் வட்டிக்கான தொகையை முதல் தவணையாகப் பெற்று, அதனை அடைக்க வேண்டும். அதன் பின்னர் மாதம்தோறும் ஒரு குறிப்பிட்ட தொகையைப் பெறலாம். ஆனால், முதல் தவணைக்கான வட்டியும், மாதம்தோறும் கணக்கிடப்பட்டு கடைசியில் பெறப்படும். மறுதலை அடமானத்தில் ஒருவர் மாதம்தோறும் பெறும் பணத்தின் அளவு அவர் சொத்தின் மதிப்பு, வயது, வட்டிவீதம் போன்றவற்றைப் பொறுத்தே அமையும். ஒருவரின் சொத்து மதிப்பு அதிகமாக இருப்பின், அவரின் வயது அதிகமாக இருப்பின், (ஏனெனில், அவருக்கு மிகக் குறைந்த ஆண்டுகள் மட்டுமே பணம் கொடுக்க வேண்டியிருக்கும்), வட்டிவீதம் குறைவாக இருப்பின் அவர் மாதம்தோறும் பெறும் பணத்தின் அளவு அதிகமாக இருக்கும்.

இந்தியாவில் வாழ்நாள் நீட்டிப்பு அதிகமாகிக் கொண்டே இருக்கிறது. ஆகவே, பணி ஓய்வுக்குப் பிறகு பலர் நீண்ட நாள்கள் வாழ்கின்றனர். இன்றைய சூழலில் வீடு மட்டுமே ஒருவரின் வாழ்நாள் சேமிப்பாக உள்ளது. பணி ஓய்வூதியம் கூட போதுமானதாக இல்லை.

எனவே, “மறுதலை அடமானம்’ முறையை மிக முக்கியத் திட்டமாக அரசு செயல்படுத்த வேண்டும். மேலும், இத்திட்டத்தில் கடன் பெறும் முதியவர்களுக்குக் குறைந்த வட்டியில் கடன் கொடுத்தால் மட்டுமே அவர்களின் பொருளாதாரத் தேவையைப் பூர்த்தி செய்ய முடியும்.

(கட்டுரையாளர்: மாநிலத் திட்டக்குழு உறுப்பினர்).

Posted in 401(k), Aging, Annuity, Banking, Bonds, Economy, Elderly, Expenses, Finances, Funds, Health, House, Income, Interest, IRA, Loan, MF, Mortgage, Mutual Funds, NCC, NSS, Nursing, pension, Planning, Poor, Rent, Retirement, Rich, Savings, Shares, Stocks | Leave a Comment »

Protecting the elderly – How to avoid the parents becoming homeless by law

Posted by Snapjudge மேல் மார்ச் 23, 2007

பெற்றோரைப் பாதுகாக்க…

வயதான பெற்றோரைப் பாதுகாப்பதற்கான மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த மசோதாவின்படி, 60 வயதான பெற்றோரைப் பாதுகாப்பதற்குப் பொறுப்பான ஒருவர் அதைக் தட்டிக் கழித்தால் 3 மாத சிறைத் தண்டனை அல்லது ரூ.5,000 அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும். இது தொடர்பான பிரச்சினைகளுக்கு சட்ட வழிகளில் தீர்வு காணவும் ஏற்பாடு செய்யப்படும். உத்தேச சட்டத்தை மதிக்காவிட்டால் அது பற்றி விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க முதல்நிலை மாஜிஸ்திரேட் அந்தஸ்தில் உள்ளவருக்கு அதிகாரம் அளிக்கப்படும்.

கிராமப் பகுதிகளைப் பொருத்தவரை முதியோரின் புகார்களை விசாரித்துத் தீர்வு காண குறைதீர் மன்றம் அமைக்க வகை செய்யப்படுகிறது. இதன்படி துணை டிவிஷனல் அதிகாரிகள் தலைமையில் குழு விசாரித்து வாரிசுகளின் வருவாய் அம்சத்தைக் கணக்கில் கொண்டு பராமரிப்புத் தொகை நிர்ணயம் செய்யப்படும். இவ்வாறு பராமரிப்புத் தொகை கோர 1973ம் ஆண்டு கிரிமினல் நடைமுறைச் சட்டம் இருந்தாலும், தீர்வு காண அதிக காலம், அதிக செலவு ஆகும் என்பதால் எளிமையான, செலவில்லாத, விரைவான தீர்வுக்கு மசோதா கொண்டு வரப்படுகிறது என்று சமூக நீதித்துறை அமைச்சர் மீராகுமார் தெரிவித்துள்ளார்.

இந்த மசோதா சட்டமானால், உள்ளூர் போலீஸ் நிலையங்கள் தங்கள் பகுதிக்குள் வசிக்கும் அனைத்து மூத்த குடிமக்கள் குறித்த விவரங்களையும் பதிவு செய்ய வேண்டியது கட்டாயமாக்கப்படும். மேலும் தனியே வசிக்கும் முதியோர் மற்றும் தம்பதிக்கு அதிகபட்ச பாதுகாப்பு அளிப்பதும் அவசியமாகும்.

நாட்டில் சாத்தியமான இடங்களில் மூத்த குடிமக்களைப் பராமரிக்க முதியோர் இல்லங்களைக் கட்டவும் முதியோர் இல்லம் போதிய அளவில் இல்லையென்றால் அவர்களுக்குப் பராமரிப்புச் செலவை மாநில அரசுகள் அளிக்கவும் வகை செய்யப்பட்டுள்ளது. மேலும் இலவச மருத்துவம், போக்குவரத்து, பொழுதுபோக்கு வசதிகளும் செய்து தரப்படும்.

2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி நாட்டில் உள்ள முதியோரின் எண்ணிக்கை 7 கோடியே 66 லட்சத்து 22 ஆயிரத்து 321 ஆகும். இது அதிகரித்துக் கொண்டே போகிறது. இதன்படி 2016ல் இது மக்கள்தொகையில் 10 சதவீதத்துக்கும் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவர்களில் பெரும்பாலானோர் அமைப்புசாரா துறையில் இருந்ததால் ஓய்வூதியம் அல்லது சமூகப் பாதுகாப்புத் திட்டங்களின் கீழ் உதவி கிடைக்க வழியில்லை.

சொந்த வீடு, நிலம் உள்ளிட்ட சொத்துகளின் பேரில் முதியோர்க்குக் கடன் வழங்கும் திட்டத்தை கிராமப் பகுதிகளுக்கு விரிவுபடுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்தக் கடனை அவர்கள் வாழும் வரை பயன்படுத்தவும் அவர்களுக்குப் பிறகு வாரிசுகள் கடனைத் திருப்பிச் செலுத்தி மீட்கவும், மீட்க இயலாவிட்டால் சொத்தை விற்று கடனைக் கழித்து எஞ்சிய தொகையை அவர்களிடம் அளிக்கவும் வகை செய்யப்பட்டுள்ளது

கோலாகலமாக விளங்கிய கூட்டுக் குடும்பங்கள் நாளாவட்டத்தில் சிதைந்து தனித்தனிக் குடும்பங்களான பிறகுதான் முதியோர் தொடர்பான பிரச்சினைகள் விஸ்வரூபம் எடுக்கத் தொடங்கின. மேலும் குறைந்து வரும் சகிப்புத் தன்மை, மனத்தை விட பணம், பகட்டுக்குக் கொடுக்கும் முக்கியத்துவம் ஆகியனவும் பிரச்சினைகளை ஏற்படுத்துகின்றன.

மசோதா ஒருபுறம் இருக்க, பணத்தை விட பாசத்தையே பெரும்பாலான பெற்றோர் விரும்புகின்றனர். பெற்றோரைப் புறக்கணிப்போருக்கு இந்த மசோதா ஓர் எச்சரிக்கையாக இருக்கலாம். ஆனால் எதிர்பார்க்கும் பலன் கிடைக்குமா என்பது காலப்போக்கில்தான் தெரியும்.

Posted in 401(k), Annuity, Care, Child, Children, City, Complaints, Elders, family, Finance, Fine, Home, Homeless, House, in-laws, Income, Individual, IRA, Judge, Justice, Kids, Law, Life, Money, Nursing, Nursing homes, Order, parents, pension, Planning, Preotect, Preotection, Retirement, Rural, Suburban, Village, Wife | Leave a Comment »

India wants govt pension scheme to invest in shares

Posted by Snapjudge மேல் ஜனவரி 23, 2007

ஓய்வூதிய நிதியை பங்குச் சந்தையில் முதலீடு செய்ய இந்திய அரசு முடிவு

முதலமைச்சர்கள் மாநாட்டில் இந்தியப் பிரதமர் மன்மோஹன் சிங், நிதியமைச்சர் ப. சிதம்பரம் மற்றும் உள்துறை அமைச்சர் சிவ்ராஜ் பட்டீல்
முதலமைச்சர்கள் மாநாட்டில் இந்தியப் பிரதமர் மன்மோஹன் சிங், நிதியமைச்சர் ப. சிதம்பரம் மற்றும் உள்துறை அமைச்சர் சிவ்ராஜ் பட்டீல்

இந்தியாவில், அரச பணியாளர்களுக்கான புதிய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் திரட்டப்படும் நிதியின் ஒரு பகுதியை பங்குச் சந்தையில் முதலீடு செய்ய இந்திய அரசு முடிவு செய்துள்ளது.

பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் புதுடில்லியில் திங்கட்கிழமை நடைபெற்ற மாநில முதலமைச்சர்கள் மற்றும் நிதியமைச்சர்கள் கூட்டத்துக்குப் பிறகு, மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் செய்தியாளர்களிடம் இதை அறிவித்தார்.

கடந்த 2004 ஆம் ஆண்டு ஜனவரி முதல் திகதிக்குப் பிறகு மத்திய அரசுப் பணியில் சேர்க்கப்பட்ட அனைவரும் புதிய ஓய்வூதியத் திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர். அத்திட்டத்தில் திரட்டப்படும் நிதியில், ஐந்து சதவீதத்தை பங்குச் சந்தையிலும், அரசுப் பத்திரங்களிலும் முதலீடு செய்யலாம் என்பது அரசின் திட்டம்.

இதற்கு, பிரதான எதிர்க்கட்சியான பாரதீய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநயாகக் கூட்டணி ஆளும் மாநிலங்கள் உள்பட 19 மாநில அரசுகள் ஆதரவு தெரிவித்துள்ளன. இடதுசாரிக் கட்சிகள் ஆட்சியில் உள்ள மேற்கு வங்கம், கேரளம் மற்றும் திரிபுரா மாநிலங்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன.

இருந்த போதிலும், அந்த நிதியை பங்குச் சந்தையில் முதலீடு செய்வதற்கான, இடைக்கால முதலீட்டு முறை தொடர்பான அரசு அறிக்கை விரைவில் வெளியிடப்படும் என்று சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் அமைப்பது தொடர்பான மசோதா நாடாளுமன்றத்தில் நிலுவையில் உள்ளது. அதை நிறைவேற்ற, இடதுசாரிக் கட்சிகளின் ஆதரவு தேவைப்படும் நிலையில், அந்த மசோதாவுக்கும் அக்கட்சிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன.

அனைத்து அரசியல் கட்சிகளுடனும் ஆலோசனை நடத்தி, ஒரு சில திருத்தங்களுடன் அந்த மசோதாவை நிறைவேற்றுவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.

புதிய ஓய்வூதிய நிதியை பங்குச் சந்தையிலும், அரசுப் பத்திரங்களிலும் முதலீடு செய்ய மாநில அரசுகள் ஒத்துழைப்புத்தர வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங் இன்றைய கூட்டத்தில் கோரிக்கை விடுத்தார். ஆனால், இடதுசாரிக் கட்சிகள் தங்களது நிலையில் பிடிவாதமாக உள்ளன.


பதறிய காரியம் சிதறும்

புதிய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் திரட்டப்படும் நிதியை பங்குச் சந்தையில் முதலீடு செய்ய மத்திய அரசு முடிவெடுத்திருப்பது ஒரு புதிய அச்சுறுத்தல்தான்.

வெறும் 5 சதவீதம் மட்டுமே பங்குச் சந்தையில் முதலீடு செய்யப்படும் என்பது கூடாரத்துக்குள் தலையை மட்டும் நுழைத்துக்கொள்ள அனுமதி கேட்ட ஒட்டகத்தின் கதை போலத்தான். பெரும் எதிர்ப்புகளைத் தவிர்க்கவே, “5 சதவீதம் மட்டுமே’ என்று அறிவித்துள்ளனர். அடுத்த ஆண்டு பல்வேறு காரணங்களைச் சொல்லி, மெல்ல 10 சதவீதமாக உயர்த்துவார்கள். பின்னர் 15….

பங்குச் சந்தையில் முதலீடு செய்வது தவறானதா என்று கேட்டால், அது தவறு இல்லைதான். ஆனால் பங்குச் சந்தையில் ஏற்றத் தாழ்வுகள் உண்டு. சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப, பங்குகளின் விலை ஏறும் அல்லது இறங்கும். பெரும் வீழ்ச்சியில் சிக்கவும் வாய்ப்பு உள்ளது. கணிப்புகளும், “பார்த்துவிடலாம்’ என்ற துணிச்சலும்தான் பங்குச் சந்தையின் முதுகெலும்பு. இந்தத் துணிச்சலான முடிவை மேற்கொள்ளப் போகிறவர்கள் யார்? அரசு அதிகாரிகள். அரசியல்வாதிகளின் நெருக்குதலுக்கு ஆட்பட்டு இந்த அதிகாரிகள் தவறான பங்குகளில் முதலீடு செய்யும் வாய்ப்புகள் அதிகம்.

ஓய்வூதிய நிதிக்கு வட்டி கொடுக்க முடியவில்லை என்பதால்தான் பங்குச் சந்தைமூலம் அதிக லாபம் பெறும் முடிவுக்கு மத்திய அரசு தள்ளப்பட்டிருக்கிறது என்பது வெளிப்படை.

ஓய்வூதிய நிதியின் பெரும்பகுதி அரசுத் திட்டங்களில் 8 சதவீத வட்டிக்கு முதலீட்டுக் கடனாக வழங்கப்படுகிறது. ஆனால் ஓய்வூதியதாரர்களுக்கு நடப்பாண்டுக்கு 8.5 சதவீத வட்டி தர வேண்டியிருக்கிறது. இந்த 0.5 சதவீத வட்டி வேறுபாட்டினால் அரசுக்கு ஏற்படும் கூடுதல் நிதிச்சுமை ஆண்டுக்கு ரூ.450 கோடி.

இந்தப் பிரச்சினைக்குத் தீர்வுகாண, அரசுத் திட்டங்களுக்கு அளிக்கப்படும் நிதிக்கு 9 சதவீத வட்டி வசூலிக்கலாம் என்று தொழிற்சங்கங்கள் சார்பில் ஆலோசனை தெரிவிக்கப்பட்டது. ஆனால், வங்கிகள் அதிகபட்சம் 8.5 சதவீதத்துக்கு அரசுத் திட்டங்களுக்கு கடன் தரத் தயாராக இருப்பதால், ஓய்வூதிய நிதியை வாங்க முன்வர மாட்டார்கள். இதனால் அரசுக்கு பலமடங்கு நிதிச்சுமை ஏற்படும். ஓய்வூதியதாரர் நிதிக்கு அளிக்கப்படும் வட்டியை, வங்கிகளுக்கு இணையாக குறைப்பதற்கும் கடும் எதிர்ப்பு இருக்கிறது.

புதிய பொருளாதாரக் கொள்கையின் விளைவாக ஒப்பந்தத் தொழிலாளர் முறை பெருகி வரும் இந்நாளில் ஓய்வூதியத் திட்டம், விபத்துக் காப்பீடு, மருத்துவச் செலவு காப்பீடு என்பது ஒரு தொழிலாளியின் தனிப்பட்ட சேமிப்பாக, தனிப்பட்ட அக்கறை சார்ந்த விஷயமாக மாறி வருகிறது. இதற்கான திட்டங்களை (உதாரணமாக- பி.பி.எப், மாத வருவாய்த் திட்டம்) பாரத ஸ்டேட் வங்கி, அஞ்சல்துறை மற்றும் பிற வங்கிகள் செயல்படுத்தி வருகின்றன.

இத்தகைய திட்டங்களில் சேர்வோர் தங்கள் கணக்கிலிருந்து குறைந்த வட்டிக்கு கடன் பெற்று, அதனை தாங்கள் விரும்பும் மாற்றுத் திட்டங்களில் (பங்குச் சந்தை உள்பட) அவர்களாகவே முதலீடுகளைச் செய்துகொள்கின்றனர். இதன் மூலம் பணத்தை இரட்டிப்பாக்கினாலும், பணத்தை இழந்தாலும் அது அவர்களை மட்டுமே பாதிக்கும் விஷயமாக இருக்கிறது.

ஆனால். சுமார் 40 கோடி தொழிலாளர்களின் நிதியை பங்குச் சந்தையில் முதலீடு செய்து, அதில் எதிர்பாராத இழப்புகள் நேர்ந்தால் அதை யார் ஏற்பது? அரசா, ஓய்வூதியதாரர்களா? அரசு முதலில் இதைத் தெளிவுபடுத்த வேண்டும். அரசின் இந்த முடிவை இடதுசாரிகள் எப்படி எடுத்துக் கொள்ளப் போகிறார்கள் என்பது போகப்போகத் தெரியும்.

Posted in 401(k), Economy, Finance, Funds, markets, pension, Shares, Stocks, Trading | Leave a Comment »