Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘17’ Category

TN Govt employees to enjoy five more fully-paid Holiday time

Posted by Snapjudge மேல் நவம்பர் 16, 2006

தமிழக அரசு ஊழியர்களுக்கு விடுமுறை நாட்கள் அதிகரிப்பு: ஆண்டு விடுமுறை மொத்தம் 22 நாட்கள்

அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

கடந்த ஆட்சியில் 2004-ம் ஆண்டு முதல் அரசு அலுவலர்களுக்கான விடுமுறை நாட்களை ஆண்டு ஒன்றுக்கு 22 நாட்களில் இருந்து 17 நாட்களாகக் குறைக்கப்பட்டது,

இதனால் சில பண்டிகைகள் மற்றும் மத விழாக்களுக்கான விடுமுறைகள் வழங்கப்படாததால் பல்வேறு சங்கங்களின் அமைப்புகளிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கைகளையேற்று, கடந்த ஆட்சியில் நீக்கப்பட்டிருந்த பின்வரும் விடுமுறை நாட்களை மீண்டும் விடுமுறை நாளாக கருதப்படும் என்று முதல் – அமைச்சர் கருணாநிதி அறிவித்துள்ளார்.

கடந்த ஆட்சியில் விடுமுறை ரத்து செய்யப்பட்டு தற்போது விடுமுறை நாட்களாக கூடுதலாக மீண்டும் அறிவிக்கப்பட்டுள்ள நாட்கள் வருமாறு:-

1. ஜனவரி 1 -ந் தேதி – புத்தாண்டு தினம்.

2. ஜனவரி 17 -ந் தேதி – உழவர் திருநாள்.

3. மார்ச் 19 – ந் தேதி – தெலுங்கு புத்தாண்டு தினம்.

4. மார்ச் 31 – ந் தேதி – மகாவீர் ஜெயந்தி.

5. ஏப்ரல் 1 – ந் தேதி – மிலாது நபி.

இவ்வாறு செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Posted in 17, 22, Day off, employees, Government, Govt, Holiday, Karunanidhi, Mahavir Jayanthi, Milad un Nabi, Tamil Nadu, Telugu, Vacation, workers | 1 Comment »

17 Volunteers of Action Against Hunger Killed – Responsible Party

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 1, 2006

போர் நிறுத்தக் கண்காணிப்பு குழுவின் அறிக்கை தவறு மற்றும் ஆதாரமற்றது – இலங்கை அரசு

இலங்கை திருகோணமலை மாவட்டம் மூதூரில் ஆகஸ்ட் 4 ஆம் திகதி பிரான்ஸ் நாட்டு ஆக்சன் எகெய்ன்ஸ்ட் ஹங்கர் என்ற தன்னார்வத்தொண்டர் அமைப்பின் 17 உள்ளூர் பணியாளர்கள் படுகொலை செய்யப்பட்டதற்கு அரச ஆயுதப்படையினரே காரணம் என யுத்த நிறுத்தக்கண்காணிப்புக் குழு நேற்றையதினம் வெளியிட்ட அறிக்கையினை அடுத்து, இலங்கையில் ஐ.நா அமைப்பு தனது பணிகளை இடைநிறுத்தக்கூடும் என அந்த அமைப்பு வெளியிட்ட கருத்துக் குறித்து உடனடியாகக் கருதுக்கள் எதனையும் வெளியிட மறுத்துள்ள இலங்கை அரசு, கண்காணிப்புக் குழுவினது அறிக்கையினை தவறு என்றும் ஆதாரமற்றது என்றும் சாடியிருக்கிறது.

இந்த விவகாரத்தினை வெளிநாட்டமைச்சும், சமாதான செயலகப் பணியகமும் கையாளவுள்ளது என்றும் ஐ.நா வின் இந்த நிலைப்பாடு குறித்தும், அதனால் ஏற்படக்கூடிய விளைவுகள் பற்றியும் கருத்துக்களைப் பற்றிக் அரசின் கருத்தினைத் தெரிவிப்பதற்கு இன்னமும் காலம் தேவைப்படுகிறது. என்று அரசின் சார்பில் பேசவல்ல அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல கூறினார்.

இது குறித்து மேலும் கருத்துத் தெரிவித்த அமைச்சர் ரம்புக்வெல்ல, பிரேத பரிசோதனையை நடத்திய அனுராதபுரம் மாவட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கையின் பிரகாரம் இந்த 17 பேரும் ஆகஸ்ட் 3ஆம் திகதி பிற்பகலோ அன்றி 4 ஆம் திகதி அதிகாலையோ தான் கொல்லப்பட்டிருக்க வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார். இக்காலப்பகுதியின் போது மூதூர் பகுதி புலிகளின் கட்டுப்பாட்டின் கீழ்தான் இருந்தது என்றும், 5ஆம் திகதி தான் இராணுவம் அப்பகுதிகளை மீளவும் கைப்பற்றியது என்றும் கூறினார்.

Posted in 17, Action Against Hunger, Anuradhapuram, August 4, Ceylon, Eelam, Eezham, France, JVP, LTTE, Moodhur, Moodoor, Moothur, Party, Prabhakaran, Responsible, Sri lanka, Srilanka, Tamil, Triconamalee, Volunteering | Leave a Comment »