Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 28, 2008
காங்கோவில் மோதல் காரணமாக பல்லாயிரக்கணக்கானோர் வெளியேற்றம்
காங்கோ ஜனநாயக குடியரசின் கிழக்கு பகுதியில் அரச படைகளுக்கும் கிளர்ச்சிக் குழுவிலிருந்து பிரிந்து சென்ற தளபதியான லாரண்ட் என்குண்டாவின் விசுவாசிகளுக்கும் இடையே நடைபெறும் கடும் சண்டைகளின் காரணமாக பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்களது இருப்பிடங்களை விட்டு வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
அந்தப் பகுதியில் இடம் பெயர்ந்தவர்களுகான ஒரு முகாம் தற்போது ஆளில்லாமல் இருக்கிறது என்றும், அங்கிருந்த மக்கள் அந்தப் பிராந்தியத்தின் தலைநகரான கோமாவை நோக்கி இடம்பெயரத் தொடங்கியுள்ளனர் என்றும் கிழக்கு காங்கோவில் இருக்கும் பிபிசியின் செய்தியாளர் கூறுகிறார்.
அரச துருப்புக்கள் பின்வாங்குவது போலத் தெரிகிறது என்றும், ஞாயிற்றுக்கிழமை கைப்பற்றப்பட்ட இராணுவத் தளத்தின் முழு கட்டுப்பாடும் கிளர்ச்சிப் படையினர் வசம் உள்ளதாகவும் எமது செய்தியாளர் மேலும் கூறுகிறார்.
ஐக்கிய நாடுகளின் அமைதி காக்கும் படையினர் தங்களை காப்பாற்றவில்லை என்று கூறி ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் கோமாவிலுளள ஐ நா வின் தலைமை அலுவலகம் மீது கற்களை எறிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Posted in Politics | குறிச்சொல்லிடப்பட்டது: africa, Aid, Congo, Displaced, DR, Govt, IDP, Power, Rebels, UN, World | Leave a Comment »
Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 28, 2008
எட்டு பேர் கொல்லப்பட்ட ஹெலிகாப்டர் தாக்குதலுக்கு சிரியா கண்டனம்
 |
|
தாக்குதலில் கொல்லப்பட்டவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்படுகிறது |
சிரியாவில் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று ஹெலிகாப்டரிலிருந்து நடத்தப்பட்டிருந்த ஒரு தாக்குதல் குறித்து விசாரிக்கப்பட வேண்டுமென அமெரிக்காவிடமும் இராக்கிடமும் சிரியாவின் வெளியுறவு அமைச்சர் வாலித் அல்மொஅல்லம் வலியுறுத்தியுள்ளார்.
எட்டு பேர் கொல்லப்பட்ட இந்தத் தாக்குதலை அமெரிக்கர்கள்தான் நடத்தியதாக சிரியா பழிசுமத்தியுள்ளது.
இத்தாக்குதல் ஒரு குற்றச்செயல் என்றும் ஒரு பயங்கரவாத அடாவடித்தனம் என்றும் லண்டனில் பேசிய அமைச்சர் மொஅல்லம் வருணித்துள்ளார். இதுபோன்ற தாக்குதல் மறுபடியும் நிகழுமானால், தனது நிலப்பரப்பை சிரியா தற்காத்துக்கொள்ளும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
இத்தாக்குதல் குறித்து அமெரிக்கா உத்தியோகபூர்வமாக அறிக்கை எதனையும் வெளியிடவில்லை என்றாலும் பெயர் வெளியிட விரும்பாத இராணுவ வட்டாரங்களை மேற்கோள்காட்டி வாஷிங்டனிலிருந்து வெளியாகும் தகவல்கள், இத்தாக்குதல் அல்கைதாவினருடன் தொடர்புடைய வெளிநாட்டு போராளிகளை இலக்குவைத்து அமெரிக்க விசேடப் படையினரால் நடத்தப்பட்டிருந்ததாகக் கூறுகின்றன.
Posted in Govt, Law, Politics | குறிச்சொல்லிடப்பட்டது: Al-Queda, America, Citizens, Damascus, dead, Democracy, Gulf, Iran, Islam, King, Muslims, Osama, people, Power, Relations, Religion, Rule, Syria, Terrorists, US, USA, World | Leave a Comment »