Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for ஒக்ரோபர் 16th, 2008

Malaysia bans ethnic Indian protest group: Hindraf branded as security threat: Hindu Rights Action Force Outlawed

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 16, 2008

மலேசியாவில் ஹிண்ட்ராப் அமைப்புக்கு தடை

மலேசியாவில் வாழும் சிறுபான்மை இந்திய வம்சாவளிகளுக்கு அதிக உரிமைகள் வேண்டும் என்று கோரி போராடி வரும் ஹிண்ட்ராப் அமைப்பை மலேசிய அரசு தடை செய்துள்ளது.

ஹிண்ட்ராப் எனப்படும் இந்து மக்கள் உரிமை நடவடிக்கை குழு தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளதாக உள்துறை கூறியுள்ளது. மலேசியாவில் வாழும் இருபது லட்சம் இந்திய வம்சாவளிகளுக்கு வேலைகளிலும், கல்வி வாய்ப்புகளிலும் அதிக வாய்ப்புகள் கிடைக்க வேண்டும் என்ற கோரிக்கை வைத்து ஹீண்ட்ராப் தீவிரமான பிரச்சாரத்தை மேற்கொண்டிருந்தது.

மலேசியாவின், உள்நாட்டு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் ஹிண்ட்டிராப் அமைப்பின் 5 தலைவர்கள் காலவரையின்றி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். வரலாறு காணாத பெருமளவிலான மக்கள் பங்கேற்ற எதிர்புப்பு போராட்டங்களுக்கு ஏற்பாடு செய்தமைக்காக அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த எதிர்ப்பு போராட்டங்களில் கலந்து கொண்ட இந்திய வம்சாவளியினர் காவல் துறையுடன் மோதியும் உள்ளனர்.


Posted in Tamil | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , , , , , , , , | 1 Comment »

Aravind Adiga: Novel About India Wins the 2008 Man Booker Prize: The White Tiger

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 16, 2008


சென்னையில் பிறந்த இந்திய எழுத்தாளருக்கு புக்கர் இலக்கிய விருது வழங்கப்பட்டுள்ளது

புக்கர் பரிசு பெறும் அரவிந்த் அடிகா
புக்கர் பரிசு பெறும் அரவிந்த் அடிகா

உலகளவில் இலக்கிய வட்டாரத்தில் மதிப்பு வாய்ந்த ஒரு விருதாகக் கருதப்படும் மான் புக்கர் பரிசு இந்த ஆண்டு இந்திய எழுத்தாளரான அரவிந்த் அடிகாவுக்கு வழங்கப்பட்டுள்ளது.

33 வயதான அடிகா சென்னையில் பிறந்து தற்போது மும்பையில் வாழ்ந்து வருகிறார். இந்த ஆண்டின் பரிசுக்கான போட்டியின் இறுதிச் சுற்றில் இடம் பெற்றிருந்த ஆறு பேரில். மிகவும் வயது குறைந்தவர் அடிகாததான்.

கிராமத்து ஏழ்மையிலிருந்து மீண்டு நகரத்தில் வளமான வாழ்க்கைக்கு உயர்ந்த ஒரு மனிதனின் கதைதான் வெள்ளைப் புலி புதினத்தில் கூறப்பட்டுள்ளது.

எமாற்றுதல், ஊழல் மற்றும் இறுதியாக கொலையின் மூலமே ஒருவன் எவ்வாறு இப்படி உயர்ந்தான் என்பதை அந்தப் புதினம் வெளிக் கொண்டு வருகிறது.

யாருக்கு பரிசு என்பதை முடிவு செய்வது மிகவும் கடினமான விடயமாக இருந்தது என்றும் எனினும் வெள்ளிப் புலி புதினம் ஆழமான உண்மைகளை கொண்ட ஒரு புத்தகம் என்று தேர்வுக் குழுவின் தலைவரான மைக்கேல் போர்ட்டிலோ கூறினார்.

Posted in Tamil | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , | 1 Comment »