Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for ஒக்ரோபர் 1st, 2008

India’s northeast: Agartala market bombings: Serial blasts in Tripura, 2 dead, 100 injured

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 1, 2008

இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான திருபுராவில் குண்டு வெடிப்பில் இருவர் பலி

திரிபுராவில் இந்திய வங்கதேச எல்லைப் பகுதி
திருபுராவில் இந்திய வங்கதேச எல்லைப் பகுதி

இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான திரிபுரா தலைநகர் அகர்தலாவில் புதன்கிழமை இரவு நடந்த தொடர் குண்டுவெடிப்புச் சம்பவங்களில் இரண்டு பேர் உயிரிழந்திருக்கிறார்கள்.

மக்கள் கூட்டம் மிகுந்த மார்க்கெட் பகுதி, பஸ் நிலையம் ஆகிய இடங்களில் இந்த குண்டுவெடிப்புக்கள் நடந்துள்ளன. மொத்தம் நான்கு இடங்களில் அடுத்தடுத்து நடந்த குண்டுவெடிப்புக்களில் 40-க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருக்கிறார்கள்.

அங்கு பண்டிகை காலமாக இருப்பதால் தேவையான பொருட்களை வாங்க பொதுமக்கள் மார்க்கெட் உள்ளிட்ட பகுதிகளில் கூடியிருந்த நேரத்தில் இந்த குண்டுகள் வெடித்திருக்கின்றன. அதனால், காயமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதாக அதிகாரிகள் கூறுகிறார்கள்.

இந்த குண்டுகள் குறைந்தசக்தி கொண்டவை என்று ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், அதற்குக் யார் காரணம் என்பது குறித்து இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.

இந்திய–வங்கதேச எல்லையில் உள்ள திரிபுரா மாநிலத்தில், வங்கதேசத்தைச் சேர்ந்த இஸ்லாமிய பயங்கரவாதிகளுக்கு இந்தச் சம்பவத்தில் தொடர்பு இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.


Posted in Tamil | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , | Leave a Comment »