அசாம் வெள்ளத்தில் மேலும் பலர் பலி
![]() |
![]() |
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஒரு பகுதி |
இந்தியாவின் அசாம் மாநிலத்தில் தற்போது ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கின் காரணமாக 8 பேர் கொல்லப்பட்டதுடன், கடந்த வாரம்முதல் இதனால் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 24 ஆக அதிகரித்துள்ளது.
அந்த மாநிலத்தின் 27 மாவட்டங்களில் 20 மாவட்டங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருப்பதுடன், 20 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் இடம்பெயர்ந்தும் உள்ள நிலையில் அங்கு நிலைமை இன்னமும் மோசமாக இருப்பதாக அதிகாரிகள் கூறுகிறார்கள்.
ஒற்றைக்கொம்புடைய காண்டா மிருகத்துக்குப் பெயர்போன, அந்த மாநிலத்தின் காசிரங்கா தேசியப் பூங்காவின் அரைவாசி நீரில் மூழ்கியுள்ளது.
தப்பிச்செல்ல முயன்ற 4 காண்டாமிருகங்கள் வெள்ளத்தில் பலியானதாக அதிகாரிகள் கூறுகிறார்கள்.