Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Conflict between Georgia and South Ossetia

Posted by Snapjudge மேல் ஓகஸ்ட் 10, 2008

தெற்கு ஒஸ்ஸெட்டியாவில் சண்டையை நிறுத்தும்படி ஜோர்ஜியா தமது துருப்பினருக்கு உத்தரவிட்டுள்ளதாகக் கூறுகிறது

ஜோர்ஜியா, தெற்கு ஒஸ்ஸெட்டியாவிலுள்ள தமது படையினருக்குப் போரை நிறுத்தும்படி ஆணையிட்டிருப்பதாக திப்லிசியிலுள்ள ரஷ்யத் தூதரகத்துக்குத் தெரிவித்துள்ளது.

அத்துடன் போரை முடிவுக்குக் கொண்டுவருவது தொடர்பாக உடனடியாகப் பேச்சுவார்த்தைகளை தொடங்கத் தாங்கள் தயார் என்று ரஷ்யாவுக்குத் தெரிவித்துள்ளதாகவும் ஜோர்ஜியா அறிக்கை வெளியிட்டுள்ளது.

ஜோர்யியப் படைகள் தெற்கு ஒஸ்ஸெட்டியாவிலிருந்து விலகிவிட்டன என்றும், தற்போது அந்த நகரம் ரஷ்யப் படைகளின் முழுக் கட்டுப்பாட்டில் உள்ளது எனவும் ஜோர்ஜியா கூறுகிறது.

ஆனால் பெரிய பீரங்கிகள் விலகியதைத் தாங்கள் கண்டிருந்தாலும், ஜோர்ஜியப் படைகள் இன்னமும் அப்பகுதியில் உள்ளன என்று சீனா கூறுகிறது. கூடவே ஜோர்ஜயிப் படைகள் முழதாக விலகாது போர்நிறுத்தப் பேச்சுக்கு வாய்ப்பில்லை என்றும் ரஷ்யா கூறியுள்ளது.

இதற்கிடையே ஜோர்ஜியாவின் தலைநகர் திப்லிசியின் புறநகர் பகுதியிலுள்ள படை விமானத் தளம் மீது ரஷ்ய விமானம் குண்டுவீசியதாக ஜோர்ஜியா கூறியுள்ளது.

படைக் குவிப்பு செய்வதாக அப்காஸிய அதிகாரிகள் கூறுகின்றனர்






ஜோர்ஜியாவிடமிருந்து பிரிந்துபோன இன்னொரு பகுதியான அப்காஸியாவின் அதிகாரிகள் தாங்கள் முழு அளவில் படைகளைக் குவிப்பதாகத் தெரிவித்துள்ளனர். தமது வட பகுதி நகரான கொடோரிப் பள்ளத்தாக்கிலிருந்து ஜோர்ஜியப் படைகளை விரட்ட சுமார் ஆயிரம் துருப்பினரை அனுப்பியுள்ளதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.

அப்பகுதியில் இருக்கும் ஐ.நா. பாதுகாப்புக் கண்காணிப்புப் படையினரை விலக்கிக்கொள்ளும்படி ரஷ்யா ஐ.நா.வைக் கேட்டுள்ளது.

அப்பகுதிக்கு ரஷ்யா ஆயிரக்கணக்கான படைகளை அனுப்பியுள்ளது என ஜோர்ஜியா முறைப்பட்டுள்ளது.

அமெரிக்கா ரஷ்யாவைக் கடிந்துள்ளது

ஜோர்ஜியாவுடன் நடக்கும் மோதலில் ரஷ்யா எடுத்துள்ளது அளவு மிஞ்சிய ஆபத்தான நடவடிக்கை என அமெரிக்க அதிபர் தரப்புக் கடிந்துள்ளது.

அதிபர் புஷ் அவர்களோடு ஒலிம்பிக் போட்டிகள் நடக்கும் சீனாவில் இருக்கின்ற அமெரிக்கத் தேசிய பாதுகாப்பு ஆலோசகரான ஜேம்ஸ் ஜெஃப்ரி அவர்கள், ரஷ்யாவின் நடவடிக்கைகள் அடங்காமல் அதிகரிக்கும் பட்சத்தில் அவை அமெரிக்கா, ரஷ்யா இடையிலான நீண்டகால உறவுகளைக் கணிசமாகப் பாதிக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.

பிரெஞ்சு அதிபர் சர்க்கோசி அவர்களோடு தொலைபேசியில் பேசியிருந்த ஜெர்மனியின் சான்சல்லர் அஞ்செலா மெர்க்கல் அவர்கள், நிபந்தனைகள் எவையுமின்றி அப்பகுதியில் போர் உடன் நிறுத்தப்பட வேண்டும் என்றுள்ளார்.

போப்பாண்டவர் பெனடிக்ட் அவர்களும் போரை நிறுத்தும்படி கேட்டுள்ளார்.


ரஷ்ய தாக்குதலைத் தொடர்ந்து ஜார்ஜியாவில் யுத்த நிலை பிரகடனம்

ஜார்ஜியாவிலே பிரிவினை கோரும் தெற்கு அஸ்ஸெட்டியா பிராந்தியத்தின் அருகில் அமைந்துள்ள கோரி நகரில் ரஷ்ய விமானங்கள் தாக்குதல் நடத்தியுள்ள நிலையில், ஜார்ஜியாவில் யுத்த நிலையை பிரகடனம் செய்யும் அதிபரின் ஆணைக்கு அந்நாட்டின் நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.

ஜார்ஜியத் துருப்புகள் குவிக்கப்பட்டுவருகின்ற இராணுவ நிலைகளை இலக்குவைத்து ரஷ்ய விமானங்கள் தாக்கின என்றாலும், ஒரு தாக்குதலில் இரண்டு அடுக்குமாடிக் குடியிருப்புகள் சேதப்படுத்தப்பட்டிருந்தன.

இதில் பொதுமக்கள் பலர் கொல்லப்பட்டும் காயப்படுத்தப்பட்டும் இருக்கிறார்கள். தங்களது விமானங்கள் இரண்டு சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளன என்பதையும் ரஷ்யா உறுதிப்படுத்தியுள்ளது.

தெற்கு அஸ்ஸெட்டியாவின் தலைநகர் ஷின்வாலியைக் முற்றுகையிட ஜார்ஜியர்கள் செய்த முயற்சிக்குப் பின்னர், அந்நகரின் கட்டுப்பாட்டை ரஷ்யத் துருப்பினர் கைப்பற்றியுள்ளதாகவும் ரஷ்யா தெரிவித்துள்ளது.

அப்காஸியப் பிரிவினைவாதிகளும் ஜார்ஜியப் படைகள் மீது தாக்குதல்

ஜார்ஜியாவில் இருக்கின்ற மற்றுமொரு பிரிந்துபோன பிராந்தியமான அப்காஸியாவில் இருக்கின்ற பிரிவினைவாதிகள், கொடொரி கோர்ஜில் உள்ள ஜோர்ஜியப் படைகள் மீது தாம் வான் மற்றும் பீரங்கித் தாக்குதல்களை ஆரம்பித்துள்ளதாக கூறுகிறார்கள்.

கோர்ஜில் இருக்கின்ற ஜார்ஜியப் படைகளை அங்கிருந்து விரட்டுவதே தமது நோக்கம் என்று, அப்காஸியாவில் சுய-அரசாங்கத்தை பிரகடனம் செய்துள்ள ஆட்சியாளர்களின் வெளியுறவு அமைச்சர் கூறியுள்ளார்.

இந்த கோர்ஜ் பகுதிதான் அங்கு, ஜார்ஜிய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் ஒரே பகுதியாகும்.

ஜார்ஜியா நிலவரம்: புஷ் கவலை

அதிபர் ஜார்ஜ் புஷ்

ஜார்ஜியாவில் உருவாகியுள்ள நெருக்கடி குறித்து தான் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளதாக அதிபர் புஷ் கூறுகின்றார்.

ஒலிம்பிக் துவக்கவிழாவில் கலந்துகொண்டிருந்த அதிபர் புஷ் பீய்ஜிங்கிலிருந்து கருத்து வெளியிடுகையில், ஜார்ஜிய நிலப்பரப்பின் ஒருமைப்பாடு மதிக்கப்பட வேண்டும் என்று தெரிவித்ததோடு, குண்டுவீசுவதை ரஷ்யா நிறுத்தவேண்டும் என்று வலியுறுத்தினார்.

ஆனால் ரஷ்யா, தனது முன்னாள் சோவியத் ஒன்றியப் பகுதிகளின் நிலப்பகுதிகளை அபகரிக்கும் எண்ணம் கொண்டிருக்கிறது என்ற குற்றம்சாட்டின் மூலம் ரஷ்ய நடவடிக்கையை ஜார்ஜியா ஊதிப்பெரிதுபடுத்துகிறது என்று ரஷ்யாவின் வெளியுறவு அமைச்சர் செர்ஜி லவ்ரொவ் தெரிவித்துள்ளார்.

இதனிடையே ஜார்ஜியத் துருப்பினருக்கு இராக்கில் சண்டையில் ஈடுபடுதற்கு பயிற்சியளித்துவந்த அமெரிக்க இராணுவக் குழுவினர் ஜார்ஜியத் தளங்களிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

 
%d bloggers like this: