Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

PAKISTAN: Taliban kidnap two local journalists on Restive Border

Posted by Snapjudge மேல் ஜூலை 5, 2008

பாகிஸ்தானில் செய்தியாளர் இருவர் தலிபான்களால் கடத்தப்பட்டுள்ளனர்

ஆப்கானிய எல்லைக்கு அருகேயுள்ள ஒரு பழங்குடியின மக்களின் பிராந்தியத்தில் வைத்து பாகிஸ்தானிய செய்தியாளர்கள் இருவரை தலிபான் போராளிகள் கடத்தியுள்ளனர்.

சுயாதீன நிருபரான ஸுபைர் ஷா மற்றும் புகைப்படப்பிடிப்பாளரான அக்தர் சும்ரோ ஆகியோரை மொஹ்மண்டில் வைத்து வியாழக்கிழமை பிற்பகலில் அவர்கள் கடத்தியுள்ளனர்.

தலிபான்களின் அனுமதியில்லாமல் அவர்கள் புகைப்படங்களைப் பிடித்ததாகச் செய்திகள் கூறுகின்றன.

அவர்களை விடுதலை செய்வதற்கான சமரசப் பேச்சுக்களுக்காக அங்கு பல பழங்குடியின மூத்தவர்கள் சென்றதாக பிராந்திய மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் என்ன செய்வது என்று முடிவெடுக்க தமது சபை கூடும் என்று பாகிஸ்தானிய தலிபான்கள் சார்பிலான பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

 
%d bloggers like this: