Malaysian Indian challenges dead brother’s conversion: Hindu family in court to reclaim relative’s body set to be buried as Muslim
Posted by Snapjudge மேல் ஜூன் 27, 2008
மலேசியாவில் “சடலமும் சர்ச்சையும்”
![]() |
![]() |
மலேசியாவில் தொடரும் மத சர்ச்சைகள் |
மலேசியாவில் தற்கொலை செய்துகொண்ட ஒருவரின் சடலத்துக்கு இறுதி கிரியைகளை செய்வது தொடர்பில், இந்து மதத்தைச் சேர்ந்த அவரது குடும்பத்தினருக்கும், அந்த நாட்டின் இஸ்லாமிய மத திணைக்களத்துக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இலங்கேஸ்வரன் என்னும் பிறப்பால் இந்துவான, 34 வயதுடைய, தற்கொலை செய்துகொண்ட இந்த நபர், தனது குடும்பதுக்கு தெரியாமலேயே இஸ்லாத்துக்கு மாறி விட்டதாகக் கூறும் இஸ்லாமிய திணைக்களம், அவரது இறுதி அடக்கத்துக்காக, சடலத்தை தம்மிடம் தர வேண்டும் என்று கூறுகிறது.
ஆனால், அவரது மத மாற்ற சான்றிதழில், அவரது கையெழுத்தோ அல்லது விரலடையாளமோ இல்லாத காரணத்தால், அவரது மதமாற்றத்தை ஏற்க முடியாது என்று கூறும் அவரது குடும்பத்தவர், அவரை தமது இந்து முறைப்படி அடக்கம் செய்ய சடலத்தை தம்மிடம் தரவேண்டும் என்று வழக்கு தாக்கல் செய்துள்ளனர்.
இஸ்லாமிய நாடான மலேசியாவில், சிறுபான்மையினத்தவர்களுக்கும், நிர்வாகத்துக்கும் இடையில் மத விவகாரத்தில் தொடருகின்ற முறுகலான உறவினை வெளிப்படுத்தும் அண்மைய சம்பவம் இதுவாகும்.
மரணத்தின் போதான பிணக்குகளை தவிர்ப்பதற்காக, மதம் மாறும் எவரும் அது பற்றி தமது குடும்பத்தினருக்கு அறிவிக்க வேண்டும் என்று மலேசிய பிரதமர் இந்த வருட முற்பகுதியில் கூறியிருநந்தார்.
ஆனால், இந்த அறிக்கை பின்பற்றப்படுவதில்லை என்றும், ஒருவரது சடலம் அவருக்கு முன்பின் தெரியாதவர்களால் உரிமை கோரப்படும் சம்பவம் ஒன்று மீண்டும் நிகழ்ந்துள்ளது என்றும் மத நல்லிணக்கு குழு ஒன்று கூறியுள்ளது.
மறுமொழியொன்றை இடுங்கள்