TamilNet: 16.06.08 Italian Tamils express support for Eezham homeland: “Diaspora Tamils in Northern Italy gathered Sunday for Pongku Thamizh rally held in Piazza Argentina in Milan, one of the largest cities in Italy, from 3:00 p.m. to 6:00 p.m., and voiced their support for Eezham Tamil homeland, Tamils right to self-determination, and protested against the Sri Lankan state’s aerial bombardment of Tamil civilians and rights violations of the Tamil people in Sri Lanka. Burani Vainer, a renown lawyer in Italy for his legal defence of freedom struggles, addressed the audience as a chief guest, on the principles of the right to self determination.
Around 50,000 Sinhalese expatriates live in Northern Italy. ”
இத்தாலியில் விடுதலைப்புலிகளுக்காக நிதி சேகரித்த குற்றச்சாட்டில் முப்பதுக்கும் அதிகமானோர் கைது
விடுதலைப்புலிகள் அமைப்பின் ஆதரவாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் என்று சந்தேகிக்கப்படும் முப்பதுக்கும் அதிகமானோரை இத்தாலி எங்கிலும் நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையொன்றின் போது அந்த நாட்டுப் பொலிஸார் புதன்கிழமை கைது செய்திருக்கிறார்கள்.
ஐரோப்பிய ஒன்றியத்தினால், விடுதலைப்புலிகள் அமைப்பு தடை செய்யப்பட்டிருக்கின்ற நிலையில், இத்தாலியில், உள்ள மக்களிடம் விடுதலைப்புலிகள் அமைப்புக்காக, மிரட்டிப் பணம் பறித்தார்கள் என்ற சந்தேகத்தின் மீது, இலங்கை தமிழர்களான இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
இருநூறுக்கும் அதிகமான பொலிஸாரால் நடத்தப்பட்ட இந்த தேடுதல் வேட்டையின் மூலம், இத்தாலியில் விடுதலைப்புலிகளின் வலையமைப்பு நிர்மூலம் செய்யப்பட்டுள்ளதாக ஒரு மூத்த பொலிஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.
இத்தாலியின் வடக்கே ஜெனோவா நகர் முதல், மத்திய தரைக்கடலின் தீவான சிசிலியின், பலர்மோ நகர் வரை, அதிகாலைப் பொழுதில் ஒரே நேரத்தில், எட்டு வெவ்வேறு நகரங்களில் இருக்கின்ற விடுதலைப்புலிகளின் மறைவிடங்களில் இத்தாலியப் பொலிஸார் தேடுதல் நடத்தினார்கள்.
![]() |
![]() |
இத்தாலியில் வாழும் இலங்கைத் தமிழர்களிடம் விடுதலைபுலிகளின் ஆதரவாளர்கள் மிரட்டிப் பணம் பறித்து, இலங்கையில் மோதலில் ஈடுபடும் விடுதலைப்புலிகளின் தலைமைக்கு அனுப்புவதாக கடந்த இரண்டு வருடங்களாக இத்தாலியில் வாழும் இலங்கையரிடம் இருந்து கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள் தொடர்பில் தாம் புலன் விசாரணை செய்து வந்ததாக பொலிஸார் கூறுகிறார்கள்.
இத்தாலிய வட்டகையில் இருந்து ஒளிபரப்பான விடுதலைப்புலிகளின் சட்டவிரோத பிரச்சார தொலைக்காட்சி ஒன்றை மூன்று மாதங்களுக்கு முன்னர் இத்தாலிய அதிகாரிகள் மூடினார்கள்.
இத்தாலியில் சுமார் ஐம்பதினாயிரம் இலங்கையர்கள் குடியேறி வாழ்கிறார்கள்.
பெரும்பாலும் சட்டவீரோதமாக அங்கு வந்த அவர்கள், அங்கு வேலை மற்றும் வதிவிட அனுமதியைப் பெற்று வாழ்கிறார்கள்.
வட இலங்கை மோதல்களில் பலர் பலி
![]() |
![]() |
இலங்கை இராணுவத்தினர் |
இலங்கையின் வடமேற்கே மன்னார் நகரப் பொது விளையாட்டரங்கு காவல் நிலை மீது இன்று அதிகாலை விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலில் இராணுவச் சிப்பாய் ஒருவர் கொல்லப்பட்டதாகவும், மற்றுமொருவர் காயமடைந்ததாகவும் தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மையம் தெரிவித்துள்ளது.
சிறிய ரக ஆயுதங்களைக் கொண்டு விடுதலைப் புலிகள் நடத்திய இந்தத் தாக்குதலை அந்த காவல்நிலையில் கடமையிலிருந்த பொலிஸாரும், இராணுவத்தினரும் எதிரத்தாக்குதல் நடத்தி முறியடித்ததாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
வவுனியா ஓமந்தை இராணுவ முகாம் மீது நேற்றிரவு விடுதலைப் புலிகள் நடத்திய மோட்டார் தாக்குதலில் இராணுவச் சிப்பாய் ஒருவரும், இராணுவ முகாமில் பணியாற்றிய சிவிலியன் ஒருவரும் கொல்லப்பட்டுள்ளதாகவும் தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மையம் கூறியிருக்கின்றது.
இதேவேளை, இலங்கையின் வடக்கே மன்னார், வவுனியா, வெலிஓயா, முகமாலை நாகர்கோவில் ஆகிய முன்னரங்க பகுதிகளில் விடுதலைப் புலிகளுக்கு எதிராக இராணுவத்தினர் தொடர்ச்சியாக நடத்தி வரும் தாக்குதல்களில் 25 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டிருப்பதாகவும், இன்று அதிகாலை வரையிலான இந்தத் தாக்குதல் சம்பவங்களில் இராணுவ தரப்பில் மொத்தமாக 7 இராணுவத்தினரும், இராணுவ ஊழியரான சிவிலியன் ஒருவரும் கொல்லப்பட்டிருப்பதாகவும், 10 படையினர் காயமடைந்துள்ளதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருக்கின்றது.
மன்னார் பெரியமடு பகுதியில் இடம்பெற்ற மோதல்களில் கொல்லப்பட்ட விடுதலைப் புலிகளின் 3 சடலங்கள் மற்றும் ஆயுத தளபாடங்களையும் இராணுவத்தினர் கைப்பற்றியிருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் கூறியிருக்கி;ன்றது, இந்த மோதல்கள் குறித்து விடுதலைப் புலிகளின் தரப்பிலிருந்து உடனடியாகத் தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.