Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for ஜூன் 18th, 2008

Italian Dragnet Arrests 28 for Financing Tamil Tigers; Sri Lankan Gun Battles Kill 25 Rebels, 7 Soldiers

Posted by Snapjudge மேல் ஜூன் 18, 2008

TamilNet: 16.06.08 Italian Tamils express support for Eezham homeland: “Diaspora Tamils in Northern Italy gathered Sunday for Pongku Thamizh rally held in Piazza Argentina in Milan, one of the largest cities in Italy, from 3:00 p.m. to 6:00 p.m., and voiced their support for Eezham Tamil homeland, Tamils right to self-determination, and protested against the Sri Lankan state’s aerial bombardment of Tamil civilians and rights violations of the Tamil people in Sri Lanka. Burani Vainer, a renown lawyer in Italy for his legal defence of freedom struggles, addressed the audience as a chief guest, on the principles of the right to self determination.

Around 50,000 Sinhalese expatriates live in Northern Italy. ”

இத்தாலியில் விடுதலைப்புலிகளுக்காக நிதி சேகரித்த குற்றச்சாட்டில் முப்பதுக்கும் அதிகமானோர் கைது

விடுதலைப்புலிகள் அமைப்பின் ஆதரவாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் என்று சந்தேகிக்கப்படும் முப்பதுக்கும் அதிகமானோரை இத்தாலி எங்கிலும் நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையொன்றின் போது அந்த நாட்டுப் பொலிஸார் புதன்கிழமை கைது செய்திருக்கிறார்கள்.

ஐரோப்பிய ஒன்றியத்தினால், விடுதலைப்புலிகள் அமைப்பு தடை செய்யப்பட்டிருக்கின்ற நிலையில், இத்தாலியில், உள்ள மக்களிடம் விடுதலைப்புலிகள் அமைப்புக்காக, மிரட்டிப் பணம் பறித்தார்கள் என்ற சந்தேகத்தின் மீது, இலங்கை தமிழர்களான இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

இருநூறுக்கும் அதிகமான பொலிஸாரால் நடத்தப்பட்ட இந்த தேடுதல் வேட்டையின் மூலம், இத்தாலியில் விடுதலைப்புலிகளின் வலையமைப்பு நிர்மூலம் செய்யப்பட்டுள்ளதாக ஒரு மூத்த பொலிஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.

இத்தாலியின் வடக்கே ஜெனோவா நகர் முதல், மத்திய தரைக்கடலின் தீவான சிசிலியின், பலர்மோ நகர் வரை, அதிகாலைப் பொழுதில் ஒரே நேரத்தில், எட்டு வெவ்வேறு நகரங்களில் இருக்கின்ற விடுதலைப்புலிகளின் மறைவிடங்களில் இத்தாலியப் பொலிஸார் தேடுதல் நடத்தினார்கள்.

இத்தாலியில் வாழும் இலங்கைத் தமிழர்களிடம் விடுதலைபுலிகளின் ஆதரவாளர்கள் மிரட்டிப் பணம் பறித்து, இலங்கையில் மோதலில் ஈடுபடும் விடுதலைப்புலிகளின் தலைமைக்கு அனுப்புவதாக கடந்த இரண்டு வருடங்களாக இத்தாலியில் வாழும் இலங்கையரிடம் இருந்து கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள் தொடர்பில் தாம் புலன் விசாரணை செய்து வந்ததாக பொலிஸார் கூறுகிறார்கள்.

இத்தாலிய வட்டகையில் இருந்து ஒளிபரப்பான விடுதலைப்புலிகளின் சட்டவிரோத பிரச்சார தொலைக்காட்சி ஒன்றை மூன்று மாதங்களுக்கு முன்னர் இத்தாலிய அதிகாரிகள் மூடினார்கள்.

இத்தாலியில் சுமார் ஐம்பதினாயிரம் இலங்கையர்கள் குடியேறி வாழ்கிறார்கள்.

பெரும்பாலும் சட்டவீரோதமாக அங்கு வந்த அவர்கள், அங்கு வேலை மற்றும் வதிவிட அனுமதியைப் பெற்று வாழ்கிறார்கள்.


வட இலங்கை மோதல்களில் பலர் பலி

இலங்கை இராணுவத்தினர்
இலங்கை இராணுவத்தினர்

இலங்கையின் வடமேற்கே மன்னார் நகரப் பொது விளையாட்டரங்கு காவல் நிலை மீது இன்று அதிகாலை விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலில் இராணுவச் சிப்பாய் ஒருவர் கொல்லப்பட்டதாகவும், மற்றுமொருவர் காயமடைந்ததாகவும் தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மையம் தெரிவித்துள்ளது.

சிறிய ரக ஆயுதங்களைக் கொண்டு விடுதலைப் புலிகள் நடத்திய இந்தத் தாக்குதலை அந்த காவல்நிலையில் கடமையிலிருந்த பொலிஸாரும், இராணுவத்தினரும் எதிரத்தாக்குதல் நடத்தி முறியடித்ததாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

வவுனியா ஓமந்தை இராணுவ முகாம் மீது நேற்றிரவு விடுதலைப் புலிகள் நடத்திய மோட்டார் தாக்குதலில் இராணுவச் சிப்பாய் ஒருவரும், இராணுவ முகாமில் பணியாற்றிய சிவிலியன் ஒருவரும் கொல்லப்பட்டுள்ளதாகவும் தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மையம் கூறியிருக்கின்றது.

இதேவேளை, இலங்கையின் வடக்கே மன்னார், வவுனியா, வெலிஓயா, முகமாலை நாகர்கோவில் ஆகிய முன்னரங்க பகுதிகளில் விடுதலைப் புலிகளுக்கு எதிராக இராணுவத்தினர் தொடர்ச்சியாக நடத்தி வரும் தாக்குதல்களில் 25 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டிருப்பதாகவும், இன்று அதிகாலை வரையிலான இந்தத் தாக்குதல் சம்பவங்களில் இராணுவ தரப்பில் மொத்தமாக 7 இராணுவத்தினரும், இராணுவ ஊழியரான சிவிலியன் ஒருவரும் கொல்லப்பட்டிருப்பதாகவும், 10 படையினர் காயமடைந்துள்ளதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருக்கின்றது.

மன்னார் பெரியமடு பகுதியில் இடம்பெற்ற மோதல்களில் கொல்லப்பட்ட விடுதலைப் புலிகளின் 3 சடலங்கள் மற்றும் ஆயுத தளபாடங்களையும் இராணுவத்தினர் கைப்பற்றியிருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் கூறியிருக்கி;ன்றது, இந்த மோதல்கள் குறித்து விடுதலைப் புலிகளின் தரப்பிலிருந்து உடனடியாகத் தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.


Posted in Govt, Law, Order, Politics, Tamil | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , , , , , , , , | Leave a Comment »

Early June: Sri Lanka, LTTE, Eezham Updates

Posted by Snapjudge மேல் ஜூன் 18, 2008

வவுனியாவில் தற்கொலை குண்டுத் தாக்குதல்; 12 காவலர் பலி

இலங்கையின் வடக்கே, வவுனியா சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத் தொகுதியின் எதிரில் திங்கள் காலை இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் 3 பெண் பொலிசார் உட்பட 12 பொலிசார் கொல்லப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருக்கின்றது.

இரண்டு பாடசாலை மாணவிகள் அடங்கலாக 4 சிவிலியன்கள் உட்பட 23 பேர் காயமடைந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்திருக்கின்றன.

காயமடைந்தவர்கள் உடனடியாக வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக அனுராதபுரத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டிருக்கின்றனர்.

வவுனியா தேக்கவத்தை ஏ9 வீதியில், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் பிரதி பொலிஸ் மா அதிபர் ஆகியோரது அலுவலகங்களுக்கு அருகில் உள்ள பொலிசாரின் விடுதிக்கு எதிரில் இந்தத் தாக்குதல் சம்பவம் நடைபெற்றுள்ளது.

பல்வேறு இடங்களுக்கும் பாதுகாப்பு கடமைக்காகச் செல்வதற்காகத் தமது விடுதிக்கு எதிரில் வீதியோரத்தில் தயார் நிலையில் இருந்த பொலிஸ் குழுவினர், இந்தத் தற்கொலைத் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளனர்.

மோட்டார் சைக்கிளில் வந்த விடுதலைப் புலிகளின் தற்கொலைக் கொலையாளி, இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளதாகப் பாதுகாப்பு அமைச்சகம் கூறியிருக்கின்றது. ஆனால் விடுதலைப் புலிகள் தரப்பிலிருந்து இது தொடர்பாக கருத்து எதுவும் வெளியாகவில்லை.


தவறுதலாக எல்லை தாண்டிய மீனவர்களுக்கு பாதுகாப்பு வேண்டும்: இந்தியாவில் இலங்கை அமைச்சர் கருத்து

ரோஹித பொகொல்லாகம

இந்திய – இலங்கை மீனவர்கள், தங்கள் நாட்டுக் கடல் எல்லைகளைத் தாண்டி வந்தாலும் கூட, அவர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று இரு நாடுகளும் விரும்புவதாக இலங்கை வெளியுறவு அமைச்சர் ரோஹித பொகொல்லாகம தெரிவித்தார்.

அதே நேரத்தில் மீனவர்கள் என்ற போர்வையில் தீவிரவாதிகள் நுழைவதைத் தடுப்பதில் கவனமாக இருப்பதாக அவர் தெரிவித்தார்.

ஞாயிற்றுக்கிழமை புதுடெல்லி வந்த பொகொல்லாகம அவர்கள், திங்கட்கிழமை இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி ஆகியோரைச் சந்தித்தார். ஆகஸ்ட் மாதம் கொழும்பில் நடைபெறவுள்ள, சார்க் எனப்படும் தெற்காசியப் பிராந்திய கூட்டமைப்பு நாடுகளின் 15-வது உச்சிமாநாட்டுக்கு அழைப்பு விடுத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்தியத் தலைவர்களுடன் நடத்திய சந்திப்பு குறித்தும், இலங்கையின் தற்போதைய நிலவரம் குறித்தும் விவரித்தார்.

அவர் வெளியிட்ட கருத்துகள் தொடர்பாக எமது புதுதில்லி செய்தியாளர் தங்கவேல் வழங்கும் செய்திக் குறிப்பினை நேயர்கள் செய்தியரங்கத்தில் கேட்கலாம்.


‘மடுமாதா ஆடித் திருவிழா இவ்வருடம் கொண்டாடப்படாது’

இலங்கையின் வடமேற்கே மன்னார் மாவட்டத்தில் இராணுவத்தின் கட்டுப்பாட்டினுள் கொண்டுவரப்பட்டுள்ள மடுமாதா ஆலயத்தில் ஆடி மாதத் திருவிழாவைக் கொண்டாடுவது சாத்தியமில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பாக தகவல் வெளியிட்டுள்ள ஆயர்கள் சங்கம், மடுமாதா ஆலயத்தின் திருத்த வேலைகள் இன்னும் மேற்கொள்ளப்படவில்லை என்றும், விடுதலைப் புலிகளின் பிரதேசத்தில் உள்ள தேவன்பிட்டிக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ள மாதாவின் திருவுருவச் சிலை இன்னும் ஆலயத்திற்குக் கொண்டு வரப்படாத நிலையில் இம்முறை மடுமாதாவின் ஆடித்திருவிழாவைக் கொண்டாட முடியாதிருப்பதாகத் தெரிவித்திருக்கின்றது.

எனினும், மடுமாதாவின் திருவிழா திருப்பலிப் பூசைகளை மன்னார் மறைமாவட்டப் பங்கில் உள்ள ஆலயங்களில் நடத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டிருப்பதாக அந்த மறைமாவட்டத்தின் குருமுதல்வர் அருட்தந்தை விக்டர் சோசை அவர்கள் தெரிவித்துள்ளார். இது பற்றிய மேலதிக தகவல்களை செய்தியரங்கத்தில் கேட்கலாம்.

புதுக்குடியிருப்பில் விமான குண்டுவீச்சு நீடிப்பதாகக் கூறுகிறது இலங்கை இராணுவம்

இலங்கையின் வடக்கே முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு சந்திக்கருகில் திங்கள் காலை விடுதலைப் புலிகளின் முக்கிய தளம் ஒன்றினை விமானப்படையினர் குண்டுவீசித் தாக்கியுள்ளதாகவும், நாகர்கோவில் பிரதேசத்தில் விடுதலைப் புலிகளின் முன்னரங்க பகுதி மீது எம்.ஐ 24 ரக தாக்குதல் உலங்கு வானூர்தி வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்திருக்கின்றது.

எனினும் இந்தத் தாக்குதல்கள் குறித்து விடுதலைப் புலிகள் தரப்பிலிருந்து இதுவரை தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

இதேவேளை மன்னார், வவுனியா, வெலிஓயா யாழ்ப்பாணம் ஆகிய வடபிரதேச போர் முனைகளில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான ஞாயிறன்றைய நடவடிக்கைகளில் 29 விடுதலைப் புலிகளும் 4 இராணுவத்தினரும் கொல்லப்பட்டிருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருக்கின்றது,


‘எல்லாளன் படையுடன் தொடர்பில்லை’

Ilanthiraiyan
புலிகள் அமைப்பின் படைத்துறை பேச்சாளர் இளந்திரையன்

அண்மைய கொழும்பு தாக்குதல்களுக்கு உரிமை கோரியுள்ள எல்லாளன் படைக்கும் விடுதலைப் புலிகளுக்கும் தொடர்பில்லை என புலிகளின் படைத்துறை பேச்சாளர் இளந்திரையன் கூறுகிறார்.

சமீப காலமாக கொழும்பில் நடக்கும் பொதுமக்கள் மீதான தாக்குதல்களுக்கு தாங்கள் பொறுப்பேற்பதாக எல்லாளன் படை என்கிற அமைப்பு, ஜூன் மாதம் இரண்டாம் வாரத்தில் ஊடகங்களுக்கு அனுப்பிய மின்னஞ்சல் மூலம் உரிமை கோரியிருந்தது.

இலங்கையில் தமிழ் மக்கள் மீதான தாக்குதல் நடப்பதற்கு பதில் நடவடிக்கையாக தாங்கள் இந்த தாக்குதல்களை நடத்துவதாக இந்த அமைப்பு கூறியிருந்தது.

இந்த எல்லாளன் படைக்கும் விடுதலைப் புலிகள் அமைப்புக்கும் தொடர்பில்லை என்று விடுதலைப் புலிகள் அமைப்பின் படைத்துறை பேச்சாளர் இளந்திரையன் அவர்கள் தமிழோசைக்கு அளித்த செவ்வியில் தெரிவித்தார்.

இலங்கையின் வடமேற்கே, மன்னார் தீவில் எருக்கலம்பிட்டியில் அமைந்துள்ள கடற்படை நிலையை ஜூன் 11ஆம் தேதி அதிகாலை விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தி அழித்ததாகவும் அவர் கூறினார். இதில் சுமார் 10 படையினர் கொல்லப்பட்டிருக்கலாம் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த குறிப்பிட்ட சம்பவத்தில் என்ன நடந்தது என்பது குறித்து, விடுதலைப் புலிகள் அமைப்பின் படைத்துறை பேச்சாளர் இளந்திரையன் அவர்கள் தமிழோசைக்கு வழங்கிய செவ்வியை நேயர்கள் கேட்கலாம்.

அதேவேளை, விடுதலைப்புலிகளின் தாக்குதலை தாங்கள் முறியடித்ததாகவும், பாரிய இழப்புகளுடன் விடுதலைப்புலிகள் பின்வாங்கச் செய்யப்பட்டுள்ளதாகவும், இலங்கை கடற்படை அறிவித்திருந்தது.

இந்த தாக்குதல் சம்பவத்தில் ஐந்து விடுதலைப்புலிகளும், மூன்று கடற்படையினரும் கொல்லப்பட்டதாகவும் கடற்படைப் பேச்சாளர் தெரிவித்திருந்தார்.

பா.நடேசன் செவ்வி

பா. நடேசன்
தென்னிலங்கையில் சிவிலியன்கள் கொலையில் தங்களுக்கு சம்பந்தம் இல்லை என்கின்றனர் புலிகள்

விடுதலைப் புலிகள் கட்டுப்பாட்டுப் பகுதியில் நடத்தப்படும் இலங்கை இராணுவத்தின் தாக்குதலானது இராணுவத்தின் பலவீனத்தையே காட்டுவதாக விடுதலைப் புலிகள் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா. நடேசன் தெரிவித்துள்ளார்.

ஆழ ஊடுருவும் அணியினர் உங்கள் கட்டுப்பாட்டுப் பகுதியில் ஊடுருவித் தாக்குதல் நடத்துவது உங்கள் அமைப்பின் பலவீனத்தைக் காட்டவில்லையா என்று கேட்டதற்குப் பதிலளிக்கும் வகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

விடுதலைப்புலிகளுடன் நேரடியாக மோதமுடியாமல் தோல்வியைத் தழுவும் நிலையிலேயே இலங்கை அரசாங்கப் படைகள் இவ்வாறான அநாகரிகமான தாக்குதல்களை நடத்துவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அதேவேளை இலங்கையின் அரசாங்க கட்டுப்பாட்டுப் பகுதிகளில் நடத்தப்படும் குண்டுத் தாக்குதல்களுக்கும், தமது அமைப்புக்கும் எந்தவிதமான தொடர்பும் கிடையாது என்றும், தமது அமைப்பு ஒரு விடுதலைப் போராட்ட அமைப்பு என்றும், தாங்கள் மக்களை நேசிப்பவர்கள் என்றும், அனைத்து உயிர்களையும் நேசிப்பவர்கள் என்றும் அவர் கூறினார்.

புலர்ந்தும் புலராத விடியல்

life in east sri lanka

கிழக்கு இலங்கையில் விடுதலைப் புலிகளிடம் இருந்து மீட்கப்பட்ட பகுதிகளில் மீள்குடியேற்றப்பட்டுள்ள மக்களின் வாழ்க்கை நிலை குறித்த குறுந்தொடர்.

Posted in Govt, Law, Order, Politics, Tamil | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , | Leave a Comment »