Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for மார்ச் 24th, 2008

Tamil Nadu budget focusses on farmers, women: loan waiver for poor

Posted by Snapjudge மேல் மார்ச் 24, 2008

வேளாண் கடன் வட்டி விகிதக் குறைப்பு; நதிகள் இணைப்பு; இரு புது மருத்துவக் கல்லூரிகள்;
ரூ.1720 கோடி மதிப்பீட்டில் மின்சார விநியோகம் கட்டமைப்பு

தொழில் துறையில் 13 நிறு வனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்
1,41,640 பேருக்கு வேலை வாய்ப்புகள் உருவாக்கம்

மகளிர், குழந்தைகள், ஊனமுற்றோர், ஒடுக்கப்பட்டோர்,
விவசாயிகள் நலன் காக்கும் மக்கள் நலத் திட்டங்களின் அணிவகுப்பு!

2008-09 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையினை தமிழகச் சட்டப்பேரவையில் அளித்தார் நிதியமைச்சர்

வரவு ரூ.51,505.62 கோடி; செலவு ரூ.51,421.57 கோடி

வரிச் சலுகைகள் ஏராளம்! ஏராளம்!!

சென்னை, மார்ச் 20- 2008-09 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக் கையினை நிதியமைச்சர் பேரா சிரியர் க. அன்பழகன் இன்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் அளித்து உரையாற்றினார்.
விவரம் வருமாறு:
விவசாயத்துறை
வரும் 2008-09 ஆம் ஆண் டிற்கு மேலும் ரூபாய் 1,500 கோடி அளவில் புதிய பயிர்க் கடன்கள் வழங்க ஆவன செய்யப்படும்.
வேளாண் கடன்களுக்கான வட்டி வீதத்தை 2006-07 ஆம் ஆண்டில் 9 சதவீதத்திலிருந்து 7 சதவீதமாகக் குறைத்து, அதனைக் கடந்த நிதிநிலை அறிக்கையில் 5 சதவீதமாக மேலும் குறைத்து இந்த அரசு வழங்கி வருகிறது. விவசாயி களுக்கு வழங்கப்படும் பயிர்க் கடனுக்கான வட்டி வீதம் 4 சதவீதமாகக் குறைக்கப்பட வேண்டும் என்ற பல வேளாண் பொருளாதார வல்லுனர்களின் கருத்தை ஏற்று, விவசாயத் தொழிலுக்கு மேலும் ஊக்கம் அளிக்க, வரும் நிதியாண்டி லிருந்து தற்போதுள்ள வட்டி வீதம் 5 சதவீதத்திலிருந்து 4 சதவீதமாகக் குறைக்கப்படும்.
தற்போதைய 2007-08 ஆம் ஆண்டில், மாநிலத்தின் பல பகுதிகளில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ள போதிலும், உணவு தானிய உற்பத்தி 100 இலட்சம் டன்னுக்கும் மேலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
வரும் நிதியாண்டில் 25 லட் சம் விவசாயிகளுக்கு பயிர்க் காப்பீடு செய்து கொள்ள நிதி யுதவி அளிக்கப்படும். இதற்காக ரூ 40 கோடி நிதி ஒதுக்கீடு செய் யப்பட்டுள்ளது.
நிலமற்ற ஏழை விவசாயக் குடும்பங்களுக்கு, தரிசு நிலங் களைப் பண்படுத்தி இலவச மாக அளிக்கும் திட்டத்தின் கீழ், இது வரை ஒரு இலட்சத்து 51 ஆயிரம் ஏழை விவசாயக் குடும்பங்களுக்கு ஒரு இலட் சத்து 78 ஆயிரம் ஏக்கர் நிலத்தை இந்த அரசு இலவசமாக வழங் கியுள்ளது. இந்த நிலங்களைத் தொடர்ந்து சாகுபடி செய்யும் வண்ணம், நீராதாரங்கள் ஏற்படுத்தப்பட்டு, மற்ற உதவி களும் வழங்கப்பட்டு உள்ளன. வரும் ஆண்டுகளிலும் இந்தத் திட்டம் தொடாந்து செயல் படுத்தப்படும்.
வரும் நிதியாண்டில் 18.75 இலட்சம் ஏக்கர் பரப்பில் செம்மை நெல் சாகுபடி முறை கடைப்பிடிக்கப்படத் தேவை யான நடவடிக்கைகள் எடுக் கப்படும்.
22 முக்கிய உழவர் சந்தை களில், விற்பனைக்கான காய் கறிகள் மற்றும் பழங்கள் போன்றவற்றைப் பாதுகாத் திட தேவையான குளிர்பதன வசதிகள், தமிழ்நாடு வேளாண் விற்பனை வாரியம் மூலமாக அமைக்கப்படும்.
நெல் நடவு, கரும்பு அறு வடை போன்ற பணிகளில் பயன்படுத்தும் இயந்திரங்களை வாங்கிப் பயன்படுத்த முன் வரும் விவசாயிகளுக்கு தேசிய வேளாண்மை வளர்ச்சித் திட் டத்தின் கீழ் 25 சதவீத மானியம் இனி வழங்கப்படும். மேலும் வேளாண் இயந்திரங்கள் மற் றும் கருவிகளை உற்பத்தி செய் யும் தொழில் முனைவோருக்கு இந்த அரசின் தொழிற் கொள் கையில் அறிவிக்கப்பட்டுள்ள சலுகைகளோடு கூடுதலாகத் தேவைப்படும் சலுகைகளும் வழங்கப்படும்.
பயிறு வகைகளைப் பயிரிட நமது விவசாயிகளை ஊக்கு விக்கும் வகையில், வரும் ஆண் டிலிருந்து தமிழ் நாடு நுகர் பொருள் வாணிபக் கழகம் மற்றும் தமிழ் நாடு கூட்டுறவு விற்பனை இணையம் ஆகியன; மத்திய அரசின் குறைந்தபட்ச ஆதரவு விலையில் பயறு வகை களைக் கொள்முதல் செய்யும்.
மகளிர் சுயஉதவிக் குழுக்கள்
தமிழகத்தில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் மகளிர் சுயஉதவிக் குழுக்கள் போலவே, நமது விவசாயிகளும் செயல் படின் பல்வேறு பயன்களைப் பெற இயலும் எனக் கருதி, வரும் நிதியாண்டில் விவசா யிகள் சுய உதவிக் குழுக்கள் அமைக்கப்படும். முதற்கட்ட மாக, தொடக்க வேளாண் மைக் கூட்டுறவு வங்கிகள் மூலம் பயிர்க்கடன் பெறும் ஒரு இலட்சம் விவசாயிகளை உறுப் பினர்களாகக் கொண்ட பத்தா யிரம் சுய உதவிக் குழுக்கள் உருவாக்கப்படும். இக்குழுக்கள் கூட்டுப் பொறுப்புடைய அமைப்புகளாக செயல்பட்டு கூட்டுறவு வங்கிகள் மற்றும் பொதுத் துறை வங்கிகளிட மிருந்து எளிதில் கடன் பெற இயலும். இந்த குழுக்களுக்குச் சுழல் நிதியாக அரசின் சார்பில் ரூபாய் 10 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு கூட்டுறவு வங்கி கள் மூலம் வழங்கப்படும். இதன் மூலம், இந்த குழுக் களைச் சார்ந்த உறுப்பினர்கள், தங்களின் அவசரத் தேவைக ளுக்கான கடனையும் குழு விடமிருந்தே பெறலாம். இது மட்டுமன்றி, உறுப்பினர்கள் அனைவரும் இணைந்து வேளாண் இடு பொருட் களைக் குறைந்த விலையில் வாங்கவும், விளைபொருட் களை நல்ல விலைக்கு விற்கவும் வாய்ப்பு உருவாகும்.
1990 ஆம் ஆண்டில் தி.மு.க. அரசால் கொண்டு வரப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் இலவச மின்சாரம் வழங்கும் திட்டம் தொடர்ந்து செயல் படுத்தப்படும். இத்திட்டத் திற்காகத் தமிழ்நாடு மின் வாரியத்திற்கு அரசின் மானிய உதவியாக ரூ 268 கோடி இந்த வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
பால் உற்பத்தி:
பால் உற்பத்தியில் தமிழகம் முன்னணி மாநிலமாக விளங்கி வருகிறது பால் உற்பத்தியை மேலும் பெருக்கவும், பால் உற்பத்தி செய்யும் விவசாயக் குடும்பங்கள் கூடுதல் வருவாய் பெறும் வகையிலும், மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு 10,000 உயர் கலப்பினக் கறவை மாடு கள் வழங்கும் புதிய திட்டம் ஒன்றை, இந்த அரசு செயல் படுத்தும். நமது மாநிலத்தில் பால் உற்பத்தி செய்யத்தகுந்த 200 கிராமங்களில் தமிழ் நாடு பால் உற்பத்தியாளர் கூட்டுறவு இணையம் மூலமாக, வரும் இரண்டாண்டுகளில் ரூபாய் 22 கோடி மதிப்பீட்டில் இத் திட்டம் செயல்படுத்தப்படும். இதனால் 5,000 மகளிர் பயன டைவர்.
பாசனம் மற்றும் வெள்ளத்தடுப்பு
தமிழ்நாட்டில் உள்ள பாசன வேளாண்மை மற்றும் நீர் ஆதாரங்களை மேம்படுத்தி, 15.4 இலட்சம் ஏக்கர் நிலங்கள் பயன்பெறச் செய்யும் நோக் கோடு, உலக வங்கி உதவியுடன் ரூபாய் 2,547 கோடி மதிப் பீட்டில் நீர்வள நிலவளத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 2007-08 ஆம் ஆண் டில் இத் திட்டப் பணிகள் 9 துணை வடிநிலங்களில் மேற் கொள்ளப்பட்டு வருகின்றன. 2008-09 ஆம் ஆண்டில் மேலும் 16 துணை வடிநிலங்களில் பணிகள் மேற்கொள்ளப்படும். இவ்விரண்டு ஆண்டுகளில் மேற்கொள்ளப்படும் பணி களால் 9.4 இலட்சம் ஏக்கர் நிலங்கள் பயன் பெறும். வேளாண் வளர்ச்சிக்குத் துணை புரியும் பல்வேறு துறைகளின் பணிகளை ஒருங்கைணைத்துச் செயல்படுத்தப்படுகிற இத் திட்டத்தின் வாயிலாக, பாச னப் பரப்பு அதிகரிப்பதோடு, விளைபொருள் உற்பத்தித் திறனும் விவசாயிகளின் வரு வாயும் உயரும். இத்திட்டத்திற் காக 2008-09 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் ரூபாய் 585 கோடி ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது.
கல்லணைக் கால்வாய் ரூபாய் 150 கோடி மதிப்பீட்டி லும், காளிங்கராயன் கால்வாய் ரூபாய் 12 கோடி மதிப்பீட் டிலும் மேம்படுத்தப்படும்.
நதிகள் இணைப்பு
மாநில அரசின் நிதியிலி ருந்து தமிழ்நாட்டில் பாயும் பின்வரும் நதி இணைப்பு களுக்கான பணிகள் வரும் 2008-09 ஆம் நிதியாண்டில் தொடங்கப்படும்.
(1) வெள்ளக் காலங்களில் காவிரி ஆற்றில் பெருகும் உபரி நீரை, வறண்ட மாவட்டங் களுக்குக் கொண்டு செல்வதற் கான காவிரி – அக்னியாறு- கோரையாறு-பாம்பாறு-வைகை-குண்டாறு இணைப்புத் திட்டத்தின் முதல் கட்டமாகக் காவிரியாற்றின் குறுக்கே கட்டளைப் பகுதியில் கதவணை அமைக்கும் திட்டம் ரூபாய் 165 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும். இத்திட் டத்தின் அடுத்த கட்டமாக, இந்நதிகளை இணைப்பதற் காக 255 கிலோ மீட்டர் நீள முள்ள கால்வாய்கள் அமைப் பது குறித்து தயாரிக்கப்பட்டு வரும் விரிவான திட்ட அறிக் கையின் அடிப்படையில் கால் வாய் அமைக்கும் பணி மேற் கொள்ளப்படும்.
(2) தாமரபரணி ஆற்றின் உபரி நீரை தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங் களின் வறண்ட பகுதிகளுக்குக் கொண்டு செல்வதற்கான தாமி ரபரணி – கருமேனியாறு-நம்பி யாறு இணைப்புத் திட்டம் ரூபாய் 369 கோடி மதிப்பீட் டில் செயல்படுத்தப்படும்
மாநிலமெங்கும் ஆறுகள், சிற்றாறுகள் மற்றும் ஓடை களின் குறுக்கே 48,500 தடுப் பணைகள், ஊருணிகள் ஆகிய வற்றை அத்து நீரைச் சேமிப் பதற்கான பெரும் திட்டம் ஒன்று வகுக்கப் பட்டுள்ளது. சுமார் 550 கோடி மதிப்பீட்டி லான இத் திட்டம், நீர்வள ஆதாரத்தை, வேளாண் பொறி யியல் துறை, வனத்துறை மற் றும் தமிழ்நாடு குடிநீர் வடி கால் வாரியம் மூலமாக, பொது நல அமைப்புகள் மற்றும் தொண்டு நிறுவனங்களின் பங் கேற்புடன் வரும் நிதி யாண்டி லிருந்து செயல்படுத்தப்படும். முதல் கட்டமாக, இந்த வரவு செலவு திட்டத்தில் இதற்காக ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது.
பொது விநியோகத் திட்டம்
நமது நாட்டிலேயே மிகக் குறைவான விலையில் இரண்டு ரூபாய்க்கு ஒரு கிலோ அரி சியை இந்த அரசு வழங்கி வருகிறது. ஏழை எளியோரின் பசிப்பிணி போக்கவும், வெளிச் சந்தையில் அரிசியின் விலை உயராமல் கட்டுப்படுத்தவும் வழி வகுத்துள்ள இந்த முன் னோடித் திட்டத்தை, நமது நாட்டில் உள்ள மற்ற சில மாநி லங்களும் தற்போது செயல் படுத்த முனைந்துள்ளன. இது மட்டுமன்றி, பொதுமக்கள் அன்றாடம் பயன்படுத்தும் அத்தியாவசியப் உணவுப் பொருள்களாகிய துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு, பாமாயில் மற்றும் செறிவூட் டப்பட்ட கோதுமை மாவு போன்றவற்றை அரசே கொள் முதல் செய்து, நியாய விலைக் கடைகள் மூலமாகக் குறைந்த விலையில் வழங்குவதற்கான சிறப்புத் திட்டத்தையும் செயல்படுத்தி வருகிறது. இவற் றைத் தொடர்ந்து செயல்படுத் திட, இந்த அத்தியாவசிய உணவுப் பொருள்களின் மானி யத்திற்காக இந்த வரவு செலவு திட்டத்தில் ரூபாய் 1,950 கோடி ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது.
காவல்துறைக்கு ரூ.2427 கோடி ஒதுக்கீடு
குற்றங்கள் மற்றும் சட்டம் ஒழுங்குப் பிரச்சினைகள் குறித்த அவசரத் தகவல்களை உடனுக்குடன் தெரியப்படுத்த ஏதுவாக, வரும் நிதியாண்டில் மாநிலத்தில் உள்ள அனைத் துக் காவல் நிலையங்களுக்கும் அகண்ட அலைவரிசை இணைய இணைப்பு வழங்கப்படும். மொத்தமாக 2005-06 ஆம் ஆண்டில் ரூபாய் 1,346 கோடி யாக இருந்த காவல் துறைக்காக நிதி ஒதுக்கீடு 2008-09 ஆம் நிதியாண்டில் ரூபாய் 2,427 கோடியாக உயர்த்தப்பட்டுள் ளது.
சாலைப் பாதுகாப்பு நிதிக் கான மாநில அரசின் நிதி ஒதுக் கீடு ரூபாய் 6 கோடியிலிருந்து இந்த வரவு செலவு திட்டத்தில் ரூ 10 கோடியாக உயர்த்தப் பட்டு, விபத்துத் தடுப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும்.
நீதித்துறை
நீதித்துறைக்கு இந்த வரவு -செலவுத் திட்டத்தில் ரூபாய் 316 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது.
தமிழக மக்களின் நீண்ட காலக் கனவாக விளங்குவதும், பல ஆய்வுகளின் மூலமாக சாத்தியக் கூறுகள் கண்டறியப் பட்டு, வல்லுநர்களால் வர வேற்கப்பட்டதுமான சேது சமுத்திரக் கால்வாய்த் திட் டத்தை நிறைவேற்றும் பணி யில்; உள்நோக்கத்துடன் அர சியல் அடிப்படையில் எழுப் பப்பட்டுள்ள தடைகளை விலக்கி, தமிழ்நாடும் இந்தியத் திருநாடும் மேலும் வளமும் வலிவும் பெறுவதற்குப் பயன் படக் கூடிய இத்திட்டத்தை விரைந்து நிறைவேற்றிட வேண் டும் என்று மத்திக அரசை இந்த அரசு வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.
பள்ளிக் கல்வி
இந்த அரசு பொறுப்பேற்ற பிறகு, தொகுப்பூதியம் பெற்று வந்த 45,987 ஆசிரியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கப் பட்டுள்ளதோடு, காலியாக இருந்த 21,574 ஆசிரியர் பணி யிடங்களும் நிரப்பப்பட்டுள் ளன. இது மட்டுமன்றி, 7,979 புதிய ஆசிரியர்கள் பணியிடங் களும் தோற்றுவிக்கப்பட்டு நிரப்பப்பட்டு வருகின்றன. மாணவர்கள் பாடங்களை எளிதில் புரிந்து கற்க உதவும் செயல்வழிக் கல்வி முறை மாநி லத்தில் உள்ள அனைத்துத் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளிலும் செயல்படுத்தப் பட்டுள்ளது. வரும் கல்வி யாண்டில் 100 நடுநிலைப் பள் ளிகள் உயர்நிலைப் பள்ளிக ளாகவும், 100 உயர்நிலைப் பள் ளிகள் மேல்நிலைப் பள்ளிகளா கவும் நிலை உயர்த்தப்படும்.
தமிழ்நாட்டில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் உள்ள கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கான பணி களை இந்த அரசு நிறைவேற்றி வருகிறது. தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்குத் தேவையான வகுப்பறைகள் பல்வேறு திட்டங்களின் கீழ் கட்டப்பட்டு வருகின்றன. 343 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்குத் தேவையான கட்டடங்கள் நபார்டு வங்கியின் உதவியுடன் கட்டப்பட்டு வருகின்றன. இதுமட்டுமன்றி மாநிலமெங் கும் உள்ள பள்ளிகளுக்கு மேசைகள், இருக்கைகள் மற்றும் நாற்காலிகள் ரூபாய் 69 கோடி மதிப்பீட்டில் வழங்கப் பட்டு வருகின்றன. வரும் நிதியாண்டில் மேலும் 450 அரசு உயர்நிலை மற்றும் மேல் நிலைப் பள்ளிகளுக்குத் தேவை யான கட்டடங்கள் ரூபாய் 312 கோடி மதிப்பீட்டில் நபார்டு வங்கியின் நிதியுதவி பெற்றுக் கட்டப்படும். இத்தகைய பள்ளிக் கட்டடப் பணிகளுக் காக வரும் நிதியாண்டில் ரூபாய் 150 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அனைவருக்கும்
கல்வித் திட்டம்
அனைவருக்கும் கல்வித் திட்டத்தைச் செயல்படுத்து வதில் முன்னணி மாநிலமாகத் தமிழகம் விளங்கி வருகிறது. இத்திட்டம் வரும் நிதியாண் டில், ரூபாய் 800 கோடி செலவில் செயல்படுத்தப்படும். இதற்காக, மாநில அரசின் பங்காக வரும் நிதியாண்டிற்கு ரூபாய் 280 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழ் நாட்டில் அனைவருக்கும் தொடக்கக் கல்வி உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், பதினொன்றாவது அய்ந்தாண் டுத் திட்ட காலத்தில் அனை வருக்கும் இடைநிலைக் கல்வி கிடைக்கச் செய்யும் இலக்கை எய்தும் நோக்கத்தோடு, மத்திய அரசால் அறிமுகப்படுத்தப் பட்டுள்ள புதிய (Scheme of Access to and Improvement of Quality of Education at Secondary Stage – SUCCESS) திட்டத்தை வரும் ஆண்டிலிருந்து இந்த அரசு சிறப்பாகச் செயல் படுத்தும். இத்திட்டத்திற்கான மாநில அரசின் பங்காக இந்த வரவு-செலவுத் திட்டத்தில் ரூபாய் 200 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தமிழ்வழிக் கல்வியில்
1999-2000 ஆம் ஆண்டில் தி.மு.க. ஆட்சி காலத்தில்தான் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் கணினிப் பாடம் அறிமுகப் படுத்தப்பட்டது. இந்த அரசு 2006 ஆம் ஆண்டில் மீண்டும் பொறுப்பேற்ற பிறகு, கடந்த இரண்டு ஆண்டுகளில் மாநி லத்தில் உள்ள 1,880 அரசு மேல்நிலைப் பள்ளிகளுக்கும், 1,525 அரசு உயர்நிலைப் பள்ளி களுக்கும் கணினிகள் வழங் கப்பட்டுள்ளன. வரும் நிதி யாண்டில் எஞ்சியுள்ள 100 அரசு மேல்நிலைப் பள்ளிகளுக் கும், 606 அரசு உயர்நிலைப் பள்ளிகளுக்கும் கணினிகள் வழங்கவும், அரசு மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் 6,650 நடுநிலைப் பள்ளிகளில் முதற்கட்டமாக 2,200 பள்ளி களுக்குக் கணினிகள் அளிக் கவும், இந்த வரவு-செலவுத் திட்டத்தில் ரூபாய் 71 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழ்வழிக் கல்வியில் பயின்று பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெறும் 1,000 மாணவ மாணவி யர்களுக்கு ஊக்கப் பரிசாக கணினிகள் அளிப்பதற்கான இந்த அரசின் புதிய திட்டத் திற்காக வரும் நிதியாண்டில் ரூபாய் 2 கோடியே 37 இலட் சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள் ளது.
சிவகங்கை பெரம்பலூர் – மருத்துவக் கல்லூரிகள்
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் மருத்துவக் கல்லூரிகள் அமைக் கப்பட வேண்டும் என்ற இந்த அரசின் குறிக்கோளை நிறை வேற்றும் நோக்கத்தோடு, கடந்த இரண்டு ஆண்டுகளில் விழுப்புரம், திருவாரூர், தரும புரி ஆகிய மாவட்டத் தலைநக ரங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்க ஆணை யிடப்பட்டு, அதற்கான நட வடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டு வருகின்றன. இதே போன்று, சிவகங்கை மற்றும் பெரம்பலூர் ஆகிய மாவட்டத் தலைநகரங்களில், வரும் நிதி யாண்டில் இரு புதிய அரசு மருத்துவக் கல்லூரிகள் அமைக்கப்படும்.
வருமுன் காப்போம்
நோய்த் தடுப்பு நடவடிக் கைகளில் நமது நாட்டிற்கே முன்னோடித் திட்டமாக விளங்கும் வருமுன் காப்போம் திட்டம் இந்த அரசால் மீண் டும் செயல்படுத்தப்பட்டு, மருத்துவ வல்லுநர் குழுக்கள் மூலம் மாநிலமெங்கும் மருத் துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற் றுள்ள இத்திட்டத்தின் கீழ், இதுவரை நடத்தப்பட்டுள்ள 5,204 மருத்துவ முகாம்களில் சுமார் 54.5 இலட்சம் பேர் பயனடைந்துள்ளனர்.
மொத்தமாக, 2005-2006 ஆம் ஆண்டில் ரூபாய் 1,487 கோடியாக இருந்த மக்கள் நல்வாழ்வுத் துறைக்கான ஒதுக் கீடு, இந்த வரவு-செலவுத் திட் டத்தில் ரூபாய் 2,741 கோடியாக உயர்ந்துள்ளது.
தொழில் துறை
இந்த அரசு பொறுப்பேற்று முதல் இரண்டாண்டு காலத் திற்குள்ளேயே, ரூபாய் 17,583 கோடி அளவிலான முதலீட் டுடன் 1,41,640 பேருக்கு நேரடி மற்றும் மறைமுக வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தக் கூடிய பெரும் தொழிற்சாலை களை நிறுவுவதற்காக, 13 நிறு வனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப் பட்டுள்ளன. ஆண்டுக்கு சுமார் 6 இலட்சம் கார்களை உற்பத்தி செய்யும் அளவிலான ஹூண் டாய் கார் தொழிற்சாலை விரிவாக்கம்; ரெனோ-நிசான் கூட்டு முயற்சியான 4 இலட்சம் கார்களை உற்பத்திச் செய்யக் கூடிய புதிய தொழிற்சாலை; 3 இலட்சம் வணிக வாகனங் களை உற்பத்திச் செய்யும் நிசான்-அசோக்லேலண்ட் புதிய தொழிற்சாலையென, பல வாகன உற்பத்தித் தொழிற் சாலைகள் தமிழ்நாட்டில் நிறுவப்பெற்று வருகின்றன. இதுபோலவே, கணினி மற்றும் மின்னணு சாதனங்கள் உற் பத்தியிலும், டெல் கம்ப்யூட் டர்ஸ், மோட்டரோலா, சாம் சங், மோசர் பேயர், சிக்நெட் சோலார் என முன்னணி நிறுவனங்கள் தமிழகத்தில் தமது தொழிற்சாலைகளை நிறுவ முன்வந்துள்ளன. இவற் றின் மூலம் வாகன உற்பத்தியி லும், மின்னணு சாதனங்கள் உற்பத்தியிலும் நமது நாட்டி லேயே முன்னணி மாநிலமாகத் தமிழகம் மாறியுள்ளது.
சிறப்புப் பொருளாதார மண்டலம்.
திருநெல்வேலி மாவட்டம் கங்கைகொண்டானில் 255 ஏக்கர் பரப்பளவில் போக்கு வரத்து பொறியியல் சாதனங் கள் சிறப்புப் பொருளாதார மண்டலம் திருவண்ணாமலை மாவட்டம் செய்யாரில் 255 ஏக்கர் பரப்பளவில் தானியங்கி / தானியங்கி உதிரி பாகங்க ளுக்கான சிறப்புப் பொரு ளாதார மண்டலம் ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் 263 ஏக்கர் பரப்பளவில் பொறி யியல் பொருட்களுக்கான சிறப்புப் பொருளாதார மண்ட லம்
வேலூர் மாவட்டம் இராணிப்பேட்டையில் 260 ஏக்கர் பரப்பளவில் தோல் தொழில் சிறப்புப் பொருளா தார மண்டலம்.
இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள்
இலவச வண்ணத் தொலைக் காட்சிப் பெட்டிகள் வழங்கும் இந்த அரசின் திட்டத்தின் கீழ் ஒளிவு மறைவற்ற முறையில் 59 இலட்சத்து 55 ஆயிரம் பெட் டிகள் கொள்முதல் செய்ய ஆணையிடப்பட்டு, இதுவரை 27,86,255 பயனாளிகளுக்கு இவை வழங்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் இல்லாத வீடே இல்லை என்ற நிலையை எட்டும் வகையில், இந்தத் திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்த, 2008-2009 ஆம் ஆண்டு வரவு-செலவுத் திட்டத்தில் மேலும் ரூபாய் 750 கோடி ஒதுக்கீடு செய்யப்பட் டுள்ளது. பொழுதுபோக்குக்கு மட்டுமன்றி மக்களின் வாழ்க் கைத் திறனை மேம்படுத்தவும் இவை பயன்படும் வகையில், ஆங்கிலத்தில் பேசும் திறன், யோகா பயிற்சி, மாணவர் ஆலோசனை மற்றும் போட் டித் தேர்வுகளுக்கான பொது அறிவுப் பயிற்சி போன்றவற் றிற்கான தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் வரும் ஆண்டிலி ருந்து தமிழ்நாடு திறந்த நிலைப் பல்கலைக்கழகம் மூலம் நடத் தப்படும். இதற்காக இந்த வரவு-செலவுத் திட்டத்தில் ரூபாய் 3 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மின்சாரம்
தமிழகத்தில் மின் தேவை ஆண்டுதோறும் வளர்ந்து வரு வதையும், மாநிலத்தின் நீண்ட கால மின் தேவையைக் கருத் தில் கொண்டும், போதிய மின் உற்பத்தி செய்வதற்கான பல திட்டங்களை வகுத்து இந்த அரசு முனைப்புடன் செயல் படுத்தி வருகிறது. வட சென்னை அனல் மின்நிலை யத்தில் 600 மெகாவாட் உற்பத்தித் திறன் கொண்ட புதிய அலகு அமைப்பதற்கான பணிகள் ரூபாய் 2,475 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப் பட்டு வருகின்றன. மேட்டூர் அனல் மின்நிலையத்தில் கூடு தலாக 600 மெகாவாட் உற் பத்தித் திறன் கொண்டஓர் உற்பத்தி நிலையத்தை நிறுவுவ தற்கான ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டுள்ளன. இது போல, தூத்துக்குடி அனல் மின்நிலையத்திலும் கூடுதலாக 1,000 மெகாவாட் உற்பத்தித் திறன் கொண்ட நிலையத்தை நிறுவத் திட்டமிடப்பட்டுள் ளது. இத்திட்டங்கள் அனைத் தும் தமிழ்நாடு மின்சார வாரியத்தினால் மேற்கொள்ளப்படும். இவை தவிர, தமிழ்நாடு மின்சார வாரியம் மற்றும் தேசிய அனல் மின் நிறுவனம் (NTPC) ஆகியவற்றின் கூட்டு முயற்சியாக வடசென்னையில் 1,500 மெகாவாட் உற்பத்தித் திறன் கொண்ட புதிய மின் திட்டத்திற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின் றன. மேலும், தமிழ்நாடு மின் சார வாரியம் பாரத மிகுமின் கழகத்தோடு (BHEL) இணைந்து, தூத்துக்குடி மாவட்டம் உடன் குடியில் 1,600 மெகாவாட் உற்பத்தி செய்யக்கூடிய புதிய மின் உற்பத்தி நிலையம் ஒன்றை அமைத்திடவும், புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப் பட்டுள்ளது. வரும் 2008-2009 ஆம் நிதியாண்டில் மாநிலத் தின் மின்சார விநியோகக் கட்டமைப்பு ரூபாய் 1,720 கோடி மதிப்பீட்டில் மேம் படுத்தப்படும். இதன் கீழ் 90 புதிய துணை மின் நிலையங் கள் அமைக்கப்படும்.
போக்குவரத்து
2006-2007 மற்றும் 2007-2008 நிதி ஆண்டுகளில் அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்கு 6,025 புதிய பேருந்துகள் வாங்க ஆணையிடப்பட்டு, அரசின் நிதி உதவியாக ரூபாய் 477 கோடி அளிக்கப்பட்டு, இது வரை 5,451 புதிய பேருந்துகள் வாங்கப்பட்டு இயக்கப்பட்டு வருகின்றன. பயணியர் நலன் கருதி, வரும் நிதி ஆண்டில் மேலும் 3,500 புதிய பேருந் துகள், ரூபாய் 482 கோடி மதிப்பீட்டில் வாங்கப்படும். இதற்காக அரசின் நிதி உதவி யாக ரூபாய் 330 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மெட்ரோ இரயில் திட்டம்
சென்னை மாநகரில் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்கு மற்றுமொரு தீர்வாக, மெட்ரோ இரயில் திட்டத்தைச் செயல்படுத்த இந்த அரசு முனைந்துள்ளது. இத்திட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப் பட்டு, மத்திய அரசு மற்றும் ஜப்பான் பன்னாட்டுக் கூட் டுறவு வங்கியின் ஒப்புதல் மற் றும் நிதியுதவி பெறுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்தத் திட் டத்தைச் செயல்படுத்துவதற்கு, சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் என்ற பொதுத்துறை நிறுவனம் ஒன்று அமைக்கப் பட்டுள்ளது. இத்திட்டத் திற்கு மாநில அரசின் பங்காக, இந்த வரவு-செலவுத் திட்டத் தில் ரூபாய் 300 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
குடிநீர்த் திட்டம்
வளர்ந்து வரும் சென்னை மாநகரின் நீண்ட காலக் குடிநீர்த் தேவையைக் கருத்தில் கொண்டு, சென்னைக்கு அரு கில் மீஞ்சூரில் கடல் நீரிலி ருந்து நாள் ஒன்றுக்கு 100 மில்லியன் லிட்டர் குடிநீரை உற்பத்தி செய்யும் திட்டத்தின் பணிகள் நடைபெற்று வருகின் றன. இப்பணிகள் நிறைவுற்று வரும் ஜூன் திங்களிலிருந்து நாள் ஒன்றுக்கு 15 மில்லியன் லிட்டர் குடிநீரும், செப்டம்பர் திங்களிலிருந்து நாள் ஒன்றுக்கு 100 மில்லியன் லிட்டர் குடி நீரும் சென்னை மாநகருக்குக் கிடைக்கும். பரந்து விரிந்து வளர்ந்து வருகின்ற சென்னை மாநகருக்குத் தேவையான குடிநீர் வசதியை மேலும் உறுதி செய்யும்பொருட்டு, சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலை யில் நெம்மேலியில் கடல் நீரிலிருந்து நாள் ஒன்றுக்கு 100 மில்லியன் லிட்டர் குடிநீர் தயாரிக்கும் மற்றுமொரு நிலையத்தை ரூபாய் 994 கோடி மதிப்பீட்டில், மைய அரசின் நிதி உதவியுடன் செயல்படுத்த ஏதுவாக இத்திட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு மைய அர சுக்கு அனுப்பப்பட்டுள்ளது. மைய அரசின் இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில் இத் திட்டத்திற்கு முதற்கட்டமாக ரூபாய் 300 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இத்திட் டத்திற்கான பணிகள் வரும் நிதியாண்டில் மேற்கொள் ளப்படும்.
22 ஆயிரம் வீடுகள்
குறைந்த வருவாய்ப் பிரி வினர், நடுத்தரக் குடும்பங்கள் மற்றும் அரசு அலுவலர் களுக்கு, தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் மூலம், நகரங் களுக்கருகில் உள்ள பகுதி களில் 22,000 வீடுகள் ரூ.2,000 கோடி மதிப்பீட்டில் கட்டப் படும். ஊரக வளர்ச்சி
இந்த அரசால் தொடங்கப் பட்டுள்ள அனைத்துக் கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட் டத்தின் கீழ், கடந்த இரண்டு ஆண்டுகளில் ரூபாய் 1,020 கோடி செலவில் 5,074 கிராமங் களில் பணிகள் மேற் கொள்ளப்பட்டுள்ளன. இந்தத் திட்டத்திற்காக 2008-2009 ஆம் ஆண்டு வரவு-செலவுத் திட்டத் திலும் ரூபாய் 504 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு, மேலும் 2,521 கிராம ஊராட் சிகளில் அடிப்படை வசதிப் பணிகள் மேற்கொள்ளப்படும்.
தந்தை பெரியார் சிலையுடன்
240 சமத்துவபுரங்கள்
மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அறிவித்தவாறு, தந்தை பெரியார் அவர்களின் சமத்துவக் கொள்கையை நிலைநாட்டும் வகையில், அவ ரது திருவுருவச் சிலையுடன் கூடிய 95 புதிய சமத்துவபுரங் களை அமைப்பதற்கு இந்த அரசு ஒப்புதல் வழங்கி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரு கின்றன. அனைத்து சமூகத் தினரும் சகோதர பாசத்துடன் ஒருமித்து வாழ வழிவகுக்கும் இந்த சமத்துவபுரங்கள், வரும் மூன்று ஆண்டுகளில் அமைக் கப்படும். இப்பணிகள் நிறைவுற்ற பின், ஏற்கெனவே இந்த அரசால் அமைக்கப் பட்ட 145 சமத்துவபுரங் களையும் சேர்த்து, பெரியார் சிலையுடன் கூடிய 240 சமத்துவபுரங்கள் தமிழகத்தில் அமையப்பெறும். இப்பணி களுக்காக வரும் நிதியாண்டில் ரூபாய் 75 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மகளிர் நலன்
சமையல் எரிவாயு இணைப்பு இல்லாத குடும்பங் களுக்கு, இலவச எரிவாயு அடுப்பும், சமையல் எரிவாயு இணைப்பும் வழங்கும் திட் டம் இந்த அரசால் செயல் படுத்தப்பட்டு வருகிறது. ஏழை மற்றும் நடுத்தரக் குடும்பங் களைச் சேர்ந்த பெண்களுக்கு பயனளிக்கும் இந்தத் திட்டத்தின் கீழ், இதுவரை ஆறு இலட்சத்து ஐம்பதாயிரம் குடும்பங்களுக்கு இலவச எரிவாயு அடுப்புகளும், இலவச எரிவாயு இணைப்புகளும் வழங்கப்பட்டுள்ளன. இந்தத் திட்டத்தை வரும் நிதியாண் டிலும் தொடர்ந்து செயல் படுத்தி, மேலும் 8 இலட்சம் இலவச எரிவாயு அடுப்புகள் மற்றும் இணைப்புகள் வழங்க ரூபாய் 160 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டம் அடுத்து வரும் ஆண்டுகளிலும் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.
மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண உதவித் திட்டம்
மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண உதவித் திட்டத்தை மீண்டும் செயல்படுத்தி, வழங்கப்படும் உதவித் தொகையை 2006-2007 ஆம் ஆண்டிலிருந்து 10,000 ரூபாயிலிருந்து, 15,000 ரூபாயாக இந்த அரசு உயர்த்தி வழங்கி வருகிறது. ஏழைக் குடும்பங்களின் திருமணச் செலவுகளுக்குப் பெரும் உதவியாக விளங்கி வரும் இத்திட்டத்தின் கீழ், இதுவரை ஒரு இலட்சத்து இருபதாயிரம் ஏழைப் பெண்கள் பயனடைந் துள்ளனர். அதிகரித்துவரும் திருமணச் செலவுகளைக் கருத் தில் கொண்டு, வரும் நிதி யாண்டிலிருந்து இத்திட்டத் தின் கீழ் வழங்கப்படும் நிதி யுதவி ரூபாய் 15,000-லிருந்து ரூபாய் 20,000 ஆக உயர்த் தப்படும். சுமார் 65,000 ஏழைப் பெண்கள் பயனடையும் வகை யில் இத்திட்டத்திற்காக ரூபாய் 130 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மகளிர் ஆணையத்திற்கு சட்டபூர்வமான அதிகாரம் பெண்களுக்குச் சமச் சொத்துரிமையையும், உள்ளாட்சி அமைப்புகளில் 33 சதவீத இட ஒதுக்கீட்டையும் வழங்கி தி.மு. கழக அரசுதான் பெண்ணுரிமையை நிலைநாட் டியது. இந்த வகையில், தமிழ் நாட்டில் மகளிர் நலன் பேணி டும் வண்ணம் செயல்பட்டு வரும் மகளிர் ஆணையத்திற்கு இந்த அரசு சட்டபூர்வமான அதிகாரம் (Statutory Status) அளிக்கும். இதற்கான சட்ட முன்வடிவு இந்தக் கூட்டத் தொடரிலேயே அறிமுகப் படுத்தப்படும். ஊனமுற்றோருக்கு உதவித்தொகை
உடல் ஊனமுற்றோர் படும் துன்பங்கள் போலவே தசைச் சிதைவு (Muscular Dystropy) நோயினால் பாதிக்கப்பட்டுள் ளோரும் கடும் துயரங்களைச் சந்தித்து வருகின்றனர். அவர் களுக்கு உதவும் வகையில் இந் நோயினால் பாதிக்கப்பட்டுள் ளோருக்கும் வரும் நிதியாண்டி லிருந்து, கடும் ஊனமுற்றோ ருக்கு அளிக்கப்படுவது போலவே மாதாந்திர உதவித் தொகையாக ரூபாய் 500 அளிக்கப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நெசவாளர் நலன் கைத்தறி நெசவாளர்களுக்குத் தொடர்ந்து வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், பொங் கல் திருநாளையொட்டி ஏழை எளியோருக்கு இலவச வேட்டி மற்றும் சேலைகள் வழங்கும் திட்டம், வரும் ஆண்டிலும் தொடர்ந்து செயல்படுத்தப் படும். இதற்காக ரூபாய் 256 கோடி இந்த வரவு-செலவுத் திட்டத்தில் ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது. கைத்தறி நெச வாளர் கூட்டுறவுச் சங்கங் களுக்கு அளிக்கப்பட்டு வந்த வட்டி மானியம் 2003 ஆம் ஆண்டிலிருந்து நிறுத்தப்பட் டுள்ளது. வரும் நிதியாண்டி லிருந்து இக்கடன்களுக்கு 4 சதவீத வட்டி மானியம் மீண் டும் அளிக்கப்பட்டு, வட்டி விகிதம் 12 சதவீதத்திலிருந்து 8 சதவீதமாகக் குறைக்கப்படும். இதற்காக அரசுக்கு ஆண்டு தோறும் ரூபாய் 12 கோடி செலவாகும். மேலும், ஹட்கோ நிறுவனத்தின் மூலம், தொழிற்கூடங்களுடன் கூடிய குடியிருப்புகள் அமைப்ப தற்காக கைத்தறி நெசவாளர் கள் கடன் பெற்று, திருப்பிச் செலுத்த இயலாமல் நிலுவை யில் உள்ள ரூபாய் 15 கோடி கடன் தொகை இரத்து செய்யப்படும்.
வேலைவாய்ப்பற்ற இளைஞர் நலன்
வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு மாதாந்திர உதவித் தொகை அளிக்கும் திட்டத்தின் கீழ், இதுவரை 3,53,488 இளைஞர்கள் பயன் பெற்றுள்ளனர். இத்திட்டத் திற்காக வரும் ஆண்டில் ரூபாய் 95 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நமது மாநிலத்தில் பெருகிவரும் வேலைவாய்ப்புகளைப் பெற்றுப் பயனடைய, நமது இளைஞர்களின் திறனை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளையும் இந்த அரசு எடுத்து வருகிறது. இளைஞர்களுக்குத் திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளித் திட ரூபாய் 8 கோடி ஒதுக் கீட்டில் கடந்த ஆண்டிலிருந்து திறன்மேம்பாட்டுப் பயிற்சித் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டம் வரும் ஆண்டிலும் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலன்
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின வகுப்பினரின் சமூகப் பொருளாதார நிலையை மேம்படுத்தவும், அவர்களது வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவும் பல்வேறு திட்டங்களை வகுத்து இந்த அரசு செயல்படுத்தி வருகிறது. இந்த அரசு பதவியேற்ற பின் னர், கடந்த இரண் டாண்டுகளாகச் சிறப்பு மாநில ஒதுக்கீடாக ஆண்டுதோறும் ரூபாய் 25 கோடி அளித்து; இந்நிதி முழுவதையும் படித்த ஆதிதிராவிட இளைஞர் களுக்கான பயிற்சித் திட்டங் களுக்காக மட்டுமே பயன் படுத்தப்பட ஆவன செய்துள் ளது. இத்திட்டத்திற்கு வரும் ஆண்டிலும் ரூபாய் 25 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ், பட்டப் படிப்பு பயின்ற ஆதிதிராவிட இளைஞர்கள், தேசிய அளவில் நடத்தப்படும் பல்வேறு பட்ட மேற்படிப்புத் தேர்வுகளில் வெற்றி பெறுவதற்கு உதவக் கூடிய சிறப்புப் பயிற்சித் திட் டம் ஒன்று வரும் ஆண்டி லிருந்து செயல்படுத்தப்படும். கூட்டுறவு வங்கிகளிடமிருந்து பெறப்பட்ட விவசாயக் கடன் கள் இரத்து செய்யப்பட் டதைப் போன்றே, ஆதிதிரா விட விவசாயிகள் தாட்கோ நிறுவனத்திடமிருந்து பெற்று நிலுவையில் உள்ள 5 கோடியே 50 இலட்சம் ரூபாய் விவசாயக் கடன்களும் தள்ளுபடி செய் யப்படும்.
பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலன்
பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, சீர்மரபின, ஆதிதிராவிட மற்றும் பழங் குடியின மாணவர்கள் அரசு நடத்தும் பள்ளி மற்றும் கல்லூரி விடுதிகளில் தங்கிப் பயின்று வருகின்றனர். 2001 ஆம் ஆண்டிலிருந்து உயர்த்தப் படாமலிருந்த பள்ளி மாணவர்களுக்கான மாதாந்திர உணவுப் படியை ரூபாய் 400 ஆகவும், 1998 ஆம் ஆண்டிலி ருந்து உயர்த்தப்படாமலிருந்த கல்லூரி மாணவர்களுக்கான மாதாந்திர உணவுப் படியை ரூபாய் 500 ஆகவும், இந்த அரசுதான் கடந்த ஆண்டு உயர்த்தி வழங்கியது. இந்தப் படிகளை மேலும் உயர்த்தி வழங்க வேண்டும் என வந் துள்ள பல்வேறு கோரிக்கை களைக் கருத்தில் கொண்டு, இவை மேலும் 50 ரூபாய் அளவில் உயர்த்தப்பட்டு பள்ளி விடுதிகளுக்கு மாதம் ரூபாய் 450 ஆகவும், கல்லூரி விடுதிகளுக்கு மாதம் ரூபாய் 550 ஆகவும் வரும் கல்வி ஆண்டிலிருந்து வழங்கப்படும்.
சிறுபான்மையினர் நலன்
அரசு மற்றும் தனியார் துறைகளில் அதிக வேலை வாய்ப்புகளையும், சுய வேலை வாய்ப்புகளையும் பெற, சிறுபான்மையின இளைஞர் கள் மற்றும் பெண்களைத் தகுதி பெறச் செய்யும் நோக் குடன் அவர்களுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சித் திட்டத்தைக் கடந்த ஆண்டு இந்த அரசு தொடங்கியுள்ளது. இத்திட்டத்தின்கீழ் ரூபாய் 2.5 கோடி மதிப்பீட்டில் 5,000 சிறுபான்மையினர் பயன் அடைந்துள்ளனர். இத்திட்டம் வரும் நிதியாண்டிலும் தொடர்ந்து செயல்படுத்தப் படும். இதுமட்டுமன்றி, வரும் நிதியாண்டில் 25 ஆயிரம் சிறு பான்மையினர் பயன்பெறும் வகையில் தமிழ்நாடு சிறு பான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் மூலம் ரூபாய் 40 கோடி கடன் உதவி வழங்கப்படும். சிறுபான்மை யின மாணவர்கள் தொழில் பட்டப்படிப்பு பயில்வதற்கு உதவித் தொகை வழங்கும் திட்டம் ரூபாய் 2 கோடி செலவில் செயல்படுத்தப்படும்.
இலங்கைத் தமிழர்
இலங்கைத் தமிழ் அதி களுக்கு வழங்கப்படும் உதவித் தொகையை இரு மடங்காக உயர்த்தி இந்த அரசு வழங்கி வருகிறது. அவர்கள் தங்கி யுள்ள அகதிகள் முகாம்களில் உள்ள வசதிகளை மேம்படுத்த ஆவன செய்யப்படும். பிறந்த மண்ணில் வாழ வழியின்றி பல ஆண்டுகளாக இலங்கைத் தமிழர்கள் சந்தித்துவரும் துயரங்களைத் துடைத்திட, பேச்சுவார்த்தைகள் மூலம் இப்பிரச்சினைக்கு அமைதி யான அரசியல் தீர்வு காணப் படவேண்டும் என இந்த அரசு விரும்புகிறது. இந்த விருப் பத்தை நிறைவேற்றக் கூடிய பொறுப்பும், அதிகாரமும் மத்திய அரசிடம்தான் உள்ளது என்பதையும் சுட்டிக்காட்டு கிறோம்.
தை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு
மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் இடையறாத முயற்சிகளால் மைய அரசு தமிழைச் செம்மொழியாக அறி வித்து பெருமைப்படுத்திய தோடு மட்டுமல்லாமல், தமிழ் செம்மொழி ஆய்வுக்கான மத்திய நிறுவனத்தைச் சென்னையில் ரூபாய் 76 கோடி மதிப்பீட்டில் அமைக்கவும், மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் தலைமையில் இந்நிறுவனம் செயல்படவும் ஆணையிட்டுள்ளதை நன்றி யோடு குறிப்பிட விரும்பு கின்றேன். தை முதல் நாளையே தமிழ்ப் புத்தாண்டு நாளாக நடைமுறைப்படுத்திட சட்டமியற்றிய மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் அருஞ்சாதனையைத் தமிழ் கூறும் நல்லுலகத்தார் அனை வரும் அகமகிழ்ந்து வரவேற் றுள்ளனர்.
நல்லறிவாளர்கள் நூல்கள் நாட்டுடைமை
இந்த ஆண்டு, கவிஞர் பெரியசாமித் தூரன், பேரா சிரியர் க.வெள்ளைவாரண னார், பண்டிதர் க.அயோத்தி தாசர், ஆபிரகாம் பண்டிதர், சதாவதானி செய்குத்தம்பிப் பாவலர், டாக்டர் ரா.பி.சேதுப் பிள்ளை, மகாவித்வான் ரா.ராகவையங்கார், உடுமலை நாராயணகவி, கு.மு.அண்ணல் தங்கோ, அவ்வை தி.க.சண் முகம், விந்தன், லா.ச.ராமா மிர்தம், வல்லிக்கண்ணன், நா.வானமாமலை, கவிஞர் புதுவைச் சிவம், அ.இராகவன், தொ.மு.சி.ரகுநாதன், சக்திதாசன் சுப்பிரமணியன், டாக்டர் ந.சஞ்சீவி, முல்லை முத்தையா, கவிஞர் எஸ்.டி.சுந்தரம், கவிஞர் மீரா, பேராசிரியர் ஆ.கார் மேகக் கோனார், புலவர் முகமது நயினார் மரைக்காயர், சு.சமுத்திரம், கோவை இளஞ் சேரன், பேராசிரியர் ந.சுப்பு ரெட்டியார் ஆகிய தமிழ்ச் சான்றோர்களின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டு, அவர்கள் உருவாக்கிய நூல் களின் எண்ணிக்கை, அவை சமுதாயத்தில் ஏற்படுத்திய தாக்கம், அவற்றின் பெருமை ஆகியவற்றின் அடிப்படையில் அவர்தம் மரபுரிமையர் களுக்குப் பரிவுத் தொகை வழங்கப்படும். அலுவலர்கள் நலன்
அரசு அலுவலர்கள், ஆசிரி யர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதிய தாரர்களுக்கு வழங்கப்படும் அகவிலைப்படியை 41 சதவீதத் திலிருந்து 47 சதவீதமாக 1.1.2008 முதல் உயர்த்தி வழங்க மத்திய அரசு ஆணையிட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, மாநில அரசு அலுவலர்கள், ஆசிரியர் கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் ஆகியோர் பெற்றுவரும் அகவிலைப்படியையும் 6 சதவீதம் உயர்த்தி, 1.1.2008 முதல் 47 சதவீதமாக இந்த அரசு வழங்கும். இந்த உயர்வினால் ஏற்படும் நிலுவைத் தொகை யும் ரொக்கமாக வழங்கப் படும். இதனால் நடப்பாண் டில், ரூபாய் 136 கோடியும், வரும் நிதி ஆண்டில் ரூபாய் 817 கோடியும் அரசுக்குக் கூடுதல் செலவு ஏற்படும்.
பேரறிஞர் அண்ணா புகழ் மணக்கும் நூற்றாண்டு
எங்களையெல்லாம் ஆளாக்கிய எங்கள் உயிராக உயிர் மூச்சாக இதயத் துடிப் பாக இருக்கின்ற பேரறிஞர் அண்ணா அவர்களின் நூற் றாண்டு; இந்த 2009 ஆம் ஆண்டாகும். அந்தப் பெருந் தகைக்கு நூற்றாண்டு விழா வினை எடுக்கும் வாய்ப்பு, ஆளுங்கட்சியாக நாம் இருக் கும் ஆண்டில் வாய்த் திருப்பதை நாம் பெற்ற பேறாகக் கருதுகிறோம். அண் ணாவின் நூற்றாண்டு விழா வினை இந்த உலகமே வியக்கும் வண்ணம் ஓராண்டு முழுவதும் கட்சி வேறுபாடின்றி தமிழக அரசின் சார்பில் கொண் டாடுவோம். அண்ணாவின் அருமை பெருமைகளையெல் லாம் அவனிக்கு எடுத்துக் கூறுவோம்.
ஆட்சிப் பொறுப்பேற்று இரண்டாண்டுகள் மட்டுமே வாழ்ந்த நிலையிலும் ஜனநா யகத்தின் மாண்பினை உலகத் திற்கு எடுத்துக் காட்டிடும் வகையில் ஆட்சி புரிந்த பெருமை அண்ணாவிற்கு உண்டு. தமிழகத்திற்கு தமிழ் நாடு என்று அண்ணா பெயர் சூட்டியது அந்த இரண்டு ஆண்டு காலத்திலேதான். பிறமொழி ஆதிக்கம் தமிழை அழித்து விடக் கூடாது என்ப தற்கு பாதுகாப்பாக தமிழ கத்திற்கு தமிழ், ஆங்கிலம் ஆகிய இரண்டு மொழிகள் மட்டும்தான் தேவை என்ற அறிவிப்பைச் செய்ததும் அந்த இரண்டாண்டு காலத்திலே தான். சமுதாயச் சீர்திருத்தக் கொள்கைகளில் அக்கறை கொண்டு சுயமரியாதை திரு மணங்கள் சட்டப்படி செல்லு படியாகும் என்ற சட்டத்தைக் கொண்டு வந்து தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற் றியதும் அந்த இரண்டாண்டு காலத்திலேதான். மாநில சுயாட்சிக் கொள்கையைத் திராவிட முன்னேற்றக் கழகம் எழுப்பிட அதற்கு முதலில் வித்தூன்றியதும் பேரறிஞர் அண்ணா அவர்கள் தான். அவருடைய பெருமையை நாம் பாடிட தற்போதைய இளை ஞர் சமுதாயம் அந்த மறக்க முடியாத மாமனிதரைப் பற்றி நன்றாக அறிந்திட, 2009 ஆம் ஆண்டு அண்ணாவின் நூற் றாண்டாக தமிழகமெங்கும் கொண்டாடப்படும் என்ற அறிவிப்பையும் தமிழக முதல் வர் கலைஞர் அவர்களின் சார்பில் செய்திட விரும்புகிறேன்.


நிதிநிலை அறிக்கை 2008-2009 புதிய திட்டங்கள்

பேரறிஞர் அண்ணாவின் நூற்றாண்டு விழாவினை ஆண்டு முழுவதும் கொண்டாட முடிவு.

தைத் திங்கள் முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டென கொண்டாட முடிவு.

சமத்துவக் கொள்கையை நிலைநாட்ட பெரியார் சிலையுடன் கூடிய சமத்துவபுரங்கள்

தாலி மற்றும் பிற மதத்தினர் மணவிழாவில் பயன்படுத்தும் சிலுவை, கருகமணி ஆகியவற்றுக்கு எடை
வரம்பின்றி வரி விலக்கு.

சித்த மருந்துகளுக்கு வரி விலக்கு.

பன், ரஸ்க், சோயா எண்ணெய், வெல்லம் ரப்பர் பூச்சுள்ள நெசவுத் துணிகள் ஆகியவைகளுக்கு வரி விலக்கு
மற்றும் பல பொருள்களுக்கு வரி குறைப்பு

பயிர்க் காப்பீட்டுத் திட்டம் – 25 இலட்சம் விவசாயிகளுக்கு காப்பீட்டுத் தொகையில் 50 சதவிகிதத்தை அரசே வழங்கும்.

கூட்டுறவு வங்கிகள் மூலம் 1500 கோடி புதிய பயிர்க்கடன்.

கூட்டுறவுப் பயிர்க்கடன் வட்டி 4 சதவிகிதம் ஆகக் குறைப்பு.

சிவகங்கை மற்றும் பெரம்பலூரில் புதிய அரசு மருத்துவ கல்லூரிகள்

திண்டிவனம், விழுப்புரம், பண்ணுருட்டி, நாகப்பட்டினம் மற்றும் ராமநாதபுரத்தில் அண்ணா பல்கலைக்கழக புதிய பொறியியல் கல்லூரிகள்

புதிய திருப்பூர் மாவட்டம் உதயம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் கரம்பக்குடி மற்றும் பொன் னமராவதி புதிய வருவாய் வட்டங்கள்.

திருச்சி மற்றும் அரியலூர் மாவட்டங்களுக்கு புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கட்டடங்கள் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு கூடுதல் கட்டடம்.

வேலூர் நகராட்சி மாநகராட்சியாக நிலை உயர்த்தப்படும்

3500 புதிய அரசு பேருந்துகள் வாங்கப்படும்

ஏழைப் பெண்களுக்கு திருமண நிதி உதவித் திட்டம் – ரூபாய் 15,000- லிருந்து ரூபாய் 20,000 ஆக உயர்வு.

ரூபாய் 6000 மகப்பேறு நிதி உதவி பெற இனி வருமான சான்றி தழ் தேவையில்லை.

சிறு வணிகம் செய்யும் மகளிர் உட்பட 2 இலட்சம் வணிகர் களுக்கு கூட்டுறவு வங்கிகள் மூலம் ரூபாய் 50 கோடி கடன்.

கைத்தறி நெசவாளர்கள் வீடு கட்ட வாங்கிய ரூபாய் 15 கோடி கடன் அறவே ரத்து.

ஆதிதிராவிட விவசாயிகள் தாட்கோவிலிருந்து பெற்ற விவசாயக் கடன்கள் ரூபாய் 5 கோடி அறவே தள்ளுபடி.

கேபிள் டிவி நடத்துவோர் மீதான கேளிக்கை வரி ரத்து ஏற்க னவே உள்ள நிலுவை 16 கோடி ரூபாய் முழுவதும் தள்ளுபடி.

பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினர் பெற்ற கூட்டுறவு வீட்டு வசதிக் கடன் நிலுவை முழுவதும் தள்ளுபடி. குறைந்த வருவாய், நடுத்தர வருவாய் மற்றும் உயர் வருவாய் பிரிவினர் கட னைத் திருப்பி செலுத்தினால் அபராத வட்டி முழுவதும் தள்ளு படி செய்யப்படுவதோடு, வட்டியில் ஒரு பகுதியும் தள்ளுபடி.

50 லட்சம் மாணவர்கள் பயன் பெறும் வகையில் அரசு பள்ளி களில் சிறப்புக் கட்டணம் முற்றிலும் ரத்து

அரசு தொழிற்பயிற்சி நிலையங்களிலும் சிறப்புக் கட்டணம் ரத்து

விசைத்தறி நெசவாளர்களுக்கு தனி நல வாரியம்

புத்தகப் பதிப்புத் துறையில் பணிபுரிவோருக்கு ஒரு தனி நல வாரியம்

கேபிள் டி.வி. தொழிலில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு ஒரு தனி நல வாரியம்.

நரிக்குறவர்களுக்கு தனி நல வாரியம்

அரவாணிகள் நல வாரியம் – மற்றும் வேலை வாய்ப்பு பயிற்சி.

அருந்ததியர் உள் ஒதுக்கீடு – பரிந்துரை செய்ய நீதியரசர் எம்.எஸ். ஜனார்த்தனம் அவர்களைக் கொண்ட ஒரு
நபர் குழு நியமனம்

விபத்தின்றி ஓட்டும் அரசு பேருந்து ஓட்டுநர்களுக்கு ரொக்கப் பரிசு.

கழிவு நீர்க் குழாய்களில் தூய்மைப்பணி புரிவோருக்கு பாது காப்பு உடைகள், இலவச மருத்துவக் காப்பீடு மற்றும் இலவச உடல்நலப் பரிசோதனை.

கழிவு நீர் குழாய்களில் இறங்கி பணிபுரிவதைத் தவிர்க்க சிறப்பு இயந்திரங்கள்.

27 தமிழ் அறிஞர்களின் நூல்கள் நாட்டுடைமையாக்கப் பட்டு அவர்கள் குடும்பங்களுக்கு பரிவுத் தொகை வழங்கப்படும்.

தமிழகத்தின் சிறப்புகளை ஒருங்கே சித்திரிக்கும் கையளவில் தமிழகம் கவின் கலைக் கூடமாக!

சின்னத்திரை கலைஞர்களுக்கு நல நிதியம் – ஒரு கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு.

ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் ஓர் உடற்பயிற்சி நிலை யம்.

தமிழ்வழிக் கல்வியில் பயின்று பத்தாம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் பெறும் 1000 மாணவ மாணவியர்களுக்கு கணினி பரிசு

சமுதாயக் கல்லூரிகளில் ஏழை மாணவ மாணவியருக்கு ரூபாய் 1000 உதவித்தொகை

எயிட்ஸ் நோயினால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு உதவித்தொகை வழங்க அரசின் சார்பில் அறக்கட்டளை – ரூபாய் 5 கோடி ஒதுக்கீடு

5440 கிராமங்களில் இணைய வசதிகளுடன் கூடிய பொதுச் சேவை மையங்கள் – அங்கே அரசு சான்றிதழ்கள், விண்ணப் பங்கள் பெறவும், கட்டணங்கள் செலுத்தவும் வசதி

மீனவர் மற்றும் மீனவ மகளிருக்கான நவீன மீன்பிடி தொழில்நுட்பப் பயிற்சி மையம் அமைக்கப்படும்

குளச்சலில் புதிய மீன்பிடி துறைமுகம்.

வேலூர் நகரில் தகவல் தொழில்நுட்பப் பூங்கா

குறைந்த செலவில் அதிக விளைச்சலைத் தரும் புதிய செம்மை நெல் சாகுபடி 18.75 லட்சம் ஏக்கரில் அறிமுகம்.

அனைத்து மாவட்டங்களுக்கும் துல்லிய பண்ணை முறை விவசாயம் விரிவாக்கம்.

விவசாயிகள் நடவு, அறுவடை இயந்திரங்கள் வாங்க 25 சத விகித மானியம்.

இந்த ஆண்டிலிருந்து பயறு வகைகளை அரசே கொள்முதல் செய்யும்.

ஒரு இலட்சம் விவசாயிகள் பயன்பெறும் வகையில் பத்தாயி ரம் விவசாயிகள் சுயஉதவிக் குழுக்கள் – 10 கோடி ரூபாய் சுழல்நிதியாக அரசு நிதியுதவி.

ரூபாய் 150 கோடியில் கல்லணைக் கால்வாய் மேம்பாட்டுத் திட்டம்.

ரூபாய் 12 கோடியில் காளிங்கராயன் கால்வாய் மேம்பாட்டுத் திட்டம்.

காவிரியுடன் மாநிலத்திற்குள் பாயும் ஆறுகளான அக்னி யாறு – கோரையாறு – பாம்பாறு – வைகை – குண்டாறு ஆகிய வற்றுடன் இணைக்கும் திட்டம்.

ரூபாய் 369 கோடி மதிப்பீட்டில் தாமிரபரணி கருமேனியாறு நம்பியாறு இணைப்புத் திட்டம்.

ரூபாய் 550 கோடி செலவில் 48,500 தடுப்பணைகள், ஊருணி கள் அமைக்கும் பெருந்திட்டம்.

ரூபாய் 12 கோடியில் மதுரை வெள்ளத் தடுப்புத் திட்டம்.

ரூபாய் 211 கோடி மதிப்பீட்டில் திருச்சி, கரூர், பெரம்பலூர் மாவட்டங்களில் காவிரி கொள்ளிடம் ஆறுகளில் நிரந்தர வெள்ளத் தடுப்புத் திட்டம்.

அரசு அலுவலர்களுக்கு புதிய மருத்துவ காப்பீட்டுத் திட்டம் – ரூபாய் 2 இலட்சம் வரை இலவச மருத்துவ சிகிச்சை.

அரசு அலுவலர்களுக்கு 47 சதவிகிதமாக 1.1.2008 முதல் அக விலைப்படி உயர்வு.

ஓய்வூதியதாரர்களுக்கு மருத்துவ செலவு ஈட்டுத் தொகை ரூபாய் 50,000லிருந்து ரூபாய் ஒரு இலட்சமாக உயர்வு.

10,000 உயர் கலப்பின கறவை மாடுகளை 5000 பெண்களுக்கு வழங்கும் திட்டம்.

அனைத்து காவல் நிலையங்களுக்கும் இணைய வசதி.

போலீஸ் கமிஷனின் பரிந்துரைகள் ஆய்வு செய்யப்பட்டு, ஆவன செய்யப்படும்

ரூபாய் 100 கோடியில் புதிய நீதிமன்றக் கட்டடங்கள் கட்டப்படும்.

புதிய சட்டமன்ற வளாகம் கட்ட வரும் நிதியாண்டில் ரூபாய் 75 கோடி ஒதுக்கீடு

100 புதிய அரசு உயர்நிலைப் பள்ளிகள் தொடங்கப்படும்.

100 புதிய அரசு மேல்நிலைப் பள்ளிகள் தொடங்கப்படும்.

450 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு ரூபாய் 312 கோடி செலவில் புதிய கட்டடங்கள் கட்டப்படும்.

அனைவருக்கும் இடைநிலைக் கல்வி புதிய திட்டம் – ரூபாய் 200 கோடி ஒதுக்கீடு

100 அரசு மேல்நிலைப் பள்ளிகளுக்கு கணித ஆய்வகங்கள் – ஆய்வக மற்றும் அறிவியல் சாதனங்கள்

500 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் மொழி ஆய்வகங்கள்

100 உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் 100 மேல்நிலைப் பள்ளி களில் நூலக வசதிகள்

100 அரசு மேல்நிலைப் பள்ளிகளுக்கும் 606 அரசு உயர் நிலைப் பள்ளிகளுக்கும் 2200 நடுநிலைப் பள்ளிகளுக்கும் கணினிகள் – ரூபாய் 71 கோடி ஒதுக்கீடு

அரசு கல்லூரிகளில் 500 கூடுதல் வகுப்பறைகள்

அரசு மகளிர் கல்லூரிகளுக்கு பாதுகாப்புச் சுவர்கள்

அனைத்து அரசு மருத்துவ கல்லூரிகளுக்கும் டிஜிடல் எக்ஸ்ரே (Digital X-ray) கருவிகள்

வேலூர் மற்றும் தேனியில் அரசு செவிலியர் பயிற்சி பள்ளி கள்

தமிழகமெங்கும் ஒரே தொலைபேசி எண் மூலம் அவசர மருத்துவ ஊர்தி சேவை (Ambulace Service)

227 அரசு மருத்துவ மனைகளுக்கு கட்டடங்கள், உபகர ணங்கள் மற்றும் சிறப்பு மருத்துவர்கள் (Specialist) நியமனம்

இயற்கை சீற்றங்கள் மற்றும் பெரும் விபத்துக்கள் நடை பெற்று ஒரே நேரத்தில் அதிக எண்ணிக்கையில் மக்கள் பாதிக்கப் படும்போது அவர்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்க ஏதுவாக சென்னையில் சிறப்பு மருத்துவ மையம்.

தொழிலில் பின்தங்கிய பகுதிகளான திருநெல்வேலி மாவட் டத்தில் கங்கைகொண்டான், திருவண்ணாமலை மாவட்டத்தில் செய்யாறு, ஈரோடு மாவட்டத்தில் பெருந்துறை மற்றும் வேலூர் மாவட்டத்தில் ராணிப்பேட்டையில் சிறப்பு பொருளாதார மண்டலங்கள்.

ஆலங்குளத்தில் உள்ள அரசு சிமெண்ட் தொழிற்சாலையை ரூபாய் 82 கோடி மதிப்பீட்டில் நவீன மயமாக்கும் திட்டம்

கோயம்புத்தூர், கிருஷ்ணகிரி, பெரம்பலூர், திருவாரூர், அரி யலூர் மாவட்டங்களில் மின்னணு மாவட்ட திட்டம் அறிமுகம்

1350 கி.மீ நீள மாநில நெடுஞ்சாலைகள் இருவழித் தடங் களாக மாற்றப்படும்.

90 புதிய துணை மின் நிலையங்கள் அமைக்கப்படும்.

நாகர் கோவில் மற்றும் அரியலூரில் பாதாள சாக்கடைத் திட்டம் நிறைவேற்றப்படும்.

ரூபாய் 1000 கோடி மதிப்பீட்டில் சென்னை மாநகராட்சி உட்பட 5 மாநகராட்சிகள் – 7 நகராட்சிகளில் நகர்புறச் சாலை கள் மேம்பாடு

போக்குவரத்து நெரிசலைக் குறைக்க சென்னை மாநகரில் அதிவேக உயரச் சாலை

இந்திரா வீட்டு வசதித் திட்டம் – கான்கிரீட் கூரைகள் அமைக்க தமிழக அரசு வழங்கும் கூடுதல் மானியம் ரூபாய் 12000-லிருந்து ரூபாய் 20000 ஆக உயர்வு

தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் மூலம் 22,000 வீடுகள் கட்டப்படும்.

மேலும் 2521 கிராம ஊராட்சிகளில் அனைத்து அண்ணா கிராம மறுமலர்ச்சித் திட்டம்

வெளிநாட்டு வாழ் தமிழர்கள் தம் சொந்த ஊர்களில் வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள ஓர் அறக்கட்டளை

மேலும் 8 இலட்சம் இலவச எரிவாயு அடுப்புகள் மற்றும் இணைப்புகள் வழங்க ரூபாய் 160 கோடி ஒதுக்கீடு.

ரூபாய் 750 கோடி செலவில் இந்த ஆண்டு, வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள்

25,000 மகளிர் புதிய சுய உதவிக் குழுக்கள்.

1,50,000 மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூபாய் 150 கோடி சுழல் நிதி.

மகளிர் ஆணையத்திற்கு சட்டபூர்வ அங்கீகாரம் (Statutory Status)

தசைச் சிதைவு (Muscular Dystropy) நோயினால் பாதிக்கப் பட்டவர்களுக்கு ரூபாய் 500 மாதாந்திர உதவித் தொகை.

காதுகேளாத குழந்தைகளுக்கு அனைத்து மாவட்டங் களிலும் தொடக்க நிலையிலேயே பயிற்சி அளிக்கும் மையங்கள்.

அரவாணிகளாக உணர்வோருக்கு இடைக்கால தங்கும் விடுதி

கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களுக்கு வரும் நிதி ஆண்டிலிருந்து 4 சதவீத வட்டி மானியம்.

கைத்தறி நெசவாளர் காப்பீட்டுத் திட்டம் – நெசவாளர் பங்கையும் அரசே செலுத்தும்.

காஞ்சிபுரம் மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு மருத்துவ காப்பீட்டுத் திட்டம்.

பனைத் தொழிலாளர்களுக்கு இலவசக் கருவிகள்.

கைவினைஞர்களுக்கு ஆயுள் காப்பீடு மற்றும் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்.

ஆதிதிராவிட மாணவர்களுக்கு இந்த ஆண்டு 25 புதிய மாணவர் இல்லங்கள்.

25 ஆதிதிராவிடர் மாணவர் இல்லங்களுக்கு சொந்தக் கட்ட டங்கள்.

8 புதிய ஆதிதிராவிடர் உயர் நிலைப் பள்ளிகள் – 3 புதிய பழங்குடியினர் உயர்நிலைப் பள்ளிகள் தொடங்கப்படும்.

பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மர பினர் மற்றும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர் களுக்கான உணவுப்படி, மாதம் ஒன்றுக்கு பள்ளி மாணவர் களுக்கு ரூபாய் 400 லிருந்து ரூபாய் 450 ஆகவும், கல்லூரி மாணவர்களுக்கு ரூபாய் 500 லிருந்து ரூபாய் 550 ஆகவும் உயர்வு.

பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கான மாநில அரசின் கல்வி உதவித் தொகை திட்டத்தில் பயன்பெற குடும்ப ஆண்டு வருமான வரம்பு ரூ.50,000 லிருந்து ஒரு இலட்சமாக உயர்வு.

பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற் றும் சீர்மரபின மாணவர்களுக்கு 25 புதிய இல்லங்கள்- இவர்கள் தங்கி பயிலும் 25 இல்லங்களுக்கு புதிய கட்டடங்கள்.

சிறுபான்மையினருக்கு இந்த ஆண்டு ரூபாய் 40 கோடி கடன் உதவி.

350 சத்துணவு மையங்கள் மற்றும் 2000 குழந்தைகள் மையங் கள் நவீனமயம் ஆக்கப்படும் – எரிவாயு இணைப்பு மற்றும் ப்ரஷர் குக்கர்கள் வழங்கப்படும்.

சென்னைக்கு அருகில் உள்ள முட்டுக்காடு பகுதியில் கட லின் அடியில் மீன் அருங்காட்சியகம்.

25,000 ஏக்கர் பரப்பில் ஒரு கோடி மரக் கன்றுகள் நடும் திட்டம்.

அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் சுற்றுப்புற சூழல் பாதுகாப்பு சங்கங்கள்.


தமிழ்நாடு அரசு நிதி நிலை அறிக்கையின் முத்துகள் (20.3.2008)

பத்திரிகையாளர் நலநிதியம் ஒன்று அமைக்கப் பட்டு, ரூபாய் ஒரு கோடி வழங்கப்பட்டுள்ளது. இத் தொகையை வைப்பீடு செய்து, கிடைக்கும் வட்டித் தொகையிலிருந்து கடுமையான நோயினால் பாதிக்கப் பட்ட பத்திரிகையாளர்களின் மருத்துவச் சிகிச்சைக்காக நிதி உதவி அளிக்கப்படும்.

தமிழ் மொழியை மத்திய அரசின் ஆட்சி மொழிகளில் ஒன்றாக அறிவிக்கச் செய்யவும், சென்னை உயர்நீதிமன்றத்தின் அனைத்து நடவடிக்கைகளிலும் தமிழை வழக்கு மொழி யாக்கவும் தொடர்ந்து முயற்சிகள் மேற் கொள்ளப்பட்டு வருகின்றன

தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளில் தமிழைக் கட்டாயப் பாடமாக்குவதற்காக இந்த அரசால் குறிப்பிடப்பட்ட வரலாற்றுச் சிறப்பு மிக்க சட்டம் உச்ச நீதிமன்றத் தீர்ப்பில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

அருந்ததியினருக்கு உள் ஒதுக்கீடு வழங்கிட ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் திரு எம்.எஸ்.ஜனார்த்தனம் அவர்களைக் கொண்ட ஒரு நபர் குழுவினை அமைப்பதென அரசு முடிவு செய்துள்ளது.

பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, சீர்மரபின, ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின மாணவர்கள் படித்து வரும் அரசு நடத்தும் பள்ளி மற்றும் கல்லூரி விடுதிகளில் தங்கிப்படித்து வருகின்றனர். அவர்களுக்கான உணவுப்படி மாதந்தோறும் 50 ரூபாய் உயர்த்தப்படுகிறது. அதன்படி பள்ளி விடுதிகளுக்கு மாதம் ரூ 450 ஆகவும், கல்லூரி விடுதிகளுக்கு மாதம் ரூ 550 ஆகவும் வரும் கல்வி ஆண்டிலிருந்து வழங்கப்படும்.

நரிக்குறவர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் கல்வி மற்றும் மாற்றுத் தொழில் புரிவதற்காக உதவி அளிக்க தனிநல வாரியம் ஒன்று அமைக்கப்படும்.

முதியோர், ஆதரவற்ற விதவைகள், கணவனால் கைவிடப் பட்டோர் ஆகியோருக்கு ஓய்வூதியச் செலவினம் ரூ 830 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது.

சென்னையில் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்கு மெட்ரோ ரயில் திட்டம் கொண்டு வரப்பட மாநில அரசின் பங்காக ரூ 300 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

வேலூர் நகராட்சி வரும் ஆண்டிலிருந்து மாநகராட்சியாக நிலை உயர்த்தப்படும்.

Posted in 2008, Budget, Economy, Farmers, Finance, Poor | Leave a Comment »

Angayarkkanni – Faces: Thiruchi Uraiyur Panchavaransamy Temple – Muthiah Vellaiyan

Posted by Snapjudge மேல் மார்ச் 24, 2008

முகங்கள்: நான்கு காலமும் ஓதும் குயில்!

முத்தையா வெள்ளையன்

திருச்சி- உறையூர் பஞ்சவர்ணசாமி திருக்கோயில். வைகறைப் பொழுது. கணீரென்று ஒலிக்கிறது தேவாரப் பாடல். “இதிலென்ன ஆச்சரியம்?’ என்று நினைக்கலாம். அந்தக் கோயிலில் தேவாரத்தைப் பாடிக் கொண்டிருந்தது ஒரு பெண்.

அவர் பெயர் அங்கயற்கண்ணி. திருப்பள்ளி எழுச்சி, உச்சிக்காலம், சாயரட்சை, அர்த்தஜாமம்… எனப் பஞ்சவர்ணசாமி கோவிலின் நான்குகால பூஜையிலும் தேவாரம் ஒலிப்பது இவரின் குரலில்தான்!

இறைப்பணியைச் செய்து கொண்டிருக்கும் முதல் பெண் ஓதுவாரான அங்கயற்கண்ணி, இந்தப் பணியின் மேன்மை குறித்தும், அவர் இந்தப் பணிக்கு எப்படி வந்தார் என்பதைக் குறித்தும் நம்மிடம் பகிர்ந்து கொண்டதிலிருந்து…

“”திருச்சிக்குப் பக்கத்திலே இருக்கும் செம்பட்டு கிராமம்தான் என்னுடைய சொந்த ஊர். என் கூடப் பிறந்தவங்க ஆறு பேர். நான் நான்காவதா பிறந்தேன். அப்பாவுக்குத் தோல் பதனிடும் தொழிற்சாலையில் பணி. அவருடைய வருமானத்துக்கு ஏற்ப எங்களின் வாழ்க்கை முறையை அமைத்துக் கொண்டோம். நான் பள்ளிப் படிப்பை முடிச்சிட்டு, மேல் படிப்பு படிக்க ஆசைப்பட்டேன். குடும்ப சூழ்நிலையை நினைத்து செலவில்லாமல் படிக்க என்ன செய்யறதுன்னு தேடியபோது, சிலர் திருச்சி மாவட்ட இசைப் பள்ளியில் சேரலாம்னு சொன்னாங்க. என்னோட சின்ன வயசுலே தினமும் எங்க வீட்டுக்குப் பக்கத்திலிருக்கிற அங்களம்மாள் கோவிலுக்குப் போவேன். அங்கு ஒரு பெரியவர் வந்து தினமும் தமிழில் கணீரென்று பாடுவார். எங்களைப் போன்ற பிள்ளைகளையும் பாடச் சொல்லிக் கேட்பார். அந்த அனுபவம்தான் இசைப் பள்ளியில் சேர்வதற்கு எனக்குக் கை கொடுத்தது.

இசைப் பள்ளியில் மூன்றாம் வருடம் படிக்கும் போதுதான், இந்தப் படிப்பை முடித்தவர்கள் தமிழிசை கச்சேரி செய்யலாம் அல்லது கோவிலில் ஓதுவாராகப் பணியாற்ற முடியும்னு தெரிந்தது. சிறிது நாட்கள் கழித்து ஓதுவார் பணியில் சேர்வதற்கான முயற்சியை செய்து கொண்டிருந்தேன்.

எனது ஆசிரியர் சரவணன் மாணிக்கம் ஐயாதான் படிக்கும் போதும் சரி, நான் பணியைத் தேடிக் கொண்டிருந்த போதும் சரி எனக்கு நல் வழிகாட்டினார். நான் சோர்ந்து போன போது எல்லாம் பல கதைகளைச் சொல்லி என்னை உற்சாகப்படுத்துவார்.

இந்து அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் அரசு இசைப் பள்ளி மாணவிகளை ஓதுவாராக அனுமதிக்க வேண்டும் என்று எப்போதும் கூறிக்கொண்டே இருப்பார் எனது ஆசிரியர்.

என் ஆசிரியரைப் போன்றவர்களின் தொடர் முயற்சியினால், 2006-ம் ஆண்டு அரசு உத்தரவு மூலம் தமிழ்நாட்டின் முதல் பெண் ஓதுவாரானேன். இந்த உத்திரவு வருவதற்கு முன் தினமும் கோவிலுக்குச் சென்று திருமுறைகளைப் பாடி வந்தேன். அந்த பயிற்சியின் போது ஓரளவுக்கு இருந்த பயமும் தெளிந்தது.

திருப்பள்ளி எழுச்சி, கால சந்திக்குப் பிறகு பாராயணம், உச்சிக்காலம்… என்று பாடிய பிறகு வீட்டுக்கு சாப்பிடப் போய்விடுவேன். மாலையில் சாயரட்சை, அதற்குப் பிறகு பாராயணம், அர்த்த ஜாமம்… என்று பாடிய பிறகுதான், ஒருநாள் முழுவதும் இறைவனைப் பாடிய திருப்தியோடு வீட்டிற்குப் போவேன்!

கோவிலில் நான் பாடும்போது, அதைக் கேட்கும் பெண்கள், “”சாமி சன்னதியில் பாடுவதற்கு நீ கொடுத்து வச்சிருக்கணும்மா… எல்லோருக்கும் இந்த பாக்கியம் கிடைக்காது..” -என்று சொல்வார்கள். எல்லாம் இறைவன் செயல் என்று நினைத்துக் கொள்வேன்.

பொதுவாக கோவிலில் ஆண் பணியாளர்கள் அதிகம் இருந்தாலும் என்னை மரியாதையோடுதான் நடத்துகிறார்கள்.

தேவாரமும், திருவாசகமும் முன்பு எல்லோர் வீடுகளிலுமே பெண்கள் பாடிய காலம் உண்டு. நாளடைவில் இந்தப் பழக்கம் பெண்களிடம் குறைந்துவிட்டது. மீண்டும் பெண்கள் தேவாரம், திருவாசகத்தைப் பாடவேண்டும்!” என்கிறார் அங்கயற்கண்ணி.

Posted in Angayarkanni, Angayarkkanni, Faces, Females, Hindu, Hinduism, Interview, music, people, She, Singer, Temple, Trichy | Leave a Comment »

Investigation sought in Border Security Force (BSF) personnel death in Tripura

Posted by Snapjudge மேல் மார்ச் 24, 2008

திரிபுராவில் இறந்த பி.எஸ்.எப். வீரர் சடலத்தை வாங்க பெற்றோர் மறுப்பு

மதுரை, மார்ச் 19: திரிபுராவில் இறந்த எல்லைப் பாதுகாப்புப் படை (பி.எஸ்.எப்.) வீரரின் சாவில் மர்மம் உள்ளதாகவும், சிபிஐ விசாரணை நடத்த வேண்டுமெனவும் கோரி அந்த வீரரின் சடலத்தை வாங்க அவரது பெற்றோர் மறுத்து வருகின்றனர்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:

மதுரை திருப்பரங்குன்றம் பாலாஜி நகர் சிதம்பரனார் தெருவைச் சேர்ந்தவர் சையது முகமது ஷா. இவரது மகன் ஷேக் அப்துல்லா (24). இவர், 4 ஆண்டுகளுக்கு முன் எல்லைப் பாதுகாப்புப் படையில் சேர்ந்தார்.

அண்மையில் திரிபுராவில் பி.எஸ்.எப். 34-வது பட்டாலியனில் வீரராக இருந்தார்.

இந்நிலையில், கடந்த 16-ம் தேதி ஷேக் அப்துல்லாவின் பெற்றோரை, திரிபுரா பிஎஸ்எப் அலுவலகத்திலிருந்து தொலைபேசியில் அழைத்து “உங்களது மகன் துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்துகொண்டார். அவரது சடலத்தை அனுப்பி வைக்கிறோம்’ எனக் கூறியுள்ளனர்.

தங்களது மகன் சாவில் மர்மம் உள்ளதாக சையது முகமது ஷா புகார் தெரிவித்தார்.

சடலத்தை வாங்க மறுப்பு: இந்நிலையில், திரிபுராவில் இருந்து விமானம் மூலம் கர்நாடகம் கொண்டு வரப்பட்ட ஷேக் அப்துல்லாவின் சடலம், கர்நாடக பிஎஸ்எப் வீரர்கள் சார்பில் விமானம் மூலம் மதுரைக்கு புதன்கிழமை கொண்டு வரப்பட்டது.

திருப்பரங்குன்றம் பாலாஜி நகரில் உள்ள அவரது வீட்டிற்கு சடலத்தைக் கொண்டு வந்தபோது, ஷேக் அப்துல்லா சாவில் மர்மம் உள்ளதால் தீவிர விசாரணைக்கு உத்தரவிடாத நிலையில் சடலத்தை வாங்கமாட்டோம் என பெற்றோர் தெரிவித்தனர்.

இதனால், பிற்பகல் 3 மணியளவில் கொண்டுவரப்பட்ட சடலத்தை இரவு 8 மணிவரை அவர்களது பெற்றோர் பெறவில்லை.

பெற்றோர் பேட்டி 2 மாதங்களுக்கு முன் விடுமுறைக்கு வந்திருந்த எனது மகன், “உயர் அதிகாரிகள் தொந்தரவு (டார்ச்சர்) அதிகம் உள்ளது’ என தெரிவித்ததாக அவரது தந்தை சையது முகமது ஷா கூறினார். வேலை பிடிக்கவில்லையென்றால் ராஜிநாமா செய்துவிட்டு வந்துவிடு என அவனிடம் தெரிவித்தேன்.

ஆனால், விடுமுறை முடிந்து பணிக்குச் சென்றிருந்த நிலையில் எனது மகன் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறுகின்றனர்.

எனவே சாவில் மர்மம் இருப்பதால் நீதி விசாரணைக்கோ அல்லது சிபிஐ விசாரணைக்கோ உத்தரவிட்டால்தான் சடலத்தை வாங்குவோம் எனத் தெரிவித்தார்.

மறு பிரேத பரிசோதனை?

பிஎஸ்எப் வீரர் ஷேக் அப்துல்லா இறந்தது குறித்து இரவு 10.45 மணியளவில் அவரது குடும்பத்தினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அங்கு இரவு 9.45 மணியளவில் பிரேத பரிசோதனை நடைபெற்றுள்ளது. இறப்புச் சம்பவத்தை வேண்டும் என்றே மிகவும் தாமதமாகத் தெரிவித்துள்ளனர் என ஷேக் அப்துல்லா குடும்ப வழக்கறிஞர் ராஜாமுகமது தெரிவித்தார்.

மேலும், அவர் கூறுகையில், பிரேதப் பரிசோதனையில், கழுத்துக்குக் கீழ் 3 துப்பாக்கி குணடுகள் பாய்ந்து தலை (நெற்றிப் பகுதியில்) வழியாக வெளியே வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

ராணுவ வீரர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டால் அதுகுறித்து ஆர்டிஓ அளவிலான விசாரணை நடத்தவேண்டும். ஆனால் அதுகுறித்த எந்த ஆவணமும் பிஎஸ்எப் சார்பில் வழங்கப்படவில்லை. எனவே, வீரரின் சடலத்தை மறு பிரேதப் பரிசோதனை செய்யவேண்டும் என அவரது பெற்றோர் விரும்புகின்றனர் எனத் தெரிவித்தார். இதுகுறித்து பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Posted in BSF, CBI, dead, Death, Investigation, Murder, Postmortem, Suicide, Tamil, Tripura | Leave a Comment »