பாகிஸ்தான் எறிகணைத் தாக்குதலில் பலர் கொல்லப்பட்டுள்ளனர்
![]() |
![]() |
வாசிரிஸ்தான் வரைபடம் |
பாகிஸ்தானில் ஆப்கானிஸ்தானுடனான எல்லையிலுள்ள பழங்குடியினர் பகுதியில் நடந்த ஒரு எறிகணைத் தாக்குதலில் கடும் சேதங்கள் ஏற்பட்டுள்ளன.
தெற்கு வாசிரிஸ்தான் பிரதேசத்தில் விழுந்த நிறைய எறிகணைகள் ஒரு வீட்டைத் தாக்க, 18 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 10 பேர் காயமடைந்துள்ளனர்.
யார் இத்தாக்குதலுக்குப் பொறுப்பு என்று தெளிவாகத் தெரியவில்லை என்றாலும், தாலிபான் மற்றும் அல்கைதா போராளிகளாகச் சந்தேகிக்கப்படுபவர்கள் மீது இந்தப் பிரதேசத்தில் அமெரிக்கப் படைகள் அண்மைய ஆண்டுகளில் பல முறை எறிகணைகளை வீசியுள்ளன என்று இஸ்லாமாபாத்தில் உள்ள பிபிசி செய்தியாளர் குறிப்பிடுகிறார்.
பாகிஸ்தானின் இறையாண்மையை மீறும் செயல் என்பதாலும் அப்பாவிப் பொதுமக்களும் கொல்லப்படுகிறார்கள் என்பதனாலும் இப்படியான தாக்குதல்களை அவர்கள் பெரும்பாலும் ஒப்புக்கொள்வதில்லை என்று எமது செய்தியாளர் தெரிவிக்கிறார்.